ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142956 topics in this forum
-
வவுனியா எல்லப்பர் மருதங்குளம் என்ற இடத்தில் நேற்றிரவு ஆயுத முனையில் தனி நபர் ஒருவர் பணம், நகை என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார். அவரைத் துரத்திப்பிடித்த ஊரவர்களை நோக்கி இந்நபர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார்; மற்றுமொருவர் பலத்த காயங்களுக் குள்ளானார்.ராமமூர்த்தி குலேந்திரன்(36 வயது) என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே மரணமானார். ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருநாவுக்கரசு கிருபாகரன் என்பவரே படுகாயமடைந்தவராவார்.மேற்படி நபர் ஒரு லட்ச ரூபாவுக்கும் மேல் பணத்தையும் 26 பவுண் நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார். இணைய இணைப்பு http://www.eelanatham.net/story/வவுனியாவில்-துப்பாக்கி-முனையில்-கொள…
-
- 0 replies
- 409 views
-
-
எதிர்வரும் 15 நாட்களில் 58 ஆயிரம் பேர் மீள்குடியமர்த்தப் படுவார்கள் என்ற செய்தி தொடர்பில் எதுவும் தெரியாது என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றக் குழுவின் இலங்கைப் பயணத்தின் பின்னர் கருணாநிதி செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்ட செய்திக்குப் பதிலளிக்கும் வகையில் சிறீலங்கா ஊடகத்துறை அமைச்சர் அநுரா பிரியதர்சன யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைக் கூறியுள்ளார். 15 நாட்களுக்குள் 58 ஆயிரம் பேரை மீள்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழக தல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் வெளிவந்துள்ளன. இ…
-
- 1 reply
- 411 views
-
-
வடமராட்சியினை பிறப்பிடமாக கொண்டவரும் தற்pோொ்து அமெரிக்காவில் வதியும் பிரபல பங்கு வர்த்தக அதிபரான இராஜ் இராஜரட்னம் அவர்கள் பங்கு வர்த்தகத்தில் உள்ளக வியாபாரம் செய்து பெருமளவு இலாபம் ஈட்டியதற்காக இவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இலண்டன் கேம்பிரிட்ஜ் பட்டதாரியான இவர் 1989 ம் ஆண்டு பங்கு வர்த்தக செயற்பாட்டில் ஈடுபட்டு பின்னர் தானே கலியோன் குழுமம் என்ற முதலீட்டு கம்பனியினை ஸ்தாபித்து பெரும் தொழில் அதிபர் ஆனார். இவர் உலகின் மிகப்பெரும் வணிக நிறுவனக்களான சுவிஸ் வங்கி,கூக்கிள் வலையமைப்பு, மைக்ரோ சொஃப்ற் உட்பட்ட கம்பனிகளின் முதலீடுகளையும் பகுதியளவு முகாமைத்துவம் செய்து வந்தார். இலங்கையிலும்,கார்கில்ஸ்,உட்பட்ட பல பங்குகளில் முதலீடு செய்து வந்தார்.இலங்கை பங்கு வர்த்தகத்தி…
-
- 0 replies
- 889 views
-
-
பிரித்தானியாவில் எதிர்வரும் 17ந் திகதி சனிக்கிழமை, முகாமில் அடைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்கக்கோரி, பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் மக்கள் பேரணி நடைபெறவுள்ளது. இப்பேரணியில் பிரித்தானியா வாழ் தமிழ மக்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு, பிரித்தானியத் தமிழர் பேரவை வேண்டு கோள் விடுத்திருக்கிறது. இப்பேரணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அருட்தந்தை ஜெகத் கஸ்பார், மற்றும் கவிஞர் தாமரை, திரு. பழ. நெடுமாறன், பாமரன், கவிஞர். இன்குலாப், கொளத்தூர் மணி, ஆகியோரும் விடுத்துள்ள அழைப்பும் ஒலிவடிவில் ஏற்பாட்டாளர்கள் சார்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. பேரணி பற்றி விபரங்கள்: Date: Saturday, 17 October 2009 Time: 1pm - 5pm Route: Starts at 1pm f…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஈழத் தமிழர்களுக்கு இன்றைய நாள் தீபாவளி திருநாள் அல்ல. எப்பொழுது மகிந்த ராஜபக்சே எனும் நரகாசுரன் எம்மினத்தை விட்டு நீங்குகிறானோ அன்றுதான் நம்மினத்தவருக்கு தீபாவளி திருநாளாகும். நரகாசுரன் நம்மோடு இன்னும் உயிருடன் இருக்கின்றபொழுது நாம் எப்படி இந்நாளை தீபாவளி திருநாளாகக் கொண்டாட முடியும். நரகாசுரன் வன்னியிலே குடி கொண்டிருக்கிறான். நம்மினத்தை நாளும் பலி எடுத்துக் கொண்டிருக்கிறான். நரகாசுரன் உயிருடன் இருக்கும் பொழுது அவன் இறந்து விட்டதாக நாம் கருதி எப்படி நரகாசுரன் இறந்த நாளாக கொண்டாடுவது? தமிழா நீ கொஞ்சம் யோசித்துப் பார்... உங்கள் வீட்டில் செத்தவீடு நடந்து கொண்டிருக்கிறது அப்பொழுது உங்கள் வீட்டில் விளக்கேற்றி, புத்தாடையுடுத்தி கொண்டாடுவீர்களோ? இல்லையே. அதேபோன்று …
-
- 7 replies
- 2.1k views
-
-
The European Union has found Sri Lanka in breach of International Human Rights laws, implying that Colombo does not fulfil the basic human rights conditions of GSP plus, according to an exclusive update by Reuters Friday night. It is likely that Sri Lanka would lose concessions worth over $100 million for its top exports to Europe, the report said citing EU sources. The findings of the investigations by the EU are expected to be published Monday. "This is not a trade sanction. There are rules for GSP plus and if you break the rules, then unfortunately there are consequences. They will keep basic GSP either way," the report filed by Darren Ennis of the Reuters quoted …
-
- 0 replies
- 779 views
-
-
கனேடிய கொன்சர்வேட்டிவ் கட்சியினை சேர்ந்த இரு பாராளுமன்ற உற்ப்பினர்களுக்கு இலங்கைக்கு சென்று அங்கிருக்கின்ற தமிழ் மக்களின் தடுப்பு முகாம்களை பார்வையிடுவதற்கு விசாவிற்கு விண்ணப்பித்தபோது அதனை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.பற்றிக் பிரவுண்,போல் கலெண்ட்ரா ஆகிய இரு உறுப்பினர்களுக்கே விசா மறுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இது தொடர்பாக கனேடிய அரசுக்கு முறையிடவுள்ளதாக தெரியவருகின்றது. http://www.eelanatham.net/news/important
-
- 3 replies
- 586 views
-
-
வவுனியா ஆனந்தகுமாரசுவாமி முகாமில் நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் (32வயது) தீக்குளித்துள்ளார். இவர் முல்லைத்திவு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது. இரத்தினசிங்கம் பிரபாகரன் என்ற மேற்படி நபர் அண்மையில் சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் ஆயினும் சரியான மருத்துவமோ அல்லது எதுவித சிகிச்சைக்கு அனுமதிக்கப்படாதிருந்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான பிரபாகரன் அவர்கள் நேற்று முன்தினம் தன்னை மறந்த நிலையில் தனது ஒருமாதக் குழந்தை தனது மனைவி மற்றும் தனது தாயாரையும் கத்தியால் வெட்டியுள்ளார் அதன் பின்னரேயே தன்னைத் தீமூட்டியுள்ளார். இவரது குழந்தை , மனைவி , தாயார் மூவரும் உயிர் தப்பியுள்ளனர். செட்டிகுளம் மருத்துவமனையிலிருந்து மயக்கமருந்து கொடுக்கப்பட்டு …
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோமாளிகளாக ஆக்கப்படுவார்களா? திகதி: 16.10.2009 // தமிழீழம் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோமாளிகளாக ஆக்கப்படுவார்களா? என்ற தலைப்பில் இன்று வெளியாகியுள்ள ஈழமுரசு இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களில் முதல் கட்டமாக 58,000 பேர் இன்னும் 15 நாட்களுக்குள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே உறுதி அளித்துள்ளதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் இன்றே (வியாழக்கிழமை) தொடங்கும் என்றும் சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியிருக்கின்றார். அத்துடன், எஞ்சியிருப்பவர்களை படிப்படியாக அவரவர் ஊர்…
-
- 0 replies
- 602 views
-
-
வவுனியாவில் சிறீலங்காவினால் புதிதாக சிறைச்சாலை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது திகதி: 16.10.2009 // தமிழீழம் வவுனியாவில் சிறீலங்கா அரசாங்கத்தினால் புதிதாக சிறைச்சாலை ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் பெரும்பாலும் தமிழ் மக்கள்தான் வாழ்நது வருகின்றார்கள். இன்னிலையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழும் சந்தேகத்தின் பெயரிலிலும் வவுனியாவில் தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு அடைக்கப்பட்டு வருகின்றார்கள். சிறீலங்கா காவல்துறையினரின் பணியினை இலகுபடுத்தும் நோக்கில், வவுனியா நீதிமன்றத்துடன் இணைந்த வளாகத்தில் 9 மில்லியன் ரூபா செலவில் புதிதாக சிறைச்சாலை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இச்சிறைச்சாலை 300 பேரை அடைப்பதற்கு ஏற்றவகையில் அமைக்கப்பட்…
-
- 0 replies
- 300 views
-
-
தமிழ்மாறன், கொழும்பு 16/10/2009, 13:25 எமது கோரிக்கைகள் எதனையும் சிறீலங்கா அரசாங்கம் செவிசாய்க்கவில்லை - நவநீதம் பிள்ளை யுத்த முன்னெடுப்புகளின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் அனைத்துலக விசாரணை அவசியம் என ஐக்கிய நாடுகள் சபை தொடர்ச்சியான கோரிக்கைகளை விடுத்து வருகின்ற போதும் அதற்கு சிறீலங்கா அரசாங்கம் செவிசாய்கவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். போர்க் குற்ற நடவடிக்கைகளுக்கு உரிய விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் சிறீலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இக்கோரிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின்…
-
- 0 replies
- 434 views
-
-
அவுஸ்திரேலியாவிற்குச் செல்லும் வழியில் இந்தோனேசிய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சிறிலங்காவைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட தமிழர்களும் தாம் பயணித்த படகிலேயே காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். "அனைத்துலக சமூகததிற்கான பட்டினிப் போராட்டம்”, "எமது உயிர்களைப் பாதுகாருங்கள்” என்று எழுதிய பலகைகளுடன் படகில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் படங்கள் அவுஸ்திரேலிய ஊடகங்களில் வெளியாகி உள்ளன. அவர்களைப் படகை விட்டு வெளியேறி வருமாறு இந்தோனேசிய அதிகாரிகள் விடுத்த கோரிக்கைகளை ஏற்பதற்கு அரசியல் அடைக்கலம் கோரும் தமிழர்கள் மறுத்து விட்டனர். இந்தேனேசிய நிலப் பகுதிக்கு வந்து தற்காலிக இருப்பிட வசதிகளைப் பெற்றுக்கொண்ட பின்னர் அங்கிருந்து வழமையான நடவடி…
-
- 0 replies
- 266 views
-
-
திருமாவுக்கு ஒரு கடிதம் – வா.மணிகண்டன் அன்பின் திருமா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமாக காங்கிரஸ் திமுக கூட்டணி தோற்றுவிடக் கூடாது என்று நினைக்க காரணம் இருந்தது. திமுகக் கூட்டணியில் திருமாவும், அதிமுக கூட்டணியில் வைகோவும் வெல்ல வேண்டும் என்று விரும்பியிருந்தேன். மற்றவர்களைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை. இலங்கைப் போரின் முடிவு பற்றியும் பெரிதாக எதிர்பார்ப்பில்லாத தருணம் அது. ஆயிரக்கணக்கில் தமிழர்கள் மடிவதும், இலட்சக்கணக்கில் தமிழர்கள் உயிரைக் காத்துக் கொள்ள ஓடிக் கொண்டிருப்பதுமான செய்திகள் ‘சில’ ஊடகங்களில் வந்து கொண்டிருந்த போது இந்தியா மெளனம் சாதித்துக் கொண்டிருந்தது. டெல்லியில் தமிழனுக்காக உரத்துக் குரல் கொடுக்க யாருமில்லாமல் வெறுமை சூழ்ந்திருந்தது. திருமாவ…
-
- 1 reply
- 847 views
-
-
வன்னி வதை முகாம்களில் இருந்து யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 2,000 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் போக்குவரத்துச் சபை பேருந்துகளில் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கி உள்ள யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 40,000 பேரை 2,000 பேர் கொண்ட தொகுதிகளாக மீளக்குடியமர்த்தும் அரசின் திட்டத்தின் கீழ் மற்றொரு தொகுதியினர் இன்று விடுவிக்கப்பட்டனர் என அதிகாரிகள் கூறினர். இன்று யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் அங்கு மீளக்குடியமர்த்தப்படுவார்களா அல்லது இடைத் தங்கல் முகாம்களில் தொடர்ந்தும் அடைத்து வைக்கப்படுவார்களா என்பது குறித்து தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை. ஏற்கனவே வன்னி முகாம்களில் இருந்து விடுவ…
-
- 0 replies
- 502 views
-
-
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசுக்கும் இடையில் முரண்பாடுகள் உருவாகியிருப்பதாக வெளியாகியிருந்த செய்திகளை சிறிலங்கா இராணுவம் இன்று திட்டவட்டமாக மறுத்திருக்கின்றது. முன்னாள் இராணுவத் தளபதி அரசாங்கத்துடன் முரண்படுவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்தே இராணுவப் பேச்சாளர் உதயா நாணயக்கார இந்த அறிக்கையை இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கின்றார். முன்னாள் இராணுவத் தளபதியுடன் அரசுக்கு பிரச்சினைகள் உருவாகியிருப்பதாகப் பரப்பப்படும் தகவல்கள் ஆதாரமற்ற தவறானவை எனத் தெரிவித்த பிரிகேடியர் உதய நாயணக்கார, அரசுக்கும் இராணுவத்துக்கும் இடையில் முரண்பாடுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டே இந்தத் தகவல்கள் திட்டமிட்ட முறையில் பரப…
-
- 0 replies
- 284 views
-
-
இடம்பெயர்ந்து வதை முகாம்களில் உள்ள வாக்களர்களின் விபரங்களைச் சேகரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் நடைபெற உள்ள தேர்தல்களை நோக்கமாகக் கொண்டு இந்த விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசநாயக்கவை எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று இன்று சந்தித்துப் பேசியது. நடைபெற உள்ள தேர்தல்களின் போது இடம்பெறக்கூடிய மோசடிகள் குறித்துக் குழுவினர் தமது கவலைகளை வெளிப்படுத்தினர். அதேபோன்று, அரசு முகாம்களில் அடைத்து வைத்துள்ள தமிழ் மக்கள் தமது வாக்குகளைச் செலுத்துவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படாமலேயே போகலாம் என்ற அச்சத்தையும் எதிர்க் கட்சி நாடாளுமன்றக் குழுவினர் தெரிவித்தனர். அதற்குப் பதிலளித்த தேர்தல்கள் ஆணையாளர், இடம்பெயர்ந…
-
- 0 replies
- 308 views
-
-
இலங்கையின் வடபகுதியில் கண்ணிவெடிகளை அகற்றுவதும் மற்றும் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவது ஆகிய பணிகளில் சிறிலங்கா அரசுக்கு மேலதிக உதவிகளை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. ஆசிய கூட்டுறவு தொடர்பான அமைச்சர்கள் மட்டத்திலான கலந்துரையாடலில் கலந்துகொள்ள கொழும்பு வந்திருந்த இந்திய வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் பிரிநீட் கவுர் இதற்கான உறுதி மொழியை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவுக்கு அளித்தார். அமைச்சர் மட்டக் கலந்துரையாடலுக்கு வெளியே இரு நாட்டு அமைச்சர்களும் தனியாகச் சந்தித்துப் பேசிக்கொண்டனர். அப்போது, கண்ணிவெடி அகற்றல் மற்றும் மீள்குடியமர்வு விடயங்களில் சிறிலங்கா அரசு எதிர்கொள்ளும் சிக்கல்களை இந்தியா புரிந்து வைத்துள்ளதாகக…
-
- 0 replies
- 302 views
-
-
இந்தோனேசிய கடற்படையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ள படகில் இருக்கும் அகதிகள் தொடர்பில் அவுஸ்ரேலியாவில் பெரும் பரபரப்புடனும் அரசியலில் பெரும் விவாதங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் அவுஸ்ரேலிய பிரதமருக்கு பெரும் தலையிடியினையும் ஏற்படுத்தி உள்ளது. இன்று படகில் உள்ள மக்கள் அனைவரும் உண்ணா விரதம் இருக்க போவதாக அறிவித்ததனை தொடர்ந்து அவுஸ்ரேலிய பிரதமர் அதற்கான கருத்தினை உடனேயே வெளியிட்டுள்ளார். அதாவது மக்கள் உண்ணா விரதம் இருப்பது ஒரு பொருத்தமான வழி முறை இல்லையென்றும் இவ்வாறான செயல்களுக்கு பாவம் பார்த்து மனமிரங்கி போனால் அது ஆட்கடத்தல் வியாபாரிகளுக்கு சாதகமாக இருக்கும் என்றும் கூறியுள்ள கெவின் ரட் அவர்கள் ஆட்கடத்தல் வியாபாரிகளை சட்ட ரீதியாக்க எந்தவொரு அவுஸ்ரேலிய …
-
- 0 replies
- 561 views
-
-
புலம்பெயர் தமிழர்களால் திரட்டப்பட்டு இலங்கையில் அல்லல்படும் தமது உறவுகளுக்காக "கப்டன் அலி” கப்பல் மூலம் அனுப்பப்பட்ட பொருட்கள் பல மாதங்களின் பின்னர் ஒருவாறு துறைமுகத்தைவிட்டு நகர்த்தப்பட உள்ளன. எதிர்வரும் திங்கட்கிழமை அப் பொருட்கள் வெளியே எடுக்கப்படும் என சிறிலங்கா செஞ்சிலுவைக் குழு தெரிவித்துள்ளது. "கப்டன் அலி” பொருட்களை முதலில் ஏற்க முடியாது என்று சிறிலங்கா அரசு திருப்பி அனுப்பியது. இந்தியாவின் தலையீட்டை அடுத்து அப்பொருட்கள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், அப்பொருட்களை துறைமுகத்தைவிட்டு வெளியே எடுப்பதற்கு அதிகாரிகள் தொடர்ச்சியான முட்டுக்கட்டைகளை இட்டு வந்தனர். இதனால் சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கத்தினால் பொருட்களை எடுத்து விநியோகிக்க முடியவில்லை. பொருட…
-
- 0 replies
- 282 views
-
-
சரத் பொன்சேகா சொன்னது சரிதானா? சொல்… சொல்… கலைஞரே! சொல்!: வலம்புரி நாளிதழ் தமிழக எம்.பிக்கள் குழுவின் இலங்கை விஜயத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைத்தது என்ன? ஒரு தடவை ஜெனரல் சரத் பொன்சேகா கூறிய ‘தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள்‘ என்ற கூற்றை நிஜப்படுத்துவதாகவே அமைகின்றது. இவ்வாறு யாழிலிருந்து வெளியாகும் வலம்புரி நாளிதழ் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியிடம் கேள்வி எழுப்பயுள்ளது. வலம்புரியின் இன்றைய இதழில் இவ்வாறு வரையப்பட்டுள்ளது, தமிழக எம்.பிக்கள் குழு இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கும் வவுனியாவிலுள்ள தடுப்பு முகாங்களுக்கும் சென்று நிலைமைகளை நேரில் பார்த்தனர். அதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்து பேசினர்.சந்தித்து பேசினர…
-
- 0 replies
- 685 views
-
-
தீபத் திருநாளுக்கு முன்னதாக ஈழத்தமிழரின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த பெருமிதத்தோடு தமிழக எம்பிக்கள் குழு தாயகம் திரும்பியிருக்கிறது. எண்ணியவாறு எல்லாம் முடிந்தது எனும் மகிழ்ச்சியில் விமானநிலையத்திற்கே வந்து வரவேற்றிருக்கிறார் முதல்வர் கலைஞர். இந்தக் குழுவின் பயணம், கலைஞரின் இன்னுமொரு சாதனையாகப் பரிணமிக்கப் போகிறது. யுத்தம் உக்கிரமாக இருந்தபோதிலே தனிமனிதனாக உண்ணா விரதமிருந்து, முடியாத போரை முடிந்ததாகச் சொல்லி முடித்துக்கொண்டவருக்கு இதுவெல்லாம் எம்மாத்திரம். இதோ சொல்லி விட்டார் நாளை முதல் தமிழர்கள் சொந்த இடங்களுக்குத் திரும்புகின்றார்கள் என்று. இனியென்ன எல்லாம் முடிந்தது சுபம் . இந்தக் காட்சியின் நிறைவுப் பகுதியும் முடிந்துவிட்டது. அறிக்கையை இனி அவர் மத்திய அரச…
-
- 2 replies
- 769 views
-
-
இந்தியாவில் ஆளும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், இலங்கையில் உண்மை நிலையை கண்டறியப் போவதாகச் சொல்லி இன்பச்சுற்றுலா பயணம் மேற் கொண்ட சம்பவத்தால் ராஜபக்சேவுக்குத்தான் லாபம். இதனால் அங்குள்ள தமிழ் மக்களுக்க எந்தப் பயனும் கிடைக்காது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது இலங்கையில் முள்வேலி சிறைக்குள் 3 லட்சம் தமிழர்கள் கடந்த 5 மாதங்களாக அவதிப்பட்டு வருகின்றனர். எந்த வித அடிப்படை வசதியும் இல்லாமல், சிறை கைதிகளுக்கு தரப்படும் சலுகைகள் கூட கிடைக்காமல், ஆடுமாடுகளை போன்று பட்டியில் அடைத்து சிங்கள இனவெறி ராணுவம் கொடுமைப்படுத்தி வருகிறது. யூதர்களுக்கு முகாம்கள்…
-
- 1 reply
- 486 views
-
-
இந்தோனேசிய கடற்படையினரால் வழிமறிப்பு செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 260 பொது மக்களும் இன்று தமக்கு நீதி வழங்குமாறு உண்ணாவிரதத்தினை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்தில் படகில் இருந்து இறங்க மறுத்து வருகின்றனர். தாம் அவுஸ்ரேலியா செல்லவேண்டும் இல்லையேல் வேறொரு நாட்டிற்கு செல்லவேண்டும் என கோரிக்கை விடுத்துளனர். http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 365 views
-
-
ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் இலங்கை மக்களை பயமின்றி வாழ அழைத்தார் கொழும்பு, October 7, 2009: “ அமைதியும், செழுமையும் ஒன்றோடொன்று இணைந்தது. அதனால் அமைதியானது உங்கள் இருதயத்திலும், குடும்பத்திலும் இருக்கட்டும். பின்பு செழுமை தானாக வந்தடையும். நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் உங்களிடம் இருந்தால் அமைதி வந்துசேரும்", என்று சண்டைக்குப் பின்னல் மக்களின் இதயத்தையும் மனதையும் இனப்பதர்க்காக இரண்டுநாள் ஸ்ரீ லங்கா பயணம் சென்றுள்ள பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அவர்கள் கூறினார். அவருடைய ஐந்தாவது கட்ட செயலாக ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் கொழும்பில் உள்ள மிகப் பெரிய உள்விளையாட்டு அரங்கில் 10,௦௦௦க்கும் மேற்ப்பட்ட மக்களுடன் தியானம், பிரார்த்த…
-
- 1 reply
- 714 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து அனைத்துலக விசாரணை ஒன்றை நடத்துவதற்கு சிறிலங்கா அரசு இணங்காதமை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. "சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிப் போரின்போது பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை தொடர்ந்து விடுத்த கோரிக்கைகள் பலவற்றுக்கு சிறிலங்கா அரசு பதிலளிக்கவே இல்லை" என ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான தலைவர் நவநீதம்பிள்ளை தெரிவித்தார். போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து அனைத்துலக விசாரணை வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் கூட சிறிலங்கா அரச தலைவரிடம் கோரிக்கை விடுத்தார் என நவநீதம்பிள்ளை…
-
- 0 replies
- 284 views
-