ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
தென் மாகாண சபை ஆளுநரின் பராமரிப்புக்காக மட்டும் வருடமொன்றுக்கு 9 கோடி ரூபா செலவிடப்படுகிறது. ஆனால், அம் மாகாண மக்களின் சுகாதாரத் தேவைகளுக்காக 7 1/2 கோடி ரூபா செலவிடப்படுகிறது. எனவே மக்கள் சேவைக்கு இவர்கள் முன்னுரிமை வழங்குவதில்லையென்பது நன்கு புலனாகின்றது. என ஜே.வி.பி. எம்.பி விஜித ஹெரத் கூறியுள்ளார். மாகாண சபைகள் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவோ தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்பவோ முடியாது மேலும் தெரிவித்துள்ளார். தென் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்திற்கு நாம் போட்டியில்லையாயின் ஏன் எமது கட்சிக் காரியாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.மேல் மாகாண சபைத் தேர்தலின் போது மக்களுக்கு அதைச் செய்வோம் இதைச் செய்வோமென உறுதி வழங்கிய…
-
- 0 replies
- 401 views
-
-
மகிந்த அரசாங்கம் முகாமிலுள்ள மக்களை விடுவிப்பதில் மேலும் தாமதத்தினை ஏற்படுத்துவதற்காக தடுப்பு முகாமிலுள்ள மக்களிற்குள் புலிகள் ஊடுருவியுள்ளதாகவும், பெருமளவு மக்கள் இருப்பதால் புலிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் இப்போது கதை அளக்கின்றது. இதனை உறுதி படுத்துமால் போல் சிங்கள இனவாத பத்திரிகையான ஐலண்ட் இல் வெளிவந்த செய்தியில் இத்தகைய நயவஞ்சக திட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தியில் மொட்டையாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது முகாமிற்குள் உள்ள புலிகள் மீழ ஒருங்கிணைக்கப்படலாம் என்றும், மக்களை அவர்கள் வழி நடத்தலாம் என்றும் பெருமளவு புலிகள் மக்களுடன் கலந்து இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்கள அரசு தடுப்பு முகாம்களில் தமிழ் மக்…
-
- 0 replies
- 564 views
-
-
வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற தமது உறவினர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி நாளாந்தம் 25 – 30 முறைப்பாடுகள் அஞ்சல் வழியாக வந்து கிடைப்பதாக வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மனித உரிமை ஆணைக்குழுவினர் இடைத்தங்கல் முகாம்களுக்கு விஜயம் செய்து இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சினைகள் குறித்து அறிந்து கொள்வதற்கான அனுமதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டதையடுத்தே, முகாம்களில் இருந்து இவ்வாறு தமக்கு முறைப்பாடுகள் வரத் தொடங்கியிருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். http://parantan.com/pranthannews/
-
- 0 replies
- 413 views
-
-
மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அடுத்துவரும் அரச தலைவர் தேர்தலில் எதிரணியின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூர்யவை பொது வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதற்கான பணிகளில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர மும்முரமாக ஈடுபட்டுள்ளார். எந்த ஒரு தேர்தலும் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பொது வேட்பாளராக கரு ஜெயசூர்யவை அறிவித்துவிடுவது ஐக்கியக் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குக் கவர்ந்து இழுப்பதற்கும் எதிரணியைப் பலப்படுத்துவதற்கும் ஏதுவாக இருக்கும் என மங்கள கருதுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், கரு ஜெயசூர்ய பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும்கூட ஐக்கிய தேசியக் கட்சியின் முழுப் ப…
-
- 1 reply
- 442 views
-
-
சாள்ஸ் அன்டனியா? இது உண்மையில்லேயே.... வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன், சாள்ஸ் அன்டனிதானா?
-
- 8 replies
- 2.5k views
-
-
தமிழ்நாட்டிலிருந்து வெளி வரும் முண்ணனி வாரமிருமுறை இதழான ஜீனியர் விகடன் பத்திரிக்கையில் செய்தியாளராக பணிபுரிந்து வந்தவர் விகேஸ். இவர் இலங்கை துணை தூதர் அம்சாவிற்கு நெருக்கமாகவும், இலங்கை அரசு தரும் செய்திகளை தமிழக பத்திரிகைகளில் இடம் பெறச் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதையும்,ஆடம்பரம
-
- 3 replies
- 1.6k views
-
-
சிறிலங்காவுக்கு போர்க் கருவிகளோ ஆயுதங்களோ இந்தியா அனுப்பவில்லை என்று பிரதமரும் அமைச்சர்களும் எப்போதோ தெரிவித்துவிட்டனர் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் கருணாநிதி நேற்று சனிக்கிழமை பதிலளித்தார். இலங்கை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு: போர் முடிந்து இலங்கையிலே பல மாதங்கள் ஆன போதிலும், இன்னும் மூன்று லட்சம் தமிழர்கள் திறந்தவெளி சிறைச்சாலையில் வாழ்கிற சூழ்நிலை பற்றி இந்திய அரசுக்கு நீங்கள் வலியுறுத்துவீர்களா? பதில்: நாங்கள் இந்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி கொண்டு வருகிறோம். இந்திய அரசு இதிலே இன்னும் அதிகமாக…
-
- 16 replies
- 1.6k views
-
-
இலங்கையில் தமிழ் ஈழம் மலர்வதை யாரும் தடுக்க முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் மாமன்னன் பூலித்தேவனின் 294 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வளசரவாக்கத்தில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வைகோ, இந்தியாவில் முதல் சுதந்திர போர் 1857 ம் ஆண்டு நடைபெற்றதாக நம் வரலாறு கூறுகிறது. ஆனால் அதற்கும் 100 ஆண்டுகளுக்கு முன்பே 1750களில் தென் தமிழகத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து பல வீரம் மிகுந்த போராட்டங்களை நடத்தியவர் பூலித்தேவன். ஆங்கிலேயருக்கு மிகப்பெரிய சவாலாக திகழ்ந்தவர் பூலித்தேவன். பூலித்தேவன் வரலாறு புத்தகத்தில் இல்லை. இந்த இருட்டடிப்பை ஜெயலலிதா தலைமையில் நாங்கள் முறியடிப்போம். இலங்கைய…
-
- 0 replies
- 832 views
-
-
இலங்கையில் தமிழ் மக்களின் கலை மரபுகளை வெளிப்படுத்தும் கிளிநொச்சி மாவட்ட கலாசார மண்டபம், இந்து பேரவை கட்டிடம் போன்றவை அனைத்தும் அழிக்கப்படுகிறது. அங்கிருந்த கலாசார சின்னங்கள் யாவும் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டு உள்ளன. இலங்கையில் இடம் பெயர்ந்த மக்களை மீண்டும் அங்கு குடியமர்த்த கண்ணி வெடிகள் தடையாக உள்ளன. அவற்றை அகற்றிய பின்னர் தான் அங்கு மக்களை மீண்டும் குடியமர்த்த முடியும் என அதிபர் ராஜபக்சேயின் சிங்கள அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், கிளி நொச்சியிலும், அதனை சுற்றியுள்ள பிரதேசங்களிலும் ராணுவ வீரர்களுக்கான நினைவு சின்னங்கள் மற்றும் புத்த கோவில்களை கட்டி வருகிறது. ஓமந்தையில் இருந்து பளைவரை ஏ9 வீதியின் இருமருங்கிலும் இருந்த அனைத்து கட்டிடங்களும் இடித்து தரை மட்டம…
-
- 0 replies
- 749 views
-
-
நாம் தமிழர் அமைப்பில் உள்ள இளைஞர்கள் சீருடை அணியாத ராணுவத்தினர் என தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இயக்குநர் சீமான் தெரிவித்தார். தூத்துக்குடியில் நாம் தமிழர் அமைப்பின் சார்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாலவிநாயகர் சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு இயக்குநர் சீமான் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரபு வரவேற்றார். இக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய இயக்குநர் சீமான், என்னை யாரும் தலைவர் என்று அழைக்க வேண்டாம். அப்படி அழைத்தால் திரும்பவும் படம் எடுக்கச் சென்றுவிடுவேன். நம்முடைய நோக்கத்திற்காக நாம் தமிழர் ஆக ஒன்றிணைந்து போராடுவோம். அரசியல் சாக்கடைகளைப் பற்றி நாம் ப…
-
- 4 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதித்துறை கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தொடர்ந்து இரண்டாவது மாதமாக வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 350 views
-
-
நாம் தமிழர் இயக்கத்தின் அறுத்தெரிவோம் முள்வேலிகளை நிகழ்வின் ஈழ மக்களின் நிலையை விளக்கும் “எம்மைக்காக்க எவரும் இல்லையா…?” நாடகம். http://www.meenagam.org/?p=9129
-
- 2 replies
- 734 views
-
-
வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரச படையினர் நடத்திய வலிந்த தாக்குதல்களின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து அமெரிக்காவின் போர்க் குற்றங்கள் தொடர்பான அலுவலகம் அறிக்கை ஒன்றைத் தயாரித்து வருகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 384 views
-
-
தமிழர்கள் சிங்களப் படையினரால் படுகொலை செய்யப்படும் காணொலி குறித்து, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கவனத்தை நோர்வே ஈர்க்கவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 321 views
-
-
இந்திய அழுத்தங்களுக்கு இணங்கி சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச செயற்பட்டால், தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காக எதனைச் செய்வதற்கும் தாம் தயங்கப் போவதில்லை என ஜே.வி.பி. மீண்டும் அரசை கடுமையாக எச்சரித்திருக்கின்றது. "வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு காணி, காவல்துறை மற்றும் நிதி தொடர்பான அதிகாரங்கள் வழங்கப்பட்டால், அது தனிநாட்டுக்கு அல்லது நாடு பிளவுபடுவதற்கே வழிவகுப்பதாக அமையும்" எனவும் ஜே.வி.பி. தெரிவித்திருக்கின்றது. "காவல்துறை அதிகாரம் எந்தவொரு மாகாண சபைக்கும் வழங்கப்பட்டால், அந்த மாகாணத்தின் காவல்துறை மத்திய அரசின் காவல்துறை மா அதிபரின் கீழ் செயற்படாது" எனவும் ஜே.வி.பி.யின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா தெரிவித்திருக்கின்றார். தென்மாகாணத்தில் உள்…
-
- 0 replies
- 521 views
-
-
யாழ். மாவட்டத்தில் உள்ள ஏனைய உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்களையும் இந்த வருட இறுதிக்குள் நடத்துமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுக்கப்போவதாக சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் துணைப் படையான ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கின்றார். யாழ். மாவட்ட மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் விரைவில் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருக்கின்றார். குடாநாட்டில் யாழ். மாநகரசபைக்கான தேர்தல் அண்மையில் நடத்தப்பட்டது. இதனைவிட மூன்று நகர சபைளும் 14 பிரதேச சபைகளும் யாழ்ப்பாணத்தில் உள்ளன. 1998 ஆம் ஆண்டில் இவற்றுக்கான தேர்தல் இறுதியாக நடத்தப்பட்டது. இந்நிலையிலேயே இந்த உள்ளூராட்…
-
- 0 replies
- 454 views
-
-
நாட்டின் இனப்பிரச்சினையைத் தீர்க்கும் விடயத்தில் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 318 views
-
-
நாட்டின் இனப்பிரச்சினையைத் தீர்க்கும் விடயத்தில் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு உதவுவதற்குத் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 437 views
-
-
வன்னியில் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 3 ஆயிரத்து 500 பேர் அவர்களது சொந்த இடங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட உள்ளதாக வவுனியா பிரதேச செயலர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். மீளக்குடியமரும் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதி ஒன்றை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதரகம் வழங்குகின்றது. அதேநேரம் குடும்பம் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் அரசால் வழங்கப்படுகின்றது. முகாம்களில் இருந்தவர்களில் இதுவரைக்கும் 50 ஆயிரம் பேர் மன்னார் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள
-
- 1 reply
- 380 views
-
-
இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்த போது வெளியேறிய 2 லட்சத்து 80 ஆயிரம் தமிழர்கள் வன்னி பகுதியில் பல்வேறு அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். போர் முடிந்து 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் அவர்களை இன்னும் சொந்த ஊருக்கு அனுப்பவில்லை. எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் இந்த மக்கள் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர். இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு போதிய உணவு, மருத்து, சுகாதாரம், முறையான கழிப்பிடம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. இனதால் பல ஆயிரம் பேர் நோய்வாய்பட்ட நிலையில் இறந்து விட்டனர் தினமும் சிங்கள ராணுவத்தினர் முகாமுக்குள் புகுந்து அங்கு இளைஞர்களையும், இளம் பெண்களையும் விடுதலைப்புலிகள்…
-
- 2 replies
- 754 views
-
-
கிழக்கு மாகாணத்தின் குடித்தொகைப் பரம்பலை மாற்றி அமைப்பதற்கான ஒழுங்காக திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 470 views
-
-
வெள்ளிக்கிழமை, 28, ஆகஸ்ட் 2009 (17:34 IST) கரூரில் இலங்கை தேசிய கொடி எரிப்பு தமிழர்களை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து கொலை செயத் செயலைக் கண்டித்து கரூர் நீதி மன்றம் முன்பு வழக்கறிஞர்கள் இலங்கை தேசிய கொடியை செருப்பால் அடித்து, தீ வைத்து எரித்தனர். இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் போர் முடிந்த நிலையில் அப்பாவி தமிழர்களை பாதுகாப்பு வளைத்திற்குள் வைத்து இலங்கை ராணுவம் நிர்வாணப்படுத்தி கொடுமை செய்து படுகொலை செய்து வருவதாக தமிழ் ஈழ ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் உள்ள ராணுவ வதை முகாமில் தமிழ் இளைஞர்களை கடத்திச் சென்று நிர்வானமாக்கி, தலையில் சுடும் காட்சிகளை லண்டனில் உள்ள சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம்…
-
- 5 replies
- 938 views
-
-
சிறிலங்காப் படையினரால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர் ஜெயப்பிரகாஸ் திசநாயகத்திற்கு (வயது 48) 20 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 479 views
-
-
போர் இல்லாத சமயத்திலும் நாட்டைப் பிரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வண. உடுகம சிறி புத்தரகித்த தேரர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 323 views
-
-
வடக்கு மாகாண சபைக்கான தலைமை செயலகம் மாங்குளத்தில் 900 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட உள்ளது என சிறிலங்கா அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 427 views
-