Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 500 மில்லியன் ரூபா செலவில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய சிறைச்சாலை அமைக்க அரசு திட்டம். [Tuesday, 2012-11-13 07:30:17] அமெரிக்காவைப் போன்று அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கொழும்பிற்கு வெளியே சிறைச்சாலை ஒன்றை அமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.வெலிக்கடைச் சிறைக் கைதிகளின் நடவடிக்கைகள் மற்றும் அவர்களை பார்வையிட செல்வோர் தொடர்பில் கண்காணிக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது. சிறைச்சாலையில் அதிகளவு சன நெரிசல் நிலவுவதனால் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் நிலைமை ஏற்படுவதால், கைதிகளை சந்திக்க செல்வோரை வீடியோ பதிவு செய்யக் கூடிய வகையில் சிறைச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த அதி நவீன சிறைச்சாலையை அமைப்பதற்கு 500 மில்லிய…

  2. நமக்காக நாம் நிதியத்துக்கு 400 மில்லியன் வருமானம் :அரசாங்கம் தகவல் By General 2012-11-13 10:20:26 "அப்பிவெனுவென் அப்பி'' (நமக்காக நாம்) நிதியத்துக்கு 2010 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் இதுவரை மொத்தமாக சுமார் 400 பில்லியன் (40 ஆயிரம் கோடி) ரூபா பணம் கிடைத்திருப்பதாக பாராளுமன்றத்தில் அரசாங்கம் அறிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஜனநாயக தேசிய கூட்டணியின் கொழும்பு மாவட்ட எம்.பி. சுனில் ஹதுன்நெத்தி பிரதமரிடம் எழுப்பியிருந்த கோள்விக்கு ஆளும் தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த பதிலிலேயே இது பற்றிய விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அப்பிவெனுவென் அப்பி நிதியம் தொடர்பாகவே சுனில் ஹந்துன்…

  3. [size=4]நந்திக் கடலுடன் தமிழர் பிரச்சினை முடிந்துவிட்டது. அதனால் அவர்களுக்கு இனிமேல் '13' அல்லது '19' தேவையில்லை என அறிவித்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், 13 ஐ இல்லாதொழிப்பதற்காக அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோர் ஆரம்பித்துள்ள சமருக்கு சிங்கள மக்களை அணிதிரட்டி ஆதரவை வழங்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் 13 வது திருத்தத்துக்குப் பதிலாக 19 வது திருத்தத்தை அரசாங்கம் கொண்டுவரப்போவதாக வெளியாகியிருக்கும் செய்திகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே தேவப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரவேகர இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: "அரசியலமைப்பின் 13 ஆவது சரத்தை இல்லாதொழிப்பதற்கான சமர் இப்போது…

  4. [size=3] இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும்: கருணாநிதி கோரிக்கை[/size][size=2] தமிழகம் | ADMIN | NOVEMBER 12, 2012 AT 11:37[/size] [size=3] இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த இந்தியா அழுத்தம் தர வேண்டும். இதற்கு, மத்திய அரசு உறுதுணையாக இருந்தால் தான், நாமும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க முடியும்,´´ என்று, தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைமுகமாக மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.[/size][size=3] “டெசோ´ மாநாட்டு தீர்மான நகலை ஐ.நா., சபையில் வழங்கி விட்டு, நேற்று சென்னை வந்த, திமுக பொருளாளர், ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோருக்கு பாராட்டுவிழா, சென்னை அறிவாலயத்தில் நடந்தது.[/size][size=3] விழாவில்,திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது, “டெச…

  5. [size=4]சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுக்கு முகம்கொடுக்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெற்ற போரை முடிவுறுத்தியமை காரணமாக சிலர் எம்மை பழிவாங்க சந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கின்றனர். எம்மையும், படைவீரர்களையும் சர்வதேச நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த முயற்சிக்கப்படுகின்றது. எனினும், இந்த சவால்களை முறியடிப்பதற்கும் சர்வதேச அழுத்தங்களை எதிர்நோக்கவும் தயார். யுத்தத்திற்கு முன்னர் ஊனமுற்ற நாட்டிலேயே மக்கள் வாழ்ந்து வந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது. போரை முடிவுறுத்தியதன் மூலம் எமக்கும் எமது பிள்ளைகளுக்கும் பாரியளவு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவே அதனை எதிர் கொள்ள தயாராக இருப்பதாக அவர் க…

    • 2 replies
    • 608 views
  6. பாடசாலை கூரை திருத்த மாகாணசபையிடம் நிதி இல்லை – ஆளுநரின் கூத்துக்கு மில்லியன் கணக்கில் செலவு : 12 நவம்பர் 2012 யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பமாகவுள்ள நாடு தழுவிய மாகாண ஆளுநர்களது கூட்டத்திற்கென பெருமளவு வடமாகாண சபை நிதி அள்ளிக்கொட்டப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.வருகை தரும் எட்டு மாகாண ஆளுநர்களுடன் அவர்களது விருந்தினர்களென சுமார் 34 பேரளவில் வடக்கை சுற்றிப்பார்க்க வருகை தரவுள்ளதாக தெரியவருகின்றது. அவர்களது தங்குமிட வசதிகளை நட்சத்திர தரத்தில் பேணுமாறு அறிவுறுத்தல்களை வடமாகாண ஆளுநர் சந்திரசிறி விடுத்துள்ளதாக அவரது அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.இதே வேளை ஆளுநர் சந்திரசிறி அவுஸ்திரேலியாயிலுள்ள தனது மகள்கள் உட்பட நான்கு விருந்தினர்களுடன் பங்கெ…

    • 2 replies
    • 396 views
  7. ரொறன்ரோவைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் வன்னிப் பட்டறை அமைப்பின் ஆதரவுடன் கேப்பாபிலவு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. 1,30,000 இலங்கை ரூபாய்கள் பெறுமதியான கல்வி உபகரணங்கள் மாணவர்களுக்கு அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது வற்றாப்பளை மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. கனடாவில் இயங்கிவரும் வன்னிப்பட்டறை அமைப்பானது வன்னியில் போரினால் பாதிக்கபட்டுள்ள மக்களது உதவிக்காக தமது தொண்டர்கள் முலம் சமூக நிகழ்வுகளில் உணவுநியைம் அமைத்து நிதி சேகரிப்பில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது. http://youtu.be/BtawrFCM71w http://www.seithy.co...&lang…

  8. [size=5]வடபுலத்தில் செயற்பட்டு வரும் அரசசார்பற்ற அமைப்புக்கள் மீதான நெருக்குவாரங்கள் அதிகரிப்பு[/size] 12 நவம்பர் 2012 இலங்கையின் வடபுலத்தில் செயற்பட்டு வரும் அரசசார்பற்ற அமைப்புக்கள் மீதான நெருக்குவாரங்கள் என்றுமில்லாத வகையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.குறிப்பாக ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் போர்க்குற்ற விவவகாரங்களில் அரசசார்பற்ற அமைப்புக்களே முன்னின்று தகவல்களை திரட்டி வருவதாக அரசு சந்தேகம் கொண்டுள்ளமையினால் இக்கெடுபிடிகள் தலைதூக்கியுள்ளது.பெரும்பாலான யாழ்ப்பாணத்தில் உள்ள அரச சார்பற்ற அமைப்புக்கள் நாளாந்தம் படையினருக்கு தமது அன்றாட அறிக்கைகளை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாளாந்தம் தமது அலு…

  9. [size=4]தமிழ் மக்கள் மீதான இனப் படுகொலையை ஓர் இனஅழிப்பு எனக் கூறுவதற்கு சர்வதேச சமூகம் பின்னடிக்கலாம் ஆனால் உண்மையில் இடம்பெற்றது இன அழிப்பத்தான். இலங்கைத்தீவில் தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாது அழிப்பதற்காகவே அரசினால் தமிழ் மக்கள் மீதான இனப் படுகொலையானது கடந்த 60 ஆண்டுகளாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உறுதிபடத் தெரிவித்திருக்கின்றார். உலகத் தமிழர் மாநாடு பிரித்தானிய பாராளுமன்றக் கட்டடத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. பிரித்தானிய தமிழர் பேரவையின் முன்னெடுப்பில் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்றக் குழு என்ற பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் குழு மேற்படி மாநாட்டிற்கான அழைப்பினை விடுத்திருந்தது.…

  10. நோர்வே சிறுவர் காப்பகத்தினால் ஏமாற்றப்பட்ட மற்றுமோர் யாழ்ப்பாணத்து குடும்பம் By J.Stephan 2012-11-12 22:35:50 நோர்வே சிறுவர் காப்பகத்தினால் மற்றுமோர் யாழ்ப்பாணத்து குடும்பம் ஏமாற்றப்பட்டுள்ள சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது. அத்துடன் மேற்படி குடும்பத்துக்கு சாதகமான நீதிமன்றத்தின் தீர்ப்பும் நோர்வே சிறுவர் காப்பகத்தினால் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்துள்ளன. நோர்வேயின் ஒஸ்லோவில் வதியும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வசந்தகுமாரன் மற்றும் ஷியாமலா வசந்தகுமாரன் தம்பதிகளின் ஷியாந்தன் (வயது 11) மற்றும் ஷண்ட்ஷியா (வயது 08) ஆகிய இரு பிள்ளைகள் நோர்வே சிறுவர் காப்பகத்தினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேற்படி இரு பிள்ளைகளின் மீதான வழக்க…

  11. சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு வரும் இலங்கையர்கள் உடனடியாக திருப்பியனுப்பப்படுவர்: அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரி [Monday, 2012-11-12 21:17:38] அவுஸ்திரேலியாவிற்கு படகுகள் மூலம் வரும் சட்டவிரோத இலங்கை பிரஜைகளை உடனடியாக திருப்பியனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அவ்வாறு வருகை தருபவர்களுக்கு விஷேட கொடுப்பனவுகள் வழங்கப்பட மாட்டாது எனவும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குடிவரவு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.இதுதவிர, அபாயகரமான கடல் பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, அவுஸ்திரேலிய தெற்காசிய பிராந்திய குடிவரவு இயக்குநர் ஜோஸ் அல்வாரிஸ் இன்று கொழும்பில் செய்தியாளர் சந்…

  12. [size=2][size=4]வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணை நடத்தவுள்ளது. இதற்கமைய, சிறைச்சாலை உயரதிகாரிகளை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்தவுள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹாநாம தெரிவித்தார். மேற்படி சிறைச்சாலையில் கைதிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தமது கடமைகளை தவறவிட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். பாரிய குற்றச்செயல்களை மேற்கொண்டவர்கள், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் விளக்கமறியல் கைதிகள் என இவர்களை வேறு வேறாக தடுத்து வைக்கவேண்டிய காலம் கனிந்துள்ளது என்றும் மனித உரிமை ஆணையாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.[/size][/size] [size=2][size=4]htt…

  13. [size=2][size=4](பாரூக் தாஜுதீன்) [/size][/size] வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலவரத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளின் செம்மைப்படுத்தப்படாத பிரதிகளை குற்றப்புலனாய்வுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கும்படி கொழும்பு நீதவான், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களை பணித்துள்ளார். [size=2][size=4]பொரளை பொலிஸாரால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று செய்த விண்ணப்பத்தை கருத்திற்கொண்டு கொழும்பு மேலதிக நீதவான் இந்த கட்டளையைப் பிறப்பித்தார். இச்சமயம், சிறையிலிருந்து தப்பியதாகக் கூறப்படும் ஆறுபேரை பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்செய்தனர். அவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், இந்த வழக்கு …

  14. இலங்கையில் அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச உள்ளுராட்சி சபைக்கு சொந்தமான காணியிலும் கட்டிடத்திலும் தற்காலிக முகாம் அமைத்துள்ள இலங்கை இராணுவம், அந்தக் கட்டிடத்தையும் காணியையும் நிரந்தரமாக தமக்கு கையளிக்குமாறு விடுத்துள்ள கோரிக்கைக்கு பிரதேச சபை தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. 631வது இராணுவ படைப் பிரிவு தலைமையக கட்டளை அதிகாரியினால் எழுத்து மூலம் விடுக்கப்பட்ட இந்தக் கோரிக்கையை தாம் நிராகரித்து, பதில் அனுப்பி வைத்துள்ளதாக பிரதேச சபையின் தலைவர் செல்லையா இராசையா தெரிவிக்கின்றார். 1990 ம் ஆண்டு தொடக்கம் பிரதேச சபை கட்டிடத்திலும், அது அமைந்துள்ள காணியிலும் இராணுவமும் சிறப்பு அதிரடிப் படையும் மாறி மாறி தமது முகாம்களை அமைத்திருந்ததாக கூறும் அவர், 2010ம் ஆண்டு சி…

  15. முல்லைத்தீவு அம்பலவான் பொக்கனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நிலையில் மண்டையோடுகளுக்கு மத்தியில் கல்வி கற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்பகுதியில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னமும் இப்பாடசாலை புனரமைப்பு செய்யப்படாமல் இடிந்த கட்டடங்களுக்குள்ளே இருந்தே மாணவர்கள் கல்வி கற்கின்றனர். அதுமட்டுமின்றி பாடசாலை சுற்றாடலில் யுத்தத்தில் இறந்தவர்களின் மண்டையோடுகள், மனித எழும்புகள் ஆக்காங்கே காணப்படுகின்றன. இவற்றுக்கு மத்தியிலேயே இம் மாணவர்கள் தமது கல்வியை தொடர்கின்றனர். அத்துடன் இம் மாணவர்களுக்கான ஆசிரியர்களுக்கும் பற்றாக்குறை காணப்படுவதாக மாணவர்கள் தெரிவித்தனர். சில பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல…

  16. [size=4]By General 2012-11-12 11:02:42[/size] [size=4]காரைநகர் வலந்தலை பழைய கண்டி ஞானவைரவர் ஆலயத்தின் பெறுமதிமிக்க திரிசூலம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் களவாடப்பட்டுள்ளது.[/size] [size=4]மக்கள் மீளக்குடியமர்ந்த பின்னர் இவ்வாலயத்தில் புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு கடந்த பல வருடங்களாக பூஜிக்கப்பட்டு வந்த வைரவப் பெருமானின் திரிசூலமே திருடர்களால் அபகரிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]இத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்துறைப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.[/size] [size=4]http://www.virakesar...al.php?vid=1568[/size]

    • 3 replies
    • 945 views
  17. [size=4][/size] [size=4]By General 2012-11-12 18:40:01[/size] [size=4]Ranjan,Sridrhan[/size] தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மலையக நகரங்களில் வியாபார நடவடிக்கைகள் களைகட்டியுள்ளன. குறிப்பாக அட்டன் , பொகவந்தலாவை ,மஸ்கெலியா, தலவாக்கலை உட்பட மலையக நகரங்களில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். [size=4] பொருளாதார சிரமத்திற்கு மத்தியிலும் இவர்கள் தங்களால் முடிந்த வகையில் தீபாவளித் திருநாளை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். அத்துடன் மலையக நகரங்களில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த நடைபாதை வியாபாரிகள் தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.[/size] [size=4][/size] [size=4][/size] [size=4]http:…

  18. [size=4]ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதித்தலைவர் சஜித்பிரேமதாச இடையே விசேட சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. பாரளுமன்ற கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.[/size] [size=4]http://www.virakesar...al.php?vid=1578[/size]

  19. [size=2][size=4]8 மில்லியன் ரூபா பெறுமதியான 2 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பகிஸ்தான் பிரஜைகள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு, பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட மேற்படி பாகிஸ்தான் பிரஜைகள் இதற்கு முன்னர் 9 முறை இலங்கைக்கு வந்துள்ளனர் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.[/size][/size] [size=2][size=4]http://tamil.dailymi...3/52571-8-.html[/size][/size]

  20. அமெரிக்கத் தடையினால், ஈரானிடம் எண்ணெய் கொள்வனவை சிறிலங்கா இடைநிறுத்தியுள்ளதை அடுத்து, இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளில் விரிசல் தோன்ற ஆரம்பித்துள்ளது. இதன்காரணமாக ஈரானின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட உமாஓயா பலநோக்கு நீர் மின் அணைக்கட்டு அமைக்கும் திட்டப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. உமாஓயா திட்டப்பணிகளில் ஈடுபட்டுள்ள இரு ஈரானிய நிறுவனங்களின் தவணை கடந்த கொடுப்பனவு மற்றும் ஏனைய நாடுகளிடம் இருந்து எண்ணெயை வாங்க சிறிலங்கா எடுத்துள்ள முடிவு போன்ற காரணங்களினாலேயே ஈரானின் இந்தத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2008 ஏப்ரலில் ஈரானிய அதிபர் மொகமட் அகமட்நியாட் கொழும்பு வந்திருந்த போது, சிறிலங்கா அதிபருடன் நடத்திய பேச்சுக்களில், 450 மில்லியன் டொலர் செலவிலான உமா ஓ…

  21. ஈழத் தமிழர்க‌ள் வெ‌ற்‌றி‌க்கு வெகுதூர‌ம் போக வே‌ண்டு‌ம் - கருணாநிதி திங்கள், 12 நவம்பர் 2012( 12:24 ஈஸ்T ) ஈழ‌த் த‌மிழ‌ர்க‌‌‌ள் ‌பிர‌ச்சனை‌யி‌ல் வெற்றியின் உச்சத்திற்கு செல்ல நாம் வெகுதூரம் போக வேண்டியது உள்ளது எ‌ன்று‌ம் இத‌ற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவை எ‌ன்று‌ம் ‌தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர். இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமெரிக்காவில் உள்ள ஐ.நா. மன்றத்திலும், ஜெனீவா மனித உரிமை ஆணையத்திலும் வழங்கி விட்டு சென்னை திரும்பிய தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர். பாலு எம்.பி. ஆகியோருக்கு டெசோ அமைப்பின் சார்பில் வரவேற்பு-பாராட்டு கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நேற்று மாலை நடந்தது. கூட்டத…

  22. பலாலி: 10 ஆண்டுகளுக்குப் பின் வழக்கு விசாரணைக்கு அனுமதி கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 12 நவம்பர், 2012 - 11:01 ஜிஎம்டி இலங்கை உச்சநீதிமன்றம் 10 ஆண்டுகளுக்குப் பின் விசாரணைக்கு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையின் வடக்கே பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இன்று திங்கட்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு அரசதரப்பு முன்வைத்த ஆட்சேபணையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்…

  23. [size=3][size=4]ஐரோப்பாவில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் புலி ஆதரவு தரப்புக்களினால் இலங்கைக்கும் ஏனைய நாடுகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பரிதி எனப்படும் நடராஜா மகேந்திரன் பரிசில் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]பரிதி தரப்பினருக்கும், ஏனைய தரப்பினருக்கும் இடையிலான உட்பூசலே இந்த மரணத்திற்கான காரணம் எனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவீரர் தின நிகழ்வுகளை பரிசில் நடத்துவது தொடர்பில் ஏற்பட்ட முறுகல் நிலைமையே இந்தக் கொலைக்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.[/size][/size] [size=3][size=4]மாவீரர் தின நிகழ்வு…

  24. [size=2][size=4]பலபிட்டிய, பண்டாரவத்தை கடற்கரைப் பிரதேசத்தில் கடற்படையினருக்கும் பிரதேச இளைஞர் குழுவொன்றுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் கடற்படையினர் மூவர் உட்பட அறுவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. கடற்படையினரே தங்கள் மீது முதலில் தாக்குதல் நடத்தியதாக இளைஞர் குழு தெரிவிக்கின்ற அதேவேளை, இளைஞர்களே தங்கள் மீது ஆரம்பத்தில் தாக்குதல் நடத்தியதாக பலப்பிட்டிய கடற்படை முகாம் பொலிஸார் தெரிவித்தனர். [/size][/size] [size=4]http://tamil.dailymi...2-09-04-54.html[/size]

  25. [size=2][size=4](சுபுன் டயஸ்)[/size][/size] [size=2][size=4]தப்பிச் சென்றவர்களின் எண்ணிக்கையை சிறை அதிகாரிகள் இன்னும் சரியாக அறிவிக்கவில்லை. ஆயினும் தமிழீழ விடுதலை புலிகளான சந்தேக நபர்கள் தப்பிச் செல்லவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். வெலிக்கடை சிறைச்சாலையின் சப்பல் வாட் மற்றும் எல் மண்டபம் ஆகியவற்றில் விசேட அதிரடிப் படையினர் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கை முடிந்து இரண்டொரு நிமிடங்களில் கலவரத்தை தூண்டிவிட்டவர்களை கண்டறிவதற்காக விசேட அதிரடிப் படையினருக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்கள் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன. சிறையிலிருந்தவர்கள் தப்பிச் செல்ல முயன்றபோது அவ்விடத்துக்கு முச்சக்கர வண்டியும் வேனும் எவ்வாறு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.