ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
யாழ்ப்பாணத்தில் எதிரணியினரின் பிரச்சார குழாம் வாக்குறுதிகளை அள்ளி வீசிய வண்ணம் உள்ளது. இந்த குழுவில் மனோ கணேசன், சோமவன்ச , சரத்பொன்சேகா, ரவூப் ஹக்கீம், ரணில் ஆகிய முக்கிய புள்ளிகள் பங்கெடுத்து வருகின்றனர். நல்லூர் கோவிலில் தமது பிரச்சாரத்தினை ஆரம்பித்த இந்த குழுவினர் அங்கு ஊடக அறிக்கைகளையும் விடுத்தனர். அதில் சரத் தமிழ் மக்கள் வாழ்விடங்களை சொர்க்காபுரியாக மாற்றப்போவதாக வாக்குறுதிகளை தாராளமாக அள்ளி வீசினர். சரத்பொன்சேகா யாழ்ப்பாணத்தை நாட்டின் சிறந்த மாவட்டமாக மாற்ற தான் பல பொருளாதார திட்டங்களை வைத்திருப்பதாக கூறினார். அத்துடன் யாழ்ப்பாணத்தினை அமைதி பூங்காவாக மாற்ற போவதாகவும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் அபிவிருத்தி திட்டங்களை செய்ய போவதாகவும் க…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஜனாதிபதி மஹிந்த இராசபக்ஷவுடன் மட்டுமே நேரடி விவாதம் நடத்த முடியும் என சரத் பொன்சேகா கடிதம் ஒன்றினை ஆளும் கட்சியினருக்கு அனுப்பியுள்ளார். அண்மையில் விமல் வீரவன்ச அவர்கள் தன்னுடன் நேரடியாக விவாதம் நடத்த வருமாறு சரத் பொன்சேகாவுக்கு அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக பதில் அளிக்கும் முகமாகவே சரத் பொன்சேகா இந்த கடிதத்தினை அனுப்பியுள்ளார். யுத்தம் தொடர்பாக இடம்பெற்ற மோசடிகள் சம்பந்தமாக அது தொடர்பாக அனுபவமும், நேரடியாக பொறுப்பானவர்களுமே பதில் அளிக்கவேண்டும். அதன்படி மஹிந்த இராசபக்ஷ அவர்கள் முப்படைகளின் தளபதியாக இருந்தார் . நான் இராணுவ தளபதியாக இருந்தேன் ஆகவே நாம் இருவரும் நேரடி விவாதம் நடத்துவதே சிறந்தது. விமல் வீரவன்சவுக்கு போர் மற்றும் படைத்துறை சம்பந்தமான அனுபவமோ, அறி…
-
- 0 replies
- 904 views
-
-
இலங்கை அதிபர் ராஜேபக்சே, முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா ஆகியோரை போர் குற்றவாளிகாக அறிவித்து கைது செய்ய வேண்டும். இலங்கையில் நடைபெறும் அதிபர் தேர்தலை ரத்து செய்யக்கோரி உலக நாடுகள் மற்றும் ஐ.நா. சபையை வலியுறுத்தியும், ஈழத்தமிழர்கள் பகுதிகளில் சிங்களர்கள் குடியேறுவதை கண்டித்தும் இன்று காலை புதிய தமிழகம் கட்சி சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே உண்ணாவிரதம் நடைபெற்றது. உண்ணாவிரதத்துக்கு புதிய தமிழகம் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் கோ. சங்கர் தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட செயலாளர் அய்யப்பள் முன்னிலை வகித்தார். உண்ணா விரதத்தில் புதிய தமிழகம் கட்சியினர் பெரியார் திராவிடர் கழகத்தினர் தமிழக ஒடுப்பட்டோர் விடுதலை இயக்கத்தினர், பெரியார் தத்துவமைய நிர்வாக…
-
- 0 replies
- 929 views
-
-
இடைக்கால அதிகாரப் பரவலாக்கல் தீர்வுத் திட்டமொன்றை ஏற்றுக் கொள்ள முடியும் ‐ ரணில் 02 January 10 01:40 am (BST) தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் இடைக்கால அதிகார பரவலாக்கல் தீர்வுத் திட்டமொன்றை ஏற்றுக்கொள்ள முடியுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சமூக பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய நிதி அதிகாரங்களுடன் கூடிய அதிகார பரவலாக்கம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிளவுபடாத ஒரே இலங்கைக்குள் மாகாண அதிகார அலகுகளின் ஊடாக இந்த அதிகாரப் பகிர்வினை வழங்க முடியம் எனஅவர் தெரிவித்துள்ளார். புதிய பாராளுமன்றம் அமைக்கப்படும் வரையில் தற்போதைய அரசியல் சாசன திருத்தச் சட்ட மூலங்கள் முழுமையாக அமுல்படுத்தப்பட …
-
- 0 replies
- 674 views
-
-
வவுனியா மெனி பாம் தடுப்பு முகாமில் இருந்த 170 சிறார்கள் வடமராட்சியில் உள்ள God Own Children எனப்படும் கடவுளின் சொந்தக் குழந்தைகள் என்ற தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டார்கள். யாழ்ப்பாணம் வடமராட்சி உபய கதிர்காமம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் கிராமத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கடவுளின் சொந்தக் குழந்தைகள் என்ற அமைப்பின் தலைவராகிய டாக்டர் பாலசுந்தரம் அனந்த்குமார் தெரிவித்துள்ளார். வலது குறைந்தவர்கள், மிகவறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், பெற்றோரை இழந்தவர்கள் என பலவித காரணங்களினால் உரிய பராமரிப்பின்றி உள்ள சிறுவர், சிறுமியரையே தாங்கள் இவ்வாறு பொறுப்பேற்று பராமரிப்பதற்காக அழைத்துச் செல்வதாக கடவுளின் குழந்தைகள் என்ற அமைப்பின் தலைவராகிய டாக்டர் அனந்த…
-
- 0 replies
- 570 views
-
-
1956 கலவரத்தின் பின் ஈழத் தமிழன் கல்வியில் சிகரங்களைத் தொட்டான் ! 1983 கலவரங்களின் பின் ஈழத் தமிழன் பொருளாதாரத்தில் சிகரங்களைத் தொட்டான் ! 2009 பேரழிவிற்குப் பின் உலகத்தின் உன்னதங்களை தொடுவான் ! உலக சரித்திரத்தில் ஒவ்வொரு இனத்திற்கும் மறக்க முடியாத சோகமான ஆண்டுகளாக சில ஆண்டுகள் இருக்கும். அந்தவகையில் 2009 ஈழத் தமிழினத்தின் மனத்தில் இருந்து அழிக்க முடியாத காயங்களை ஏற்படுத்திய ஆண்டாகும். 1956, 1983 ஆகிய இரு ஆண்டுகளும் சிங்கள இனவாதிகளின் கொடுந்தாக்குதலால் துயர் சுமந்த ஆண்டுகளாக பதிவு பெற்றது போல 2009ம் பதிவு பெறுகிறது. இந்த ஒவ்வொரு நிகழ்வும் சுமார் 26 ஆண்டு கால இடைவெளியில் ஏற்பட்டு வருகிறது. எனினும் இந்த மூன்று கலவர ஆண்டுகளும்தான் ஈழத் தமிழருக்கு உலக முக்கியத்துவத…
-
- 4 replies
- 660 views
-
-
சிறிலங்கா அரசு இராஜதந்திரப் போர் ஒன்றுடன் 2010ம் ஆண்டுக்குள் காலடி எடுத்து வைத்துள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdp04a40mA45Lp2cd2ePdZAA32dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 0 replies
- 494 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்திற்கு புதிதாக பொலிஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த ரவி ஜயவர்தன இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் கிளிநொச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமைவரை தமக்கு இந்த இடமாற்றம்பற்றி அறிவிக்கப்படவில்லையெனத் தெரிவித்த அவர் இந்த இடமாற்றத்திற்கான காரணமென்னவெனத் தெரியவில்லையெனக் கூறினார்.இதேவேளை இது தொடர்பாக எவ்வித உத்தியோகபூர்வ அறிக்கையும் வெளியிடப்படமாட்டாதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஐ. எம். கருணாரத்ன கூறினார். http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 741 views
-
-
தமிழ் பேசும் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்குப் பிரிக்கப்படாத இலங்கைக்குள் சகல இனத் தவரும் ஏற்கக்கூடிய அதிகாரப் பகிர்வு முறைமை ஒன்றை ஏற்படுத்துவதே தமது திட்டம் என ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று விடுத்த அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கின்றார். இவ்விடயம் தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு: பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் ஆயுதப் போராட்டமும் முடிவுக்கு வந்தது. எமது நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதை உறுதிசெய்வதாயின் தமிழ் பேசும் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்குப் பின்வரும் காரணிகளை அடிப்படையாகக் கொண்ட நிரந்தரத் தீர்வ…
-
- 1 reply
- 498 views
-
-
இந்தியாவில் இருந்து தமிழ் அகதிகள் இலங்கைக்கு வந்து கொண்டு இருக்கின்றார்கள். இலங்கையில் பிரச்சினை தீர்ந்து விட்டதால் அவர்கள் வருகை தருகின்றார்கள் என்று இந்தியா, இலங்கை ஆகியன ஒரு பக்கம் பிரச்சாரம் செய்து வரும் வேளை இலங்கையில் இருந்து தமிழர்கள் இந்தியாவுக்கு அகதியாக செல்லும் நிலை மீண்டும் அதிகரித்துள்ளது. அண்மையில் மெனிக் முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்களே இவ்வாறு தமிழ் நாடு நோக்கி செல்கின்றனர். இந்த வாரம் மட்டும் 13 பேர் சென்றுள்ளனர். இதில் நேற்று ஒரு மடகில் 5 பேர் சென்றதாகவும் அதில் மூன்று குழந்தைகள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தனுஷ்கோடிக்கு சென்றடைந்த இந்த மக்கள் அங்குள்ள முகுந்தராயர் சத்திரத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. த…
-
- 0 replies
- 458 views
-
-
இலங்கையில் நடைபெற போகும் ஜனாதிபதி தேர்தலானது நாட்டின் உண்மையான பிரச்சினைகளை திர்ர்க்க போவதில்லை. மாறாக ஓர் ஆட்சி மாற்றம் மட்டுமே நடைபெறப்போகின்றது என மனித உரிமை(?) க்கான பல்கலை கழக ஆசிரியர் குழு கூறியுள்ளது. மஹிந்த இராஜபக்ஷ, சரத்பொன்சேகா ஆகியோர்கள் இருவரும் தமது தேர்தல் பிரச்சாரத்தில் ஜன நாயகத்தை கேலிக்குரியதாக்கும் செயற்பாட்டிலேயே இறங்கியுள்ளனர். மஹிந்த இராசபக்ஷ தனது பிரச்சாரத்தில் ஜன நாயக விழுமியங்களை புதைத்துக் கொண்டிருக்கின்றார். மறு பக்கம் எதிரணியினர் சரத்பொன்சேகாவை ஆதரிப்பதன் மூலம் ஜன நாயகத்தின் தரத்தை இழிவடைய செய்கின்றனர். உண்மையில் இலங்கையில் ஆள் மாற்றம் தேவை இல்லை மாறாக அரச இயந்திரம் , அரசியல் முறைமை ஆகியவற்றில் மாற்றம் வேண்டும். அதனையே மனித உரிமை ஆர்வ…
-
- 0 replies
- 399 views
-
-
தேர்தல் சுவரொட்டிகள் அகற்றப்படவில்லை நடைபெறப்போகும் சிறிலங்கா அதிபர் தேர்தலுக்காக வேட்பாளர்களினால் அமைக்கப்பட்டுள்ள பதாதைகள் மற்றும் சுவரொட்டிகள் காட்சிப்படங்கள் போன்றவை இன்னும் அகற்றப்படவில்லையென தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் குறறஞ்சாட்டியுள்ளன. சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு இது இடையூறாக அமைந்துள்ளதென கபே எனப்படும் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு தெரிவிக்கின்றது. இதுதொடர்பாக தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் காவல்துறையினர் முக்கிய கவனம் செலுத்தவேண்டுமென அந்த அமைப்பு தெரிவிக்கின்றது. மேலும், தேர்தல் வன்முறைச்சம்பவங்கள் குறித்து பதிவாகின்ற பெரும்பாலான முறைப்பாடுகள் உரிய நபர்களின் பெயர் குறிப்பிடப்படாமல் பதிவ…
-
- 0 replies
- 466 views
-
-
கடந்தகால யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த மக்கள் முழுமையாக இன்னும் மீள்குடியமர்த்தப்படவும் இல்லை. மீள்குடி யமர்த்தப்பட்டவர்களுக்கு வாழ்வாதாரத் திட்டங்கள் எவையும் நடைமுறைப்படுத் தப்படவும் இல்லை. இந்த நிலைமையில், தேர்தலில் வாக்களிக்கும் மன நிலையில் தமிழ் மக்கள் இல்லை. எனினும் நிலைமையை உணர்ந்து செயற்பட வேண்டிய கட்டாயத்துக்குள் அந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி பொது வேட்பாளரான கலாநிதி. விக்கிரமபாகு கரு ணாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்த விக்கிரமபாகு கருணாரத்ன பஸ்ரியன் ஹோட்டலில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இப்படிக் கூறினார். அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதித் தேர்தலுக்கான தகுந்த சூழ்நிலை தற்போது இல்லை. தமிழ…
-
- 0 replies
- 348 views
-
-
ஆங்கில மொழி விண்ணப்ப படிவம் மட்டுமே கடவுச்சீட்டுக்காக ஏற்றுக்கொள்ளப்படும் சிறிலங்காவில் கடவுச் சீட்டுக்களை விநியோகிப்பதற்காக ஆங்கில மொழியில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாத்திரமே இனிமேல் ஏற்றுக்கொள்வதறகு சிறிலங்காவின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் முடிவு செய்துள்ளது. கணனிப்பதிவுகளின் போது ஏற்படுகின்ற சிக்கல்கள் மற்றும் எழுத்து தவறுகள் காரணமாக இந்த புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் எதிர்காலத்தில் சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் பூர்த்தி செய்யப்பட்ட விணணப்பபடிவங்களை திணைக்களம் பொறுப்பேற்காது என்று சிறிலங்காவின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவிக்கின்றது. --- மீனகம் செய்தியாளர் http…
-
- 0 replies
- 775 views
-
-
இன்று வீரசிங்கம் மண்டபத்தில் சரத்பொன்சேகாவின் தேர்தல் கூட்டம் நடைபெறவிருக்கின்றது. அதற்கு மக்களை அணி திரட்டும் வகையிலோ என்னவோ மனோ கணேசன் காணாமல் போன பெற்றோர்களையும் சந்திக்கின்றார். சென்ற முறையும் இவ்வாறுதான் நடந்தது. யாழ்ப்பாணம் வரும் அவர் குடாநாட் டில் காணாமற்போனோரின் உறவினர் களை இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வீர சிங்கம் மண்டபத்தில் சந்தித்துக் கலந் துரையாடுவார். நாளை ஞாயிற்றுக்கிழமை மன்னார் பொது விளையாட்டரங்கில் முற்பகல் 10 மணிக்கும் அதேதினம் வவுனியா நகரசபை மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கும் காணாமற் போனோரின் உறவினர்களை மனோகணேசன் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயவிருக்கிறார். சம்பந்தப்பட்டவர்களைக் குறிப்பிட்ட இடங்களுக்கு வந்து தமது பிரச்சினை களைத் தெரிவி…
-
- 0 replies
- 442 views
-
-
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா, தாம் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படும் பட்சத்தில், உடனடியாக அவசரகால ஒழுங்கு விதிகளை நீக்கி, உரிய சாட்சியங்கள் இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பது குறித்த தனது திட்டத்தை இன்று யாழ்ப்பாணத்தில் அறிவிக்கவுள்ளார் என அறியவருகின்றது. மேலும் ஆயுதக் குழுக்கள் அனைத்தையும் கலைத்து அவற்றிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்வது குறித்தும் அவர் இன்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் வைத்து அறிவிப்பார் எனத் தெரியவந்தது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா இங்கு வைத்து இந்த அறிவிப்புகளை விடுப்பார் என…
-
- 0 replies
- 442 views
-
-
ராஜபக்ச குடும்பம் 4 வருடங்களில் நிகழ்த்திய சாதனை ‐ மகிந்தவின் கணக்கு வழக்கு காட்டுகிறது‐ 01 January 10 12:13 pm (BST) குறித்த காலத்திற்கு இரண்டு வருடங்கள் முன்னதாகவே ஜனாதிபதித் தேர்தலை நடாத்தும் ஒரேயொரு ஜனாதிபதி தானே தான் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்து வருகிறார். இப்போது இந்த நான்கு வருடங்களிலும் அவர் என்ன தான் செய்து வந்துள்ளார் என்ற விடயங்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன. இந்த அறிக்கையின்படி அவருடைய சராசரிச் செலவு 19 மில்லியன்கள். அவருடைய நாளாந்த செலவு பத்து இலட்சம் இலங்கை ரூபாய்கள். மகிந்த ராஜபக்சவின் கணக்கு வழக்கு விபரங்கள் வருமாறு: ஹெட்ஜிங் விவகாரம்: பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் அஸந்த டி மெல் மகிந்த ராஜபக்சவின் மனைவி ச…
-
- 8 replies
- 798 views
-
-
சிறீலங்காவின் ஆங்கிலப் புத்தாண்டு பரிசாக கிளிநொச்சியில் தமிழ்ப்பெண் படுகொலை சிறீலங்கா அரசின் ஆங்கிலப் புத்தாண்டு பரிசாக கிளிநொச்சியில் தமிழ்ப்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வதை முகாம்களில் அடைக்கப்பட்ட தமிழ் மக்கள் மீள்குடியேற்றம் என்ற பெயரில் கிளிநொச்சிக்கு கொண்டுசென்று விடப்பட்டுள்ளவர்களில் முறிகண்டியின் மேற்குப் பகுதியில் உள்ள மக்களில் 35 அகவையுடைய நாகராஜா ஆரியமலர் என்பவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இவரது உடலம் கிளிநொச்சியில் உள்ள காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஏ.9 முதன்மை வீதிகளிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் மற்றும் முல்லைத்தீவின் மேற்குப் பகுதிகளிலும் சிங்களப் படைகள் முகாம்கள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள…
-
- 5 replies
- 1k views
-
-
போரியல் குற்றம் மேற்கொண்டோர் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன திகதி: 01.01.2010 // தமிழீழம் கடந்த மே மாதம் 18 ஆம் நாள் சரணடைந்த விடுதலைப்புலிகளை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவத் தளபதிகளின் பெயர் விபரங்களையும், அதற்கு உடந்தையாக இருந்த அரச அதிகாரிகளின் விபரங்களையும் ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட சமரின் போது மே 18 ஆம் நாள் சரணடைந்த விடுதலைப்புலிகளை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவ அதிகாரிகளின் பெயர் விபரங்களை ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். இந்த அதிகாரிகள் போரியல் குற்றங்களை மேற்கொண்டவர்களாகும் என தெரிவிக்கப்படுகின்றது. பின்வரும் இராணுவ அதிகாரிகள் சரணடைந்தவர்கள் மீதான…
-
- 1 reply
- 769 views
-
-
புலிகளின் விமானங்களை கைப்பற்றுவதில் சிறிலங்கா தோற்றது எப்படி? கூறுகிறார் ரோகித .வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் சொத்துக்களை கைப்பற்றுவதாயின் முதலில் அது தொடர்பாக இரகசியம் காக்கப்படவேண்டும். சொத்துக்களை முடக்குவதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை ஊடகங்களில் போட்டுடைத்துவிடுவதால் திட்டமிட்டபடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கடினமாக உள்ளது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - விடுதலைப்புலிகளின் சொத்துக்கள் வெளிநாடுகளில் பல்வேறு வடிவங்களில் உள்ளன. அவர்களின் விமானங்கள்கூட குறிப்பிட்ட நாடடொன்றில் நிற்பதாக எமக்கு தகவல் கிடைத்தது. இவற்றையெல்லாம் கைப்பற்றுவதற்கு நடவடிக்கை …
-
- 0 replies
- 1.1k views
-
-
புதிய தசாப்தம் பிறக்கிறது! தமிழர் உரிமைப்போர் புதிய வடிவம் எடுக்கிறது!! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாகிறது!!! விசுவநாதன் ருத்ரகுமாரன் புதியதொரு வருடமும் புதியதொரு தசாப்தமும் 2010 இல் பிறக்கின்றன. கடந்த தசாப்;தங்களில்; சிறிலங்கா அரசின் இனஅழிப்பு யுத்தத்தினால் ஏற்பட்ட வார்த்தைகளால் வடிக்க முடியாத இழப்புக்களையும் துயரையும் கடந்து உலகமெங்கும் வாழும் தமிழ்மக்கள் புதியதொரு தசாப்தத்தில் காலடி வைக்கின்றனர். 2000 ஆம் ஆண்டில் கடந்த தசாப்தம் ஆரம்பித்த போது தமிழ் மக்கள் அதை சமாதானம் குறித்த நம்பிக்கையுடன் தான்; எதிர்கொண்டனர். தமிழ் மக்களின் நியாயத்துடன்கூடிய சமாதானம் குறித்த நம்பிக்கை அடுத்த சில ஆண்டுகளிலேயே கருகிப் போனது. 2009 ஆம் ஆண்டில் தமிழர் தேசத்த…
-
- 0 replies
- 542 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறினார். இலங்கையின் மக்கள் ஜனநாயக முன்னணித் தலைவரான மனோ கணேசனுக்கும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் தொடர்பு உள்ளது என்று ஆளும் கட்சி உறுப்பினர் கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். பிரபாகரனுடன் நீச்சல் குளத்தில் இருப்பதைப் போன்ற புகைப்படத்தை ஆளும்கட்சி கூட்டணியில் இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டார். வன்னி பகுதியில் நார்வே அமைதிக்குழு பேச்சுவார்த்தை நடத்தியபோது பிரபாகரனுடன் மனோ கணேசனும் இருந்ததாக ஆளும் கட்சி உறுப்பினர் குற்றம் சாட்டினார். தன் மீது கூறப்பட்ட குற்ற…
-
- 1 reply
- 1.4k views
-
-
கூட்டமைப்பு எம்.பி.க்கள் அமைச்சர்களாக மாறவேண்டும்- ஜனாதிபதி அழைப்பு by வீரகேசரி நாளேடு எதிர்காலத்தில் அமையவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் அமைச்சர்களாக மாற வேண்டும். அதற்கேற்ற வகையில் செயற்பட அரசாங்கம் தயாராகவுள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரை சந்தித்து பேசிய போதே ஜனாதிபதி அமைச்சர்களாக மாறும்மாறு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு பதிலளித்த தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இருவரும், நாம் பதவி பட்டங்களுக்காக அரசியலில் ஈடுபடவில்லை. தமிழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே நாம் செயற்பட…
-
- 6 replies
- 814 views
-
-
ஜனவரி 4ம் திகதி கூட்டமைப்பு கூட்டமைப்பாக 22 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு பேரளவிற்காக இயங்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் இரா சம்பந்தன் குழு கூட்டமைப்பின் ஏனையோரின் பங்குபற்றல் அல்லது பெரும்பான்மை அங்கத்தவர்களின் தீர்மானங்களை ஏற்காது மக்கள் நலன் கருதி செயற்படப்போவதாக அறுதியாக கூறியுள்ளது. திரு.சம்பந்தனின் ஐயாவின் வாதம் மஹிந்த இராசபக்ஷவை அகற்றுவதே நோக்கம் என ஒன்று பட்டு நிற்கும் ஜே.வி.பி, யூ.என்.பி, முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டு முன்னணிக்கு ஆதரவு அளிப்பதே சரியான வழி என வாதிடுகின்றார். மஹிந்தவுடன் அடிக்கடி பேச்சளவில் சம்பந்தன் பேசி வந்தாலும் ரணில் தரப்புடன் ஒத்து போவது என்பதனை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாகவே இரகசியமாக முஸ்லிம…
-
- 3 replies
- 959 views
-
-
தமிழ் மக்கள் முருகண்டி ஆலயத்தினை வழிபடுவதற்கான உரிமை தொடர்ந்தும் மறுப்பு யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் அமைந்திருக்கும் முருகண்டி ஆலயத்தினை மீள புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற போதும் இந்துக்கள் மற்றும் தமிழ் மக்களுக்கு இந்த ஆலயத்தில் வழிபடுவதற்கான உரிமை தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருவதாக குடாநாட்டிலுள்ள இந்து அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன. ஏ9 வீதியூடான போக்குவரத்து தற்போது திறந்து விடப்பட்டுள்ள போதிலும் வாகனத் தொடரணியாகவே படையினர் வாகனங்களை வவுனியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் கொண்டு செல்கின்றனர். இந்த நிலையில் அப்பகுதியிலுள்ள முருகண்டி ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். …
-
- 7 replies
- 1.5k views
-