ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142966 topics in this forum
-
அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் வழி யில் தடுத்து நிறுத்தப்பட்ட படகிலுள்ள இலங்கையர்களுக்குத் தற்காலிகமாக தனது நாட்டில் தங்குவதற்கு அனுமதி வழங்க இந்தோனேஷியா முன்வந்துள்ளது. மனிதாபிமான காரணங்களைக் கருத் தில் கொண்டு அகதிகளின் படகை தமது கரைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப் படும் என இந்தோனேஷிய ஜனாதிபதி யின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். "படகிலுள்ளவர்கள் தற்காலிகமாக எமது பகுதியில் தங்கவைக்கப்படுவார்கள்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். "குறிப்பிட்ட படகில் நோய்வாய்ப்பட்ட குழந்தை ஒன்றும் உள்ளது. இந்தோனே ஷிய ஜனாதிபதி அந்தக் குழந்தை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளார்"என்றும் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். நன்றி உதயன் : http://www.uthayan.com/Welcome/full.php?id=1169&Uth…
-
- 0 replies
- 387 views
-
-
தங்களுடைய இனப்பிரச்சினைக்கு நீதி, நியாயமான தீர்வுவேண்டி நீண்டகாலம் போராடி போரழிவுகளையும், பேரழிவு களையும் சந்தித்து இன்று துரும்பாகித் துவண்டு போய்க் கிடக்கின்றது ஈழத் தமிழினம். ஈழத் தமிழர்கள் தங்களுடைய அரசியல் காய்நகர்த்தல் களை தந்திரோபாயமாக முன்னெடுக்கவில்லை, வேகத்துக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை விவேகத்துக்குக் கொடுக்கவில்லை, காரியம் பற்றிச் சிந்திக்காமல் வீரியம் மட்டும் பேசியமையால் வந்த வினை இது என்றெல்லாம் இப்போது நம் மத்தியில் இருந்தே சுயவிமர்சனங்கள் கிளம்பியுள்ளன. அவை சரியாகவும் இருக்கலாம் அல்லது பிழையாகவும் இருக்கலாம். அத்தகைய விமர்சனங்களைக் குறைகூறும் எண்ணம் எமக்கு இல்லை. ஆனால், தமிழினம் இன்று நொந்து போயிருக்கின்றது; பலவீனமுற்று இருக்கின்றது என்பது…
-
- 0 replies
- 466 views
-
-
Please write protest letters to the government and the police to express your strongest condemnation of the mistreatment of refugees. Please also demand the Malaysian Government to stop the repatriation of Sri Lankan refugees. Please call and send your protest letters to: Pekan Nanas Immigration Detention Depot Pekan Nanas, 81500 Pontian, Johor Tel : +607-6993577 Faks : +607-6993588 Dato' Abdul Rahman bin Othman Director-General of Immigration Department, Director-General’s Office, Immigration Department of Malaysia Headquarters, Level 7 (Podium), No 15, Persiaran Perdana, Presint 2, 62550 Putrajaya, Malaysia Tel: +603-88801005 …
-
- 0 replies
- 812 views
-
-
தற்போது கலைஞரும் சிதம்பரமும் அடுத்த 500 கோடி பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் முந்தய 500 கோடிக்கு என்ன நடந்தது? அந்த 500 கோடிக்கு எவ்வளவு மக்கள் குடியேற்றப்பட்டனர்? என்பதனை வெளிப்படையாக கூறவேண்டும். என கேள்வி எழுப்பியுள்ளார் செல்வி ஜெயலலிதா.இலங்கை அப்பாவி மக்களை தமது அரசியல் கபட நாடகத்திற்காக கருணா நிதி பலிக்கடா ஆக்குகின்றார். முந்தய நிதிக்கு என்ன நடந்தது என்பது மூடு மந்திரமாகவே உள்ளது எனவும் கூறியுள்ளார். 58 ஆயிரம் பேர் குடியமர்த்தப்படுவர் என இலங்கை சென்ற குழு கூறியது ஆனால் அதற்கான சமிக்ஞை எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளார். http://www.eelanatham.net/news/important
-
- 1 reply
- 590 views
-
-
குற்றவாளிகள், சந்தேக நபர்களை தடுத்து வைத்திருக்கும் இடங்கள் போதிய வசதி கொண்டதாக இல்லை எனவும் மனிதர் வாழக்கூடிய இடங்களாக இல்லை எனவும் ஐக்கிய நாடுகளின் தண்டனைகள் மற்றும் சித்திரவதைகளுக்கு எதிரான விசாரணையாளர் மான்ஃபிரெட் நொவாக் குறிப்பிட்டுள்ளார் (Manfred Nowak) ஐக்கிய நாடுகளின் தடுத்து வைக்கப்பட்டோரை பாதுகாக்கும் உரிமை சட்டத்தின் கீழ் இத்தகைய வழிமுறைகளை இலங்கை, நேபால்,ஜோர்ஜியா, ம்மொல்டோவா போன்ற நாடுகள் பின்பற்றுவதில்லை என கூறியுள்ளார். சிறைகூடங்கள் மிகவும் சிறியதாகவும் சில கூடங்கள் படுத்து உறங்க முடியாதனவாகவும் காணப்படுவதாக தெரிவித்துள்ள நோவாக் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டோர்கள் வெளியில் தொடர்புகொள்ள முடியாதவர்களாகவும் இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் தடுத்து வைக்கபட்டோர…
-
- 0 replies
- 530 views
-
-
சரத் பொன்சேகா அவர்களை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டால் அதற்கான எமது முழு ஆதரவினையும் தாம் வழங்க தயாராக உள்ளதாக ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் திரு லால் காந்த தெரிவித்துள்ளார்.அதே போன்று புதிய சிஹல உறுமைய எனும் கட்சியும் இதே கருத்தை தெரிவித்துள்ளது. அதே நேரம் டெலோ கட்சி இதனை எதிர்ப்பதாக கூறியுள்ளது. http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 557 views
-
-
இலங்கை தரைப்படையின் 611 வது பிரிகேட் இன் கட்டளை அதிகாரி கேணல் துமிந்த அமரசேகர இன்று காலை தம்புள்ள வீதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த வேளை நடந்த விபத்தில் கொல்லப்பட்டுள்ளார். தொரயாய எனும் இடத்தில் விபத்துக்குள்ளான இவர் குருனாகல வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனளிக்காது கொல்லப்பட்டுள்ளார். http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 727 views
-
-
தாய்லாந்து பாங்கொக்கில் மூன்று புலம்பெயர் தமிழர்கள் அந் நாட்டு பொலிசாரினால் கடனட்டை மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.சிவப்பிரியன் சிவபாக்கியராஜா ( கனடா) அழகப்பன் பாலேந்திரன்,வெங்கடெஸ்வரன் மகேஸ்வரன் இவர்கள் இருவரும் இலங்கையினைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களிடம் 104 கடனட்டைகளும், இரு லப்டொப் கணனிகள்,ஒரு மக்னற்றிக் ஸ்ரிப்ஸ் ஆகியனவும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.ஐரோப்பாவில் இருந்து நண்பர்களால் பெறப்பட்ட கடனட்டை தகவல்களை வைத்து கொண்டு இவர்கள் அட்டைகளை செய்து அதன் மூலம் பணத்தினையும், கொள்வனவுகளையும் பெற்று கொண்டதாக இவர்கள் மீதுவிசாரணை செய்து வரும் பொலிசார் தெரிவித்துள்ளனர். http://www.eelanatham.net/news
-
- 0 replies
- 584 views
-
-
நாளை ஐரோப்பிய பாராளுமன்றில் இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. இந்த விவாதத்தின் பின்னர் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கொள்கைகளுக்கான அலுவலர் தெரிவித்துள்ளார். அலுவலர் பிலிப் கமாரிஸ் இது பற்றி கூறுகையில் நாளை மதியத்தின் பின்னர் ஈரான்,கினியா ஆகிய நாடுகளின் மனித உரிமை மீறல் தொடர்பான விவாதங்கள் இருக்கின்றன அத்துடன் இலங்கை தொடர்பான விவாதமும் இடம்பெறும் இதில் முக்கியமாக மனித உரிமை மீறல் மறும் ஜனனாயகம் தொடர்பான விடயங்களில் விவாதங்கள் இடம்பெறும். இந்த விவாதத்தின் பின்னர் சில தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார் திரு கமாரிஸ். இந்த விவாதத்தில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதரும் அழைக்கப்பட்டுள்ளார். …
-
- 0 replies
- 576 views
-
-
தமிழ் நாட்டில் பல இடங்களில் 4 நாட்களில் ஈழத் தமிழர்களை விடுவித்த கலைஞர் என்ற பொருளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதாவது தடுப்புமுகாமில் உள்ள மக்களை கலைஞர் விடுதலை செய்துவிட்டது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த தி.மு.க முயல்கிறது. தமிழ் நாட்டில் பெருகிவரும் ஈழத் தமிழர் ஆதரவுகளை அடக்கும் நோக்கில் இவ்வாறான பொய் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இலங்கைத் தடுப்பு முகாம்களில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டு இன்றுடன் 150 நாட்கள் ஆகின்றது, புலம்பெயர் தமிழர்கள் போராட்டங்களில் இறங்கியிருக்கும் இவ்வேளையில், தமிழ் நாட்டில் தி.மு.க வினரின் நடத்தை மிகவும் கண்டிக்கத்தக்கது.
-
- 4 replies
- 1.1k views
-
-
தமிழ் எம்.பி க்களே மக்களின் நிலைமையினையும் அரசாங்கத்தின் சேவையினையும் யதார்த்தமாக புரிந்து கொண்டு செயற்பட்டுள்ளனர். மற்றவர்களைப்போல் விமர்சனங்கள் செய்யாது மேலும் உதவிகளை பெற்றுதர முயற்சித்துள்ளனர். தமிழக எம்.பி களுக்கு இல்லாத உணர்வு வேறு யாருக்கும் வரப்போவதும் இல்லை என வாழ்த்தி போற்றியுள்ளார். இலங்கை ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா.சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல பிரமுகர்கள் இலங்கைக்கு விஜயம் செய்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை பார்வையிட்டனர். மதிப்பீடுகளை மேற்கொண்ட பின்னர் தமது நாடுகளுக்கு சென்று பல்வேறு வகையான கருத்துக்களை வெளியிட்டனர். சிலர் விரைவான மீள்குடியேற்றம் குறித்து அழுத்தங்களை வெளியிட்டனர். மற்றும் சிலர் வேறுபட்ட கருத…
-
- 0 replies
- 447 views
-
-
இலங்கையில் தடுப்பு முகாம்களில் வாழும் மக்கள் மத்தியில் பணிபுரியும் அரச சார்பற்ற அமைப்புகள் டிசெம்பர் 31 ஆம் திகதியுடன் தமது வேலைத் திட்டங்களை நிறுத்துவது தொடர்பாக பரிசீலித்து வருகின்றன. தடுப்பு முகாம் களுக்கு மேலும் உதவுவது அந்த முகாம்கள் நீடிப்பதற்கு உதவும் எனக் கருதியே அரச சார் பற்ற அமைப்புகள் இவ்வருட இறுதிக்குள் தமது பணிகளை முடித்துக் கொள்வது குறித்து ஆராய்வதாக கூறப்படுகின்றது.இந்த முகாம்களுக்கு மேலும் உதவுவது மனச்சாட்சிக்கு விரோதமான செயல் என அரச சார்பற்ற அமைப்புகள் கருதுகின் றன எனத் தெரிவித்துள்ள "இன்னர் சிற்றி பிரஸ்" இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு: இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பணிபுரியும் அரச சார்பற்ற அமைப்புகள் டிசெம்பர் 31ஆம் திகதியுடன் தம…
-
- 0 replies
- 432 views
-
-
அமெரிக்காவில் முறையற்ற பங்கு சந்தை வியாபாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இராஜ் இராஜரட்ணம் அவர்கள் 100 மில்லியன் டொலர் பிணையில் விடுவிக்க ஏற்பாடு செய்துள்ளதாக அவரது சட்டதரணி ஜிம் வோல்டன் தெரிவித்துள்ளார். எனினும் இவர் நியூ யோக்கில் இருந்து 110 மைல்களுக்கு அப்பால் பயணம் செய்ய முடியாது எனவும் அதே நேரம் பயண அனுமதி சீட்டினை நீதிமன்றில் ஒப்படைத்து இருக்கவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. திரு இராஜ் இராஜரட்னம் அவர்கள் அமெரிக்க மற்றும் இலங்கை குடியுரிமகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே நேரம் இலங்கை நீதி அமைச்சு திரு இராஜ் அவர்கள் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்திற்கு நிதி உதவி செய்துள்ளமையானது விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்துள்ளதாக கருத முடியாது எனக்கூறியுள்ளனர். திரு இராஜ் அவ…
-
- 1 reply
- 726 views
-
-
முல்லைத்தீவு, சுதந்திபுரம் பிரதேசத்தில் சிறீலங்காப்படை கனரக வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் சிறீலங்காப்படையினன் ஒருவர் உயிரிழந்ததோடு மூவர் காயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன் வீதியால் பயணித்த சிறீலங்காப் படையினரின் கனரக ஊர்தி சுதந்திரபரம் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த சிறீலங்காப்படையினன் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர்காயமடைந்துள்ளனர். ஊர்தியின் வேக அதிகரிப்பினால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி சங்கதி இணையம் http://www.sankathi.com/
-
- 0 replies
- 632 views
-
-
முப்படைகளின் பிரதம அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகாவை, எதிர்க்கட்சி களின் பொதுக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சியைக் கடுமையாக எதிர்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றில் கூறியது. முப்படைகளின் பிரதம அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகாவை, எதிர்க்கட்சி களின் பொதுக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சியைக் கடுமையாக எதிர்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றில் கூறியது. நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சுக்கான குறைநிரப்புப் பிரே ரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய கூட்டமைப்பு உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தாவே இவ்வாறு கூறினார். …
-
- 0 replies
- 426 views
-
-
இந்திய இறையாண்மைக்காக இந்திய அரசு தம் குடிமக்களாகிய தமிழர்களை பலி கொடுக்க எப்போதும் தயங்கியதில்லை. இதுதான் ஒரு சுண்டைக்காய் நாடான இலங்கைக்கு தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி, சித்ரவதை செய்யவும், சுட்டுக் கொல்லவும் தைரியத்தைக் கொடுத்திருக்கிறது. தமிழக தலைநகரான சென்னையில் தமிழில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ததற்காக இளம்பெண் ஒருவரை பீகாரை சேர்ந்த ரயில்வே காவலர்கள் தாக்கியுள்ளனர். தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் வட இந்தியர்கள் வைத்துள்ள வெறுப்பையே இந்த சம்பவம் காட்டுகிறது. வட இந்தியர்கள் ஒரு போதும் தமிழர்களின் நலனில் அக்கறை செலுத்தப் போவதில்லை. அதற்கு தமிழ் துரோகிகளும் விடப் போவதுமில்லை. சிங்களன் சீனாவுடன் வலுவாக கூட்டு சேர்ந்து கொண்டு இந்தியாவையும், மேற்குலக நாடு…
-
- 30 replies
- 2.6k views
-
-
பொறுப்பற்ற வகையில் செய்திகளை வெளியீடு செய்யும் இணைய தளங்களை கறுப்புப் பட்டியல் இட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்திற்கும் ஏனைய தரப்பினருக்கும் இடையில் முறுகலை ஏற்படுத்தக் கூடிய வகையில் செய்திகளை திரிபுபடுத்தி வெளியிடும் இணைய தளங்களை தடை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செயற்படும் இணைய தளங்களின் பட்டியல் ஒன்று விரைவில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்க ஊடகச் சட்டத்தின் மூலம் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே, எதிர்காலத்தில் பொறுப்பற்ற வகையில் செய்திகளை வெளியிடும் சகல இணைய தளங்களும் முடக்கப்படும் என அராங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இணைய இணைப்பு : http…
-
- 0 replies
- 405 views
-
-
இந்த வருட இறுதிக்குள் முதலமைச்சர் பதவியில் இருந்து பிள்ளையானை நீக்கிவிட்டு கருணாவை நியமிக்க இலங்கை அரசு முயற்சிப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. பிள்ளையான் கொழும்பு நிர்வாகத்துடன் ஒத்து போகாமை, தன்னிச்சையாக செயற்படுதல், கொழும்புடன் முட்டி மோதிக்கொண்டு உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் உறவாடுதல் மற்றும் இந்தியாவுடனான அதீத உறவு ஆகியனவற்றால் அரசாங்கம் பீதியில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது ஆகவே பிள்ளையானை தொடர்ந்து வைத்திருத்தல் தமக்கு நீண்டகாலத்தில் பிரச்சினையினை உண்டு பண்ணும் என பாதுகாப்பு அமைச்சும் கருதுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இணைய இணைப்பு http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 507 views
-
-
தமிழ் மக்களை நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் இணைத்துக் கொள்ள வேண்டுமென மலேசிய பிரதமர் டெடுக் சிறி டுன் ரஸாக் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களது உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் தமிழ் மக்களை உள்வாங்கிக் கொள்வதன் மூலம் மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதன் மூலம் படகு மூலம் அரசியல் தஞ்சம் கோரும் இல்ஙகைத் தமிழர்களின் எண்ணக்கையை குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் சட்ட விரோதமாக பிரவேசிப்பதற்காக இலங்கையர்கள் 15000 முதல் 20000 வரையிலான அமெரிக்க டொலர்க…
-
- 0 replies
- 329 views
-
-
முற்குறிப்பு இயக்குணர் சீமானின் தமிழ் உணர்வுக்கு தலை வணங்கி எனது இந்த மடலை உலகத்தமிழினத்துக்கு எழுதுகிறேன். போகிற போக்கை பார்த்தல் சிங்கள அரசே பரவா இல்லை போல இருக்கிறது. அவர்களை பொறுத்த வரை போர் முடிந்து விட்டது. பிரபாகரன் கிளைமாக்ஸ் காட்சியில் கொல்லப்பட்டார். (நமக்கு வீரச்சாவு). அறிவியலில் உச்சபச்ச வளர்ச்சி கொண்ட இலங்கையில் இரண்டு மணி நேரத்தில் டி.என்.எ சோதனை செய்து உறுதி ஆகியது. பின்னர் சடலத்தை எரித்து இந்துமா கடலில் சாம்பலை எரிதாகி விட்டது. அப்படியே பதினாறாம் நாள் காரியம் செய்தால் எல்லாம் முடிந்தது. லண்டனில், நோர்வேயில் இருக்கும் செய்தி தொடர்பாளர்கள் முதலில் தலைவர் உயிருடன் உள்ளார் என்றார்கள். வைகோ, பழ.நெடுமாறன் போன்றோரும் உறுதி செய்தனர். நக்கீரனும் தன் பங்…
-
- 23 replies
- 2.8k views
-
-
யாழ்ப்பாணத்தில் ஒரு ஓட்டை.. என்ன இது? கூகுள் மப்பில் பட்டது...
-
- 4 replies
- 2.2k views
-
-
இலங்கை அதிபர் ராஜபக்சேவும், அவரது தம்பி கோத்தபயா ராஜபக்சேவும் போர்க் குற்றவாளிகள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உலக சமுதாயம் மெளனமாக இருப்பது வேதனையாக இருக்கிறது. இலங்கை மீது உலக நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இலங்கைக்கு சமீபத்தில் திமுக தலைமையில் எம்.பிக்கள் குழு சென்றது. இதில் திருமாவளவனும் இடம் பெற்றிருந்தார். இலங்கை பயணத்தின்போது இவரும் ஒரு மெளனமான உறுப்பினராக சென்றிருந்தார். ராஜபக்சேவை தமிழக குழு சந்தித்தபோது திருமாவை சுட்டிக் காட்டி பிரபாகரனுடன் இருந்திருந்தால் செத்திருப்பீர்கள் என்று பச்சையாகவே கிண்டலடித்தார் ராஜபக்சே. இதை ஒரு ஜோக் என்று சென்னை திரும்பிய பின்னர் தெரி…
-
- 9 replies
- 1.7k views
-
-
இலங்கை தமிழர்களுக்காக, "வணங்காமண்' கப்பலில் அனுப்பப் பட்ட நிவாரணப் பொருட்கள், ஐந்து மாதத்தின் பின், நாளை (21ம் தேதி) இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வசம் ஒப்படைக்கப்படுகின்றன. அடுத்த இரு நாட்களுக்குள், தடுப்பு முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் சென்று சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக, ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் தமிழர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து, "கருணைத் தூதுவன்' என்ற அமைப்பு உருவானது. மேலும் வாசிக்க இணைய இணைப்பு : http://www.sankathi.com/
-
- 1 reply
- 1k views
-
-
நேற்று முந்தினம் அவுஸ்ரேலியா சென்றடைந்த அடுத்த அகதி கப்பலான ஓசியனிக் விகிங் என்ற கப்பலில் 78 இலங்கை தமிழர் இருப்பதாகவும் அதில் 05 பெண்களும் 05 குழந்தைகளும் உள்ளடங்குவதாக நேற்று கன்பராவில் பாராளுமன்றில் துணை பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த படகில் வந்தவர்கள் தொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றபோது அவுஸ்ரேலிய துணை பிரதமர் மேலும் கூறுகையில் இலங்கை சிறுபான்மை மக்களின் வருகை தொடர்ந்து இருக்கும் அபாயம் இருப்பதாகவும் இது தொடர்பாக இந்தோனேசிய சென்றிருக்கின்ற பிரதமர் கெவுன் ரட் அவர்கள் இந்தோனேசிய பிரதமருடன் பேசுவார் எனவும் குறிப்பிட்டார். இதே போன்று கடந்த வாரம் கனடாவிலும் 76 இலங்கை அகதிகளுடன் ஒரு கப்பல் தடுத்து கைது செய்யப்பட்டதும் தற்போது அந்த அகதிகளுக்கான அகதி அந்தஸ்த்தை வ…
-
- 0 replies
- 619 views
-
-
2000மாம் ஆண்டு ஒக்டோபர் 19ம் திகதி யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் கொலையாளி பிரித்தானியாவில் வாழ்ந்துவருவதால் அவரை உடனடியாக கைதுசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஊடக மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பிரித்தானிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக எமது இணையத்தளத்திற்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. நிமலராஜன், ராவய, வீரகேசரி ஆகிய பத்திரிகைகளின் செய்தியாளராக கடமையாற்றியதுடன் பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ், சிங்கள ஒலிபரப்புச் சேவைகளினதும் யாழ்ப்பாண செய்தியாளராக உயிருக்கும்போது கடமையாற்றிவந்ததுடன், அவர் அரசாங்கத்தின் அனுசரணையில் செயற்படும் ஆயுதக் குழுவான ஈ.பி.டி.பி. அமைப்பின் துப்பாக்கிதாரியினால் கொடுரமான முறையில் க…
-
- 0 replies
- 989 views
-