ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142965 topics in this forum
-
ஓசியன் லேடி கப்பலில்இருந்த 76 பேரும் கனேடிய அதிகாரிகளினால் நேற்று தரை இறக்கப்பட்டு அவர்களை வான்கூவருக்கு பேரூந்து ஒன்றின் மூலம் அழைத்து சென்றனர். அங்கு வைத்து இவர்களுக்கான உடல்பரிசோதனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. அதன் பின்னர் இவர்களை தனித்தனியாக விசாரணைக்கு உட்படுத்தி விபரங்கள் பெறப்படும் என நேடிய குடிவரவு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆசிய நாடொன்றில் இருந்து சுமார் 45 நாட்கள் கடல் பயணம் செய்து பிரிட்டிஸ்-கொலம்பிய தீவுக்கு அருகே கனடா செல்வதற்காக பயணித்து கொண்டிருந்த போது இவர்கள் கடந்த வெள்ளி அன்று கனேடிய ரோயல் பொலிசாரினால் தடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.eelanatham.net/news/important
-
- 4 replies
- 617 views
-
-
-
சென்னை: திமுக எம்பி்க்களுடன் இலங்கை சென்று திரும்பிய காங்கிரஸ் எம்.பிக்கள், தங்கள் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் [^] ஆகியோரை சந்தித்து தமிழர்கள் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவுள்ளனர். திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 10 எம்.பிக்கள் குழு 5 நாள் இலங்கை பயணம் மேற்கொண்டு முதல்வர் கருணாநிதியிடம் அறிக்கை அளித்தது. இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் எம்.பிக்கள் சுதர்சன நாச்சியப்பன், கே.எஸ். அழகிரி, என்.எஸ்.வி. சித்தன், ஜே.எம். ஆருண் ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலுவுடன் ஆலோசனை நடத்தினர். அதில், குழு அறிக்கையை சோனியா மற்றும் பிரதமரிடம் அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. 'ர…
-
- 10 replies
- 988 views
-
-
தமிழகத்தின் ‘ஹீரோ’ ஆகிறார் பிரபாகரன் , எப்படி இருக்கும் பின் விளைவு ?- -தினமலர் செய்தி (18-10-2009) http://www.meenakam.com/ [படங்கள்] புலிகள் தலைவர் பிரபாகரனை தங்கள் ஹீரோ வாக பாவிக்கும் மனநிலை பலரிடத்தில் பரவி வருவது தமிழகத்தின் ஆரோக்யத்துக்கு ஏற்றதாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இறப்புக்கு பின் இலங்கையில் தமிழன் கனவு தகர்ந்துபோனது. அவர் இருந்தவரை இலங்கை தமிழர்களின் ஒட்டுமொத்த குரலுக்கு எதிரொலியாக இருந்து செயல்பட்டதால் அவருக்கு அங்குள்ள தமிழர்களின் மனதில் தனி இடமுண்டு. தமிழர்களுக்கு வாழ்க்கையை செலவு செய்ததால் உலக தமிழர்களிடத்திலும் பிரபாகரனுக்கு என்று ஒரு அந்தஸ்து இருந்து கொண்டு தான் வருகிறது. தமிழகத்தில் இருந்த …
-
- 1 reply
- 1.6k views
-
-
அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் படுகொலைகளுக்கு எதிரான தமிழர் அமைப்பு சனல் 4 வெளியிட்டதும் அதே நேரம் ஜேர்மனி நாட்டினை தளமாக கொண்டியங்கும் ஜனனாயகத்திற்கான ஊடக அமைப்பு எனும் நிறுவனத்தினால் வழங்கப்பட்டதுமான தமிழ் இளைஞர்களை சிங்கள ஆயுதப்படையினர் கண்மூடிதனமாக நிர்வாணப்படுத்தி சுடும் காட்சியினை பரிசோதனை செய்ய முற்பட்டுள்ளது. சிங்கள அரசு இந்த காட்சியினை பொய் என கட்டவிழ்த்து விட்ட பொய் ஆதாரங்களை நிரூபிக்கும் வகையில் அமெரிக்காவில் இருக்கின்ற பிரபல சாட்சியங்களை ஆய்வு செய்யும் தொழில் நுட்ப நிறுவனத்திடம் இந்த வீடியோ நாடாவினை கொடுத்து பரீட்சித்து வருகின்றது. இந்த பரிசோதனைகளின் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளதாகவும் அதனை உத்தியோக பூர்வமாக தாம் வெளியிடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்…
-
- 4 replies
- 1k views
-
-
நாம் தமிழர் இயக்கம் மே மாதம் அரசியல் இயக்கமாக மாறுகிறது. திமுக, அதிமுகவை எதிர்த்து வெற்றி பெறுவோம். அடிக்கு அடி, உதைக்கு உதை என்பதில் நம்பிக்கை உள்ளவர்கள் இதில் சேரலாம் என்று கூறியுள்ளார் இயக்குநர் சீமான். நாம் தமிழர் இயக்கத்தை ஆரம்பித்து அதை தற்போது அரசியல் பாதைக்குக் கொண்டு சென்று வருகிறார் சீமான். அதற்கு முதல் படியாக பல்வேறு ஊர்களுக்கும் சென்று விளக்கக் கூட்டங்களை அவர் நடத்தி வருகிறார். திருவண்ணாமலையில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் சீமான் உணர்ச்சிகரமாக பேசினார். அப்போது சீமான் பேசுகையில், திமுக, அதிமுக கட்சிகளை விட இந்த இயக்கதை வலுப்படுத்திவிட்டுத்தான் தேர்தலில் இறங்க வேண்டும். இந்த இயக்கம் திராவிட கட்சிகள் போல் செயல்படாது. முற்றிலும் வேறுபடும். மக்க…
-
- 1 reply
- 916 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு உதவிகளை வழங்கிய எரித்திரியாவின் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் இராணுவத்தின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் பெட்ரிக் கெமர்டிட்டை ஐந்து நாள் விஜயமாக இலங்கைக்கு அனுப்பி ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வவுனியா முகாம்களிலுள்ள சிறுவர்களின் நிலை குறித்து ஆராய்வதற்காகவே இவர் இலங்கை வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் விசேடப் பிரதிநிதி ராதிகா குமாரசுவாமியே இந்த இராணுவ அதிகாரியை இலங்கைக்கு அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அந்த ஊடகம் கூறுகிறது. குறித்த இராணுவ அதிகாரி சிறுவர்கள் நலன் அறியும் அதிகாரி அல்ல எனவும், அவர் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் பாதுகாப்பு ஆலோசகர் ஒருவ…
-
- 0 replies
- 528 views
-
-
சிலாவத்துறை இராணுவ முகாம்களை தாக்குவதற்காக என கொண்டுவரப்பட்ட 20 கிலோ கிளைமோர் குண்டுகள், தகரத்தில் அடைக்கப்பட்ட உணவு வகைகள்,அரிசி மாவு, சீனி போன்ற உலர் உணவுகள் ஆகியன வில்பத்து காட்டு பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டு எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிசார் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகளென சந்தேகப்பட்டவர் ஒருவரிடம் பெறப்பட்ட தகவலினை அடிப்படையாக வைத்தே இவை கண்டெடுக்கப்பட்டதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர். இணைய இணைப்பு http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 691 views
-
-
கலைஞர் குடும்பத்தினரால் 500 கோடி ரூபாவுக்கான திட்ட ஆலோசனை ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இந்த திட்டம் சமர்ப்பித்து அதற்கான அங்கீகாரம் பெறப்படுமாம். இவ்வாறு கலைஞரும் சிதம்பரமும் கூட்டு அறிக்கை விட்டுள்ளனர். தமிழீழம் சென்ற இந்திய குழுவின் அறிக்கையினை வைத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றதாம் என சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 500 கோடி கதை காற்றோடு காற்றாக என்ன நடந்தது என்றே தெரியவில்லை இந்திய மத்திய அரசின் இந்த ஒதுக்கீடும் ஒதுக்கீட்டுக்கு என்ன நடந்தது என்றும் தெரியாது.இலங்கையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இந்திய அரசு 500 கோடி ரூபா தொடர்பாக கூறிய பதில் என்னவெனில் தாம் இலங்கையிடம் கொடுக்க மாட்டோம் தாம் தான் அந்த வெல்லைத்திட்டங்களை செய்வோம் என்றன…
-
- 1 reply
- 1.3k views
-
-
இந்தோனேசியாவில் கடலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகளின் படகு தொடர்பாக இந்தோனேசியா மற்றும் அவுஸ்ரேலிய நாடிகளின் அரசியல் மற்றும் பாதுகாப்பில் பெரும் பர பரப்பினை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவுஸ்ரேலிய பிரதமர் நாளை இந்தோனேசிய சென்று நேரடியாக அந்தனாட்டு அரசுடன் பேசவுள்ளார். அவுஸ்ரேலிய எதிர்கட்சிகளின் கடும் விமர்சனங்களுக்கும் அதே நேரம் அந்த அகதிகளுக்கு ஏது நடந்தால் ஆசி அரசே பொறுப்பெடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் தற்போதைய ஆசி அரசு போராடிக்கொண்டு இருக்கின்றது. ஆசி அரசு இந்தோனேசிய அரசுக்கு தகவல்களை வழங்கி அவர்களை பாவிப்பது தமது நாட்டின் சொந்த பாதுகாப்பில் நம்பிக்கை இன்மையினை தோற்றுவித்துள்ளதாகவும் அதே நேரம் அகதிகள் வருகையினை கட்டு படுத்த முறையான திட்டம் தற்போதைய அரசிடம…
-
- 0 replies
- 684 views
-
-
இன்று மாலை தொல் திருமாவளவன் இலங்கை சக்தி தொலைகாட்சியில் மின்னல் நிகழ்ச்சியில் பங்கு பற்ற போகின்றார். இந்திய குழுவினரின் இலங்கை விஜயம், அவர்கள் மக்களை பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வலைகள், ஏன் பத்திரிகையாலர்களை சந்திக்கவில்லை? என்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கவுள்ளாராம். திருமா என்ன சொல்ல போகின்றார்? அசடு வழிய மீண்டும் இலங்கை இந்திய உறவுக்காக கதைப்பாரா அல்லது ஆக்ரோசமாக ஈழத்தமிழர்களுக்காக கதைக்க போகின்றாரா? எப்படியாயினும் கதைத்து விட்டு போகட்டும் ஆனால் முகாமில் உள்ள தமிழ் மக்களுக்கு உதவி செய்வதாக பேசிப்பேசி அவர்களை மீண்டும் மீண்டும் கொல்லாமல் இருந்தால் சரி. http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 909 views
-
-
திருமாவளவனிடம் இருந்தது தமிழனின் பண்பாட்டுக் கூறுதான். கடந்த நூற்றாண்டில் நடந்த யூத இனப் படுகொலை பற்றி மனித நேய ஆர்வலர்களால் பலமுறை கூறப்பட்டு வந்துள்ளது. ஆனால் இந்த நூற்றாண்டு முழுவதும் சொல்லத் தக்க அளவுக்கு இனப் படுகொலை நடந்தது தமிழீழத்தில் தான். எத்தனை போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், தீக்குளிப்புகள் எதற்கும் அசைந்து கொடுக்காத இந்திய அரசும் அதற்கு உறுதுணையாக நின்ற தமிழக அரசும் தமிழினப் படுகொலைக்கு வரலாற்று சாட்சியங்களாக இருக்கின்றன. இனியும் அந்த நிலையே தொடரும் என்பதையே சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன. போர் முடிந்து விட்டதாக அறிவித்த பின்பும் 3 லட்சம் பேர் அகதிகள் முகாமில் உணவு, உடை, உயிர் பாதுகாப்பு இன்றி தவித்து வருகிறார்கள். அது பற்றி ஒரு சின்ன செய…
-
- 0 replies
- 1k views
-
-
சிறீலங்கா அரசில் வரவு செலவுத் திட்டத்தில் பெரும்பாலான செலவீனங்கள் சிறீலங்காப் படையினருக்கே வழங்கப்பட்டுள்ளன. அண்மையில் சிறீலங்காப் படையினரின் குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்தும், உதவித் தொகைகளும் வழங்கப்பட்டன. போர் நடைபெற்ற காலத்தில் போர்க்களத்தில் நிற்கும் படையினருக்கு பாரிய அளவிலான நிதி வழங்கப்பட்டு வந்துள்ளது. அரசுப்படை சிப்பாய் ஒருவன் இருபதாயிரம் ரூபா சம்பளத்தினை அடிப்படையாக பெறுகின்றான். ஆனால், இப்படையினன் குறைந்தது பத்தாம்ஆண்டுவரைதான் படித்திருப்பான். களமுனையில் தாக்குதல்களில் ஈடுபட்ட படையினருக்கு அவர்களின் ஊக்கிவிப்பாக நிதி உதவியினை வழங்கி வந்துள்ள சிறீலங்கா அரசு அன்றைய போர் நடைபெற்ற காலத்தில் எல்லாம் தமிழ்மக்களின் இடங்களுக்குள் ஊடுருவி விடுதலைப்புலிகளின் …
-
- 0 replies
- 334 views
-
-
வவுனியா முகாமில் இருந்து கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் திருகோண மலைக்கு அழைத்துச்செல்லப்பட்டவர்கள் இடைத்தங்கல் முகமான செண்பகம் மகாவித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.நேற்று அங்கு வந்த சீருடை தரித்த இனந்தெரியாதவர்கள் முகாமில் உள்ளவர்களை விசாரித்த பின்னர் அங்கிருந்து 15 பேரைக் கடத்திச் சென்றனர்.கடத்திச் செல்லப்பட்டவர்கள் திருமணமானவர்கள்; 25 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட குடும்பத் தலைவர்கள் ஆவர். கடத்திச் செல்லப்பட்ட இளைஞர்கள் குறித்து நேற்று மாலை வரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. இணைய இணைப்பு http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 312 views
-
-
76 இலங்கையருடன் ”ஓசியன் லேடி” என்ற படகு பிரிட்டிஸ்-கொலம்பிய தீவுப்பகுதியில் கனேடிய பொலிசாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று முந்தினம் இந்த படகு கனேடிய ரோயல் மவுண்டட் பொலிசாரினால் அடையாளம் காணப்பட்டதாகவும் நேற்று சனிக்கிழமை இந்த படகு வழிமறிக்கப்பட்டதாகவும் ஃபொக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த படகு இலங்கை வாசிகள் இருப்பதாக நம்பப்படுவதாகவும் இவர்கள் கனேடிய நாட்டினை நோக்கி வான் கூவர் பகுதிக்கூடாக பயணித்து கொண்டிருந்த தாகவும் கூறப்படுகின்றது.
-
- 0 replies
- 392 views
-
-
வீரகேசரி இணையம் - மட்டக்களப்பு கல்லடியில் இயங்கி வந்த சட்ட விரோத கருக்கலைப்பு நிலையமொன்று நேற்று மாலை பொலிசாரினால் முற்றுகையிடப்பட்டது. இதன்போது வைத்தியர் மற்றும் உதவியாளர் உட்பட இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். ஆயுள்வேத மருத்துவ நிலையம் என்ற போர்வையில் குறித்த இடத்தில் சட்ட விரோத கருக்கலைப்பு இடம்பெற்று வருவதாகத் தமக்கு கிடைத்த தகவலின் பேரிலேயே இந்நிலையம் முற்றுகையிடப்பட்டதாகக் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். தமக்குக் கிடைத்த தகவலின்படி இந்நிலையத்தில் சட்ட விரோத கருக்கலைப்புக்குள்ளான இருவர் உயிரிழந்திருப்பதாகவும் பொலிசார் குறிப்பிட்டனர். இந்நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் உடைமைகளையும் மருந்துப் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர். …
-
- 0 replies
- 482 views
-
-
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் (15) நடைபெற்ற 8வது ஆசிய ஒத்துழைப்பு உரையாடல் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மண்டபத்திற்கு வந்து கொண்டிருந்த போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ கீழே விழுந்ததாகத் தெரியவருகிறது. இந்தச் சம்பவம் பதிவான வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களை ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினரும், ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் அதிகாரிகளும் தம்வசப்படுத்தியுள்ளனர். இதற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சாகித்திய விழாவின் போது ஜனாதிபதி ஆசனத்திலிருந்து கீழே விழுந்த காட்சிப் பதிவுகளும் ஜனாதிபதி ஊடகப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டு அகற்றப்பட்டது. சனிப்பெயர்ச்சியின் பின்னர் ஜனாதிபதியின் நேரம் கூடாதிருப்பதுட…
-
- 3 replies
- 879 views
-
-
யுத்தத்தின் பின்னரான பின்புலம் மற்றும் மனித உரிமைகள் என்ற இருவித காரணிகளை மையமாகக் கொண்டு இலங்கையின் தற்கால அரசியல் தலைவிதியை ஆழமாக நோக்கும் விதத்தில் அமைகிறது இக்கட்டுரை.சுனந்த தேசப்பிரிய எழுதிய இக்கட்டுரை கடந்த 04 ஆம் திகதிய "ராவய'' பத்திரிகையில் பிரசுரமாகியது. அதன் தமிழ் வடிவம் இங்கு தரப்படுகிறது. இலங்கையில் இடம் பெற்ற யுத்தம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விவகாரம் மீளவும் கடந்த வாரம் முழுவதிலும் விமர்சனங்கள் என்ற வகையில் முன்னெழுந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பைப் போர்ரீதியில் தோற்கடித்ததன் பின்னர் அரசுக்கு மிகப் பெரும் சவாலாகியிருந்த எதிரி இல்லையென்றாகிவிட்டுள்ளதால், அதன் பின்னர் புதியதொரு எதிரியைத் தேடித் திரிந்த அரசு, தற்போது மனித …
-
- 0 replies
- 375 views
-
-
2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம், இந்தியாவின் காங்கிரஸ் ஆட்சியாளர்களால் சேது சமுத்திரத் திட்டத்திற்காக 2,427 கோடி இந்திய ரூபாய்கள் ஒதுக்கப்பட்டது.இதற்கான அடிக்கல்லை, அவ்வருடம் ஜூலை 2ஆம் திகதியன்று, பிரதமர் மன்மோகன்சிங் மதுரையில் நாட்டினார். மூன்றரை வருடங்களில் முடிவடையுமென்று கணிப்பிடப்பட்ட இத்திட்டம், ராமர் கட்டிய அணை விவகாரத்தால் இழுபட்டுச் செல்கிறது. 7500 கிலோ மீற்றர் நீள கடல் எல்லையைக் கொண்ட இந்தியாவிற்கு, பாக்கு நீரிணையானது, தொடர் பாதையைப் பேணுவதற்கு இடையூறாகவிருக்கிறது. இந்தியாவின் மேற்குத்துறை முகங்களிலிருந்து கிழக்குத் துறைமுகங்களுக்குச் செல்வதற்கு, தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்று, இலங்கையைச் சுற்ற வேண்டும். இச் சேது சமுத்திரத் திட்டம், இந்தியாவின் …
-
- 0 replies
- 537 views
-
-
அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் இலங்கை அரசாங்கத்தின் கண்ணிவெடி அகற்றல் தொடர்பாக விமர்சித்தனர். அதாவது அரசாங்கம் கண்ணீவெடி அகற்றலை ஓர் காரணமாக காட்டி மீழ் குடியேற்றத்தினை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக தெரிவித்திருந்தனர், அத்துடன் உண்மையாக அரசாங்கம் அக்கறையாக செயற்பட வேண்டுமெனின் ஏன் சர்வதேச அமைப்புக்களை அனுமதிக்க கூடாது என கேள்வியும் எழுப்பி இருந்தனர். இது தொடர்பாக தேச நிர்மாண அமைச்சு கருத்து தெரிவிக்கையில் இது ஏற்றுகொள்ள முடியாது எனவும் அதே நேரம் தாம் ஹலோ ட்ரஸ்ட்,டானிஸ் குறூப், யு.என்.டி.பி போன்ற அமைப்புக்களை ஏற்கனவே அனுமதித்துள்ளதாக கூறியிருக்கின்றது. இணைய இணைப்பு http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 363 views
-
-
Sri Lankan Asylum Seekers Should we allow the Sri Lankan asylum seekers into Australia? http://www.2ue.com.au/ Sri Lankan Asylum Seekers Should we allow the Sri Lankan asylum seekers into Australia? Yes 82% No 17%
-
- 2 replies
- 1.5k views
-
-
தாயகத்தில் சிங்கள அரசினால் முட்கம்பி வேலிக்குள் வதைக்கப்பட்டு கொண்டிருக்கும் மக்கள் இன்றுடன் 150 நாள்களாக எந்தவித ஏற்பாடுகளோ தீர்வுகளோ இன்றி இருக்கின்றனர்.இதனை மீண்டும் ஒருதடவை அனைத்துலகத்திற்கு இடித்துரைப்பதற்காக இன்று பிரித்தானியாவில் உள்ள புலம் பெயர் தமிழர்களால் மாபெரும் பேரணி நடைபெறுகின்றது. 12.30 அளவில் லண்டன் எம்பார்க்மெண்ட் இல் கூடிய மக்கள் ஹை பார்க் வரை வீதியின் ஒரு பக்கத்தில் பேரணியாக நடந்து சென்றனர்.இதன் போது இப்பேரணியில் “வதைமுகாங்களில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும் இயல்பு நிலை வாழ்க்கைக்கு திரும்பவேண்டும், எமது மக்களை கொன்றொழித்த இலங்கை அரசு மீது போர்க் குற்ற விசாரனைகள் நடாத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் இப்பேரணியின் அடிநாதமாக விளங்குகின்றது. ப…
-
- 1 reply
- 832 views
-
-
வருகின்ற டிசெம்பர் மாதம் எனது பதவிக்காலம் முடிகின்றது அத்தோடு நான் எனது இராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெறுகின்றேன். அதற்கு முன்பாகவோ அல்லது டிசெம்பருக்கு பின் தொடரவோ நான் விரும்பவில்லை. இவ்வாறு சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தான் இது பற்றி ஜனாதிபதியின் செயலாளருக்கு தெரிவித்துள்ளதாகவும் அவரும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தவிர அரசாங்கத்திற்கும் எனக்கும் முறுகல் நிலை அல்லது கருத்து முரண்பாடு என சொலவ்தில் உண்மையில்லை எனவும் கூறியுள்ளார். http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 698 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள வார ஏடான 'லங்கா' வின் ஆசிரியர் சந்தான சிறிமல்வத்த சிறிலங்கா காவல் துறையினரால் இன்று கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் இப்பத்திரிகையின் நிருபர் ஒருவரை காவல்துறையினர் தேடிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 489 views
-
-
இந்திய உளவுத்துறையின் முன்னாள் நிபுணர் கேணல் ஹரிகரன் GSP+ இலங்கைக்குக் கிடைக்காது என்று இம்மாதம் ஏழாம் திகதி எழுதிய ஆய்வுக் கட்டுரையில் எழுதியிருந்தார். இவர் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர். இவர் இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்கம் தொடர்பாகக் கட்டுரைகளை எழுதுபவர். பொருளாதார நிபுணர் அல்லர். ஆனாலும் GSP+ என்னும் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கியவர்த்தகச் சலுகையைப் பற்றி கேணல் ஹரிகரன் இவ்வளவு அக்கறை எடுத்தது ஏன்? GSP+ பற்றி அறிந்து கொள்ளவும். இப்போது ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கான GSP+ வர்த்தகச் சலுகையை நிறுத்தப் போவதாக உறுதியான தகவல்கள் வெளிவந்துள்ளன. இவ்வர்த்தகச் சலுகைக்கும் இந்தியாவின் பிராந்திய ஆதிக்கத்திற்கும் என்ன சம்பந்தம்? இலங்கை இச்ச…
-
- 1 reply
- 797 views
-