ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
[saturday, 2011-05-28 04:56:28] இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இங்கிலாந்தில் மற்றுமொரு ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியா தமிழ் இளையோர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த ஆர்பாட்டம் இங்கிலாந்து நேரப்படி இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து சர்வதேச அளவில் தொடர்ச்சியாக ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இலங்கை கிரிக்கெட் அணிக்கும் சர்வதேசத்தில் ஆர்பாட்டம் வலுப்பெற்றுள்ளது. இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்பாட்டம் இங்கிலாந்து கார்டிவ் ஸ்வலக் மைதானத்திற்கு அண்மித்த பகுதியில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட…
-
- 1 reply
- 579 views
-
-
போரின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஏற்றுக்கொண்டார் சிறிலங்காவின் அமைச்சர் சந்திரசிறி கஜதீர! வன்னியில் இடம்பெற்ற போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை என சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட அமைச்சர்கள் பலரும் கூறிவருகின்ற நிலையில், இப்போரின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டதை சிறிலங்காவின் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர ஏற்றுக் கொண்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின் போது உயிரிழந்தவர்களின் உயிர்களை தம்மால் திருப்பிக் கொடுக்க முடியாதிருப்பினும், அவர்களின் உடமைகளுக்கான நஷ்டஈடு மற்றும் கடன் உதவிகளை தாம் வழங்கி வருவதாகவும் சிறிலங்காவின் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு …
-
- 0 replies
- 912 views
-
-
புரட்சிபாரதம் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் அமிஞ்சிக் கரையில் நடந்து. கூட்டத்துக்கு மாநில தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தலைமை தாங்கினார். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தமிழர்களை இலங்கையில் கொன்று குவித்து இனப்படுகொலை நடத்திய போர்க் குற்றவாளி ராஜபக்சேவிற்கு தூக்குத் தண்டனை கிடைக்க மத்திய அரசை வலியுறுத்துகிறோம். இலங்கை தமிழர்களுக்கு முழுமையான அரசியல் அங்கீகாரம் கிடைக்க இந்திய அரசு தலையிட வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேயை கண்டித்து வரும் ஜூன் 6ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தமிழக மீனவர்கள் தினம் தினம் கொல்லப்படுவதை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மீனவர்கள் வாழ்வாதாரத்திற்கு உத்திரவாதம் கொடுக்க வேண்டும் என்பத…
-
- 0 replies
- 1.1k views
-
-
Published on May 29, 2011 ஓட்டமாவடி சிராஜியா அரபுக்கல்லூரி மாணவர்கள் இருவரும் அக்கல்லூரியின் விடுதி மேற்பார்வையாளர் ஒருவரும் இன்று குளத்தில் மூழ்கி மரணமாகியுள்ளனர். இக்கல்லூரி மாணவர்கள் இன்று காலையில் பொலனறுவை மட்டக்களப்பு எல்லையில் உள்ள கட்டுவம்புல் என்ற இடத்திற்கு சுற்றுலாவில் சென்றனர். அங்குள்ள குளம் ஒன்றில் இன்று நண்பகல் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். விடுதிமேற்பார்வையாளரான மௌலவி அன்வரின் உடல் மீட்கப்பட்ட போதிலும் மாணவர்களின் உடல்கள் மீட்கப்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். source:tamilthai.
-
- 0 replies
- 574 views
-
-
மனிதவுரிமை கூட்டத் தொடரில் நிபுணர்கள் குழு அறிக்கை குறித்த விவாதம் இல்லை! கொழும்பு ஊடகம் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் நிபுணர்கள் குழுவின் அறிக்கை குறித்து விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பில் இருந்து வெளியாகும் சண்டே ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஜெனிவாவில் நாளை (30.05.11) ஆரம்பமாகவுள்ளது. இக் கூட்டத்தொடரில் ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அறிக்கை குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்ப…
-
- 1 reply
- 596 views
-
-
Published on May 29, 2011 வவுனியா தேக்கம்காடு ஆலடிப்பகுதியில் தொடரூந்து மோதி இருவர் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் நேற்று சனி இரவு 11.30மணியளவில் இடம்பெற்றது. அனுராதபுரத்திலிருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த தொடரூந்தே இவர்கள் மீது மோதியுள்ளது. தண்டவாளத்தில் இருந்து இருவரும் கதைத்துக்கொண்டிருந்த போது இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது. பலியானவர்கள் இருவரும் தேக்கம்காட்டைச்சேர்ந்தவர்கள் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர்களின் உடல்கள் மோசமாக சிதைந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. source:tamilthai.
-
- 0 replies
- 739 views
-
-
Published on May 29, 2011-11:42 am சுவிஸ் நாட்டில் அகதித் தஞ்சம் கோரிய தமிழ் மக்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைக்கு எதிராக, அச்சுறுத்தலுக்கு இலக்கான மக்களுக்கான அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் அண்மையில் பேர்ண் மாநகரில் நடைபெற்றது. ’சுவிஸ் நாட்டின் திருப்பியனுப்பும் நடவடிக்கை சிறிலங்காவில் மனித உரிமைகளைப் பாதிக்குமா?’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் லுற்சேர்ண் மாநில பாராளுமன்ற உறுப்பினர் லதன் சுந்தரலிங்கம், ‘பல்மைரா’ தொண்டு நிறுவன இலங்கை இணைப்பாளரும் உளவள ஆலோசகருமான தயா தியாகராஜா, சுவிஸ் மத்திய குடிவரவுத் திணைக்களத்தின் அகதிகளைத் திருப்பி அனுப்புவதற்கான மத்திய நிலையத் தலைமை அதிகாரி பிலிப் ஹாஸ், அச்சுறுத்தலுக்கு இலக்கான மக்களுக்கான…
-
- 0 replies
- 474 views
-
-
நிபுணர்கள் குழு அறிக்கை விவகாரத்தில் சிறிலங்காவை சீனாவும் கைவிட்டதா? - கொழும்பு ஊடகம் கேள்வி சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் சீன விஜயத்தின் போது நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிராக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட முடியாமல் போனமை அரசாங்கத்தை கவலையடையச் செய்துள்ளதாக கோழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸின் புதுடில்லி விஜயத்தின் போது எதிர்பார்த்த சமிஞ்சைகளை கொழும்பு பெற்றிருக்காத நிலையில், அவர் கடந்த வாரம் சீனாவுக்கு விஜயம் செய்திருந்தார். இவருடன் சீனாவுக்கான சிறிலங்கா தூதரகத்தில் முன்னர் பணியாற்றியவரும், தற்போது வெளிவிவகார அமைச்சின் அதிகாரியாக பணியாற்றுபவருமான சோபினி குணசேகரவும் சென்றிருந்தார். ஆனால் சீன அரசியல் …
-
- 0 replies
- 502 views
-
-
http://www.youtube.com/watch?v=w5r2FlZUOBw
-
- 4 replies
- 1.5k views
-
-
Published on May 29, 2011-10:43 am செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகின்றன செய்திகள். ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன் மொத்த தமிழகமும் பட வேண்டும்? அவர் ஒரு நடிகர், அவர் தன் நடிப்பிற்காக கோடிக்கணக்கில் பணம் வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கின்றீர்கள். இதுதானே அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு. இதை தவிர வேறேதும் இருக்கிறதா அப்படி என்ன? இவர் பெரும் சமூகப்போராளியா? எந்த ஒரு சமூகத்தின் விடுதலைக்காக பாடுபட்டவரா? நெல்சன் மாண்டலா போல் தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவரா? செ…
-
- 5 replies
- 1.2k views
-
-
'சிறகு முளைத்த தீயாக' என்னும் கவிதை நூல் .. புதுவை இரத்தினதுரையை மறந்து விட்டோமா? - சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் கவிஞர் புதுவை இரத்தினதுரையை மறந்து விட்டோமா? என்று சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை (14.05.2011) மட்டுவில் ஞானகுமாரனின் 'சிறகு முளைத்த தீயாக' என்னும் கவிதை நூல் அறிமுக விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டார். சங்க காலத்துப் புலவர்கள் தொழில்முறைப் புலவர்கள். இவர்களில் அநேகர் அரசர்களைச் சார்ந்து அவர்களை நாளும் புகழ்பாடிப் பொன்னும் பொருளும் பெற்றுவந்தார்கள். ஆனால், எங்களுடைய இலக்கியப் படைப்பாளிகள் தொழில்முறை எழுத்தாளர…
-
- 41 replies
- 3.9k views
- 1 follower
-
-
நேற்று ஓர் வலைத்தளத்தில் இவ்வாறு ஓர் பதிவு: http://www.salem-news.com/articles/may272011/tamil-genocide-tk.php New Song 'Depression' - Graphic Truth of Sri Lanka Tamil Genocide Song by Agron Belica Story by Tim King Salem-News.com
-
- 7 replies
- 1.5k views
- 1 follower
-
-
ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2011 14:12 யாழ்.நகரிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் திடிரென்று சற்று முன்னர் காஸ் சிலிண்டர் ஒன்று தீ பிடித்து எரிந்ததால் பெறுமதியான பல பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இன்று மதியம் 1 மணியளவில் யாழ். ஆஸ்பத்திரி வீதியில் உள்ள தனியார் வர்த்தக நிலையமென்றிலேயே இவ்வாறு தீ பிடித்துக்கொண்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் வேறு இடங்களுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். யாழ்ப்பாணப் பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் உயிர் இழப்புகள் எவையும் ஏற்படவில்லை. source:tamilenn.
-
- 0 replies
- 917 views
-
-
இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். மதிமுக 18ம் ஆண்டு துவக்க விழா 28.05.2011 அன்று மாலை சென்னை சைதைப்பேட்டையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த அந்நாட்டின் அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். அவர் செய்த போர்க்குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற குரல் உலகெங்கும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் விரைவில் கூடவுள்ள தமிழக சட்டப்பேரவையில் ராஜபக்சேவை ச…
-
- 0 replies
- 696 views
-
-
விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பின்னர் வன்னி மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் புதிதாக பௌத்த விகாரைகளையும், பௌத்த வழிபாட்டுச் சின்னங்களையும் அமைக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போரினால் சிதைந்த பகுதிகளில் உள்ள ஆலயங்கள், பொதுக்கட்டங்கள், பொதுமக்களின் வீடுகள் இன்னமும் சரிவரப் புனரமைக்கப்படாதுள்ள நிலையில் புதிய பௌத்த விகாரைகளை அமைக்கும் நடவடிக்கைகள் மட்டும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. ஏற்கனவே வன்னியில் புதிய பல விகாரைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியிலும் மற்றொரு பாரிய பௌத்த விகாரையை அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விகாரைக்கான தூபியை அமைப்பதற்கு மண் குவிக்கப்பட்டு வருவதுடன் அப்ப…
-
- 0 replies
- 679 views
-
-
Published on May 29, 2011-10:09 am தேசிய இளைஞர் தின விழாவும் இளம் சாதனையாளர் கௌரவிப்பும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு பணிமனையின் ஏற்பாட்டில் நேற்று மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற கலாசார மண்டபத்தில் உதவிப் பணிப்பாளர் ஏ.ஜி.ஏ.கபூர் தலைமையில் இடம்பெற்றது. இவ் விழாவின் போது 14 மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து தேசிய ரிதியில் விளையாட்டு,கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சுமார் 125 இளைஞர் யுவதிகள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கலந்து கொண்டதுடன் விசேட விருந்தினராக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே.தவராசா கலந்து கொண்…
-
- 0 replies
- 560 views
-
-
Published on May 29, 2011-8:53 am மன்னார் மாவட்டத்தின் தென்எல்லையோரப்பிரதேசங்களில் திட்டமிட்ட வகையில் சிங்கள மக்களை குடியேற்றும் அரசின் நடவடிக்கைகள் உடனடியாக கைவிடப்பட வேண்டும்.இல்லையேல் இது பாதகமான விளைவுகளையே எதிர்காலத்தில் உருவாக்கும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். மன்னார் மாவட்டத்தின் தென் எல்லையோரமாகவுள்ள சில பகுதிகளில் அரசாங்கம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை மேற்கொண்டு வருகிறது. முள்ளிக்குளம், கொண்டச்சியிலுள்ள தம்பப்பள்ளி மற்றும் மடு வீதியிலுள்ள பல பகுதிகள் அபகரிக்கப்பட்டு வருகிறது. முள்ளிக்குளம் பிரதேசம் யுத்தம் …
-
- 0 replies
- 649 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2011 07:16 இலங்கை தொடர்பான ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர்குழு அறிக்கை தொடர்பாக ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் கலந்துரையாடப்படமாட்டாது என்று இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 47 உறுப்பு நாடுகள் பங்கேற்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்தக் கூட்டத்தொடரில், ஐ.நா நிபுணர்குழு அறிக்கையின் அடிப்படையில் இலங்கை தொடர்பான சுதந்திரமான விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்கக் கோரும் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வர சில மேற்குலக நாடுகள் திட்டமிட்டுள்ளன. ஆனால் இலங்கை தொடர்பான இந்தத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு அநேகமாக செப்டெம்பரில் நடைபெறவுள்ள அடுத்த…
-
- 0 replies
- 830 views
-
-
Published on May 29, 2011-9:12 am ஐக்கிய தேசியக்கட்சித்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கா இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை இந்தியாவின் தலைநகர் புதுடில்லிக்கு பயணமாகின்றார் என ஐதேக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரணில் விக்கிரமசிங்கா புதுடில்லியில் இந்தியப் தலைமை அமைச்சர் மன்மோஹன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் இந்திய அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் அத்தகவல்கள் தெரிவித்தன. சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பீரிஸின் கடந்த வார இந்திய விஜயத்ததை அடுத்து ரணில் விக்கரமசிங்hகவின் விஜயம் அமைகின்றது source:tamilthai.
-
- 0 replies
- 792 views
-
-
Sunday, May 29, 2011, 12:55சிறீலங்கா புனர்வாழ்வு பெற்றதன் பின்னர் சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளை மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கிராமசேவை அதிகாரிகள் உதாசீனம் செய்து புறக்கணித்து வருவதாகப் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் கவலை வெளியிட்டுள்ளார்கள். குறிப்பாக பெண் கிராமசேவை அதிகாரிகளே இவ்வாறு நடந்து கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முக்கிய தேவை கருதி தமது வசிப்பிடத்தை உறுதி செய்யவும், தங்களுக்கு உடல் ரீதியாக வெளியில் தெரியும் வகையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உறுதிப்படுத்தி, இவர்களுக்கு உதவி தேவை என்பதை சிபாரிசு செய்ய இந்த அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கண்ட கண்ட கடிதங்கள், விண்ணப்பப் …
-
- 0 replies
- 758 views
-
-
Sunday, May 29, 2011, 12:51சிறீலங்கா22 viewsAdd a comment யாழ். குடாநாட்டினில் என்றுமில்லாத அளவில் பெண்களுக்கெதிராக அதிகரிக்கும், பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பினில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குடாநாட்டிற்கு வெளியிலிருந்து வரும். முன்பின் அறிமுகமற்ற நபர்கள் தொடர்பினில் மிக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கோரப்பட்டுள்ளது. பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் தனக்கும் முறைப்பாடுகள் தொடர்ந்தும் கிடைத்துக் கொண்டிருப்பதாக யாழ் அரச அதிபரும் சுட்டிக்காட்டியுள்ளார். கோவைகள் முறைப்பாடுகளால் நிரம்பி வழிகின்றன. தென்மராட்சி அரச வைத்தியசாலையொன்றில் அடைக்கலம் புகுந்துள்ள யுவதியொருத்தியை எங்கு தங்க வைப்பதென்பதில் சாவகச்சேரிப் ப…
-
- 0 replies
- 425 views
-
-
Sunday, May 29, 2011, 12:44உலகம்15 viewsAdd a comment ஐ..நா சபை செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் சிறிலங்கா அரசின் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் அதன் பொறுப்புக் கூறல் தொடர்பிலும் அமரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஹிலாரி கிளின்டனிடம் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பில் அந்த அரசின் பொறுப்பு கூறும் தன்மையை அமெரிக்கா வலியுறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்ட அமைப்புகள் ஹிலாரியை வலியுறுத்தி உள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் 17 ஆவது அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்…
-
- 0 replies
- 403 views
-
-
பதிந்தவர்: ADMIN ஞாயிறு, 29 மே, 2011 இலங்கைத் தமிழ் மக்களின் மனிதவுரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கடமைப்பாடு இந்தியாவுக்கு உண்டு என இந்தியாவின் முன்னாள் நீதியரசர் ரஜீந்தர் சஸார் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வுரிமையை நிலைநிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் இந்தியாவும் இதுவரை எதுவும் செய்யவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அவர் எழுதிய கட்டுரை ஒன்றிலேயே அவர் இது குறித்து தெரிவித்துள்ளார். இக்கட்டுரையில் உள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,இலங்கையில் இடம்பெற்ற போரின்போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் காத்திரமான விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள்…
-
- 0 replies
- 489 views
-
-
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அடியொட்டி இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்கப்போவதாக அரசு தெரிவித்து வரும் நிலையில், 13 ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் அவற்றை மாகாண நிர்வாகங்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடும். அத்துடன், வெளிச்சக்திகள் (மூன்றாம் தரப்புகள்) பொலிஸ் நிர்வாகத்தில் ஊடுருவி மீண்டும் கிளர்ச்சிகளை ஏற்படுத்தவும் கூடும்' என்று தெரிவித்துள்ளார் கட்சியின் பிரதித் தலைவர் கருஜெயசூரிய. இதனால் பொலிஸ் அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்படுவதைக் கட்சி விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வழங்கியுள்ள செவ்…
-
- 0 replies
- 433 views
-
-
கனகராயன் குளத்தில் பெரியகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு அருகாமை வீதியில் அமைந்துள்ள லக்ஸபான வீதி கசாலா பெரேரா வீதி என பெயெர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பின்னர் வன்னி மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் புதிதாக பௌத்த விகாரைகளையும், பௌத்த வழிபாட்டுச் சின்னங்களையும் அமைக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போரினால் சிதைந்த பகுதிகளில் உள்ள ஆலயங்கள், பொதுக்கட்டங்கள், பொதுமக்களின் வீடுகள் இன்னமும் சரிவரப் புனரமைக்கப்படாதுள்ள நிலையில் புதிய பௌத்த விகாரைகளை அமைக்கும் நடவடிக்கைகள் மட்டும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. ஏற்கனவே வன்னியில் புதிய பல விகாரைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கனகராயன்குளம் …
-
- 1 reply
- 651 views
-