ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
வணக்கம் பாருங்கோ, எப்பிடி இருக்கிறியள்? விண்ணாணம், விண்ணாணமாய் நிறைய பூராயங்கள் நாட்டில நடக்குது கண்டியளே,? எங்கட சனாதிபதி ஐயாவ உள்ளுராட்சி சபைத் தலைவர்கள்சந்திச்ச சம்பவம் ஒண்டு கிட்டடியில கொழும்பில நடந்ததெல்லே? அதிலயும் கனக்க பிரகண்டங்கள் நடந்ததாகச் சொல்லுகினம். சனாதிபதி ஐயா உரையாற்றிமுடிய அவரோட நிண்டு போட்டோ எடுக்க எல்லாரும் முண்டியடிச்சவையாம் பாருங்கோ. அதிலயும் குறிப்பா யாழ்ப்பாணத்தில இருந்து போனவையும் ஐயாவோட நிண்டு போட்டோ எடுக்க ஆயைப்பட்டு அடம்பிடிச்சவையாம். அதில்ல பாருங்கோ, அங்க போன ஒரு சிலர் தாங்கள் போட்டோக்கு நிக்கேல்ல விட்டிட்டு (?!) வந்திட்டம் எண்டு சொல்லியும் பெருமைப்பட்டிருக்கினம் பாருங்கோ… அங்க போனதும் ஒண்டு தான் ஐயாவோட நிண்டு போட்டோ எடுத்ததும் ஒண்டு தான் கண…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையில் உள்ள சர்வாதிகாரிகளை விரட்டியடிப்பதற்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் இராணவத் தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் பொது மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, உலகம் முழுவதிலும் சர்வாதிகாரிகளை சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து விரட்டியடித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் அடாவடி அமைச்சர் மேர்வின் சில்வாவின் நடவடிக்கைகளுக்கு அச்சம் கொண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ஊடகவியலாளர்களை விரட்டுகின்றனர். வீடியோ கமராக்கள் அனைத்தையும் வீசி எறிய முயற்சிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார…
-
- 0 replies
- 747 views
-
-
மன்னார் மாவட்ட மீனவர்கள் பாஸ் நடைமுறைகள் காரணமாகப் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கூறுகின்றனர். இந்தக் கெடுபிடிகள் நீக்கப்பட வேண்டும், சங்கு குளிப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும். இந்திய மீனவர்களின் வருகை நிறுத்தப்பட வேண்டும். எனக்கோரி அந்த மீனவர்கள் அமைதிப் பேரணியொன்றை நடத்தியிருந்தனர். மன்னார் நகர வீதிகள் ஊடாகச் சென்ற இந்தப் பேரணி, மன்னார் அரச செயலகத்தில் சென்று முடிவடைந்தது. மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சரஸ்வதி மோகநாதனிடம் ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை மீனவர்கள் கையளித்தனர். பத்து விதமான பாஸ்களை தாம் பெற வேண்டியிருப்பதுடன், வெளிமாவட்ட மீனவர்கள் சிலிண்டர்களைப் பயன்படுத்தி சங்கு குளிப்பதுடன், …
-
- 0 replies
- 442 views
-
-
இலங்கையில் நிலவும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு அரசாங்க தரப்பால் நிராகரிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய 3 கோரிக்கைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (08) காலை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு அழைப்பு விடுத்தார். இனப்பிரச்சினை தீர்வு திட்டத்திற்காக கடந்த 16ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த வடக்கு, கிழக்கு இணைப்பு, பொலிஸ் அதிகாரம் மற்றும் மாகாண அரசுக்கான காணி உரிமம் போன்ற …
-
- 1 reply
- 830 views
-
-
யாழில் வேலைக்காகச் சென்ற இளைஞர் மாயம் யாழ். நகரிலுள்ள கடையொன்றிற்கு வேலைக்காகச் சென்ற இளைஞரொருவர் கடந்த மூன்று நாட்களாக வீடு திரும்பவில்லையென சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்று புதன்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. உடுவிலைச் சேர்ந்த 21 வயதான கண்ணுச்சாமி தர்சன் என்பவரே இவ்வாறு காணாமல் போனவர் ஆவார். இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வன்னியிலிருந்து வந்த குறித்த இளைஞர் சுன்னாகத்திலிருந்த நிலையில் அண்மையில் உடுவில் கிராம அலுவலர் பிரிவுக்கு இடமாற்றம் பெற்று பெற்றோருடன் தங்கியிருந்துள்ளார். கடந்த 5ஆம் திகதி காலை வழமைபோன்று தான் வேலை செய்யும் யாழ். நகரிலுள்ள கடைக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற குறித்த இளைஞர், மாலையாகியும் வீ…
-
- 0 replies
- 757 views
-
-
'புளுக்குணாவையில் ஆட்லறி வைத்து அடித்தும் சிங்களவர்கள் செல்லவில்லை; இதனைவிடவும் என்னசெய்வது? ' இன அழிப்பு, நிலப் பறிப்பு இவற்றை தடுப்பதற்காகவே நாங்கள் அரசியல் செய்கிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு சொல்கிறது. புளுக்குணாவையில் ஆட்லறியை வைத்து தலைவர் அடித்தார் தானே? சிங்களவர்கள் விட்டுவிட்டுப் போனார்களா? இதனை விடவும் என்ன செய்வது என கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் கேள்வியெழுப்பியுள்ளார். கொக்கட்டிச்சோலையிலுள்ள கருணா அம்மான் பிரதேச கலாசார நிலையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள், அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள், அதிபர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ…
-
- 0 replies
- 943 views
-
-
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கையை அவசரமாக வெளியிட வேண்டிய அவசியமில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கையை அரசாங்கம் வேண்டுமென்றே தமதப்படுத்துவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையை அவசர அவசரமாக பகிரங்கப்படுத்தப்பட வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அறிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிகவும் உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாகவும், உரிய நேரத்தில் ஜனாதிபதி இந்த அறி;க்கையை பாராளுமன்றில் சமர்ப்பிப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பான அறிக்கையை வெளியிடுவதற்கு அமெரிக்கா ஐந்து ஆண்டு காலம் எ…
-
- 2 replies
- 675 views
-
-
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அமைதி முயற்சிகள் வெற்றியளிக்காமல் போனதற்கு இலங்கை, இந்தியா மட்டும் காரணமல்ல. நோர்வேக்கும் இதில் பங்குண்டு என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மிடம் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த வாரம் நோர்வே சென்றிருந்த கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன எரிக் சொல்ஹெய்முடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போதே எரிக் சொல்ஹெய்மிடம் மேற்படி தாம் கூறினார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: கடந்த வாரம் நோர்வேக்குக் கடற்றொழில் அமைச்சின் முக்கிய அதிகாரிகள் சென்றிருந்தோம். அங்கு இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத்தூதுவர் எரிக் சொல்ஹெய்முட…
-
- 0 replies
- 685 views
-
-
ஐ.தே.கவின் எதிர்ப்புப் பேராட்டத்தில் தமிழர் பிரச்சினைகள் புறக்கணிப்பு!; கிளர்ந்தெழுந்து இடதுசாரிகள் போர்க்கொடி சஜித்துடன் விக்கிரமபாகு கடும் கருத்து மோதல் அரசுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்கும் தேசிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது எனவும் இதில் தமிழர்கள் பிரச்சினைகள் எது வும் உள்வாங்கப்படவில்லை என்பதால் அவ்வாறான ஆர்ப்பாட்டத்தைப் புறக்கணிப்பதற்கு இடதுசாரிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன எனவும் தெரிய வருகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் மேல்மாகாண சபை உறுப்பினர் சிரால் லக்திலக்கவின் இல்லத்தில் எதிர்க்கட்சிக ளின் எதிர்கால அரசியல் நடவடிக்கை கள் குறித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்றுமுன்தினம் இரவு இடம் பெற்றது. …
-
- 0 replies
- 624 views
-
-
காணிகளை அரசுடமையாக்கும் அதிகாரம் - கோத்தாபயவுக்கு வழங்கும் முயற்சி தோல்வி [ வியாழக்கிழமை, 08 டிசெம்பர் 2011, 00:24 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] தேவைப்படும் காணிகளை அரசுடமையாக்குவதற்கு அதிகாரமளிக்கும் நகர மற்றும் நாடு திட்டமிடல் திருத்தச் சட்டமூலத்தை சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் இருந்து விலக்கிக் கொண்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரிலேயே சிறிலங்கா அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக ஆளும்கட்சி கொரடா தினேஸ் குணவர்த்தன நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முன்னர், மாகாணசபைகளின் பார்வைக்காக சமர்ப்பிக்கப்பட்டு அவற்றின் ஒப்புதல் பெறப்பட வே…
-
- 0 replies
- 592 views
-
-
பாலியல் வல்லுறவு உட்பட்ட குற்றங்களால் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் பணியாற்றிய நூற்றுக்கணக்கான சிங்களப்படையினர் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால் மீண்டும் சுமார் ஆயிரம் சிறிலங்காப் படையினர் லெபனான் மற்றும் ஹெய்ட்டி ஆகிய நாடுகளிற்கு அனுப்பப்படுகின்றனர். முந்தைய குற்றம் செய்த படையினர்க்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகள் கேள்வி கேட்டுவிட்டு அப்படியே அதனை கைவிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைதிப்படைக்கு மேற்கத்தைய நாடுகள் தமது படைகளை அனுப்புவதனை குறைத்து வருவதால் அவர்களுக்கும் ஆளணி வங்குரோத்து என்ன செய்வது? . இதனிடையே லெபனான் செல்லும் படையினர் ஆயுதங்கள் மற்றும் இராணுவ வாகனங்களுடன் செல்லவுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ பி…
-
- 1 reply
- 466 views
-
-
அநுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 11 பிக்கு மாணவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களை பகிடி வதைக்கு உட்படுத்தியமையே இதற்குக் காரணமாகும். இவர்களைத் தவிர மேலும் 26 பேருக்கு 2 வருடம் முதல் 3 வருடகாலம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழத்தின் உபவேந்தர் வண.தும்புள்ளே சீலாகந்த தேரர் கூறினார். ஒழுக்காற்று விசாரணைகளின் பின்னர் பல்கலைக்கழக பேரவையினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இப்பல்கலைக்கழகத்தில் கடந்த பெப்ரவரி மாதம் இடையூறுகளை ஏற்படுத்தியதில் இவர்கள் குற்றவாளிகளாக காணப்பட்டதாகவும் உபவேந்தர் வண.தும்புள்ளே சீலாகந்த தேரர் கூறினார். இம்மாணவர்கள் முன்னர் எழுதிய பரீட்சைப் பெறுபேறுகளையும் வெளியிடாமல் நிறுத்திவைப…
-
- 2 replies
- 740 views
-
-
பிரித்தானியாவில் இலங்கையர் கொலை தொடர்பில் 19 வயது இளைஞன் கைது! Thursday, December 8, 2011, 13:14 பிரித்தானிய மேர்செசைட் பகுதியில் இலங்கையர் ஒருவர் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் 19 வயதுடைய இளைஞன் நேற்று(07.12.2011) இரவு கைது செய்யப்பட்டு லிவர்பூல் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையரான 30 வயதுடைய மகேஸ் விக்ரமசிங்க என்பவர் கடந்த 29ம் திகதி நியூஸ் இன் கிங்ஸ்வே வர்த்தக நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது முகமுடி அணிந்த நபரால் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதனைத் த…
-
- 0 replies
- 786 views
-
-
தன்னுடைய மகளை காட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை மாத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் இதற்கு முன்னர் மூன்று பாலியல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டு அதில் குற்றவாளி என இனங்காணப்பட்டு 15 வருடங்கள் சிறை தண்டனை பெற்றவராவார். சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தவர் கடந்த இரு மாதங்களுக்கு முன் ஜனாதிபதியின் (மகிந்த ராஜபக்ஸ) பொது மன்னிப்பில் விடுதலையாகி வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://akkinikkunchu.com/new/
-
- 1 reply
- 1.6k views
-
-
முல்லைத்தீவில் காணாமல்போனவர் சடலமாக மீட்பு முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் பகுதியில் காணாமல்போனவர் நேற்றுக் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் காணாமல்போன ஒட்டுசுட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய சிவபாதம் உதயகுமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். கச்சலாம் மடு குளத்தில் மிதந்துகொண்டிருந்த நிலையிலேயே இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=35448
-
- 0 replies
- 709 views
-
-
தனமல்வில ஹம்பேகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உள்ளிட்ட நான்கு பேர் பலியாகினர் நேற்று இரவு வீட்டுக்கு வந்த நபர் ஒருவர், வீட்டில் இருந்த அம்மா, அப்பா மற்றும் அவர்களது இரு பெண்பிள்ளைகளையும் சுட்டுள்ளார். சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் மூத்த சகோதரி பலியாகினர். படுகாயமடைந்த மற்றைய சகோதரி தற்போது ரத்திரபுரி வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளார். துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேகநபர் தம்மைதாமே சுட்டுக்கொண்டு பலியானதாக காவல்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார். காதல் தொடர்பான பிரச்சினையே இந்த சம்பத்திற்கான காரணம் என்று தெரியவந்துள்ளது. http://www.seithy.co...&language=ta…
-
- 0 replies
- 852 views
-
-
திருகோணமலையில் ஊசிகளுடன் மோட்டார் சயிக்கிளில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையால் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றம் நிலவி வருகின்றது. கடந்த சில தினங்களாக பாடசாலை ஆசிரியர்கள், மாணவிகள் சிலர் மர்ம ஊசி மனிதர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்ப டுகின்றது. திருகோணமலை தில்லை நகரில் வசித்து வரும் முன்பள்ளி ஆசிரியையொருவர் நேற்றுக் காலை 10 மணியளவில் பாடசாலை சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மமனிதரொருவர் ஆசிரியையின் பின்புறத்தில் குத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளார். குறித்த ஆசிரியை தனது வீட்டிலிருந்து உட்துறைமுக வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கறுப்புநிற மோட்டார் சைக்கிளில் வந்த நீ…
-
- 0 replies
- 684 views
-
-
முள்ளிவாய்க்காலில் அரச படைகளின் தாக்குதலினால் தனது பெற்றோரை இழந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. வரணி மகா வித்தியாலயத்தில் 10 ஆம் தரத்தில் கல்வி பின்று வந்த மாணவ சிறுமியே தூக்கிட்டுத் தற்கொலை செய்தள்ளார். இவரது சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று முன்தினம் மீட்கப்பட்டது.யாழ் தென்மராட்சி, வரணி இயற்றாலை பிரதேசத்திலுள்ள இந்த மாணவியின் உறவினரின் வீட்டிஆலஆய தூக்கிட:டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சி.சுஜீவனா என்ற மாணவி தனது பெற்றோரை யுத்தத்தில் தனது பெற்றோரை இழந்ததன் காரணமாக விரக்தியுற்றுக் காணப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. RE
-
- 0 replies
- 620 views
-
-
ஐரோப்பாவில் இயங்கி வரும் புலிப் பாடசாலைகளினால் ஆபத்து ஏற்படக் கூடும் - அரசாங்கம் 07 டிசம்பர் 2011 ஐரோப்பாவில் இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலிப் பாடசாலைகளினால் ஆபத்து ஏற்படக் கூடுமென இலங்கை அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பா முழுவதிலும் சுமார் 350 விடுதலைப் புலி பாடசாலைகள் இயங்கி வருவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்தப் பாடாசலைகளில் தமிழீழ விடுதலைப் புலிக் கொள்கைகள் பிரச்சாரம் செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புலிப் பாடசாலைகளில் சுமார் 20000 மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜெர்மன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளில் அதிகளவில் இவ்வாறான பாடசாலைகள் இயங்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
விளங்கவில்லை என்பதை விளங்கிக்கொள்வது முக்கியமானது பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் விரிவுரையாற்றிக் கொண்டிருந்தார். மாணவர்கள் விரிவுரையைக் கேட்டுக் கொண்டு இருந்தனர். ஒரு மாணவன் சேர்! விளங்கவில்லை என்றார்.பேராசிரியர் சிவத்தம்பி அந்த மாணவரைப் பார் த்து,விளங்கவில்லை என்பதையாவது நீ விளங்கிக் கொண்டாய். இங்கு பலர் விளங்கவில்லை என்பதைக்கூட விளங் கிக் கொள்ளவில்லை என்றார். பேராசிரியர் சிவத்தம்பி கூறிய விளங்கவில்லை என்பதை விளங்கிக்கொள்ளுதல் தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் மிகவும் பொருத்தமுடையவர்களாக இருக்கின்றனர். பேச்சுவார்த்தை, தெரிவுக்குழு, சர்வதேச அழுத்தம் இப்படியாக ஏதேதோ பேசப்படுகின்றது. எனினும் இனப்பிரச்சினை க்கு தீர்வு ஏதேனும் உண்டா எனில் எதுவுமே இல்லை. அதேந…
-
- 1 reply
- 993 views
-
-
தள்ளாடும் பேச்சுவார்த்தை கூட்டமைப்பின் 3 யோசனைகளை நேற்றும் நிராகரித்தது அரசு இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் நோக்குடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சமர்ப்பிக் கப்பட்ட அதிகாரப் பரவலாக்கம் குறித்த யோசனைகளில் மூன்று முக்கிய விடயங்களை தம்மால் ஏற்றுக்கொள்ள முடி யாது என அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற 15வது சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது நாடாளுமன்ற தெரிவுக்குழு விவகாரம் தொடர் பில் அரசாங்கத்தரப்பில் கொடுக்கப்பட்ட அழுத்தங்களைத் தொடர்ந்து, இருதரப்பினருக்கும் இடையிலான பேச்சு வார் த்தையில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், இவ்விரு தரப்பினருக்கும் இடை…
-
- 0 replies
- 761 views
-
-
தமிழர்கள் நிம்மதியுடனும் சுதந்திரமாகவும் வாழ அரசியல் தீர்வே அவசியம் - யாழ். ஆயர் தெரிவிப்பு தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ வேண்டுமானால் அரசியல் தீர்வு மிகமிக அவசியமென நோர்வே தூதரக அதிகாரிகளிடம் யாழ். ஆயர தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார். இன்று (07) யாழ். ஆயர் இல்லத்தில் நோர்வே தூதரக அதிகாரிகளுக்கும் ஆயருக்குமிடையிலான சந்திப்பின் போதே ஆயர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்களின் அபிலாசைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் போருக்கு பின்னரான காலப்பகுதியிலும் தமிழ் மக்களின் மனங்களில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய சூழல் இன்னமும் இங்கு ஏற்படுத்தப்படவில்லை. அபிவிருத்திக்…
-
- 0 replies
- 606 views
-
-
ஈழத் தமிழர்களுக்காய் ரஜனி குரல் கொடுக்க வேண்டும்: தீபச்செல்வன் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் அவலத்தின் பொழுது திரைத்திரையினருடன் கலந்து நடிகர் ரஜனிகாந்த் குரல் கொடுத்தார் என்று குறிப்பிட்ட ஈழ கவிஞரும் ஊடகவியலாளருமான தீபச்செல்வன் நடிகர் ரஜனிகாந்த் ஈழத்தில் மூன்று தலைமுறைகளாக சூப்பஸ்டாராக செல்வாக்குப் பெறுபவர் என்று குறிப்பிட்டார். ரஜனிகாந்தின் படங்களை புலிகள் ஒரு பொழுதும் தடை செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஈழத்தில் ரஜனிகாந்த் தொடர்பில் இந்தியா டுடே பத்திரிகையில் குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்தியா டுடே பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரை முழுமையாக தருகிறோம். போரும் இடப்பெயர்வும் அலைச்சலும் பலிகளும…
-
- 0 replies
- 1.2k views
-
-
போர்க்குற்றங்கள் புரிந்த இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு புது டெல்லி பயணமாகியுள்ளார். செங்கோட்டையிலுள்ள இந்திய இராணுவத் தலைமையத்திற்கு திங்கட்கிழமை விஜயம் செய்த ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு இராணுவ சம்பிரதாயத்திற்கமைய செங்கம்பள வரவேற்பு அளிக்கப் பட்டுள்ளது. ஒரு வார காலம் இந்தியாவில் தங்கியிருக்கும் ஜகத் ஜயசூரிய இந்தியாவின் பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகளையும், இந்திய இராணுவ தளபதி உட்பட உயர் அதிகாரிகளையும் சந்தித்து இரு நாட்டு விடயங்கள் தொடர்பாக உயர் மட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆராச்சி தெரிவித்தார். செங்கோட்டையிலுள்ள இந்திய இராணுவத் தலைமையகத்தில் எதிர்வரும் 10 ஆம் திகதி…
-
- 1 reply
- 1.1k views
-
-
நேற்று ஐக்கிய நாடுகள் வளாகம் நியூயோர்க்கில் சனல் 4 இனால் தயாரிக்கப்பட்ட சிறிலங்காவில் கொலைக்களம் காணொளி காண்பிக்கப்பட்டது. மனித உரிமைக்கான ஆசிய சமூகம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஏராளமான ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஆனால் பலித கேகன்னவிற்கும் அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது. தான் இதற்கு சமூகம் கொடுத்து கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும் என சவால் விட்டிருந்த பாலித கேகன்ன இறுதி நேரத்தில் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. சிறிலங்கா அரசு தரப்பில் யாரும் சமூகம் கொடுக்கவில்லை. மூலம்
-
- 5 replies
- 1.3k views
-