ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
யாழில் 4 கொலைகள 3 பாலியல் வல்லுறவுகள மூன்று கடத்தல்கள் ஒருவர் மட்டுமே கைது 09 ஜனவரி 2011 காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிலைகொள்ளச் செய்யப்பட்டுள்ளனர். யாழில் 4 கொலைகள 3 பாலியல் வல்லுறவுகள மூன்று கடத்தல்கள் ஒருவர் மட்டுமே கைது யாழ்பாணத்தில் கடந்த மாதத்தில் நான்கு கொலைகள், மூன்று பாலியல் வல்லுறவுகள், மூன்று கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் இதுவரை ஒருவர் மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்தினர் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிலைகொள்ளச் செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மக்கள் இரவு 7 மணிக்குப் பின்…
-
- 0 replies
- 597 views
-
-
வடக்கு கிழக்கில் தோட்டம் செய்யப் போகும் இராணுவம்! ஞாயிற்றுக்கிழமை, 09 ஜனவரி 2011 00:32 வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் இலங்கை அரசாங்கம் தனது இராணுவத்தை 40 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் இராணுவம் இந்த நடவடிக்கையில் இறங்கவுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 19786 ஏக்கரில் தானியங்களும், 7231 ஏக்கரில் நிலக்கடலையும், 4709 ஏக்கரில் வெங்காயமும், 4329 ஏக்கரில் மிளகாயும், 4729 ஏக்கரில் கௌபீயும், இராணுவத்தால் பயிரிடப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். இது தவிர விவசாயிகளிடமிருந்து உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறிகளை நேரடியாகக் கொள்வனவு செய்து அவற்றை கு…
-
- 0 replies
- 783 views
-
-
ராஜபக்ஸக்களின் பெயரில் மோசடி! சனி, 08 ஜனவரி 2011 23:52 நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ஸ மற்றும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ஆகியோரின் பெயர்களைப் பயன்படுத்தி சுமார் 60 லட்சம் ரூபா மோசடி புரிந்த ஒரு நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். நாவலப்பிட்டி பிரதேசத்தில் தன்னை ஒரு இராணுவ அதிகாரிபோல் காட்டி அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியே இவர் பலரிடமிருந்து பணம் பெற்றுள்ளார். இந்த நபர் 140க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளிடமிருந்து பணத்தைப் பெற்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது. இவர் கைது செய்யப்பட்டபோது நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து இவரால் ஏமாற்றப்பட்டவர்களின் பெயர் விவரங்களும் இவரிடம் இருந்துள்ளது. அத்தோடு ப…
-
- 0 replies
- 643 views
-
-
எதிர்க்கட்சியினரும் பல நிறுவனங்கள், மற்றும் புலிகளின் அனுதாபிகளும் தன்னை மின்சாரக் கதிரையில் ஏற்ற முயற்சிசெய்கின்றனராம்: மகிந்த ராஜபக்ச . [saturday, 2011-01-08 04:07:20] போர்க் குற்றங்களுக்காக தன்னை மின்சாரக் கதிரைக்குக் கொண்டு செல்வதற்கு எதிர்க்கட்சியினரும், உதவி நிறுவனங்களும், வெளிநாட்டு சக்திகளும், புலிகளின் அனுதாபிகளும் முயற்சி செய்வதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடுவெலவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சில சக்திகள் எனக்கும் பிரதம நீதியரசருக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த முனைகின்றன. நவம்பர் 19ம் திகதி நடந்த பதவியேற்பு நிகழ்வுக்குப் பின்னர் பிரதம நீதியரசரை நான் சந்திக்கவேயில்லை. அப்ப…
-
- 2 replies
- 1.5k views
-
-
http://meenakam.com/ 09.01.1997 நடுநிசியைத் தாண்டிய அதிகாலை வேளை. ஆனையிரவு, பரந்தன் கூட்டுப்படைத் தளத்தினூடாக புலிகளின் அணிகள் நகர்ந்து கொண்டிருந்தன. அந்தத் தளத்தின் அமைவிடம் வலிந்த ஒரு தாக்குதலுக்குச் சாதகமற்ற பௌதீகச் சூழலைக் கொண்டிருந்தது. தரவைகள், உப்பு வெளிகள், சிறிய சிறிய உவர்நீர் நிலைகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது அந்தச் சூழல், எனினும், முகாமின் முக்கியத்துவத்தை உணர்ந்த போராளிகள் அனைவரும் கண்களில் ஒரு வெறியுடனும், எங்கள் மண்ணை ஆக்கிரமித்தவனை அழிக்கவேண்டுமென்ற மனவுறுதியுடனும் நீரற்ற அந்த உப்பு வெளிகளினூடக ஊர்ந்து கொண்டிருந்தனர்.அது ஒரு நீண்ட நகர்வு. விடுதலைப் புலிகளின் போரியல் வரலயாற்றிலேயே ஒரு வலிந்த தாக்குதலுக்காகச் சண்டையை எதிர்பார்த்து எமது படையணிகள் நகர்ந…
-
- 0 replies
- 646 views
-
-
நாடு கடந்த தமிழ் உறவுகளுக்கு தனி அமைச்சம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம், அக்கசியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய சீமான், இதுவரை 5 முறை பேசியதற்காக சிறைபடுத்தப்பட்டுள்ளேன். அதில் இரண்டு முறை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தேன். சிறைக்கு அனுப்ப குறிப்பிடும்போது, தேச துரோகி சீமான் என்றுதான் எழுதியிருந்தார்கள். முதல் முறை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பிரபாகரனை அண்ணன் என்று சொன்னதற்காக அனுப்பப்பட்டேன். இரண்டாவது முறையாக மீனவனை அடித்தால் மாணவனை அடிப்பேன் என்று சொன்னததற்காக சிறைப்படுத்தப்பட்டேன். இது தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று …
-
- 0 replies
- 891 views
-
-
Saturday, January 8th, 2011 | Posted by admin புலம்பெயர் தமிழ் மக்களே வடக்கில் படுகொலைகளை மேற்கொள்கின்றனராம் கேகலியா கூறுகிறார் வடபகுதியின் முழு பிரதேசமும் இராணுவத்தினரின் பூரண கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் புலம்பெயர் தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்களே அங்கு வன்முறைகளை தூண்டி படுகொலைகளை மேற்கொள்கின்றனர் என சிறீலங்கா அரசின் ஊடகத்துறை அமைச்சர் கேகலியா ரம்புக்வெல தெரிவித்துள்ளார். நேற்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: வடக்கு கிழக்கில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. அதற்கு சில குழுவினரே காரணம். அவர்கள் திட்டமிட்டு இதனை மேற்கொண்டுவருகின்றனர். ஜெனீவாவில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை அதிகரிப்பதற்காக ஒவ்வொரு வருடம…
-
- 2 replies
- 1.2k views
-
-
உயிர் அச்சுறுத்தலினால் குடும்பங்களுடன் இடம்பெயரும் யாழ் மக்கள்... சனிக்கிழமை, 08 ஜனவரி 2011 01:50 யாழ் மாவட்ட மக்கள் பலர் குடும்பங்களுடன் இடம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்காக கொழும்பிற்கு புறப்படத் தொடங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன போர் முடிவடைந்த பின் சில மாதங்கள் அமைதியாக இருந்த ஈழ மண் மீண்டும் இரத்தக்கறை படிய ஆரம்பித்துள்ளது. புலிகளின் ஆதரவாளர்களையும் முன்னாள் புலிகளையும் இராணுவத்தினரும் இராணுவ புலனாய்வாளர்களும் சுட்டுக்கொல்லும் சம்பவங்கள் கடந்த சில வாரங்களாக அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் இறுதி யுத்தம் வரை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசித்து வந்து தற்போது யாழில் தமது கிராமங்க…
-
- 1 reply
- 667 views
-
-
நுவரெலியா மாவட்டத்தில் 2008ம் ஆண்டை விட 2009ஆண்டு 9966 பேர் வாக்காளர் அதிகரிப்பு:- மலையக மக்கள் முன்னணி உள்ளுராட்சி தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது தொடர்பாக எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தின் 2009 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பிற்கேற்ப 4 இலட்சத்து 67 ஆயிரத்து 103 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். 2008 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்ட வாக்காளர் இடாப்பில் 4 இலட்சத்து 57 ஆயிரத்து 137 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர். இதற்கேற்ப 2008 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பை விட 2009 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் நுவரெலியா மாவட்டத்தில் 9966 பேர் புதிய வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் 2009 ஆ…
-
- 0 replies
- 681 views
-
-
Saturday, January 8th, 2011 | Posted by admin தனது பரிவாரங்களுடன் அவுஸ்திரேலியா செல்ல தயராகும் மஹிந்த : தமிழர்கள் என்ன செய்ய போகிறார்கள்? பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் ஒன்றுகூடல் ஒன்று அவுஸ்திரேலியாவின் பேர்த் மாநிலத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. நேற்றைய தினம் பேர்த் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்ட அந்நாட்டின் பிரதமர் ஜூலியா கிலாட் உலக தலைவர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டுத்திடலை பார்வையிட்டார். ஒக்ரோபர் மாதத்தில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில், 53 நாடுகளை சேர்ந்த உலக தலைவர்கள் வருகைதரவிருப்பதால் அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் தங்குமிட ஏற்பாடுகளை மேற்கொள்வதில் அவுஸ்திரேலியா கூடிய கவனம் எடுக்கவுள்ளது. சிறிலங்கா அரசும் தனது வெளிநாட்டு…
-
- 0 replies
- 969 views
-
-
அன்பான புலம்பெயர் மக்களே எல்லாவற்றையும் செய்யுங்கள்...ஆனால் இதையும் படியுங்கள்! - பாகம் 2 எம் அன்பிற்குரிய மக்களே, எனது இரண்டாவது மடல் இது. போராளிகள் வெளிநாட்டில் உள்ள செயற்பாட்டாளர்கள் ,மக்கள் என பலர் எனக்குக் கடிதங்கள் அனுப்புகின்றார்கள். அதில் உங்கள் பிரச்சினைகளை நீங்களே தீர்த்துக்கொள்ளுங்கள், ஏன் இப்படி எழுதுகின்றீர்கள் எனக் கேட்கின்றனர். நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்லட்டுமா? இது எனது பிரச்சினை அல்ல மக்களே உங்கள் பிரச்சினை, உங்கள் நாட்டின் பிரச்சினை, நீங்கள்தான் நிதி கொடுக்கின்றீர்கள், நீங்கள்தான் எம் தலைவர் மீதும், இயக்கத்தின் மீதும் ஒட்டுமொத்தக் கேள்விகளைக் கேட்கின்றீர்கள். உங்கள் மத்தியில், உங்களுக்கு அருகில், உங்களுக்குத் தெரிந்தவர்கள் தவறு செய்யும…
-
- 28 replies
- 4k views
-
-
சனிக்கிழமை , ஜனவரி 8, 2011 இலங்கையின் தேசிய கீதம் வடகிழக்கில் தமிழில்தான் பாடவேண்டும் என பிள்ளையான் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஒளிவிழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போது பிள்ளையானால் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வடகிழக்கின் நிர்வாக மொழியாக தமிழ் மொழியுள்ளதுடன் இலங்கையின் தேசிய மொழி ஒன்றாகவும் தமிழ் உள்ளது. ஒரு நாட்டின் தேசியக்கொடி போன்று தேசிய கீதமும் அந்த நாட்டில் உள்ள அனைத்து இனத்தவருக்கும் சொந்தமானது. இதனை மொழியின் பெயரால் பிளவு படுத்துவது பல் மொழி பேசுவோர் உள்ள நாட்டுக்கு சாத்தியப்படாது. எனவே தேசிய கீதம் எந்த மொழியில் பாடவேண்டும் என்பதற்கு அப்பால் …
-
- 0 replies
- 1.2k views
-
-
நெடுந்தீவில் புத்த பெருமான் 2011-01-07 21:17:19 முதற் தடவையாக நெடுந்தீவில் புத்தர் பெருமானின் உருவச்சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டது. நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற சிலைத் திறப்பு விழாவில் நெடுந்தீவில் உள்ள குருமார்கள், அரச அதிகாரிகள், கடற்படையினர் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டதாக தெரியவருகின்றது. சிலைத் திறப்புக்கு முன்பாக பெளத்த குருமாரால் பிரித் ஓதப்பட்டு தானம் வழங்கப்பட்டுள்ளது. http://newjaffna.com/
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை மீனவர்கள் 10 பேர் இந்தியாவில் கைது! [ பிரசுரித்த திகதி : 2011-01-08 07:33:20 AM GMT ] இந்திய கடலோர பாதுகாப்பு பிரிவினரின் ஹெலிகொப்டர் கடந்த 3ம் திகதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து 2 படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 10 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அதனைத் தொடர்ந்து, சாராங் என்ற கடலோர பாதுகாப்பு பிரிவு கப்பலில் அதிகாரிகள் சென்று, 2 இலங்கை படகுகளையும் சுற்றி வளைத்து, அதில் இருந்த இலங்கை மீனவர்கள் 10 பேரை கைது செய்தனர். மேலும், படகில் இருந்த 1,000 கிலோ மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்த…
-
- 0 replies
- 597 views
-
-
புலிகள் விசேடமாக வடிவமைத்த துப்பாக்கியை காவற்துறையினர் கைப்பற்றி உள்ளனர்! [ பிரசுரித்த திகதி : 2011-01-08 07:40:36 AM GMT ] யுத்த காலத்தில் புலிகளால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ரி 56 ரக துப்பாக்கியொன்றை தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த தபால் ஊழியர் ஒருவர் தெவிநுவர பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பயண பொதியொன்றில் மறைத்து இந்த துப்பாக்கி வைக்கப்பட்டிருந்தாகவும் துப்பாக்கியுடன் 48தோட்டங்களையும் தாம் மீட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் துப்பாக்கியை தென் பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு பயன்படுத்தும் நோக்கில் தலா இரண்டு லட்சம் ரூபா வாடகைக்கு கொடுத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. …
-
- 0 replies
- 1.4k views
-
-
சயன்ஸ் ஹோலில் ஏற்பட்ட தீ விபத்தில 5 இலட்சம் நட்டம் - இயக்குனர் தெரிவிப்பு 2011-01-08 00:04:21 [views = 120]யாழ் கன்னாதிட்டி வீதியிலுள்ள சயன்ஸ் ஹோல் தனியார் கல்வி நிறுவனத்துக்கு நேற்று வியாழக்கிழமை இரவு விஷமிகள் சிலர் தீயிட்டதால் 5 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக நிறுவன இயக்குனர் அருட்செல்வன் தெரிவித்தார். சுமார் 300 பேர் வரையில் இருந்து கல்வி கற்கக்கூடிய இரண்டு வகுப்பறைகள் தீயினால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த அவர், இந்த நாசச் செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்று இதுவரை கண்டறியப்படவில்லை என்று கூறினார். “24 வருடங்களாக இயங்கிவந்த எமது நிறுவனம் இதுபோன்றதொரு சம்பவத்தை எப்போதுமே எதிர்கொள்ளவில்லை” என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார். சம்பவத்தை நேரில…
-
- 0 replies
- 681 views
-
-
யாழ். குற்றச்செயல்களின் பின்னணியில் என்ன? சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விளக்கம் வீரகேசரி இணையம் 1/8/2011 10:03:24 AM யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற களவுகள் கொலைகள் உட்பட பல்வேறு குற்றச்செயல்களின் பின்னணியில் தனிப்பட்ட காரணங்களே காணப்படுவதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் நடைபெறும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவது சம்பந்தமாக மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வர்த்தக கழகப் பிரதிநிதிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் உரையாற்றிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவா “யாழ்ப்…
-
- 0 replies
- 658 views
-
-
இலங்கை-இந்திய கப்பல் சேவை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-08 08:30:18| யாழ்ப்பாணம்] இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பமாகவுள்ளதாகவும், இது தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இரு நாடுகளுக்கும் இடையில் அலரி மாளிகையில் நேற்று கைச்சாத்திடப்பட்டதாகவும் துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் தெரிவித்தார். கொழும்பு துறைமுகத்துக்கும் தூத்துக்குடி துறைமுகத்துக்கும் இடையில் மூன்று கப்பல்களை இலங்கைக் கப்பல் கூட்டுத்தாபனம் சேவையில் ஈடுபடுத்தும். இந்தியாவும் இவ்வாறு மூன்று கப்பல்களை சேவையில் ஈடுபடுத்தும். வாரத்தில் மூன்று நாட்கள் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஆறு கப்பல்கள் பயணம் செய்யும் என அமைச்சர் தெரிவித…
-
- 0 replies
- 532 views
-
-
புலிகளின் முன்னாள் போராளிகளுக்குப் புனர்வாழ்வு முகாம்களில் சித்திரவதை உலக சோசலிச இணையத்தளம் தகவல் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-08 08:48:27| யாழ்ப்பாணம்] படைத்தரப்பின் புனர்வாழ்வு முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் தடுப்பு முகாம்களில் தாம் எதிர்கொண்ட ஒடுக்குமுறைகள் மற்றும் துன்புறுத்தல்கள் குறித்து உலக சோசலிச இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ளனர். 2009ஆம் ஆண்டு மே மாதம் வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது படைத்தரப்பினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு அரசாங்கத்தால் நடத்தப்பட்ட தடுப்பு முகாம்களில் புனர்வாழ்வு வழங்கப்பட்டு வருகின்றது. இவர்கள் குறித்த பெயர் விபரங்களை வெளியிடுமாறு சர்வதே…
-
- 0 replies
- 473 views
-
-
தமிழர்களை கனடாவுக்கு அழைத்துச் சென்ற கப்பல் பணியாளர்களின் 4 பேர் விடுதலைப்புலிகள்- கனேடிய தூதரகம் இவர்கள் விடுதலைப்புலிகளுடன் இணைந்து பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டனரா.?? 492 தமிழர்களை கனடாவுக்கு அழைத்துச் சென்ற கப்பல் பணியாளர்களின் 4 பேர் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கனேடிய தூதுரகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குடிவரவு குடியகல்வு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்களிடம் கனேடிய புலனாய்வுதுறையினர் விரிவான விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன. இவர்கள் விடுதலைப்புலிகளுடன் இணைந்து பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டனரா என்பதை அறிய கனடாவின் குடியேற்றம் மற்றும் அகதிகள் தொடர்பா…
-
- 0 replies
- 553 views
-
-
Friday, January 7th, 2011 | Posted by admin இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் களைந்திட உடனடி நடவடிக்கை: தமிழக அரசு வலியுறுத்தல் தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவும், இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் களைந்திடவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று ஆளுநர் பர்னாலா வலியுறுத்தியுள்ளார். சிந்திய கண்ணீரும், செத்து மடிந்த உயிர்களும் போதாது என்று இன்னமும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் முள்வேலி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதற்கு ஆளுநர் கவலை தெரிவித்தார். முகாம்களிலிருந்து சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்ட தமிழர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் முழுமை அடையாமல் இருப்பதும்; நீண்ட காலமாகப் பேசப்பட்டு வரும் அரசியல் தீர்வுக்கான ஆரம்பகட…
-
- 5 replies
- 1.3k views
-
-
இலங்கையில் தற்போது பன்றிக் காய்ச்சல் நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்வோருக்கு தமிழக அரசு எச்சரித்துள்ளது. இலங்கைப் பயணம் செய்பவர்கள் பன்றிக் காய்ச்சல் நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தமிழக அரசு சில அறிவுரைகளை வழங்கி இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: பயணிகளுக்கு காய்ச்சல், இருமல், தும்மல், தொண்டைப்புண் உள்ளிட்ட பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் இலங்கை பயணத்தை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும். பயணத்தின்போது பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஏஎச்1என்1 நோய்க்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இலங்கையில் பயணம்செய்யும்போது பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகளினால் பாதிக்கப்பட்டால் …
-
- 1 reply
- 1.4k views
-
-
பட்டம் விடுவோம், பட்டம் விடுவோம் பாலா ஓடிவா.... பாடிப் பாடி பட்டம் விடுவோம் பாலா ஓடிவா" அம்மா சல்லிமுட்டில சேமிக்கிற காசை களவா எடுத்து நூலும் ரிசுவும் வாங்கி ரீயூசனக் கட்பண்ணி தரவைக்க பட்டம் விட்டு பிறகு அம்மாட்டையும் ரீயூசன் வாத்திடையும் வாங்கிக் கட்டுறது எல்லாருக்கும் நினைவிருக்கும் பாருங்கோ.. திருப்பி றிவைன் பண்ணுங்கோ உங்கட மனசை.... வடமராட்சி, மற்றும் பல இடங்களில் தற்போது கொடி கட்டிப் பறக்கும் பட்டங்கள் தங்களின் பார்வைக்கு காணொளியாக THX http://www.newjaffna.com/
-
- 1 reply
- 1.8k views
-
-
யாழ் குடாநாட்டு சம்பவங்களின் பின்னணி என்ன? - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் விளக்க அறிக்கை யாழ் குடாநாட்டில் மீண்டும் தீவிரமாகியுள்ள கொலைகள், கடத்தல்கள் தொடர்பாக கடந்த காலங்களில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இடம்பெற்ற கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும், காணாமல்போயுமுள்ளனர். அவ்வாறான நிகழ்வுகளால் தமிழ் மக்கள் மரண பயத்தில் உறைந்து போயுள்ளனர். அதிலிருந்து மக்கள் இன்னமும் மீளவில்லை. இந்நிலையில் யாழ் குடாநாட்டில் மீண்டும் தீவிரமடைந்துள்ள கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் குடாநாட்டு மக்கள் தொடர்ந்தும் மரண பயத்துடனேயே வாழ் வேண்டிய நிலைக்குள் தள்ளியுள்ளது. • கடந்த 11-12-2010 அன்று மாலை 6.00 மணியளவில் யாழ் சங்கான…
-
- 3 replies
- 1.1k views
-
-
"இலங்கையர்" ஆகுதல் பற்றிய மகிந்த சிந்தனை, குண்டு வெடிப்பைத்தான் இலங்கையில் திணிக்கின்றது பெருப்பிக்கசிறுப்பிக்க "இலங்கையராதல்" என்று, மகிந்தா எதைக் கருதுகின்றார். 1.நாம் அனைவரும் சிங்களவராதல் 2.மகிந்த குடும்பம் நாட்டை ஆளுதல் இதுவல்லாத எதையும், மகிந்தாவின் பாசிச சிந்தனை இன்று முன்வைக்கவுமில்லை, கோரவுமில்லை. ஆம் இதைத்தான் வடக்கின் "வசந்தமும்" கிழக்கில் "விடியலும்" திணிக்கின்றது. இதை வன்முறை மூலம், அடக்கி ஒடுக்கி உருவாக்கும் நடைமுறையும், அது சார்ந்த சிந்தனையும் தான் இன்று நாடு முழுக்க கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இந்த மகிந்த சிந்தனை தான், இன்று நாம் இலங்கையராக மாறத் தடையாக உள்ளது. தானும் தன் குடும்பமும் நாட்டைச் சுரண்டி ஆள நினைக்கும் சர்வா…
-
- 46 replies
- 5.2k views
-