ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143359 topics in this forum
-
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படை பிரிவின் பிரதிநிதிகள் பட்டியலில் சவேந்திர சில்வாவின் பெயரை வலய நாடுகளே பரிந்துரை செய்ததாக ஐநா செயலாளர் நாயகத்தின் பதில் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சவேந்திர சில்வா குறித்த படைபிரிவிற்கு நியமிக்கப்பட்டமையை ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடுமையாக விமர்சித்திருந்தார். இது விடயம் தொடர்பில் அவர் ஐநா செயலாளர் நாயகத்திற்கு கடிதம் மூலம் அறிவித்தும் உள்ளார். ஐநா அமைதி காக்கும் படைப் பிரிவின் ஆசிய வலயத்திற்கு ஆலோசகர் குழு உறுப்பினராக சவேந்திர சில்வா கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இலங்கையின் இறுத…
-
- 0 replies
- 1k views
-
-
ஒன்றுபட்ட குரலாய் ஐ.நா மனித உரிமைச் சபையின் முன்னால் அணிதிரள்வோம் !தமிழத் தேசிய இயக்கத் தலைவர் தோழர் தியாகு ஈழத்தமிழினத்தின் மீதான இனப்படுகொலை தொடர்பில், சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, புலம்பெயர் தமிழர்கள் அனைவரையும் ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச் சபையின் முன்னால், நீதிக்காய் ஒன்றுபடுமாறு தமிழகத்தில் இருந்து தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் தோழர் தியாகு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். http://youtu.be/xhoLz2-VCwM ஐ.நா மனித உரிமைச் சபையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு புலம்பெயர் தமிழ்மக்களுக்கு தோழர் தியாகு அவர்கள் விடுத்துள்ள அழைப்பில்.... சிங்கள அரசானது சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சூழலில், சர்வதேசத்தை திசை திருப்பவே சிறிலங்கா அரசாங்கம் நல…
-
- 1 reply
- 599 views
-
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஊடாக இலங்கைப் பிரச்சினைக்கு உள்நாட்டு தீர்வு ஒன்றை காண முடியும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை அரசாங்கம் செயற்படுத்துமானால் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பூரண ஒத்துழைப்பை வழங்கும் என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஒருபோதும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கப்பட மாட்டாதென அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.seithy.co...&language=tamil
-
- 1 reply
- 498 views
-
-
இறுதிக் கட்ட யுத்தம் பற்றிய இராணுவ விசாரணைகளை ஓர் காலம் தாழ்த்தும் தந்திரோபாயமாகவே கருதப்பட வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் ஆரம்பிக்கப்பட உள்ளநிலையில் இலங்கை இராணுவம் விசாரணைகள் பற்றி அறிவித்துள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஏற்பட்ட பொதுமக்கள் இழப்புக்கள் மற்றும் செனல்4 ஆவணப்படம் போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தும்நோக்கில் ஐவர் அடங்கிய இராணுவ நீதிமன்றமொன்று நிறுப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியான விசாரணைகளை தடுக்கும் நோக்கில் இராணுவம் இவ்வாறானஓர் அறிவிப்பை விடுத்துள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. யுத்தம் நிறைவடைந்து மூன்றாண்டுகள் கடக்க உள்ள நிலையில் திட…
-
- 0 replies
- 675 views
-
-
வலிகாமம் வடக்கு முன்னரங்கப் பகுதி யில் பலாலி படைத் தளத்தின் முன்னர ங்க நிலைகளாக விளங்கும் ஒட்டகப்புல த்திலிருந்து வயாவிளான் ஊடாகத் தெல்லிப்பளைச் சந்தி வரைக்கும் அங்கிருந்து காங்கேசன்துறை வரை நிரந்தரத் தடுப்பு வேலிகளை இராணு வத்தினர் அமைத்து வருகின்றனர். இதனால் வலி.வடக்கில் பலாலி இராணுவத் தலைமையகத்தை அண்மித்த இடங்களில் உள்ள 23 கிராம அலுவலர் பிரிவுகளில் மக்கள் மீளக்குடியமர்வதற்கான சாத்தியங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டப்படுகின்றது. நிரந்த தடுப்பு வேலிகளை அமைப்பதற்கான தூண்கள் இப்போது "கொங்கிறீட்" போட்டு நடப்பட்டு வருகின்றன. இந்த பாதுகாப்பு வேலிக்குள் 23 கிராம அலுவ லர் பிரிவுகள் அடங்கி உள்ளன. 7,273 குடும்பங்களைச் சேர்ந்த 26,281 பேர் இப் பகுதிகளி…
-
- 0 replies
- 651 views
-
-
கொழும்பு, மாளிகாவத்தையில் ஜே.வி.பியினால் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றுவரும் ஆர்பாட்டத்தில் கண்ணீர்ப் புகை பிரயோகம் மற்றும் தண்ணீரடிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.எரிபொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து நாட்டின் பல பாகங்களிலும் ஆங்காங்கே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில், கொழும்பு, மாளிகாவத்தையில் ஜே.வி.பி. ஒழுங்கு செய்த ஆர்ப்பாட்டம் மீது கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் தண்ணீரடிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். http://www.saritham.com/?p=50703
-
- 4 replies
- 712 views
-
-
சிலாபத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை அடுத்து அங்கு பதற்றநிலை உருவாகியுள்ளது. இதையடுத்து இன்றுமாலை 6 மணி முதல் காவல்துறை ஊரடங்குச்சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னதாக மீனவர் ஒருவர் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, சிலாபம கடற்கரையில் சுமார் 15,000 வரையிலான மீனவர்களும் குடும்பத்தினரும் குழுமியிருந்தனர். அதேவேளை, நிலைமை மோசமடைவதை தடுக்க சிலாபம் பகுதிக்கு பெருமளவு சிறிலங்கா இராணுவத்தினரும், சிறப்பு அதிரடிப்படையினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். http://www.eeladhesa...ndex.php?option
-
- 1 reply
- 711 views
-
-
தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக்கிற்கு விசர் பிடித்துள்ளதாக சர்ச்சைக்குரிய பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு ஒ பிளேக்கிற்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்திற்கும் ரொபர்ட் ஓ பிளக்கிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது தாம் பிரசன்னமாகியிருந்தால், வேறுவிதமான முடிவுகள் கிடைக்கப் பெற்றிருக்கும் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மின்சார நாற்…
-
- 3 replies
- 1.1k views
-
-
கடந்த கால யுத்த நடவடிக்கைகளால் மூடப்பட்டிருந்த யாழ்ப்பாணம் சிங்கள மகா வித்தியாலயத்தை திறப்பதற்கான முயற்சிகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. குறித்த பாடசாலையினை மீளத்திறப்பது தொடர்பில் விரிவான அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறு கல்வி அதிகாரிகளை அரசாங்கம் கேட்டிருப்பதாக தெரியவருகின்றது. தென்ராட்சியின் கைதடிப்பகுதிய்pல் அத்துமீறி குடியமர்ந்துள்ள சிங்கள குடியேற்றவாசிகளின் பிள்ளைகளது கல்வி வாய்ப்பை கருத்தில் கொண்டே இப்பாடசாலையை மீளத்திறக்க முயற்சிகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது. கைதடிப்பகுதியில் அத்துமீறி குடியமர்ந்துள்ள சிங்கள குடியேற்றவாசிகளின் பிள்ளைகள் தற்போது அனுராதபுரம் பகுதியில் கல்வி கற்று வருகின்றனர். தமது பிள்ளைகள் யாழ்ப்பாணத்தில் கல்வி கற்பதற்கான …
-
- 1 reply
- 643 views
-
-
யூத இன மக்கள் இஸ்ரவேல் என்றொரு நாட்டை உருவாக்கியது போல் நீங்கள் எல்லோரும் சேர்ந்து தமிழீழத்தை அமைக்க உருவாக்க தயாராகுங்கள்: வான் கரும்புலி கேணல் ரூபன் [15.02.2009] சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி 20-02-2009 அன்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் – தாக்குதலுக்கு முன்னதாக – உலகத் தமிழர்களை நோக்கிய எழுதிய கடிதம் . “தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்” என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் 20-02-2009 அன்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்திய வான் கரும்புலிகளில் ஒருவரா…
-
- 10 replies
- 1.4k views
-
-
மேற்குலகம் எமக்கு தொடர்ந்தும் அழுத்தம் தருகின்றன அது ஏன்? இவ்வாறு கேட்டார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அமெரிக்க குழுவினரை நேற்று சந்திக்கும்போதே மேற்கண்டவாறு கேட்டுள்ளார். இலங்கையில் மனித உரிமையை நிலைநாட்டுவதில் நாம் மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றோம். இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளோம். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்து தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறெல்லாம் மேற்கொண்ட போதிலும் மேற்குலக நாடுகள் எமக்கு அநீதியையே இழைக்கின்றன. மேற்குலக நாடுகளுடன் நட்புறவைப் பேணிவரும் எமக்கு அந்நாடுகள் தொடர்ச்சியாக அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றன, அநீதி இழைக்கின்றன. என்று அவர் குறிப்பிட்டார். http://www.se…
-
- 2 replies
- 845 views
-
-
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பிலும், சனல் 4 இன் காணொளி தொடர்பிலும் விசாரணை மேற்கொள்வதற்கு விசாரணை நீதிமன்றமொன்று இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவினால் நியமிக்கப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்டுள்ள நீதிமன்ற குழுவிற்கு, தற்போதைய கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றும் மேஜர் ஜெனரல் கிறிசாந்த டி சில்வா தெரிவு செய்யப்பட்டள்ளார். இறுதிக்கட்ட யுத்தத் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் இடம்பெறும் எனவும் போர்க்குற்றங்கள் தொடர்பில் மேலும் சந்தேகங்கள் இருப்பின் அது குறித்து மீண்டும் விசாரணைகள் இடம்பெற்று அதற்குரியவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவின…
-
- 2 replies
- 728 views
-
-
அரசாங்கமே தடைகளை ஏற்படுத்துகிறது - வாசுதேவ நாணயக்கார கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கமே தடைகளை ஏற்படுத்துவதாக தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவிக்கின்றார். கொழும்பில் நேற்று நடைபெற்ற மாநாடொன்றில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவோம் என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு இடம்பெற்றது. இந்த நாடு இரண்டாகப் பிளவுபடுவதை தடுப்பதற்காகவே யுத்தம் இடம்பெற்றதாகக் குறிப்பிட்ட அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, யுத்தத்தின் பின்னரும் இரண்டு நாடுகள் உருவாகியுள்ளதாக கூறினார். வட பகு…
-
- 1 reply
- 907 views
-
-
ஐ.நா அமைதிகாக்கும் பணி தொடர்பான ஆலோசனைக் குழுவுக்கு சிறீலங்கா மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை எழுப்பிய தெரிவித்த கருத்தை ஐ.நாவுக்கான இலங்கைத் தூதரகம் நிராகரித்துள்ளதுடன், இது நியாயமற்றதும் ஒழுக்க நெறியை மீறுவதுமாகும் என நேற்று செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது. நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தற்போது தெரிவிக்கப்படும் கிலேசத்தை எம்மால் புரிந்துகொள்ள முடியும் என ஐ.நா.வுக்கான இலங்கைத் தூதரகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ள. http://www.eeladhesa...ndex.php?option
-
- 3 replies
- 1k views
-
-
பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற சங்கத்தின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வரும் 54 நாடுகளை சேர்ந்த தூதுக்குழுவினர் வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவதன் மூலம் அங்கு மேற்கொள்ளப்படும் நல்லிணக்கம் மற்றும் புனர்நிர்மாண செயற்பாடுகள் குறித்து நேரடி தகவல்களை பெற முடியும் என பிரதி சபாநாயகர் சந்திம வீரகொடி தெரிவித்தார். இத்தூக்குழுவினர் வட மாகாணம் உட்பட நாட்டின் எப்பாகத்திற்கும் விஜயம் மேற்கொள்ளவதன் மூலம் அங்கு மேற்கொள்ளப்படும் நல்லிணக்கம் மற்றும் புனர்நிர்மாண செயற்பாடுகள் குறித்து நேரடி தகவல்களை பெற முடியும் என அவர் குறிப்பிட்டார். இந்த விஜயத்தின் ஊடாக குறித்த தூதுக்குழுவினர் மூன்றாம் தரப்பினரினால் வழங்கப்படும் தகவல்கள் உண்மையா அல்லது பொய்யா என்பதை அறிய முடியும் எனவும் அவர் தெரிவ…
-
- 2 replies
- 515 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் இலங்கை அரச படையினர் அணு ஆயுதங்களை பயன்படுத்தி இருக்கின்றனர் என்று அமெரிக்காவுக்கு தகவல் கிடைத்து இருக்கின்றது. தமிழ் நாட்டில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்ற இலங்கை அகதிகளில் ஒருவர் மிகுந்த நம்பிக்கையுடன் உறுதியாக இத்தகவலை சொல்லி இருக்கின்றார். தமிழ் நாட்டு முகாம்களில் உள்ள அகதிகளில் ஒரு தொகையினரை அமெரிக்காவின் சென்னைத் துணைத் தூதரக அதிகாரிகள் 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதி பகுதியில் நேரில் சந்தித்து உரையாடி இருக்கின்றனர். அப்போதே அகதிகளில் ஒருவர் முல்லைத்தீவு மீதான தாக்குதலின்போது அரச படையினர் அணு ஆயுதங்களை பாவித்து இருக்கின்றனர் என்று திடமாக சொன்னார். இறுதி யுத்தத்தில் சிறீலங்கா அரச படையினர் இரசாயன் மற்றும்…
-
- 14 replies
- 2.2k views
-
-
எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து சிலாபத்தில் மீனவர்கள் இன்றும் ஆர்ப்பாட்ட எதிர்ப்பபை நடாத்திவருகின்றனர். தடுப்பதற்காக அவர்கள் மீது பொலிஸார் நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மீனவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படகிறது . அத்துடன் ஆர்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தடியடிப்பிரயோகமும் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. http://www.seithy.co...&language=tamil
-
- 4 replies
- 792 views
-
-
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஐந்து ஆண்டுகளாக யுத்தத்தை காட்டி இந்த அரசாங்கம் மக்களை வசியப்படுத்தி வந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசப்பற்று என்ற பெயரில் மக்களிடையே குரோத உணர்வுகளை இந்த அரசாங்கம் தூண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். தேசத்திற்கு மகுடம் என்ற கண்காட்சி ஜனாதிபதியின் நன்மதிப்பை மேம்படுத்தும் நோக்கில் பாரியளவில் பணம் செலவழித்து கண்காட்ச…
-
- 3 replies
- 808 views
-
-
இலங்கையில் மிகவும் உயிர் அச்சுறுத் தலுக்கு உள்ளான 64 பேர் இந்தோனேசியக் கடற்பரப்பினூடாக நேற்றையதினம் 11ம் திகதி அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றையதினம் இவர்களை அவுஸ்திரேலியக் கடற்பரப்பில் கைது செய்த அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் 64 இலங்கைப் பயணிகளுடன் இந்தோனேசியாவிலிருந்து பறப்பட்ட 45அடி நீளமான படகே அவுஸ்திரேலியக் கடற்பரப்பில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. http://www.saritham.com/?p=50713
-
- 0 replies
- 749 views
-
-
சிறீலங்கா ஜனாதிபதி தனக்கு வழங்கும் முரண்பாடான பணிகள் காரணமாக தற்போது சர்வதேச ரீதியாக தான் நெருக்கடியைச் சந்தித்துள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட அமைச்சர், அங்கிருந்த தமக்கு நெருக்கமான சிலரிடம் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த விருந்துபசாரத்தில் சிங்கப்பூரின் பிரபல வர்த்தகர் ஒருவரும் பங்கேற்றிருந்தார். தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்து எதிர்காலத்தில் அமெரிக்க இராஜங்கச் செயலாளர் ஹிலாரி கிளிண்டனைச் சந்திக்கும் போது ஏற்படக் கூடிய நெருக்கடிகள் குறித்து அமைச்சர் இதன்போது கலந்துரையாடியுள்ளார். ஹிலாரி கிளிண்டனை இதற்கு முன்னர் சந்தித்தபோத…
-
- 4 replies
- 1.3k views
-
-
'அமெரிக்காவின் தீர்மானம் அநீதியானது! பரிந்துரைகளை அமுல்படுத்த அவகாசம் தேவை!! - மகிந்த சமரசிங்க' ஜெனிவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19வது கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு ஆதரவளிப்பது என அமெரிக்கா எடுத்துள்ள தீர்மானம் அநீதியானது எனத் தெரிவித்திருக்கும் சிறிலங்கா, உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசம் தேவை எனவும் தெரிவித்துள்ளது. 'சிறிலங்கா அரசாங்கமானது அனைத்து விடயங்களையும் நேர்மையுடனும் நல்லெண்ணத்தின் அடிப்படையிலுமே செய்து வருகின்றது. அனைத்து விடயங்களிலும் வெளிப்படைத் தன்மையையும் பேணி வருகின்றோம். உண்மைகளைக் க…
-
- 4 replies
- 1.8k views
-
-
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே சிங்கப்பூருக்குப் பயணமாகியுள்ளார். இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு அவர்,நேற்று பிற்பகல் 4.35 மணியளவில் சிங்கப்பூர் செங்கீ விமான நிலையத்தைச் சென்றடைந்தார். அங்கு அவரை சிங்கப்பூர் வர்த்தக கைத்தொழில் மற்றும் உள்நாட்டு விவகார அமைச்சர் எஸ். ஈஸ்வரன் வரவேற்றார். சிங்கப்பூர் அதிபரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றுள்ள சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று அந்த நாட்டின் அதிபர், பிரதமர் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுக்களில் ஈடுபடுவதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்பாடுகளிலும் கையெழுத்திடவுள்ளார் என அறியப்படுகிறது. ஜனாதிபதியுடன் சிராந்தி ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல…
-
- 2 replies
- 769 views
-
-
டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 120 ரூபாவாக வீழ்ச்சி அமெரிக்க டொருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று 120.10 ரூபாவாக குறைவடைந்தது. வரலாற்றில் டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மிகக் குறைந்த பெறுமதி இதுவாகும். நாணயப் பரிமாற்ற வீதத்தில் இலங்கை மத்திய வங்கி தனது தலையீட்டை விலக்கிக் கொண்டதையடுத்து இவ்வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/வணிகம்/35966--120-.html
-
- 8 replies
- 1.8k views
-
-
இலங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான பிரதி நிரந்தரப் பிரதிநிதி ஷவேந்திர சில்வா, பான் மூனின் அமைதிக்காப்பு படைக்கான சிரேஸ்ட ஆலோசனைக்குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் தாம் பான் கீ மூனுக்கு கடிதம் எழுதியுள்ளதாக நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். இலங்கையின் இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு அப்போது 58 வது படைப்பிரிவின் தளபதியாக கடமையாற்றிய ஷவேந்திர சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் அரசை அமைதி காப்பு படைகளுக்கான பான் கீ மூனின் ஆலோசனைக் குழுவுக்கு ஐக்கிய நாடுகளுக்கான ஆசியக்குழுவும் மத்தியக்கிழக்கு குழுவுமே நியமித்துள்ளன. எனவே போர்க்கு…
-
- 11 replies
- 1.1k views
-
-
கொழும்பு டெலிகிராப் இணையதளத்தில் கடந்த மாதத்தில் இலங்கை தொடர்பாக பிராந்திய, சர்வதேசிய மட்டங்களில் நடந்து வரும் நகர்வுகள் தொடர்பான செய்திக் கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. அதனை அடியொற்றி தமிழ் இணையதளங்களிலும் அந்தச் செய்தி தொடர்பான அனுமானங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எம்.எஸ்.கிருஷ்ணாவின் இலங்கைப் பயணம், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்திலுள்ள தென் ஆசியப் பிராந்தியம், மனித உரிமை, போர்க்குற்றத் துறைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளின் இலங்கை விஜயங்களின் பின்னணியை கொழும்பு டெலிகிராப் கட்டுரை பகுப்பாய்வுக்கு உட்படுத்துகிறது. இலங்கை சுதந்திரத் தினக் கொண்டாட்டங்களில் பங்கு பெறாமல், அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்காமல்,இந்தியாவிலுள்ள ஷிர்டி சாய்பாபா கோவிலுக…
-
- 8 replies
- 1.5k views
-