Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்ப்பாண பெண் திருச்சியில் மரணம்! பிப் 8, 2013 சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஒருவரைத் திருமணம் செய்து இந்தியாவில் கணவனின் குடும்பத்தாருடன் வாழ்ந்து வந்த நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவர் திருச்சியில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.. யாழ்ப்பாணம் புளியங்கூடலை சேர்ந்த சசீந்தினி என்ற யுவதி கடந்த 2005 ஆம் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் தனது ஊரை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்த நிலையில் இந்தியா திருச்சி நகரின் கணவனின் குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். தன்னை கணவர் சுவிட்சர்லாந்துக்கு அழைத்து செல்வார் என காத்திருந்த இவருக்கு தனது கணவர் சுவிட்சர்லாந்தில் வெள்ளை இனத்தை சேர்ந்த இன்னொரு பெண்ணை ஏற்கனவே திருமணம் செய்து வாழ்ந்து வரும் செய்தி பின்னரே தெரிய வந்திருக்கின்றது. இதனா…

  2. -அழகன் கனகராஜ் இன உணர்வு மற்றும் வெட்கம் இருந்தால் அரசாங்கத்தில் இருக்கின்ற முஸ்லிம் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் தங்களுடைய அமைச்சு பதவிகளையாவது துறக்க வேண்டும். அரசாங்கத்தில் இருக்கின்ற எந்தவொரு முஸ்லிம் அமைச்சர்களுக்கும் முதுகெலும்பு இல்லை என்று முஸ்லிம் - தமிழ் அமைப்பின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் கொழும்பிலுள்ள அஸாத் சாலி மன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், முஸ்லிம் மக்களுக்கு எதிராக நாட்டில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் ”எதிர்க்கட்சித் தலைவர் …

  3. இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை காலை இந்தியாவுக்கு பயணமாகிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புத்த பெருமான் ஞானம் பெற்ற போதிமரம் அமைந்துள்ள புத்தகாயாவுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். புத்தகாயா விமான நிலையத்தைச் சென்றடைந்த ஜனாதிபதி குழுவினரை, பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் வரவேற்றார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஜனாதிபதி குழுவினரையும், அவர்கள் புத்தகாயாவில் வழிபாடுகளில் ஈடுபடுவதையும் படங்களில் காணலாம். (படங்கள் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு) http://tamil.dailymirror.lk/--main/58529-2013-…

  4. இலங்கையில் பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்களை தடுக்கும் சட்டம் மூலம் நிறைவேற்றம் பயங்கரவாதிகளுக்கு அல்லது பயங்கரவாத அமைப்பிற்கு பணம் அல்லது பொருள் உதவிகள் வழங்குவதனை தடுக்கும் வகையில் புதிய சட்டம் திருத்த மசோதா இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி உதவிகளை வழங்குவது தடை செய்யும் முகமாக இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புக்களுக்கு அல்லது பயங்கரவாதிகளுக்கு நிதி உதவிகளை வழங்குவோர் பயங்கரவாதிகளாகவே கருதப்பட வேண்டுமென இச் சட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

  5. இலங்கைக்குக்கு கால அவகாசம் தேவை!- ஜி.எல்.பீரிஸ் தருவீங்களா? மூன்று தசாப்தங்கள் போரால் பாதிக்கப்பட்ட இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த காலம் தேவைப்படுகிறது என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஸ் சர்மாவை லண்டனில் சந்தித்த போது வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். போரால் பாதிக்கப்பட்ட ஏனைய நாடுகளை போன்று இலங்கையிலும் நல்லிணக்க முயற்சிகள், மெதுவான போக்கில் நகர்வதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் பல வருடங்களாக நீடித்த பிரச்சினையை ஒரே இரவில் தீர்த்து விடமுடியாது. அதனை மேற்கொள்ள இலங்கைக்கு கால அவகாசம் தேவை என்று அமைச்சர் பீரிஸ் கூறியுள்ளார். போரின் போது இடம்பெயர்ந்த மூன்று லட்சம் பேரை மீண்டும…

  6. சென்னை நட்சத்திர ஹோட்டலில் பறந்த சிங்கள தேசியக் கொடி அகற்றம் Posted by: Mathi Updated: Friday, February 8, 2013, 10:56 [iST] சென்னை: சென்னை தியாகராயர் நகரில் இயங்கி வரும் நட்சத்திர ஹோட்டலில் பறந்த சிங்களக் கொடியை தமிழர் எழுச்சி இயக்கத்தினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தியாகராயர் நகரில் தி ரெசிடன்சி டவர்ஸ் என்ற நட்சத்திர ஹோட்டல் இயங்கி வருகிறது. அங்கு இலங்கையின் தேசிய கொடி பறக்கவிடப்பட்டிருந்தது. இதற்கு தமிழர் எழுச்சி இயக்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் படங்கள் இந்த இயக்கத்தினர் நட்சத்திர ஹோட்டலை கருப்புக் கொடியுடன் முற்றுகையிட்டனர். பின்னர் ஹோட்டல் நிர்வாகிகளிடம் இலங்கை தேசியக் கொடியை அகற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதைத் தொட…

  7. இறுதி யுத்ததின் போது கைவிடப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் கையளிக்கும் நடவடிக்கைகளில் இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினர் ஈடுப்பட்டு வருகின்றனர். வன்னியில் கைவிடப்பட்ட நிலையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் இந்த கைவிடப்பட்ட வாகனங்கள் ஓரிடத்தில் குவிக்கபட்டிருக்கின்றன. இந்த இடங்களுக்கு கொழும்பிலிருந்து வருகை தந்துள்ள இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் சென்று வாகனங்களை பரிசோதித்து அதன் வாகன இலக்கம், இயந்திர இலக்கம், அடிச்சட்ட இலக்கம் போன்றவற்றை பதிவு செய்கின்றனர். பின்னர் நல்ல நிலையிலுள்ள வாகனங்கள் பாவிக்கமுடியாத வாகனங்கள் என தரம்பிரித்து அவற்றினை மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரனிடம் கையளிக்கப்படும் எனவும் அவர் அதனை …

  8. சென்னையிலுள்ள இலங்கை வங்கிக் கிளை மீதான தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவில் வசித்துவருகின்ற இலங்கையர்களுக்கும் இலங்கை நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு புதுடில்லியிடம், இலங்கை அரசாங்கம் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளது. 'இந்தியாவில் வசித்துவருகின்ற இலங்கையர்களுக்கும் மற்றும் மஹாபோதி சமூகம், இலங்கை ஏயார்லைன்ஸ் போன்ற இலங்கை நிறுவனங்களுக்கும் இந்திய அரசாங்கம் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று புதுடில்லியிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கேட்க வேண்டுமென இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது' என இலங்கை வெளிவிவகார அமைச்சு இன்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. சென்னையிலுள்ள இலங்கை வங்கிக்கிளைக்குள் கத்திகள், பொல்லுகள், இரும்புக்கம்பிகள் சகிதம் 15 ப…

  9. மணி கட்டுவது யார்? குழப்பத்தில் சிறிலங்கா ஜெனிவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்துக்கு, யாரை அனுப்புவது என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்று சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். வழக்கம்போல, ஜெனிவா கூட்டத்தொடருக்கு அமைச்சர் மகிந்த சமரசிங்கவே தலைமை தாங்குவார் என்று கடந்தவாரம், கெஹலிய ரம்புக்வெல கூறியிருந்தார். எனினும், இம்முறை, அமைச்சர்கள் தவிர்க்கப்பட்டு, இராஜதந்திரிகளை கொண்ட குழுவோ சிறிலங்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இந்தநிலையில், இதுகுறித்து நேற்று கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்த கெஹலிய ரம்புக்வெல, “நிலைமைகளை அவதானித்த…

  10. சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் லண்டனுக்கு திடீர் பயணம் பிப் 8, 2013 எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்ட நிகழ்ச்சி நிரலில், சிறீலங்கா விவகாரமும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறித்துப் பொதுநலவாய அமைப்பின் செயலர் கமலேஸ் சர்மாவிடம் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கடும் ஆட்சேபமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவசர பயணம் ஒன்றை மேற்கொண்டு லண்டன் சென்றுள்ளார். பொதுநலவாய தலைவர்களின் உச்சிமாநாட்டை சிறீலங்காவில் இருந்து இடம்மாற்றுவது தொடர்பான யோசனைகளை கனடா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து பொதுநலவாய அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில் ஆரா…

  11. சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் 5 ஆண்டுகளில் 112 அரசாங்கப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இந்த விபரங்களை சமர்ப்பித்தார். 2005ம் ஆண்டுக்கும் 2010ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலேயே இந்தப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்தக் காலப்பகுதியில் சிறிலங்கா முழுவதிலும், 350 அரசாங்கப் பாடசாலைகளுக்கு மூடுவிழா நடத்தப்பட்டுள்ளது. வளங்கள் ஒதுக்கீடு செய்யப்படாத்தாலேயே பாடசாலைகள் மூடப்பட்டதாக, எதிர்க்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டை சிறிலங்காவின் கல்வி அமைச்சர் நிராகரித்தார். அரசாங்கப் பாடசாலைகள் மூடப்பட்டதற்கு மாணவர்…

  12. அவுஸ்திரேலிய எதிர்க்கட்சிக் குழு உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைக் கூறுகின்றது: � நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன். [Thursday, 2013-02-07 23:40:16] அண்மையில் சிறிலங்கா சென்று திரும்பிய அவுஸ்திரேலிய எதிர்க்கட்சியின் உபதலைவரான Julie Bishop தலைமையிலான குழு சிறிலங்கா தொடர்பிலும் தமிழ்மக்கள் தொடர்பிலும் அவுஸ்திரேலியாவில் தெரிவித்த கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேல்பேணிலிருந்து இயங்கும் தமிழ்க்குரல் வானொலிக்கு 06.02.2013 அன்று அளித்த செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். சிறிலங்காவிலிருந்து திரும்பியபின் Julie Bishop, Scott Morrison ஆகியோர் …

  13. அமெரிக்கா குறித்த விமல் வீரவன்சவின் கருத்து தொடர்பாக விசாரணை! [Friday, 2013-02-08 09:12:11] வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்சவின் கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது. அமெரிக்கத் தூதரகம் இலங்கையின் உள்விவகாரங்களில் குழப்பங்களை விளைவிக்க முயற்சிக்கின்றது என விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியிருந்தார். இந்தக் கருத்து தொடர்பில் விசேட விசாரணைகள் நடத்தப்படும் என அரசாங்கப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சியொன்றின் தலைவர் என்ற ரீதியில் இ…

  14. இலங்கையில் சிங்கள – முஸ்லிம் இன கலவரம் நடக்கிறதா? அரசு இன்று பதில் நாட்டுக்குள் இன ரீதியான மத ரீதியான முறுகல் நிலை தோன்றியிருப்பதாக எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றனர். இவற்றின் உண்மை நிலையை அரசு இன்று (07) விளக்கமளிக்கும் என சபை முதல்வர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். எதிர்க் கட்சித் தலைவர் ஆங்காங்கே சில சம்பவங்கள் நடைபெறுவதாக முஸ்லிம்களுக்கும், பெளத்தர்களுக்கும் இடையே மத ரீதியான முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். இது தொடர்பாக உண்மை நிலையை விளக்க வேண்டிய பொறுப்பு அரசுக்குள்ளது. இன்று சபையில் இது தொடர்பான விளக்கமளிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நிலையியற் கட்டளை 23/2 இன்…

  15. இலங்கையில் செய்தியாளர்கள் மீது, குறிப்பாக தமிழ் செய்தியாளர்கள் மற்றும் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வது குறித்து இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் அனந்த் பாலகிட்ணர் செவ்வி. http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/02/130207_ananthonthinakkuralattack.shtml

    • 3 replies
    • 1.6k views
  16. இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள தமிழ் அகதிகளை நாடு திரும்பும்படி கட்டாயப்படுத்த மாட்டோம் என்று இந்திய வெளிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர்அதிகாரி ஒருவர் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களை பார்வையிட வேண்டும் என்று, சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளதாகவும், இது குறித்து கருத்து தெரிவிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு இந்திய அரசாங்கம் கடிதம் எழுதியுள்ளதாகவும் சிறிலங்கா ஊடகங்கள் சிலவற்றில் செய்தி வெளியானதாக கூறப்படுகிறது. ஆனால், இந்தியாவில் உள்ள சிறிலங்கா அகதிகள் முகாம்களை பார்வையிட வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து எந்தவிதமான கோரிக்கையோ, கடிதமோ வரவில்லை. சிறிலங்காவில் போரின் போதும், அத…

    • 2 replies
    • 262 views
  17. ஜமியத்துல் உலமா குறித்து எதிர்கட்சித் தலைவர் வெளியிட்ட கருத்துக்கு அரசாங்கம் கவலை ஹலால் சான்று வழங்கப்படுவது தொடர்பில் அகில இலங்கை ஜமியத்துல் உலமா அமைப்பு குறித்து எதிர்கட்சித் தலைவர் முன்வைத்த கருத்துக்களுக்கு அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளது. நேற்றைய தினம் பாராளுமன்றில் எதிர்கட்சித் தலைவர் ஆற்றிய உரைக்கு இன்று (07) சபையில் பதிலளித்த சபை முதல்வர் நிமால் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு கவலை வெளியிட்டார். கடந்த ஜெனிவா மாநாட்டின் போது சர்வதேசத்தில் இருந்து வந்த அழுத்தங்களில் இருந்து இலங்கையை பாதுகாக்க அகில இலங்கை ஜமியத்துல் உலமா அமைப்பு பாரிய பங்காற்றியுள்ளதென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டினார். இந்த அமைப்பு எதிர்கட்சியின் கைபொம்மை இல்லை என்பத…

  18. எல்லை மாற்றம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு அறிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தின் 4 பிரதேச செயலகப் பிரிவுகளின் எல்லைகள் மாற்றப்படுதல் தொடர்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரிந்துரை அடங்கிய அறிக்கை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். கடந்த ஜனவரி நடுப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட எல்லைக் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் திட்டம் ஒன்றைத் தயாரிக்கும் வேலைகளில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஈடுபட்டிருந்தனர். அதன் இறுதிக்கட்ட தீர்மானம் எடுக்கப்பட்டு நேற்று புதன்கிழமை அற…

  19. பீகார் ஒபரா தொகுதியை சேர்ந்த சுயட்சை சட்டமன்ற உறுப்பினர் சோம பிரகாஷ் சிங், வயது 38,முன்னால் காவல் துறை அதிகாரி, லஞ்ச ஒழிப்பு தான் இவரது குறிக்கோள். ராஜபக்சே வருகையை கண்டித்து தனது கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். 'சம தர்மத்தை போதித்த நமது பாரத தேசத்தின் , அண்டை நாடான இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் , தமிழ் ஈழம் அமைவதற்கும் போராடி கொண்டு இருந்த தமிழர்களின் மீது இறுதி கட்ட போரில் நடந்த பேரிழப்புகள், துன்பங்கள் கணக்கில் அடங்காதவை. தமிழர்களின் உரிமைகளை கொடுபதற்கு பதிலாக அவர்களிடம் இவர்கள் பறித்தது 150,000 தமிழர்களின் உயிர்கள். தமிழர்கள் இருந்தால் தானே அவர்கள் உரிமைகள் கேட்பதற்கு என்ற குறிகோளோடு செயல் பட்டு கொண்டு இருக்கும் ராஜபக்சே, தனது சொந்த மக்கள் மீது போர் தொட…

  20. ராஜபக்சேவின் சுயரூபத்தை இப்போதாவது இந்தியா உணர வேண்டும் -கருணாநிதி சிங்கள அரசு செய்து கொண்ட பல்வேறு ஒப்பந்தங்களை நிறைவேற்றவில்லை என்பது மட்டுமல்லாமல், அவற்றை எல்லாம் மீறியே இலங்கையில் காரியங்கள் நடைபெற்று வருகின்றன. இவ்வளவுக்கும் பிறகு, நமது இந்தியப் பேரரசு தற்போதாவது விழித்துக் கொண்டு, ராஜபக்சேவின் சுய உருவத்தையும் குணத்தையும் நோக்கத்தையும் புரிந்து கொண்டு, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையையும் வாழ்வாதாரத்தையும் ஜனநாயக உரிமைகளையும் உலக அமைப்புகளின் உதவியோடு காப்பாற்றிட முன்வர வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இலங்கைத் தீவின் 65ஆவது விடுதலை நாள் விழா, திரிகோண மலையில் நடைபெற்றபோது, அந்த நிகழ்ச்சியில் பேசிய இலங்கை …

  21. அமெரிக்க வர்த்தகக் குழு இலங்கைக்கு விஜயம் வியாழக்கிழமை, 07 பெப்ரவரி 2013 10:11 பல்துறை அமெரிக்க வர்த்தகக் குழுவொன்று இந்திய விஜயத்தைத் தொடர்ந்து இம்மாதம் 8ஆம் அல்லது 9ஆம் திகதிகளில் கொழும்புக்கு வருகின்றது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் முதன்முதலில் இக்குழுவினர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கின்றனர். கல்வித்துறை, வடிவமைப்பு ஆலோசனைச் சேவைகள், மற்றும் பொறியியல், உணவு தொழில்கள், சுகாதாரம், விமானசேவை ஆதரவு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகிய கம்பனிகளை உள்ளடக்கிய 3சி வர்த்தகக் குழுவே இலங்கைக்கு வருகின்றது. இக்குழுவினர் முன்னர் இந்தியாவின் சென்னை மற்றும் கொச்சிக்கான விஜயத்தை மேற்கொண்டனர். அமெரிக்க தூதரகம் இருதரப்பு வர்த்தக உறவுகளை அதிகரிப்பதற்கு முயல…

    • 6 replies
    • 481 views
  22. கோட்டாவின் கூற்றுக்கு இந்தியாவும் ஐ.சி.ஆர்.சியும் பதிலளிக்கவேண்டும்: கூட்டமைப்பு -அழகன் கனகராஜ் இறுதி யுத்தத்தின் போது புலிகள் சரணடைந்திருந்தாலும் சாதாரண மக்கள் சரணடைந்திருந்தாலும் அவர்களுக்கெல்லாம் அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும். என்பதுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவின் கூற்றுக்கு இந்தியாவும் சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் பதிலளிக்கவேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கும் இராணுவத்தினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கும் பாரிய வித்தியாசங்கள் இருக்கின்றன. இரு அறிக்கைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் முன்னுக்கு பின் முரண்படுகின்றன என்பதனால் இவைத்தொடர்பில் சர்வதேச…

  23. அமைச்சர் ரிசாத் பதியூதீன் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிற்கு எந்தவித அறிவிப்பினையும் வழங்காது, ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கு அமைச்சர் பதியூதீன் செஷ் வரியை விதித்துள்ளார். அதன்படி எந்த அடிப்படையில் ரிசாத் செஷ் வரியை அறவீடு செய்தார் என ஹெல உறுமய கேள்வி எழுப்பியுள்ளது. நாட்டில் தற்போது ஏற்றுமதியினைக் கண்டு வரும் தேயிலை கைத்தொழிலை சீர்குலைக்கும் நோக்கிலேயே இவ்வாறு வரி அறவீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையினால் சிறு தேயிலை ஏற்றுமதியாளர்க அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். எமது நாட்டின் பிரதான ஏற்றுமதி வருமான வழிகளில் ஒன்றான தேயிலை ஏற்றுமதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்…

  24. பத்திரிகை விநியோதத்தர் மீதான தாக்குதலுக்கு யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி ஹத்துருசிங்கவே முழுப் பெறுப்பையும் ஏற்க வேண்டும் என யாழ் மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்தார். யாழிலிருந்து வெளியாகும் தினக்குரல் பத்திரிகையின் விநியோக பணியாளர் இன்றைய தினம் இனம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டு யாழ் போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை இன்று காலை நேரில் சந்தித்து நலம் விசாரித்த போதே சரவணபவன் இதனை தெரிவித்தார் அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை அடக்குவதற்காக கங்கணங் கட்டிக் கொண்டு செயற்படுகிறது இதற்கு எத்தனையோ வழிகளை பின்பற்றி விட்டு தற்போது ஊழியர்களை தாக்க தொடங்கிவிட்டது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து கருத்து தெர…

  25. தமிழக சட்டசபையில் இன்று (07) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி) பேசியதாவது:- இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். இதில் ஏற்படும் இழப்புகளுக்கு இலங்கை அரசிடம் நஷ்டஈடு பெறும் வகையில் தமிழக அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் கடந்த முறை தீர்மானம் கொண்டு வந்தபோது, மத்தியில் உள்ள காங்கிரஸ் ஆட்சி அந்த தீர்மானத்தின் கருத்துக்களை வலுவிழக்கச் செய்து ஆதரித்தது. இந்தமுறை கொண்டுவரும் தீர்மானம் உறுதியானதாக இருக்க வேண்டும். இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரிக்கும் வகையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு எந்த அதிகார பகிர்வும் தரமாட்டேன் என்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.