Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 175,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 15ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 75 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 65 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 35 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. https://thinakkural.lk/article/280963

  2. தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி போராட்டம்! November 11, 2023 முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்க கோரி இன்று (11.11.23) காலை 9.30 மணியளவில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள துயிலும் இல்லம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலும் இல்லக் காணியில் பாரிய பிரதேசத்தை இலங்கை இராணுவத்தின் 14 SLNG படைப்பிரிவு கையகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கு இடவசதி இன்றியும் தமது உறவுகளை புதைத்த இடத்தில் அஞ்சலி செலுத்த முடியாத நிலை உறவுகளுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மாவீரர் துயிலும் இல்லக் காணியி…

  3. 11 NOV, 2023 | 04:03 PM சீன மக்கள் குடியரசினால் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 26 ரனொமொடோ (RANOMOTO) வகை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 100 LENOVO டெஸ்க்டொப் கணனிகள் ஆகியவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகியோரின் ஒருங்கிணைப்புடன், பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஷென் ஹொங்விடம் (Qi Zhenhong) விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பணிகளை இலகுவாக்க இந்த நன்கொடையை வழங்கப்பட்டுள்ளது. …

  4. சீனாவின் கோரிக்கைக்கு ஜனாதிபதி மறுப்பு. இலங்கைக்கு அடுத்த வருடம் எந்தவொரு வெளிநாட்டுக் கப்பலும் ஆராய்ச்சி மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காக வருவதற்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிவிவகார அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார். அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளதால், பிராந்திய ஒத்துழைப்புக்கு பிரச்சினையான கப்பல்கள் நாட்டுக்கு வருவதை நிறுத்துவதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஜனாதிபதியின் இந்த உத்தரவின் பிரகாரம், வெளிநாட்டுக் கப்பல்கள் அடுத்த வருடம் இலங்கைப் பெருங்கடல் பகுதியில் ஆராய்ச்சிக்காக உள்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டால் அவை இரத்து செய்யப்படும் என்ற…

  5. வடக்கு கிழக்கு வேலை வாய்ப்பு – அந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை! November 11, 2023 அரசாங்க நிறுவனங்களில் வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்ற போது, அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த அரசாங்க பிரதிநிதிகளுக்களையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் (09) ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தில் உள்வாங்கப்பட்ட தென்னிலங்கையை சேர்ந்தவர்களை வடக்கு – கிழக்கு பகுதியில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமிப்பதற்கான முன்னெடுப்புக்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது கருத்தினை வெளி…

  6. 10 NOV, 2023 | 08:09 PM (எம்.மனோசித்ரா) இலங்கையில் 2024 காலாண்டுக்குள் விளையாட்டு தொடர்பான பல்கலைக்கழகத்தை அமைக்கும் பணிகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம். அரச மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் வருமானத்தையும் நோக்கமாகக் கொண்டு இந்த பல்கலைக்கழகம் நிறுவப்படும் என்று விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் விளையாட்டு தொடர்பான பல்கலைக்கழகமொன்றை அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. பட்டப்படிப்புக்களை நிறைவு செய்யக் கூடிய வகையில் இந்த பல்கலைக்கழகத…

  7. 04 NOV, 2023 | 10:29 AM மாத்தறை ஹக்மான தெனகம பிரதேசத்தில் இடம்பெற்ற விசேட சுற்றுவளைப்பின் போது 7,140 மில்லிகிராம் பெறுமதியான 34 ஹெரோயின் போதைப்பொருள் பொதிகளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 9 பேர் சந்தேகத்தின் பேரில் வெள்ளிக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் தெய்யந்தர பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவராவார். ஹக்மன பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் தெனகம பிரதேசத்தில் நேற்றைய தினம் விசேட சுற்றுவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் 3,150 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், ஏனைய சந்தேக நபர…

  8. 10 NOV, 2023 | 04:39 PM பங்களாதேஷ் மருந்துக் கைத்தொழில் சங்கத்தினால் இலங்கை சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்ட ஆயிரம் கிலோகிராம் எடையுள்ள மருத்துவ நன்கொடைகள் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் நாட்டுக்கு எடுத்துவரப்பட்டது. “ பல ஆண்டுகளாக நாம் உலகம் முழுவதிலுமிருந்து மருந்துகளை அனுப்பியுள்ளோம். விமானம் மூலம் சரியான நேரத்தில் மருந்துகள் விநியோகம் செய்வதன் மூலம் மருந்துகளை இலங்கையில் கிடைப்பதற்கு நாங்கள் தொடர்ந்து எம்மால் முடிந்த பங்களிப்பை வழங்குவோம்” என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தலைவர் சமிந்த பெரேரா கூறினார். இந்த மருந்துகள் டாக்காவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL 190 விமானத்தில் கடந்த நவம்பர் 4 அன்று கொழும்புக்கு கொண்டுவர…

  9. 10 NOV, 2023 | 05:53 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கை கிரிக்கெட்டுக்குள் இனப்பாகுபாடு காட்டப்படுகிறது. இது கிரிக்கெட் அணியல்ல. இது ஒரு சிங்கள அணி என்ற நிலையே உள்ளது. இந்நிலைமை மாற்றப்பட்டு இலங்கை கிரிக்கெட் அணிக்குள் சகல இனங்களும் உள்வாங்கப்பட வேண்டும். எல்.பி.எல். போட்டியில் பிரகாசித்துக்கொண்டிருக்கின்ற வியாஸ்காந்துக்கு உரிய பயிற்சிகள் வழங்கி அவரை இலங்கை கிரிக்கெட் அணிக்குள் இணைத்துக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற கலஹா பத்ரவதி தேசிய பிக்குமார் பராமரிப்பு நிலைய நம்பிக்கைப் பொறுப்பு சட்டமூலம் மீதா…

  10. வடக்கு – கிழக்கில் சீனாவின் முதலீடுகளை அனுமதிக்கக் கூடாது : செல்வம் அடைக்கலநாதன்! தமது இலாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்படும் சீனாவின் எந்த முதலீட்டு நடவடிக்கைகளையும் வடக்கு கிழக்கில் அனுமதிக்கக்கூடாதென நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில். “இலங்கையிலே அபிவிருத்தி என்ற போர்வையிலே சீனாவினால் வீதிகள் போடப்பட்டன. ஆனால் வட்டி வீதம் கூடிய நிலையிலேயே தன்னுடைய லாபம் கருதியே இலங்கை அரசாங்கத்திற்கு சீன அரசாங்கம் இந்த வேலைகளை செய்து கொடுத்தது. அதேபோல் போர்ட் சிட்டியும் …

    • 8 replies
    • 461 views
  11. 10 NOV, 2023 | 04:39 PM கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய குளம் பகுதியில் உள்ள பெரும் காடுகளுக்குள் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை (10) தர்மபுரம் பகுதியில் 6 பரல் கோடாவை கிளிநொச்சி பொலிஸார் கண்டுபிடித்து கைப்பற்றியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தர்மபுரம் பொலிஸாரால் பாரியளவு கசிப்பும் கோடாக்களும் கைப்பற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து இன்றைய தினமும் அதே பகுதியில் கசிப்பு உற்பத்திக்காக குளத்தின் நடுப்பகுதியில் தண்ணீருக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆறு பரல் கோடாவை கிளிநொச்சி பொலிஸார் மற்றும் கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவி…

  12. பாக்.உயர்ஸ்தானிகர் கொலை முயற்சி : 16 வருடங்களின் பின்னர் மூவரும் விடுதலை ! இலங்கைக்கான பாகிஸ்தானின் முன்னாள் உயர்ஸ்தானிகர் பசீர் அலி மொஹமட் கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விடுதலைப் புலிகளின் பிரதிவாதிகள் மூவரும் 16 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பகுதியில் வாகனப்பேரணியாக சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் உயர் ஸ்தானிகரை கொலை செய்ய முயற்சி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக முதலாவது பிரதிவாதியாக யோகராஜா நிரோஜனும் இரண்டாம் பிரதிவாதியாக சுப்பிரமணியம் சுரேந்திரராஜாவும் மூன்றாம் பிரதிவாதியான கனகரெத்தினம் ஆதித்தன் ஆகிய மூவரும் …

  13. 10 NOV, 2023 | 07:14 PM கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கி பயணிக்க ஓடுபாதையில் தயாரான விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான கறுப்பு நிற மர்மப் பொதி ஒன்று காணப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் விமானம் புறப்பட தயாராக ஓடுபாதையில் பயணித்த போதே இந்த மர்மப்பொதி கழிவறையில் அவதானிக்கப்பட்டுள்ளது. இந்தியன் விமான சேவைக்கு சொந்தமான AI 272 விமானம், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கி இன்று (10) பிற்பகல் 01.35க்கு பயணத்தை ஆரம்பித்தது. ஓடு பாதையில் விமானம் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், விமானத்தின் கழிவறைக்குள், சந்தேகத்திற்கிடமான மர்…

  14. தீபாவளிக்கு விசேட விடுமுறை. தீபாவளியை முன்னிட்டு பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, தீபாவளி கொண்டாடப்படுகின்றமையால் மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ்மொழிமூலமான சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, மத்திய மாகாண கல்வியமைச்சின் செயலாளர் மேனக ஹேரத்துக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். 13ஆம் திகதி வழங்கப்படும் விசேட விடுமுறைக்கு, அந்த வாரத்தில் விடுமுறை தினத்தன்று பாடசாலையை நடத்துமாறும் ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார். https://athavannews.com/2023/1357825

  15. 10 NOV, 2023 | 01:18 PM யாழ்ப்பாணம் - அல்வாய் பகுதியில் கடந்த மாதம் மூதாட்டி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட 3 பேர் நெல்லியடி பொலிஸாரினால் நேற்றைய தினம் வியாழக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - அல்வாய் பகுதியில் கடந்த ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி வீடொன்றில் இருந்து மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். அல்வாய் கிழக்கை சேர்ந்த பழனிப்பிள்ளை தில்லைராணி (வயது 84) என்ற மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து, அவரது உடற்கூற்று பரிசோதனையின்போது சந்தேகங்கள் இருந்தமையால் அவரது உடற்பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனையடுத்து, கொழும்பில் மேற்கொள்ள…

  16. கிளிநொச்சி நீதிமன்றில் முதல் மரண தண்டனை யது பாஸ்கரன் கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் பெண்ணொருவரை கொலை செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்ட கிளிநொச்சி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஒன்பது வருடங்களின் பின்னர், வியாழக்கிழமை (09) இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. மாத்தளை பகுதியைச் சேர்ந்த இராஜசுலோஜனா என்ற பெண்ணை, 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ம் திகதி கத்தியால் குத்திக் படுகொலை செய்து கிணற்றுக்குள் தள்ளிவிட்டுள்ளார். அதன்பின்னர் அப்பெண் சடலமாக மீட்கப்பட்டார் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சி பொலிஸார் மற்றும் CID யினர் சடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு அயலில் உள்ள சிவில் பாதுகாப…

  17. தமிழ் தேசியம் சார்ந்து செயற்பட தடையாக விளங்கும் டக்ளஸ் தரப்பு: முற்றாக விலகுவதாக அறிவித்த உறுப்பினர்! மாந்தை கிழக்கு பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் வைரமுத்து ஜெயரூபன் கட்சியில் இருந்து விலகிகொண்டதாக தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை பகிரங்கமாக அறிவித்துள்ளார். தமிழ் தேசியம் தமிழ் தேசியம் சார்ந்து செயற்படுவதற்கும் மாவீரர் நாளில் அஞ்சலி செலுத்துவதற்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி தடையாக இருப்பதால் அக்கட்சியில் இருந்து முற்றுமுழுதாக விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்வரும் காலங்களில் இருந்து தமிழ்த்தேசியம் சார்ந்து செயற்படுவேன் எனவும் கூறியுள்ளார். …

  18. யாழ்.மாவட்ட செயலகத்தை முடக்கி போராட்டம் adminNovember 10, 2023 யாழ்ப்பாண மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஒன்று கூடிய கடற்றொழிலாளர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய இழுவைமடிப் படகுகளை கட்டுப்படுத்த கோரி யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. https://globaltamilnews.net/2023/197118/

  19. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் கறுவா மரக்கன்றுகள் விநியோகம் adminNovember 10, 2023 தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம், வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருவதோடு மரநடுகையிலும் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக நேற்றைய தினம் வியாழக்கிழமை பலாலி வடக்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் மாணவர்களுக்கு கறுவா மரக்கன்றுகளை வழங்கியுள்ளது. பாடசாலை அதிபர் ச. விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் கலந்துகொண்டு மரநடுகையில் மாணவர்களின் வகிபாகம் குறித்து உரையாற்றியதோடு, மரக்கன்றுகளையும் வழங்கியிருந்தார். இந்நிகழ்ச்சியில் வடக்குக் கிழக்கில் யுத்தத்தின் பின்ன…

  20. எரிபொருள் கையிருப்பில் இல்லை! ”எரிபொருள் கையிருப்பில் இல்லை” என இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் காணப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக ஆராய்வதற்காக அண்மையில் கோப் குழுவானது, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரன மற்றும் கூட்டுத்தாபனத் தலைவர் சாலிய விக்ரமசூரிய உட்பட பல அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் குறித்த கூட்டத்தில் கோப் குழு எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே கனியவள கூட்டுத்தாபனத்தின் அதிகாரியொருவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” …

  21. அரசியல் தீர்வு விடையத்தில் அவுஸ்திரேலியா மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் : இரா.சாணக்கியன்! அவுஸ்திரேலிய அரசானது எமக்கான அரசியல் தீர்வு விடையத்தில் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த இரா.சாணக்கியன், “குறித்த சந்திப்பில் போது சமகால அரசியல் தொடர்பாகவும் குறிப்பாக மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் காணப்படும் பிரச்சனைகள் தொடர்பான முழு விபரங்களை அறியும் முகமாகவும் அதற்கான தீர்வுகளை பற்றியதாக இருந்தது. மற்றும் எமத…

  22. யாழில் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் மாணவர் சந்தை! யாழ்ப்பாணம் – கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு மாணவர்களால் நேற்றைய தினம் “மாணவர் சந்தை” வெகு சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை அதிபர் ஜெ.ரஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் வலயக் கல்விப் பணிமனையின் உதவி கல்வி பணிப்பாளர் ப.சுரேந்திரனும், சிறப்பு விருந்தினராக கிராம அலுவலரான திருமதி.ம.சுரேஷ்கண்ணாவும் கலந்து கொண்டு மாணவ சந்தையை ஆரம்பித்து வைத்தனர். https://athavannews.com/2023/1358122

  23. 09 NOV, 2023 | 08:14 PM (எம்.மனோசித்ரா) இலங்கை வந்துள்ள அமெரிக்க பசுபிக் சிறப்பு நடவடிக்கைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜெரோமி பி வில்லியம்ஸ் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கோட்டை ஸ்ரீஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று வியாழக்கிழமை (09) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரியை வரவேற்ற பாதுகாப்பு செயலாளர் அவருடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்த கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்கிடையில் உள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது மற்றும் பயிற்சி தொடர்பான விடயங்கள் கலந்துரைய…

  24. Published By: RAJEEBAN 07 NOV, 2023 | 06:14 AM சிலிங்கோ குழுமத்தின் முன்னாள் தலைவர் லலித்கொத்தலாவலை சிலரால் பணயக்கைதியாக வைக்கப்பட்டிருந்தார் என அவர் சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை என அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். லலித்கொத்தலாவலையை பணயக்கைதியாக வைத்திருந்த சட்டத்தரணிகள் உட்பட்ட குழுவினர் அவரை அச்சத்தின்பிடியில் சிக்கவைத்தனர் என அவரது உறவினரான சிறீனி விஜயரட்ண நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் லலித்கொத்தலாவலையில் மரணவிசாரணை இடம்பெற்றபோதே குடும்பத்தவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். லலித்கொத்தலாவலையை சுற்றியிருந்தவர்கள் அவரின் சொத்துக்களை தங்கள் ப…

  25. இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் – அமெரிக்கா நம்பிக்கை இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உரியநேரத்தில் தேர்தல்கள் இடம்பெறுவது ஜனநாயகத்திற்கு மிக அவசியமான விடயம் என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசமைப்பின்படி ஏனைய தேர்தல்களும் இடம்பெறும் என அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தவிடயங்கள் அனைத்தும் மக்களிற்கான குரல்களை வழங்கும் அவர்கள் வாக்களிப்பின் மூலம் தங்கள் கருத்துக்களை வெளியிடமுடியும் தங்கள் தலைமையை தெரிவு செய்ய முடியும் என அம…

    • 3 replies
    • 320 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.