Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: VISHNU 26 NOV, 2023 | 12:40 PM யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பருத்தித்துறை, கந்தவுடையார் வீதியை சேர்ந்த ஜெயசந்திரன் டிலக்சன் (வயது 23) என்பவரே காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் வீதியில் சென்றுகொண்டிருந்த வேளை அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த இருவர், இளைஞரை வழிமறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/17…

  2. 19 NOV, 2023 | 05:41 PM வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற களவு சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளார். சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் என்ற 23 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து இளைஞனின் உறவினர் ஒருவர் கூறுகையில், அலெக்ஸிடம் லான்ட் மாஸ்டர் வாகனம் ஒன்றுள்ளது. கடந்த 8ஆம் திகதி மரம் கடத்தல் சம்பந்தமான விசாரணை ஒன்று உள்ளதாக தெரிவித்த வட்டுக்கோட்டை பொலிஸார் அலெக்ஸை கைது செய்தனர். அவ்வேளை, அலெக்ஸ் பொலிஸ் நிலையம் செல்ல மறுக்க, அவருக்கு துணையாக அவரது நண்பனையும் பொலிஸார் அழைத்துச் சென்றனர். இந்நி…

  3. 2024 ஆம் ஆண்டில் பில்லியன்கணக்கான பணத்தை நாட்டு மக்கள் வரியாக செலுத்த வேண்டும் என துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 2023ஆம் ஆண்டை விட 88100 கோடி ரூபாய் (881 பில்லியன்) மறைமுக வரியாகவும், 34,200 கோடி ரூபாய் (342 பில்லியன்) நேரடி வரியாகவும் செலுத்த வேண்டும் என தெரியவந்துள்ளது. வடமேற்கு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் அமிந்த மெட்சிலா பெரேரா இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். அரச வருமானம் “2024 வரவு செலவுத் திட்டத்தின்படி அரசாங்கம் 122,400 கோடி ரூபா (1224 பில்லியன்) கூடுதல் வருவாயை எதிர்பார்க்கிறது. அதில் 72 சதவீதம் மறைமுக வரிகளாகவும் 28 சதவீதம் நேரடி வரிகளாகவும் இருக்கும். 2023ஆம் ஆண்டு அரசாங்கம் …

  4. எதிர்வரும் 2024 செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதிக்கு இடைப்பட்ட ஒரு நாளில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க .தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான சரியான திகதி ஜூலையில் முடிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அரசியலமைப்பு மற்றும் சட்ட கட்டமைப்பிற்கு இணங்குவதை வலியுறுத்திய ரத்நாயக்க, தேர்தல் திகதியைத் தேர்ந்தெடுப்பதில் அரசியலமைப்பு மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டம் ஆகிய இரண்டிலும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றப்படும் என்று குறிப்பிட்டார். மேலும் விளக்கமளித்த தேர்தல் ஆணையத்தின் தலைவர், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக…

  5. 25 NOV, 2023 | 03:11 PM யாழ்ப்பாண பல்கலைக்கழக தாவரவியல் துறைத் தலைவர் உட்பட சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். விஞ்ஞான பீடத்தின் தாவரவியல் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஈ.சி. ஜெயசீலன், கணிதவியலும் புள்ளிவிபரவியலும் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே.கண்ணன், கலைப்பீடத்தின் கல்வியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி (திருமதி) ஜே.இராசநாயகம் ஆகியோரை பேராசிரியர்களாக பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை இன்றைய சனிக்கிழமை (25) ஒப்புதல் வழங்கியது. பல்கலைக்கழக பேரவையின் மாதாந்த கூட்டம் இன்று காலை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற…

  6. உடன் அமுலுக்கு வரும் வகையில் ’ DOOR TO DOOR ’ நிறுத்தப்படுகின்றது வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொருட்களை அனுப்பும் DOOR TO DOOR முறையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை சுங்க திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. வெளிநாட்டினர் இம்முறையின் மூலம் இலங்கைக்கு பல்வேறு பொருட்களை அனுப்புவதுடன், குறித்த பொருட்கள் தனியார் போக்குவரத்து முகவர் நிலையங்கள் மூலம் நேரடியாக குறித்த நபர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. எவ்வாறாயினும், பொதுமக்களின் தொடர்ச்சியான முறைப்பாடுகள் மற்றும் அதன் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு, இந்த விநியோக முறையை தற்காலிகமாக இடைநிறுத…

  7. மாவீரர் தினத்தை நினைவுகூர முயற்சித்தால் இதுதான் கதி! எதிர்வரும் நாட்களில் வடக்கு கிழக்கில் இடம்பெறவுள்ள சட்டவிரோத “மாவீரர் தின நிகழ்வுகள்” தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பணியகத்தின் பணிப்பாளர் ஆகியோர் இன்று (24) மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதிமொழி ஒன்றை வழங்கினர். இதன்போது, பொதுச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இம்மாதம் 27ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நடைபெறவுள்ள சட்டவிரோத மாவீரர் தின நிகழ்வுகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி இராணுவத்தின் ஓய்வுபெற்ற புலனாய்வு…

  8. சேமிப்பு கூடம் அமைப்பு adminNovember 24, 2023 , மாவீரர் தினத்தில் தமிழ் மக்களின் கூட்டுணர்வையும் கூட்டுரிமையையும் வெளிப்படுத்தும் வகையில் நினைவேந்தலுக்கு தேவையான பொருட்களை சேகரிப்பதற்கான கூடம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ளது. நினைவேந்தலுக்கு தேவையான கற்பூரம், எண்ணெய், சுட்டி, திரி என்பவற்றை நவம்பர் 27 ஆம் திகதி வரை தினமும் திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயில் அருகில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சேகரிப்பு கூடத்தில் வழங்க முடியும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. https://globaltamilnews.net/2023/197757/

    • 1 reply
    • 603 views
  9. அதிக மழைவீழ்ச்சி மற்றும் அதிகரித்த நீர்மின் உற்பத்தி காரணமாக மின் கட்டணத்தில் திருத்தங்கள் ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நீர் மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்களின் பிரதேசங்களில் மிக அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. நேற்றைய நிலவரப்படி, 96% நீர்த்தேக்கங்கள் கொள்ளளவிற்கு நிரம்பியுள்ளன என்றார். அதன்படி, சுமார் 1,200 ஜிகாவொட் மணித்தியாலம் நீர் மின்சாரம் மூலம் சேமிக்கப்பட்டுள்ளது. தற்போது 65% நீர்மின்சாரம் மூலமும் 17% அனல் மின்சாரம் மூலமும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், புதுப்பிக்கத்தக்க சக்தி 75% ஆக அதிகரித்துள்ளது. நாட்டின் மின்சார விநியோகத்தில்…

  10. 25 NOV, 2023 | 12:18 PM வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் நாளை ஞாயிற்றுக்கிழமை (26) முதல் எதிர்வரும் 03ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மிகவும் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாளை ஞாயிற்றுக்கிழமை வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு தெற்காக காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. அது எதிர்வரும் 29ஆம் திகதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்புள்ளது. தற்போதைய மாதிரிகளின் கணிப்பின் படி இந்த ஆழ்ந்த காற்றழுத்த…

  11. மருத்துவப் பிரிவு கட்டிடம் திறக்கப்படவுள்ளது adminNovember 24, 2023 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக் கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவ பிரிவு கட்டிடம் உத்தியோகபூர்வமாக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது. புதிய கட்டடத்திற்கான “சாந்தி பூஜை” நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றதுடன் இன்று வெள்ளிக்கிழமை சமய சம்பிரதாயபூர்வமாக கட்டிடத்தில் பால் காய்ச்சப்பட்டது. இதன்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜா, பல்கலைக்கழக பீடாதிபதிகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், மருத்துவ பீடத்தின் கல்விப் பணியாளர்கள், ஆலோசகர்கள் உட்பட பல்வேறு முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர். …

  12. 24 NOV, 2023 | 04:38 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி திட்டம், யாழ். பூநகரி மின்னுற்பத்தி திட்டம், சம்பூர் அனல் மின்நிலையத் திட்டம், மட்டக்களப்பு ஓட்டமாவடி திட்டம் உள்ளிட்ட மின்னுற்பத்தியுடன் தொடர்புடைய 06 திட்டங்கள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும். ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதிகளில் மாத்திரம் மின்சார சபை 12 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளது. இலாபமடைந்தால் அதன் பயனை மக்களுக்கு நிச்சயம் வழங்குவோம் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மின…

  13. ஒட்டு மொத்த இலங்கையர்களும் நாட்டிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், கல்வி கூடியவர்கள் மற்றும் இளைஞர்கள் நாட்டிலிருந்து வெளியேற விரும்புகிறார்கள். நாட்டிலிருந்து வெளியேற விரும்புபவர்கள் கூடுதலாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கை எடுத்தவர்கள் என்று பார்த்தால் அது மேல் மாகாணத்தை சேர்ந்தவர்களாகவே இருக்கின்றார்கள் என ஆய்வொன்றிலிருந்து தெரியவந்துள்ளது. இவ்வளவு நாட்…

    • 2 replies
    • 677 views
  14. Published By: VISHNU 24 NOV, 2023 | 03:10 PM இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் பயணிக்கும் கப்பல்கள் மூலம் நாட்டுக்கு வருடாந்தம் சுமார் 200 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டும் வகையில் இலத்திரனியல் கடல்சார் விளக்கப்படங்களை (Electronic Navigation Charts) உருவாக்க தேசிய நீரியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார். நாரா நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் தற்போதுள்ள கடல்சார் வரைபடங்கள் பிரித்தானிய நீரியல் அலுவலகத்தினால் செயற்படுத்தப்படுவதாகவும், எனவே எதிர்காலத்தில் இலத்திரனியல் கடல்சார் விளக்கப்படங்களை உருவாக்கும் பொறுப்பை கடற்படையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்…

  15. இரு பிள்ளைகளின் தாயான மரண தண்டனைக் கைதிக்கு பொதுமன்னிப்பை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை 24 NOV, 2023 | 04:37 PM மரண தண்டனையை ஏதிர்நோக்கியுள்ள 2 பிள்ளைகளின் தாயான செ.சத்தியலீலாவை விடுதலை செய்வதற்குரிய பொதுமன்னிப்பை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதிக்கான குறித்த கோரிக்கை கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (24) முற்பகல் குரலற்றவர்களின் குரல் அமைப்பினரலால் நேரில் கையளிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் சார்பில் ஆளுநர் செயலக மக்கள் தொடர்பு அலுவலகர் குலசிங்கம் வசீகரன் குறித்த கோரிக்கை கடிதத்தினை பொற…

  16. 24 NOV, 2023 | 05:11 PM ஆறு மாத குழந்தை ஒன்றை விசப்பாம்பு தீண்டியதால் பரிதாபகரமான முறையில் பலியான சம்பவம் இன்று (24) அதிகாலை மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஒல்லிக்குளம் பற்றிமாபுரத்தில் இடம்பெற்றது. பாத்திமா புரத்தில் உள்ள தனது வீட்டில் வெற்றுத்தரையில் தூங்கிக்கொண்டிருந்த ஆறு மாத குழந்தையை பாம்பு பல இடங்களில் தீண்டியுள்ளதால் மரணம் ஏற்பட்டிருப்பதாக திடீர் மரண விசாரணை அதிகாரியின் பிரேத பரிசோதனைகளில் இருந்து தெரியவந்துள்ளது. தாயின் அருகே தூங்கிக் கொண்டிருந்த தனது குழந்தையை இன்று அதிகாலை மூன்று முப்பது மணி அளவில் பாம்பு தீண்டி இருக்கிறது. தாய் காலை 7 மணி அளவில் மயக்க நிலையில் இருந்த குழந்தையை ஆரையம்பதி வைத்தியசாலையி…

  17. பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர்களை கையாள்வதற்கான புதிய வழிகாட்டல்களை தாம் தயாரித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் மரணங்கள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளதை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பொலிஸ் காவலில் இறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 11 ஆம் திகதி வழிகாட்டல்கள் வெளியிடப்படும் என சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/282287

  18. 24 NOV, 2023 | 01:27 PM அம்பாறை பொது வைத்தியசாலையின் கண் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் அவர் தங்கியிருந்த தனியார் விடுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்பாறை பொலிஸ் நிலையத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த மருத்துவர், அவர் பணிபுரியும் வைத்தியசாலைக்கு திட்டமிட்டபடி வராததால் வைத்தியசாலையைச் சேர்ந்தவர்கள் அவரது தொலைபேசிக்கு பலமுறை அழைத்தனர். இருப்பினும் அவரிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து வைத்தியசாலையைச் சேர்ந்த இரு தாதிகள், குறித்த டாக்டர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றுள்ளனர். அதன்போது குறித்த வைத்தியர் படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும் நில…

  19. நினைவேந்தலுக்கு எதிராக தடையுத்தரவு! சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு 17 பேருக்கு மட்டும் மூதூர் நீதவான் நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் சம்பூர் பொலிஸாரினால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நகர்த்தல் பத்திரத்துக்கமைய இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை வழங்குவதற்காக இன்றைய தினம் சம்பூர் பொலிஸார் துயிலுமில்லத்துக்கு வருகைதந்து குறித்த தடையுத்தரவுகளை வழங்க முற்பட்ட போது தடையுத்தரவில் குறிப்பிடப்பட்ட பெயர்களில் தவறாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தம்முடைய பெயர்களை அடையாளப்படுத்தக…

  20. ”மீனவர் பிரச்சினை இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும்” இந்திய மீன்பிடிப் படகுகள் சட்டவிரோதமாக இந்நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் பிரச்சினை இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும் எனக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற கடற்றொழில் அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானமாக இந்திய மீனவப் படகுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க கடற்படையின் சம்பந்தப்பட்ட பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ள அ…

  21. 24 NOV, 2023 | 09:36 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வடக்கு, கிழக்கில் தமிழ் மொழியில் சேவையாற்றக் கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கான பயிற்சிகள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் இடையில் பல்வேறு காரணங்களால் அது சற்று மந்த நிலையிலேயே காணப்பட்டது என நீதி, அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். அவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் சேவையாற்றக்கூடிய 6000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மொழி பயிற்சிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் மூலம் தமிழ் மொழியில் சேவையாற்ற கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்கள்க…

  22. ”வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்”: கஜேந்திரகுமார் ஆதங்கம்! வடக்கு, கிழக்கிற்கு என்று வரவு செலவுத் திட்டத்தில் தனியாக நிதி ஒதுக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் அதன்போது மேலும் கூறியுள்ளதாவது, குறித்த பிரதேசம் ஏனைய பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுடைய பொருளாதாரத்துடன் போட்டி போட முடியாத நிலையாக உள்ளது. ஆனாலும் எந்த விதத்திலேயும…

  23. Published By: DIGITAL DESK 3 23 NOV, 2023 | 05:06 PM (நா.தனுஜா) மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் மிகமோசமாக மீறப்பட்டிருக்கின்ற போதிலும், இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைத் தொடர்ந்து பெறுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இடமளித்திருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம் வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையின் பிரகாரம் நிறைவேற்றப்படவேண்டிய கடப்பாடுகள் மற்றும் பூர்த்திசெய்யப்படவேண்டிய நிபந்தனைகளை அடிப்படையாகக்கொண்டு கடந்த 2020 - 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் என்பவற்றை உள…

  24. Published By: DIGITAL DESK 3 23 NOV, 2023 | 04:49 PM (நா.தனுஜா) ஆட்கடத்தலை முற்றாக முடிவுக்குக்கொண்டுவருவதற்குரிய குறைந்தபட்ச தராதரங்கள் இலங்கை அரசாங்கத்தினால் இன்னமும் முழுமையாக எட்டப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியிருக்கும் அமெரிக்கா, ஆட்கடத்தல் செயற்பாடுகளை முறியடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகளையும் முன்வைத்திருக்கின்றது. 2023 ஆம் ஆண்டில் இலங்கையின் ஆட்கடத்தல் நிலைவரம் குறித்து அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, ஆட்கடத்தலை முற்றாக முடி…

  25. 23 NOV, 2023 | 10:12 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) காஸா பிரச்சினைக்கு அரசியல் தீர்வு இல்லாமையே காரணமாகும் அதனால் அங்கு அரசியல் தீர்வொன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இலங்கையிலும் வடக்குக்கு அரசியல் தீர்வு வழங்கி வடக்கை அபிவிருத்தி செய்ய இருக்கிறோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் ரவூப் ஹக்கீம் காஸா தொடர்பாக ஆற்றிய உரைக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.