ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143304 topics in this forum
-
திராவிட முன்னேற்றக் கழகத்துடன் புலிகள் தொடர்புகளைப் பேணினார்கள் - குமரன் பத்மநாதன் 24 மே 2011 என்னைக் கொன்ற பின்னர்தான் இலங்கையில் இனியொரு கிளர்ச்சியை புலம்பெயர் தமிழர்களால் ஏற்படுத்த முடியும்- தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் தமிழகத்தின் முன்னாள் ஆட்சியாளர்களான திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். முதல் தடவையாக இந்திய தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சுதந்திர போராட்டம் நடத்தி அந்தப் போராட்டம் தோல்வியடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். தம…
-
- 14 replies
- 890 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் 9 பேருடன் விமல் வீரவங்ச நடத்திய ஆர்ப்பாட்டம் Tuesday, May 24, 2011, 9:44உலகம், சிறீலங்கா83 views1 comment 2600ஆவது பௌத்த ஜயந்தியை முன்னிட்டு அமெரிக்காவிற்குச் சென்ற விமல் வீரவங்சவும், ஐ.நா.விற்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதியும், முன்னாள் இராணுவ அதிகாரியுமான சவேந்திர சில்வாவும் இணைந்து ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர் . இந்த ஆர்ப்பாட்டம் கடந்த 19ஆம் திகதி நியூயோர்க்கில் இடம்பெற்றது. எனினும், இந்த ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்க வாழ் இலங்கையர்களில் 9 பேர் மாத்திரமே கலந்துகொண்டுள்ளனர் . ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஏனையோர் தூதரக அதிகாரிகளும், அவர்களது குடும்பத்தார் , உறவினர் எனவும் தெரியவந்துள்ளது. இதனை…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ். மாவட்ட வாக்காளர் பட்டியிலிலிருந்து வெளிநாட்டில் வசிப்பவர்களின் பெயர்கள் நீக்கம்! Published on May 24, 2011-5:08 pm · No Comments யாழ். மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயந்தவர்கள் என யாழ். மாவட்டத் தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வாக்காளர் பட்டியல் மீளாய்வுப் பணிகள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்று தற்போது பட்டியல் தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மீளாய்வுகளின்படி சுமார் 4 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்களின் விவரங்கள் நீக்கப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்குச் சென்று அங்கு வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளவர்கள…
-
- 0 replies
- 710 views
-
-
கொக்குத்தொடுவாய் முதல் சுண்டிக்குளம்வரை 10ஆயிரம் சிங்களவர் குடியேற்றம்! Published on May 24, 2011-5:03 pm · No Comments கொக்குத்தொடுவாய் முதல் சுண்டிக்குளம் வரையான முல்லைத்தீவின் கரையோரங்களில் பத்தாயிரம் சிங்கள மக்களைக் குடியமர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் முன்னர் சந்தை இருந்த இடத்தில் புத்த சமய நினைவுச் சின்னங்கள் அமைத்து அவற்றை பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் காட்ட முற்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். ஒரு சிங்கள மகனும் குடியிருக்காத பகுதியான ஜெயபுரத்திலுள்ள இரண்டு வீதிகளுக்கு சிங்களப் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றும் சிறிதரன் தெரிவித்தார். எமது இருப்ப…
-
- 0 replies
- 813 views
-
-
20பேர் கொண்ட தற்கொலை தாக்குதல் குழுவுடன் மேர்வின் சில்வா இத்தாலியில்! Published on May 24, 2011-9:10 am · No Comments ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 17ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராகவும், மகிந்த ராசபக்ச அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவை திரட்டும் முகமாகவும் அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையில் பாதாள உலக குழுவைச்சேர்ந்த 20பேரை மகிந்த ராசபக்ச ஐரோப்பாவிற்கு அனுப்பியுள்ளார். அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையிலான குழு தற்போது இத்தாலியில் தங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை தற்கொலை தாக்குதல் மூலம் கொல்வதற்காக தான் 25தற்கொலை படையினரை …
-
- 2 replies
- 1.2k views
-
-
புலிகளுடனான இறுதிப்போரில் நானும் நேரடியாக களம் இறங்கினேன்! சரத் பொன்சேகா செவ்வாய், 24 மே 2011 16:19 தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான நான்காம் ஈழப்போரை வெற்றி கொள்வதற்கு பெரும் பங்காற்றியது இராணுவமே என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா இன்று தெரிவித்துள்ளார். வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே சாட்சியமளிக்கையில் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து அங்கு சாட்சியமளிக்கையில், நான்காம் ஈழப்போரின் போது இராணுவத்தினரே பெரும்பங்காற்றினர். விமானப்படைத் தளபதியைவிட தானே அதிகம் விமானம் மூலம் நேரடியாக களத்தில் செயற்பட்டதாக தெரிவித்துள்ளார். செல் தாக்குதல் இடம்பெறக்கூடிய…
-
- 0 replies
- 2.4k views
-
-
முல்லைத்தீவில் தமிழ் மீனவரின் உரிமை பறிப்பு பெரும்பான்மை இனத்தவர் அங்கு ஆதிக்கம்; வழக்குத் தொடர்வது குறித்து ஆலோசனை முல்லைத்தீவு மீனவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு பெரும்பான்மை இன மீனவர்களுக்கு வழங்கப்படுவது குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டுவரப்படும். அரசு உரிய நடவடிக்கை எடுக்காது அசண்டையீனமாக நடந்தால், வழக்குத் தொடரப்படும். இவ்வாறு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முல்லைத்தீவு மக்களிடம் உறுதிபடத் தெரிவித்தனர். கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், எஸ்.சிறிதரன் ஆகியோர் நேற்றுமுன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தனர். இச்சந்திப்பின்போது பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தன என்று எஸ…
-
- 1 reply
- 754 views
-
-
செவ்வாய்க்கிழமை, 24 மே 2011 12:41 | மகிந்தாவின் போர்க்குற்றங்களுக்கு எதிராக கர்நாடாகாவிலும் ஆர்ப்பாட்டம் சிறீலங்கா அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களுக்கு எதிராக இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அங்கு வாழும் தமிழ் மக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற இந்த போராட்டத்தை கர்நாடகா தமிழ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. அதில் சிறீலங்கா அரசுக்கு எதிரான கண்டனங்கள் எழுப்பப்பட்டதுடன், சிறீலங்கா அரச தலைவர் மகிந்தாவின் உருவப்பொம்மையும் தீயிட்டு கொழுத்தப்பட்டது. சிறீலங்காவில் இடம்பெற்ற வன்முறைகளுக்கும் போர்க்குற்றங்களுக்கும் மகிந்தாவே பொறுப்பு என தெரிவித்த மக்கள், சிறீலங்காவின் வன்முறைகள் தொடர்பில் அனைத்து…
-
- 0 replies
- 836 views
-
-
புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு முன் கப்பல்கள் - விமானங்களை கொள்வனவு செய்ய திட்டம்:- 24 மே 2011 நேடியவன் கூறினார் என்கிறது திவயின விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்படுவதற்கு முன்னர், கப்பல்கள் மற்றும் விமானங்களை கொள்வனவு செய்ய திட்டமிட்டிருந்தாக நோர்வே காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள, விதலைப்புலிகளின் முக்கியஸ்தவரான நெடியவன், வழங்கிய தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் இவற்றை கொள்வனவு செய்ய உதவியதாகவும் நெடியவன் கூறியுள்ளார். நெடியவனிடம் விசாரணை நடத்த தமக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என இலங்கை அதிகாரிகள், நோர்வேயிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். விசாரணைகளுக்காக நெடியவன் இலங்கையிட…
-
- 1 reply
- 1.1k views
-
-
கடந்த 30 வருடங்களாக புலி;களைத் தோற்கடிக்காதது ஏன்? கோத்தாபயவிடம் சரத் கேள்வி 24 மே 2011 ஐநா பொதுச் செயலாளர் பான்கீ மூனின் நிபுணர் குழுவின் அறிக்கைக்கு பின்வாசல் வழியாகத் தகவல்களை வழங்கியுள்ள அரசாங்கம், ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான்கீ மூனின் நிபுணர் குழுவின் அறிக்கைக்கு பின்வாசல் வழியாகத் தகவல்களை வழங்கியுள்ள அரசாங்கம், தற்போது இராணுவத்தினரைக் காட்டிக்கொடுக்க முயற்சிக்கிறது என இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று மேல் நீதிமன்றில் நடைபெற்றது. விசாரணை நிறைவுபெற்ற பின்னர் சிறை திரும்புவதற்கு நீதிமன்றில் இருந்து வெளியில் வந்த சரத் பொன்சேகா, அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்களிடம்…
-
- 1 reply
- 1.2k views
-
-
மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு ஆசிரியர்கள் திரும்பவில்லை! Published on May 24, 2011-9:39 am · No Comments வன்னியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் கடமைக்கு திரும்பாததால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளன. அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட கொக்குளாய் பகுதியில் இயங்கும் பாடசாலையில் 60 மாணவர்களிற்கு மேல் கல்வி கற்று வருகின்றனர். ஆனால் தற்போது 4 ஆசிரியர்கள் மட்டுமே கடமைக்கு திரும்பியுள்ளனர். இந்த பாடசாலையில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கில பாடங்களுக்கு ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை என்றும் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட கணித, விஞ்ஞான, ஆங்கில ஆசிரியர்கள்…
-
- 0 replies
- 652 views
-
-
கேகலியாவின் விசுவாசத்திற்கு கிடைத்த பலன் Posted by சங்கீதா on 24/05/2011 in செய்தி | 0 Comment சிறீலங்கா அரசின் பிரச்சாரப் பீரங்கியாக அமைச்சர் கேகலியா ரம்புக்வெல ஏன் புரண்டு புரண்டு பேசுகிறார் என நாம் ஆச்சரியப்படுவதுண்டு. ஆனால் கேகலியாவின் விசுவாசத்திற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. கேகலியாவின் மகள் அமெரிக்காவுக்கான சிறீலங்கா தூதரகத்திற்கு இராஜதந்திரியாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, கேகலியாவின் மகன் ரமித் ரம்புக்வெலவும் சிறந்த துடுப்பாட்ட வீரனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஓப்சேவர் – மொபிற்றல் நிறுவனங்கள் இணைந்து நடத்திய வாக்கெடுப்பிலேயே அவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு றோயல் கல்லூரியின் துடுப்பாட்ட அணியின் தலைவரான அவருக்கு 248,702 வாக்குகள் கிடைத்துள்ள…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஆபத்தான சூழலானாலும் புனைபெயரிலாவது உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்- சிறிதரன் எம்.பி! Published on May 24, 2011-10:24 am · No Comments எமது இனம் எதிர்கொண்ட எல்லாவற்றையும் பதிவாக்குவதன் ஊடாக அறுந்து போகாத வரலாற்றின் தொடர்ச்சியை எமது எதிர்கால சமுகத்திற்கு வழங்கவேண்டும். படைப்புக்களை உருவாக்குவதற்கும் உண்மைகளை உரைப்பதற்கும் ஆபத்தான சூழல் இங்கு நிலவுகின்றபோதும் படைப்பாளிகள் தமது படைப்பியல் சாதுரியத்தால் புனைபெயர்களிலாவது உண்மைகளை படைத்து புலம்பெயர் தேசங்களிலாவது அவற்றை பாதுகாப்பது எமது காலப்பண என தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சியைசேர்ந்தவரும் தூயதமிழ் பற்றாளருமான நாவை. மகேந்திரராஜர (குமரிவேந்தன்) எழுதிய ‘பெய்யென…
-
- 0 replies
- 649 views
-
-
கொழும்பில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் – நீர்கொழும்பு பாதையில் போக்குவரத்து ஸ்தம்பிதம்! Published on May 24, 2011-8:33 am · No Comments தனியார்துறை ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு விமான நிலைய சந்தியில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. காலையில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் நண்பகல் வரை நீடித்ததாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் கொழும்பு – நீர்கொழும்புப் பாதை கட்டுநாயக்க விமான நிலையச் சந்தியில் போக்குவரத்துக்கு ஸ்தம்பிதம் ஏற்பட்டதாகவும் விமான நிலையத்திற்கு செல்வோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 24 தொழிற்சங்கங்கள் பங்கு பற்றின. source:thinakkathir.
-
- 0 replies
- 645 views
-
-
தமிழகத்தில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்ததற்கு ஈழத்தமிழர் பிரச்னையும் முக்கியக் காரணம் என்பதை மத்திய அரசு புரிந்து கொண்டிருக்க வே ண்டும். ‘‘ஜெயலலிதாவிற்கு முக்கியத்துவம் கொடுங்கள்’’ என டெல்லி தலைவர்கள் இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சரிடம் திருப்பித் திருப்பிச் சொன்னது இதைத் தான் உணர்த்துகிறது. தமிழகத் தேர்தல் முடிவுகள் இந்தமுறை இலங்கையில் ஆர்வமாக கவனிக்கப்பட்டது. இனப்படுகொலையை வேடிக்கை பார்த்த தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் தோல்வியும், ஜெயலலிதாவின் வெற்றியும் இலங்கைத் தமிழர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. இந்த உற்சாகம் வழக்கம்போல் இலங்கை அரசுக்கு எரிச்சலை ஏற்படு த்தி இருக்கிறது. ஆனால், தமிழகத்திற்கு இந்திய அரசு அவ்வளவாக முக்கியத்துவம் த…
-
- 1 reply
- 543 views
-
-
சம்பிக்காவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க மகிந்தா திட்டம் Posted by சங்கீதா on 24/05/2011 in செய்தி | 0 Comment சிறீலங்காவின் மின்வலு எரிசக்தி அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்கவை அரசியலில் ஓரம்கட்ட சிறீலங்கா ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சா முனைப்பு காட்டி வருவதாக எடுத்துள்ளதாக அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். அமைச்சருக்கும் மின்சார சபையின் பொறியியலாளர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பனிப்போரைப் பயன்படுத்தி மகிந்தா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலையை மொட்டையடித்து, வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சமய வழிபாடுகளில் ஈடுபட்டு வருகிறார். இதனால், சம்பிக்க ரணவக்க இலங்கையின் பௌத்த தலைவராக முயற்சிப்பதாகவும் இதனைத் தடுப்பதற்கே மகி…
-
- 0 replies
- 693 views
-
-
ஈழத் தமிழர்களின் இன்றைய நிலைக்கு ராஜபக்ஷே அரசு எவ்வளவு காரணமோ, மன்மோகன்சிங்கின் மத்திய அரசு எந்தளவுக்குக் காரணமோ, அதற்கு சற்றும் குறைவி ல்லாத காரணகர்த்தாக்களாக இருப்பவர்கள் தாயகத் தமிழகத்தில் இருக்கும் தமிழர்கள்தான். தமிழகத்தைப் பொறுத்தவரையில், ஈழம் சார்ந்த உணர்வாளர்களாக தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் அரசியல் தலைவர்கள் முறையாக கூடி விவாதித்து ஓர் அணியாய், ஒரு குடையின் கீழ், ஒரே மேடையில் ஒரே முழக்கமாய் ஈழத்தமிழர்களுக்காக செயல்பட்டிருந்தால், உண்மையிலேயே புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஈழ நிலத்தில் நடந்த சொல்லொணாத் துயரங்களுக்கு விடிவு வந்து சேர்ந்திருக்கும். ‘சென்றதினி மீளாது மூடர்காள்.. இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்றான் பாரதி. எனவே, நாம் பழையனவற்றை ஆய்வு செய்…
-
- 0 replies
- 651 views
-
-
தெற்காசிய வலயத்திலுள்ள 11 நாடுகளுக்குள் சுகாதாரத் துறையில் இலங்கை முதலிடமாம்! Posted by admin On May 24th, 2011 at 10:41 am சுகாதார துறையில் தெற்காசிய வலயத்திலுள்ள 11 நாடுகளுக்குள், இலங்கை முன்னிலை பெற்றுள்ளது. 2010 ஆம் ஆண்டுக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கைக்கு அமைய, இலங்கை இந்த இடத்தினைப் பெற்றுள்ளது. 5 வயதிற்குட்பட்ட சிசுக்களின் குறைந்தளவிலான மரண வீதம், குறைந்தளவிலான தாய் மரண வீதம், தடுப்பூசிகள் வழங்கப்படுதல் மற்றும் பயிற்சிபெற்ற சுகாதார ஊழியர்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றை கருத்திற்கொண்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது. இலங்கையில் தாய் மரண வீதம் மிகவும் குறைவாக காணப்படுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள…
-
- 0 replies
- 597 views
-
-
செவ்வாய்க்கிழமை, 24, மே 2011 (10:12 IST) இலங்கையில் மாணவர்களுக்கு கட்டாய ராணுவ பயிற்சி இலங்கை முழுவதும் ராணுவ முகாம்களில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கட்டாய ராணுவ பயிற்சி தொடங்கியது. மாணவர் சங்கங்களின் கடும் எதிர்ப்பை மீறி ராஜபக்சே அரசு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இலங்கை முழுவதும் பல்கலைக்கழக மாணவர்கள் 22 ஆயிரம் பேருக்கு கட்டாய ராணுவ பயிற்சி அளிக்குமாறு அதிபர் மகிந்த ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இது 3 வார கால பயிற்சி ஆகும். நாடு முழுவதும் 28 ராணுவ முகாம்களில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. `தலைமைப்பண்பு திறன் மற்றும் நல்ல சிந்தனையை உருவாக்கும் பயிற்சி' என்ற பெயரில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி, நாட்டையே ராணுவ மயமாக்கும் முயற்சி என்று…
-
- 0 replies
- 610 views
-
-
May 24, 2011 / பகுதி: செய்தி / சிறீலங்காவில் சீனாவின் ஆயுதக் கண்காட்சி வன்னில் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரில் 40,000 தமிழ் மக்களை சில வாரங்களில் படுகொலை செய்து போரை நிறைவு செய்த சிறீலங்கா அரசு, தான் போரில் ஈட்டிய வெற்றி குறித்து நடத்தும் மாநாட்டில் சிறீலங்காவின் நெருங்கிய நட்பு நாடான சீனா தனது ஆயுதங்களை பார்வைக்கு வைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. சீனாவின் முன்னனி ஆயுத உற்பத்தி நிறுவனங்களான சீனா பொலி ரெக்னோஜிஸ் மற்றும் சீனா இலத்திரனியல் தொழில்நுட்ப கூட்டுத்தாபனம் ஆகியன தமது நிறுவனங்கள் உற்பத்தி செய்துள்ள ஆயுதங்களை பார்வைக்கு வைத்கத்திட்டமிட்டுள்ளன என சிறீலங்கா இராணுவத்தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா நேற்று (23) தெரிவித்துள்ளார். செய்மதித் தொலைதொடர்பு…
-
- 0 replies
- 613 views
-
-
விடுதலைப்புலிகள் சட்டவிரோத நிதிச்சேகரிப்பில் 1983 தொடக்கம் ஈடுபட்டதாக நெதர்லாந்து ஊடகம் தெரிவிப்பு செவ்வாய், 24 மே 2011 08:50 தமிழீழ விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததை நெதர்லாந்து புலனாய்வுப் பிரிவினர் ஒபரேசன் கொனிங்க் என்கிற பெயரில் அதிரடி நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து வந்திருக்கின்றார்கள் என்று நெதர்லாந்து ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் 1983 ஆம் ஆண்டு தொடக்கம் நெதர்லாந்தில் உள்ள சுமார் 10 ஆயிரம் புலம்பெயர் தமிழர்களிடம் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதை நெதர்லாந்து நிபுணர்கள் கண்டறிந்துள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் வாழ்கின்ற புலம்பெயர் தமிழர்களின் க…
-
- 1 reply
- 642 views
-
-
இந்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு( சிஎன்என்- ஐபிஎன் )முதல் தடவையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் வழங்கிய செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார் அதன் முக்கிய விபரங்கள் தமிழ் சிங்கள இனங்களுக்கு இடையில் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், கடந்த கால அனுபவங்களில் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜே.வி.பி, தமிழீழ விடுதலைப் புலிகள் என இந்த சிறிய தீவில் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இவ்வாறான போராட்டங்கள் நிறுத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இவ் இரு குழுக்களும் சுதந்திர போராட்டம் நடத்தி அந்தப் போராட்டம் தோல்வியடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்த…
-
- 2 replies
- 1.4k views
-
-
படையினரின் பாலியல் தொல்லைகளுக்கு மாணவர்கள் உள்ளாகலாம்! - அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எச்சரிக்கை!! சிறிலங்காவின் படை முகாம்களுக்கு தலைமைத்துவ பயிற்சிகளுக்காக செல்லும் பல்கலைக்கழக மாணவர்கள் படையினரின் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படலாம் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் சுஜீவ பண்டார எச்சரித்துள்ளார். தலைமைத்து பயிற்சி எனும் பெயரில் சிறிலங்காவின் படை முகாம்களில் பல்லைக்கழக மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவதற்கு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, நவ சமசமாஜக் கட்சி, மாணவர் மற்றும் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. அத்துடன், பல்கலைக்கழகத்தி…
-
- 1 reply
- 867 views
-
-
புலம்பெயர் நாடுகளிலும், தமிழ்நாட்டிலும் இன்று ஈழத்தமிழர்கள் விடயம் கொதிநிலையில் இருக்கின்றது. குறிப்பாக ஈழத் தமிழர் விடயம் என்பதற்கு அப்பால் தமிழீழ ஆதரவுக் கொள்கை மற்றும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு தேர்தலில் மக்கள் வழங்கிய ஆதரவுக்கான தளம் பற்றி சிறீலங்கா அரசாங்கம் நித்திரை இன்றி ஆய்வு செய்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் தமிழ் மக்களை கண்ணீரிலும் குருதியிலும் தோய்த்த இந்த வைகாசி மாத கண்ணீரோடான நாட்களில் நாம் அடைந்த அடைவுகள் எமக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் என்பன சிறீலங்காவை கிலிகொள்ள வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து பல விடயங்கள் பற்றி சிறீலங்கா சிந்திக்க ஆரம்பித்துள்ளது. தலைக்கு வந்திருக்கும் ஆபத்தை, அதாவது தமிழ்நாட்டின் திசையில் மகிந்தவுக்கு தெரியும் தூக்கு…
-
- 2 replies
- 1.6k views
-
-
இந்தியாவை சுற்றி வளைக்கும் சீனா - பீ.பீ.சி உலகப் பொருளாதாரத்தில் முதன்மை நிலையை எட்டித் தொட்டுக்கொண்டிருக்கும் சீனா தற்போது தனது இராணுவ பலத்தையும் நல்ல முறையில் விஸ்தரித்து வருகிது என்று இன்றைய பீ.பீ.சி செய்தி தெரிவித்தது. சிறீலங்காவின் அம்பாந்தோட்டையில் துறைமுகத்தை அமைத்து தனது கரங்களை பதித்துக் கொண்ட சீனா இப்போது தனது பார்வையை பாகிஸ்தான் பக்கமாக திருப்பியுள்ளது. இன்றைய செய்திகளின்படி தென் மேற்கு பாகிஸ்தானில் சிறந்ததொரு துறைமுகத்தை அமைத்துத் தரும்படி பாகிஸ்தான் சீனாவிடம் கோரியுள்ளது. இதன் மூலமாக தெற்கே சிறீலங்காவில் முத்திரை பதித்த சீனா இப்போது இந்தியாவின் வடக்கே தனது கரங்களை இறக்கவுள்ளதாகவும் பீ.பீ.சி ஆய்வாளர் கூறினார். அவர் மேலும் கூறும்போது சீனா மஞ்சள்…
-
- 1 reply
- 1k views
-