ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
[ செவ்வாய்க்கிழமை, 07 யூன் 2011, 14:46 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஈரானிய அதிபர் முகமட் அகமடினெஜாட் இரகசிய கடிதம் ஒன்றை சிறப்புத் தூதுவர் ஒருவர் மூலம் கொடுத்தனுப்பியுள்ளார். ஈரானிய பிரதி வெளிவிவகார அமைச்சர் மொகமட் அலி பதொல்லாகி மூலமே இந்தக் கடிதம் சிறிலங்கா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி அந்த நாட்டுத் தொலைகாட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த இரகசியக் கடிதத்தின் உள்ளடக்கம் பற்றிய எந்தத் தகவலையும் ஈரானியத் தொலைக்காட்சி வெளியிடவில்லை. நேற்று அலரிமாளிகையில் சிறிலங்கா அதிபரை சந்தித்த ஈரானிய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஈரானிய அதிபரின் இந்தக் கடித்தத்தை கையளித்துள்ளார். …
-
- 0 replies
- 494 views
-
-
[Tuesday, 2011-06-07 12:11:23] ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. நவநீதம்பிள்ளை இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை விவகாரங்களில் ஒரு விதமாகவும், பஹ்ரெய்ன் விவகாரத்தில் மற்றொரு விதமாகவும் நவநீதம்பிள்ளை செயற்பட்டுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. உறுப்பு நாடுகளின் உள்விவகாரப் பிரச்சினைகளில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அணுகுமுறை தொடர்பில் சர்ச்சை நிலைமை எழுந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டை வெளியிட்ட நவனீதம்பிள்ளை, பஹ்ரெய்ன் விவகாரத்தில் நெகிழ்வுப் பங்கான கருத்துக்களை வெளிய…
-
- 0 replies
- 377 views
-
-
[Tuesday, 2011-06-07 15:14:25] கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் கிராமத்தில் மக்கள் நடமாட்டமற்ற பகுதியிலிருந்து அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் சடலத்தை கிளிநொச்சிப் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர் என டிதரிவிக்கப்படுகிறது. மாவட்ட மக்கள் வங்கிக்கிளை அலுவலகத்திற்க்குப் பின்னாலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்தே மேற்படிச் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதிக்கு மாடுமேய்ப்பதற்க்காகச் சென்ற நபரொருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேற்படிச் சடலத்தை கிளிநொச்சிப் பொலிஸார் மாவட்ட பதில் நீதவான் திருமதி எஸ்.விஜயராணி முன்னிலையில் மீட்டெடுத்தனர். சடலம் பின்னர் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. எனினும் பெண்னொருவர் காணாமல்போனதாக இதுவரை தமக்கு முறைப்ப…
-
- 0 replies
- 649 views
-
-
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு துணைத் தலைவர் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் சட்டப்பேரவையில் (07.06.2011) ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையில், இலங்கையில் நிகழ்ந்துள்ளது. போர் குற்றம் என்று சிலர் கூறுகிறார்கள் இதனை இன அழிப்பு போர் குற்றம் என்று எனது கட்சி கருதுகிறது. இறுதிப் போரில் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 679 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு உரிய ஆதாரங்களும் இருக்கின்றன. இலங்கை அரசின் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் அரசு மக்கள் தொகை கணக்கீட்டின் படி 2008ஆம் ஆண்டு அங்கு வாழ்ந்த மக்களின் எண்ணிக்கைக்கு 4 லட்சத்து 29 ஆயிரத்து 59 பேர். போர் முடிந்து அரசின் கட்டுப்பாட்டுக்குள் வ…
-
- 0 replies
- 469 views
-
-
[Tuesday, 2011-06-07 08:27:15] அண்மையில் சிறிலங்காவில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க தூதரக படைத்துறை அதிகாரி நீதித்துறையில் மேற்கொள்ள முயற்சித்த குழப்பங்கள் மூலம் அமெரிக்காவின் இரட்டை வேடம் கலைந்துள்ளதாக இலிநோயிஸ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் பிரான்சிஸ் பொயில்ட் தெரிவித்துள்ளார். தமிழ்நெற் இணையத்தளத்திற்கு இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: லெப். கேணல் லாறி ஸ்மித்தின் கருத்தின் பின்னனியில் அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்ரகனே இயங்கியுள்ளது. சிறிலங்காவில் அழைப்பை அமெரிக்காவின் வெளிவிவகாரத் திணைக்களம் நிராகரித்துள்ள போதும், பென்ரகனின் அனுமதியுடன் ஸ்மித் மாநாட்டில் பங்குபற்றியுள்ளார். உத்தியோகபூர்வமாக ப…
-
- 0 replies
- 846 views
-
-
ஆயுதக் கொள்வனவின் போது மோசடி இடம்பெற்றது – அரசாங்கம் ஒப்புதல் வாக்குமூலம்! Published on June 7, 2011 இராணுவம், கடற்படை, விமானப்படை, ஆகியனவற்றுக்கு ஆயுதங்களையும் வெடிப்பொருட்களையும் கொள்வனவு செய்வதில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக திருமதி ஷிராணி திலகவர்தன தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு 2007 ஆம் ஆண்டு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பதை அரசாங்கம் இன்று நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. எனினும் இது குறித்த மேலதிக விபரங்களை வெளியிட அரசாங்கம் மறுத்துவிட்டது. ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் அரசாங்கத் தரப்பு பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன இதைத் தெரிவித்தார். மேற்படி ஆணைக்க…
-
- 0 replies
- 424 views
-
-
ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்த தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்: வைகோ ம.தி.மு.க.வின் 18வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ, தமிழக சட்டசபை தேர்தலின் போது ஜெயலலிதா அளித்த வாக்குறுதிப்படி போர்க்குற்றம் புரிந்த இலங்கை அதிபர் ராஜபக் சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்த தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். அதற்கான தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும். ம.தி.மு.க.வை விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களாக கூறுகின்றனர். ஆனால் விடுதலைப்புலிகளை ஆதரிக்க மாட்டோம் என்று எந்தக்கட்சியும் கூற முடியாத நிலை வந்திருப்பதை மக்கள் உணர வேண்டும். லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த கொடுமை உலகில் வேறு எங…
-
- 0 replies
- 468 views
-
-
இலங்கையின் பதிலுக்காக பான் கீ மூன் காத்திருப்பு பொறுப்புக் கூறுதல் விடயமாகத் தான் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து பேசவுள்ளதாகவும் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பதிலை இன்னும் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாகவும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது. நான் இலங்கை அரசாங்கத்தின் பதிலை எதிர்பார்த்துக்கொண்டுள்ளேன். அவர்கள் பதிலை விரைவாக அனுப்பினால் அதனடிப்படையில் புது விடயங்களை நான் தெரிந்துகொள்ளக் கூடும் என திங்கட்கிழமை நியூயோர்க்கில் நடந்த பத்திரிகையாளர்கள் மாநாட்டில் அவர் கூறினார். இதே கூட்டத்தில் தான் ஆசிய குழுவை சந்தித்ததாகவும் அவர்கள் இரண்டாம் தடவையும் தான், ஐ.நா. செயலாளர் நாயகமாக தெரியப்பட…
-
- 7 replies
- 677 views
- 1 follower
-
-
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், அதன் பின்னணிகள் குறித்த அனைத்து விடயங்களையும் தான் எதிர்வரும் 17 ஆம் திகதி அம்பலப்படுத்தப் போவதாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார். . குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று முன்னாள் பொலிஸ்மா அதிபரிடம் வினவிய போதே அவ்வாறு இவ்வாறு தெரிவித்துள்ளார். . 17 ஆம் திகதி வரை பொறுத்திருங்கள் எல்லாவற்றையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறேன் என கூறிய அவர், 17 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே தான் அனைத்தினையும் வெளியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார். . http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0…
-
- 4 replies
- 1.3k views
- 1 follower
-
-
தெற்காசியாவில் அதியுயரமான கொக்காவில் தொலைத் தொடர்புக் கோபுரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் இன்று முற்பகல் திறந்துவைக்கப்பட்டுள்ளது.வன்னி, கொக்காவில் தொலைத்தொடர்புக் கோபுரம் 450 மில்லியன் ரூபா செலவில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொலைத் தொடர்புக் கோபுரத்தினூடாக வட மாகாணத்திற்கான தொலைக்காட்சி வானொலி மற்றும் தொலைபேசிச் சேவைகள் வழங்கப்படவுள்ளன. சுமார் 174 மீற்றர் உயரமான இந்தத் தொலைத் தொடர்புக் கோபுரத்தின் மூலம் தொலைக்காட்சிச் சேவைகளை வழங்குவதற்காக நிறுவனங்கள் சில விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்கோபுரத்தை மகிந்த ராஜபக்ஸ இன்று திறந்து வைத்தார்.அங்கு உரையாற்றிய சிறீலங்கா அதிபர் புலிகள் அன்று எம்மிடம் கேட்டதை இன்று பலர் எம்மிடம் கேட்க முயற்சிக்கி…
-
- 12 replies
- 2.1k views
- 1 follower
-
-
Tuesday, June 7, 2011, 14:38சிறீலங்கா கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இருந்து உடனடியாக இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும் என இலங்கையில் சக்தி வாய்ந்த தொழிற் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை அரசு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உயர்பாதுப்பு வலயமாக அறிவிக்கும் திட்டத்தினையும் மீளப்பெற வேண்டும் என சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர் ஒன்றியத் தலைவர் அன்டன் மார்கஸ் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 30 திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் பின்னர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் பீபீசிக்கு தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் போராட்டத்தின் போது …
-
- 0 replies
- 453 views
-
-
[Tuesday, 2011-06-07 08:18:48] திருகோணமலை நகரப் பகுதியில் நேற்று ஒவ்வொரு வீடாக இராணுவத்தினரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து பாரிய சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர். இராணுவம், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட குழுவொன்றே திருமலை நகரப்பகுதியின் அனைத்து வீடுகளிலும் வசிப்பவர்கள் தொடர்பான விபரங்கைளத் திரட்டியுள்ளனர். ஏற்கெனவே வீட்டில் வசிப்பவர்கள் விபரம் பதியப்பட்டுள்ள விபரப் பதிவுகளுடன் தற்போது குடியிருப்பவர்களின் விபரம் ஒத்துப் போகின்றதா என்பது குறித்தும், புதிதாக யாரேனும் தங்கியுள்ளனரா என்பது குறித்தும் படையினர் கடும் அவதானத்துடன் சோதனையை மேற்கொண்டுள்ளனர். புதிதாக தங்கியிருப்பவர்கள் தொடர்பில் அவர்கள் சொந்த இடம், …
-
- 0 replies
- 384 views
-
-
Workflow: Public வவுனியா நிருபர் செவ்வாய்க்கிழமை, யூன் 7, 2011 கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இருந்து உடனடியாக இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும் என இலங்கையில் சக்தி வாய்ந்த தொழிற் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன... . இதேவேளை அரசு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உயர்பாதுப்பு வலயமாக அறிவிக்கும் திட்டத்தினையும் மீளப்பெற வேண்டும் என சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர் ஒன்றியத் தலைவர் அன்டன் மார்கஸ் தெரிவித்துள்ளார். . மேலும், கடந்த 30 திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் பின்னர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். . ஒரு வாரம் சிங்கள படையினர் தமது இடங்களில் தங்கி …
-
- 0 replies
- 410 views
-
-
இலங்கைக்கு சீனா அளித்துவரும் உதவிகளுக்கு பிரதமர் டி.எம்.ஜயரட்ண நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையின் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு, இறையாண்மை என்பவற்றுக்கு சீனா வழங்கும் ஆதரவினையும் அவர் வரவேற்றுள்ளார். சீனாவுக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் டி.எம். ஜயரட்ண நேற்று முன்தினம் சீன மன்றத்தின் தலைவர் டாய் பின்ங்கோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.,குயின் மிங்க் பகுதியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கை மற்றும் சீனாவுக்கிடையில் நடைறையிலான சிறந்த ஒத்துழைப்பு காணப்படுவதாக சீன மன்றத் தலைவர் டாய் பின்ங்கோ பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் அபிவிருத்தி, பாது காப்பு மற்றும் இறையாண்மை ஆகியவற்றுக்கு சீனா வழங்கும் ஆதரவு பாராட்…
-
- 0 replies
- 518 views
-
-
Posted by சோபிதா on 07/06/2011 in செய்தி வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தில் புதிதாகப் புத்தர்சிலை ஒன்றை அமைக்க காணி வழங்குமாறு வித்தியாலய அதிபரிடம் கோரப்பட்டுள்ளது. தனித்தமிழ் பாடசாலையாக இயங்கி வரும் இந்த வித்தியாலயம் 19 ஏக்கர் காணியில் அமைந்துள்ளது. இந்தக் காணியின் சிறு பகுதி அரச காணியாகும். அந்தக் காணியைத் தருமாறே கோரிக்கை விடுவிக்கப்பட்டது.தமிழ்ப் பிள்ளைகள் கல்வி பயிலும் பாடசாலையில் புத்தர் சிலை வைப்பதா எனப் பாடசாலை பெற்றோர்கள் ஆதங்கத்துடன் கேட்கிறார்கள். வவுனியா நகரில் முக்கிய இடங்களில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு வரும் நிலையில் ஆஸ்பத்திரியில் சிலை வைக்கப்பட்டது. இப்போது தமிழ்ப் பாடசாலைக்கும் புத்தர் வரப்போகிறார் இது என்ன நியாயம் என்கின்றனர் வவுனியா நகர ம…
-
- 0 replies
- 491 views
-
-
வடக்கு கிழக்கில் இளம்பெண்களின் அகால மரணங்கள் அதிகரித்து வருகிறது. நேற்று கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து இளம்பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் இன்று வெல்லாவெளியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது http://www.thinakkathir.com/?p=10814
-
- 0 replies
- 588 views
-
-
கணவர் கொலையில் ராஜபட்சவுக்கு தொடர்பு: லசந்த விக்கிரமதுங்க மனைவி கொழும்பு, மே 17- இலங்கையில் இருந்து வெளிவரும் "சண்டே லீடர்" பத்திரிகையின் ஆசிரியராக இருந்த தனது கணவர் லசந்த விக்கிரமதுங்க கொலையில் அதிபர் ராஜபட்சவுக்கு தொடர்பு இருப்பதாக அவரது மனைவி குற்றம்சாட்டியுள்ளார். 2009 ஜனவரி மாதம், லசந்த விக்கிரமதுங்க அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், அதிபர் ராஜபட்சவின் நேரடி உத்தரவின் பேரிலேயே தனது கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று லசந்த விக்கிரமதுங்கவின் மனைவி சோனாலி விக்கிரமதுங்க குற்றம்சாட்டியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. கணவர் கொல்லப்பட்டதில் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு தொடர…
-
- 2 replies
- 787 views
-
-
கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் விஞ்ஞானப்பிரிவில் கல்வி பயிலும் நடராஜா சஞ்ஜீவநாத் என்ற மாணவன் சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் கார் ஒன்றைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். திருக்கோவிலைச் சேர்ந்த இம்மாணவன் புதிய கண்டுபிடிப்புகளை கண்டு பிடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் சூரிய சக்தியில் இயங்கும் இம் மோட்டார் கார் கண்டு பிடித்ததன் மூலம் தமது கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் வீ.பிரபாகரன் தெரிவித்தார். சூழலில் கிடைக்கும் கழிவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த மோட்டார் காரினை தயாரிக்க 22,000 ரூபா செலவு மட்டுமே ஏற்பட்டுள்ளது.இதில் இரண்டு பேர் செல்ல முடியும். அத்தோடு அங்கவீனமானவ…
-
- 6 replies
- 2k views
-
-
குடாநாட்டில் மீண்டும் வெள்ளைவான் கெடுபிடி! மாணவி கடத்தல் முயற்சி தோல்வி! Published on June 7, 2011 வெள்ளை வானில் மாணவியொருவரை கடத்த முற்பட்ட சம்பவம் ஒன்று நேற்று கொக்குவில் இடம்பெற்றுள்ளது. நேற்றுக் காலை 7.30 மணியளவில் கொக்குவில் அம்மன் வீதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த மாணவி வழமை போல் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது இருவர் இந்த மாணவியை பின் தொடர்ந்துள்ளனர். இவர்களின் பின் வெள்ளை வான் ஒன்று இருபக்க கதவுகளையும் திறந்த நிலையில் பின் தொடர்ந்து வந்துள்ளது. குறித்த நபர்களின் நோக்கத்தையறிந்த மாணவி அவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்காக அருகிலிருந்த பாடசாலையொன்றிற்கு சென்று அதிபர், ஆசிரியர்களிடம் சம்ப…
-
- 0 replies
- 652 views
-
-
நீதித்துறையின் முழு அதிகாரமும் மகிந்தாவின் கையில் Tuesday, June 7, 2011, 8:51 சிறீலங்கா சிறீலங்கா அரச தலைவரின் அதிகாரங்களை தொடர்ந்து அதிகரித்துச் செல்வது சிறீலங்கா நீதித்துறையின் சுதந்திரமான செயற்பாடுகளை முற்றாக பாதித்து வருகின்றது.சிறீலங்கா அரசு கொண்டுவந்துள்ள 18 ஆவது திருத்தச்சட்டம் மற்றும் கொண்டுவரத் தீர்மானித்துள்ள 19 ஆவது திருத்தச்சட்டங்களின் மூலம் சிறீலங்கா நீதித்துறையின் முழு அதிகாரமும் சிறீலங்கா அரச தலைவர் வசம் செல்லும் ஆபத்துக்கள் தோன்றியுள்ளதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட நீதியாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறீலங்கா அரச தலைவரின் அதிகாரங்களை தொடர்ந்து அதிகரித்துச் செல்வது…
-
- 0 replies
- 445 views
-
-
கடந்த சில தினங்களாக கொழும்பில் குண்டாந்தடியுடன் இராணுவத்தினர் உலாவுவதைக் கண்டோம். பெண் துஷ்பிரயோகக்காரர் தலைமையிலான குண்டாந்தடி இராணுவத்திற்கு தொடர்ந்து இடமளியோம் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெவித்தார். கொழும்பு மேல் நீதிமன்றில் நடைபெறுகின்ற வெள்ளைக்கொடி விவகார வழக்கின் நேற்றைய விசாரணைக்கு அழைத்து வந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அருகில் இருக்கின்ற பெண் துஷ்பிரயோகக் காரன் குண்டாந்தடி இராணுவத்தின் நடமாட்டத்தை அண்மையில் கொழும்பில் கண்டோம். அவ்வாறான குண்டாந்தடி இராணுவத்தின் நடமாட்டத்திற்கு தொடர்ந்தும் இடமளியோம் என்றார்.கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி கடந்…
-
- 0 replies
- 707 views
-
-
Facebook இல் ஒருவர் மேற்காணும் வீடியோவினை இணைத்திருந்தார். அதனை இங்கே இணைக்கிறேன். கைகளையும் காலையும் இழந்து தங்கள் எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்வதென்ற தங்கள் சோகங்களை இந்த வீடியோவில் பகிர்ந்திருக்கிறார்கள். நீண்டகாலம் விடுதலைப்போரில் இணைந்திருந்தவர்கள் இன்று அவர்களைச் சென்று பார்க்கவே உறவுகள் இல்லாத நிலையில் இருக்கும் இந்த 3பெண்களின் துயரத்தையும் பார்க்கின்ற யாருமே கண்ணீர்விட்டு அழுவார்கள். அத்தகைய அளவுக்கு நொந்துபோயிருக்கும் அவர்களது துயரங்கள் சில நிமிடக்காட்சியாய் பதியப்பட்டுள்ளது. இப்பதிவினைச் செய்தவர் யாரோ தெரியவில்லை. ஆனால் விடயம் எங்களுக்காக வாழ்ந்து ஊனமடைந்து என்ன செய்வதென்று தெரியாத நிலையில் இருக்கும் போராளிகளின் துயரம்.
-
- 8 replies
- 1.4k views
-
-
சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரீஸ் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் ஏனைய பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கப்பூல் நடைபெற்ற 10 ஆவது ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டே வெளிவிவகார அமைச்சர் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த மாநாட்டில் ஆயுத பாதுகாப்பு சவால்கள் எனும் தலைப்பில் அமைச்சர் பீரீஸ் உரையாற்றியிருந்தார். பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சருடனான இந்த சந்திப்பின் போது கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டி.டபிள்யூ.ஏ.எஸ். திசாநாயக்கவு…
-
- 0 replies
- 549 views
-
-
-
பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி எதிர்வரும் ஜூன் 14ஆம் நாள் இரவு 11:00 மணிக்கு வெளியிடவுள்ள 'இலங்கையின் படுகொலைக்களம்' என்ற ஒரு மணித்தியால காணொளி விவரணப் படத்தை வேற்றினத்தவர் மத்தியில் கொண்டு செல்வதன் மூலம் சிறிலங்கா அரசு மீதான அழுத்தத்தை அதிகரிக்க முடியும் என பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவ் அறிக்கையை முழுமையாக இங்கே தருகிறோம். இலங்கையின் படுகொலைக்களம் எனும் காணொளி கடந்த 3ஆம் நாள் வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையில் அனைத்துலக மன்னிப்புச்சபை, மற்றும் சனல்-4 தொலைக்காட்சி ஆகியவற்றின் இணைந்த ஏற்பாட்டில் ஐ.நா பிரதிநிதிகளுக்குக் காண்பிக்கப்பட்டது. இதனைப் பார்வையுற்ற ஐ.நா மற்றும் மனிதநேய அமைப்புக்களின் பிரதிநிதிகள் அதிர்ச…
-
- 2 replies
- 1.2k views
-