Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்திய கடற்படைக்கு சொந்தமான INS ‘Airavat’ யுத்த கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (18) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது. 124.8 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 170 கடற்படை ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். கப்பல் தங்கியிருக்கும் காலத்தில், அதன் பணியாளர்கள் இலங்கை கடற்படையுடன் இணைந்து பல பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர். நாட்டிலுள்ள சில சுற்றுலாத்தலங்களையும் அவர்கள் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கப்பல் நாளைய தினம் நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளது. https://thinakkural.lk/article/277587

  2. Published By: RAJEEBAN 12 OCT, 2023 | 10:16 AM எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளரும் அல்லது கட்சியும் 50 வீத வாக்குகளை பெறமுடியாது என்பதால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என வெளியாகியுள்ள தகவல்களால் அரசியல் வட்டாரங்களில் பெரும் குழப்பநிலையேற்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கும் நீதியமைச்சருக்கும் இடையில் ஏற்கனவே இதுதொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. அமைச்சரவை பத்திரம் இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதி எனவும் இறுதியாக நிறைவேற்று அதிகார முறையை நீக்குவதா நிறைவேற்று அதிகார பிரதமர…

  3. Published By: DIGITAL DESK 3 18 OCT, 2023 | 03:17 PM நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா, சலங்கந்தை - ஒட்டரி பிரிவில் மதுபானசாலை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று புதன்கிழமை (18) போராட்டமும், பேரணியும் முன்னெடுக்கப்பட்டது. ஆன்மீக தலைவர்கள், இளைஞர்கள், ஊர் மக்கள் இணைந்தே இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். மதுபானசாலைக்கான அனுமதியை இரத்து செய், வேண்டாம், வேண்டாம் மதுபானசாலை வேண்டாம் என கோஷங்களை எழுப்பியவாறு ஒட்டரி பகுதியில் இருந்து டிக்கோயா நகர் வரை மக்கள் பேரணியாக வந்தனர். "மலையகம் தற்போதுதான் மாற்றம் கண்டு வருகின்றது. எமது சமூகமாற்றத்துக்கு இந்த மதுபானசாலைகள் பெரும் த…

  4. பிறந்து ஒரு நாளே ஆன சிசுவை கொடூரமான முறையில் கொலை செய்த முல்லைத்தீவுபெண்ணிற்கு 05 வருட கடூழியச் சிறைத்தண்டனை முல்லைத்தீவு மேல் நீதிமன்றம் நேற்று (17) விதித்துள்ளது. இதற்கு மேலதிகமாக பத்தாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதுடன், அபராதத்தை செலுத்த தவறினால் 06 மாத மேலதிக சிறைத்தண்டனையும் அனுபவிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் குழந்தையைப் பெற்றெடுத்த பின்னர் கழுத்தை நெரித்துக் கொன்ற குற்றத்திற்காகவே இந்த தண்டனை விதிக்கப்பட்டது. தான் பெற்றெடுத்த ஒரு நாளே ஆன சிசுவை கொன்று, உடலை இரகசியமாக புதைத்ததாக, அவர் மீது பொலிஸார் தாக்கல் செய்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட…

  5. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் : நிமல் சிறிபால டி சில்வா ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு வர்த்தக பங்காளியை கண்டுபிடிக்க முடியாவில்லையெனில் விமான சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ” ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்ந்து நட்டத்தை சந்திக்க முடியாது. எனவே நிறுவனத்தின் 49 வீதமான பங்குகளை வேறு தரப்பினருக்கு மாற்றி கூட்டு முயற்சியாக நடத்த உத்தேசித்துள்ளோம். “நாங்கள் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர…

  6. 18 OCT, 2023 | 10:47 AM பொலிஸ் உத்தியோகத்தர்களின் முறைகேடுகள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடு செய்வதற்கு தொலைபேசி இலக்கமொன்றை இலங்கை பொலிஸ் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வாறான முறைப்பாடுகளை “118” என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொதுமக்கள் தகவல்களை வழங்க முடியும். குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் இயங்கும் எனவும் முறைப்பாடுகளிலிருந்து பெறப்படும் தகவல்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/167140

  7. கீரிமலை ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள ஆலயங்களை கையளியுங்கள் adminOctober 17, 2023 யாழ்ப்பாணம் கீரிமலை ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள ஆலயங்கள் , மடாலயங்கள் என்பவை விடுவிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிசெயலாளர் உமாசந்திர பிரகாஸ் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், கடந்த 33 வருடங்களுக்கு மேலாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்படும் பிரதேசத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள ஐனாதிபதி மாளிகை தற்போது தனியார் நிறுவனம் ஒன்றிற்கு 50 வருட கால பகுதிக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் 33 வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்து தற்க…

  8. தமிழ்மொழி பேசுவோர் சுமார் 75 வீதம் வாழ்கின்ற திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படாமை குறித்து மிகவும் கவலையடைகின்றேன் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை (17) இடம் பெற்ற திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.அதாவுல்லா, கபில நுவான் அத்துக்கோரள ஆகியோரின் இணைத்தலைமையின் கீழ் நடைபெற்ற இக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, திருகோணமலை மாவட்டத்தில் தமிழை தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம், தமிழ் மக்கள் சுமார் 75 வீதத்திற்கும் மேல் வாழ்கின்…

    • 1 reply
    • 275 views
  9. Published By: RAJEEBAN 17 OCT, 2023 | 10:53 AM ஹமாசின் தாக்குதலின் போது பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது. காசாவில் அதிகரிக்கும் வன்முறைகள் குறித்து கரிசனை வெளியிட்டுள்ள இலங்கை பணயக்கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஹமாஸ் இஸ்ரேலில் பொதுமக்கள் மீது மேற்கொண்ட தாக்குதலை கடுமையாக கண்டிக்கின்றோம், காசாவிற்கு பணயக்கைதிகளாக கொண்டுசெல்லப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் பிரியங்க விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உணவு எரிபொருள் மருந்து உட்பட அத்தியாவசிய பொருட்கள் காசாவிற…

  10. யாழ்.பல்கலை முள்ளிவாய்க்கால் தூபியை உடைக்க கோரி முறைப்பாடு! adminOctober 17, 2023 யாழ்.பல்கலை கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உரிய அனுமதிகள் பெறப்படாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முறைப்பாடுகளை பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர், யாழ்ப்பாணம் கட்டுடை மற்றும் கிளிநொச்சி விசுவமடு ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இரு பொதுமகன்கள் ஆகியோர் இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை ஆரம்பித்துள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, தூபியை அமைக்க பெறப்பட்ட, செலவழிக்கப்பட்ட நிதி விபரங்கள், தூபிக்கான அனுமதிகள் தொடர்பிலான ஆவணங்களுடன் எதிர்வரும் வி…

  11. தற்போது சர்வதேச விமான நிலையமாக செயற்பட்டு வரும் பலாலி விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தின் வசதிகளை மேம்படுத்துமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். பலாலி விமான நிலையத்திற்கு நேற்று (16) விஜயம் மேற்கொண்ட துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். சென்னையிலிருந்து நாளாந்தம் 60 பயணிகளுடன் Alliance நிறுவனத்தின் விமானமொன்று பயண வசதிகளை வழங்கி வருவதாக அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் இந்தியாவின் IndiGo நிறுவனமும் சென்னை – பலாலி இடையே விமான சேவைகளை வழங்கவுள்ளது. இந்த சர்வதேச விமான சேவைகளுக்கு மேலதிகமாக இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து …

  12. Published By: DIGITAL DESK 3 17 OCT, 2023 | 03:32 PM இலங்கையில் மென்பொருள் மற்றும் வன்பொருள் பொறியியலாளர்களை வருடாந்தம் உருவாக்குவதற்கான கற்பித்தல் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாரென சீன ஹுவாவி (Huawei) நிறுவனத்தின் பிரதித் தலைவர் சைமன் லீன் (Simon Lin) தெரிவித்தார். தமது நிறுவனம் தற்போதும் இலங்கைக்குள் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுக்கும் அதேநேரம், பல்வேறு பல்கலைக்கழகங்களின் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு அவசியமான உதவிகளை வழங்க ஆரம்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சீனாவிற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் இன்று (17) பீஜிங்…

  13. யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்த நபர் மீது தாக்குதல் மேற்கொண்ட இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமை நீக்கம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்த நபர் மீது தாக்குதல் முயற்சியிலே மேற்கொண்ட இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமை நீக்கம் செய்யப்படுவதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ்.போதனா வைத்தியசாலை நுழைவாயிலில் வைத்தியசாலைக்கு வந்த நபர் ஒருவர் பாதுகாப்பு ஊழியர்களால் தாக்கப்பட்ட சம்பவமானது கண்டிக்கப்பட வேண்டியது. இந்த விடயத்தை நான் மிகவும் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளதோடு குறித்த பாதுகாப்பு கடமைகள் ஈடுபடும் தனியார் நிறுவனத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளேன். யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்த நபர் மீது தாக்குதல் மேற…

  14. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள குருந்தூர்மலை விவகாரம் ஜனாதிபதி வரை பேசப்பட்டுள்ளது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (17) குறித்த பகுதிக்கு புத்தசாசன அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் களவிஜயம் மேற்கொண்டு குறித்த பகுதிகளை பார்வையிட்டுள்ளார்கள். புத்தசாசன அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன ஜனாதிபதி செயலக வடமாகாண இணைப்பாளர் எல்.இளங்கோவன் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர், தொல்பொருள் திணைக்கள உயர் அதிகாரிகள், வனவள திணைக்கள உயர் அதிகாரிகள், வனஜீவராசிகள் திணைக்கள உயர் அதிகாரிகள், காணி தொடர்பிலான திணைக்கள உயர் அதிகாரிகள். கமநலசேவை திணைக்கள உ…

  15. இந்தோ-பசிபிக் முழுவதும் இலங்கை மற்றும் பிற நாடுகளுக்கு வளமான நீலப் பொருளாதாரத்தை உறுதி செய்வதற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், மூலோபாய கற்கைகளுக்கான பிராந்திய மத்திய நிலையம் (RCSS) மற்றும் அமெரிக்க சமாதான நிறுவனம் (USIP) ஆகியவற்றுடன் இணைந்து, 16 ஆம் திகதி திங்கட்கிழமை “சமுத்திரப் பாதுகாப்பு: தெற்காசியா மற்றும் இந்து சமுத்திரம்” எனும் தலைப்பிலான மாநாட்டிற்காக இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதிலுமிருந்து அறிஞர்களை ஒன்றிணைத்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிராந்திய ஒத்துழைப்பு, நிர்வாகம், சமாதானத்தைக் கட்டியெழுப்புதல், நீலப் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் சமுத்திரப் பாதுகாப்பு ஆரா…

  16. நோயாளி சுயநினைவுடன் ஓவியம் வரைந்துகொண்டிருக்கையில் மூளைகட்டியை பிரித்தெடுக்கும் ஒருவகை சத்திரசிகிச்சையை 'awake craniotomy’ அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை பிரிவின் மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர். நோயாளி சுயநினைவுடன் உள்ளவேளை மேற்கொள்ளப்படும் என்ற சத்திரசிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர். குறிப்பிட்ட சத்திரசிகிச்சையை நோயாளிகள் சுயநினைவுடன் இருக்கும்போது மேற்கொள்ளமுடியும். குறிப்பிட்ட மருத்துவ குழுவினர் இவ்வாறான மூன்றாவது சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர், முதலாவது சத்திரசிகிச்சையும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையிலேயே இடம்பெற்றது. நோயாளியின் மூளையின் இடது பக்கத்தில் உள்ள கட்டியை பிரிப்பதற்காக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டபோ…

  17. 15 OCT, 2023 | 06:52 PM சீனாவில் நடைபெறும் Belt & Road திட்டத்தின் 03ஆவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றிரவு (15) சீனா செல்லவுள்ளார். இதன்படி, ஜனாதிபதி ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் சீனாவிற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ள காலப்பகுதியில் அவருக்கு கீழுள்ள அமைச்சுகளின் பொறுப்புகள் இராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாளை (16) முதல் இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பாதுகாப்பு பதில் அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நிதி பதில் அமைச்சரா…

  18. இலங்கையில் தமிழர்களது வாக்குகள் ராஜபக்சர்களுக்கு கிடைக்கவில்லை என்று நாங்கள் கவலையடையவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ராஜபக்சர்களுக்கு தமிழர்கள் வாக்களிக்காமை என்பது ஒரு கலாசாரம். தமிழ் கலாசார பிராந்திய வாக்கு வங்கியில் பாரம்பரியம் முக்கிய காரணியாகக் காணப்படுகின்றது. நாங்கள் நல்லூருக்கும் செல்வோம் தமிழர்களின் வாக்குகள் கிடைக்கவில்லை என்று நாங்கள் கவலையடைவில்லை. அடுத்த தலைமுறையினர் தேசிய அரசியல் கட்சிகளுக்கு வாக்களிப்பார்கள். எனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழர்களுடன் இணக்கமாகவே செற்படுக…

  19. தற்போது காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே போர் மோதல்கள் நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றன. இவ்வாறான நிலையில் இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இந்த நாட்டில் இஸ்லாமிய இனவாத மற்றும் தீவிரவாத அலையை கட்டியெழுப்ப முற்படுவதை நாம் காண்கிறோம். அத்துடன் முன்னிலை சோஷலிச கட்சி உட்பட பல இடதுசாரி அரசியல் கட்சிகள் காஸா மோதல் என்ற போர்வையில் இந்நாட்டு முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்காக செயற்பட்டு வருகின்றன என தீவிர ஜனநாயக சக்தியின் தலைவர் டானிஷ் அலி இன்று திங்கட்கிழமை (16) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தார். முஸ்லிம் அரசியல்வாதிகள் நாட்டில் இஸ்லாமிய இனவாத மற்றும் தீவிரவாத அலையை கட்டியெழ…

    • 2 replies
    • 257 views
  20. 15 OCT, 2023 | 10:08 AM • ஒரு புதிய அத்தியாயத்தில் இலங்கையுடனான உறவுகள் • இராமேஸ்வரம் - தலைமன்னார் படகு சேவை விரைவில் • இந்திய தொழில்நுட்ப கட்டண முறைமைக்குள் இலங்கை (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கை - இந்திய பொருளாதார பங்காளித்துவத்துக்கான தொலைநோக்கு திட்டத்தில் இருதரப்பு இணைப்பு என்பது எமது கூட்டாண்மையின் மையக் கருப்பொருளாகும். ஆரம்பிக்கப்பட்டுள்ள படகு சேவையின் ஊடாக இரு நாடுகளின் இதயங்கள் நெருக்கமாக இணைந்துள்ளதாக தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னாருக்கு இடையிலான படகு சேவையும் விரைவில் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். காங்கேசன்துறைக…

  21. மன்னார் தென்கடல் பகுதியில் கடல் ஆமைகள் இறந்து கரையொதுங்கி வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்ததை தொடர்ந்து, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த இடத்துக்கு சென்று உயிரிழந்த ஆமைகளை பார்வையிட்டுள்ளனர். கடந்த மூன்று தினங்களாக மன்னார் தென்கடல் பிராந்தியத்தில் அதிகமான கடல் ஆமைகள் இறந்து கடலில் மிதந்து வருவதாகவும், அதிகமான ஆமைகள் இறந்த நிலையில் மன்னார், சிலாவத்துறை கடற்கரைப் பகுதிகளில் கரையொதுங்கி வருவதாகவும் அப்பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அதிகாரிகள் இன்று (16) அப்பகுதிக்கு சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மன்னார் தென்கடல் பகுதியில் இறந்து…

  22. யாழ்.சந்தைகளில் 10 வீத கழிவு பெற தடை – மீறுபவர்களை கைது செய்யவும் உத்தரவு adminOctober 15, 2023 யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் நடைமுறையில் உள்ள 10 வீத கழிவு நடைமுறையினை உடனடியாக நிறுத்தி குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் வைத்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சில சந்தைகளில் விவசாயிகளிடமிருந்து 10 வீத கழிவு அறவிடும் நடைமுறை செயற்படுத்தப்படுகின்றது . குறிப்பாக திருநெல்வேலி, மருதனார்மடம், சாவகச்சேரி, கொடிகாமம் சந்தைகளில் விவசாயிகளிடம் கழிவு அறவிடும் நடைமுறை இட…

  23. யாழ். ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு வழங்க நடவடிக்கை! யாழ்ப்பாணம் ஜனாதிபதி மாளிகை வளாகத்தை இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (SLIIT) குத்தகைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. காங்கேசன்துறையில் அமைந்துள்ள இந்த ஜனாதிபதி மாளிகை வளாகம் 29 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ள நிலையில், 12 ஏக்கரில் கட்டிடத் தொகுதி அமைந்துள்ளது. எஞ்சிய நிலம் அகுறித்த பகுதியில் உள்ள மக்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட காணியென த…

  24. 16 OCT, 2023 | 01:58 PM நாட்டில் பதின்ம வயதினரில் 40 சதவீதமானோர் மனநல நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார். இதேவேளை, நாட்டில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் அதிகமானோர் பதின்ம வயதினர் என ஆய்வறிக்கையில் வெளியான தகவல்கள் சுட்டிக்காடியுள்ளதாக வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா மேலும் தெரிவித்தார். குழந்தை பருவ வளர்ச்சியை மேம்படுத்தும் திட்டம் தொடர்பாக இடம்பெற்ற கூட்டத்தின் போதே தாய் - சேய் குடும்ப சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், பதின்ம வயதினரிடையே ஏற்படும் தனிமை , மனக் …

  25. 16 OCT, 2023 | 01:07 PM இலங்கையில் 56 ஆயிரம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டு வருவதாக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெஃப்) வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழு தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார். இவர் மேலும் கூறுகையில், இலங்கையில் உள்ள குடும்பங்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கு பகுதியினர் பாதுகாப்பான ஊட்டச்சத்து பொருட்களைப் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என ஆய்வறிக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.