ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143259 topics in this forum
-
"uch a peace [in Sri Lanka] can only be reached once the full truth about the past is understood." - Joint letter from 58 members of Congress to Secretary of State Hillary Clinton Momentum is building. Help ensure that those responsible for war crimes in Sri Lanka are finally brought to justice. Dear! The amazing response from Congress really put a fire under us! Within the first 24 hours of asking Representatives to sign on to a letter calling for an international investigation into war crimes in Sri Lanka, we got one new co-signer every hour!1 In just 8 days total, we won the support of 58 members of Congress. One by one, they added their n…
-
- 0 replies
- 430 views
-
-
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் 13 சங்கிலிகளும் ஒரு தாலிக் கொடியும் திருடர்களினால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புடைய பெண் ஒரு வரும் ஆண் ஒருவரும் வல்வெட்டித்துறைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வரலாற்று புகழ்மிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த்திரு விழா நேற்று இடம் பெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதுடன் பெருமளவான பறவைக்கா வடிகள், என்பவற்றையும் மேற்கொண்டனர். இவ்வாறு பக்தர்கள் பக்திபூர்வமாக இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர். இவ்வாறு சுமார் 13 தங்கச் சங்கிலிகளும், ஒரு தாலிக்கொடியும் களவு போயுள்ளதாக முறையிடப்பட்டுள…
-
- 6 replies
- 924 views
-
-
போரில் மனிதர்கள் வீழ்வதைப் பார்த்திருக்கிறோம். இங்கே மரங்களே வீழ்ந்து கிடக்கின்றன.காடு என்று சொல்கிறார்கள், ஆனால் அங்கே காட்டுக்கு பதில் கட்டாந்தரைதான் தென்படுகிறது” என்று சொல்கிறார் எம்.எஸ்.நாகராஜன். உடல் ஊனமுற்றோர் மற்றும் மன நிலை பாதிக்கப்பட்டோருக்கான ஆசிய பசிபிக் விளையாட்டுப் போட்டிகளின் மேலாளர்.சமீபத்தில் இலங்கை சென்று தமிழீழப் பகுதிகளை பார்வையிட்டு வந்திருக்கிறார். “கண்டியிலிருந்து வவுனியா பகுதிக்குச் செல்ல நாலரை மணி நேரம் ஆகிறது. இடையில் இரண்டு ராணுவ முகாம்கள். சிங்கள ராணுவ வீரர்கள் நம்மை கடுமையாக சோதிக்கிறார்கள்.அதன் பின்னே புலிகள் அரசாண்ட பகுதிக்கு அனுமதிக்கிறார்கள். வவுனியாவுக்குள் நுழைந்தால் நிறைய வீடுகள் இருக்கின்றன. ஆனால் எதிலும் மனிதர்கள் இல…
-
- 0 replies
- 948 views
-
-
இலங்கை செல்கிறேன்: எஸ்.எம்.கிருஷ்ணா முகாம்களில் அடைப்பட்டுள்ள தமிழர்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த, விரைவில் இலங்கை செல்ல உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் புலம் பெயர்ந்த தமிழர்கள் தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய அவர், உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்திய அரசு தொடர்ச்சியாக உதவி செய்து வருகிறது. மறுகுடியமர்த்தப்பட்டுள்ள தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசை இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. போர் நடைபெற்ற பகுதியில் இந்திய அரசு சிறப்பு வாய்ந்த மருத்துவமனையை அமைத்த…
-
- 2 replies
- 697 views
-
-
ஆக 26, 2010 / பகுதி: செய்தி / நடுவண் தமிழீழத்தில் கல்வி நடவடிக்கை நிறுத்த ஸ்ரீலங்கா உத்தரவு நடுவண் தமிழீழமான வன்னி மாவட்டத்தின் சகல கல்வி நடவடிக்கைகளையும் உடனடியாக இடை நிறுத்துமாறு ஸ்ரீலங்கா வட மாகாண ஆளுனர் ஜீ ஏ சந்திரசிறி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னி மாவட்டத்தின் கலவி நடவடிக்கைகள், கடந்த யுத்த காலத்தில் சேதமடைந்த கட்டிடங்களிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அந்த கட்டிடங்களின் புனர்மான நடவடிக்கைகள் நிறைவடையும் வரையில், வன்னி மாவட்டத்தின் கல்வி நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற கல்வி அதிகாரிகளுக்கான கூட்டம் ஒன்றின் போது அவர் இந்த உத்தரவை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. …
-
- 1 reply
- 554 views
-
-
இந்திய விசா விண்ணப்பிபவர்கள்,இந்தியா செல்வோர்,இலங்கை பொலிஸ் சான்றிதழ் பெற விண்ணப்பிப்பவர்கள் மற்றும் இலங்கை செல்பவர்கள் கவனத்திற்கு:- 1,இந்திய விசா விண்ணப்பத்துடன் இலங்கை பொலிஸ் சான்றிதழ் பெற ஒரு படிவத்தையும் போர்த்தி செய்கிறீர்கள்.அத்துடன் இரு படங்களையும் வழங்குகிறீர்கள்.அதில் ஒரு படமும் பொலீஸ் சான்றிதழ் பெற வழங்கிய விண்ணப்பமும் இலங்கை பாதுகாப்பு அமைச்சிடம் கையளிக்கப்படுகிறது.இங்கே தான் முக்கியமான விடயங்கள் நடைபெறுகிறது. நீங்கள் அல்லது உங்கள் குடும்ப அங்கத்தவர்கள் குற்றசெயல்களில் ஈடுபட்டிருந்தாலோ பிரிவினை வாதத்திற்கு ஆதரவளிப்பவராக இருந்தாலோ அல்லது நீங்கள் ஒரு முக்கியமான நபராகவிருந்தாலோ உங்களின் விபரங்கள் இந்திய அரசுக்கு வழங்குவதோடு நீங்கள் வசிக்கும் நாட்டு பாதுகாப்ப…
-
- 0 replies
- 1k views
-
-
முடிந்து போன ஒரு அத்தியாயம் [ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 01:26.23 பி.ப | இன்போ தமிழ் ] கே.பி தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரையில் முடிந்து போன ஒரு அத்தியாயம் மாத்தயா ,கருணா போன்றவர்களின் வரிசையில் கே.பி இடம்பிடிக்கிறாரா இல்லையா என்பதையெல்லாம் தீர்மானிக்கப் போவது காலம் தான். கே.பி தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இருந்து விலகி நிற்கும் நிலையில் அவருக்கு எதிரான பிரசாரங்களையே முழுநேர வேலையாக புலம்பெயர் ஊடகங்கள் பலவும் மேற்கொள்கின்றன. இந்தக் கட்டத்தில் நாம் அடிப்படை இலட்சியத்தையும்- அதை நோக்கிய பயணத்தையும் மறந்து கே.பியின் தலை எங்கே, வால் எங்கே என்று தேடிக் கொண்டிப்பது முட்டாள்தனம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கான முயற்…
-
- 0 replies
- 1k views
-
-
தயா மாஸ்ரர், ஜோர்ஜ் மாஸ்ரர் மீதான புலனாய்வு விசாரணைகள் பூர்த்தி,சட்ட மா அதிபரிடம் யோசனை! வியாழன், 26 ஆகஸ்ட் 2010 11:56 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரமுகர்களாக இருந்து வந்த தயா மாஸ்ரர் ,ஜோர்ஜ் மாஸ்ரர் ஆகியோர் மீதான புலனாய்வு விசாரணைகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் இருவரையும் இனி என்ன செய்ய வேண்டும்? என்று சட்டமா அதிபரின் ஆலோசனையை குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் கோர உள்ளார்கள். இருவர் மீதான வழக்கும் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. அப்போதே குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் இதனை பிரதான நீதிவான் ரஸ்மி சிங்கப்புலிக்கு தெரிவித்தனர். இதையடுத்து நீதிவான் வழக்கை எதிர்வரும்14 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். தயா மாஸ்…
-
- 1 reply
- 724 views
-
-
யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு நீதிபதி, எஸ் பரமராஜா மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். யாழ்ப்பாணம் மீசாலை பகுதியைச் சேர்ந்த 23 வயதான யோகன் பிரியதர்சினி என்பவரை கடத்தி சென்று நகைகளை கொள்ளையிட்டதுடன் அவரை கொலை செய்ததாக குற்றவாளி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கு சுமார் 11 வருடங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டிருந்தது நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்தக்கொள்ளப்பட்டது. இதுவரையில் சந்தேகநபர், கண்டி போகாம்பறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். விசாரணைக்காக அவர் நேற்று யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். …
-
- 2 replies
- 1.2k views
-
-
மலேசிய நிருபர் வியாழக்கிழமை, ஆகஸ்ட் 26, 2010 உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் குறித்து டெல்லியில் இந்திய உளவுத்துறையால் நடத்தப்பட்டு வரும் காவல்துறை உயர் அதிகாரிகளின் மாநாட்டில், நாளை மறுநாள் மாலையில் விடுதலைப் புலிகள் - ஆதரவாளர்கள் மீது வருங்காலத்தில் எந்த மாதிரி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும், எப்படி பிரச்சனைகளை கையாள்வது போன்ற முடிவுகள் எடுக்கப்பட உள்ளன என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்திற்காக தமிழகத்தில் இருந்து பல வி.ஐ.பி.களும்? பொலிஸ் அதிகாரிகளும் டெல்லிக்கு சென்றுள்ளனர். Eelanatham.net
-
- 2 replies
- 1.3k views
-
-
http://www.yarl.com/files/100824_father_jegath_kasper.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா
-
- 12 replies
- 3.5k views
-
-
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணையுமா? தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சு வார்த்தை இடம் பெற உள்ளது தமிழ்தேசியக்கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கும் இடையில் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது அரசியலமைப்பு சீர்திருத்தம், மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனை போன்றவை தொடர்பில் பேச்சு நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது எனினும், தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன், இந்தியாவுக்கு சென்றிருந்தமை காரணமாக இந்த சந்திப்பு இடம்பெறவில்லை. இந்தநிலையில், சம்பந்தன், எதிர்வரும் வாரத்தில் இலங்கை வருவதை அடுத்து இந்த …
-
- 0 replies
- 600 views
-
-
தமிழகத்தின் எதிர்க்கட்சிகளை கேபி குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள இயலாது: வேல்முருகன் எம்.எல்.ஏ ஈழத்தில் போர்நிறுத்தம் ஏற்படாமைக்கு தமிழக எதிர்க்கட்சிகளை கேபி குற்றம் சொல்வது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று என்றும், ஈழத்தில் போரை நடத்தியதே இந்தியாதான் இந்நிலையில் இலங்கைக்கு தூதர் குழுவை அனுப்புவதால் ஈழத்தமிழர்களுக்கு எவ்வித பயனுமே இல்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ. திரு.வேல்முருகன் நமது மீனகம் தளத்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். http://meenakam.com/?p=5900
-
- 0 replies
- 652 views
-
-
சன் சீ கப்பலின் உரிமையாளர் கஸ்தூரிராஜா குணாரொபின்சன் என்பவரே கஸ்தூரிராஜா குணாரொபின்சன் என்ற ஒருவருக்கு சொந்தமானது என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. என சர்வதேச காவல்துறையினர் அறிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக குணாரொபின்சன் 175000 அமெரிக்க டொலர்களைக் கொடுத்து சன் சீ என்ற கப்பலை கொள்வனவு செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 2008ம் ஆண்டு மலேசியாவிலிருந்து ,இலங்கைக்கு சென்ற கஸ்தூரிராஜா குணாரொபின்சன் சுற்றுலாப் பயணி என்ற போர்வையில் தங்கியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. சன் என்ட் ரஸ்யா என்ற போலி நிறுவனமொன்றின் பெயரில் ,இந்த கப்பல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அது மேலும் தொவித்துள்ளது யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட குறித்த நபர் நீண்ட…
-
- 0 replies
- 1k views
-
-
சிறீலங்கா ஜனாதிபதி கம்பளையில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காதரை சந்தித்துள்ளார் சிறீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கம்பளைக்குச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.எம். காதரைச் சந்தித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.எம். காதரின் ,இல்லத்திற்கு சிறீலங்கா ஜனாதிபதி சென்றதாகவும், நோன்பு திறக்கும் நிகழ்விலும் சிறீலங்கா ஜனாதிபதி கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிறீலங்கா ஜனாதிபதியுடன் பிரதமர் டி.எம். ஜயரட்னவும் ,இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார். கம்பளையைச் சேர்ந்த பல ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. http://meenakam.co…
-
- 0 replies
- 393 views
-
-
சிறீலங்கா அரசாங்கம் சரியான யோசனைகளை ,இதுவரையில் முன்வைக்கவில்லை என திஸ்ஸ அத்தநாயக்க அரசு மீது குற்றம் சுமத்தினார் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்காத எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தங்களுக்கும் ஆதரவளிக்கப்பட மாட்டாது என எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது ஐக்கிய தேசியக் கட்சி கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல் அல்லது நிறைவேற்று அதிகார பிரதமர் முறைமையை உருவாக்கல் ஆகியன தொடர்பில் அரசாங்கம் சரியான யோசனைகளை ,இதுவரையில் முன்வைக்கவில்லை என திஸ்ஸ அத்தநாயக்க அரசு மீது குற்றம் சுமத்தினார். அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில்…
-
- 0 replies
- 416 views
-
-
மக்கள் உரிமைகளை அடக்கும் அரசாங்கம் டெங்கு நோயை அடக்க முடியாமல் திணருகின்றது – ரணில் மக்கள் உரிமைகளை அடக்கும் அரசாங்கத்திற்கு டெங்கு நோயைக் கட்டுப்படுத்த முடியவல்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மக்களின் நியாயமான கோரிக்கையினை அடக்கு முறைக்கு உட்படுத்த காட்டும் தீவிரம் , டெங்கு நோயைக் கட்டுப்படுத்த காட்டினால் மக்கள் பயனடைவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். டெங்கு ஒழிப்பு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியினால் ஒழுங்கு செய்யப்பட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது அவர் ,இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்கவினால் ,இந்த டெங்கு ஒழிப்பு யோசனைத் திட்ட…
-
- 0 replies
- 487 views
-
-
தீபச் செல்வன் – வலிச்சொற்களில் கனன்றுக் கொண்டிருக்கும் கனவு – மணி செந்தில் கனவு நிலத்தில் பேய்களின் நிழல் படர்ந்து ஆக்கிரமிக்க முயல்கிறது குழந்தைகளின் நிலக்கனவு தகிக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்க பூர்வீக நிலத்தை அள்ளிச் செல்லும் பொழுது குழந்தைகளின் கண்களை பொத்திக் கொள்வதா? – தீபச் செல்வன் துயர் மிகுந்த உண்மை படைப்பாய் மிளிரும் போது நன்றாக இருக்கிறது என்று கைக் குலுக்க முடியவில்லை. கண் கலங்கத்தான் முடிகிறது. என் சகோதரன் தீபச் செல்வன் சொற்களில் ஈழத்து துயரம் பெருக்கெடுக்கையில் மிகுந்த குற்ற உணர்வோடு என் வாசிப்பு அனுபவம் நிகழ்கிறது. ஒவ்வொரு வரியின் ஊடாக ஆழமாக நாம் ஊடுரும் போது ஈழத்து உறவின் சதை துணுக்கு ஒன்று நம் முகத்தில் அறைந்து நம்மை திடுக்கிட வ…
-
- 0 replies
- 554 views
-
-
நல்லூர் முருகன் கோவில் 11 ஆம் நாள் விழா நல்லூர் முருகன் கோவில் 11 ஆம் நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. more photos: http://meenakam.com/?p=5934
-
- 0 replies
- 502 views
-
-
மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் தொடர்பில் இதுவரையில் தகவல் இல்லை காணாமல் போயுள்ள மட்டக்களப்பு மாநகரசபையின் ஆளும் கட்சி உறுப்பினர் பிரகாசம் சகாயமணி குறித்த எந்த விதமான தகவல்களும் இதுவரையில் கிடைக்கவில்லை என அவரின் மனைவி தெரிவித்துள்ளார். கில்லி என அழைக்கப்பட்ட மாநகரசபை உறுப்பினரை நேற்று முன்தினம் இரவு 7 மணியில் இருந்து காணவில்லை என காவற்துறையில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது அவர் கிழக்கு மாகாண ஆளும் கட்சியான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்;சியின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினராவார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு மாநகர சபைதேர்தலில் ஆளும் சுதந்;திர முன்னணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதற்கிடையில், காணாமல் போயுள்ள மாநகர சபை உறுப்பினர் பிரகாசம் …
-
- 0 replies
- 392 views
-
-
அறிவுரை தீர்ப்பாயத்திற்கு முன் சீமான் தமிழின எழுச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து போராடியும் வரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மீது கருணாநிதியின் தலைமையிலான அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஏவிக் கைது செய்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சீமான் தன்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது அந்த வழக்கு தற்பொழுது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தன்னை தேசியப்பாதுகாப்பு சட்டத்தில் அடைத்தது தவறு என்றும் தனது தரப்பு முறையீட்டினைத் தெரிவிக்க இன்று ஒரு மணியளவில் காவல் துறையினர் செந்தமிழன் சீமான் அவர்களை சென்னையில் சிங்காரவேலர் மாளிகையில் (மாவட்ட ஆட்சியர் அலுவலகம்) உள…
-
- 0 replies
- 407 views
-
-
கிளிநொச்சியில் மக்களின் அவல வாழ்க்கை அனைவரும் மௌனமென மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர் கிளிநொச்சியில் தற்போது பெய்து வரும் கடும் மழையினால் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்படாது பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டிருக்கும் சாந்தபுரம் கிராம மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த சாந்தபுரத்தைச் சேர்ந்த 281 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்படுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டன. இரண்டு மாதங்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தங்கவைக் கப் பட்டிருந்த இந்த மக்கள் சொந்தக் கிராமத்தில் மீள் குடியமர்த்தப்படுவதாகக் கூறப்பட்டு சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத் துக்கு அழைத்துவர…
-
- 1 reply
- 419 views
-
-
வன்னியில் போரின் போது சிங்களப்படையினரால் நொருக்கப்பட்ட பாடசாலைகள் இன்னமும் கட்டிக்கொடுக்கப்படவில்லை. என்றாலும் வன்னியில் உள்ள மக்கள் மரங்களின் கீழ் தம் பிள்ளைகளிற்கான கற்பித்தலை நடாத்திக்கொண்டிருக்கின்றன. இதனால்மக்களிடம் இருந்தும் வெளி நாட்டு அமைப்புக்களிடம் இருந்தும்; அரசாங்கம் பாடசாலைகளை கூட இன்னமும் திருத்திக்கொடுக்கவில்லை என குறை கூறி வருவது அனைவரும் அறிந்ததே. இதனால் அரசாங்கத்திற்கு ஏற்படும் அபகீர்த்தியினை தணிக்க முற்பட்ட மாதனமுத்தாவான வடபகுதி ஆழுநர் பாடசாலைகளையே நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளார். அதாவது பாடசாலைகளை அரசாங்கம் கட்டிக்கொடுக்கும்வரை கற்பித்தல்களை நிறுத்துமாறு மாதனமுத்தா பாணியில் கூறியுள்ளார் கேணல் சந்திரசிறி (வடபகுதி ஆழுனர்). http://www.eelanatha…
-
- 5 replies
- 951 views
-
-
அண்மையில் சவூதியில் இருந்து இலங்கை திரும்பிய ஓர் பணிப்பெண்ணின் உடலினுள் இருபத்து ஆணிகளை வைத்தியர்கள் கண்டுள்ளார்கள். காலத்திற்கு காலம் சவூதியில் உள்ள வேலை வழங்குனரின் சித்திரவதைகளுக்குள்ளாகிய குறிப்பிட்ட பெண்ணிற்கு தண்டனையாக அவரது உடலில் இருபத்து நான்கு ஆணிகள் செலுத்தப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளாகிய பெண் தற்போது இலங்கையில் உள்ளூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். கீழுள்ள படத்தில் கையினுள் ஆணிகள் ஏற்றப்பட்டிருப்பதை காணலாம். The detail of an X-ray film held up by a doctor shows nails driven into the hand of a Sri Lankan housemaid தகவல் மூலம்: ஏ.எவ்.பி
-
- 3 replies
- 1k views
-
-
ஆக 25, 2010 / பகுதி: செய்தி / சிறீலங்கா வான்படைக்கு காண்காணிப்பு சாதனங்களை அமெரிக்கா வழங்கியது சிறீலங்கா வான்படையின் கண்காணிப்பு விமானங்களுக்கு தேவையான தொழில்நுட்ப சாதனங்களை அமெரிக்க அரசு வழங்கியுள்ளது. இரத்மலானை விமானப்படைத்தளத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சிறீலங்காவுக்கான அமெரிக்க பிரதி தூதுவர் வலாரே பௌலர் இந்த சாதனங்களை வழங்கியிருந்தார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சிறீலங்கா படைகளின் பிரதம தளபதி ஏயர் சீஃப் மார்ஷல் றொசான் குணதிலகா பேசும் போது தெரிவித்துள்ளதாவது: அமெரிக்காவின் உதவியுடன் சிறீலங்கா வான்படை தனது கண்காணிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆழ்கடல் நடவடிக்கைகளில் இது அனுகூலமானது. சிறீலங்கா வான்படை வசம் பீச் கிராஃப்…
-
- 1 reply
- 517 views
-