Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Oct 26, 2010 / பகுதி: செய்தி / தமிழ் வர்த்தகர் கடத்தல் - இரண்டு இராணுவத்தினரை தேடி வலைவீச்சாம் கொழும்பு செட்டியார் தெருவில் தமிழ் வர்த்தகர் ஒருவரை கடத்தி சென்று 50 மில்லியன் ஸ்ரீலங்கா ரூபாய் கப்பம் பெற்றமை தொடர்பிலான 5 ஸ்ரீலங்கா இராணுவத்தினருள் இரண்டு பேரை தேடி வருவதாக ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வுத்துறையின் தலைவர் டீ.ஆர்.எல்.ரனவக்க, சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை கப்பமாக வழங்கப்பட்ட 20 மில்லியன் ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஏற்கனவே மூன்று ஸ்ரீலங்கா இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீதுவை ஸ்ரீலங்கா சிற…

  2. Started by akootha,

    வடக்கு கிழக்கிலிருந்து காணாமல் போனோரை நினைவு கூறும் 20ஆவது வருட நினைவு தினம் நாளை (ஐப்பசி 27) அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் அதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமொன்று கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது. காணாமல் போயுள்ள இளைஞர் யுவதிகளின் பெற்றோர்கள், உறவினர்கள் கடந்துகொண்ட இந்த பொதுக் கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் மனோ கணேஷன், புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன, ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர உட்பட பலரும் கடந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/index.php/component/content/ar…

    • 0 replies
    • 567 views
  3. சிறிலங்கா வரும் இந்திய உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு சிறிலங்காவுக்கு வரும் இந்திய உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக சிறிலங்கன் விமான சேவை இந்தியாவுக்கான தனது சேவையை தற்போது அதிகரித்துள்ளது. ஜனவரி தொடக்கம் செப்ரெம்பர் மாதம் வரையில் 82 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய உல்லாசப்பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக தரவுகள் தெரிவிப்பதாக மீனகம் செய்தியாளர் தெரிவித்துள்ளார். மும்பை, சென்னை, திருவானந்தபுரம், மற்றும் டெல்லி ஆகிய நகரங்களுக்கான சேவைகளை சிறிலங்கன் விமான வேவை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. http://meenakam.com/2010/10/26/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%A…

  4. Oct 26, 2010 / பகுதி: செய்தி / இராணுவத்தினருக்கு சம்பளம் வழங்குவதற்கு பலவந்தமான டிக்கட் விற்பனை இராணுவ வீரர்களுக்கான சம்பளத்தை வழங்குவதற்கான நிதியைத் திரட்டிக் கொள்ளும் நோக்கில் பலவந்தமான டிக்கட் விற்பனைத் திட்டமொன்றை பாதுகாப்பமைச்சு மேற்கொண்டுள்ளது. குறித்த திட்டத்தின் பிரகாரம் ஒவ்வொரு இராணுவ வீரருக்கும் 2500 ரூபா பெறுமதியான டிக்கட் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், அவற்றை விற்பனை செய்தாலும் இல்லாவிட்டாலும் அதற்கான பெறுமதியை பாதுகாப்பு அமைச்சு அறிவிக்கும் தினமொன்றில் ஒவ்வொரு இராணுவ வீரனும் திருப்பிக் கையளிக்க வேண்டும் என்பதாக உத்தரவிடப்பட்டுள்ளது. அதிலும் முன்னர் சரத் பொன்சேகாவின் தலைமையில் கீழ் இருந்த சிங்க படையணியைச் சேர்ந்த இராணுவத்தினருக்கு கூடுதல் …

  5. புலனாய்வு இல்லை, நிபுணர் குழு இலங்கை வராது! ஐ.நா திட்டவட்டம் செவ்வாய், 26 அக்டோபர் 2010 13:45 இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்கள் குறித்த ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் சர்வதேச நிபுணர்கள் ஆலோசனை குழு புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்ள மாட்டாது என்றும் இலங்கைக்கு வர மாட்டாது என்றும் ஐ.நாவில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயினும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான எழுத்துமூல சாட்சியங்களை எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐ.நா கேட்டுக் கொள்கின்றது என்றும் அச்செய்திகள் கூறுகின்றன. நிபுணர்கள் ஆலோசனைக் குழு அதன் அதிகார வரம்புகளுக்கு உட்பட்டே செயற்பட முடியும் என்பது இக்குழுவின் உறுப்பினர்களுடைய அபிப்பிராயமாக உள்…

  6. புளட் தலைவர் சித்தார்த்தன் அவர்களின் செவ்வி இராணுவத்தின் தலையீடு வரையறுக்கப்பட வேண்டும் ‐ பௌத்த கோவில்களின் பெருக்கம் மக்களிடையே அச்சம் ‐ நல்லிணக்க ஆணைக்குழுவில் புளொட் தலைவர் சித்தார்த்தன் சாட்சியமளிப்பு ‐ அது குறித்து GTBC.FM ‐ Globaltamilnews.net ஆகியவற்றிற்கு வழங்கிய விசேட செவ்வி .

  7. Oct 26, 2010 / பகுதி: செய்தி / தேசியத்தலைவர், பொட்டு அம்மானின் மரணச்சான்றிதழ்களை அனுப்ப சிறீலங்கா அரசு மறுப்பு இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழங்கில் இருந்து தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் புலனாய்வுத்துறை கட்டளை அதிகாரி பொட்டு அம்மான் ஆகியவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோரின் மரணம் குறித்த மரணச் சான்றிதழ்களை சிறீலங்கா அரசு இன்றுவரை வழங்கவில்லை. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போரில் கொல்லப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்ததை இந்தியா இதுவரை உறுதிப்படுத்தாத போதும் தற்போது முதல் முதலாக இந்த அற…

  8. யாழ்ப்பாணத்திலும், பல்லேகலவிலும் புதிய இரு சிறைச்சாலைகள் யாழ்ப்பாணத்திலும், பல்லேகலவிலும் புதிய சிறைச்சாலைகள் அமைக்கபடவுள்ளன. அதற்கான அனுமதியை அரசு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்கா முழுவதிலுமுள்ள சிறைச்சாலைகளில் சந்தேகத்தின் பெயரிலும், நீதிமன்ற உத்திரவின் பெயரிலும் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்போதுள்ள சிறைச்சாலைகளில் சுமார் 11 ஆயிரம் பேர் மட்டுமே இருப்பதற்கு வசதிகள் உண்டு. இதன் காரணமாக மேலும் இவ்விரு இடங்களிலும் புதிய சிறைச்சாலைகள் அமைக்கபடவுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக எமது மீனகம் செய்தியாளர் தெரிவித்தார். http://meenakam.com/2010/10/26/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%…

  9. ஒருவருக்கு 5 சிம் அட்டைகளே இனி வழங்க முடியும். செல்லிடத் தொலைபேசிக்கான சிம் அட்டைகளை ஒருவரின் பெயரில் 5 அட்டைகள் மட்டுமே இனிமேல் வழங்கலாம் என்ற நடைமுறை சிறிலங்காவில் விரைவில் அமுலாக இருக்கின்றது. எதிர்வரும் ஜனவரி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வர இருப்பதாக சிறி லங்காவின் தொலைத் தொடர்பு சீராக்கல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஒருவர் 10 அல்லது அதற்கும் மேற்பட்ட சிம் அட்டைகளை வைத்துக்கொண்டு சில குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் பல சிம் அட்டைகளை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய பாதுகாப்பை கருத்தில்க் கொண்டு இந்த நடைமுறை அமுல்பபடுத்த இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கையடக்கத் தொலைபேசிப் பாவணையாளர்கள்…

  10. தமிழினியின் விளக்க மறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது அக் 26, 2010 போரின் போது சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அணியின் பொறுப்பாளராக இருந்த தமிழினியின் விளக்க மறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த அதிகாரிகள், அவருக்கு எதிரான குற்றப் பத்திரிக்கை சட்ட மா அதிபரின் கவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் நீதிமன்றத்தில் கையளிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர். அதனையடுத்து தமிழினிக்கான விளக்கமறியலை எதிர்வரும் நவம்பர் 15ம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டுள்ளார். சங்கதி

  11. October 21, 2010 Hon. Marzuki Darusman Chairman of UN Panel of Experts UN Headquarters First Avenue at 46th Street New York , NY 10017 USA Hon. Ms. Sooka Yasmin Member of UN Panel of Experts UN Headquarters First Avenue at 46th Street New York, NY 10017 USA Hon. Steven R. Ratner Member of UN Panel of Experts UN Headquarters First Avenue at 46th Street New York , NY 10017 USA Email: panelofexpertsregistry@un.org There is Irresistible Evidence Senior LTTE Cadres Have Been Summarily Executed by the Army Dear Hon.Panellists, On July 10, 2010 a senior cabinet Minister unwittingly provided the first …

    • 0 replies
    • 1.3k views
  12. செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 26, 2010 சரத் பொன்சேகாவிற்கு இரண்டாவது இராணுவ நீதிமன்றில் விதிக்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டுப் பரிசீலனை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றின் எரிக் பஸ்நாயக்க மற்றும் கே.பி.திஸ்ஸசிரி உள்ளிட்ட மூன்று நீதியரசர்கள் குழு முன்னிலையில் இன்று இடம்பெற்றது. தனிப்பட்ட காரணங்களுக்காக தான், இந்த வழக்கு விசாரணையில் பங்குகொள்ளாது விலகுவதாக நீதியரசர் கே.பி.திஸ்ஸசிரி கூறியுள்ளார். இதன்படி வழக்கினை மற்றுமொரு நீதியரசரைக் கொண்டு விசாரணை செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் புதிய நீதியரசர்கள் குழு அறிவிக்கப்பட்டதன் பின்னர் ம…

  13. செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 26, 2010 மஹிந்த இராஜபக்‌ஷ அம்புலிமாமா கதை எல்லாம் எமக்கு சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம். அரசியல் தீர்வில் தமக்கு உடன்பாடு உண்டா, இல்லையா என்பதை மஹிந்தா உடனடியாக, பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்காமல் தவிர்ப்பதற்கு ஜனாதிபதி சொல்லும் அம்புலி மாமா கதைதான், தமிழ் கட்சிகளின் ஒற்றுமையின்மை என்பதாகும். இந்தக் கருத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் சாடினார். தமிழ் கட்சிகளின் ஒற்றுமையின்மை காரணமாக அரசியல் தீர்வு வழங்க முடியாதுள்ளது என ஜனாதிபதி கூறியது தொடர்பாகக் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியவை வருமாறு; போருக்கு முன…

  14. 2009ம் ஆண்டின் மே திங்களில் இலங்கையின் உள்நாட்டு போர் முடிவடைந்த பின், வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களின் மறுசீரமைப்புப் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. நாட்டின் சமூகப் பொருளாதாரம் நிதானமாக வளர்ந்து வருகிறது. இப்பின்னணியில், சீன அரசும் தொழில்நிறுவனங்களும் இலங்கையில் முக்கிய பங்காற்றி வருகின்றன. சீன இலங்கை உறவு குறித்து பேசுகையில், இரு நாடுகள் நீண்டகால ஆழமான நட்புறவை நிலைநிறுத்துகின்றன என்று இலங்கை பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சர் பேசில் ராஜாபாக் ஷே தெரிவித்தார். இலங்கை ஒரே சீனா என்ற கொள்கையை உறுதியாக ஆதரிக்கிறது. சர்வதேச கருத்தரங்குகளில் இரு நாடுகள் ஒன்றுக்கு ஒன்று ஆதரவளிக்கின்றன. வளர்ச்சியில், இலங்கைக்கு மிக அதிக உதவி வழங்கும் நாடு, சீனாவாகும். பல்வேறு து…

  15. நந்திக்கடல் பகுதியில் சரணடைந்த போராளிகளை ஈவரக்கமின்றி சுட்டுக்கொன்று நிர்வானப்படுத்தி மகிழ்வடைந்த காடைய சிங்கள ராணுவத்தினர் வெளிவராத புகைப்படங்கள் ஈழதேசமூடாக வெளியிடிகிறோம் இறுதி யுத்தத்தின் போது சிங்களப் படைகளுடன் போரிட்டு வீரகாவியமான போராளிகளினதும் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்டு ராணுவத்தினரால் கொல்லப்பட்ட போராளிகளை நிவானப் படுத்தி சிங்கள ராணுவத்தினர் மகிழ்வடைவதை புகைப்படமூடாக காணக்கூடியதாகவுள்ளது. குறிப்பிட்ட சம்பவம் யுத்த இறுதி நாட்களில் நந்திக்கடல் பகுதியில் நடைபெற்றுள்ளதோடு கடந்த வாரம் வெளிவந்த புகைப்பட ஆதாரத்தோடு இந்தப் புகைப்படங்கள் ஒத்துப்போகின்றமை தெளிவாகிறது. புகைப்படங்கள் www.eeladhesam.com -

    • 2 replies
    • 2.7k views
  16. சிறு சிறு ஆயுதக் குழுக்களினால் பாரிய அனர்த்தம் ஏற்படக் கூடிய அபாயம் நிலவுகிறது கூறுகிறார் குமார் ரூபசிங்க சிறு சிறு ஆயுதக் குழுக்களினால் பாரிய அனர்த்தம் ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாக சகவாழ்வு மன்றத்தின் தலைவர் குமார் ரூபசிங்க தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், சிறு சிறு பயங்கரவாத குழுக்களின் செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2008ம் ஆண்டு மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலும் இவ்வாறான ஓர் அனர்த்தமே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பேசும் மக்களின் …

  17. தமிழீழ விடுதலைப்புலி ஆதரவாளர்கள் பொருளாதா ரத்தை வலுவிழக்கச் செய்ய முயற்சித்து வருவதாக வெளி விவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். இலங்கை யில் மீண்டும் வன்முறை சம்பவங்களை கட்டவிழ்த்து விட முடியாது என அறிந்து கொண்ட புலி ஆதரவாளர்கள் வேறு வழிகளில் நாட்டை சீர்குலைப்பதற்கு முனைப்பு காட்டிவருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். லண்டனில் நடைபெற்ற விரிவுரை ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.முதலீட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோரின் வருகையை தடுப்பதற்கும், இலங்கை பொருட்களுக்கான சர்வதேச சந்தை வாய்ப்பை தடுத்தல் ஆகிய நடவடிக்கை களை மேற்கொள்ள புலி ஆதரவாளர்கள் முயற்சித்து வருகின்றனர். வன்முறைச் சம்பவங்களை கட்டவிழ்த்து விட்டு நாட்டில் மீண்டும்…

  18. Oct 24, 2010 / பகுதி: செய்தி / மீண்டும் சிங்கள கடையர்களின் தாக்குதலுக்கு உள்ளான யாழ் நூலகம் ஏ9 சாலை திறக்கப்பட்டதில் இருந்து தென்பகுதி உல்லாசப் பயணிகள் யாழ்க் குடாநாடு வருவது அதிகரித்துள்ளது. இதனால் பல போக்குவரத்து நெரிசல், கலாச்சாரச் சீரழிகள் ஏற்படும் நிலையில் நேற்று அவர்கள் அடாவடியிலும் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலையில் யாழ். நூலகத்தை முற்றுகையிட்ட தென்பகுதி சுற்றுலாப் பயணிகள் தாம் உள்ளே நுழையப் போவதாக அடாவடித் தனத்தில் ஈடுபட்டதால் யாழ். நகரப் பகுதியில் பதற்றம் பரவியது. இலங்கை மருத்துவர் சங்கமும் யாழ்ப்பாண மருத்துவர் சங்கமும் இணைந்து நடத்திய வருடாந்த மாநாடு யாழ். நூலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. இதனால் நூலகத்திற்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்ப…

  19. காஞ்சி காமகோடிப் பீடத்தின் ஆசியில் தமிழ்-யுனிகோடு படுகொலை இணையத்தில் தமிழ் வளர்கிறது வளர்கிறது என்ற பேதைத்தனமான போதையை ஏற்றி விட்டு எத்தனைத் தமிழ்க் கேடுகளைச் செய்யமுடியுமோ அத்தனையும் இணையத்தில் அரங்கேறுகின்றன. தமிழக அரசும் இந்தப் போதையில் மயங்கிப் போய், ஏதோ தமிழ் இணையத்தில் நடக்கிறது என்றுபல இலட்ச உரூவாய் செலவில் தமிழ் இணைய மாநாடு நடத்தவும் செய்தது. ஆனால் அந்த மாநாடு முழுக்க அங்கே ஏற்பாடு செய்யப்பட்ட 4 அரங்கங்களும் 5 நாள்களிலும் ஈயோட்டிக் கொண்டிருந்தன. அமைச்சர்கள் கலந்து கொண்ட உரைகளில் மட்டும் அவர்களோடு வந்த கூட்டமே அரங்கத்தை நிறைத்தது. இது குறித்து எழுதினால் நீளும். சுருக்கமாகச் சொன்னால் “தமிழ் இணையம் என்ற பெயரில்” தமிழக அரசாங்கம் ஏமாற்றப்படுவதுடன் அரசாங்கத்தி…

  20. விடுதலைப்புலி உறுப்பினர்களுள் 1000 பேருக்கு சிறை அக் 26, 2010 ஸ்ரீலங்காவில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகின்ற முன்னாள் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களுள் 1000 பேர், குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டு சிறைவைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் விரைவில் ஸ்ரீலங்கா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக, ஸ்ரீலங்கா புனர்வாழ்வளிப்பு அமைச்சர் டியூ குணசேகரவை மேற்கோள்காட்டி, கொலம்போ பேஜ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இறுதி யுத்தத்தின் போது சுமார் 11,000 போராளிகள் வரையில் சரணடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் 8000 பேரே இருப்பதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் முரண்பட்ட தகவலை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த காலங்களில் கட்டம் கட்டமாக சுமார் 4460 முன்னாள…

  21. Oct 25, 2010 / பகுதி: செய்தி / வவுனியா செட்டிகுளம் பகுதியில் ஸ்ரீலங்காப்படையினரின் பாரிய படைமுகாம் வவுனியா செட்டிகுளம் வதைமுகாம் பகுதியில் ஸ்ரீலங்காப்படையினரால் பாரிய படைமுகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வன்னியில் இடம்பெயர்ந்த மக்களை தற்காலிகமாக தங்கவைக்க வவனியாவில் உள்ள செட்டிகுளம் பகுதியில் பெருமளவான காணிகள் சீர்செய்யப்பட்டு மக்கள் முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டார்கள். தற்போது மக்கள் வாழ்விடங்களில் குடியேற்றியுள்ள நிலையில் மக்களை அடைத்துவைத்திருந்த காணியில் குறிப்பாக வலயம் நான்கு பகுதியில் நீர்வளம் கொண்ட இடத்தில் மன்னார் மதவாச்சி முதன்மை வீதிக்கு அருகில் ஸ்ரீலங்காப்படையினர் பாரிய படைத்தளம் ஒன்று அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ப…

  22. திங்கட்கிழமை, 25, அக்டோபர் 2010 (15:43 IST) இலங்கையில் விநாயகர் கோயில் இடிப்பு இலங்கை மட்டக்களப்பு அருகேயுள்ள நாகபுரத்தில் விநாயகர் கோயில் இடிக்கப்பட்டதாகவும், இதை கண்டித்து கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் வீட்டுக்கு முன் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்றும் இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் குறித்து காத்தான்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தும் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உண்ணாவிரதம் நடைபெற்றபோது, கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் மட்டக்களப்பு இல்லத்தில் இல்லை. அவர் வெளியூரில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இடிக்கப்…

  23. மீள்குடியமர்வு என்ற போர்வையில் குடாநாட்டை சிங்கள மயமாக்கும் முயற்சி – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அதன் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், திருமதி பத்மின் சிதம்பரநாதன் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: நூற்றுக்கணக்கான சிங்களக் குடும்பங்கள் யாழ் புகையிரதநிலையத்திலும் ஏனைய இடங்களிலும் திடீரென வந்து இறங்கியுள்ளன. அவர்கள் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்படும் முன்னர் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்துள்ளதாக கூறுகின்றனர்…

  24. நாடு கடந்த தமிழீழ அரசின் முதலமைச்சருக்கு உலகத்தமிழ் அமைப்பு வாழ்த்து நாடு கடந்த தமிழீழ அரசின் முதல் முதலமைச்சருக்கு வாழ்த்துக்களையும், தேர்தலின் மூலம் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தமைக்கு பாராட்டுக்களையும் உலகத்தமிழ் அமைப்பு தெரிவித்துள்ளது. உலகத் தமிழ் அமைப்பு World Thamil Organization, Inc. 105 Ronaldsby Drive, Cary, North Carolina 27511, USA (A Non-Profit Organization Registered in USA) (www.worldthamil.org * E-mail: wtogroup@gmail.com) October 24, 2010 World Thamil Organization, Inc. congratulates the Transnational Government of Tamil Eelam (TGTE) for electing its Members of Parliament by conducting the elections in a transparent and dem…

  25. 2011ம் ஆண்டில் இலங்கையர் ஒவ்வொருவரும் 250,000 ரூபா கடனாளியாகமாறுவர் யுத்தம் நடைபெற்ற காலத்தை விட தற்போது நாட்டு நிலைமை மோசமாகவுள்ளதாக ஜே.வி.பி. தொரிவிக்கின்றது. ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் இப்படி தொரிவித்துள்ளார் . அவர் மேலும் தொரிவிக்கையில், இந்த வருடம் ஆகஸ்ட் வரையில் அரசு செலுத்தவேண்டிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக்கடன் தொகை 4 இலட்சத்து 46 ஆயிரத்து 405 கோடி ரூபாவாகும். இதனால், 2011ம் ஆண்டளவில் இந்நாட்டு பிரஜைகள் ஒவ்வொருவரும் தலா இரண்டரை இலட்சம் ரூபாய் கடனாளியாக மர்றுவார்கள். யுத்தத்தை காரணம் காட்டி பொருட்களின் விலையை அதிகாரித்தார்கள். ஆனால், யுத்தம் நடைபெற்று முடிந்து 17 மாதங்களாகியும் விலையேற்றம் தொடர்கின்றது. அரச ஊழியர்களுக்கு 2500 ரூபாய் சம்பள அதிகாரிப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.