ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
கோட்டாவை கண்காணிக்கும் மஹிந்தர்! திங்கட்கிழமை, 13 டிசம்பர் 2010 18:10 Share 0 பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கைகளை கண்காணிக்க அரசுத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இன்று நியமிக்கப்பட்டு உள்ளார்கள். துமிந்தா சில்வா, உதித்த லொக்குபண்டார ஆகியோரே இந்நாடாளுமன்ற உறுப்பினர்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்நியமனத்தை வழங்கி உள்ளார். tamilcnn.com
-
- 2 replies
- 1.4k views
-
-
சிங்கள பிரதேசத்தில் பிரபாகரனின் தகப்பன் கட்டிய இந்துக் கோவில்! சாட்சியத்தில் சுட்டிக் காட்டுகின்றார் கருணா செவ்வாய், 14 டிசம்பர் 2010 01:28 "தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் தந்தை கொழும்பின் புறநகர்ப் பகுதியான பாணந்துறைப் பிரதேசத்தில் இந்துக் கோவில் ஒன்றை கட்டி இருக்கின்றார். அக்கோவில் இன்றும் உள்ளது. அதைச் சிங்களவர்கள் இடித்து விடவில்லை. இந்நாட்டில் ஆரும், எந்த இடத்திலும் வழிபாட்டுத் தலங்கள், வாழிடங்கள் போன்றவற்றை அமைக்க முடியும். " தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் இன்று கொழும்பில் சாட்சியம் வழங்கியபோது மேற்கண்டவாறு தெரிவித்தார் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டு. மாவட்ட முன்னாள் இராணுவ தளபதியும், மஹிந்த அரசின் இந்நாள் மீள…
-
- 2 replies
- 1.8k views
-
-
மகிந்தவின் அரசுக்கு மீண்டும் ஓர் தோல்வி திங்கட்கிழமை, 13 டிசம்பர் 2010 15:07 குருநாகல் மாட்டத்தில் ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டிலிருந்த மற்றுமொரு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குருணாகல், மஹாவ பொல்பித்திகம பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டமே இவ்வாறு தோற்கடிக்கப்பட்டுள்ளது. பிரதேச சபையின் தலைவர் சுய விருப்பின் அடிப்படையில் செயலாற்றி வருவதாகத் தெரிவித்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். வரவு செலவுத் திட்ட யோசனை சமர்ப்பிக்கப்பட்ட போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் எதிர்க்கட்சியுடன் இணைந்து வாக்களித்துள்ளனர். ஆளும் கட்சிக்கு ஆதரவாக மூன்று வாக்குகளும், எதிராக பன்னிரெண்டு வாக்…
-
- 0 replies
- 1.3k views
-
-
போர் குற்றவாளியை அரவணைத்து புலம்பெயர் மக்களை கண்டித்த யாழ் அரச அதிபர்! [ பிரசுரித்த திகதி : 2010-12-13 11:17:32 AM GMT ] கடந்தகாலங்களில் தமிழ்மக்களின் துன்பியல் உண்மை நிலைமைகளை தட்டிகேட்டுவந்த முன்னால் முல்லைத்தீவு அரச அதிபரும் தற்ப்போது யாழ் அரச அதிபருமான இமெல்ட சுகுமார் .முரணான கருத்க்க்களையும் உண்மைக்கு முரணான பல தகவல்களை வெளியிட்டு வருகின்றமை வழமையான ஒன்று. இதன் அடுத்தகட்டமாக லண்டனில் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பில் தனது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து தனது அரச விசுவாசத்தை காட்ட முனைகிறார் . அதன் ஒரு கட்டமாக அரச ஆதரவுத் தொலைக்காட்சியான டான் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி ஒன்றில் வெளிநாட்டில் உள்ள புலம்பெயர் தமிழர்கள்…
-
- 2 replies
- 1.5k views
-
-
நாம் தமிழர் இயக்க தலைவர் டைரக்டர் சீமான் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வடக்கு கடற்கரை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த நிபந்தனைபடி இன்று காலை வடக்கு கடற்கரை போலீஸ் நிலையம் சென்று கையெழுத்திட்டார். அங்கு சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:- 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கூட்டுக்குழு விசாரணை வைக்க வேண்டும். இனி இதைவிட பெரிய ஊழல் வந்தால்தான் ஸ்பெக்ட்ரம் விவகாரம் மறையும். சிங்கள கடற்படையினர் தமிழக மீனவர்களை மீண்டும் தாக்குகிறார்கள். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். நாங்களாக யாருடனும் கூட்டணிக்கு தூது போகமாட்டோ…
-
- 2 replies
- 860 views
-
-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வேலூர் சிறையிலிருந்து விடுதலையாகி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, இதை தொடர்ந்து சீமான் அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார்
-
- 8 replies
- 1.5k views
-
-
தமிழர்கள் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லவென அரசாங்கம் செய்தி விடுக்கிறதா? மனோ கணேசன் கேள்வி தேசிய கீதம் தமிழ் மொழியிலும் பாடப்படுவது பெருமைக்குரிய ஒரு விடயம் என்பது அரசாங்கத்திற்கு புரியவில்லையா? அல்லது நீங்கள் இந்நாட்டை சேர்ந்தவர்கள் அல்லவென தமிழ் மக்களுக்கு அரசாங்கம் செய்தி விடுக்கின்றதா? என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவது தடைசெய்யப்படுவது தொடர்பில் எழுந்துள்ள தேவையற்ற சர்ச்சைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவதற்கு எதிராக அமைச்சரவையில் நடைபெற்ற கருத்து பரிமாற்றம் தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள அறிக்கை…
-
- 2 replies
- 454 views
-
-
இலங்கையில் தமிழர்கள் என்ற உரிமையுடனும் உணர்வுடனும் எவரும் வாழ முடியாது என்பதை சிங்கள இனவெறி அரசு தொடர்ந்து உலகுக்கு நிருபித்து வந்துள்ளது.அதன் ஒரு பகுதி தான் இலங்கையின் தேசிய கீதத்தைத் தமிழில் பாட விதிக்கப்பட்டுள்ள தடையாகும். இதுவரை தமிழர்களின் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள இலங்கை அரசு நிகழ்ச்சிகளிலும், அலுவலகங்களிலும் சிங்கள அரசின் தேசிய கீதம் தமிழில் பாடப்படும். இந்த தேசிய கீதம் தமிழர்களின் அடிமை கீதம் என்பதால் தமிழர்கள் விரும்பவில்லை.ஆனாலும்,தமிழர்களை சம மரியாதையுடன் நடத்துவதாக உலகுக்கு பொய்த்தோற்றம் காட்ட சிங்கள அரசு இதுகாறும் இதனைச் செய்து வந்தது. ஆனால் இந்த பொய்த் தோற்றத்தைக் கூட ரத்து செய்யும் மமதை நிலைக்கு ராஜபக்ஷே தற்பொழுது வந்…
-
- 0 replies
- 729 views
-
-
மஹிந்த மனைவி பங்குபற்றவிருந்த நிகழ்வை புறக்கணித்த யாழ் மக்கள் திங்கட்கிழமை, 13 டிசம்பர் 2010 09:48 யாழில் மகிந்த ராஜபக்ஷ மனைவி சிரந்தி ராஜபக்ஷ நடத்தவிருந்த நத்தார் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்கு, யாழ்ப்பாண மாவட்ட கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ பாதிரியார்களும் அக்கறை காட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் புனித மெதடிஸ்த தேவாலயத்தில் கடந்த சனிக்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக சிரந்தி ராஜபக்ஷ கலந்துக் கொள்ளவிருந்த போதும், இறுதி நேரத்தில் அவர் சமுகமளிக்கவில்லை, எவ்வாறாயினும், தென்னிலங்கையில் இருந்து பௌத்த துறவிகளும், முஸ்லிம் மத தலைவர்கள் சிலரும் இராணுவத்தினரால் இங்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். சிரந்தி ராஜபக்ஷ இந்த நிகழ்வுக்கு…
-
- 1 reply
- 368 views
-
-
மன்னாரில் 200 பவுண் தங்கம் - ரூ. 3 லட்சம் இன்று காலை கொள்ளை _ வீரகேசரி இணையம் 12/13/2010 5:06:44 PM மன்னார் பிரதேசச்செயலகத்தில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரின் வீட்டில் இன்று காலை 8.30 மணியளவில் பாரிய கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். மன்னார் மூர்வீதியில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று காலை புகுந்துள்ள திருடர்கள் 200 பவுண் தங்க நகைகளையும் 3 லட்சத்து 27 ஆயிரம் ரூபா பணத்தையும் திருடிச்சென்றுள்ளனர். வீட்டில் யாரும் இல்லாதவேளை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கிறார். இது தொடர்பான விசாரணைகளை மன்னார் மாவட்ட பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சம்பவத்தின் பின்னர் பொதுமக்கள் மத்தியில் பதற்றம் நிலவுவத…
-
- 0 replies
- 615 views
-
-
இலங்கை நோக்கி விரையும் ஈரானிய கடற்படை! [ பிரசுரித்த திகதி : 2010-12-13 10:20:06 AM GMT ] ஈரானியக் கடற்படை தளபதி மற்றும் ஈரானிய கடற்படையின் உயரதிகாரிகள் கொண்ட குழுவினர் அந்நாட்டின் பாரிய நாசகாரிக் கப்பலுடன் இலங்கை வந்துள்ளனர். இலங்கைக் கடற்படையின் 60 ஆவது ஆண்டு நிறைவு வைபவத்தில் கலந்து கொள்ளும் வகையிலேயே இந்த விஜயம் அமைந்துள்ளது. இலங்கை வந்துள்ள ஈரானிய கடற்படைத் தளபதி மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் இலங்கைக் கடற்படை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்தியக் கடல் எல்லைப் பாதுகாப்பு மற்றும் இலங்கையின் பாதுகாப்புத் தொடர்பில் இவர்கள் ஆராயந்து வருகின்றனர். இதேவேளை,இலங்கைக் கடற்படையின் 60 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொள்ளும் வகையில் 26 நாட…
-
- 0 replies
- 903 views
-
-
நம் தாயகக் கனவின் கிழக்கு – நாம்தொடுக்கும் போர்க்குற்ற வழக்கு! போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வழக்கிடுவோம், போராடுவோம் தமிழர்களே! – பேராசிரியர் தீரன் ‘உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துத்தான் தீரவேண்டும். தப்பைச் செய்தவன் தண்டனை பெற்றுத்தான் தீரவேண்டும்’ என்;று தமிழில் ஒரு முதுமொழியுண்டு. மே, 2009- நான்காம் கட்ட ஈழப்போரில் பல்லாயிரக் கணக்கான போராளிகளும், சுமார் 40,000க்கு மேற்பட்ட ஈழத்தமிழ் மக்களும் இனப்படுகொலை செய்யப்பட காரணமான இலங்கைத்தீவின் அதிபர் மகிந்த இராஜபக்சே, பாதுகாப்புத் துறை செயலாளர் கோத்தபய இராஜபக்சே, இராணுவத் தலைமைத் தளபதி பொன்சேகா உள்ளிட்ட தமிழர்களை இனஅழிப்பு செய்தவர்களும், அதற்குத் துணைபோனவர்களும் இன்றைக்குச் சர்வதேசச் சட்டங்களின் முன்னால் போர்க்குற்றவ…
-
- 0 replies
- 572 views
-
-
தமிழீழ கீதமே ஈழத்தின் தேசிய கீதம் – நாம் தமிழர் கட்சி சீமான் அறிக்கை * Monday, December 13, 2010, 12:59 சிங்களத்தில் மட்டுமே இனி இலங்கையின் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டுமென்ற இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை அடுத்து நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது… இலங்கையில் தமிழர்கள் என்ற உரிமையுடனும் உணர்வுடனும் எவரும் வாழ முடியாது என்பதை சிங்கள இனவெறி அரசு தொடர்ந்து உலகுக்கு நிருபித்து வந்துள்ளது.அதன் ஒரு பகுதி தான் இலங்கையின் தேசிய கீதத்தைத் தமிழில் பாட விதிக்கப்பட்டுள்ள தடையாகும்.இதுவரை தமிழர்களின் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள இலங்கை அரசு நிகழ்ச்சிகளிலும்,அலுவலகங்களிலும் சிங்கள அரசின் தேசிய கீ…
-
- 0 replies
- 442 views
-
-
தமிழினத் தலைவர்களுக்குத் தலைவணக்க வேண்டுகோள் ஒன்று சேர்வீர் ஈழ உரிமையில் உறுதிமிக்க உணர்வாளர்களே வெண்றெடுக்க வழிதான் வேறுண்டோ? விளம்புவீரே! கொன்று குவிக்கின்றான் கொடியோன் நம் குருதி சோதரரை குமுறி அழுகின்றார் நம் குல மாதர்கள் மழலையர்கள்! தின்று கொழுத்த பன்றி போன்ற தீய செருக்கன் சிரித்து மகிழ்கின்றான்! தென்னாடு வடநாடு பயணம் என்று பன்முறை இங்கு வந்து களித்து செல்கின்றான் இறுமாப்புக் காங்கிரஸ் எத்தர்கள் இளித்து வரவேற்கின்றனர் அன்றொரு நாள் அரவணைத்து ஆதரித்த அருமைக்கலைஞர் அரசியல் இலாபம் கருதி அற்பமாய் ஆனார் அந்தோ! ஆனாலும், இன்றுவரை இனமானம் காக்கும் அடலேறு வை.கோ. எழுச்சியுடன் கர்ஜித்து சங்கநாதம் எழுப்புகின்றார். குன்றி உடல் நலம் குலைந்த…
-
- 0 replies
- 710 views
-
-
ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் ஊடகவியலாளர் மீது தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் – பா.அரியநேத்திரன் நாட்டில் சுமுகமான நிலை தோன்றியுள்ள இக்காலத்தில் மட்டக்களப்பில் தமிழ் ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியது அவசியமாகும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பகுதியில் ஊடகவியலாளர் மாணிக்கபோடி சசிக்குமார் (வயது 35) இனந்தெரியாத குழுவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்கப்பட்டார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே பா. அரியநேரத்திரன் இவ்வாறு குறிப்பிட்டார். “இத்தாக்குதலானது பொது…
-
- 0 replies
- 347 views
-
-
வவுனியாவில் தமிழரசுக்கட்சி இளைஞரணி அங்குராட்ப்பணம்! கடந்த காலப் போராட்டம் கடுமையாக விமர்சிப்பு!! Posted by admin On December 12th, 2010 at 10:11 pm / No Comments தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க தமிழரசுக் கட்சியினால் மட்டுமே முடியும் எனவே தமிழரசுக் கட்சியினை வலுப்படுத்துவதற்கான இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இன்று வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் இளைஞரணி அங்குராட்பண நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் இளைஞரணி அங்குராட்பண நிகழ்வுகள் வடக்கு கிழக்கில் தமிழசுக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமி…
-
- 4 replies
- 1k views
-
-
தாமதிக்கும் ஒவ்வேர் கணமும்........? [ ஞாயிற்றுக்கிழமை, 05 டிசெம்பர் 2010, 09:25.12 மு.ப | ஊடகப் பணிமனை ] எல்லோரும் எழுதுவோம்! சர்வதேச விசாரணை அமைய எழுதுவோம்! முள்ளிவாய்க்கால், தமிழர் மனங்களை இன்றும் நிறைத்து நிற்கும் வடு. அந்த பேரவலத்திற்கு இன்னும் பரிகாரம் தேடுகின்றனர் ஈழத்தமிழ் மக்கள். தனது கடமையில் இருந்து தவறிக ஐ.நா சபையும் அதன் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் தொடர்ந்து எழுந்த அழுத்தம் காரணமான ஈற்றில் ஓராண்டின் பின்பு, இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டன என்று சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழு ஒன்றை கடந்த யூன் மாதம் நியமித்தார். இந்தோனேசியாவைச் சேர்ந்த மர்சுகி …
-
- 1 reply
- 780 views
-
-
முள்ளிவாய்க்கால் படுகொலைகளை அடுத்து திக்கற்று விக்கித்து பேதலித்து தவித்து நின்ற தமிழினத்திற்கு நம்பிக்கை தரும் வண்ணம் காத்திரமான செயற்பாடுகளை முடுக்கிவிட்டு முள்ளிவாய்க்காலுக்கு பின்னான ஈழத்தமிழர்களின் அடுத்த கட்ட அரசியலுக்கு அத்திவாரம் இட்டவர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் கலாநிதி இமம்மானுவேல் அடிகளார். இன்றுவரை அவர் தலைமையிலான உலகத்தமிழர் பேரவை வெளிப்படையாகவும் திரைமறைவிலும் முன்னெடுத்துவரும் இராஜதந்திர நடவடிக்கைகள் ஈழத்தமிழர்களின் அடுத்த கட்ட அரசியலுக்கு புத்தெழுச்சி தருபவை. முன்பு பிரித்தானியாவில் பிரித்தானியாவின் மிக முக்கிய அரசியற்தலைவர்கள் மட்டுமின்றி வேறுபல அரசியல் இராஜதந்திரிகளையும் அழைத்துவந்து சிங்கள அரசு தமிழர்கள்மீது நடத்திய இனப்படுகொலையை உலகறியசசெய்த…
-
- 0 replies
- 683 views
-
-
திசைகளெங்கும் ஒலித்த எம் தேசக்குரல் பாலா அண்ணா… – டென்மார்க் தமிழர் பேரவை தமிழர்களின் வரலாறும், தமிழ் மக்களும் சிங்களப் பேரினவாதத்தினால் படிப்படியாக அழித்து ஒழிக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளைகளில், அதை எதிர்த்து நின்று போராடும் எம் தேசத் தலைவன் திரு. வே. பிரபாகரனுக்குப் பக்க பலமாக நின்று, தன்னையும் ஒரு கெரில்லாப் போராளியாக மாற்றித் தன் வாழ்நாளின் நீண்டகாலப் பகுதியை எம் தேசவிடுதலைக்காக அர்ப்பணித்து, எமது ஈழவிடுதலைப் பயணத்தின் நேர்மையை உலகின் திசைகளெங்கும் கொண்டு சென்று, ஈழமக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த பாலா அண்ணாவை எமது தேசியத் தலைவர் அவர்கள் ‘தேசத்தின் குரல்’ எனும் உயர் கௌரவப் பட்டத்தை வழங்கி, அகவணக்கம் செலுத்தி நான்கு ஆண்டுகள் நிறைவுபெறும் இத்தருணத்தில் தேசக் குரல…
-
- 0 replies
- 442 views
-
-
திங்கட்கிழமை, 13, டிசம்பர் 2010 (10:13 IST) ராஜபக்சே நடவடிக்கை: கலைஞர் கண்டனம் இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கீதம் ரத்து செய்த முடிவு ஈழத்தமிழர்கள் மனதை மேலும் புண்படுத்தும். இலங்கை அரசின் இந்த செயல் கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசிய கீதம் இனி சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படும் என்ற முடிவை அந்நாட்டு அமைச்சரவை எடுத்துள்ளது. இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் தமிழர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். எனவே இலங்கையில் சிங்களத்துடன் தமிழும் ஆட்சி மொழியாக உள்ளது. இதனால் அரசு நிகழ்ச்சிகளிலும் விழாக்களிலும் இலங்கை தேசிய கீதம் …
-
- 2 replies
- 604 views
-
-
இலங்கையின் தேசிய கீதத்தினை சிங்கள மொழியில் மட்டுமே பாடவேண்டும் என்று ஜனாதிபதியும் அமைச்சரவையும் மேற்கொண்டுள்ள தீர்மானத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது. தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த நிலங்கள் சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்ற நிலையிலும், சிங்கள பௌத்த மக்கள் இல்லாத தமிழ் மக்களின் பிரதேசங்களில் பௌத்த கோவில்களை கட்டி வருகின்ற நிலையிலும் தற்போது தேசிய கீதமும் தனிச் சிங்களத்தில் மட்டுமே பாடப்படல் வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. இது மீண்டும் 1956 ஆம் ஆண்டு காலக்கட்டங்களை போன்று தமிழ் மக்கள் மீது சிங்களத்தை திணிக்கும் செயலாகவே பாhக்கக் கூடியதாய் உள்ளது. அது மாத்திரமல்லாமல் இந்நடவடிக்…
-
- 0 replies
- 550 views
-
-
விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்த வெற்றியை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன – கோதபாய : 13 டிசம்பர் 2010 இலங்கையில் அமைதியான சூழ்நிலை காணப்படாவிட்டால் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் .. புலிகளுக்கெதிரான யுத்த வெற்றியை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன – கோதபாய : தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடற்படையின் 60 ஆண்டு பூர்த்தி விழாவில் உலகின் பல முக்கிய நாடுகள் பங்குபற்றியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் அமைதியான சூழ்நிலை காணப்படாவிட்டால் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒருபோதும் கடற்படை நிகழ்வுகளில் கலந்து கொண்டி…
-
- 0 replies
- 857 views
-
-
இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணிக்கு வடகிழக்கில் இருந்து 3 பேர் தெரிவு! திங்கட்கிழமை, 13 டிசம்பர் 2010 10:35 இலங்கையின் தேசிய கிரிக்கட் அணிக்கு வடக்கு, கிழக்கு பிரதேசத்திலிருந்து 3 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரும் பெரியகல்லாறு கடின பந்து விளையாட்டுக்கழகத்தின் பயற்றுவிப்பாளருமான மோசஸ் இதனைத் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் மட்டக்களப்பு, பெரியகல்லாறு கடின பந்து விளையாட்டுக்கழகத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு மற்றும் கல்லாறு பகுதியில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 27 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். …
-
- 0 replies
- 731 views
-
-
தமிழ் மக்கள் மீது காட்டுகின்ற வெறித்தனமே தனிச் சிங்கள தேசிய கீதம் - கனேடிய இணையத்தளம் கருத்து..! [ பிரசுரித்த திகதி : 2010-12-13 05:34:19 AM GMT ] இலங்கையின் தேசிய கீதம் தனிச் சிங்கள மொழியில் மாத்திரம் இசைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளமை, சிறுபான்மை மக்களான தமிழ் மக்கள் மீது காட்டுகின்ற பெரும்பான்மை அரசாங்கத்தின் வெறித்தனம் என கனேடிய இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. அத்துடன், ஜனநாயக இலங்கையில், பெரும்பான்மை மக்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே பிரித்தானியாவில் பல்வேறு அவமானங்களின் பின்னர், இலங்கை வந்து நடத்திய முதலாவது அமைச்சரவை மாநாட்டின்போது இந்த தீர்மானத்தை…
-
- 0 replies
- 350 views
-
-
இத்தாலியில் வைத்து இலங்கையர்களிடம் பண மோசடி செய்த நபர் கைது _ வீரகேசரி இணையம் 12/13/2010 10:08:30 AM இலங்கையர் 85 பேர் உட்பட மொத்தம் 540 பேரிடம் இத்தாலியில் வைத்து 32 கோடி ரூபாய் பண மோசடி செய்யப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை இத்தாலிய பொலிஸார் கைது செய்துள்ளனர். நத்தார் விடுமுறைக்காக இவர்கள் நாடு திரும்புவதற்கு விமானப் பயணச்சீட்டைப் பெற்ற போது அவை போலிப் பணம் என தெரியவந்துள்ளது. இதனைடுத்தே தாம் ஏமாற்றப் பட்டுள்ளதை அவர்கள் அறிந்துள்ளனர். ஒருவரிடமிருந்து தலா 8 இலச்சத்து 9000 ரூபா வீதம் அறவிடப் பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் இத்தாலியப் பொலிஸாரினால் கைது செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பங்களாதேஷ், இலங்கை மற்றும் சீனா ம…
-
- 0 replies
- 380 views
-