Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரியும் ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் ஒன்று அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் யாழ் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட முடிவில் சகல அரசியல் கட்சிகள், பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம், சிவில் சமூகம், சட்டத்தரணிகள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், பொது மக்களின் கையொப்பங்களுடன் மகஜர் ஒன்று ஐ.நாவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் அரசியல் மற்றும் குடியியல் சமூகத்தினராகிய நாம் அண்மைக் காலமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவ சமூகத்திற்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறைகள் தொடர்பில் தங்களது கவனத்தை ஈர்ப்பதற்காக இம்மகஜர…

    • 5 replies
    • 409 views
  2. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி இளைஞர் அணித் தலைவரான அருணாசலம் சத்தியானந்தம் என்பவரிடம் இன்று புலனாய்வுத்துறை தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை அவர் ஆசிரியராக பணிபுரியும் கிளி. மத்திய கல்லூரிக்குச் சென்ற புலனாய்வுத்துறையினர் கடமை நேரத்தில் அவரை அழைத்து இளைஞரணியின் செயற்பாடுகள், அதன் அங்கத்தவர் விபரம், முகவரிகள் மற்றும் தொலைபேசி இலக்கங்களையும் பெற்றுக்கொண்டனர். இன்றைய மக்கள் போராட்டத்தில் உங்களின் பங்கு என்ன, இளைஞரணியில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு, வேலைத்திட்டங்கள் என்ன, எவ்வாறு செயற்ப்பட்டு வருகிறீர்கள், எழுகதிர் பத்திரிகை யாருடையது, போன்ற கேள்விகளைக் கேட்டு விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சியில் அண்மைக்கா…

  3. இலங்கையில் போர் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் ஈழத் தமிழர்களுக்கு இன்னும் அவர்கள் வாழ்வில் வசந்தம் ஏற்பட வில்லை. அவர்கள் வாழ்வில் இருள் நீங்கி அவர்கள் இழந்த உரிமைகள், நிலங்கள் அனைத்தும் திரும்பக் கிடைக்கப் பெற்று அவர்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து சென்னையில் சிறப்பு வழிபாடு இடம்பெற்றது. சென்னையில் வள்ளலார் மறைந்த மேட்டுக்குப்பம் சித்திவளாகத்தில் சிறப்பு மகாமந்திர வழிபாடு செய்யப்பட்டது. முதல் முறையாக இங்கு இவ்வாறான வழிபாடு நடைபெற்றது. சன்மார்க்க சங்கத்தை சார்ந்த சுமார் ஆயிரம் மக்கள் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டு ஒற்றை குரலில் அருட்பெரும்ஜோதி ஆண்டவரிடத்தில் கோரிக்கை வைத்தனர். மேலும், இறந்த ஈழத்து உறவுகளுக்கு மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி செலுத்தப்ப…

  4. தமிழ்த் தேசத்தில் தமிழர்களுடைய கல்வியை தொடர்ந்தும் அழித்துவிட எடுக்கும் முயற்சியாகவே இராணுவ ஆதிக்கநிலையின் வெறித்தனம் சுட்டிக்காட்டுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி யாழ். பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று (04) இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், "மாணவர்களும் அவர்களது கல்வியும் இன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தயாரான போது பொலிஸார்…

  5. யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறீலங்கா பொலீசாரினால் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி சுதர்சன் என்பவரே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களில் ஒரு மாணவர் மட்டுமே விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனைய மூன்று மாணவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இன்நிலையில் இன்றைய தினம் யாழ் இராணுவ கட்டளைத் தளபதிக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்று வருவதாக தெரியவருகிறது. http://onlineuthayan.com/News_More.php?id=325071670604184305#

  6. கலாநிதி மஹேஷ் அத்தபத்து - சொல்கிறார் ரணில் விக்ரமசிங்க என்பவர், பிறப்பிலேயே தோல்விகளை தனதாக்கி கொண்ட துரதிஷ்டவசமான தலைவர் எனவும் சந்திரிகா என்பவர், தற்போதைய அரசியலில் வங்குரோத்து பாத்திரம் எனவும் சுருக்கமாக சொன்னால், செல்லா காசு எனவும் ஜனநாயக கட்;சியின் ஆரம்பகால உப தலைவர் கலாநிதி மஹேஷ் அத்தபத்து தெரிவித்துள்ளார். சரத் பொன்சேக்கா, இந்த இரண்டு தலைவர்களையே தற்போது பிடித்து கொண்டிருக்கின்றார். இவர்களுடன் அவர் செல்லும் பயணத்தினால், அவர் அரசியல் அனாதையாகி விடுவார். சந்திரிகா என்பவர் தற்போது, ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகர், சரத் பொன்சேக்கா, ரணில் விக்ரமசிங்கவிடம் ஆலோசனை பெறுகிறார். அவர் ரணிலுடன் செல்வதால், அவருக்கு ஒரு போதும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் பதவி கிடைக்க போவத…

  7. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை அடுத்து அங்கிருந்து சிங்கள மாணவர்கள் வெளியேறி வருகின்றனர். கடந்த 27ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ள நான்கு மாணவர்களையும் விடுவிக்கும் வரை போராட்டங்களை நடத்தப்போவதாக பல்கலைக்கழக மாணவர்களும் விரிவுரையாளர்களும் அறிவித்துள்ளனர். இதனையடுத்தே சிங்கள மாணவர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவீரர் தின நிகழ்வுகளின் ஏற்பாடுகள் மற்றும் ஸ்ரீரெலோ அலுவலகத்தின் மீதான குண்டுத் தாக்குதல் என்பவை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு மாணவர்களும் தொடர்ந்தும் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை பொலிஸாரால் கைது செ…

  8. யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் அரசியல் வாதிகள் மற்றும் ஏனையோர் பல்கலைக்கழக பதிவாளரின் அனுமதி பெற்று செல்லவேண்டும் என உத்தரவிட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக வளாகத்தினை சுற்றி அமைக்கப்பட்டுள்ள காவலரண்கள் உடனே அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மஹிந்த ஹத்துருசிங்க இன்று தெரிவித்தார். யாழ். மாவட்ட பாதுகாப்பு படை தலைமையகத்தில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரியரட்ணம் உட்பட பல்கலைக்கழக பேராசிரியர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடந்து தெரிவிக்கையில், பல்கலைக்கழக வளாகத்திற்குள் இராணுவம் மற்றும் பொலிஸார் தேவை கருதி நுழைய வேண்டி இருந்ததே தவிர வேறு காரணங்களுக்காக…

    • 0 replies
    • 289 views
  9. வவுனியாவில் சுடலையையும் ஆக்கிரமிக்கும் புத்தர்! Published on December 4, 2012-12:39 pm · வவுனியாவில் சுடலையும் விளையாட்டு மைதானத்தையும் கூட புத்தர் ஆக்கிரமித்து வருகிறார் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வணங்கிப் போற்ற வேண்டிய கடவுளை இன ஆக்கிரமிப்பின் அடையாளமாகக் காண்பித்து காணிகளை அபகரிக்கும் நோக்கத்தை அரசு கைவிட வேண்டும் என்று வன்னி மாவட்ட பாhளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தின் முன்புறம் உள்ள விளையாட்டு மைதானத்திற்குள் பழமை வாயந்த அரசமரம் ஒன்றுள்ளது. அதனை அண்டிய பிரதேசத்தில் பொது மயானமும் அமைந்துள்ளது. இந்த அரசமர…

  10. பல்கலைக்கழகத்திற்குள்ளும் விடுதிக்குள்ளும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் தேவை கருதியே இராணுவம் உள்நுழைந்ததாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். இன்று பிறபகல் பலாலியில் அமைந்துள்ள யாழ். கட்டளைத் தளபதியின் தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கட்டளைத்தளபதி ஹத்துருசிங்க தலைமையில் நடைபெற்றது அதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.onlineuthayan.com/News_More.php?id=886301670704188391

  11. By Lambert 2012-12-04 16:59:06 இந்திய வீட்டுத்திட்டத்தில் மொத்தமாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிற்கு வழங்கப்பட்ட 2ஆயிரத்து 999 வீடுகளில் 2 ஆயிரத்து 635 வீடுகள் எருக்கலம்பிட்டி என்ற தனியொரு முஸ்லிம் கிராமத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இக்கிராமம் எவ்விதத்திலும் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்படவில்லை. அமைச்சரொருவரின் அரசியல் தலையீடு காரணமாக இவ்வுதவித்திட்ட தெரிவுகளில் ஏற்பட்டுள்ள நியாயமற்றதும் ஒழுங்கற்றதுமான ஏராளமான பலவிடயங்கள் உள்ளன என இன்று மன்னாரில் இடம்பெற்ற உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்ட மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, போர் அனர்த்தங்களுக்கு உள்ளாகி இடம்பெயர்ந்து வீடுகளையும…

  12. மருத்துவபீட மாணவர் போராட்டம் உறுதிமொழியால் கைவிடப்பட்டது கைது செய்யப்பட்ட மருத்துவபீட மாணவர் இன்று விடுவிக்கப்படவுள்ளதாகவும், அதனால் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டாம் எனவும் மருத்துவ பீட பீடாதிபதி உறுதியளித்ததைத் தொடர்ந்து மருத்துவ பீட மாணவர்களின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த முதலாம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த மாணவர்களை விடுவிக்குமாறு கோரி யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் நேற்றுக் காலை கவனவீர்ப்புப் போராட்ட மொன்றை மருத்துவபீட வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த நேரத்தில் சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவ பீட பீடாதிபதி வைத்தியர் பாலகுமார், கைது செய்யப்பட்ட ம…

    • 2 replies
    • 462 views
  13. By J.Stephan 2012-12-04 16:38:44 பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்க தனக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள குற்றப்பிரேரணை தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது தடவையாக ஆஜராகி பதிலளித்தார். இன்று 10.30 மணியளவில் ஆரம்பமான இந்த இரண்டாம் கட்ட விசாரணைகள் மதிய இடைவேளைக்குப் பின்னரும் தொடர்ந்திருந்தன. அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா தலைமையிலான 11 உறுப்பினர்களைக் கொண்ட மேற்படி தெரிவுக்குழுவின் முன்னிலையில் பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்க தனது சட்டத்தரணிகளுடன் ஆஜராகியிருந்தார். பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற மேற்படி விசாரணை நடவடிக்கைகளில் பிரதம நீதியரசர் இன்று …

  14. சிரியா இரசாயன ஆயுதங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறதாம். அறிவித்துவிட்டார்கள். ராணுவ நடவடிக்கை பற்றி ஆராய்கிறார்களாம்.பலஸ்தீனர்களுக்கு "காதில் பூ" வைத்துவிட்டார்கள். அமெரிக்காவில் தேர்தல் முடிந்துவிட்டது. சிரியாவிற்குப் படையெடுப்பு ஆரம்பித்து, ஈரானை இலக்கு வைக்கப் போகிறார்கள். யாராலும் தடுக்க முடியாதபடி மனித குலத்திற்கான அடுத்த பேராபத்தை அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். WASHINGTON (AP) — The White House and its allies are weighing military options to secure Syria's chemical and biological weapons, after U.S. intelligence reports show the Syrian regime may be readying those weapons and may be desperate enough to use them, U.S…

  15. இலங்கையின் வடகிழக்குப் பகுதியிலிருந்து ஒஸ்திரேலியாவுக்கு புகலிடம் தேடி வந்தவர்களைத் திருப்பி அனுப்பாது அவர்களுக்கு அரசியல் தஞ்சம் அளிக்குமாறு மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை ஒஸ்திரேலியா அரசாங்கத்திடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். ஒஸ்திரேலியா தமிழ் ஏதிலியர் கழகத்தினூடாக அவர் அனுப்பிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு நாடுகடத்தப்பட்டுத் திருப்பியனுப்பப்படும் மக்களுடைய பரிதாபகரமான நிலை தொடர்பாக நான் அவசரமாக உங்களுடைய கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன். வெளிநாட்டில் அரசியல் அடைக்கலம் கோரிய பின்னர் திருப்பி அனுப்பப்படுபவர்களின் அரசாங்கத்தினாலும் அதனுடைய ஆயுதப் படையினராலும் துரோகிகளாகக் கணிக்கப்பட…

  16. மகிந்த அரசாங்கத்தை போன்று பலமான அரசாங்கம் இலங்கையில் கடந்த காலங்களில் இருக்கவில்லை - என். ராம் 04 டிசம்பர் 2012 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை பெற்று க்கொள்வதற்காக ஜனாதிபதிக்கு, தமது ஆதரவை வழங்க வேண்டும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை போன்று பலமான அரசாங்கம் இலங்கையில் கடந்த காலங்களிலும் இருக்கவில்லை எனவும் எதிர்காலத்திலும் இலங்கையில் இப்படியான பலமான அரசாங்கம் அமையாது எனவும் இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதிக்கு, தமது ஆதரவை வழங்க வேண்டும் என இந்தியாவின் இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என். ராம் தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து இந்தியா செ…

  17. By J.Stephan 2012-12-04 16:00:58 ஆபிரஹாம் லிங்கன், அதிகாரத்தை பரவலாக்கி அமெரிக்காவை ஒன்றுபடுத்தினார். ஆனால் இலங்கையிலுள்ள சில முட்டாள்கள் அதிகாரங்களை ஓரிடத்தில் கையளித்து நாட்டில் இனரீதியான இராச்சியங்களை உருவாக்கும் திட்டங்களை முன்னெடுக்கின்றனர் என ஐ.தே.க. எம்.பி. காமினி ஜயவிக்கிரம பெரேரா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 22 அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 'பாராளுமன்றம் இன்று சேறுபூசும் இடமாக மாறியுள்ளது. அதன் இறையாண்மைக்கு கொச்சைப்படுத்தும் நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிறப்புரிமை என்ற போர்வையை போர்த்திக்கொண்டு தாம் எதிர்ப்பவர்களை கீழ்த்தரமாக விமர்…

  18. மன்னார் மாவட்டத்தில் சமூகச் சீர்கேடுகளுக்குக் காரணமாகவுள்ள ஓட்டோ சாரதிகளை அடையாளம் கண்டு அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்று வந்த சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் சில \ட்டவிரோதச் செயற்பாடுகளுடன் ஒரு சில ஓட்டோ சாரதிகள் பின்னணியில் காணப்பட்டுள்ளனர். குறித்த பிரச்சினைகள் அண்மைக்காலங்களில் இல்லாத நிலையில் மீண்டும் தலை தூக்கி நிற்கின்றன. இதற்குச் சில ஓட்டோச் சாரதிகளே காரணமாக இருப்பதாகத் தெரிய வருகின்றது. பயணி…

  19. யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறீலங்கா பொலீசாரினால் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி சுதர்சன் என்பவரே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களில் ஒரு மாணவர் மட்டுமே விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனைய மூன்று மாணவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இன்நிலையில் இன்றைய தினம் யாழ் இராணுவ கட்டளைத் தளபதிக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்று வருவதாக தெரியவருகிறது. …

  20. (கெலும் பண்டார,யொஹான் பெரேரா) பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நாடாளுமன்ற தெரிவுக்குழு பற்றி பேசுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சபாநாயர் சமல் ராஜபக்ஷ எம்.பி.க்களுக்கு அறிவுரை வழங்கினார். நாடாளுமன்றத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா, நீதிபதிகளுடன் பிரதம நீதியரசர்சந்தித்துப் பேசியமை தொடர்பில் இன்று விமர்சித்ததைத் அடுத்தே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சபாநாயகர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் யார் பேசினாலும் அது நல்லொழுக்கமாக அமையாது. இந்த வியத்தை நாடாளுமன்ற தெரிவுக்குழு மட்டுமே கையாளும், இந்த விடயம் பற்றி வேறு யாரும் பேசுவதை தவிர்த்துக்…

  21. இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்த நீதிமன்றம் இடைக்காலத் தடை! [Tuesday, 2012-12-04 07:46:41] அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு புதிய சட்ட சவால் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை நாடுகடத்தப்படவிருந்ததாக கூறப்படும் 56 இலங்கையர்கள் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் சிட்னி நீதிமன்றம் குறித்த இலங்கையர்களின் நாடு கடத்தலுக்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.இந்த தடையுத்தரவு நாளை மறுநாள் வியாழக்கிழமை வரை அமுலில் இருக்கும். இதன் பின்னர் மீண்டும் நீதிமன்ற விசாரணைகள் நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. அகதிகளுக்கான நடவடிக்கைக்குழு என்ற அமைப்பு அகதிகள் சார்பில் இந்த இடைக்கால தடையுத்தரவு மனுவை தாக்கல் செய்தது. எனினும் குறித்த இலங்கையர்கள் நாடுகடத்தப…

  22. சிறீதரனின் இல்லத்திற்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு திடீரென நீக்கம்! [Tuesday, 2012-12-04 09:25:02] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பணிமனையான, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அறிவகத்தின் பொலிஸ் பாதுகாப்பு இன்று மாலை அதிரடியாக விலக்கப்பட்டுள்ளது. இதுவரை அறிவகத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவரும் அவர்களின் மேலிட உத்தரவின் பேரில் பாதுகாப்பு கடமையில் இருந்து அதிரடியாக இன்று விலக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பா.உறுப்பினர், சி.சிறீதரன் உரிய இடங்களுக்கு முறையிட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இதேவேளை வடக்கில் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் இல்லப் பாதுகாப்பில் எந்த மாற்றங்களும் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. http:/…

  23. வவுனியா நீதிபதியின் பணப்பையை திருடிய சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் சிறீலங்கா | ADMIN | DECEMBER 4, 2012 AT 08:01 வவுனியா நீதிபதி அலெக்ஸ் ராஜாவின் பணப்பையை திருடிய குற்றச்சாட்டின் பேரில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரு அதிகாரிகள் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோட்டே தொடரூந்து நிலையத்துக்கு அருகே இவர்கள் சிறிலங்கா காவல்துறையினரால் நேற்றுக்காலை கைது செய்யப்பட்டனர். நீதிபதிகள் கூட்டத்துக்காக வவுனியா நீதிபதி அலெக்ஸ் ராஜா நேற்று அதிகாலை 5.30 மணியளவில் தொடரூந்து மூலம் கொழும்பு வந்தார். தொடரூந்தில் இருந்து இறங்கி, வெள்ளவத்தை செல்வதற்காக பேருந்து ஒன்றில் ஏறியபோதே, அவரது பயணப் பையில் இருந்த பணப்பை திருடப்பட்டது தெரியவந்தது. உடனடியாக …

  24. தமிழீழமே ஈழத்தமிழர் தேசத்தின் இலக்கெனும் உறுதியுடன் நிறைவுகண்ட நா.தமிழீழ அரசாங்கத்தின் அமர்வு ! By naatham On 2 Dec, 2012 At 11:01 PM | பிரித்தாணிய மண்ணில் இடம்பெற்று வந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது நேரடிய பாராளுமன்ற அமர்வானது முக்கிய தீர்மானங்களுடன் ஞாயிற்றுக்கிழமை (02-12-2012) நிறைவடைந்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்று வந்த பாராளுமன்ற அமர்வு குறித்து நாடுகடந்த தமிழீழ் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையின் முழுவிபரம் : ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்க, உணர்வுகள் நிறைந்த அமர்வில் கடந்த நான்கு நாட்களாக பங்கு பற்றியிருக்கிறோம். இந் அமர்வினை நடைபெறாமல் தடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகளையும் தாண்டி இந்த அமர்வு சிறப்பாக நடைபெற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.