Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வட்டுக்கோட்டையில் ஆரம்பித்து முள்ளிவாய்க்காலில் முடிவுற்றதாக சிங்கள அரசால் அறிவிக்கப்பட்ட ஈழத் தமிழர்களது விடுதலைப் போர் புதிய பரிமாணங்களோடு புலம்பெயர் தேசங்களில் பலம் பெற்று வருகின்றது. இது சிங்கள தேசம் முற்றிலும் எதிர்பார்க்காத புதிய களமாக அமைந்துள்ளது. விடுதலைப் புலிகளது இராணுவக் கட்டமைப்பை அழித்துவிட்டால், ஈழத் தமிழர்களின் விடுதலை வேட்கையை இல்லாமல் ஆக்கி விடலாம் என்பதே ராஜபக்ஷக்களின் கணிப்பாக இருந்தது. பிரபாகரன் அவர்களை மையப்படுத்தியே விடுதலைப் புலிகள் அமைப்பு இயங்கி வந்ததால் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் மத்தியில் குழப்பங்களும் பிளவுகளும் உருவாகும் என்பதே சிங்களத்தின் கனவாக இருந்தது. அதற்கான பல சதிகாரர்களும் தமிழ் மக…

  2. வடக்கு இடம்பெயர்ந்தோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் பொய்ப்பிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 273000 பேரில் 100000 பேர் மட்டுமே இந்த ஆண்டுக்குள் மீள் குடியேற்ற முடியும் என அரசாங்கம் அண்மையில் அறிக்கை வெளியிட்டுள்ளது.எனினும், இதற்கு முன்னர் சுமார் 80 வீதமான மக்களை மீள் குடியேற்ற முடியும் என அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது.கடந்த மே மாதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் இதுவரையில் சுமார் 27000 பொதுமக்களே மீள் குடியேற்றப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தொடர்ச்சியாக…

  3. ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை எமது நாட்டுக்கு கிடைக்காவிட்டால் நாட்டின் ஆடைக் கைத்தொழில்துறை வீழச்சியடைந்து விடும். இதன் காரணமாக பல ஆயிரக்கணக்கானோர் தொழிலை இழக்க நேரிடும். அரசாங்கம் சர்வதேச சமூகத்தை பகைத்துக் கொண்டுள்ளது. சர்வதேச நாடுகளுடனான நட்புறவை இலங்கை இழந்து வருகிறது என்று மனித உரிமை செயற்பாட்டாளரும் சுதந்திரத்திற்கான அரங்கின் பிரதான அமைப்பாளர்களில் ஒருவருமான பிட்டோ பெர்னாந்து கூறியுள்ளார். சுதந்திரத்திற்கான அரங்கு அமைப்பின் கம்பஹா மாவட்ட பிரதிநிதிகளுக்கான கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்நிகழ்வு நீர்கொழும்பு மல்வத்தை வீதியில் அமைந்துள்ள மீள ஒத்துழைப்பு இயக்கத்தின் கூட்ட மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெற்…

  4. நேற்று முந்தினம் அவுஸ்ரேலியா சென்றடைந்த அடுத்த அகதி கப்பலான ஓசியனிக் விகிங் என்ற கப்பலில் 78 இலங்கை தமிழர் இருப்பதாகவும் அதில் 05 பெண்களும் 05 குழந்தைகளும் உள்ளடங்குவதாக நேற்று கன்பராவில் பாராளுமன்றில் துணை பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த படகில் வந்தவர்கள் தொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றபோது அவுஸ்ரேலிய துணை பிரதமர் மேலும் கூறுகையில் இலங்கை சிறுபான்மை மக்களின் வருகை தொடர்ந்து இருக்கும் அபாயம் இருப்பதாகவும் இது தொடர்பாக இந்தோனேசிய சென்றிருக்கின்ற பிரதமர் கெவுன் ரட் அவர்கள் இந்தோனேசிய பிரதமருடன் பேசுவார் எனவும் குறிப்பிட்டார். இணைய இணைப்பு : http://www.eelanatham.net/news/important

  5. இன்று காலை நாடாளுமன்றத்தில் அமளிதுமளி ஏற்பட்டதையடுத்து அமைதியைப் பேணுமாறு சபாநாயகர் வி.ஜெ.மு லொக்குபண்டார வேண்டுகோள் விடுத்தும் பலன் கிடைக்காததால் சபை நடவடிக்கைகளை அவர் 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைத்தார். இன்று காலை 10.50 அளவில் இடம்பெற்ற அமளிதுமளி காரணமாக முதலில் 10 நிமிடங்களுக்குச் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. ஐ.தே.க.நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தனது ஆசனத்திற்கு முன்பாக சுவரொட்டி ஒன்றை ஏந்திப் பிடித்துக் காட்சிப் படுத்தினார். இதனை ஆளும் கட்சி பிரதம கொறடா சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். நாடாளுமன்றத்தில் சுவரொட்டிகளை இவ்வாறு காட்சிப்படுத்த முடியாது என ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன சுட்டிக் காட்டினார். இதனை அப்புறப்…

  6. இலங்கையில் ஜனநாயகக் கட்டமைப்பு முறைமை திடீரெனக் குழப்பமடையுமானால் இந்தியா எப்படி நடந்துகொள்ளும் என்பது குறித்து புதுடில்லியின் கருத்தை உத்தி யோகப்பற்றற்ற முறையில் உரைத்துப் பார்த்து அறிந்து கொண்டிருக்கின்றது கொழும்பு. நாட்டின் பாதுகாப்புத் துறைக்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் மிகப் பதற்றமான சூழலில், ஜனநாயகக் கட்டமைப்பு முறைமை திடீரெனப் பாதிக்கப்படலாம் என்ற பீதி பரவியுள்ள பின்னணியிலேயே இவ்வாறு புது டில்லியின் கருத்தைக் கொழும்பு தட்டிப்பார்த்திருப்பதாகக் கொழும்பு ஆங்கிலவார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது. இலங்கையில் தமது பணி முடிந்து வெளியேறும் கொழும்புக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்துக்கும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்…

  7. யாழ். மாவட்டத்தில் அகதிகளின் மீள்குடியமர்வு, அபிவிருத்தி, உட்கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்துவதற் காக புது வகை நிர்வாகம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இங்குள்ள பிரதேச செயலகங்கள் எல்லாவற்றிலும்அமைச்சர்கள் பணி யாற்றவுள்ளனர். இதற்காக யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளுக்கும் 11 அமைச்சர்கள் நேற்றுமுதல் நியமிக் கப்பட்டுள்ளனர். இவர்கள் பிரதேச செயலகங்களில் பிரதேச செயலர்களுடன் இணைந்து அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கென மின்சக்தி, எரிசக்தி அமைச் சர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமை யில் 7 அமைச்சர்கள் நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்தனர். அமைச்சர்களான ஜகத் புஷ்பகுமார, துமிந்த திஸநாயக்க, லஸந்த அழகியவன்ன, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணத…

  8. கட்டுநாயக்கா விமான நிலையத்தில் 29 தமிழ் இளைஞர்கள்இ இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் இளைஞர்களே இவ்வாறு விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 15ஆம் திகதி அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் சென்ற 11 தமிழ் இளைஞர்கள்இ சிங்கப்பூர் விமான நிலையத்தில் இறங்கியபோதுஇ அவர்களை சிங்கப்பூருக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்த குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் அவர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பியுள்ளனர். அன்றைய நாள் இரவு 10.00 மணியளவில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்கிய அவ்விளைஞர்களை இலங்கைக் காவல்துறையினருடன் இயங்கும் புலனாய்வுப் பிரிவ…

    • 2 replies
    • 958 views
  9. நாடாளுமன்றத்தின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக பசில் ராஜபகச அண்மையில் மாத்தளையில் நடைபெற்றக் கூட்டமொன்றில் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமையயே தான் அந்தப் பதவியை ராஜினாமா செய்வதாகவும் கூறியிருந்தார். பசில் ராஜபக்சவை நீக்கிவிட்டு ஜெனரல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவர ஜனாதிபதி எண்ணியிருப்பதாக ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல்களின் அடிப்படையில் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியுடன் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரவைப் பதவியையும் சரத் பொன்சேகாவிற்கு வழங்க விருப்பம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனைப் பெற்றுக்கொள்ள சரத் ப…

    • 0 replies
    • 817 views
  10. வணக்கம் உறவுகளே, நீங்கள் எல்லாரும் நலமாக இருக்கக்கடவது எண்டு இறைவனை வேண்டிக்கொள்ளிறன். ஏன் தெரியுமே? நீங்கள் நலமோடு இருந்து சிறிலங்கா நாசாகாரிகளுக்கெதிரா அரசியல் வேள்வி நடத்தினாத்தான் எங்கட தாயக உறவுகள காப்பாற்றலாம். ஆகவே தான் நான் கடவுளை பிரார்த்தித்தனான் அது சரி கடந்த கிழமை நடந்த முக்கியமான செய்திகள் சிலவற்றை இதில இணைச்சிருக்குது. நீங்களும் போய்ப்படிக்கிறதோட நில்லாம உங்களோட வேலை செய்யு வேற்றுறவுகளுக்கும், எங்கட தாயகஉறவுகளை பற்றி ஒருகணமும் சிந்தியாம ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறவைக்கும் மற்றும் எங்கட இனத்தில பிறந்து எங்களயே காட்டிக்கொடுத்து பிழைக்கிறகும்பலுக்கும் தெரியப்படுத்துங்கள் அப்ப நான் வரட்டே http://tamilcrisisweeklyupdate.blogspot.…

  11. தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை விசேட உரையாற்றியதன் பின்னர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்து கொள்ளவுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரசார நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவே அவர் தனது பதவியை இராஜிநாமா செய்துகொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்துகொண்டாலும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் அவர் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 2006 ஆம் ஆண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உற…

    • 2 replies
    • 1k views
  12. கூட்டுப் படைகளில் தலைமையதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேக்கா அமெரிக்காவுக்கு விஜயம் செய்ய உள்ளார்.அதற்கு முன்னர் அவர் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பெற்றிசியா பியூடினஸை சந்தித்து பேச்சுக்களை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பு குறித்து தகவல்களை அறிந்து கொண்டுள்ள அரசாங்கம், அது குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக கூறப்படுகிறது. சரத் பொன்சேக்கா எதிர்வரும் 24 ஆம் திகதி அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்ல உள்ளார். http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=16149&cat=1

  13. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்திள் ஜி .எஸ்.பீ பிளஸ் சலுகை ரத்துச் செய்யப்படவுள்ளது . இலங்கையின் மனித உரிமை மீறல்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐரொப்பிய ஒன்றிய நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார். இணைய இணைப்பு http://www.globaltamilnews.net/ முந்தைய செய்தி : ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும். இந்த அறிக்கை இன்று கொழும்பில் அரசங்கத்திடம் ஒப்படைக்கப்படும் அதே வேளை இணைய தளத்திலும் பிரசுரிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறீகையினை மையமாக வைத்தே இலங்கைக்கான வரி…

    • 5 replies
    • 1.2k views
  14. இலங்கையில் முள்வேலி முகாம்களில் இராணுவக் காவலில் சிறை வைக்கப்பட்டு உணவு, குடிநீர், மருந்து, சுகாதார வசதிகள் இல்லாமல் வதைக் கப்படும் ஈழத்தமிழர்களை மீட்பது குறித்த விழிப்புணர்வை தமிழக மக்களிடம் ஏற்படுத்துவதற்காக பரப் புரைப் பயணம் நடத்துவது என இலங் கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் உயர்நிலைக் குழு முடிவு செய்துள்ளது. தமிழகத்தின் நான்கு திசைகளிலிருந்தும் அக்டோபர் 27ந் தேதி தொடங்கும் இப்பயணம் திருச்சியில் அக்டோபர் 29ஆம் தேதி நிறைவடைகிறது. சென்னையில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் தலைமையில் தொடங்கும் பயணம் காஞ்சிபுரம், புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களின் வழியாகச் சென்று திருச்சியை அடைகிறது. இராமேசுவரத்தில் ம.தி.மு.க. பொது…

  15. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை பதவியிலிருந்து நீக்க வேண்டுமென தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். பிள்ளையானுக்கும், கருணாவிற்கும் இடையிலான முறுகல் நிலை நாளுக்கு நாள் உக்கிரமடைந்து செல்வதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. பிள்ளையான் முதலமைச்சர் பதவிக்கு பொருத்தமற்றவர் எனவும், வேறும் ஓர் தகுதியானவரை முதலமைச்சர் பதவியில் அமர்த்த வேண்டும் எனவும் கருணா அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.மட்டக்களப்பு மாநாகசபையின் மேயர் சிவகீதா பிரபாகரன் போன்றோர் முதலமைச்சர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். பிள்ளையான் மக்களை பிழையான வழியில் நடத்தி வருவதாகவும், அவருக்கு ஆதரவளித்தமை குறித…

  16. குட்டிக்காகவும் குப்பிக்காகவும் இனத்தைக் காட்டிக் கொடுக்கிறார் கருணா ‐ அரசாங்கத்திற்கும் பிள்ளையானுக்கும் ‐ முறுகல் உக்கிரம் ‐ பாருங்கள் கேளுங்கள் காணொளியை ‐ GTN விசேட செய்தியாளர் அன்று ஒரு புதுப் பிஸ்டலுக்கும் புது வாகனத்திற்கும் மட்டக்களப்பை ஆளுவதற்குமாகக் காக்காய் பிடித்து எமது பிள்ளைகளைப் பலி கொடுத்தீர்கள். இன்று குப்பிக்கும் குட்டிக்குமாக காக்காய் பிடிக்கிறீர்கள். சுதந்திரம் தான் எங்களுக்கு வேண்டும் என்று எங்களைப் பாழடித்த ரி.என்.ஏயும் எங்களுக்கு வேண்டாம். இப்போது தேசியத்துடன் சங்கமித்து இலங்கைத் தேசியத்திற்குத் தோள் கொடுப்போம் என்கிற தேசியமும் எங்களுக்கு வேண்டாம் என கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஒரு தேர்தல் ஆண்டாக அமையப்…

  17. முசோலினி பெற்ற பிள்ளை சோனியா காந்தியா? – பெங்களூரில் ஈழ விடுதலை ஆதரவு மாநாட்டில் வைகோ கேள்வி http://www.meenakam.com [படங்கள்] அக்டோபர் 18 ம் நாள் பெங்களூர் கருநாடகத்தமிழ் மக்கள் இயக்கத்தின் ஸ்ரீராமபுரம் கிளை சார்பில் ஈழ விடுதலை ஆதரவு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவாளர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர். இம்மாநாட்டிற்கு இயக்கத்தின் தலைவர் தோழர் சி.இராசன் தலைமை தாங்கினார். ஈழ விடுதலை உணர்வை மக்களிடத்தில் ஊக்குவிக்கும் வகையில் தோழர் மாரி அவர்களின் தலைமயில் கலை நிகழ்ச்சிகளும், சமர்ப்பா குழுவினரின் இசை நிகழ்ச்சிகளும், புலவர்களின் பாட்டரங்கமும் நடைபெற்றது. இம்மாநாட்டில் பேராசிரியர் ருக்மணி அம்மையார் இலங…

  18. இலங்கை தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய அறிக்கை வெளியானது. இதில் இலங்கை மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதாக முடிவு கூறப்பட்டுள்ளது. இதன் படி இலங்கைக்கான வரிசலுகையினை நிறுத்தும் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள் மிக தெளிவாக உள்ளதாகவும் இந்த அடிப்படையில் இலங்கை ஜி.எஸ்.பி. வரி சலுகையினை பெறுவதற்கான தகுதியினை பூர்த்தி செய்யவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த அறிக்கையின் படி இந்த வருட இறுதியில் இலங்கைக்கான வரிசலுகை தற்காலிகமாக நிறுத்தப்படும் எனவும் ஆனால் இது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல்தான் நடைமுறைக்கு வரும் எனவும் கூறப்படுகின்றது. அதாவது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வாக்களித்து 06 மாத…

  19. கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அதன் புலனாய்வுப் பிரிவு தலைவர் பொட்டம்மான் ஆகியோரின் மரணச் சான்றிதழ்களை வழங்குமாறும் மீண்டும் இந்திய அரசாங்கம், இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பான விசாரணைகளை முடிவுக்கு கொண்டு வர இந்தியா பிரபாகரன் மற்றும் பொட்டம்மானின் மரணச் சான்றிதழ்களை ஏற்கனவே கோரியிருந்தது. இந்த மரணச்சான்றிதழ்கள் இதுவரை வழங்கப்படாததால், இந்திய மீண்டும் அவற்றை கோரியுள்ளது. ராஜீவ் காந்தியின் கொலையின் முக்கிய குற்றவாளிகளாக பிரபாகரன் மற்றும் பொட்டம்மான் குறிப்பிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

  20. வாழ்வில்நான் மறக்க முடியா மனிதர் ம.செ.பேதுருப்பிள்ளை குறித்து கடந்த இதழில் எழுதியிருந்தேன். பதிவு என்ப தற்கும் அப்பால் அவரை எழுதியமைக்கு காரணம் உண்டு. ம.செ.பேதுருப்பிள்ளை ஆங்கில ஆசிரியர். தென்னிலங்கை சிங்களப் பகுதிகளில் நீண்ட காலம் பணி செய்தவர். தமிழுக்கு இணையாக ஆங்கிலம், சிங்களம் பேசவும் எழுதவும் தெரிந்தவர். வேரித்தாஸ் வானொலியில் நான் கடமையிலிருந்த காலத்தில் மட்டுமே சுமார் 500 கடிதங்கள் எழுதியிருப்பார். ஒவ்வொரு கடிதமும் வரலாற்றுப் பதிவாக இருக்கும். தமிழீழ விடுதலை விருப்பு என்னுள் மன எழுச்சியாக மாறிட இவரது கடிதங்களும் காரணமாய் இருந்தன. வெள்ளிகள் வருவது விடியலின் அறிகுறி ஞாயிறு வருவதற்கே, ஞாயிறு வருவதற்கே சிலுவைகள் சுமப்பதும் செம்புனல் உகு…

  21. கிண்ணியா முத்தூர் தரைப்பகுதிகளை இணைக்கும் இலங்கையிலேயே மிக நீளமான பாலத்தினை மகிந்த நாளை திறந்து வைக்கவுள்ளார். இதற்காக அப்பகுதிகளில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர், 1500 பொலிசார் பாதுகாப்புக்காகவும் நிகழ்வுக்கு வரும் மக்களை பரிசோதனை செய்வதற்காகவும் குவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிகின்றன. ஏ 15 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இப்பாலம் 2004 ம் ஆண்டு சீன கட்டுமான நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்டது 396 மீற்றர் நீளமும் 10 மீற்றர் அகலமும் கொண்ட இந்த பாலம் 1.5 மீற்றர் அகலமான இரு வழிகளை கொண்டது.796 மில்லியன் ரூபா செலவில் இந்த பாலத்தினை அமைப்பதற்கான முழு செலவினையும் சவூதி அரேபியா பொறுப்பெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

  22. சரத் பொன்சேகா ஓர் திறைமையான தளபதி அவரே பயங்கரவாதத்தினை ஒழிக்க பாடுபட்டுள்ளார். இப்போ பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் நிறைவு அடைந்திருக்கின்ற நிலையில் அரசாங்கம் அதனை இன்று இராணுவத்திற்கு எதிராக திருப்பி விட்டுள்ளது. நாட்டை மீட்டுக் கொடுத்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது என்று ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்துகிறது. இன்றைய அரசாங்கத்தின் பயணமானது ஜனநாயகத்துக்கும் நாட்டின் எதிர்காலத்துக்கும் பாதகமானதாகவே அமைந்துள்ளது. அதனைப் பாதுகாப்பதற்கு எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு உருவாக்கப்படுகின்றது. பயங்கரவாதத்துக்கு எதிராக இராணுவத்தினர் யுத்தம் புரிந்தனர். இழப்புக்களை சந்தித்தனர். ஆனால் அவர்களுக்கான நிவாரணங்களில் சம்பளத்தில் அரசாங…

  23. இந்தோனேசிய கடல் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களை இதுவரை ஐ. நா அதிகாரிகளோ அன்றி செஞ்சிலுவை சங்க அதிகாரிகளோ சென்று பார்வையிடவில்லை என படகில் இருந்து தொடர்பு கொண்ட திரு பி (பெயர் மறைக்கபட்டுள்ளது) தெரிவித்தார். தமக்கு இப்போது இந்தோனேசிய அதிகரிகள் உணவு தருவதாகவும் தாம் எந்த காரணங்களை கொண்டும் படகினை விட்டு இறங்க போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய பிரதமர் இந்தோனேசியா வருவது பற்றி கேட்டபோது இது தமது விடயமாக அல்ல என தாங்கள் கேள்வி பட்டதாகவும் கூறினார். http://www.eelanatham.net/news

  24. இலங்கையில் போர் முடிவடைந்தாலும் அங்கு சிறுபான்மை இனத்தவருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் நடக்க இன்னமும் வாய்ப்புக்கள் இருக்கின்றன என பிரிட்டன் நீதிமன்றம் கூறியுள்ளது இதனால் பிரிட்டனில் இலங்கை அகதிகளில் தஞ்சம் கோரும் நபர்களில் நிராகரிக்கப்பட்டவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையினை மீழ் பரிசீலனை செய்யும் நிலையில் இருப்பதாக பிரிட்டனின் உள்னாட்டு அலுவல்கள் அமைச்சு கூறியுள்ளது.மன்செஸ்ரர் உயர் நீதிமன்ற நீதி பதி அவர்களால் இலங்கைக்கு திருப்ப அனுப்ப இருந்த திரு.பி. என்பவரின் மேன் முறையீட்டை விசாரிக்கப்பட்டது. இதன் போது நீதிபதி இலங்கையில் வன்செயல் முடிவடைந்தது என்பதனை மீழ கருத்தில் கொள்ளுமாறும் அதே வேளை திருப்பி அனுப்பும் திட்டத்தினையும் மீழ் பரிசீலனை செய்யுமாறும் கூற…

  25. கலியோன் குழுமம் தலைவர் இராஜ் இராஜரட்னம் அவர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டதனால் கொழும்பு பங்கு சந்தை வாணிபத்தில் வீழ்ச்சி ஏற்பட்டது. திரு இராஜ் இராஜரட்னம் அவர்கள் கொழும்பு பங்கு வர்த்தகத்திலும் மற்றும் சிங்கப்பூர், கொங்கொங், சுவிஸ்,ஜப்பான் ஆகிய நாடுகளின் பங்கு வர்த்தகத்திலும் செல்வாக்கு செலுத்தியவர். இந்தவகையில் கொழும்பு பங்கு சந்தை சுட்டி 2% இனால் வீழ்ச்சியடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.eelanatham.net/news/important

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.