ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142825 topics in this forum
-
இரட்டை குழந்தையின் தாயின் மரணத்தில் மர்மம்! யாழில் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாயின் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தொண்டமானாறு – வல்லை வீதியை சேர்ந்த 25 வயதான இளம் தாய் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தார். இந்நிலையில் குறித்த பெண்ணுக்கு அம்மை நோய் தொற்று ஏற்பட்டதும் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்லுமாறும் வைத்தியசாலையினால் பணிக்கப்பட்டமையினாலேயே நோய் தொற்று அதிகமாகி அவர் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர். இது குறித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினர் தெரிவித்ததாவது” எமது பிள்ளையின் மரணம் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளரிடம் முறையிட்டோம். இதன்போது குறித்த சம்பவம் தொடர…
-
- 0 replies
- 197 views
-
-
11 தமிழ் இளைஞர்கள் கடத்தி, காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு! adminDecember 1, 2023 கொட்டாஞ்சேனை மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் இருந்து தமிழ் இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணகொட மற்றும் 14 கடற்படை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் 28 ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் பிரதிவாதியான முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொட, தன்னை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் வரை விசாரணையை ஒத்திவைக்குமாறு அவ…
-
- 1 reply
- 257 views
-
-
27 NOV, 2023 | 08:17 PM இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே புதன்கிழமை மூன்று நாள் விஜயமாக வடக்கு மகாணத்திற்குச் செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் முதன் நாளான நாளையதினம் மதவாச்சியில் பாடசாலைகளுக்கான உதவித்திட்டங்களை கையளிக்கவுள்ளதோடு, அதனையடுத்து மன்னார் பியர் பகுதிக்கும், பின்னர் திருக்கேதீச்வரர் ஆலயத்துக்கும் செல்லவுள்ளார். தொடர்ந்து முதன்நாளின் இறுதி நிகழ்வாக இரவு நேர விருந்துபசாரத்துடன் வடக்கு மாகாண அரசியல்தரப்பினரைச் சந்தித்து உரையாடவுள்ளார். இரண்டாவது மற்றும் மூன்றாம் நாளான 30ஆம் மற்றும் முதலாம் திகதிகளில் நயினாதீவுக்குக்கான விஜயமொன்றை அவர் மேற்கொள்ளவுள்ளதோடு நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்துக்கும், நாகவகாரைக்கும் விஜயம்…
-
- 8 replies
- 783 views
- 1 follower
-
-
01 DEC, 2023 | 09:07 PM மட்டக்களப்பில் மாவீரர் தின நினைவேந்தலில் ஒழுங்கு செய்தவர்களை குறிவைத்தே இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தில் 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கைகள் அனைத்துமே மோசமான இன அழிப்பு விளைவுகளுக்கு தடை எதுவும் இல்லாமல் தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக அரசியல் பாதையில் இருந்து விலகிச் செல்ல செய்து முடிப்பதற்கான முயற்சியாக இடம்பெறுகின்றன. இதனால் பொலிஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பனர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். மட்டக்களப்பில் கடந்த சில தினங்களாக மாவீரர் தின நினைவேந்தலில் ஈடுபட்டு வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர், அவரது மகன் உட்பட 10 பேரை …
-
- 0 replies
- 209 views
- 1 follower
-
-
Published By: VISHNU 01 DEC, 2023 | 04:54 PM பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பலரை கைது செய்தமை நினைவேந்தல் போன்ற நிகழ்வுகளிலிருந்து இளைஞர்களை விலக செய்யும் செயற்பாடே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேலினால் வெள்ளிக்கிழமை (01.12.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாவீரர் வாரமும் மாவீரர் நாளும் ஒட்டுமொத்த தமிழர்களையும்…
-
- 0 replies
- 148 views
- 1 follower
-
-
01 DEC, 2023 | 05:22 PM (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கைதி சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்த நிலையில், பிற கைதிகளால் தாக்கப்பட்டே இந்த கைதி மரணமடைந்ததாக இன்று (01) வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதென மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர். கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சோந்த 47 வயதுடைய சோமசுந்தரம் துரைராஜா என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். கடந்த 27ஆம் திகதி திங்கட்கிழமை கசிப்பு வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர், விளக்கமறியலில் வைக்கப்பட்டு, சிறையில் அ…
-
- 0 replies
- 213 views
- 1 follower
-
-
நெடுந்தீவுக்குப் பயணிகள் படகு வேண்டும்; இந்தியாவிடம் கோரிக்கை நெடுந்தீவு மக்களுக்கான போக்குவரத்தினை சீராக்கும் வகையில் பயணிகள் படகொன்றினை வழங்குமாறு இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவிடம் நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி கோரிக்கையொன்றினை முன்வைத்திருந்தார். இலங்கைக்கான இந்திய தூதுவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை நெடுந்தீவுக்கான விஜயத்தினை மேற்கொண்டு நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றார். இதன்போதே இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவிடம் நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி குறித்த கோரிக்கையை முன்வைத்தார். இதன் போது இந்திய தூதுவரிடம் நெடுந்தீவு மக்களுக்கான குடிநீர் தேவையினை சீராக்கும் வகையில் நீர…
-
- 1 reply
- 367 views
-
-
Courtesy: இரா.துரைரத்தினம். தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்க தலைவர் வே.பிரபாகரனின் மகள் துவாரகா சுவிட்சர்லாந்தில் இருக்கிறார் என்ற செய்தியை சிலர் பரப்பிய போதே அதன் நம்பகத்தன்மை பற்றி பலராலும் கேள்வி எழுப்பபட்டது, அதன் ஒரு கட்டமாகவே துவாரகா என்ற நாடகம் மாவீரர் தினத்தன்று அரங்கேற்றப்பட்டதாக மூத்த ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இது ஒரு கேலி கூத்து என்பதை பெரும்பாலான தமிழ் மக்கள் உணர்ந்து கொண்டனர். துவாரகா என கூறிக் கொண்டு அப்பெண் வாசித்த அறிக்கை கூட ஒரு கேலிக்கூத்தாகவே இருந்தது. இந்திய சொல்லாடல்களே அந்த அறிக்கையில் காணப்பட்டன. மாநிலம் என்ற சொல்லாடல் இலங்கையில் பாவிப்பதில்லை. அது இந்திய சொல் வழ…
-
- 3 replies
- 545 views
-
-
01 DEC, 2023 | 03:00 PM இவ்வாண்டு புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் இலங்கை முழுவதும் தெரிவு செய்யப்பட்ட தகுதியான 321 மாணவர்களுக்கு பாகிஸ்தானின் உயர்கல்வியினை தொடர்வதற்கான புலமைப்பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன. இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம், பாகிஸ்தான் உயர் கல்வி ஆணைக்குழுவின் ஒத்துழைப்புடன் தகுதியான இலங்கை மாணவர்களுக்கான 'அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் விருது வழங்கல் 2023' நிகழ்வினை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இப்புலமைப்பரிசிலானது பாகிஸ்தானின் தலைசிறந்த கவிஞரும் தத்துவஞானியுமாக திகழ்ந்த அல்லாமா முஹம்மது இக்பாலின் பெயரில் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகிறது. இப்புலமைப்பரிசில் திட்டமானது 2019இல் ஆரம்பிக…
-
- 0 replies
- 303 views
- 1 follower
-
-
பொன்னாலை கரையோரத்தை சுவீகரித்து மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதீர்கள்!- சமூக செயற்பாட்டாளர் ந.பொன்ராசா adminDecember 1, 2023 பொன்னாலையில் வசிக்கும் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரமாக உள்ள கடற்றொழிலும் கால்நடை வளர்ப்பும் பாதிக்கப்படும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என சமூக செயற்பாட்டாளர் ந.பொன்ராசா தெரிவித்தார். வனவளங்கள் திணைக்களம் அராலி தொடக்கம் பொன்னாலை வரையான 354 ஏக்கர் கடற்கரையோர பிரதேசத்தை ஆக்கிரமிப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாக மக்கள் கருத்தறியும் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை வலி.மேற்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், …
-
- 0 replies
- 360 views
-
-
நீதிமன்றங்களில் இனி சாட்சி கூடுகள் இல்லை. நீதிமன்றங்களில் உள்ள சாட்சி கூண்டுகள் முழுமையாக அகற்றப்படும் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ நேற்று (30) தெரிவித்தார். நீதிமன்றம் என்பது பயத்துடனும் சந்தேகத்துடனும் செல்லும் இடமல்ல. நீதிமன்றத்தின் முன் சாட்சியமளிக்கும் அனைவரும் குற்றவாளிகள் அல்ல. சாட்சிகள் நீதித்துறை செயல்பாட்டில் உதவும் குடிமக்கள். எனவே கூண்டில் இருந்து சாட்சியமளிக்கும் ‘கூண்டு முறை’ மாற்றப்பட்டு, கண்ணியமான முறையில் சாட்சியம் அளிக்கும் முறை இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும்’ என நீதியமைச்சர் தெரிவித்தார். நீதி அமைச்சில் நீதிமன்ற முறைமைக்கு அட்டை கொடுப்பனவு முறையை (Pழள அயஉhin) அறிமுகப்படுத்துவதற்கான உடன்படிக்கையை ம…
-
- 0 replies
- 255 views
-
-
பிள்ளையான் வடக்கு மாகாணம் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும் : சித்தார்த்தன் வலியுறுத்தல்! November 30, 2023 இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கிழக்கு மாகாணத்துக்கு மாத்திரம் இராஜாங்க அமைச்சரல்ல, அவர் முழு இலங்கைக்கும் பொதுவான இராஜாங்க அமைச்சர் ஆகவே கிராமிய வீதிகள் அபிவிருத்தியில் வடக்கு மாகாணம் குறித்தும் அவர் அவதானம் செலுத்த வேண்டும் என்பதை தயவுடன் வலியுறுத்துகிறேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (27) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமை…
-
- 2 replies
- 296 views
-
-
கொழும்பு வடக்கு குவாஸி நீதிமன்ற நீதிபதி ஒருவர் 7,500 ரூபா இலஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற வளாகத்தில் இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நீதிபதி கைது செய்யப்பட்டுள்ளார். மாவனெல்லை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீதிபதி கைது செய்யப்பட்டுள்ளார். விவாகரத்து ஆவணங்களை புகார்தாரருக்கு வழங்க சந்தேக நபர் 7500 ரூபா இலஞ்சம் கேட்டுள்ளார். அவர் தனது இரண்டாவது மனைவியிடமிருந்து சட்டப்பூர்வமாக பிரிந்ததை உறுதிப்படுத்தினார். தெமட்டகொடயில் அமைந்துள்ள கொழும்பு வடக்கு குவாஸி நீதிமன்றத்தில் இலஞ்சம் பெறும் போத…
-
- 2 replies
- 496 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 30 NOV, 2023 | 02:28 PM யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் சுகாதார சீர்கேடுடன் இயங்கிய உணவகம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் நல்லூர் பிரிவு பொது சுகாதார பரிசோதகரால் கல்வியங்காட்டு பகுதியில் அமைந்துள்ள உணவகம் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது பல சுகாதார சீர்கேடு குறைபாடுகள் இனங்காணப்பட்டது. ஏற்கனவே பல தடவைகள் அறிவுறுத்தப்பட்ட நிலையிலும் தொடர்ந்து சுகாதார சீர்கேட்டுடனேயே குறித்த உணவகம் இயங்கி வந்தமை அவதானிக்கப்பட்டது. அத்துடன், உணவகத்தில் காலாவதியான உணவு பொருட்களும் பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, பொது…
-
- 6 replies
- 675 views
- 1 follower
-
-
இந்திய கடன் திட்டத்தின் கீழ் 2019 இல் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து ரயில் என்ஜின்கள் செயற்படாத நிலையில் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஒரு ரயில் என்ஜின் 760 மில்லியன் ரூபா என்ற ரீதியில் அவை இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் மொத்தம் 10 ரயில் என்ஜின்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன, அவற்றில் ஐந்து இயங்காத நிலையில் உள்ளன, “இந்த எஞ்ஜின்கள் மிகவும் கனமாகவும் நீளமாகவும் உள்ளன. அவை எங்கள் செயற்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை. எங்களின் ரயில்வே விதிமுறைகளின்படி, 120 தொன்களுக்கு மேல் எடையுள்ள என்ஜின்களை எங்கள் ரயில் பாதைகளில் இயங்க முடியாது,” என்றும் அவர் தெளிவுப்…
-
- 0 replies
- 183 views
- 1 follower
-
-
30 NOV, 2023 | 05:33 PM கொட்டாஞ்சேனை மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் கப்பம் பெறும் நோக்கத்தில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கியமை தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரணாகொட மற்றும் 14 கடற்படை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் 28ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் பிரதிவாதியான முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரணாகொட, தன்னை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் வரை விசாரணையை ஒத்திவைக்குமாறு அவர் முன்வைத்த கோரிக்கையையும் மூவரடங்கிய உயர் நீதிமன்…
-
- 0 replies
- 272 views
- 1 follower
-
-
Published By: VISHNU 29 NOV, 2023 | 08:46 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பெறுமதி சேர் (வற்) வரி உட்பட புதிய வரி கொள்கைகள் ஊடாக அடுத்த ஆண்டு தனிநபர் ஒருவரிடமிருந்து 30 ஆயிரம் ரூபாவை மேலதிக வரி வருமானமாக பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வரி கொள்கை விரிவுப்படுத்தப்படுவதால் பாரிய நெருக்கடிகள் தோற்றம் பெறும். வரி செலுத்த வேண்டிய தரப்பினரிடமிருந்து முறையாக வரி அறவிட்டால் நிதி நெருக்கடிக்கு தீர்வு காணலாம் என ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (29) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் போக்குவரத்து,…
-
- 4 replies
- 564 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 30 NOV, 2023 | 03:32 PM பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதியளித்துள்ள போதிலும் மாவீரர் நாளில் அமைதியான முறையில் நினைகூருவதை குற்றமாக்குவதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கம் பயன்படுத்துவது குறித்து இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பு பேர்ள் கரிசனை வெளியிட்டுள்ளது. தமிழர்களிற்கு எதிரான பாதுகாப்புபடையினரின் நடவடிக்கைகள் முன்னைய அரசாங்கங்கள் போல தற்போதைய அரசாங்கமும் சிங்கள பௌத்த பேரினவாத கொள்கைகளை பேணுவது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதை புலப்படுத்தியுள்ளன எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கம் அதிகார துஸ்பிரயோகத்த…
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
வவுனியா, செட்டிகுளம் நகரப் பகுதியில் இன்று கணவனும் மனைவியும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். செட்டிகுளம் பிரதான வீதியில் இந்தத் தம்பதியினரின் மகன் வியாபார நிலையம் ஒன்றை நடத்தி வரும் நிலையில் அதற்குப் பின்னால் உள்ள தங்கும் இடத்தில் மேற்படி தம்பதியினர் வசித்து வந்தனர். இரத்த வெள்ளத்தில் கிடந்த தம்பதியினர் இந்நிலையில் நேற்று இரவு வழமைபோல் அவர்களது மகன் வியாபார நிலையத்தை மூடிவிட்டு அண்மையில் உள்ள தனது வீட்டுக்குச் சென்ற போது தம்பதியினர் வியாபார நிலையத்துக்குப் பின்பாகவுள்ள தங்கும் இடத்தில் உறங்கச் சென்றனர். இன்று காலை வியாபார நிலையத்தைத் …
-
- 1 reply
- 611 views
- 1 follower
-
-
30 NOV, 2023 | 01:51 PM வட்டிக்கு பணம் வழங்கி, சொத்துக்களை பறிமுதல் செய்யும் மாபியாக்கள் யாழில் அதிகரித்து உள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்களோ, அவர்களால் பாதிக்கப்பட்டவர்களோ தன்னிடம் நேரடியாக முறைப்பாடு செய்ய முடியும் என யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அதீத வட்டி, மீற்றர் வட்டி என்பவற்றுக்கு பெருந்தொகை பணங்களை வழங்கி, அந்த பணத்தினை வாங்கியவர்கள் மீள செலுத்த முடியாத போது, அவர்களிடம் இருந்து சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சம்பவங்கள் தொடர்பில் எமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இது தொடர்பில் பாதிக்கப்பட…
-
- 0 replies
- 538 views
- 1 follower
-
-
28 NOV, 2023 | 06:25 AM கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் ஏனைய மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடி…
-
- 2 replies
- 334 views
- 1 follower
-
-
கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவு வடக்கு , கிழக்கு மாகாணங்களில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கான ஆதரவை ஜப்பான் மீண்டும் நீடிக்கவுள்ளது. அதற்கமைய, கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள Mines Advisory Group எனப்படும் MAG மற்றும் HALO Trust நிறுவனங்களுக்கு ஜப்பான் அரசாங்கம் 23 கோடியே 80 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது. இதற்கான உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் MIZUKOSHI Hideaki , Mines Advisory Group நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் Cristy McLennan, HALO Trust நிறுவனத்தின் நிகழ்ச்சி முகாமையாளர் Stephen Hall உள்ளிட்டோர் 27ஆம் திகதி கைச்சாத்திட்டுள்ளனர். 2002 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்…
-
- 0 replies
- 373 views
-
-
Published By: RAJEEBAN 30 NOV, 2023 | 10:44 AM கொழும்பில் கடற்படையினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட 11 இளைஞர்களின் பெற்றோர் நேற்று தங்கள் பிள்ளைகளிற்கு நீதிகோரி கொழும்பு உயர்நீதிமன்றத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தாய்ஒருவர் கருத்து தெரிவிக்கையில் உயர்நீதிமன்றத்தில் டிரையல் அட்பார் விசாரணை இடம்பெறும்போது தங்களிற்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து சட்டமாஅதிபர் திணைக்களத்தின் அக்கறையின்மை காரணமாக நீதி 15 வருடங்களாக தாமதமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கு பதில் சட்டமா அதிபர் திணைக்களம் குற்றம்சாட…
-
- 0 replies
- 155 views
- 1 follower
-
-
Published By: VISHNU 29 NOV, 2023 | 07:22 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) யாழ்ப்பாணம் நகர அபிவிருத்தி தந்திரோபாய திட்டத்துக்காக 2016 ஆம் ஆண்டு 13,500 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது. இதற்கான மாதிரி திட்டத்தை தயாரிக்கும் பொறுப்பு கொழும்பில் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கப்பட்டது. நகர அபிவிருத்தி அதிகார சபை இத்திட்டத்தை ஒரு தனியார் நிறுவனத்துக்கு வழங்கியது. அதற்காக 2020 ஆம் ஆண்டு 1770 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது ஆனால் தந்திரோபாய திட்டம் நிறைவுப்படுத்தப்படவில்லை. ஒதுக்கப்பட்ட 13,500 கோடிக்கு நேர்ந்தது என்னவென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கேள்வியெ…
-
- 0 replies
- 139 views
- 1 follower
-
-
பிச்சைக்கார நாட்டின் காவல்துறை மாவீர செல்வங்களை நினைவு கூற கூட விடுகினம் இல்லை.............தனது கணவர் மாவீரர்..........உங்களை மாதிரி எங்கட மாவீரர்கள் காசுக்காக போராட வில்லை எங்கட நாட்டுக்காக தான் போராடினவை என்று மன வேதனையுடன் துணிவோடு சொல்லுகிறா............ அஞ்சுவதும் அடி பணிவதும் என் தமிழ் இனத்துக்கே கிடையாது என்று சொன்ன தலைவரின் இந்த சிந்தனைய தமிழர்கள் எப்பவும் நினைவில் வைத்து இருக்கனும்.............
-
- 14 replies
- 1.4k views
-