ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
பாலியாறு பெருக்கெடுப்பு- மன்னாரில் பல பகுதிகள் நீரில் மூழ்கியது. adminDecember 15, 2023 மன்னாரில் நேற்றைய தினம் (14) மதியம் முதல் இன்று (15) அதிகாலை வரை பெய்த கடும் மழை காரணமாக கட்டுக்கரை குளம் வான் பாய ஆரம்பித்துள்ள துடன் மன்னார் -யாழ்ப்பாணம் பிரதான வீதி உள்ள பாலியாறு பெருக்கெடுத்துள்ளது. குறிப்பாக பாலியாறு, சிப்பியாறு, முழுவதும் நிறைந்து வீதிக்கு மேலாக நீர் பாய்ந்து வருவதுடன் அருகில் உள்ள கிராமங்கள் முழுவதும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மேலும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆட்காட்டிவெளி மற்றும் மாந்தை கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள வயல் நிலங்கள் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது . அதே நேரம் மன்னார் பிரதேச செயலக பிரிவ…
-
- 0 replies
- 675 views
-
-
பண்டோரா ஆவணம் கசிந்தது : லண்டனில் பல இலட்சம் டொலர் பெறுமதியான நிறுவனங்களை சொந்தமாக்கிய அமைச்சர் ! கடல் கடந்து பல சொத்துக்களை வைத்திருக்கும் நபர்கள் பட்டியலை பண்டோரா ஆவணம் வெளியிட்டுள்ள நிலையில் அதில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் அடையாளம் காணப்பட்டுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் லண்டனில் வர்ஜின் தீவுகளில் உள்ள இரண்டு நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர் என்பதை புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் சர்வதேசக் கூட்டமைப்பான பண்டோரா பேப்பர்ஸ் வெளியிட்டுள்ளது. 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் அரசியல்வாதிகள், பிரபலங்கள், வணிகர்கள் மற்றும் குற்றவாளிகளின் நிதி ஒப்பந்தங்கள் மற்றும் மறைக்கப்பட்ட சொத்துக்களை அம்பலப்படுத்தும் வகையில் பண்டோரா …
-
- 3 replies
- 569 views
- 1 follower
-
-
15 DEC, 2023 | 01:51 PM (எம்.வை.எம்.சியாம்) போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் காணும் செயல்முறையை நெறிப்படுத்தும் புதிய அமைப்பை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதற்காக அனைத்து பொலிஸ் நிலையங்களையும் இணைக்கும் விசேட தரவு அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புதிய முறையின் கீழ் போதைப்பொருள் குற்றத்துடன் தொடர்புடைய எந்தவொரு நபரின் உள்ளீட்டையும் செயல்படுத்துவதன் மூலம் பொலிஸாரினால் கடந்த கால குற்றவியல் பதிவுகளை மீட்டெடுக்க முடியும். போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான அனைத்து கைதுகளின் விவரங்களும் தரவு அமைப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவ…
-
- 0 replies
- 591 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 11 DEC, 2023 | 10:25 AM இந்தியா பாதுகாப்பாகயிருந்தால் இலங்கையும் பாதுகாப்பாகயிருக்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்கொண்ட முன்னொருபோதும் இல்லாத நெருக்கடியின் போது வேகமாக வலுவான விதத்தில் செயற்பட்ட இந்தியா வேறு எந்த நாட்டிற்கும் நெருக்கடி விடயத்தில் உதவவில்லை என இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். இந்தியா இலங்கைக்கு உதவுவதற்காக சர்வதேச அளவிலும உள்நாட்டிலும் தனது பங்களிப்பை வழங்கியது என குறிப்பிட்டுள்ள அவர் இந்தியாவின் தலைமைத்துவம் வலுவான இந்திய இலங்கை உறவுகள் குறித்து தெளிவாகவும் அர்ப்பணிப்புடனும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். சீனா க…
-
- 10 replies
- 794 views
- 2 followers
-
-
பௌத்த சிங்கள நாடு தனித் தமிழ் நாடு என்ற சிந்தனை மாற வேண்டும் sachinthaDecember 15, 2023 தேரர்களிடமும், உலகதமிழர் பேரவையிடமும் மனோ MP தெரிவிப்பு இலங்கை எம் தாய்நாடு, ஒரு “சிங்கள பௌத்த நாடு” என்ற சிந்தனை மறைய வேண்டும். இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான “தனித் தமிழ்நாடு” என்ற சிந்தனையும் மறைய வேண்டும். சகலருக்கும் சொந்தமான, இலங்கை ஒரு பன்மைத்துவ நாடு என்ற அடிப்படையே உங்கள் நடவடிக்கைக்கு ஆரம்ப புள்ளியாக இருக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற, சிறந்த இலங்கைக்கான சங்க (பெளத்த) மன்றம், உலகத் தமிழர் பேரவை ஆகிய அமைப்புகளுடனான சந்திப்பிலேயே, மனோ கணேசன் எம்.பி கூறியுள்ளார். ப…
-
- 1 reply
- 387 views
-
-
15 DEC, 2023 | 09:11 AM இலங்கை வரலாற்றில் இந்த வருடத்தில் அதிக யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு (2022) 439 யானைகள் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் டிசம்பர் முதலாம் திகதி வரை 449 யானைகள் உயிரிழந்துள்ளன. இந்த ஆண்டு பொலன்னறுவை வனவிலங்கு வலயத்தில் 96 யானைகளும், கிழக்கு வனவிலங்கு வலயத்தில் 86 யானைகளும், அநுராதபுரம் வனவிலங்கு வலயத்தில் 82 யானைகளும் உயிரிழந்துள்ளன. இந்தக் காலப் பகுதிக்குள் பதிவான சம்பவங்களில் 81 யானைகள் துப்பாக்கிச்சூடு காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/171738
-
- 0 replies
- 517 views
- 1 follower
-
-
Published By: VISHNU 14 DEC, 2023 | 07:07 PM (நா.தனுஜா) அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழான கைதுகள், வட- கிழக்கில் தொடரும் காணி அபகரிப்புக்கள் என்பன இனவாதப்போக்கை அடிப்படையாகக்கொண்டிருப்பதாகவும், இவை இன ரீதியிலான பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பதாகவும் இன ரீதியிலான சமத்துவம் மற்றும் நீதி தொடர்பான அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் விசேட பிரதிநிதி டிஸிரி எம் கொமியெர் ஸ்மித்திடம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் எடுத்துரைத்துள்ளார். இன ரீதியிலான சமத்துவம் மற்றும் நீதி தொடர்பான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் விசேட பிரதிநிதி டிஸிரி எம் கொமியெர் ஸ்மி…
-
- 0 replies
- 167 views
- 1 follower
-
-
இலங்கையில் மன நோயாளிகள் மிகக் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் : மனித உரிமைகள் ஆணைக்குழு ! kugenDecember 15, 2023 இலங்கையில் மன நோயாளிகள் மிகக் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்வதாக மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையொன்று அதிர்ச்சியளிக்கும் வகையில் தெரிவிக்கிறது. மன நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின்போதான சில நடவடிக்கைகள் மற்றும் வசதிகள் இல்லாமை ‘சித்திரவதைக்கு ஒப்பாகும்’ என்றும் அந்த அறிக்கை சாடியுள்ளது. மன நோயாளிகளின் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பில் தமது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அவர்களின் நல்வாழ்வு தொடர்பு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன் இடைக்கால அறிக்…
-
- 0 replies
- 213 views
-
-
யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக ஆரம்பமானது! ஒன்பதாவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் நேற்று (14) மாலை 06 மணிக்கு கோலாகலமாக ஆரம்பமானது. இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி, சுவிட்சர்லாந்தின் தூதுவர் சிறி வால்ட், தென்னாபிரிக்காவின் உயர் ஸ்தானிகர் சடைல் ஷால்க், யாழிற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன்,ஜேர்மன் கலாசார மத்திய நிலையத்தின் அதிகாரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், விழா இயக்குனர் அனோமா ராஜகருணா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நேற்று ஆரம்பித்து…
-
- 0 replies
- 649 views
-
-
Published By: DIGITAL DESK 3 14 DEC, 2023 | 11:10 AM குடும்ப வன்முறைகளை முறைப்பாடு செய்வதற்கு 'மிது பியச' பிரிவில் 24 மணி நேரமும் செயற்படக் கூடியதான தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. 070 2 611 111 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பதன் மூலம் குடும்ப வன்முறை தொடர்பில் எந்த நேரத்திலும் தெரிவிக்க முடியும் என பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நாட்டில் சுமார் 10 வீதமான ஆண்களும் குடும்ப வன்முறைக்கு உள்ளாகின்றனர் என குடும்ப சுகாதார பணியகத்தின் மகளிர் சுகாதார பிரிவின் திட்ட முகாமையாளர் திருமதி நெத்யாஞ்சலி மாப்பிட்டிகம தெரிவித்தார். https://www.virakesari.lk/article/171683
-
- 3 replies
- 300 views
- 1 follower
-
-
வடக்கு பாடசாலைகளுக்கு பிளாஸ்ரிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை adminDecember 15, 2023 வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் பிளாஸ்டிக் பொருள்களை மாணவர்கள் வகுப்புகளுக்கு கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நேற்றையதினம் வியாழக்கிழமை நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் பிளாஸ்டிக் பொருள்களை மாணவர்கள் வகுப்புகளுக்கு கொண்டு செல்வதை தடுக்க வேண்டும். தினமும் காலை கூட்டத்தின் போது டெங்கு ஒழிப்பு தொடர்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும். அத்துடன்…
-
- 0 replies
- 513 views
-
-
இரண்டாவது கடன் தவணை – 337 மில்லியன் டொலர்களுக்கு IMF அனுமதி! adminDecember 13, 2023 இலங்கைக்கு வழங்கப்படவுள்ள இரண்டாவது கடன் தவணையான 337 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கையுடனான 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான முதலாவது மீளாய்வு நேற்று இடம்பெற்றதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை, இலங்கை காட்டிய முன்னேற்றத்தில் திருப்தி அடைவதாக சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, முதல் மதிப்பாய்வின் நிறைவிற்கு அமைய SDR 254 மில்லியன் (சுமார் 337 மில்லியன் அமெரிக்க டொலர்) நி…
-
- 3 replies
- 375 views
- 1 follower
-
-
இலகு ரயில் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க ஜப்பான் அரசுடன் பேச்சுவார்த்தை இலகு ரயில் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த திட்டம் விரைவில் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அரசுக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இத்திட்டத்தை மீள் மதிப்பீடு செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இதற்காக செலவிடப்பட்ட தொக…
-
- 1 reply
- 383 views
-
-
ஜனாதிபதியை சந்தித்த சுமந்திரன், சாணக்கியன் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். ஜனாதிபதி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவிருந்த நிலையில், திடீரென குறித்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது. என்றாலும், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்தனர். இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கூறியதாவது, “பயங்கரவாத தடைச் சட்டத்தினை பயன்படுத்த மாட்டோம் எனக் கூறின…
-
- 2 replies
- 418 views
-
-
தமிழர் பிரதேசங்களில் குடியேறும் சிங்களவர் எவ்வாறு தமிழர்களின் நிலங்களை வன்வளைத்து அதற்குச் சிங்களப் பெயர்கள் சூட்டி வந்தனரோ அதே போல் முஸ்லிம்களும் தமது அட்டூழியங்களை முன்னேடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தற்போது கிளி/நாச்சிக்குடா அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பெயர் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இன்னும் எதுவெதை வன்வளைக்கப் போறாங்களோ தெரியவில்லை.
-
- 6 replies
- 842 views
-
-
ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து போராட்டம் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடற்றொழிலாளர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் கையெழுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை கடற்றொழிலாளர்களின் நிலைப்பாடு எனும் தலைப்பில் சேகரிக்கப்படும் கையெழுத்துக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது. வரைவு கடற்றொழில் சட்டத்தை நிராகரிக்கின்றோம், இலங்கை கடற்பரப்பில் வெளிநாட்டு கடற்றொழில் கப்பல்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதை முற்றுமுழுதாக எதிர்கின்றோம், கடல் உணவு இறக்குமதியால் உள்ளுர் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் கடல் உணவு இறக்குமதியை எத…
-
- 0 replies
- 357 views
-
-
வரலாற்றுச் சாதனையினை நிலைநாட்டிய மாணவனுக்கு கௌரவிப்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் கல்வி வலயத்துக்குட்பட்ட ஆறுமுகத்தான்குளம் அ.த.க பாடசாலை 1982 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று வரையான கல்வி வரலாற்றிலே முதன் முறையாக ஒரு மாணவன் வெட்டுப்புள்ளிகளுக்கு மேலாக 146 புள்ளிகளை பெற்று சித்தியடைந்து வரலாற்று சாதனையினை நிலையாட்டியிருக்கிறார். பாடசாலையின் பெயரினை வெளியுலகிற்கு எடுத்துரைக்க காரணகர்த்தாவாக விளங்கிய அம்மாணவனுக்கான கௌரவிப்பு நிகழ்வானது குமுழமுனையினை பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது கனடா நாட்டிலே வசித்து வருகின்ற கந்தசாமி பத்மநாதன் முற்று முழுதான நிதியனுசரணையில் பாடசாலை முதல்வர் தணிகாசலம் தலைமையில் நேற்று (13) மிக சிறப்பாக இடம்பெற்றது. …
-
- 0 replies
- 329 views
-
-
நாட்டில் 2024ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கு இடையில் கடுமையான வறட்சி ஏற்படும் என, நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். காலநிலை மாற்றம் மற்றும் இலங்கையின் உணவுப் பாதுகாப்பில் அதன் தாக்கம் குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயர்மட்ட விஞ்ஞான அமர்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் இன்னல்களை எதிர்கொள்ளும் தற்போதைய நிலையில் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குடும்பங்களுக்கு உணவுப் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் பொருளாதார நெருக்கடி மற்றும் காலநிலை மாற்றத்தால் இந்த நிலையை நிவர்த்தி செய்வது மிகவும் கடினமாக இருக்கும் என்றும் குறித்த நிகழ்…
-
- 0 replies
- 371 views
- 1 follower
-
-
இன்று (14) நள்ளிரவு விண்கல் மழையை அவதானிக்க முடியும் என ஆர்தர் சி கிளார்க் மையம் அறிவித்துள்ளது. பைதான் 3200 சிறுகோளில் இருந்து கழிவுகள் பூமியை கடந்து செல்வதால் இது நிகழ்கிறது என்று கூறப்படுகிறது. இதன்படி, பைதான் 3200 சிறுகோளின் கழிவுகள் பூமியின் வளிமண்டலத்தில் மோதிய பிறகு இந்த விண்கல் மழையை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/284637
-
- 0 replies
- 527 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 13 DEC, 2023 | 09:34 PM இலங்கை விமானப்படையின் 73ஆவது ஆண்டு பூர்த்தியை யாழ்ப்பாணத்தில் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் இலங்கை விமானப்படையின் படைத்தளபதி எயார் மார்சல் உதேனி ராஜபக்ஷ தெளிவுபடுத்தினார். யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், இலங்கை விமானப்படையின் படைத்தளபதி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் ஆளுநரை இன்று (13) சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண ஆளுநர், இலங்கை விமானப்படையின் படைத்தளபதி எயார் மார்சல் உதேனி ராஜபக்ஷ, ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், ஆளுநரின் இணைப்புச் செயலாளர் நிரான் மல்லவராச்சி, வடக்கு மாகாண கல்விச் செய…
-
- 1 reply
- 708 views
- 1 follower
-
-
Published By: VISHNU 13 DEC, 2023 | 09:24 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இந்திய, சீன உறவில் உண்மையான நண்பன் யார் என்பதை இலங்கை கற்றுக்கொள்ள வேண்டும். நமது அயல் நாடான இந்தியாவை உதட்டளவில் புகழ்ந்து உள்ளத்தின் ஊடாக சீண்டுவதனை தவிர்க்க வேண்டும். இங்கு பெருமைப்படும் பௌத்த மதமும் பாளி மொழியும், பௌத்த இலக்கியங்களும் இந்தியாவிலே தோற்றம் பெற்றன. இத்தகைய வரலாற்று தொடர்புகளை சீனாவுக்காக அறுக்கப் போகின்றீர்களா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும்…
-
- 0 replies
- 471 views
- 1 follower
-
-
13 DEC, 2023 | 05:46 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) யுத்த காலத்தில் எல்லைப் புறக் கிராமங்களை பாதுகாத்த சிவில் பாதுகாப்பு சேவை உத்தியோகத்தர்களை தற்போதைய அரசாங்கம் தலா 30 இலட்சம் ரூபாவை வழங்கி பணி நீக்குவதற்கு தயாராகி வருகிறது என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நிலையியற் கட்டளை 27/2 கீழ் பாதுகாப்பு அமைச்சு சார் வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பில் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில், அரச வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்படும் துறையாக பாதுகாப்புத் துறைய…
-
- 0 replies
- 356 views
- 1 follower
-
-
Published By: VISHNU 13 DEC, 2023 | 09:51 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தமிழீழ வைப்பகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பலகோடி பெறுமதியாக தங்க நகைகளுக்கு நேர்ந்ததென்ன, தமது நகை தமக்கு கிடைக்கும் என தமிழ் மக்கள் இன்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். ஆகவே கைப்பற்றிய தங்கங்களை இலங்கை அரசாங்கம் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற…
-
- 0 replies
- 218 views
- 1 follower
-
-
Published By: VISHNU 13 DEC, 2023 | 05:29 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டோமா, இல்லையா என்பதை ஜனாதிபதி தீர்மானிக்க முடியாது. சர்வதேசமே அதனை தீர்மானிக்க வேண்டும். ஜனாதிபதியின் பொருளாதார மீட்சி திட்டங்கள் 'சத்திரசிகிச்சை வெற்றி ஆனால் நோயாளி மரணம் ' என்பதற்கு ஒப்பானது. கண்கட்டி வித்தையால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் த…
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
இலங்கையில் பாரிய அளவில் போராட்டம் ஒன்று வெடிக்கக்கூடிய சாத்தியம் அதிகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பிலான மீளாய்வின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு தேர்தல்கள் காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் மறுசீரமைப்புகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சவால்கள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையில் மீண்டும் சமூக அமைதியின்மை மற்றும் போராட்டங்கள் வெடிக்க கூடிய சாத்தியங்கள் அதிக அளவில் காணப்படுவதாக சுட்டிக்…
-
- 4 replies
- 444 views
-