Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அன்பான தமிழீழ மக்களே! தேசப்பற்றாளர்களே! மண்காத்த வீரர்களே! வணக்கம்தமிழீழ தேசத்தின் விடிவுக்காய் நீண்ட நெடிய எமது விடுதலைப் போராட்டத்தில் நாம் பல இழப்புக்களையும், அழிவுகளையும் சந்தித்திருக்கின்றோம். இதுவரை காலமும் இத்தகைய இழப்புகளும் அளப்பரிய சாதனைகளையும் நிலைநிறுத்திய மாவீரர்களின் தியாகங்களும் எம்மை எமது இலட்சிய உறுதியில் திடம் மிக்கவர்களாக உருவாக்கியது. அன்பான உறவுகளே சமகால சூழ்நிலையில் நாம் இராணுவரீதியாக ஒரு பின்னடைவை சந்தித்துள்ளோம். ஆனாலும் இப்பின்னடைவிற்கு பின்னால் ஏறக்குறைய இந்தியா சீனா ஈரான் பாகிஸ்தான் போன்ற நான்கு வல்லரசுகளின் இராணுவ அரசியல் ராஐதந்திர ரீதியிலான நேரடியான செயற்பாடுகள் முக்கியம் பெற்றிருந்தன. இவை தவிர பயங்கரவாதம் என்ற சொற்பதத்தை பயன்படுத்தி தமிழின …

    • 0 replies
    • 2.2k views
  2. விடுதலைப்புலிகளின் தலைமை பலத்திலும் கொள்கையிலும் உறுதியாகவே இருந்தது - எஸ்.ஜெயானந்தமூர்த்தி விடுதலைப்புலிகளின் தலைமை பலத்திலும் கொள்கையிலும் உறுதியாகவே இருந்தது. அவரை எந்தவொரு சக்தியாலும் இலகுவில் அழித்துவிட முடியாது. என தேசியத் தலைவரின் மாவீரர் உரைகள் அடங்கிய நூல் வெறியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார். தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் 1989 – 2008 ஆண்டு வரையிலான மாவீரர் உரைகள் அடங்கிய தொகுப்பு நூல் வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. பழ.நெடுமாறனின் அணிந்துரையுடனும் கவிஞர்களான காசி ஆனந்தன், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரின் கவிதைகளும் உள்ளடங்கியுள்ளன. என்பீல்ட் நாகபூச…

    • 0 replies
    • 1.2k views
  3. வடக்கில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்க முடியாத நிலை 29 November 09 02:08 am (BST) வடக்கில் அரைவாசிக்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல்களுக்கான அமைப்பு (கபே) சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விடயம் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்காது எனவும், ஜனநாயக நிரோட்டத்தில் இணைந்துகொள்ள விரும்பும் வடக்கு மக்களின் அபிலாஷைகளுக்கு பாதகமாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டின் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் காலப்பகுதியில் வடக்கைச் சேர்ந்த எத்தனை பேர் தங்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து …

  4. மாவீரர் நாளில் புதுவையில் மில்லர் நினைவரங்கம் திறப்பு [படங்கள்] தமிழீழ தாயக விடுதலைக்காக தமதின்னுயர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூர்ந்து புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பத்தில் கடந்த 27-11-2009 அன்று மாலை 4.00 மணியளவில் “மாவீரர் மில்லர் நினைவரங்கம்” திறப்பு நிகழ்ச்சியும் “மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வும்” நடைபெற்றது. மாவீரர் மில்லர் நினைவரங்கத்தினை பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் திறந்து வைத்து ஈகச் சுடரினை ஏற்றி வைத்தார். பெரியார். தி.க. பொதுச்செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன், பெரியார் தி.க. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் தி. வேல்முருகன், புதுச்சேரி பெரியார் தி.க. தலைவர் லோகு. அய்யப்பன் ஆகியோர் எழுச்ச…

  5. http://www.yarl.com//forum3/uploads/monthly_12_2009/Maaveerar_Speech_2009_Voice.mp3 மின்னஞ்சலில் கிடைத்தது இன்னொரு அறிக்கை http://www.yarl.com/forum3/index.php?showtopic=66369 எது எம்மைநோக்கிய உண்மையான அறிக்கை

    • 42 replies
    • 7.5k views
  6. பிரபாகரனை யாராலும் அழிக்க முடியாது: தமிழ் தேசிய கூட்டமைப்பு கொழும்பு, நவ.29- விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை யாராலும் எளிதில் அழித்துவிட முடியாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபாகரனின் மாவீரர் தின உரைகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ''பிரபாகரனின் உரைகள் அடங்கிய இந்த நூல் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியானதாக உள்ளது. தமிழர்களின் விடுதலையே இறுதி மூச்சு என்பதில் அவர் உறுதியாகவே உள்ளார். தற்போது என்னால் பல விவரங்களை வெளியே கூற முடியாவிட்டாலும் காலம் வரும்போது அனைத்த…

  7. "நவம்பர் 27 கொலைகாரர்கள் தினம்" என்று நேற்றைய தினம் மன்னாரில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய இலங்கையின் சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அறிக்கையை வாபஸ் வாங்குமாறு கோரி யாழிலிருந்து சனீஸ்வரன் ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளார். சனீஸ்வரனின் அறிக்கையின் முழுவடிவம்:- வார்த்தைகளால் வரிக்க முடியாக ஈகத்தைப் புரிந்த மகத்தான அந்த மாவீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தி “கொலைகாரர்கள் தினம்” என்று வர்ணித்து உன் சுயரூபத்தையே காட்டிவிட்டாயேடா நீயா தமிழரின் பிரதிநிதி - நீயா மக்கள் தொண்டன் - நீயா ஈழத்தின் விடிவெள்ளி – உன்பின்னால் கோஷம் போட்டுத் திரியும் கூட்டம் கூட உன்னை மன்னிக்காதடா மாபாவி – நடந்து முடிந்தவற்றை எண்ணி மனதுக்குள் மௌமாக அழுது கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்…

  8. இந்த உருவக நாடகத்தில் பாவப்பட்ட கூரியகாந்தியாக தளபதி ராம் அவர்களும், தலைமை எருமையாக கோத்தபாய ராஜபக்ஷவும் திறமையாக நடித்து எருமைக் கூட்டத்தின் பல விருதுகளைத் தட்டிக்கொண்டாலும் சூரியகாந்திகள் அதற்காக அலட்டிக்கொள்ளவில்லை. இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் "ஈழநாடு" பத்திரிகை தெரிவித்துள்ளது. ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்துள்ள கட்டுரையின் முழுவடிவம்:- சூரிய தேவனின் வரவினால் சூரியகாந்திப் பூக்கள் மலர்ந்து சிரித்தன. சூரிய தேவனை வாழ்த்தித் துதித்தன. சூரிய தேவனே! தங்களது வாழ்தலுக்கான உயிர் சக்கி எனத் தொழுதன. நண்பகல் பொழுது நெருங்க நெருங்க சூரிய தேவனின் ஒளிக் கதிர்களின் வெப்பம் அதிகரித்துச் சென்ற போதும், அதனையும் சுகமாகவே மகிழ்ந்து அனுபவித்தன சூரியகாந்திப் பூக்கள். மாலைப…

  9. எதிர்வரும் ஜனாதிபத் தேர்தலில் பொது வேட்பாளராக 'அன்னம்' சின்னத்தில் தான் போட்டியிட வுள்ளதாக ஜெனரல் சரத் பொன்சேகா இன்று உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். எனினும் புதிதாக பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியின் கீழ் தனது ஜனாதிபதி ஆட்சி நிலவுமெனவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளராக இன்று இடம்பெற்ற முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை அறிவித்துள்ளார். இதன் போது தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் பட்சத்தில் நிறைவேற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பான கொள்கைகளை இதன் போது சரத் பொன்சேகா வெளியிட்டார். அங்கு அவர் உரையாற்றுகையில் ,நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த அவர் விடுதலை புலிக…

  10. குச்சவெளிக் கடற்கரைப் பகுதியில் பெருமளவு நிலப் பகுதியை சட்டத்திற்குப் புறம்பான முறையில் பெற்று அதில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றைக் கட்டுவதற்கு ராஜபக்ச சகோதரர்கள் முயற்சி எடுப்பதாக கூறப்படுகிறது. அம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பினாமிகளின் பெயரில் இந்த கையகப்படுத்தலுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இந்தக் காணிக் கையகப்படுத்தல் நடவடிக்கைகள் குறித்து மாகாண சபை கூட எதுவும் அறிந்திருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. http://www.tamilstar.org

    • 0 replies
    • 666 views
  11. மனித நேயத்திற்கு கூட விளம்பரம் தேவைப்படுகிறதா…..? நவம்பர் 26 ஒரு வருடம் ஆகிவிட்டது, மும்பையிலே குண்டு வெடிப்பு,அதற்காய் விளக்கு ஏற்றுகிறாள் நம் தமிழ் பெண் மரினா கடற்கரையில். ஊடங்கள் இந்தியாவே கண்ணீர் அஞ்சலி செலுத்துவது போல் பிம்பம்கள் ஏற்படுத்தினர். இதே தமிழ் பத்தரிகைகள் ஊடகங்கள் ஒரு இனப் படுகொலை பக்கத்தில் நடந்திருக்கிறது அதைப் பற்றி ஏன் பேசவில்லை. ஏன் சாகிறவன் தாஜ் ஹோட்டலில் தங்குகின்றவனாக இருக்க வேண்டுமா..? மும்பையில் தாக்குதல் நடந்த போது சச்சின் வருத்தம் தெரிவித்தார். இதே சச்சின் இலங்கையில் குழந்தைகளை பக்கத்தில் கொன்று குவித்த போது பக்கத்தில் சதம் அடித்து சவம் போல் நடந்து கொண்டது ஏன்.சண்டை உச்சத்தில் நடந்து கொண்டிருந்த போது விளையாட்டு தேவையா?? அப்பொழுது இந்த…

  12. தனித்தமிழீழத்தை நிறைவேற்ற எல்லோரும் கைகோத்தால் அதுவே தேசியத்தலைவருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும் – விஜய் அசோகன் தமிழீழத்துக்கான ஆயுதப் போராட்டம் முடிந்து, அரசியல்ரீதியான போராட்டங்களின் மூலமாக நாடு கடந்த தமிழீழத்தை அமைக்கிற முயற்சிகள் தீவிரமாகியிருக்கிறது! பன்னாட்டுத் ஈழத் தமிழர்கள் தங்களுக்குள் தேர்தல் நடத்தி, நாடு கடந்த தமிழீழ பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும் தொடங்கி விட்டார்கள். கடந்த 18-ம் தேதி நார்வே நாட்டில் ஈழத் தமிழர் அவைக்கான தேர்தல் நடந்தது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய் அசோகன் என்ற மாணவர் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால், ”ஈழத் தமிழர் அவைக்கு தமிழ்நாட்டுத் தமிழன் பிரதிநிதியாக இருப்பதா? ஈழத்தில் பிறந்தவர்களுக்கு பிரதிநிதியாகும் சக்தி இல்லையா?” என …

  13. ஆயுதக் கொள்வனவில் ஊழல் குறித்து விசாரிப்பதாக இருந்தால் றாஜபக்ச சகோதர்களிடமே விசாரிக்க வேண்டும் - சரத் பொன்சேக்கா யுத்த காலத்தில் இடம்பெற்ற ஆயுதக் கொள்வனவில் மோசடிகள் இடம்பெற்றாகத் தன்மீது பழி போட சிலர் முயற்சிப்பதாகவும் ஆனால் ஆயுதக் கொள்வனவு மோசடிகள் குறித்து விசாரிப்பதாக இருந்தால் அது குறித்து றாஜபக்ச சகோதரர்களிடமே விசாரிக்க வேண்டுமென்று சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார. றாஜபகச ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஆயுதக் கொள்வனவுகள் லங்கா லொஜிஸ்ரிக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்த நிறுவனத்தின் தலைவராக கோத்தபாய ராஜபக்சவே இருப்பதாகவும் குறிப்பிட்ட பொன்சே;ககா எனவே ஆயதக் கொள்வனவில் இடம்பெற்ற நிதி மோசடிகள் குறித்து தன்னை விட அவரே அதிகம் அறிந்திர…

  14. எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையாளர் தீர்மானித்துள்ளார். எனினும், இந்தத் தினம் ஜனாதிபதிக்கு கூடாத தினம் என சோதிடர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜனவரி 26 தினமானது செவ்வாய்க் கிழமையில் வருவதால் இந்த தினத்தை சோதிடர்கள் குஜ தினம் என அழைக்கின்றனர். அண்மையில் நிகழ்ந்த ராகு - கேது இடம்பெயர்ச்சியின் காரணமாக ஜனாதிபதியின் சாதகத்தின்படி மேற்கூறிய தினம், அனுகூலமான பலன்களைத் தராது எனவும் அது அவருக்கு சாதகமாக இல்லையெனவும் சோதிடர்கள் கூறியுள்ளனர். செவ்வாய்க் கிரகமானது எதிரியை வெற்றிக்கொள்ளும் கிரகமாகும். கடந்த காலம் முழுவதும் யுத்த செயற்பாடுகளில் ஈடுபட்டு தற்போது ஜெனரல் என்ற பெயரில் அழைக்கப்படும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான பொன்சேக…

  15. பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள சரத் பொன்சேக்காவின் சவால்களை எதிர்கொள்ள முடியாத நிலையில் இருக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சரத் பொன்சேக்கா என்ற பெயரில் மற்றுமொரு வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கத் தயாராகிவருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பசில் ராஜபக்சேவின் உத்தரவின் பேரில் செயற்படுத்தப்படும் இந்த முனைப்பிற்குள், சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவான வாக்காளர்களைக் குழப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதுடன், இதற்காக அரசாங்கத்திற்குச் சார்பான கட்சியொன்றின் ஊடாக வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள கட்சியொன்றை கூட்டணியிலிருந்து உடைத்து, ஜனாதிபதித் தேர்தலில் …

  16. இலங்கையில் இன்னும் தமிழர்கள் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் முள்வேலி முகாமில் மிகவும் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களை உடனடியாக முகாம்களில் இருந்து விடுவித்து சொந்த ஊர்களில் குடியமர்த்த வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது இயக்குநர் சீமான் என்று கூறியுள்ளார் கனடாவின் ரொறன்ரோவில் நடந்த மாவீரர் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுவதற்காக சென்றிருந்த இயக்குநர் சீமானை அந்த நாட்டு குடியேற்றத்துறை அதிகாரிகள் திடீரென கைது செய்தனர். பின்னர் நாட்டை விட்டு வெளியேறுமாறும் கூறினர். இதையடுத்து சீமான் சென்னை கிளம்பினார். இன்று அதிகாலை சென்னை வந்து சேர்ந்த சீமானுக்கு நாம் தமிழர் இயக்கத்தினர், தமிழ் உணர்வாளர்கள் என பெரும் திரளானோர் உற்சாக வரவேற்பு அளி…

  17. இராணுவத்தில் உயர் வசதிகளை அனுபவித்து மேலும் ஒன்றரை வருடங்கள் கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியாக பதவி வகிக்க வாய்ப்பிருந்த போதிலும், இராணுவ உடையைக் களைந்து, அரசியலுக்கு வந்தது இராணுவ சீருடையை அணிந்து நாட்டை நிர்வகிக்கும் எண்ணத்தில் அல்லவென ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். தேசிய சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் மத்தியில் நேற்றிரவு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தான் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக சரத் பொன்சேக்கா முதன்முறையாக இங்கு தெரிவித்துள்ளார். தேசிய சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் நேற்று கொழும்பு கலதாரி விடுதியில் நடைபெற்றதுடன், அதில் பிரதம அதிதியாக சரத் பொன்சேக்கா கலந்துகொண்டார். இதனைத் தவிர எதிர்க்கட்சித் தல…

  18. [ஒலி] நேற்று இரவு இளங்கோவன் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசியதாக நாம் தமிழர் அமைப்பினர் மூவர் கைது. அது தொடர்பாக நாம் தமிழர் இயக்க தொண்டர் நம் மீனகம் தளத்துக்கு அளித்த செவ்வி. ஆடியோ கேட்க: http://www.meenagam.org/?p=17652 விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாளையொட்டி ஈரோட்டில் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் இயக்கத்தினர் வைத்திருந்த பிரபாகரனின் படங்களை இளங்கோவன் தலைமையில் சென்ற காங்கிரஸ் குழுவினர் கிழித்தெறிந்ததையடுத்து அன்று இரவு 12 மணியளவில் இளங்கோவன் வீட்டின் மீது 3 பெற்றோல் குண்டு வீசப்பட்டது. இது பற்றி தெரியவருவதாவது:- விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாளையொட்டி ஈரோட்டில் பல்வே…

  19. 53 ஆவது பொதுநலவாய நாடுகளது மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்கு கனடாவும் எதிர்ப்பு 28 November 09 02:32 am (BST) எதிர்வரும் 2011ம் ஆண்டு 53 ஆவது பொதுநலவாய நாடுகளது மாநாட்டை இலங்கையில் நடத்துவது குறித்த யோசனைத் திட்டத்திற்கு கனேடிய அரசாங்கமும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. பொதுநலவாய நாடுகளது மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்கு கனடா ஆதரவளிக்காது என அந்நாட்டு பிரதமர் அலுவலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. யுத்த காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. கனடாவில் நடைபெறவுள்ள தேர்தல்களின் போது தமிழ் வாக்காளர்களின் நன்மதிப்பை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்கா…

  20. கருணாவை விட சரத் பொன்சேக்கா தேசத் துரோகியா? – மங்கள சமரவீர கேள்வி முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை தேசத் துரோகி என விமர்சிக்கும் ஹெல உறுமய தேரர்கள் கருணாவை விட அவர் செய்த தேசத் துரோகம் என்ன என்று மக்களுக்கு விளக்க வேண்டும் என மங்கள சமரவீர கேட்டிருக்கிறார். இந்த நாட்டை பிளவுபடுத்துவதற்காக பல படைவீரர்களைக் கொன்று குவித்த கருணா இன்று இராஜ போகத்தை அநுபவிக்கும் போது நாட்டுக்காக உழைத்த சரத் பொன்சேகாவை மட்டும் தேசத் துரோகி என்று வசைபாடுவதே உண்மையில் தேசத் துரோகம் எனக் குறிப்பிட்ட அவர் கருணாவிற்கு பிரித் நூல் கட்டும் தேரர்கள் ஏன் சரத் பொன்சேக்காவிற்கு பிரித் நூல் கட்டக் கூடாது என்றும் கேள்வி எழுப்பினார். மூலம் : http://www.tamilstar.org

  21. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நாளை 55 வது பிறந்த நாள். இத்தினத்தில் அல்லது மாவீரர் தினமான நாளை மறுதினத்தில் தமிழர்களுக்கு பெரும் ஆச்சரியம் ஒன்று நிகழும் என்று இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும், இலங்கை இறுதிப்போரில் விடுதலைப்புலிகளின் தலைவர் கொல்லப்பட்டுவிட்டதாக அவ்வியக்கத்தைச் சேர்ந்த பத்மநாதன் அறிவித்தார். ஆனால், நெடியவன் இதற்கு மறுப்பு தெரிவித்தார். பழ.நெடுமாறன், வைகோ உட்பட தமிழ் தலைவர்கள் பலரும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவே அறிவிப்பு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாளை வரும் பிரபாகரன் பிறந்தநாளை உலகமே எதிர்ப்பார்க்கிறது. நாளை அல்லது நாளை மறுதினம் மாவீரர் தினத்தில் தோன்றி மாவீரர் தின உரையாற்றுவார் பிரபாகரன் என்று…

    • 4 replies
    • 2.1k views
  22. மாவீரர் நாளை முன்னிட்டு கனடாவில் உள்ள டொரொண்டாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டு சட்டத்துக்கு புறம்பாக பேசியதாக திரைப்பட இயக்குநர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட சீமானை இந்தியாவுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கனடாவில் உள்ள டொரொண்டாவில் மாவீரர் வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சீமான், பிரபாகரன் என்ற மாமேதையின் கையில் ஓரு நாடு அல்லது தேசம் இருந்தால் உலகத்தின் வல்லரசாக சில வருடங்களிலேயே வந்துவிடும். பிரபாகரனின் ஆட்சியைப் பார்த்து, தமிழ்நாட்டு அரசை விமர்சிப்பார்கள் என்ற பயம், துணிவான தூய்மையான நீதி, நிர்வாகம், கட்டுக்கோப்பான அரùசு என்ற பெரு…

    • 20 replies
    • 3.5k views
  23. சிட்னி மாவீரர் நாள் நிகழ்வுகளில் 2000 பங்கேற்பு திரு.நடேசனின் சகோதரி ஈகை சுடர் ஏற்றி ஆரம்பித்தார்.லெப் கேணல்.அமுதாப்பின் சகோதரரும் பங்கேற்றார் காணொளி

  24. மொனராகல மாவட்டம் புத்தளப்பகுதியில் இன்று மதியம் 1. 40 அளவில் விபத்துக்குள்ளான எம்.ஐ 24 உலங்கு வானூர்தியில் சென்ற இரு வானோடிகளும் இரு வான் காப்பாளர்களும் கொல்லப்பட்டனர். இந்த உலங்குவானூர்தியின் பறப்பானது பயிற்சியினை நோக்கமாக கொண்டமைந்ததாக கூறப்படுகின்றது. விமானப்படை பேச்சாளர் இது பற்றி கூறுகையில் இது ஒரு விபத்து என்றும். இந்த விபத்திற்கான காரணத்தினை கண்டறிய விசேட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதனிடையே இந்த விபத்து உண்மையில் தொழில் நுட்பகோளாரினால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பதனை இந்த குழு கவனத்தில் கொள்ளும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    • 2 replies
    • 906 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.