ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
சபாநாயகர் சமால் ராஜபக்சவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பில் சபாநாயகரின் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. எனவே சபாநாயகருக்கு எதிராக நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா தீர்மான யோசனை ஒன்றை முன்வைக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. கடந்த 22ம் திகதி நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஸ்மன் கிரியல்ல, சுஜீவ சேனசிங்க, விஜயதாச ராஜபக்ச, அஜித் பெரேரா ஆகியோர் இந்த நம்பிக்கையில்லா தீர்மான யோசனையை தயாரிக்க உள்ளனர். கட்…
-
- 3 replies
- 305 views
-
-
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இராணுவ தளபதியினால் நியமிக்கப்பட்ட 'இராணுவ விசாரணைச் சபை'யின் அறிக்கை, பாதுகாப்பு செயலாளரிடம் நாளை வியாழக்கிழமை கையளிக்கப்படவுள்ளது. இறுதி யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளனவா? மற்றும் சர்வதேச யுத்த விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா? என்பவை தொடர்பில் ஆராய்வதற்காகவே இராணுவ விசாரணைச் சபையினை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய நியமித்தார். இந்த விசாரணைச் சபையின் அறிக்கை, இராணுவ தளபதியினால் ஆராயப்பட்டதன் பின்னரே அவ்வறிக்கை நாளை வியாழக்கிழமை பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது. இதேவேளை, இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர…
-
- 7 replies
- 701 views
-
-
'காலி சம்பாஷனையில் கலந்துகொள்ளும் பொருட்டே அமெரிக்க விசேட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது' என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். இதேவேளை, இலங்கை வீரர்களுக்கு பயிற்சியளிக்க அமெரிக்கா தயாராக உள்ளது என்றும் சுட்டிக்காட்டிய அவர், இராணுவத்தின் உயரதிகாரிகளை பயிற்சிகளுக்காக அமெரிக்காவுக்கு அனுப்பவுள்ளதாகவும் கூறினார். பாதுகாப்பு அமைச்சில் இன்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மூவர் அடங்கிய இந்த விசேட பிரதிநிதிகள் குழுவில் அமெரிக்காவின் பிரதி உதவிச் செயலாளர் ஜேம்ஸ் மூர், பாதுகாப்பு பிரதி உதவிச் செயலாளர் விக்ரம் சிங் மற்றும் பிரதி உதவிச் செயலாளர…
-
- 2 replies
- 428 views
-
-
இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை இராணுவம் பொதுமக்களின் இழப்பை தவிர்ப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்று இராணுவ உள்ளக விசாரணை அறிக்கை ஒன்று பரிந்துரைத்துள்ளது. இலங்கைப் போரின் இறுதிக்கட்டம் குறித்து ஆராய்ந்த நல்லிணக்க ஆணைக்குழு இந்த போர் நிகழ்வுகள் குறித்து இலங்கை இராணுவமும் ஒரு உள்ளக விசாரணையை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. அதற்கமைய இராணுவத்தினால் நடத்தப்பட்ட உள்ளக விசாரணை அறிக்கை ஒன்று இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய அவர்களால் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்காலத்திலும் இப்படியான இர…
-
- 2 replies
- 524 views
-
-
-எம்.சுக்ரி மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தியின் சிலையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டு. மேயர் சிவகீர்த்தா பிரபாகரன் தெரிவித்தார். நகரின் அபிவிருத்திக்காவே குறித்த காந்தி சிலையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றும் அவர் தெரிவித்துள்ளார். "மட்டக்களப்பு நகரை அழகுபடுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இதனால் காந்தியின் உருவச்சிலை அமைந்துள்ள பகுதியும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதனாலேயே குறித்த சிலையை அகற்ற தீர்மானித்துள்ளோம்" என அவர் குறிப்பிட்டார். இதற்காக தற்போதுள்ள காந்தியின் உருவச்சிலையை அவ்விடத்திலிருந்து அகற்றி அபிவிருத்தி வேலைகள் முடிவடைந்தவுடன் அந்த சிலையானது தற்போதுள்ள இடத்திற்கு முன்பாக நிறுவப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித…
-
- 2 replies
- 373 views
-
-
48 மணிநேர தடுத்துவைப்பும்: 15 தவறுகளும் செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2013 11:35 -அழகன் கனகராஜ் பிடியாணையின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கும் அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்கும் சட்டமூலமொன்று நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது. பிடியாணையின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தாமல் 24 மணித்தியாலங்கள் மட்டுமே தடுத்து வைத்து விசாரிக்கலாம் என்றிருந்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுடனேயே குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது. இந்த சட்டமூலத்தின் 8 ஆம் வாசகமானது அரசியலமைப்புக்கு அமைவாக இல்லையெனவும் இதனால் இந்த …
-
- 9 replies
- 721 views
-
-
சிங்கள அரசின் அதிகாரபூர்வ இணையத்தளங்கள் மீது இணையவழி தாக்குதலாளிகளால் தொடர் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதுவரை நிகழ்ந்த தாக்குதல்களில் குறைந்தது நான்கு இணையத்தளங்கள் துடைத்தழிக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் துவம்சம் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘கேம் ஓவர்’ என்ற குறியீட்டுப் பெயருடன் கடந்த வாரம் இணையவழித் தாக்குதலாளி ஒருவர் நிகழ்த்திய தாக்குதலில் சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தின் இணையத்தளம் துடைத்தழிக்கப்பட்டது. இதன்பொழுது இலண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் ஐ.பி.சி வானொலி, கொழும்பிலிருந்து வெளிவரும் வீரகேசரி பத்திரிகை ஆகியவை சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையத்துடன் தொடர்புகளை பேணியதை உறுதிசெய்யும் ஆதாரங்கள் வெளிவந்திருந்தன. இத்தாக்குதல் ந…
-
- 5 replies
- 774 views
-
-
'இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பு தரப்பினரால் பதியப்பட்டு பொறுப்பேற்கப்பட்ட எவரும் காணாமல் போகவில்லை' என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்தவர்கள், இந்திய வைத்தியசாலைகள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி) ஆகியவற்றினூடாகவே வருகை தந்தனர். எனவே அவர்களிடம் போய்ச் சேர்ந்தவர்கள் தொடர்பில் இந்தியாவும் ஐ.சி.ஆர்.சி.யுமே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இராணுவ தளபதியினால் நியமிக்கப்பட்ட இராணுவ விசார…
-
- 9 replies
- 804 views
-
-
“நேசம் கல்வித்திட்டம் 2013″ பலமைப்பரிசில் மாணவர்களுக்கு உதவுங்கள். கடந்த வருடம் நேசக்கரத்தின் மனிதாபிமானப் பணிகளுக்கு ஆதரவு வழங்கிய அனைத்து நல்லிதயங்களுக்கும் முதலில் எங்கள் மனம் நிறைந்த நன்றிகள். நேசக்கரம் கல்வித்திட்டம் 2013ம் ஆண்டை கடந்த வருடத்து முன்னெடுப்பை விட பன்மடங்கு மேம்படுத்த வேண்டிய தேவையை கடந்த வருடம் பங்கேற்ற மாணவர்களின் தொகையும் பாடசாலைகளின் விண்ணப்பங்களும் உணர்த்தியுள்ளன. கடந்த வருடம் கிழக்கு மாகாணத்தில் போரால் பாதிப்புற்ற இடங்களைத் தெரிவு செய்திருந்தோம் இவ்வருடம் போரால் பாதிப்புற்ற வடகிழக்கு இரு மாகாணங்களையும் உள்ளடக்கிய பயிற்சி நெறிகளை முன்னெடுக்கவுள்ளோம். எமது பயிற்சிநெறியினை பெப்ரவரி மாதம் முதல் வாரத்திலிருந்து ஆடிமாதம் வரை 7மாதங்களுக்கான ம…
-
- 2 replies
- 560 views
-
-
இதோ வருகிறது மகிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் ... 24 ஜனவரி 2013 மத்தள விமான நிலையம் மார்ச் மாதம் திறந்து வைக்கப்படும் மத்தள சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் திறந்து வைக்கப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டையில் நிர்மானிக்கப்பட்டு வரும் மத்தள சர்வதேச விமான நிலையத்தின் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் 18ம் திகதி அங்குரார்ப்பண நிகழ்வுகள் நடைபெறும் என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன தெரிவித்துள்ளார். பாரிய பொருட் செலவில் மத்தள விமான நிலையம் நிர்மானிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதோ வருகிறது மகிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் மார்ச் 18…
-
- 0 replies
- 926 views
-
-
'வடக்கில் சிவில் நிர்வாகமே இடம்பெற்று வருகின்றது. தெற்கில் இராணுவ முகாம்கள் இருப்பதைப் போன்றே வடக்கிலும் அவசர தேவைகளுக்காக இராணுவ முகாம்களை அமைத்து இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்' என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, 'இலங்கை இராணுவம் இலங்கையில் நிலைகொள்ளாமல் வெளிநாடுகளில் சென்று முகாம்களை அமைத்து நிலைகொள்ள முடியாது. தெற்கில் போன்றே வடக்கிலும் அவர்கள் தங்கியுள்ளனர். வடக்கில் பொலிஸாரே சட்டத்தையும் ஒழுங்கையும் பேணி வருகின்றனர். அங்கு எவ்வாறான பிரச்சினைகள் ஏற்படினும் பொலிஸாரே முன்னின…
-
- 0 replies
- 446 views
-
-
முஸ்லீம்களை தவறாக சித்தரிப்பதாக.. (அவங்க செய்யுறதை வெளில சொன்னா அவங்க இப்படித்தான் சொல்லிக்கிட்டு திரிவாங்க) முஸ்லீம் குழுக்கள் விடுத்த அச்சுறுத்தல் மற்றும் ஆட்சேபனைகளை அடுத்து.. விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடைவிதித்ததைத் தொடர்ந்து.. தமிழினப் படுகொலை அரசான சிங்களச் சிறீலங்கா அரசும்... அதற்கு தடைவிதித்திருப்பதாக.. சிறீலங்கா அமைச்சரவைப் பேச்சாளர்.. (ம்ம் கோமாளிங்க எல்லாம்.. பேச்சாளர்) ஹெகலிய ரம்புக்வெல தகவல் கொடுத்துள்ளார். அண்மையில்.. இணையத்தில் தமிழீழ தேசிய தலைவரும் கமலும் கைகோர்த்துக் கொண்டு நிற்பது போல படங்களை சிலர் வெளியிட்டிருந்தமை ஒருவேளை சிறீலங்காவை கடுப்பாக்கிட்டுதோ என்னமோ..??! ‘Vishwaroopam’ screening suspended Thursday, 24 January 2013 16:…
-
- 0 replies
- 497 views
-
-
இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியா தொடந்து பயிற்சி அளிக்கும் என இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார். அதே சமயம் தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு அளித்து வேறு பகுதியில் பயிற்சியளிக்கப்படும் என்றும், இலங்கை உடனான தொடர்பு தொடர்ந்து பேணிகாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியா வந்த இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸ், இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி உள்ளிட்டோருடன் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=2672
-
- 3 replies
- 430 views
-
-
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் - ஜனாதிபதி தெரிவிப்பு. [Thursday, 2013-01-24 10:16:58] இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் விரைவில் இந்தியாவுடன் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தையின் மூலம் இந்தப்பிரச்சினைக்கு தீர்வைக்காண அரசாங்கம் முயற்சிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இரண்டு நாட்டு மீனவர்களும் தமது எல்லையை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவது உட்பட்ட பிரச்சினைகளுக்கு இதன்போது தீர்வு எட்டப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். வடக்கு கிழக்கின் மீனவர்கள் போர் காரணமாக தமது தொழிலை மேற்கொள்ளமுடியாது பாதிக்கப்பட்டிருந்தனர். எனினும் தற்போது சுதந்திரமான சூழ்நிலை…
-
- 1 reply
- 334 views
-
-
13ம் திருத்தத்தை அமுல்படுத்த அரசு தயார்! - ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு [Wednesday, 2013-01-23 08:31:23] 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தத் தயார் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டம் இலங்கை அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் இந்த திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தக் கூடாது என கோருகின்றன. இதனை அமுல்படுத்த வேண்டுமென சில கூட்டணி கட்சிகள் கோருகின்றன. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகளில் 13ம் திருத்தச் சட்டம் முக்கியமானது என ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, நட்பு நாடு என்ற வகையில் இலங்கைக்கு சகல வழிகளிலும் உதவிகளை வழங்கத் தயார் என இந்த…
-
- 8 replies
- 698 views
-
-
பிரித்தானிய அமைச்சர் இலங்கை வருகை வியாழக்கிழமை, 24 ஜனவரி 2013 11:27 -றிப்தி அலி பிரித்தானியாவின் தெற்காசிய விவகாரங்களுக்கான அமைச்சர் அலிஸரயர் பேட் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வரும் இவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட பலரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். சர்வதேச உறவுகள் மற்றும் தந்திரோபாய கற்கைகளுக்கான லக்ஷமன் கதிர்காமர் நிலையம் மற்றும் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றின் ஏற்பாட்டிலான நிகழ்வொன்றிலும் பிரித்தானிய அமைச்சர் சிறப்புரையாற்றவுள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு அலுவலக செயலாளரான அலிஸரயர் பேட்;, இலங்கை: 2013உ…
-
- 0 replies
- 445 views
-
-
இராணுவத்தில் இணைய தமிழர்களுக்கு தடை இல்லை: தளபதி வியாழக்கிழமை, 24 ஜனவரி 2013 02:23 -மேனகா மூக்காண்டி இராணுவத்தில் இணைந்துகொள்வதற்கு தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு தடை இல்லை. அதற்கு தகுதியுள்ளவர்களுக்கு எப்பொழுதும் வாசற்கதவு திறந்தே உள்ளது' என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார். இராணுவத்துக்கு இணையக்கூடிய தகுதிகள் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகள் தொடர்பில் கண்டறிந்து அவர்களை இணைத்துக்கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் ஆலோசனை வழங்கியுள்ளார் என்றும் இராணுவ தளபதி கூறினார். இராணுவ தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/57596-2013…
-
- 0 replies
- 408 views
-
-
கிளிநொச்சி கரைச்சி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் வாகனங்கள் பச்சைநிறத்தில் படையினரின் பயன்பாட்டில் 24 ஜனவரி 2013 வாகனங்களை மீள ஒப்படைக்க சங்கம் கோரிக்கை - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்- யுத்தம் காவுகொண்ட கூட்டுறவுச் சங்கத்தின் வாகனம் இறுதி யுத்தத்தின் விளைவு கிளிநொச்சி கரைச்சி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு 328.6 மில்லியன் இழப்பு, சங்கத்திற்கு சொந்தமான பெறுமதிமிக்க வாகனங்கள் பச்சை நிறத்தில் படையினரின் பயன்பாட்டில். வன்னியில் இடம்பெற்ற இறுதியுத்தத்தின் போது தங்கள் சங்கத்திற்கு 328.6 மில்லியன் ரூபாக்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கரைச்சி வடக்கு பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது வன்னியில் யுத்தகாலத்தில் இயங்கிய கூட்டுறவுச்சங்களில்…
-
- 0 replies
- 466 views
-
-
திருச்சியில் சட்லையிட் போணுடன் வல்வெட்டித்துறை இளைஞன் கைது! ஜன 24, 2013 தமிழ் நாடு திருச்சியில் சட்லையிட் போனினை பயன்பாடுத்திவந்த வல்வெட்டித்துளை இளைஞனை கியூ பிரிவு காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள். திருச்சி தூத்துக்குடி தேனீர் பட்டி அருகே வசித்து வந்த 34 அகவையுடைய ராமச்சந்திரன் கோழிப்பண்ணை அமைத்துக்கொடுக்கும் தொழில் செய்து வருகின்றார் இவர் அதிநவீன சட்லையிட் போன் பயன்படுத்தி வருவதாக கியூபிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த தகவலினை அடுத்து அவரை கைதுசெய்துள்ளார்கள். விசாரணையின் போது ராமச்சந்திரன் அவுஸ்ரேலியா குடியுரிமை பெற்றிருந்ததாகவும் இவரது பூர்வீகம் இராமேஸ்வரம் என்றும் இவர் வல்வெட்டித்துறையில் வசித்துவந்து பின்னர் அவுஸ்ரேலியாவிற்கு சென்று குடியேறியுள்ளதாகவும் தெரிவி…
-
- 0 replies
- 361 views
-
-
பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடக்குமா?: போர்க்கொடி தூக்கியுள்ளது கனடா இலங்கையில் பொது நலவாய மாநாடு நடைபெறாத பட்சத்தில் அதனை நடத்தத் தயாராக இருப்பதாக ஏற்கனவே மொரிஷியஸ் பொதுநலவாய தலைமைச் செயலகத்துக்கு அறிவித்துள்ளது. இலங்கை தொடர்பில் கனேடிய அரசால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொது நலவாய நாடுகள் அமைப்பின் மாநாட்டை கொழும்பில் நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்காக பொதுநலவாய அமைச்சர்கள் மட்ட நடவடிக்கைக் குழு (Commonwealth minis terial action group) அவசர கூட்டமொன்றை நடத்த முடிவுசெய்துள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாடு இந்தவருடம் நவம்பர் 15 முதல் 17ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறுமென முன்னரே தீர்மானிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், கனடாவின்…
-
- 0 replies
- 393 views
-
-
சிங்களமயமாக்குகிறது இலங்கை அரசு .. தவிக்கும் ஈழத் தமிழர்கள் Posted by: Sudha Published: Tuesday, January 22, 2013, 12:27 [iST] கொழும்பு: ஈழத்தை முற்றிலும் சிங்களமயமாக்கும் முயற்சிகளை இலங்கை அரசு ரகசியமாக தொடங்கி விட்டது. முதல் கட்டமாக தமிழ்ப் பெயர்களில் உள்ள நகரங்களின் பெயர்களை சிங்களத்தில் மாற்றவுள்ளது. இதற்காக 89 நகரங்களின் பெயர்களைத் தேர்வு செய்துள்ளது சிங்கள அரசு. ஈழப் போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஈழத்தை சிங்களர்கள் கைப்பற்றி முழுமையாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். அங்கு குவிக்கப்பட்ட ராணுவத்தினர் இன்னும் போகவில்லை. தமிழர்கள் அனாதைகளாக்கப்பட்டு விட்டனர். அடுத்தவர் கையை ஏந்திப் பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒன்…
-
- 5 replies
- 1.2k views
-
-
பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் 65 ஆவது சுதந்திரதின கொண்டாட்டங்களை புறக்கணித்து கறுப்பு நாளாக கடைப்பிடிக்குமாறு அங்கலிக்கன் திருச்சபையின் பேராயர் கனகசபாபதி கோரிக்கை விடுத்தார். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாதமை, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாதமை, ஷிரானி பண்டாரநாயக்கா பதவி நீக்கப்பட்டமை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல் ஆட்களை 48 மணிநேரம் தடுத்துவைக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமை போன்றவற்றைக் கண்டித்து இந்த நடவடிக்கையை எடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். ஜனநாயக அரசாங்கம் ஒன்று ஆட்சியமைக்க வேண்டுமென வலியுறுத்தி கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், விகாரைகள் அனைத்திலும் எதிர்வரும் நான்காம் திகதி கறுப்பு உடையணிந்து வழிபாடுகளில் ஈட…
-
- 1 reply
- 703 views
-
-
Govt. moves to reverse SC ruling on Standing Orders 22 January 2013 One of the charges in the motion of impeachment against Bandaranayake on which she was found guilty, was that her being the Head of the Judiciary when a case had been filed against her spouse in a low As international condemnation mounts against the impeachment of Chief Justice Shirani Bandaranayake, the Government yesterday moved to attempt the overturning of a Supreme Court determination in which the Court ruled that Standing Orders were not law according to the Constitution, thereby rendering the impeachment proceedings against her null and void, with the Attorney General’s Department ye…
-
- 0 replies
- 609 views
-
-
இலங்கைக்க எதிராக அமெரிக்கா பாயும்?; ஜெனிவா மாநாட்டில் பிரேரணை வரும் இராஜதந்திர முன்னேற்பாடுகளை இப்போதே அமெரிக்கா முடுக்கிவிட்டிருப்பதாக அறியமுடிகின்றது. ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான மிக முக்கிய தீர்மானமொன்றை நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா உத்தேசித்துள்ளது. இதற்கான இராஜதந்திர முன்னேற்பாடுகளை இப்போதே அமெரிக்கா முடுக்கிவிட்டிருப்பதாக அறியமுடிகின்றது. இதன்படி மார்ச் மாத கூட்டத்தொடரில் பங்கேற்கும் நாடுகளின் தூதுவர்களுக்கு இந்த விடயம் குறித்து தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு ஏற்கனவே ஆரம்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இலங்கை தொடர்பில் அம…
-
- 2 replies
- 724 views
-
-
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அவர்களின் தடயங்கயை அழிக்கும் முயற்சியில் ராஜபக்சே அரசு ஈடுபட்டு வருகிறது. அங்கு சிங்களர்களின் குடியேற்றம் ஒருபுறம் நடப்பதைப்போல அங்கிருந்த இந்து ஆலயங்கள் சத்தமில்லாமல் அழிக்கப்பட்டுவிட்டன. தமிழகர்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்த 367 கோவில்கள் எரிக்கப்பட்டுவிட்டதாக இண்டர்நேசனல் பாலிசி டைஜெஸ்ட் இதழில் அதிர்ச்சியூட்டும் தகவல் ஆதாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அந்த ஆவணம் இப்போது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்களை அழிப்பதன் மூலம் தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அழிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். யாழ்பாணத்தில்தான் அதி…
-
- 2 replies
- 824 views
-