ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களை பணயக் கைதியாக வைத்து, தடுத்து வைக்கப்பட்டிருந்த தம் இயக்கத்தை சேர்ந்தவர்களை விடுவிப்பதை நோக்காகக் கொண்டே 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பஸ் மீது தாக்குதல் நடத்தியதாக, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த லக்ஷ்ர்-இ-ஜங்வி இயக்க உறுப்பினரான அப்துல் வகாப் தெரிவித்துள்ளார். மேலும், குறித்த தாக்குதலுக்கான திட்டம் வொஸ்ரிஸ்டனில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் ஜியோ செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு என மோட்டார் சைக்கிள் சிலவும் கொள்ளவனவு செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி மீது பாகிஸ்தானில் மேற்கொண்ட தாக்குதலிற்கு விடுதலைப்புலிகளே பொறுப்பு என இந்த…
-
- 0 replies
- 632 views
-
-
திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் மையவாடி ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 4 கைக்குண்டுகளை மீட்கப்பட்டுள்ளன என மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கைக்குண்டுகள் முஸ்லிம் ஆயுத குழுக்களுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றில் மூதூர் இறால்குழி வீதியில் உள்ள நொக்ஸ் சந்தியிலுள்ள சுடுகாட்டில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 4 கைக்குண்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகள மூதூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.. Eelanatham
-
- 0 replies
- 329 views
-
-
குடாநாட்டில் இடம்பெற்ற 24 சம்பவங்களையும் பார்க்கின்ற போது அவற்றுக் கிடையில் ஒத்த தன்மை காணப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் பாதாள உலக கோஷ்டியினர் இல்லை. மக்களை பயமுறுத்தி, அச்சுறுத்தி பணம் பறிக்கும் சொத்துக்களை அபக ரிக்கும் செயற்பாட்டில் அரசாங்கத்திற்கு நெருக்கமான குழுவே ஈடுபடுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியது. தமிழ் மக்களுடன் இணக்கம் காண விரும்பினால் அரசாங்கத்திற்குள் இருக்கின்ற குற்றவியல் சக்திகளை அரசாங்கம் அகற்றிவிட வேண்டும். இன்றேல் எங்களுடைய சாதாரணமான சந்தேகம் உண்மையாகிவிடும் என்றும் கூட்டமைப்பு சுட்டிக் காட்டியது. பாராளுமன்றத்தில் நேற்று சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும்போதே கூட்டமைப்பின் எம்.பி.யான எம்.சுமந்திரன் இவ…
-
- 0 replies
- 634 views
-
-
இலங்கையின் போர்க்குற்றங்களை ஐ.நா. உள்ளிட்ட அமைப்புக்கள் சுதந்திரமான முறையில் விசாரிக்க வேண்டுமென அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். மசாசூசெட்ஸ் பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான எட்வர்ட் ஜே. மார்க்கி என்பவரே கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸில் உரையாற்றும்போது மேற்குறித்த கருத்தைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்று தெரிவித்துள்ள அவர், தனது கருத்துக்கு ஆதரவாக இன்னும் 57 உறுப்பினர்களும் இணைந்துகொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தாங்கள் அனைவரும் இணைந்து, குறித்த வேண்டு…
-
- 0 replies
- 324 views
-
-
Jan 20, 2011 / பகுதி: செய்தி / சில சர்வதேச அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர் - டி.எம்.ஜெயரத்ன ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் சில சர்வதேச அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக, ஸ்ரீலங்காவின் பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார். உள்நாட்டு ஆங்கில இணையத்தளமான டெய்லி மிரருக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டின் இறைமைக்கு எதிராக செயற்பட்டமைக்காக இந்த தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகள் இரத்து செய்யப்பட்டு அவற்றின் பிரதிநிதிகள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பிரதமர் குறிப்பிட்டுள்ளார். குறித்த சர்வதேச தொண்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு விசாரணைகளின் போது, அந்த நிற…
-
- 0 replies
- 740 views
-
-
Jan 20, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / இலண்டன் அமெரிக்க தூதரகம் முன்பாக சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் மகிந்தவை அமெரிக்கா அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதைக் கடுமையாகக் கண்டித்து, பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க துதரகம் முன்னால் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று சனிக்கிழமை(22.01.2011) நடக்கவிருக்கிறது. தமிழ் மாணவர்கள் மற்றும் இளையோர்களால் இப் போராட்டம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. மதியம் 12.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை இப் போராட்டம் நடைபெறவுள்ளதால், அனைத்து தமிழர்களும் இதில் கலந்துகொண்டு இளையோர்களின் கரங்களை வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தற்போது அமெரிக்க சென்றுள்ள மகிந்தவை அந் நாட்டு அதிபர் ஓபாமாவை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கையின…
-
- 0 replies
- 424 views
-
-
யாழ்ப்பாணத்தில் கடந்த 8 தினங்களில் 10 கொலை- ரணில் : வன்னியில் இடம்பெறும் மீள்குடியேற்றங்கள் வெற்றியளிக்கவில்லை எனவும் கிளிநொச்சியில் நாளாந்தம் 4 பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண சம்பவங்கள் தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.யாழ்ப்பாணத்தில் முன்னர் அமைதியான நிலைமை காணப்பட்டது. அப்போது, விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் இருந்தன. எனினும் தற்போது யாழ்ப்பாணத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் அமைதி சீர்குலைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் போல், கொழும்பு அல்லது கண்டியில் இடம்பெற்றிருந்தால், ஊடகங…
-
- 0 replies
- 279 views
-
-
ஜனாதிபதியிடம் விசாரணை நடத்தப்பட மாட்டாது – ஐ.நா. தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், நிபுணர்கள் குழு விசாரணை நடத்தாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்iகியல் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நியூ யோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகளுடன் சந்திப்புக்களை நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டமிட்டிருக்கவில்லை என ஐக்கிய நாடுகள் பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு உறுப்பினர்களையோ அல்லது வேறும் தரப்பினரையோ ஜனாதிபதி சந்திக்க மாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் ஜனாத…
-
- 0 replies
- 562 views
-
-
மன்னாரில் தனித்து போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்! மன்னார் மற்றும் முசலி ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ் தனது மரச்சின்னத்தில் தனித்தே போட்டியிடவுள்ளதாக கட்சியின் அரசியல் உயர்பீடம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களில் மன்னார் மற்றும் முசலி ஆகிய 2 பிரதேச சபைகளில் மட்டுமே முஸ்ஸிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சி உறுப்பினர் ஆர்.மக்புல் தெரிவித்தார். மேலும் மன்னார் நகர சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களிலும் முஸ்ஸிம் காங்கிரஸ் அ…
-
- 0 replies
- 272 views
-
-
வவுனியா சென்றார் கதரின்! வியாழன், 20 ஜனவரி 2011 16:35 .மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜக்கிய நாடுகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான பிரதிச்செயலாளரும், அவசரகால நிவாரண பிரதி இணைப்பாளருமான கதரின் பிராக் இன்று வவுனியா சென்றுள்ளார். வவுனியா இராணுவ விமான நிலையத்தினை வந்தடைந்த நிலையில் அவர் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளை சந்தித்து வவுனியா தொடர்பான நிலவரங்களை அதிகாரிகளினுடாக கேட்டறிந்து கொண்டுள்ளார். இதேவேளை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஐ.நா.வின் அதிகாரிகள் குழுவொன்று வவுனியா பெரிய தம்பனை கிராமத்திற்கு சென்றுள்ளது. …
-
- 0 replies
- 463 views
-
-
மஹிந்தருக்கு கடுப்பை ஏற்படுத்திய சுரேஸ் எம்.பி! வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வேண்டும் என்று உடும்புப் பிடியாக உள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன். இவர் ஏசியன் த்ரிபியூன் என்கிற ஆங்கில இணையத் தள பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் இதை வலியுறுத்தி உள்ளார். ஆனால் அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்றுகூட தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண தயார் என்றும் இருப்பினும் இலங்கை போன்ற சிறிய ஒரு நாட்டில் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என்றும் அதைச் செய்ய தனிப்பட விரும்பவில்லை என்றும் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ. இந்நிலையில் ஏசியன் த்…
-
- 0 replies
- 1.1k views
-
-
The Tamil National Alliance (TNA) today blamed the crime wave in the Jaffna peninsula on the EPDP, an alliance partner of the ruling UPFA, and urged the government to resolve the situation. TNA National List MP M.A.Sumanthiran moved an adjournment motion in Parliament in this regard and said there was a complete breakdown in the law and order situation in the North resulting in murders, kidnappings, extortion and other crimes. Mr.Sumanthiran said the perpetrators had managed to get away in each of these incidents. The situation has been further compounded that even a Government Minister from the area has thought the situation so serious that he himself raised…
-
- 2 replies
- 1.5k views
-
-
இது கதையல்ல நிஜம்: நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது! – ஒரு போராளியின் சாட்சியம் – தொடர் 9 நித்திரை கொள்ளவே விடாது தூவாணம் அடித்தது. வீடு முழுக்க ஒரே ஒழுக்கு. என்ன செய்வது சமாளிக்கத்தான் வேண்டும் என்று நினைத்தவாறே அப்படியே தரையில் படுத்து நித்திரை கொண்டேன். திடீரென்று ஏதோ எனது காலை நக்கிறமாதிரியிருந்தது. கண்ணைத்திறந்து பார்த்தேன். ஒரு நாய்க்குட்டி. எனக்கு மனதுக்கு சந்தோசமாக இருந்தது. அந்த நாய்க்குட்டியையும் தூக்கிப் பக்கத்தில் வைத்துக்கொண்டு நித்திரை கொண்டேன். அதுவும் எனக்குப் பக்கத்தில் படுத்துவிட்டது. வாய் பேசாத ஜீவன் என்றாலும் அந்த நேரத்தில் ஒரு துணையைப் போல உணர்ந்தேன். விடியப் போகுது பகலில் நடமாடவே முடியாது ஒரு மறைப்பும் இல்லை. வேறொரு வீட்டுக்குள் போய…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணத்தில் இயங்கும் இந்திய துணை தூதரகத்தில் தலை விரித்தாடும் லஞ்சம்! பொதுமக்கள் புகார் .கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்திய துணைத் தூதரகத்தின் விஸா வழங்கும் நடவடிக்கைகளில் கப்பம் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தூதரகத்திற்கு சென்று திரும்பும் மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். மிக கச்சிதமான முறையில் லஞ்சம் கொடுத்து சிலர் தங்களுக்கு வேண்டிய இந்தியாவிற்கான விஸாவினை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. அத்தோடு பாதுகாப்பு பிரிவினரின் செல்வாக்கைப் பயன்படுத்தியும் இந்திய துணைத் தூதரகத்தில் இருந்து விஸா அனுமதியினை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளும் அங்கு இடம்பெற்று வருவதாக விஸா அனுமதி பெறச் செல்லும் மக்க…
-
- 5 replies
- 773 views
-
-
வியாழக்கிழமை, 20, ஜனவரி 2011 (22:49 IST) பொன்சேகா கட்சி : தேர்தல் கமிஷன் மறுப்பு இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி ஜனநாயக கட்சி என்ற தனிக்கட்சி தொடங்கினார். இந்த கட்சி ஜனநாயக தேசிய கூட்டணியில் இடம் பெற்று இருக்கிறது. இந்த நிலையில் ஜனநாயக கட்சி, தேர்தல் கமிஷனை அணுகி தங்கள் கட்சியை பதிவு செய்யும் படி மனு கொடுத்தது. ஆனால் இந்த கட்சியை தேர்தல் கமிஷன் பதிவு செய்ய வில்லை. தேவையான அனைத்து விவரங்களையும் கொடுக்க வில்லை என்று கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த கட்சியுடன் மேலும் 86 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. nakkheeran
-
- 0 replies
- 691 views
-
-
புலிகளின் திரைப்படத்தில் நடித்த நபர் ஒருவர் கனடாவில் கைது:திவயின பத்திரிகை [ பிரசுரித்த திகதி : 2011-01-19 06:55:20 AM GMT ] புலிகளின் திரைப்படத்தில் நடித்த நபர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனுராபுர விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான திரைப்படத்தில் குறித்த நபர் நடித்துள்தாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. வினோதன் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண மீனவர் என்ற போர்வையில் குறித்த நபர் கனடாவில் அடைக்கலம் கோரியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. வினோதன், தாக்குதலுக்கு தலைமை தாங்கிய நபரின் பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திரைப்படத்தில…
-
- 6 replies
- 1.6k views
-
-
Thursday, January 20th, 2011 | Posted by admin ஈழத்தில் அடுத்த யுத்தம் எப்போது…? இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு தனி நாடு அவசியம் தேவையா? இப்படி ஒரு கேள்வி இன்று நேற்று அல்ல 1980 – முதலே தமிழக மக்கள் பலரிடத்தில் கேட்கப்படுகிறது. இலங்கையை ஆளுகின்ற சிங்கள இனவாதிகள் தமிழ் பேசும் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக நினைக்கிறார்கள். தமிழ் பண்பாட்டு கூறுகளை எந்த வகையிலாவது இல்லாது செய்து விட வேண்டும் என்று கங்கனம் கட்டி செயல்பட்டு வருகிறார்கள். தமிழர்களின் உயிருக்கும், உடமைக்கும், மானத்திற்கும் உத்திரவாதம் இல்லை. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தனது தாய் பூமியில் வேர்பதித்து வாழ்ந்த பூர்வ குடிமக்கள் அனாதைகளாக புலம் பெயர்ந்து இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள பெயர் கூட வாய…
-
- 1 reply
- 1.7k views
-
-
மட்டக்களப்பு நாவலடிக் கிராமம் கடல் அரிப்பால் அழிந்துபோகும் அபாயம்! Thursday, January 20, 2011, 14:35 அண்மையில் மட்டக்களப்பில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ள நீரை வெளியேற்றுவதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சரினால் வெட்டப்பட்ட முகத்துவாரத்தினாலேயே இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையினால் நாவலடிக் கிராமம் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தாலும் இவ்வாறான ஒரு பாரிய சேதம் இந்த நாவலடிக்குச் செல்லும் பாதைக்கு ஏற்பட்டிருக்கவில்லை அத்துடன் இந்த வெட்டப்பட்ட இடத்தில் கடல் நீர் நிலத்தை பாரியளவு அரித்து நிலத்தை உள்வாங்கி உள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. கடல் அரிப்பை தடுக்க நாடு பூராகவம் ஏன் உலகம் முழுவதும் பாரிய நடைமுறைகளும் சட்டதிட்டங்களு…
-
- 0 replies
- 748 views
-
-
கீற்று இணையத்தளத்தில் மினர்வாவால் எழுதப்பட்ட கட்டுரை புதிய உரையாடல்களை முன்னெடுப்பதாக அமைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி. விடுதலைப் புலிகளை பாசிசவாதிகள், சாதி வெறியர்கள், பிள்ளை பிடிகாரர்கள், பயங்கரவாதிகள் என்றெல்லாம் சித்தரிப்பதில் புலியெதிர்ப்பாளர்கள் வெகுவாக முயன்று அதில் ஓரளவு வெற்றியுங் கண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இத்தகைய உரையாடல்கள் அவசியமாகின்றன. புலிகள் தங்கள் மீதான விமர்சனங்களை எதேச்சாதிகாரப் போக்குடன் எதிர்கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டினை முன்வைத்து புலியெதிர்ப்புத் திருவிழாவை கோலாகலமாகக் கொண்டாடி வந்த புலம்பெயர்ந்த, பெயராத “அறிவுஜீவிகள்” புலிகளின் வீழ்ச்சியுடன் அதை நிறுத்திக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், ”ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்கமாட்டா”என்பதற்க…
-
- 6 replies
- 2.9k views
-
-
. .ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தண்டிக்கப்பட வேண்டியவர் - சர்வதேச சட்டநிபுணர் பேராசிரியர் பொயெல் சீற்றம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தண்டிக்கப்பட வேண்டியவர் - சர்வதேச சட்டநிபுணர் பேராசிரியர் பொயெல் சீற்றம் வியாழன், 20 ஜனவரி 2011 20:24 .ஜனாதிபதி ஒருவருக்கு அமெரிக்காவிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தின் அனுமதியுடன் விஜா இல்லாமல் அமெரிக்காவிற்கு சென்றுவர முடியும். எனினும் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி ஒருவர் அமெரிக்காவிற்கு செல்ல விரும்பினால் நிச்சமாக விஸா அனுமதி பெற்றே செல்லவேண்டும் என்பது கட்டாயம் என பேராசிரியர் பிரான்சிஸ் பொயெல் தெரிவித்துள்ளார். இந்த விதிமுறையானது ஜெனிவாவில் காணப்படுகின்ற குற்றங்களுக்கு எதிரான சட்டங்களுக்கு அமைவானது என அவர் சுட்டிக்காட்டுகின்றார். அமெர…
-
- 0 replies
- 1.2k views
-
-
Transnational Government of Tamil Eelam Invited to Southern Sudan After Independence Vote Sudan Peoples' Liberation Movement (SPLM) has invited Transnational Government of Tamil Eelam (TGTE) to visit Southern Sudan in the immediate aftermath of the vote for an independent state. TGTE is sending a delegation to participate in the celebrations and to discuss possibilities of assisting Southern Sudan in their development efforts through Tamil Diaspora expertise in selected fields. TGTE delegation will be received by the SPLM officials and will stay as guests of SPLM. They will also meet other foreign government leaders. Sudan Peoples' Liberation Movement (SPLM)…
-
- 24 replies
- 2.5k views
-
-
யுத்தம் முடிந்துவிட்டது. இனிமேல் அமைதி - சமாதானம் என்றெல்லாம் பேசப்படுகின்றது. ஆனால் அமைதியென்றால் என்ன என்பதற்கான பொருளை உணர முடியாதவர்களாகத் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். நாட்டில் யுத்தமில்லை. எனவே அமைதி நிலை உள்ளதென்ற கணிப்பு மிகவும் தவறானதாகும் அமைதி என்பது மக்கள் சுதந்திரத்தோடும் இறையாண்மையோடும் பொருளாதார நெருக்கீடுகள் இல்லாமலும் இதர ஆபத்துக்கள் இன்றியும் நிம்மதியாக வாழ்கின்ற நிலைமையைக் குறிப்பதாக இருக்கும். அப்படியானால் தமிழ் மக்கள் ஏதோவொரு வகையில் நிம்மதியாக வாழவில்லை என்பதை நிரூபிக்கலாம். யாழ்.குடாநாட்டில் தற்போது கொள்ளையும் களவும் மகாசன்னதம் ஆடுகின்றன. வீடுகளுக்குள் நுழைந்து ஆயுதங்களைக் காட்டிப் பெறுமதியான சொத்துக்களை அபகரித்துச் செல்லும் கொடூரம் நீண்டு செ…
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்கா வந்துள்ள மஹிந்தவை கைது செய்யுமாறு சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை [ பிரசுரித்த திகதி : 2011-01-20 07:49:50 AM GMT ] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அமெரிக்கா சென்றுள்ளார். இந்தநிலையில், யுத்த குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கா அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபை இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. அமெரிக்காவுக்கான அதிர்சி விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக, யுத்த குற்றங்கள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பில் அமெரிக்க விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நேற்று காலை 20 பிரதிநிதிகளுடன் அமெரிக்கா சென்றார். இது தொடர்பிலான சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கையில்,…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஊடக செய்தி- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம். வணக்கம், தென்சூடான், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அழைத்திருப்பது தொடர்பில், தகவல்துறை அமைச்சகத்தின் நாதம் ஊடகசேவையூடாக, அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சர் திரு.தணிகாசலம் தயாபரன் அவர்கள் வழங்கிய கருத்துரையை இங்கு இணைத்துள்ளோம். இதனை காணொளியாக இணைத்துள்ளோம். My link உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து எமது விடுதலையை வெல்வோம் ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சர் தென்சூடான் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுடனும் இணைந்து, தமிழீத்தை வேண்டி நிற்கும் எமது போராட்டத்தை சர்வதேசமெங்கும் பறையறைந்து சொல்லுவோம் என, நாடுக…
-
- 2 replies
- 1.8k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டம் தீவிர ஆயுத போராட்டமாக பரவிய அதே ஆண்டுதான் (1983) சூடான் நாட்டின் தென்பகுதியில் உள்ள கிறிஸ்தவப் பெரும்பான்மை மக்கள் அந்நாட்டின் இஸ்லாமிய அரசுக்கு எதிராக ஆயுதப்போராட்டத்தில் இறங்கினார்கள். சூடான் அரசு தம்மை இஸ்லாமிய மேலாதிக்கத்துக்கும் இஸ்லாமிய சட்டங்களுக்கும் உட்படுத்தி நசுக்கப் பார்க்கிறது என்பதே தென் சூடான் போராட்டக் குழுக்களின் நிலைப்பாடாக இருந்தது. இதில் உண்மை இருக்கின்றது ஆனால் இந்த உண்மையினை பெரிதாக்கி தமது நலன்களை அதற்குள் புகுத்தி தம் நலனை அடைய சர்வதேசம் முயற்சித்தது என்பதும் பேருண்மையானது. இது ஈழத்தமிழர் பிரச்சினையில் தலையிட்டு இந்தியா எவ்வாறு தமது நலன்களை பெற முயற்சித்ததோ அதே போல சூடானிலும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் தமது…
-
- 3 replies
- 1.4k views
-