Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எஸ்.என்.ஜி.நாதனுக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தாக்கல்! Posted by admin2 On March 10th, 2011 at 10:44 pm வவுனியா நகரின் பல இடங்களில் கழிவுகளை அகற்றுமாறு வீதிப் பாதுகாப்புச் சங்கத்தின் கூட்டங்களில் சுட்டிக்காட்டிய பின்னரும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாகத் தெரிவித்து வவுனியா நகரசபைத் தலைவர் எஸ்.என்.ஜி.நாதனுக்கு எதிராக வவுனியா பொலிசார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். பொதுமக்கள் மற்றும் வவுனியா நகர வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட பொது அமைப்பக்களின் பிரதிநிதிகள் செய்த முறைப்பாட்டையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த வவுனியா மாவட்ட நீதவான், இறைச்சிக் கடையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் வவுனியா குளத்தில் …

  2. தமிழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் என்பது இலங்கை அரசின் அநியாயக் குற்றச்சாட்டு கொதித்தெழுகிறார் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் [Thursday, 2011-03-10 14:32:23] தமிழ்நாட்டில் 4 இடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் இயங்கிவருவதாக இலங்கை பிரதமர் டி.எம்.ஜயரட்ன கூறியது அடிப்படையற்றது என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் லத்திகா சரண் கூறியுள்ளார். இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் டி.எம்.ஜயரட்ன தமிழ்நாடு, கேரளா எல்லையில் தமிழீழ விடுதலைப் புலிகள் 4 முகாம்களில் பயிற்சி பெற்று வருகின்றனர் என்றும், அதனை இலங்கை அரசின் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது என்றும், அவர்கள் இலங்கையில் மீண்டும் இரத்தக் களறியை ஏற்படுத்தத் திட்…

  3. பார்வதியம்மாளின் வயிற்றில் முகம் பதித்து வந்தேன்! பத்மா ஜூனியர் விகடனுக்கு வழங்கிய பேட்டி 10 மீட்டருக்கு ஒரு பொலிஸ், 100 மீட்டருக்கு ஒரு இராணுவ முகாம்... அடையாள அட்டை இல்லாமல் நகரவே முடியாது என்ற திகில் சூழலில் இருக்கிறது இலங்கை. இவ்வாறு ம.தி.மு.க-வின் தஞ்சை மாவட்டத் துணைச் செயலாளரான க.பத்மா வார சஞ்சிகையான ஜூனியர் விகடனுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். உலகளாவிய தமிழ்ச் சங்கம், கலாசார பண்பாட்டு இயக்கம், பெரிய கோயில் மீட்புக் குழு ஆகியவற்றிலும் முக்கியப் பொறுப்புகள் வகிக்கும் பத்மாவிடம், இலங்கைப் பயண அனுபவங்களை ஜூனியர் விகடன் நிருபர் கேட்டபோது பின்வருமாறு விபரிக்கிறார். 10 மீட்டருக்கு ஒரு பொலிஸ், 100 மீட்டருக்கு ஒரு இராணுவ முகாம்... அடையாள அட்டை இல்ல…

  4. பயங்கரவாத தாக்குதலுக்கு இரகசிய உத்தரவிட்ட ஆட்சித்தலைவர் முபாரக்கின் கடிதமும், சிறீலங்கா பிரதமர் உரையும் ஓர் ஒப்பீடு.. இன்று வெளியாகியுள்ள இரண்டு செய்திகள் பயங்கரவாதத்தின் முகமூடிகளை கிழித்தெறிவதாக இருக்கின்றன. ஒன்று சிறீலங்கா பிரதமர் டி.எம்.ஜெயரத்தினா ஆற்றிய உரை மற்றையது எகித்திய முன்னாள் அதிபர் கொஸ்னி முபாரக்கின் இரகசிய கடிதம். இந்த இரண்டையும் ஒப்பிட்டுப்பார்த்தால் உண்மையான பயங்கரவாதமா ? இல்லை பம்மாத்து பயங்கரவாதமா ? உலக ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்ற கேள்வி எழும் . பொட்டம்மானின் சகாவின் உதவியுடன் தமிழகத்தில் புலிகளின் ஆயுதப் பயிற்சி மூன்று முகாம்களில் நடைபெறுவதாகக் கூறியுள்ளார் சிறீலங்கா பிரதமர். அத்தோடு தமிழக தலைவர்களை குறிவைத்து இது நடப்பதாகவும் கூறியுள்ளார்.…

    • 3 replies
    • 1.8k views
  5. பிரித்தானியாவுக்கும், அவுஸ்திரேலியாவுக்குமான தூதுவர்களாக நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் முன்மொழிந்த பெயர்களை இவ்விரு நாடுகளும் நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான நிரந்திர வதிவிடப் பிரதிநிதி பாலித்த கோஹன்னவை பிரித்தானியாவுக்கான தூதுவராக நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. அதேபோன்று, கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் திஸார சமரசிங்கவை அவுஸ்ரேலியாவுக்கான தூதுவராக நியமிக்கவும் சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்து, இவர்களின் பெயர்களை அந்தந்த நாடுகளுக்கு பரிந்துரைத்த போதே இவ்விரு நாடுகளும் அந் நியமனத்தை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரின் நியமனங்கள் தொடர்பான முன்மொழிவை இவ்விரு …

    • 0 replies
    • 1.3k views
  6. இஸ்ரேலிய ‘கிபிர்‘ விமானங்களை வாங்குவதில்லை - சிறிலங்கா விமானப்படை வியாழக்கிழமை, 10 மார்ச் 2011 12:07 tஇனிமேல் இஸ்ரேலிடம் இருந்து கிபிர் போர் விமானங்களை வாங்கும் எண்ணம் இல்லை எனறு சிறிலங்கா விமானப்படை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சிறிலங்கா விமானப்படையின் இரண்டு கிபிர் போர் விமானங்கள் கடந்த 1ம் திகதி கம்பகாவில் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விமானங்களுக்குப் பதிலாக புதிய கிபிர் விமானங்களை வாங்கும் எண்ணம் தமக்கு இல்லை என்று சிறிலங்கா விமானப்படை கூறியுள்ளது. “சிறிலங்கா விமானப்படையிடம் போதியளவு போக்குவரத்து விமானங்களும், போர் விமானங்களும் உள்ளன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து விட்டதால், சிறிலங்கா விமானப்படைக்க…

  7. சொந்தக் காணிக்கும் செல்லமுடியாது சுடலைக்கும் போக முடியாது திருமுறிகண்டி மக்களுக்கு ஏற்பட்டுள்ள திரிசங்கு நிலைமை Posted by admin2 On March 10th, 2011 at 6:36 pm / No Comments சொந்தக் காணிகளுக்கும் செல்ல முடியாது. இறந்தவரை எரிப்பதற்கு சுடலைக்கும் போக முடியாத நிலையிலேயே திருமுறிகண்டி கிராமத்து மக்கள் இருக்கின்றார்கள். திருமுறிகண்டி குடியிருப்பின் பல பகுதிகள் இன்னும் இராணுவத்தினரின் வசமாகவே இருக்கின்றன. இந்தப் பகுதியில் 4000 ஏக்கர் காணிகளை இராணுவத் தேவைக்காக அரசு சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது. இதற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த திருமுறிகண்டி மக்களின் வற்புறுத்தல்கள், போராட்டங்கள், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரின் தொடர்ச்சியான நடவடிக்கைக…

  8. Thursday, March 10th, 2011 | Posted by thaynilam 2017வரை அரசுத்தலைவர் தேர்தல் இல்லை- மகிந்த அறிவிப்பு 2017ஆண்டுக்கு பின்னரே அரசு தலைவர் தேர்தல் நடத்தப்படும் என்றும் எக்காரணம் கொண்டும் அதற்கு முதல் தேர்தல் நடத்தப்படமாட்டாது என சிறிலங்கா அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச இன்று தெரிவித்தார். நுவரெலியாவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் மகிந்த ராசபக்ச இதனைத்தெரிவித்தார். பொதுத்தேர்தல் 2016ஆம் ஆண்டுதான் நடைபெறும் என்றும் யாருக்காவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என விரும்பம் இருந்தால் அவர்கள் 2016ஆம் ஆண்டுவரை பொறுத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 2017ஆம் ஆண்டு அரசுத்தலைவர் தேர்தலிலும் தான் போட்டியிடப்போவதாகவும் அதிலும் தானே வெற்றிபெறுவேன் என தெரிவித…

  9. சன் சீ கப்பலில் சென்ற கடற்புலியை நாடு கடத்த கனேடிய அதிகாரிகள் உத்தரவு [Wednesday, 2011-03-09 03:50:27] �சன் சீ� கப்பலில் சென்ற அகதிகளில் ஒருவரான- விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரை நாடு நடத்த கனேடிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுதொடர்பாக கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபையின் உறுப்பினரான மைக்கல் மைக் பாலென் தகவல் வெளியிடுகையில், � தமிழ்ப் புலிகள் என்று அறியப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பு கனடாவில் சமஷ்டி அரசினால் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே �சன் சீ� கப்பலில் வந்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவருக்கு அடைக்கலம் வழங்க முடியாது. அவரை நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஏழு ஆண்டுகள் உறுப்பினராக இருந்…

  10. குதிரையை ஆற்றுக்கு இட்டுச் செல்லலாம். ஆனால் தண்ணீர் குடிக்க வைக்க முடியாது. நாகதஅ க்கு தேர்தலில் போட்டி போட்டு தெரிவு செய்யப்பட்டவர்கள் முதலில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவேண்டும். நிறைவேற்றாத யாப்புக்கு எப்படி உறுதிமொழி எடுக்கலாம் என்பது விதண்டாவாதம். சரி பாதிக்கு மேலான உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துவிட்டார்கள். நடந்தது என்னவென்றால் நாகதஅ உருவாகுவதை ஒரு சாரார் விரும்பவில்லை. அதை முளையில் கிள்ளி எறிய முயற்சித்தார்கள். ஒரு புறம் ஆதரவு என்று சொல்லிக் கொண்டு மறுபுறம் முட்டுக்கட்டை போட்டார்கள். இவர்களை நோர்வேயில் இருந்து கொண்டு இரண்டொருவர் வழி நடத்திக் கொண்டிருந்தார்கள். பலவிதத்திலும் முயன்று தோல்வி கண்ட பின்னர் எங்கே வண்டியைத் தவறவி…

    • 34 replies
    • 3.8k views
  11. இலங்கைச் சிறைச்சாலையில் இன்னும் சித்திரவதைகள் இடம்பெறுவதாகவும், அங்கே காரணம் இன்றி பல ஆயிரக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. பத்திரிக்கைச் சுதந்திரம் இல்லை, மற்றும் 1973ம் ஆண்டு முதல் இலங்கை அவசரகால சட்டத்தின் கீழ் இயங்கிவருவதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளதோடு, இது தொடர்பாக அறிக்கை ஒன்றை தயாரித்து காணொளியாக வெளியிட்டுள்ளது. இத் தகவல்கள் காரணமாக சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கலாம் என ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். http://www.manithan.com/index.php?subaction=showfull&id=1299736716&archive=&start_from=&ucat=1&

  12. பிரித்தானியாவில் 2011 அம் ஆண்டிற்கான குடிசன மதிப்பீடு நடைபெற்று வருகின்றது. நீங்கள் எத்தனை பேர் வீட்டில் இருக்கிறீர்கள் என்பது தொடர்பாக அவர்கள் கணக்கு எடுத்து பிரித்தானிய மக்களின் அளவைக் கணக்கிடுகின்றனர். இப் படிவத்தில் 16ம் கேள்வியாக உங்கள் இனம் என்ன (அதாவது நீங்கள் பிறந்த நாடு) எது என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அதில் ஆசியா என்றும் அதன் கீழ் இந்தியா பாகிஸ்தான், சீனா என்று எழுதியிருக்கிறார்கள். ஆனால் 3 லட்சம் தமிழர்கள் வசிக்கும் பிரித்தானியாவில், நீங்கள் தமிழரா என்ற கேள்விகள் கேட்கப்படவில்லை. எனவே தயவு செய்து பிரித்தானியா வாழ் அனைத்துத் தமிழர்களும், நீங்கள் தமிழீழத்தவர் என்று போடுங்கள்.(Eelam Tamil) இல்லையே குறைந்த பட்சம் தமிழன் என்றாவது போடுங்கள். 3 லட்சம் தமிழ…

    • 1 reply
    • 2.4k views
  13. இந்தியாவில் தான் 'ராஜதந்திரம்' கற்றேன்: பான் கி மூன் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக டெல்லியில் தூதராக நியமிக்கப்பட்டதை நினைவுகூறிய ஐக்கிய நாடுகள் தலைவர் பான் கி மூன், தாம் ராஜதந்திரத்தைக் கற்றுக் கொண்டது இந்தியாவில் தான் என்றார். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் பிரபல வயலின் கலைஞர் எல்.சுப்பிரமணியத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன், "ராஜந்திரத்தைக் கற்றுக் கொண்டதும், இந்திய இசையை ரசித்ததும் டெல்லியில் தான்," என்றார். ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் ஆவதற்கு முன்பாக தென் கொரியாவின் தூதராக பதவி வகித்த பான் கி மூன், டெல்லியில் தென் கொரிய தூதராக பொறுப்பேற்று தனது வெளியுறவுப…

  14. புதன்கிழமை, 9, மார்ச் 2011 (0:2 IST) ராஜபக்சே அரசுக்கு ஆதரவளிக்க நடிகைக்கு ரூ.5 கோடி லஞ்சம் இலங்கையில் ராஜபக்சே அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க தனக்கு 5 கோடி ரூபாய் லஞ்சம் தரப்பட்டதாக நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுவர்ணமாலி தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி மூலம் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுவர்ணமாலி. பிரபல சிங்கள சினிமா நடிகையும், கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பபா என்றழைக்கப்படும் சுவர்ணமாலி, அண்மையில் காவல்துறையினருக்கு அளித்த வாக்குமூலத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் என, இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. தன் கணவனால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் க…

  15. சிறிதரன் எம்.பி. மீதான கொலை முயற்சிக்குக் காரணம் என்ன? அவசரகாலச் சட்டம் நீடிப்புக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தவா? சபையில் அரியநேந்திரன் கேள்வி சிறிதரன் எம்.பி.மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி அவசரகாலச்சட்டதை நீடிப்பதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தவா? அல்லது ஜனாதிபதிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்கா? இப்படி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பா.அரியநேத்திரன். நேற்று நாடாளுமன்றத்தில் உரவிநியோகம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அரிய நேத்திரன் எம்.எபி.தொடர்ந்து உரையாற்றும் போது கூறியதாவது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு வாரங்களுக்கு முன்னர்…

    • 0 replies
    • 1.3k views
  16. Wednesday, March 9th, 2011 | Posted by thaynilam வெள்ளைக்கொடி விவகார வழக்கில் சாட்சியமளிக்கவுள்ளோரின் பெயர்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கில் சந்தேகநபர்கள் சார்பில் சாட்சியமளிக்கவுள்ளவர்களின் பெயர் பட்டியல் இன்று நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரான சரத் பொன்சேகா சார்பில் ஆஜராகியுள்ள சட்டத்தரணி நலின் லத்துஹெட்டியினால் குறித்த பெயர் பட்டியல் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி அந்த சாட்சியாளர்கள் பட்டியலில் சந்தேகநபரான சரத் பொன்சேகா, பாராளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய, மங்கள சமரவீர மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் பெயர்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. அதனைவிடவும் பேராசிரியர் ஹேஸ்லி ஹல்பே, உயர் நீதிமன்றின் பதிவாளர், மேல் …

  17. ‘எங்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்’ – பெண் அரசியல் கைதிகள் உருக்கமான வேண்டுகோள்! Posted by admin On March 10th, 2011 at 9:51 am / No Comments இலங்கையில் சிறைச்சாலையில் மிக நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை இனியாவது விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்ப் பெண் அரசியல் கைதிகள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்; காலங்கள் பல கடந்தும் கவனிப்பார் யாரும் இன்றி, பயங்கரவாதம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் எவ்விதத் தீர்வும் இல்லாமல் எப்போது விடுதலை என்றுகூட அறியமுடியாமல் சிறைகளில் தினம் தினம் கண்ணீரும் கவலைகளுமே சொந்தமாகிப்போன நிலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளோம். எங்களை…

  18. குமரன் பத்மநாதனை இந்தியாவிற்கு நாடு கடத்துமாறு ரணில மீண்டும் கோரிக்கை:- 10 மார்ச் 2011 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனை இந்தியாவிற்கு நாடு கடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். வழக்கு விசாரணைகளுக்காக குமரன் பத்மநாதனை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு இந்தியா கோரினால் அதற்கு இலங்கை அரசாங்கம் செவி சாய்க்க வேண்டுமென ரணில் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் விடுதலைப் புலிகள் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான ஓர் பின்னணியில் ஏன் குமரன் பத்மநாதனை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். …

  19. வெளிநாட்டில் இருந்து சென்ற நவராஜா உருதரன் விமான நிலையத்தில் கைது – கோத்தாபய கொலையில் சம்பந்தமாம்? 10 மார்ச் 2011 பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை கொலை செய்யும் நோக்கில், கொள்ளுப்பிட்டி பித்தளை சந்தியில் விடுதலைப்புலிகளினால் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் சம்பவம் இடம்பெற்று 4 வருடங்களின் பின்னர், கைதுசெய்யப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். நவராஜா உருதரன் என்ற இந்த சந்தேக நபர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, கடந்த 7 ஆம் திகதி, புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார் என நீதிமன்றத்தில் ஆஜராகி அறிக்கை…

  20. அமெரிக்க ஸ்ரீலங்கா வர்த்தகத் தொடர்புகள் குறித்து கலந்துரையாடல்! Posted by admin On March 10th, 2011 at 2:34 am அமெரிக்கத் தூதவருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை அமெரிக்க இலங்கை இடையிலான வர்த்தக தொடர்புகளை மேலும் விஸ்தரிப்பது தொடர்பான விஷேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா இருவருக்கும் இடையிலான இப் பேச்சுவார்த்தை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக மற்றும் விமான சேவை தொடர்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையில் காணப்படும் முன்னேற்றங்கள் மற்றும் வடபகுதி மீனவர் பிரச்சினைக்கான தீ…

  21. போரின் போது நிபந்தனையின்றி உதவியது பாகிஸ்தான் இராணுவம் – இராணுவத்தளபதி! Posted by admin On March 10th, 2011 at 9:40 am விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின்போது நிபந்தனை அற்ற வகையில் உதவியதற்கு பாகிஸ்தான் இராணுவத்திற்கு இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய நன்றி தெரிவித்தார். பாகிஸ்தான் இராணுவ பயிற்சி மற்றும் மதிப்பீட்டுமா அதிபரான லெப்டினன்ட் ஜெனரல் முஸம்மில் ஹூசைன் தலைமையில் ஆறு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் உயர் மட்ட இராணுவ தூதுக்குழு தன்னைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கை இராணுவத்திற்கு பல தரப்பட்ட பயிற்சிகளை வழங்கியதற்கும் இலங்கை இராணுவத் தளபதி நன்றி தெரிவித்தார். …

  22. ஹில்டன் ஹோட்டலை கையப்படுத்தியது அரசு! Posted by admin On March 10th, 2011 at 10:02 am ஹில்டன் ஹோட்டலை அரசாங்கம் முழுமையாகப் பொறுப்பேற்றுள்ளதாகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்தினால் நீடிப்பது தொடர்பான விவாதத்திலே அவர் இவ்வாறு கூறினார். ஐ.தே.க. எம்.பி. ஹர்ச த சில்வா தெரிவித்த குற்றச் சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது: முதலீட்டாளர்களிடம் அவர்கள் முதலீடு செய்யும் காணியின் முழுப்பெறுமதியும் பெறப்படாமலே அவை வழங்கப்பட்டு வந்தன. ஆனால், முதற் தடவையாக செங்கீலா மற்றும் செட்டிங் ஆகிய கம்பனிகள் காணிகளின் முழுத்தொகை யையும் செலுத்தி தாம் முதலீடு செய்யும் காணிய…

  23. Thursday, March 10th, 2011 | Posted by thaynilam உலகில் காணாமல் போன சம்பவங்களில் அதிகமான சம்பவங்கள் இலங்கையிலேயே – ஐ.நா காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஐக்கிய நாடுகளின் செயற்பாட்டு குழு, காணாமல் போன சம்பவங்களில் அதிகமான சம்பவங்கள் இலங்கையிலேயே இடம்பெற்றுள்ளன எனத் தெரிவித்துள்ளது. இலங்கையில் 100இற்கு 80 வீதமான காணாமல் போன சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என குழு தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் 16ஆவது கூட்டத் தொடரில் சாட்சியமளிக்கும்போதே அந்தக் குழு இதனைக் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் ஆட்கள் காணாமல் போன சம்பவங்கள் குறித்து அங்கு சென்று விசாரணை நடத்த சந்தர்ப்பம் வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு இலங்கை அரசு பதில…

  24. Thursday, March 10th, 2011 | Posted by thaynilam வடமாகாண வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு உணவு வழங்க வேண்டாம் என ஆளுநர் உத்தரவு -தமிழர்களை பழிவாங்கும் ஒரு செயல் வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு உணவு வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி உத்தரவிட்டுள்ளார். ஆளுநரின் இந்த உத்தரவை வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் வடமாகாணத்தில் உள்ள சகல வைத்தியசாலைகளுக்கும் அறிவித்துள்ளார். வட மாகாணத்தில் இயங்கும் ஆதார வைத்தியசாலைகள் மாவட்ட வைத்தியசாலைகள் கிராமிய வைத்தியசாலைகள் மற்றும் மத்திய மருந்தகங்கள், பிரசவ வைத்தியசாலைகள் ஆகியவற்றில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு மூன்று வேளையும் வ…

  25. புலிகளின் மீது புழுதிவார வருகின்றார்கள் - கே.பியின் வழிகாட்டலில் ரவியும், வழுதியும்! மார் 8, 2011 தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சிதைக்கவும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான மக்களின் ஆதரவினை சிதைக்கவும் காலத்திற்கு காலம் எதிரி பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றான். அந்த வகையில்தான் இதுவும் எனும்போதும், தமிழ் மக்கள் இது குறித்து விழிப்பாக இருக்கவேண்டும் என்பதற்காகவே இந்த விடயங்களை பகிர்ந்து கொள்ளவேண்டியுள்ளது. ‘எதிரியினை விட துரேகிகள்தான் ஆபத்தானவர்கள்’ என்ற தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையினை மனதில் நிறுத்தி, விடுதலைக்கான செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது. அந்த வகையில் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் மீது புழுதி வாரி இறைப்பதற்காகவும், புலம்பெயர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.