ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
பரிதாப நிலையில் தொடர்ந்தும் வன்னி மக்கள்! [ பிரசுரித்த திகதி : 2011-03-20 10:21:55 AM GMT ] வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை முழுமையாக இழந்து அன்றாட சீவியத்துக்கு வழியின்றி இருக்கும் மக்கள் தங்களுக்கு தற்போது வழங்கப்படும் உலர் உணவு நிவாரணப் பொருட்களும் முற்றாக தடைப்படுமோ என அஞ்சுகின்றனர். இம் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரணப் பொருட்கள் தற்போது குறைக்கப்பட்டுள்ளதுடன் அனேகமான குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் இரண்டு மாதங்களாக வழங்கப்படாத நிலையும் காணப்படுகிறது. இறுதி யுத்தத்தின் பின்னர் விதைவைகளும். அங்கவீனர்களும். அநாதைச் சிறுவர்களும். தனித்து விடப்பட்ட வயது முதிர்ந்த பெற்றோரும் அதிகமாகமாக இருக்கும் வன்னி மண்ணில் அதிகமான மக்கள…
-
- 0 replies
- 908 views
-
-
day, March 20th, 2011 | Posted by thaynilam பொத்துவில் கோமாரி பிரதேசத்தில் வீடு தீக்கிரையாகியது பொத்துவில் கோமாரி பிரதேசத்தில் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்று திரும்பி வரும்போது வீடு தீப்பற்றி எரிந்து முற்றாக சாம்பலாகிய சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொத்தவில் பொலிஸார் தெரிவித்தனர். கோமாரி செல்வபுரத்தில் உள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் குடும்ப சகிதம் சம்பவதினம் இரவு வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் வீடு ஒன்றிற்கு சென்று இரவு 9.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அயலவர்கள் தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு முயற்சித்த போதும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது இதனால் வீடு முற்றாக எரிந்து சாம்பல…
-
- 0 replies
- 694 views
-
-
இலங்கை தொடர்பில் இந்தியாவின் தந்திரம் - விக்கிலீக்ஸ் [ பிரசுரித்த திகதி : 2011-03-20 10:08:28 AM GMT ] 2003 இன் பிற்பகுதியில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் ஏற்பட்டிருந்த சகவாழ்வு நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கு வெற்றியளிக்காத முயற்சியை இந்தியா மேற்கொண்டிருந்தது என விக்கிலீக்ஸ் தகவல் வெளியாகியுள்ளது ஆக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சை பிரிப்பதன் மூலம் வடக்கு, கிழக்கில் இராணுவ விவகாரங்களில் செயல்திறன் வாய்ந்த கட்டுப்பாட்டை ரணில் விக்கிரமசிங்க கொண்டிருக்க முடியும் எனவும் ஸ்தம்பிதமடைந்த சமாதான நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் இருக்க முடியும் எனவும…
-
- 0 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பில் திடீர் நில வெடிப்பு 20 மார்ச் 2011 மட்டக்களப்பு நகரில் திடீரென நிலம் வெடித்துள்ளதாக மக்கள் அறிவித்துள்ளனர். மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இவ்வாற நிலம் வெடித்துள்ளதாகவும், இந்த வெடிப்புக்களிலிருந்து நீர் வெளியேறி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நிலகீழ் நீர் இவ்வாறு வெளியேறி வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் ஊகம் வெளியிட்டுள்ளது. பௌர்ணமி தினத்தினால் இவ்வாறு நிலக்கீழ் நீர் வெளியேறியிருக்கலாம் என அனர்த்த முகாமைத்துவ நிறுவன அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். அனர்த்த முகாமைத்துவ நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குறித்த பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் பாரியளவில் எ…
-
- 0 replies
- 1.2k views
-
-
புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற மேற்குலகு முயற்சித்தது - தகவல் தருகிறது விக்கிலீக்ஸ் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-03-20 08:29:00| யாழ்ப்பாணம்] விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா கரன் மறைந்திருந்த இடத்தை இலங்கை இராணுவம் சுற்றிவளைக்காமல் தடுப்பதற்கு மேற்கத்தேய நாடுகள் முயன்றதாக விக்கி லீக்ஸ் தெரிவித்துள்ளது. யுத்த இரகசியங்கள் தொடர்பாக விக்கி லீக்ஸினால் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக இலங்கை இராணுவத்தினர் பிரபாகரன் மறைந்திருந்த பகுதி நோக்கி கடும் யல் வீச் சினை மேற்கொண்டு அவரை உயிருடன் கைது செய்ய முயன்றபோது இரு தரப்பு களுக்கும் இடையிலான போர் நிறுத்த முயற்சி ஒன்றை சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதிய…
-
- 2 replies
- 1.4k views
-
-
நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கைக்கு பாதகமானதாக அமையக் கூடும் : 20 மார்ச் 2011 ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை இலங்கைக்கு பாதகமானதாக அமையக் கூடுமென ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரியொருவர் தெரிவித்துள்ளார். நிபுணர் குழுவின் அறிக்கை அநேகமாக பூர்த்தியடைந்துள்ளதாகவும், இலங்கைக்கு எதிராக கடுமையான கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். நான்காம் கட்ட ஈழ யுத்தம் தொடர்பில் பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென நிபுணர்கள் குழு அநேகமாக வலியுறுத்தக் கூடுமென அறிவித்துள்ளார். இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். நிபுணர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையை பகிரங…
-
- 3 replies
- 1.1k views
-
-
இந்திய அணுமின் உலைகளால் சிறீலங்காவுக்கு பெரும் ஆபத்து: விரிவுரையாளர் சுமதிபாலா. [sunday, 2011-03-20 04:16:16] தென்னிந்தியாவில் உள்ள அணுமின் உலைகளால் சிறீலங்கா மிகப்பெரும் ஆபத்துக்களை எதிர்கொண்டுள்ளதாக கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தின் பௌதீகத்துறை விரிவுரையாளர் கலாநிதி எல் சுமதிபாலா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்காவுக்கான ஆபத்து யப்பானின் அணுமின் உலையின் வெடிப்பால் அல்ல. அது இந்தியாவின் பாதுகாப்பு குறைந்த அணுமின் உலைகளால் தான். உலகிலேயே மிகவும் பாதுகாப்பான அணுமின் உலைகள் யப்பானில் தான் உள்ளன. அதற்கே இந்த நிலை என்றால் இந்தியாவின் அணுஉலைகள் தொடர்பில் நாம் பேசத்தேவையில்லை என சுமதிபால தெரிவித்துள்ளார். இந்தியா தனது அணுமின் உலைகள…
-
- 2 replies
- 949 views
-
-
பிரபாகரனை இலக்கு வைத்து 12 யுத்த விமானங்கள் ஒரே தடவையில் தாக்குதல் நடாத்தினதாம் – முன்னாள் விமானப்படைத் தளபதி. Posted by admin On March 20th, 2011 at 11:10 am / தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை இலக்கு வைத்து விமானப் படையினர் பல இடங்களில் தாக்குதல்களை மேற்கொண்டதாக விமானப்படையின் முன்னாள் தளபதியும் படைத்துறை அதிகாரிகளின் பிரதானியுமான எயர் சீவ் மார்சல்றொசான் குணதிலக தெரிவித்துள்ளார். வன்னியில் ஒருமுறை 5 மிக் 27 ரக விமானங்களும் நான்கு கிபீர் விமானங்களும் மூன்று எவ்-7 ரக விமானங்களுமாக மொத்தம் 12 ஜெட் விமானங்களைக் கொண்ட ஸ்குவாட்ரன் பிரபாகரனை இலக்கு வைத்து இர ண்டு இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தின. ஏழு ஜெட் விமானங்கள் ஜெயந்தி நகரிலும் ஏனைய ஐந்து வி…
-
- 1 reply
- 1.7k views
-
-
கூட்டாக இணைந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக செயற்பட இலங்கையும் மாலைதீவும் இணக்கம் 19 மார்ச் 2011 இலங்கை குற்ற விசாரணைப் பிரிவினரும் மாலைதீவின் தேசிய புலனாய்வுப் பிரிவினரும் கூட்டாக இணைந்து கூட்டாக இணைந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக செயற்பட இலங்கையும் மாலைதீவும் இணக்கம் கூட்டாக இணைந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலங்கையும், மாலைதீவும் இணங்கியுள்ளன. இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளை பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ள. இலங்கை குற்ற விசாரணைப் பிரிவினரும் மாலைதீவின் தேசிய புலனாய்வுப் பிரிவினரும் கூட்டாக இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளனர். 2009ம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடை…
-
- 3 replies
- 909 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்துத் தொடர்ச்சியாக அவதானிப்பதாக சோனியா தொவிப்பு: யுத்த மீறல் வீடியோக்களைப் பார்வையிட்டதாகவும் தெரிவிப்பு [saturday, 2011-03-19 06:20:58] இலங்கைத் தமிழர் பிரச்சினைக் குறித்து தாம் தொடர்ச்சியாக அவதானித்து வருவதாகவும் இது குறித்து இலங்கை அரசாங்கத்துடன் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார். லண்டனில் இடம்பெற்ற 14 பொதுநலவாய நாடுகளின் விரிவுரையில் கலந்து கொண்டிருந்த போது உலகத் தமிழர் ஒன்றியம் சார்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முகாமில் உள்ள மக்கள் எவ்வித தாமதமும் இன்றி மீள்குடியேற்றப்பட வேண்டும் என்பதில் …
-
- 7 replies
- 1.6k views
-
-
நான்காவது கட்ட ஈழப்போரில் மிக்-27 யுத்த விமானங்கள் மட்டும் 1071 தொன் எடையுள்ள குண்டுகளை வன்னியில் வீசியுள்ளன. முன்னாள் விமானப்படைத் தளபதி அதிர்ச்சித் தகவல் [saturday, 2011-03-19 09:42:03] தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை விமானப் படை தனது நான்கில் ஒரு பங்கு விமானங்களை இழக்க நேரிட்டது. இவ்வாறு கூறியுள்ளார் இலங்கை விமானப் படை யின் முன்னாள் தளபதியும், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியுமான எயர் சீவ் மார்சல் றொசான் குணதிலக. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் அவர் வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் பலத்தை முறியடிக்க நாம் தயாராக இருந்ததற்கு புலிகளின் இரண்டு வானூர்திகள் தரையில் நிறுத்தப்பட்டிருப்பதை கண்டுபிடித…
-
- 1 reply
- 1.1k views
-
-
http://download.tamilwire.com/songs/__P_T_By_Movies/Thambi-Arjuna-2010/Puligal%20Konjam%20-%20TamilWire.com.mp3
-
- 0 replies
- 1.3k views
-
-
Q: How much does the Sri Lankan Tamil community stand to benefit from Tamil diaspora efforts? A: As stated earlier, the diaspora is an integrated part of the Tamil Nation. The Tamils living in the island and outside are one entity. As long as the Tamils living in the island do not have the political space to fully articulate their political aspirations, the diaspora living around the world in liberal democratic countries have to undertake that task. The people in the homeland and their political leaders have to struggle on an everyday basis simply to ensure the physical survival of the Tamil Nation, the inherent right to their homeland, the betterment of the peop…
-
- 0 replies
- 1.5k views
-
-
கச்சதீவு அந்தோனியார் திருவிழா 19, 20 திகதிகளில்! Posted by admin On March 14th, 2011 at 2:51 am / கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இம்மாதம் 19ஆம், 20ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவு மற்றும் குறிகட்டுவான் ஊடாக பக்தர்கள் கச்சதீவுக்கு செல்லவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். யாழ். மறை மாவட்டத்தைச் சேர்ந்த நெடுந்தீவு பங்குத்தந்தை அமல்ராஜ் தலைமையில் இத்திருவிழா நடைபெறவுள்ளது. இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சதீவிலுள்ள அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவத்தில் இந்திய, இலங்கை பக்தர்கள் கலந்துகொள்கின்றமை வழமையானது. இவ்வருடமும் திருவிழாவை விமர்சையாகக் கொண்டா…
-
- 3 replies
- 745 views
-
-
Thursday, 17 March 2011 00:37 விமான நிலையங்களுக்காக இந்தியா,சீனா கடும்போட்டி – எவருக்கும் இல்லை என்கிறது சிறிலங்கா சிறிலங்காவின் உள்ளூர், அனைத்துலக விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வதில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடும் போட்டி எழுந்துள்ளது. இதனால் சிறிலங்கா அரசாங்கம் இராஜதந்திர அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்தநிலையில், எந்தவொரு விமான நிலையத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பும் வெளிநாட்டு நிறுவனங்களிடம ஒப்படைக்கப்பட மாட்டாது என்று சிறிலங்கா அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து சிறிலங்காவின் குடியியல் விமானசேவைகள் அமைச்சர் பிரியங்கார ஜெயரத்ன தகவல் வெளியிடுகையில், சிறிலங்காவில் உள்ள விமான நிலையங்களை அபிவ…
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை விடுதலை செய்யுமாறு கோரி சைப்ரஸில் ஆர்ப்பாட்டம் 19 மார்ச் 2011 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை விடுதலை செய்யுமாறு கோரி சைப்ரஸில் ஆர்ப்பாட்டம் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை விடுதலை செய்யுமாறு கோரி சைப்ரஸ் நாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. நாற்பது இலங்கையர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது. உச்ச நீதிமன்றம் குறித்த நபரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட் போதிலும் தொடர்ச்சியாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாது 15 மாதங்களாக குறித்த புகலிடக் கோரிக்கையாளர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப…
-
- 0 replies
- 868 views
-
-
இலங்கையில் காணாமல் போன 5653 பேரின் கதி! ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் கேள்வி சனி, 19 மார்ச் 2011 23:03 இலங்கையில் காணாமல் போனதாகக் கூறப்படும் 5653 பேர் பற்றி அரசாங்கம் இன்னும் போதிய விளக்கங்களை முன்வைக்கவில்லை. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கும் இன்னும் உரிய பதில் அளிக்கப் படவில்லை. ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் ஆசிய மனித உரிமை அபிவிருத்தி மன்றம் சார்பாக வாய் மூலம் விளக்கமளித்த பூஜா பட்டேல் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் காணாமல் போனதாகக் கூறப்படும் 5653 பேர் பற்றி அரசாங்கம் இன்னும் போதிய விளக்கங்களை முன்வைக்கவில்லை. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம்…
-
- 0 replies
- 925 views
-
-
Mar 19, 2011 / பகுதி: செய்தி / வட்டக்கச்சியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலம் சிங்கள வர்த்தகர்களுக்கு ! கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சியில் உள்ள 200 ஏக்கர் நிலத்தை சிறீலங்கா அரசின் வடமாகாண ஆளுணரும், முன்னாள் யாழ் மாவட்ட இராணுவ அதிகாரியுமான மேஜர் ஜெனரல் சந்திரசிறீ வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. வட்டக்கச்சியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலத்தை சிறீலங்கா இராணுவ நிர்வாகம் சிங்கள வர்த்தகர்களுக்கு வழங்கியுள்ளது. இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு 1995 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 1000 ஏக்கர் நிலத்தில் இருந்தே இந்த காணிகளை சிறீலங்கா அரசு சிங்களவர்களுக்கு வழங்கியுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்பட…
-
- 0 replies
- 843 views
-
-
அதிகாரப் பகிர்வு குறித்து முதல் முறையாக கூட்டமைப்புடன் அரச தரப்பு நேற்றுப் பேச்சு:முன்னேற்றங்கள் ஏற்பட்டதாக சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு அரசு கூட்டமைப்பு பேச்சில் அதிகாரப்பகிர்வு குறித்து முதல் தடவையாக ஆராயப்பட்டுள்ளது. நேற்றைய பேச்சில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டன என்று கூட்டமைப்புப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். எனினும் அதிகாரப் பகிர்வு குறித்து ஆழமாக ஆராய வேண்டி இருப்பதால் தமக்குக் கால அவகாசம் வேண்டும் என்று அரச தரப்புப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையிலான மூன்றாவது சந்திப்பு நேற்று நடைபெற்றது. கடந்த முதலாம் திகதி இந்தச் சந்திப்பு நடப்பதாக இருந்தது. ஆனால், உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளைக் காரணங்காட்டி எதிர்வரும் 22, …
-
- 0 replies
- 943 views
-
-
இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி லண்டனில் நேற்று உரையாற்றியபோது, அவ்வரங்கிற்கு வெளியே இலங்கைத் தமிழர்கள் பலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய எதிரப்பு கோஷங்களை கிளப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், இலங்கை தமிழர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். மாற்றத்தின் முகவர்களாக பெண்கள் எனும் தொனிப்பொருளில் 14 ஆவது பொதுநலவாய சொற்பொழிவை நிகழ்த்துவதற்காக சோனியா காந்தி லண்டனுக்குச் சென்றிருந்தார். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/18298-2011-03-18-14-45-35.html Sri Lankan Tamils protest Sonia Gandhi's London visit Sri Lankan Tamils protested outside a London venue whe…
-
- 4 replies
- 1.5k views
-
-
நாராயணன் ஒரு தீவிர விடுதலைப் புலிகள் இயக்க எதிர்ப்பாளர்! புதன், 16 மார்ச் 2011 16:05 இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் ஒரு தீவிர தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க எதிர்ப்பாளர் என்று அமெரிக்கத் தூதரகம் தெரிவித்திருந்ததாக விக்கிலீக்ஸில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றி நாராயணன் மீண்டும் மீண்டும் தெரிவித்திருந்த கருத்துக்களின் அடிப்படையில் சென்னையில் இருந்த அமெரிக்கத் தூதரக கொன்ஸுலேட் ஜெனரலும், அதிகாரிகளும் இந்த முடிவுக்கு வந்திருந்தனர் என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் இந்திய சமாதானப் படை இருந்த காலத்திலும், வன்னி யுத்தத்தின் போதும் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவரே நாராயணன்…
-
- 11 replies
- 2.1k views
-
-
ஒரு கோடி மக்கள் வாழும் சென்னை மாநகரத்தின் பரபரப்பிற்கு மத்தியில் ஒரிடத்தில் மட்டும் அமைதியும், சோகமும், ஆற்றாமையும் கடலென பொங்கி வழிகிறது. அந்த இடம் தாயகம். ம.தி.மு.கவின் தலைமை அலுவலகம். நேற்று முளைத்த காளான் கட்சிகள், லெட்டர் பேடு கட்சிகளெல்லாம் ஊடகங்களில் ஆரவாரமாக வலம் வந்து கொண்டிருக்கும் போது அந்த தலைவர் மட்டும் அவரது அண்ணா நகர் வீட்டில், தனிமையில் பேச முடியாமல், துக்கத்தை பகிர்ந்து கொள்ள முடியாமல் தன்னைத்தானே சிறைவைத்துக் கொண்டு அடைந்து போயிருக்கிறார். அவர் வைகோ. தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த வினவின் முதல் கட்டுரையே இப்படி ஒரு சோக சக்கரவர்த்தியைப் பற்றி பேச வேண்டியிருப்பதில் எங்களுக்கும் கொஞ்சம் வருத்தம்தான். ஆனாலும் கூர்ந்து கவனித்தால் இது சோகமில்லை, நகைச்சுவை…
-
- 19 replies
- 3k views
-
-
விக்டோரியா வீதியை திறந்துவிட்டு யாழில் உயர் பாதுகாப்பு வலயங்கள் இல்லை என்கிறது யாழ். இராணுவக் கட்டளைத் தலைமையகம்: [Friday, 2011-03-18 06:42:19] 1995ஆம் ஆண்டு முதல் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த விக்டோரியா வீதி பொதுமக்கள் பாவனைக்குத் திறந்துவிடப்பட்டதையடுத்து, யாழ். நகரில் இனி எந்த உயர் பாதுகாப்பு வலயமும் இல்லையென� யாழ். இராணுவக் கட்டளைத் தலைமையகம் நேற்றிரவு ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில்� தெரிவித்துள்ளது. யாழ். அராலி, குருநகர், கொழும்புத்துறை, தனங்கிளப்பு மற்றும் பருத்தித்துறை ஆகிய பிரதேசங்களில் தம்வசமிருந்த அனைத்து இடங்களையும் இராணுவத்தினர் உரியவர்களிடம் கையளித்த நிலையில் அவற்றின் உரிமையாளர்கள் அங்கு குடியேறியுள்ளதாக� அந்த அறிக்கையில்� குறிப்பிட்டுள்ளது…
-
- 3 replies
- 871 views
-
-
நேற்று நடைபெற்று முடிந்த 234 உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் பெரும்பாலான சபைகளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக் கைப்பற்றி அதிக ஆசனங்களைப் பெற்று பெருவெற்றியீட்டியது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியால் குறைந்தளவு சபைகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. வடக்கில் தேர்தல் நடைபெற்ற தமிழ்ப் பகுதிகளில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றி சபைகளைத் தன்வசப்படுத்தியது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பை எதிர்த்துப் போட்டியிட்ட பிரதான கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இந்தப் பகுதிகளில் படுதோல்வி கண்டது. நேற்றுக் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 4 மணிக்கு நிறைவடைந்த 234 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 50…
-
- 1 reply
- 1.8k views
-
-
Saturday, 19 March 2011 00:46 உயர் பதவிகள் வழங்கப்படுவதற்காகவே வளர்க்கப்படும் சிறிலங்கா அதிபரின் மூத்த மகன் தனது தந்தையாரைத் தொடர்ந்து தான் ஆட்சியில் தொடருவதற்கு தனது சித்தப்பா பசில்தான் பிரச்சினையாக இருப்பார் என நாமல் கருதும் நிலையில் மகிந்த குடும்பத்திற்குள் குடும்ப வேறுபாடுகள் முளைவிட்டிருப்பதாகத் தெரிகிறது [முன்னர் மகிந்தவைத் தொடர்ந்து பசில்தான் ஆட்சியில் தொடருவார் என்ற நிலைமையே இருந்தது]. நாமலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்கு குடும்பத்திலுள்ளவர்கள் இணங்கக்கூடும். இவ்வாறு பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் The Economist சஞ்சிகையில் எழுதப்பட்டுள்ளது. அதனை மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. அதன் முழுவிபரமாவது, வம்ச அரசியல் என்பது எங்கோ ஆ…
-
- 1 reply
- 1.1k views
-