Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலிகள் பற்றி பேச சாணக்கியனுக்கு உரிமையில்லை - சாமர சம்பத் (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றி பேசுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் 9 எம்.பிக்களுக்கு மாத்திரமே உரிமையுண்டு. சாணக்கியனுக்கு உரிமையில்லை. ஏனெனில், அவரது செயற்பாடுகளும் உறவுகளும் சிங்களவர்களுடன் தொடர்புபட்டுள்ளது. இவர் சிங்கள பெண்ணை மணக்கவுள்ளார் என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (07) இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய சாணக்கியன் இராசமாண…

    • 2 replies
    • 429 views
  2. இருதரப்பு பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் இலங்கையும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தை இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் சர்வதேச தகவல் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெற்றதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தலைமையில் அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு சபையின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ் மற்றும் நீதி, சிறைச்சாலை விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர். அலெக்சாண்டர் நிகோலாவிச் மற்றும் துணைச் செயலாளர் ஒலெக் விளாடிமிரோவிச் ஆகியோர் அடங்கிய ரஷ்ய…

    • 0 replies
    • 284 views
  3. Published By: RAJEEBAN 07 DEC, 2023 | 11:26 AM 1983 முதல் 2009 வரையான உள்நாட்டு போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தமைக்காக இலங்கை அதிகாரிகள் நாட்டின் துஸ்பிரயோக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 9 தமிழர்களை தடுத்துவைத்துள்ளனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தனது சர்வதேசசகாக்கள் வர்த்தக சகாக்கள் ஐக்கியநாடுகள் ஆகியவர்களுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடப்போவதாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தப்போவதாக தெரிவித்து வந்துள்ளதுஇஎன சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இந்த சட்டம் நீண்டகாலமாகசிறுபான்மை சமூகத்தினர் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை தடுத்துவைத்து சித்திரவதை செய…

  4. Published By: DIGITAL DESK 3 07 DEC, 2023 | 02:40 PM (லியோ நிரோஷ தர்ஷன்) நல்லிணக்க செயல்முறைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கு உதவும் வகையில் சுரேன் சுரேந்திரன் தலைமையிலான உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் சுரேன் சுரேந்திரன் குழுவினர் சந்தித்து கலந்துரையாட உள்ளனர். அத்துடன், அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மஹா நாயக்க தேரர்களையும் சந்தித்து கலந்துரையாட உள்ளதுடன், சிவில் சமூகத்தினைரையும் சந்திக்க உள்ளனர். இதன் பிரகாரம் தேசிய சமாதான பேரவையுடனான சந்திப்பு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. இதேவேளை வடக்குக்கு …

  5. 07 DEC, 2023 | 02:17 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் ஜஹ்ரான் குழுவினர் ஒத்திகை தாக்குதலொன்றை மேற்கொண்டனர், இந்த ஒத்திகை குறித்து சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளிற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கேள்வியொன்றிற்கு பதில் அளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்பாக ஏப்பிரல் 16 ம் திகதி ஜஹ்ரான் குழுவினர் தாழங்குடாவில் ஒத்திகையில் ஈடுபட்டனர். இது குறித்து சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளிற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது என அமைச்சர் தெரிவித்துள்ளார். தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜயவர்த்தன இது குறித்து அப்போதைய…

  6. எமது தமிழ் இளைஞர்கள் இந்த நாட்டில் தொடர்ச்சியாக ஒரு அச்ச உணர்வுடன் வாழ முடியாது : பா.உ கலையரசன்! kugenDecember 7, 2023 (சுமன்) இந்த நாட்டில் தொடர்ச்சியாக எமது தமிழ் இளைஞர்கள் ஒரு அச்ச உணர்வுடன் வாழ முடியாது. அவர்களும் இந்த நாட்டின் பிரஜைகள். அவர்களுக்கும் தன் இனம், சமூகம் சார்ந்த உணர்வுகள் இருக்கின்றது. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களை சுதந்திரமாக வாழ வைக்க வேண்டிய பொறுப்பு இந்த நாட்டின் அனைத்து அரசியற் தலைவர்களுக்கும் இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். நேற்றைய தினம் பாராளுமன்றில் சக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில…

  7. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக வடிவேல் சுரேஷ் நியமனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிரேஷ்ட ஆலோசகராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். மலையகத் தமிழர்களை இலங்கை சமூகத்துடன் முழுமையாக இணைத்துக்கொள்வது குறித்து அறிக்கையிடும் பொறுப்பு வடிவேல் சுரேஷுக்கு இருக்கும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை அமைப்பாளர் பதவியில் இருந்து வடிவேல் சுரேஷை கட்சி நீக்கியது. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது வடிவேல் சுரேஷ் ஆதரவாக வாக்களித்ததை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. https://thinakkural.lk/article/283864

  8. உக்ரேன் இராணுவத்தில் கடமையாற்றிய இலங்கையர்கள் மூவர் உயிரிழப்பு உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் மோதலில் உக்ரேனிய இராணுவத்தில் அதிகாரிகளாக பணியாற்றிய இலங்கையர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர். துருக்கியின் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம், பக்முட்டில் நடந்த அதிரடி நடவடிக்கையில் இலங்கை அதிகாரிகள் மூவரும் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியது. கடந்த செவ்வாய்க்கிழமை ( 05) உக்ரைன் போர்முனையில் ரஷ்யப் படைகளுக்கு எதிராகப் போரிட்ட போது அவர்கள் உயிரிழந்ததாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது. உயிரிழந்த மூன்று அதிகாரிகளில் இலங்கை இராணுவத்தின் முன்னாள் கெப்டன் ரனிஷ் ஹெவகேயும் உள்ளடங்குவார். உயிரிழந்த மற்றும் காயமடைந்த உக்ரேனிய இராணுவத்தினரை வெளியேற்…

  9. மீண்டும் தொடங்கும் கிரீஸ் மனிதன் வழக்கு! 2011 ஆம் ஆண்டு யாழ் குடா நாட்டில் ‘கிரீஸ் மனிதன்’ எனப்படும் அடையாளம் தெரியாத நபர்களின் மிரட்டல் செயல்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுகளின்படி ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவில்லை என உயர் நீதிமன்றம், சட்டமா அதிபருரை கடுமையாக சாடியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு அமைய செயற்பாடாமை தொடர்பில் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்கவை கடுமையாக சாடிய உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா, நீதிமன்ற நேரத்தை வீணடிக்காது மனுதார்களுக்கு ஆட்சேபனை நகலை ஒப்படை…

  10. ’நினைவு கூர உரிமையுண்டு ஆனால் மீறமுடியாது’ உயிரிழந்த உறவுகளை நினைவு கூருவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு, ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவை யாரும் மீற முடியாது அவ்வாறு மீறியவர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இவ்வாறு கைது .கைது செய்யுமாறு கூட எவரும் கட்டளை பிறப்பிக்கவில்லை.பொலிஸார் தமது கடமையை செய்துள்ளார்கள் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06 விசேட கூற்றை முன்வைத்த போதே இவ்வாறு தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி,புதிய சட்டத்தை உருவாக்க ம…

  11. யாழில். கடற்படையினர் இரத்த தானம்! adminDecember 7, 2023 இலங்கை கடற்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, காங்கேசன்துறையில் “உத்தர” கடற்படை தள வைத்தியசாலையில் இரத்த தான நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த இரத்த தான நிகழ்வில் கடற்படை தளபதிகள் உள்ளிட்ட 195 கடற்படையினர் இரத்த தானம் வழங்கி இருந்தனர். https://globaltamilnews.net/2023/198268/

  12. Published By: VISHNU 06 DEC, 2023 | 09:43 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வடக்கில் சிறுவர்களின் மனங்களில் சிங்களவர் தொடர்பில் வைராக்கியம் விதைக்கப்படுகிறது. தனி ஈழ இராச்சியத்துக்கு நாங்கள் உயிருடன் இருக்கும் வரை இடமளிக்க போவதில்லை. சிங்களவர்களும் இடமளிக்க மாட்டார்கள். நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றம் பெற்றால் தமிழ் அரசியல்வாதிகளும், அவர்களின் குடும்பத்தினரும் வெளிநாடுகளுக்கு செல்ல இடமளிக்கமாட்டோம். அவர்களும் யுத்தக் களத்துக்கு செல்ல வேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்ட…

  13. Published By: VISHNU. 06 DEC, 2023 | 07:50 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பெறுமதி சேர் வரியை 18 வீதமாக அதிகரித்து மக்கள் மீது எல்லையற்ற அழுத்தங்கள் சுமத்தப்பட்டுள்ளன. இவ்வாறு போகும் போக்கில் எதிர்காலத்தில் உடல் உறுப்புகளுக்கும் ''வற்'' வரி விதிக்கப்படலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) நிலையியற் கட்டளைகள் 27 (2) இன் கீழ் கேள்வி எழுப்பும் போதே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கடுமையான பொருளாதார நெருக்கடி ஒவ்வொரு நபரின் வாழ்க்கையையும் பாதித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர அனைவரும் தியாகம் செய்ய வேண்டியி…

  14. இனியபாரதி. சமாதானத்தின் செய்தியை தலதா மாளிகையிலிருந்து நல்லூர் நோக்கி எடுத்தும் செல்லும் பயணம் 100 இளைஞர் அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டது. சர்வமத தலைவர்களின் ஆதரவுடன் ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட 100 இளைஞர்கள் அமைப்புக்கள் கண்டி தலதா மாளிகை தொடக்கம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வரை உள்ள சர்வமத தலைவர்களுக்கு சமாதானத்தின் செய்தி மற்றும் கோரிக்கைகளை முன்வைத்தல் வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்தனர். நேற்று முன்தினம் திங்கட்கிழமை கண்டி தலதா மாளிகை மற்றும் கண்டி சிறீ நாட்ட தேவாலத்திற்கருகாமையில் இந்த செயற்திட்டத்தை ஆரம்பித்த இளைஞர்கள் நேற்று பிற்பகல் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை வந்தடைந்தனர். குறித்த இந்த வேலைத்திட்டம் அன்பிற்கும் நட்புக…

    • 3 replies
    • 695 views
  15. Published By: DIGITAL DESK 3 06 DEC, 2023 | 09:26 AM கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள குர்ஆன் மதரஸாவில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவனின் மரணத்தில் சந்தேகம் வெளியிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை (05) இரவு பொதுமக்கள் மதரஸாவை முற்றுகையிட்டு குழப்பத்தில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதுடைய எம்.எஸ்.முஷாப் எனும் மாணவனே தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் சடலமாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டுவருவதுடன் குறித்த மதரஸாவின் நிர்வாகியையும் பொலிஸ…

  16. தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் 18 வயது மாணவனை சொகுசு காருடன் கடத்திச் சென்று பலவந்தமாக மாணவனுக்குச் சொந்தமான காணி ஒன்றை பதிவு செய்ய முயற்சித்த தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொஹுவல பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடத்தப்பட்ட மாணவன் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர்களால் கடத்தப்பட்ட காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட மாணவன் கடந்த 4ஆம் திகதி தனது தந்தையை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறக்கி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் களுபோவில ஆசிரி மாவத்தையில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறிய போது கடத்தப்பட்டதாக பொலிஸார் தெ…

    • 9 replies
    • 1.1k views
  17. (எம்.மனோசித்ரா) கொழும்பு பாதுகாப்பு பேரவை உடன்படிக்கை, புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தலைமையக ஒப்பந்தத்தில் கையொப்பமிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்து சமுத்திரத்தின் பிராந்தியப் பாதுகாப்பு உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் பொதுவான பாதுகாப்புக்குள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காக உறுப்பு நாடுகளின் பெறுமதிகளுக்கு மதிப்பளித்து இயங்குகின்ற ஒரு பேரவையாக கொழும்பு பாதுகாப்பு பேரவை தாபிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்பேரவையில் இந்தியா, மாலைதீவு, மொரிசீயஸ் மற்றும் இலங்கை போன்ற நாடுகள் உறுப்பு நாடுகளாகவும், பங்களாதேஷ் மற்றும் சீஷெல்ஸ் போன்ற நாடுகள் அவதானிப்பு நாடுகளாகவும் செயலாற்றுகின்ற பிராந்திய அமைப்பாகும். இப்பேரவையின் பணிகளை மிகவும் …

  18. வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் மூன்று பொலிஸ் சாட்சிகள் மற்றும் இரண்டு சிவில் சாட்சிகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (5) தமது சாட்சியங்களை பதிவு செய்துள்ளன. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார். அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகின்றது. அந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது , நவம்பர் 08ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையில் பொலிஸ் நிலையத்தில் கடையாற்றிய பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூன்று பொலிஸ் சாட்சியங்கள் தமது சாட்சியை …

  19. ”தாய்மொழியில் சட்டக் கல்வி கற்கும் வாய்ப்பு தமிழ் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்” தாய்மொழியில் சட்டக்கல்வியை கற்கும் வாய்ப்பு தமிழ் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமெனவும் இதற்கமைய யாழ். பல்கலைக்கழகத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்வது அவசியமெனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி எஸ். ஸ்ரீதரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். யாழ். தீவக பாடசாலைகளில் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் சேவை வழங்குகின்றர். இதனைக் கவனத்திற் கொண்டு அவர்களுக்கு விசேட கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சபையில் கல்வி…

  20. வடக்கில் , வீட்டு திட்டத்தை ஏற்கும் காலம் இறுதி கட்டத்தில் – விண்ணப்பிக்காதவர்களை விண்ணப்பிகுமாறு கோரிக்கை adminDecember 5, 2023 வட மாகாணத்திற்கான, தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இருபத்தையாயிரம் சூரிய மின்னுற்பத்தி இலவச வீட்டுத் திட்டத்திற்குரிய விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது என வடமாகாண ஆளுநர் ஊடக பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில், ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, வடக்கு மாகாணத்தில் ஆளுநரின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள இந்த வீட்டுத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக ஏற்கப்பட்டு வருகிறது. …

  21. O/L பரீட்சை குறைவான பெறுபேறு – பெற்றோர் கண்டனம் – பிள்ளை மரணம்! adminDecember 6, 2023 வெளியாகிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவி ஒருவர் குறைவான பெறுபேற்றினை பெற்றதாக தெரிவித்த பெற்றோர் குறித்த மாணவியை கண்டித்த நிலையில் அவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளளார். வாலை அம்மன் வீதி, அராலி கிழக்கினைச் சேர்ந்த சிவகுமார் பானுப்பிரியா என்ற 17 வயதான மாணவியே தவறான முடிவெடுத்து இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி நேற்று (05.12.23) 11 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம்…

  22. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கொள்கைகளில் தனக்கு உடன்பாடு இல்லை என்ற போதும், அவர் ஒரு நேர்மையான தலைவர் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவின் உரை அடங்கியதாக கூறப்படும் காணொளியொன்று அண்மையில் வெளியாகியிருந்தது. இந்த காணொளி பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. பிரபாகரனுக்கு நிகரான ஒருவர் இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிகராகத் தமிழர்கள் …

  23. தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பது குழந்தைகளுக்கான அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைகளை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க சவால்களை ஏற்படுத்தக்கூடும் என கல்வி அமைச்சர் நேற்று கூறியது முற்றிலும் தவறானது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், கல்விக்கான வரவு செலவு திட்டம் இன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், பாடசாலை செலவுகளை பெற்றோர்கள் ஏற்க வேண்டியுள்ளது, மேலும் பல்வேறு தேவைகளுக்காக தினமும் பாடசாலைக்கு பணம் அனுப்ப வேண்டியுள்ளது என தெரிவித்தார். எனவே, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து கல்வ…

  24. 05 DEC, 2023 | 05:44 PM (நமது நிருபர்) 2023 டிசம்பர் 03 ஆம் திகதியன்று கொண்டாடப்படும் சர்வதேச விசேட தேவையுடைய நபர்களின் தினத்தை முன்னிட்டு, விசேட தேவையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் பல பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 200 விசேட தேவையுடைய சிறுவர்கள் நேற்று திங்கட்கிழமை (04) பாராளுமன்றத்துக்கு வருகை தந்தனர். இந்த சிறுவர்கள் பாராளுமன்றத்தின் பொதுமக்கள் கலரிக்கு வந்ததை அடுத்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களை வரவேற்று விசேட வாழ்த்துக்களை தெரிவித்தார். விசேட தேவையுடைய சிறுவர்கள் சுமார் 200 பேர் பாராளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளமை வரலாற்றில் முதன்முறையாக நடந…

  25. இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் இன்று வழங்கப்பட்டதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. களுத்துறை மாவட்ட செயலகத்தில் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்தவின் தலைமையில் டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதாக அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, களுத்துறையில் ஆரம்பிக்கப்பட்ட டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வேலைத்திட்டம் விரைவில் ஏனைய பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார். டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழில் உள்ள எண் சர்வதேச தரநிலைகள் மற்றும் நடைமுறைகளின்படி தேசிய அடையாள அட்டை (என்ஐசி) எண்ணாகவும் பயன்படுத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https:/…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.