ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142986 topics in this forum
-
ஐ.நாவின் தலையீடு தேவையற்றது, விரும்பத்தகாதது: சிறிலங்கா அதிபர் இலங்கை விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்க ஐ.நா.பொதுச்செயலர் தீர்மானித்திருப்பது குறித்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது தேவையற்றதும், விரும்பத்தகாததுமான செயல் என்று ஐ.நா செயலரிடம் மகிந்த ராஜபக்ச உறுதியாகத் தெரிவித்திருப்பதாக சிறிலங்கா அதிபர் செயலகம் தெரிவித்துள்ளது. ஐ.நா.பொதுச்செயலர் பான் கீ மூனுடன் நேற்று முன்தினம் தொலைபேசி மூலம் உரையாடிய போதே மகிந்த ராஜபக்ச தனது ஆட்சேபனையைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. “இலங்கை விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்கு ஐ.நா நிபுணர்கள் குழுவை நியமிப்பத…
-
- 0 replies
- 613 views
-
-
இந்தியாவுக்கு எதிரான போரில் அம்பாந்தோட்டை துறைமுகம் சீன கடற்படையின் தளம் ஆகும்? - பிரித்தானிய ஏடு ஆராய்கிறது [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 13:52 GMT ] [ புதினப் பணிமனை ] வர்த்தக மற்றும் கடல்சார் உடன்பாடுகளை வேறு நாடுகளுடன் மேற்கொள்வதன் மூலம் தனது பழைய விரோதியாகிய இந்தியாவினைச் சுற்றி சீனா ஒரு வலையினைப் பின்னி வருகிறது. தந்திரோபாயமான ரீதியில் - கட்டுமானத் திட்டங்களையும் துறைமுக வசதிகளையும் மேம்படுத்தும் செயல் திட்டங்களை, இந்தியாவின் சொந்தக் கடற் பிராந்தியத்தில் சீனா ஏற்படுத்தி வருகின்றது. முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் [bush] நிர்வாகம் ஆட்சியிலிருந்த காலப் பகுதியில் - இந்தியாவினைச் சுற்றி சீனா முன்னெடுக்கும் இவ்வாறான ஒவ்வொரு செயல் திட்டத்தினையும் ஒரு ‘ம…
-
- 0 replies
- 821 views
-
-
பல்கலைக்கழக மாணவரின் எதிர்ப்பை அடுத்து, டொரோண்டோ பல்கலைகழகத்தில் விரிவுரையற்ற (பொய்களை அவிழ்த்துவிட) இருந்த பாலித கொஹனவின் கனடா விஜயம் பின்போடப்பட்டுள்ளது. http://sundaytimes.lk/cms/articleXYZ100000010.php?id=5354 மாணவர்களின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. கடந்த வருடம் 30,000 க்கு மேற்பட்ட அப்பாவித் தமிழரை படுகொலை செய்த, 300,000 தமிழரை அடைத்துவைத்து கொடுமைப்படுத்திய, பல தமிழ் சிறுவர்களின் கல்வியை நாசமாக்கிய, பல பாடசாலைகளை அழித்த, பல கோடி பெறுமதியான தமிழர் சொத்தை அழித்தொழித்த, பல கோடி பெறுமதியான தமிழர் சொத்தை கொள்ளையடித்த, ......... பயங்கரவாதக் கும்பலில் ஒருவன் தான் கோகன. பொய் பேசுவதில் கைதேர்ந்த கோகன, ஒரு போர் குற்றவாளியும் கூட.
-
- 2 replies
- 888 views
-
-
சிறிலங்காவில் உள்ள இளைஞர்களுக்கு ஊடகவியலில் பயிற்சியளிக்கும் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் சிறிலங்கா ஊடகவியல் கல்லூரியில் படிக்க வைக்கும் திட்டத்தை விரிவுபடுத்த அனைத்துலக மேம்பாடுகளுக்கான அமெரிக்க நிறுவனம் [The United States Agency for International Development - USAID] திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை சிறிலங்கா ஊடக நிறுவனத்தின் பட்டப் படிப்பு சான்றிதழ் அளிக்கும் விழாவில் பங்கேற்றபோது கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் துணை தலைவர் வலேரி பௌலர் [Ms. Valerie Fowler] அறிவித்ததாக தூதரகத்தின் சார்பில் அண்மையில் விடுக்கப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வருடம் 26 மாணவர்களுக்கு அதாவது 12 கிழக்கு பகுதி மற்றும் 14 வடக்கு பகுதியை சார்ந்த தமிழ், முஸ்லிம், சிங…
-
- 0 replies
- 579 views
-
-
ஜி.எஸ்.பி. வரிசலுகைக்கு சமனான தொகை புலம்பெயர்ந்தவர்களிடம் இருந்து கிடைக்கின்றது. - அரசாங்கம் கொழும்பு நிருபர் ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010 2009 இல் வெளி நாட்டில் வதிவோர் இலங்கைக்கு அனுப்பிய தொகை 3.5 பில்லியன் டொலர் என அரசாங்கம் கூறியுள்ளது. இந்த தொகை 2008 ஆம் ஆண்டினை விட 14 விழுக்காடு அதிகம் என கூறியுள்ளது இலங்கை அன்னிய செலவாணி கட்டுப்பாட்டு திணைக்களம். இலங்கைக்கு வருமானத்தினை ஈட்டித்தரும் பெரும் பொருளாதார அலகாக புலம்பெயர் வருமானம் மாறியுள்ளதாக கூறப்படுகின்றது. 2009 இல் கிடைத்த இந்த தொகையனது ஐரோப்பிய ஒன்றியத்தின் வரி சலுகையினால் கிடைத்த தொகைக்கு சமமாகும். http://www.eelanatham.net/story/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%…
-
- 12 replies
- 1.4k views
-
-
ராஜபசேவுடன் நிருபமா ராவ் சந்திப்பு இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ், இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். இலங்கை சென்றுள்ள நிருபமா ராவ் அந்நாட்டு அதிபர் மகிந்தா ராஜபசேவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, இலங்கை தமிழர்களை அவர்களது சொந்த இடத்தில் குடியமர்த்தும் பணியில் இந்தியா உதவும் என்றும், இலங்கையின் வடக்கு பகுதியில் ரயில் பாதைகளை சீரமைக்கும் பணியில் இந்தியா உதவ தயாராக இருப்பதாகவும் கூறினார். மேலும் இருநாடுகளுக்கு இடையே உள்ள உறவுகள், மீனவர் பிரச்சனை குறித்தும் விவாதித்தனர். இந்த சந்திப்பின் போது அதிபர் தேர்தலில் ராஜபசேவின் வெற்றியால் இந்தியா, இலங்கை நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுப்படும் என்று நிருபமா ராவ் கூறினார். …
-
- 1 reply
- 410 views
-
-
போர் முடிவடைந்த பின்னரும் இலங்கையின் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லையென்றும் இதன் காரணமாகவே பெருமளவான மக்கள் தொடர்ந்து அகதிகளாக வெளியேறுவதாகவும் அவுஸ்ரேலியா குற்றம் சாட்டியுள்ளது. இன்றைய தினமும் 28 இலங்கை அகதிகளுடன் படகொன்று கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து கருத்து தெரிவித்த அவுஸ்ரேலிய பிரதிப் பிரதமர் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்தார். தொடர்ந்து வரும் அகதிகளின் நிலமையை பார்க்கின்றபோது அவர்கள் போரினாலும் அதன் பின்னரான நடவடிக்கைகளாலும் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள் எனத் தெரிவித்த ஜில்லார்ட் இலங்கையின் நிலமையை ஸ்திரப்படுத்துவதற்கு அவுஸ்ரேலியா தொடர்ந்து பாடுபடும் எனவும் தெரிவித்தார். SOURCE: http://www.eelamweb.com
-
- 2 replies
- 525 views
-
-
இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் மகிந்த றாஜபக்ச தெரிவித்திருக்கிறார். இலங்கைக்கு ஆலோசனை வழங்குவதற்கான குழுவொன்றை அமைப்பது தொடர்பாக நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது கடுமையான வார்த்தைகளுடன் கூடியதாய் மகிந்த கருத்துத் தெரிவித்ததாக சிங்கள் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் கொள்கையின் அடிப்படையில் அனைத்து நாடுகளையும் சமமாக நடத்தும்படியும் இந்தக் கொள்கையை இலங்கை விடயத்திலும் கடைப்பிடிக்கும் படி மகிந்த றாஜபக்ச கேட்டுக் கொண்டதாகவும் அப்படி நடந்து கொள்ளாவிடில் தகுந்த மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகத் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. SOURCE: http://www.eelamweb.com
-
- 1 reply
- 496 views
-
-
தமிழர் தாயகக் கொள்கையை பிரி.வாழ் தமிழர்கள் ஆதரிக்கலாம் ஆனால் விடுதலைப் புலிகளை ஆதரிப்பது சட்டவிரோதம் SATURDAY, 06 MARCH 2010 06:23 செய்திகள் தமிழர் தாயகக் கொள்கையை ஆதரிப்பதற்கு பிரிட்டனில் உள்ள தமிழர்களுக்கு உரிமை உள்ளது என்று அந்த நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை களுக்கான அமைச்சர் டேவிட் ஹன்சன் அறிவித்துள்ளார். அதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பது சட்டவிரோதமானது என்பதை யும் அவர் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாத ஒழிப்பு தடுப்புச் சட்டமூலம் நேற்றுமுன்தினம் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கீத் வாஸ், …
-
- 2 replies
- 569 views
-
-
நிறைவேற்று அதிகாரத்தை தம்வசமாக்கிக் கொண்ட ஜனாதிபதி தற்போது நாடாளுமன்ற த்தில் தமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெற்றுத்தரும்படி மக்களிடம் கோயுள்ளார். இப்பெரும்பான்மையைப் பெற்றுக்கொடுத்தால் இன்று பெரும்பான்மையோரால் நிராகக்கப்படும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசியலமைப்பு முறையை நீக்கி நாட்டிற்கு உகந்த அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்குவதாக வாக்குறுதியளித்து வருகின்றார். தனியொரு மனிதனிடம் குவிந்துள்ள நாட்டின் அதிகாரத்தை பலரைக் கொண்ட மக்கள் பிரதி நிதிகளிடம் ஒப்படைப்பது இன்றியமையாத தேவையாகும். அவ்வகையில் புதிய அரசியலமைப்பொன்றினை உருவாக்குவது காலத்தின் தேவையாகும். ஆனால், இப் புதிய அரசியலமைப்பு நாட் டின் அனைத்து இன மக்களும் சமமாக உரிமைகளை அனுபவிக்கு…
-
- 1 reply
- 585 views
-
-
(இந்தக் கீழ்காணும் கட்டுரை, Tamilnet இணையத்தளத்தில் வெளியாகியிருக்கும் ‘GTF resolution Inspires Tamil Polity' என்ற ஆங்கில கட்டுரையைத் தழுவிய தமிழாக்கம் இலண்டனில் நடைபெற்ற மாநாட்டில் உ.த.பே, 1976-ல் பிரேரிக்கப்பட்டு, 1977 தேர்தலில் தமிழீழம்தான் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு என மொழியப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்டதன் விளைவாக, ஐ.நா.வின் மேற்பார்வையுடன் இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிலும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வேறு நாடுகளில் இருக்கும் தமிழர்களிடமும் ஓரு வாக்கெடுப்பு நடத்தவேண்டும் எனவும், அவர்களும் தனித்தமிழீழக் கொள்கைகளை ஏற்கிறார்களா அல்லது ஒற்றையாட்சியை விரும்புகிறார்களா என உறுதிபடுத்த வேண்டும் எனவும் ஏகமனதாகத் தீர்ம…
-
- 1 reply
- 969 views
-
-
நாடு கடந்த அரசிற்கு சர்வதேச ரீதியில் கிடைக்கக் கூடிய அங்கீகாரத்தைத் தடுப்பதற்கு உடனடியாக இனப் பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பதே சிறந்த வழி எனக் கருதும் இந்தியா அதற்காகவே நிருபமா ராவை அவசரமாக இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக லங்காதீப சிங்கள நாளிதழ் தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து செயற்படும் வி.ருத்ரகுமாரனின் தலைமையில் எடுக்கப்பட்டு வரும் நாடு கடந்த அரசு குறித்து உன்னிப்பாக அவதானித்து வந்த இந்தியா இந்தக் கட்டமைப்பை தகர்ப்பதற்கு இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமே உகந்த வழியாகக் கருதுவதாகவும் அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. SOURCE: http://www.eelamweb.com/
-
- 2 replies
- 1.1k views
-
-
சென்னைக்கு செல்லும் செல்லும் ஈழத் தமிழர்களின் விபரங்களை விமானநிலையத்தில் கியு பிரிவு காவல்துறையினரால் ரகசியமாகச் சேகரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக சென்னை விமானநிலையத்தில் இந்தியாவில் அவர்கள் எங்கு தங்கப் போகிறார்கள் என்ற படிவத்தை நிரப்பிக்கொடுக்கவேண்டும், அப்படிவத்தை வைத்து அவர்கள் செல்லவிருக்கும் உறவினர்களின் வீடுகள் கண்காணிக்கப்படுவதாகவும், பின்னர் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக தமிழ் நாட்டில் அப்படி தங்கியிருக்கும் ஏதிலிகள், மே மாதத்திற்கு பின்னர் இந்தியா வந்திருந்தால் அவர்கள் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிலர் காணாமலும் போயுள்ளனர். எனவே எமது உறவுகள் இந்தியா செல்லும்போது விடுதி ஒன்றை எடுத்து அந்த விலாசத்தை…
-
- 8 replies
- 997 views
-
-
வெளிநாட்டு றோலர் படகுகள் வடபகுதி கடலில் மீன்பிடி 2 நாட்டு மீனவர்களும் மோதலில் ஈடுபடக் கூடும் GTNற்கு தவரத்னம் தெரிவிப்பு‐ 05 March 10 01:32 am (BST) வெளிநாட்டு றோலர் படகுகள் வடபகுதி கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் வடபகுதி மீனவர்கள் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாக யாழ்ப்பாண மீன்பிடிக் கூட்டுறவுச் சங்கம் தெரிவிக்கின்றது. இந்தியாவிலிருந்து தினமும் றோலர் படகுகள் பெருமளவில் இலங்கையின் வடபகுதிக்குச் சென்று மீன்பிடியில் ஈடுபடுவதாகவும் இதனால் தமது மீனவர்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்திருப்பதாக சங்கத்தின் தலைவர் ரி.தவரத்னம் குளோபல் தமிழ் நியூஸிற்குத் தெரிவித்தார். நீண்டகாலம் நடைபெற்ற யுத்தம், அரசாங்கம் விதித்திருந்த தடை என்பன காரணமாக வ…
-
- 14 replies
- 1k views
-
-
இலங்கை பாராளுமன்றத்தின் நிலையைகண்டு இந்த நாடு வெட்கப்பட வேண்டிய நிலைமை காணப்படுவதாகவும் மனநோயாளர் ஆஸ்பத்திரியை விடவும் மோசமானதாகவே காணப்படுவதாகவும் ஐ.தே.க இன்பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். மோசடிக்காரர்களும்,காடையர்களும்,பாதாள உலகை சேர்ந்தவர்களுமே பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படுவதாக சுட்டிக்காட்டினார்; அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இவ்வாறு சிலர் நடந்து கொள்வதால் ஜனநாயகமும்,பாராளுமன்றமும் அபகீர்திக்கு உள்ளாகியிருப்பதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க விசனம் தெரிவித்தார். http://www.thinamurasam.com/
-
- 8 replies
- 1.4k views
-
-
சனி, மார்ச் 6, 2010 14:31 | தேசியத்தலைவரின் தாயார் வெளிநாடு பயணம் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் திருமதி பார்வதி வேலுப்பிள்ளை அவர்கள் இன்று, கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து வெளிநாடு ஒன்றுக்கு பயணமாகியுள்ளார். இதேவேளை தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் இன்று இலங்கையில் இருந்து வெளிநாடு ஒன்றுக்கு பயணமாகியுள்ளார். கடந்த 2ம் திகதி திருமதி பார்வதி வேலுப்பிள்ளை அவர்கள் வெளிநாடு ஒன்றுக்கு செல்வதற்காக திரு.சிவாஜிலிங்கம் அவர்களால் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு பம்பலப்பிட்டி வெஸ்ரன் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தார். சுகயீனம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், அத்தோடு அவரின் பிள்…
-
- 9 replies
- 1.5k views
-
-
தமிழர்களின் தேசியம் தாயகம் சுயநிர்ணய உரிமை என்பவற்றை கோசமாகத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு சொல்கின்றதே அல்லாமல் அதன் உள்ளார்த்தமாக அதற்கு செயல்வடிவம் கொடுக்ககூடிய எந்த எண்ணமும் தற்போதைய அதன் தலைமைக்கு இல்லையென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கனடா தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்படி கருத்தை முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். குறித்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவிக்கையில்: தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த வருடம் மே மாதத்திற்கு முன்னரே ஒரு தீர்வுதிட்டத்தை தயாரித்திருந்தது. ஆனாலும் அதனை வேறு நாடாளுமன்ற உறுப்பின…
-
- 2 replies
- 568 views
-
-
சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பில் தான் வெறும் கோசங்கள் வட அமெரிக்க நிருபர் சனிக்கிழமை , மார்ச் 6, 2010 GPon தமிழர்களின் தேசியம் தாயகம் சுயநிர்ணய உரிமை என்பவற்றை கோசமாகத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு சொல்கின்றதே அல்லாமல் அதன் உள்ளார்த்தமாக அதற்கு செயல்வடிவம் கொடுக்ககூடிய எந்த எண்ணமும் தற்போதைய அதன் தலைமைக்கு இல்லையென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கனடா தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்படி கருத்தை முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். குறித்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவிக்கையில்: தமிழ் தேசிய கூட்டம…
-
- 2 replies
- 688 views
-
-
ஆடுகள் சிதறுவது சிங்கங்களுக்குத்தான் நன்மை தருமே தவிர, ஆடுகளுக்கல்ல..! [ புதன்கிழமை, 03 மார்ச் 2010, 20:49 GMT ] [ புதினப் பணிமனை ] 'புதினப்பலகை'க்காக வேலனையூர் ஆனந்தன் இலங்கைத் தீவின் தமிழர்கள் மீது ‘பரிதாபப்பட்டு’, அவர்களைத் துயரத்தில் இருந்து மீட்டெடுக்கும் மீட்பர்களாக இப்போது பலர் தங்களைத் தாங்களே பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளார்கள். இவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர். இவர்கள் தமிழ் மக்களின் மீட்சிக்காக எனக் கூறிக் கொண்டு புதிய அரசியல் கட்சிகளையும் உருவாக்கி வருகிறார்கள். இதில் கடைசியாக உருவாக்கப்பட்டிருப்பது ‘தமிழ்த் தேசியத்திற்கான முன்னணி’. தமிழ்த் தேசியம், இறைமை உள்ள தனியரசு என்ற முழக்கங்கள…
-
- 7 replies
- 1.1k views
-
-
Germans arrest 6 suspected of rebel Tamil support By ASSOCIATED PRESS Published: Mar 5, 2010 9:05 PM Updated: Mar 5, 2010 9:05 PM BERLIN: German prosecutors said Friday that they have arrested six people suspected of being members of a wing of the Tamil Tiger rebels and of forcing Tamils living in Germany to make donations to the banned group. The three German and three Sri Lankan nationals were arrested on Wednesday following searches in the western state of North Rhine-Westphalia, federal prosecutors said in a statement. The six are accused of serving in the leadership of the Tamil Coordination Committee, or TCC. The TCC is a Germany-based wing of th…
-
- 0 replies
- 1.5k views
-
-
இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் அழுத்தங்களே ஐ.நாவின்; செயல்திறனற்ற தன்மைக்கு காரணம் என பிரான்ஸ் நாட்டு தூதுவர் ஜெராட் அரோட் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:சிறீலங்கா விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ஏன் செயல்திறனற்று உள்ளார் என ஐ.நாவின் ஊடக அமைப்பான இன்ன சிற்றி பிரஸ் ஐ.நாவுக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் ஜெராட் அரோட் இடம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் அழுத்தங்களே பானின் செயல்திறனற்ற தன்மைக்கு காரணம் என பிரான்ஸ் நாட்டு தூதுவர் தெரிவித்துள்ளார். இதனிடையே கடந்த பெப்ரவரி மாதம் ஐ.நாவின் அரசியல் பிரதிநிதி லியான் பெஸ்கோ சிறீலங்கா செல்வார் என ஐ.நா தெரிவித்தபோதும் அவர் தனது விஜயத்தை கைவி…
-
- 7 replies
- 1.2k views
-
-
ஆனந்தசங்கரியின் 20 கோரிக்கைகளும் சிங்களவரின் எள்ளிநகையாடலும். இந்திய அரசியலமைப்பு வேண்டுமாம்.. சிங்காரிக்கு... TULF reiterates call for Indian model in Sri Lanka The TULF, in its election manifesto, has reiterated its call for a decentralization of powers in Sri Lanka along the Indian model. Leader of the party V. Anandasangaree said a unitary constitution was unlikely to devolve powers to the Tamil areas. The merge of the north and the east would harm no one, he observed, adding that the Tamils, Muslims and others displaced by the war should be resettled in their own homes in the Wanni. The TULF manifesto also calls for the full payment of …
-
- 4 replies
- 1.4k views
-
-
சனி, மார்ச் 6, 2010 10:29 | தாயகக் கொள்கையை ஆதரிக்க பிரி.வாழ் தமிழர்களுக்கு உரிமை உள்ளது - அமைச்சர் டேவிட் ஹன்சன் தமிழர் தாயகக் கொள்கையை ஆதரிப்பதற்கு பிரிட்டனில் உள்ள தமிழர்களுக்கு உரிமை உள்ளது என்று அந்த நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான அமைச்சர் டேவிட் ஹன்சன் அறிவித்துள்ளார். அதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பது சட்டவிரோதமானது என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாத ஒழிப்பு தடுப்புச் சட்டமூலம் நேற்று முன்நாள் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கீத் வாஸ், விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழ…
-
- 2 replies
- 672 views
-
-
சிறிலங்காவின் வெளி நாட்டு அமைச்சர் ரோகித போகொல்லாமவின் மூத்த மகனிற்கு ஐ.நாவில் வேலை எடுக்க நம்பியாரின் பரிந்துரையை கேட்டுள்ளார். ஐ.நா செயலாளரின் பேச்சாளரும், செயலருமான நேர்ஸ்ர்கி அவர்களிடம் மேற்படி விடயத்தினை இன்னெர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது. அதாவது ஐ. நாவின் மூத்த பணியாளர் விஜய் நம்பியாருக்கு கடித மூலமாக தனது மகனிற்கு வேலை பெற்று தரும்படி கோரியிருந்ததாக இன்னெ சிற்றி பிறஸ் கேள்வி எழுப்பியது. இதற்கு ஐ.நா செயலர் பான்கி மூன் அவர்களின் செயலாளர் இது தொடர்பாக தான் ஆராய்வதாக கூறியுள்ளார். http://meenakam.com/2010/03/06/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e…
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ். குடாநாட்டில் இப்போது இருவகைச் சட்டம் நடைமுறையில் உள்ளதாக பொதுமக்கள் பேசிக்கொள்கின்றனர். இந்த இருவகைச் சட்டம் எழுதாத யாப்பாக நடைமுறையில் உள்ளதெனவும், இதனை யாழ்ப் பாணக் குடாநாட்டில் க4டமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாரும், படையினரும் இதனை எழுந்த மானமாக நடைமுறைப்படுத்தி வருவதாகவும் பொதுமக்களின் பேச்சில் உள்ளது. உதாரணமாக கே.கே.எஸ்.வீதியில் தென்பகுதி வாகனங்கள் நிறுத்தப்பட்டால் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்காத பொலிஸார், அது தமிழர்களின் வாகனமாக இருந்தால் அந்த இடத்திலேயே தண்டம் அறவிடுகின்றனராம். அதேபோல வீதி ஒழுங்குகள், வாகனத்தரிப் பிடங்கள், ஒரு வழிப்பாதைகள் என அனைத்திலும் இருவகை இனவேறுபாடு அமுலாகி இருப்பதான குற்றச்சாட்டை சும்மாவிடுவது நல்லதல்ல. தென்பகுதியில் இருந்து எக்கா…
-
- 1 reply
- 1.1k views
-