ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
பப்ரல் அமைப்பிற் ஜப்பானிய அரசாங்கம் 11 மில்லியன் ரூபா நிதியுதவி வீரகேசரி இணையம் 7/16/2009 12:16:55 PM - தேர்தல் கண்காணிப்பு பணிகளிற்காக ஜப்பானிய அரசாங்கம் 11 மில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளதாக கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது. 2009 ஆம் நிதியாண்டில் நடைபெறவுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபை தேர்தல், வவுனியா நகர சபை தேர்தல், ஊவா மாகாண சபை தேர்தல் போன்றவற்றிற்கு உதவும் முகமாக பப்ரல் அமைப்பிற்கு இந்நிதியை ஜப்பானிய அரசாங்கம் வழங்கியுள்ளது. தேர்ல் ஏற்பாட்டாளர்கள்,மற்றும் வாக்காளர்களிற்கு தேர்தல் தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குதல், 15,000 தேர்தல் கண்காணிப்பாளர்களிற்கு பயிற்சிகளை வழங்குதல்,தேர்தலின் முன்பும், தேர்தல் தினத்தன்று, தேர்தலின் பின்னரான கண்காண…
-
- 0 replies
- 387 views
-
-
தமிழீழத்தில் மீண்டும் வெற்றி வரும் – வைகோ வரும் காலத்தில் இலங்கையில் வலுவான தமிழர்கள் உருவாகி மீண்டும் ஈழத்தை வெற்றி கொள்வார்கள் என்று புதுச்சேரி அரியாங்குப்பத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பொதுச் செயலர் வைகோ கூறினார். மேலும் அவர் பேசியது: 1993-ம் ஆண்டு மதிமுக ஆரம்பித்த நாள் முதல் கடந்த 16 ஆண்டுகளாக திமுகவுடன் தர்மயுத்தம் நடத்திக் கொண்டு வருகிறோம். நமது கட்சிக் கோட்டையை எஃகு கோட்டையாக கட்டுவோம். ஈழத்தமிழர் அவலம் கண்டு உலகத்தமிழர் உள்ளம் சுக்குநூறாக நொறுங்கிக் கிடக்கிறது. இலங்கையில் 3 லட்சம் தமிழர்கள் முள்வேலியில் முடங்கிக் கிடக்கின்றனர். உள்நாட்டில் அகதிகளாக வாழ்கின்றனர். ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த தமிழர்களை நீக்கி …
-
- 0 replies
- 818 views
-
-
வெலி ஓயா பகுதியில் சிங்கள மக்கள் குடியேற்றம் தமிழரின் பூர்வீக பகுதியான வெலி ஓயாவில் மகாவலி திட்டத்தின் கீழ் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகின்றமை அரசியல் சிக்கல்களைத் தோற்றுவிக்கக்கூடும். மகாவலி எல்-வலய வெலி ஓயா திட்டத்தின் கீழ் 2500 குடும்பங்கள் முல்லைத்தீவில் உள்ள நெடுங்கேணி பகுதியில் குடியமர்த்தப்பட உள்ளதாக அரச பத்திரிகையான தினமினவுக்கு இலங்கை மகாவலி அதிகார சபையின் தலைவர் தர்மசிறி டி அல்விஸ் இன்று தெரிவித்துள்ளார். இந்த குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஏக்கர் வயல் நிலமும், அரை ஏக்கர் தென்னை வளர்ப்புக்கான நிலமும், வீட்டுத் தோட்டத்துக்கான ஒரு ஏக்கர் நிலமும் வழங்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். நெடுங்கேணியின் பூர்வீக வாசிகளான தமிழர்கள் …
-
- 0 replies
- 617 views
-
-
கனேடிய இலக்கியத் தோட்ட விருதுகள் வெங்கட்ரமணன் தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனை விருதைக் கொண்டு 2001ஆம் ஆண்டு துவக்கப்பட்டு இப்பொழுது இயல் விருதுடன் புனைகதை, புனைவிலி, கவிதை மற்றும் தமிழ் தகவல் நுட்பத்திற்கான விருது என்று வளர்ந்திருக்கிறது. வாழ்நாள் சாதனைக்கான இயல் விருதைக் கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்குகிறது. தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான விருதுகளில் ஒன்றாக இயல் விருது கவனம் பெறத் துவங்கியிருக்கிறது. இவ்வாண்டின் விருது விழா ட்ரினிடி கல்லூரியின் சீலி அரங்கில் மே மாதம் 24ஆம் நாளன்று நடந்தது. நாற்பது வருடங்களுக்கு மேலாகத் தன் செயல்பாட்டை எழுத்துக்கும் சிறுகதைகளுக்கும் மட்டுமல்லாமல் இலக்கியத்துக்கு அப்பால் பெண்கள் வாழ்க்கையை வேறு வடிவங்களுக்கும் …
-
- 12 replies
- 1.6k views
-
-
செய்தியாளர் தாயகன் 16/07/2009, 11:37 எகிப்தில் உலக நாடுகளிடம் கையேந்தும் மகிந்த அணிசேரா நாடுகளின் 15வது மாநாட்டில் கலந்துகொள்ள எகிப்து சென்றுள்ள சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பல நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து, உதவி கோரி வருகின்றார். “அமைதி, அபிவிருத்தி என்பவற்றுக்கான பன்னாட்டு கூட்டிணைவு” என்ற தலைப்பில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 60 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளுகின்றனர். அணிசேரா நாடுகள் அமைப்பில் 110 நாடுகள் அங்கத்துவம் பெறுகின்ற போதிலும், இந்த வரும மாநாட்டில் 60 நாடுகளின் தலைவர்கள் மட்டுமே கலந்து கொள்ளுகின்றனர். தனித்தனியாக நாடுகளுக்குச் சென்று நிதியுதவி கோரி வந்த சிறீலங்கா அரசு, பல நாடுகளின் தலைவர…
-
- 0 replies
- 514 views
-
-
மரணதண்டனையை மீண்டும் அமுல் படுத்துவதற்கு அரசாங்கம் ஆலோசனை வீரகேசரி நாளேடு 7/16/2009 8:43:24 AM - மரணதண்டனை தீர்ப்பை அமுல்படுத்துவது சர்வதேச மற்றும் சட்ட ரீதியில் விவாதிக்கப்பட வேண்டிய விடயமாகும். என்றாலும் மரணதண்டனையை இலங்கையில் மீண்டும் அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது என்று நீதியமைச்சின் செயலாளர் சுகத கம்லத் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடுதிரும்பியதும் மரணதண்டனையை இலங்கையில் அமுல்படுத்துவது தொடர்பில் நீதியமைச்சர், ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானத்தை எட்டுவார் என்றும் அவர் சொன்னார். நீதி சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ப…
-
- 1 reply
- 427 views
-
-
காணாமல் போனோர் பற்றிய தகவலை எங்கே அறிந்து கொள்ளலாம் நான் தேடும் குடும்பம் - சிவசம்பு செல்வராசா இராமநாத முகாம் 19/ 37 செட்டிகுளம் வவுனியாவில் இருந்தவர் தற்போது அங்கே இல்லை. அவரைப்பற்றிய விபரங்களை எங்கே அறிந்து கொள்ளலாம்? யாருடன் தொடர்பு கொள்ளலாம்
-
- 1 reply
- 825 views
-
-
ஆழ்கடல் மீன்பிடி - இந்தியா மீது சிறீலங்கா குற்றச்சாட்டு on 15-07-2009 19:40 Published in : செய்திகள், இலங்கை யாழ் குடாநாட்டில் ஆழ்கடல் மீன்பிடிக்கு தடை விதித்துள்ள சிறீலங்கா படையினர், இந்திய கடற்றொழிலாளர்களைக் காரணமாகத் தெரிவித்து, அவர்கள் மீது பழிசுமத்தி வருகின்றனர். யாழ் கடற்றொழிலாளர்கள் ஆழக்கடலில் தொழிலில் ஈடுபடும்போது, இந்திய கடற்றொழிலாளர்களினால் தாக்கப்படும் அபாயம் இருப்பதாக, தீவகத்தில் நிலை கொண்டுள்ள சிறீலங்கா கடற்படை அதிகாரி டி.எம்.பி.நிற்ரிவ தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ் செயலகத்தில் சிறீலங்காவின் மீன்பிடி அமைச்சர் மற்றும், ஈ.பி.டி.பி துணைப்படைக் குழுத் தலைவர் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில், ஆழ்கடல் …
-
- 0 replies
- 341 views
-
-
நிமிடத்துக்கு நிமிடம் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கும் தமிழர் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்திடம் தெளிவான நோக்கு காணப்படவில்லை. தேசிய பிரச்சினை விடயத்தில் தொடர்ந்தும் கண் திறக்கப்படாத நிலை ஏற்படுமிடத்து பிற்காலத்தில் மிக மோசமான விளைவுகளையே அது ஏற்படுத்தப் போகின்றது என்று ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவிக்கின்றார். தீர்வுத் திட்டங்கள் பிற்போடப்பட்டு வருகின்ற காரணத்தினாலேயே அந்நிய சக்திகள் எமது உள் வீட்டுப் பிரச்சினைகளுக்குள் தலையிடுகின்றன. வன்னி மக்களின் நிலைமைகள் குறித்து கருணாநிதியோ அல்லது அவரது மகள் கனிமொழியோ கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர் சொன்னார். கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச இத…
-
- 0 replies
- 485 views
-
-
பிரான்ஸில் “தமிழீழ மக்கள் பேரவை” அமைப்பு உருவாக்கம் பிரான்ஸில் “தமிழீழ மக்கள் பேரவை” எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக அவ்வமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கை பின்வருமாறு: தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு விடுக்கும் அறிவித்தல் எமது தாயகம் தமிழீழம் தொடர்பாக பிரான்சில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழரின் அரசியல், பொருளாதாரம், மனிதாபிமானம், கல்வி, சமூகநலம், போன்றவற்றை முன்னெடுக்கும் செயற்பாட்டிற்கும் செயற்படுவதற்குமான அமைப்பொன்றை உருவாக்க பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் எடுத்துக்கொண்ட ஆலோசனையின் பேரில் தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு என்கின்ற பெயரில் அமைப்பு ஒன்றினை உருவாக்கப்பட்டு அதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இம்…
-
- 0 replies
- 476 views
-
-
வன்னி இறுதிப்போரில் ஏராளமான குழந்தைகளே வெடிகுண்டுக் காயங்களுக்கு இலக்காகினர்: எம்.எஸ்.எவ்.அமைப்பு வன்னியில் இறுதிப்போர் நடைபெற்ற போது ஐந்து வயதுக்கும் உட்பட்ட குழந்தைகளே பெரும் எண்ணிக்கையில் வெடி குண்டுக் காயமுற்றனர். அவர்களுக்கு மனிக்பாம் அகதி முகாம் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவ்வாறு பிரான்ஸின் எம்.எஸ்.எவ். மருத்துவ அமைப்பு விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட ஏனைய தகவல்கள் வருமாறு: மெனிக்பாம் முகாமில் உள்ள 150 கட்டில்கள் கொண்ட வைத்தியசாலையில் இரண்டு சத்திர சிகிச்சை அறைகள் உள்ளன. இங்கு மே மாதத்திற்குப் பின்னர் சேர்க்கப்பட்ட 600 பேரில் பெரும்பாலானவர்கள் ஐந்து வயதிற்கு உட்பட்டவர்கள். இந்த வைத்தியச…
-
- 0 replies
- 402 views
-
-
கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியை எதிர்பார்த்திருந்த முன்னாள் கடற்படைத் தளபதி சீப் அட்மிரல் வசந்த கரணகொட, அரச தலைவருக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டதையிட்டு பெரும் அதிருப்தியடைந்திருக்கின்றா
-
- 1 reply
- 612 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்துலகத்தின் விதி முறைகளை மீறும் செயலாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பணியாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஐ.நா. பணியாளர்கள் சிறிலங்கா அரசினால் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவது வருந்தத்தக்கது. ஐ.நா. பணியாளர்கள் சுதந்திரமாக நடமாடவும், அவர்களின் பணிகளை மேற்கொள்வதற்கும் அனுமதிகள் வழங்கப்பட வேண்டும். ஐ.நா.வின் பணியாளர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்துலகத்தின் விதிமுறைகளை மீறும் செயலாகும். ஐ.நா. பணியாளர்களை குற்றம் சுமத்தப்படா…
-
- 1 reply
- 392 views
-
-
எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய பரந்த கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு கட்சித் தலைமைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அங்கீகாரம் வழங்கியிருக்கின்றது. இதன்படி இது தொடர்பான பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 337 views
-
-
தற்போது போர் முடிவடைந்துவிட்ட நிலையில் படையினர் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தப் பணி இலகுவானது ஒன்றல்ல. இதற்கு நீண்டகாலம் எடுக்கும். இந்தப் பணியில் எமக்கு உதவுவதற்கு இந்தியப் படையினர் கண்ணிவெடி அகற்றும் பிரிவின் 500 பேர் இங்கு வரவுள்ளனர் என கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரியாகப் பதவியேற்றுக்கொண்ட ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நேற்று புதன்கிழமை புதிய பதவிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அவர் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இந்தத் தகவல்களைத் தெரிவித்தார். இந்தியப் படையைச் சேர்ந்தவர்கள் எப்போது வருவார்கள் என்பதையிட்டு திட்டவட்டமாக அவர் எதுவும் தெரிவிக்காத போதிலும், கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்கு இந்தியப் படையினரின் உதவிகள் அ…
-
- 0 replies
- 388 views
-
-
சீமானின் அடுத்த உறுமல்... ''அரசியல் இயக்கம் ஆரம்பம்..'' தேர்தல் காலம் வரை உரத்து முழங்கிய ஈழ ஆதரவுக் குரல்கள் இப்போது எங்கே போய் விட்டன என்பது தெரியவில்லை. அதேநேரம் ஈழத்தின் கோர வீழ்ச்சி நிஜமான தமிழுணர்வுக் குரல்களையும் விம்மியடங்க வைத்து விட்டது. இதற்கு நடுவில், தொடர்ந்து ஈழ விடிவுக்காக குரல் உயர்த்திக் கொண்டிருக் கிற இயக்குநர் சீமான், வருகிற 18-ம் தேதி ஊர்வலம், பொதுக்கூட்டம் என நடத்தி மதுரையை கலங்கடிக்கத் தயாராகி விட்டார். 'அறுத்தெறிவோம் வாரீர்...' என உணர்வாளர் களை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கும் சீமான், அடுத்தகட்டமாக அரசியல் இயக்கத்தை ஆரம்பிக்கப் போவதாகவும் அனல் கிளம்பி இருக்கும் நிலையில் நாம் அவரை சந்தித்தோம். ''பேரணி, பொதுக்கூட்டம் என தி…
-
- 4 replies
- 1.9k views
-
-
லசாந்த படுகொலையிலிருந்து முள்ளிவாய்க்கால் பயங்கரம் வரை சர்வதேச அரங்கில் ராஜபட்சேக்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கான வலுவான ஆதாரங்கள் எக்கச்சக்கமாய் இருக்கின்றன. உலகின் எந்த இனவெறியனுக்கு எதிராகவும் இவ்வளவு ஆதாரங்கள் கிடைத்ததில்லை. ஆனால் இவ்வளவு ஆதாரங்கள் இருப்பது தெரிந்தும், தங்களைத் திசைதிருப்பப் பரப்பப்படும் வதந்திகளால் தடுமாறுகிறது தமிழ்ச் சமூகம். ஆம்புலன்ஸில் தப்பமுயற்சித்தபோது சுட்டோம், நந்திக் கடலில் உடல் கிடைத்தது, எரித்துவிட்டோம், கடலில் கரைத்துவிட்டோம், கோடாரியால் வெட்டினோம்........ என்பதெல்லாம் 100 வீதம் உடான்ஸ். எதற்கு இப்படிப் பொய்சொல்லவேண்டும்? இப்படியெல்லாம் புதிய புதிய வதந்திகளைக் கிளப்பி விட்டுக்கொண்டே இருந்தால் தான், அதி புத்திசாலிகளான நாம் அதை…
-
- 0 replies
- 546 views
-
-
செய்தியாளர் தாயகன் 15/07/2009, 17:07 சிறீலங்கா அரசுக்கு பிரித்தானிய அரசு மீண்டும் கண்டனம்! மீள் குடியேற்றத்திற்கு 3 மில்லியன் பவுண் உதவி! வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக, சிறீலங்கா அரசுக்கு பிரித்தானிய அரசாங்கம் மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது. முகாம்களிற்குச் செல்ல மனிதநேய அமைப்புகளுக்க விதிக்கப்பட்டுள்ள தடைகளைச் சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானியாவின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் மைக் போஸ்ரர், இவ்வாறான தடைகள் அகற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இடம்பெயர்ந்த மக்கள் அரசு கூறியது போன்று 180 நாட்களுக்குள் மீளக் குடியேற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர், இதற்கு 3 மில்லியன் பவுணஸ் நிதியுதவி செய்ய பிரித்தானியா முன்வந்திருப்பதாகவும் கூறினார். …
-
- 2 replies
- 593 views
-
-
Sutirtho Patranobis, Hindustan Times Colombo, July 16, 2009 India was getting ready to send 500 soldiers to Sri Lanka - its largest contingent since the Indian Peace Keeping Force (IPKF) in 1987 - to help de-mine north and north-east Lanka, Fonseka announced. "India was sending 500 de-miners to clear areas formally under the control of LTTE in the north,"Fonseka said in an informal talk after taking charge as chief of defence staff. He did not indicate when the Indian contingent would arrive. What would add to their furrows was his second announcement that $ 200 million worth of ammunition to be bought from China and Pakistan was no longer required …
-
- 0 replies
- 673 views
-
-
வீரகேசரி நாளேடு - நிமிடத்துக்கு நிமிடம் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கும் தமிழர் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்திடம் தெளிவான நோக்கு காணப்படவில்லை. தேசிய பிரச்சினை விடயத்தில் தொடர்ந்தும் கண் திறக்கப்படாத நிலை ஏற்படுமிடத்து பிற்காலத்தில் மிக மோசமான விளைவுகளையே அது ஏற்படுத்தப் போகின்றது என்று ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவிக்கின்றார். தீர்வுத் திட்டங்கள் பிற்போடப்பட்டு வருகின்ற காரணத்தினாலேயே அந்நிய சக்திகள் எமது உள் வீட்டுப் பிரச்சினைகளுக்குள் தலையிடுகின்றன. வன்னி மக்களின் நிலைமைகள் குறித்து கருணாநிதியோ அல்லது அவரது மகள் கனிமொழியோ கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர் சொன்னார். கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே…
-
- 0 replies
- 731 views
-
-
ஒரு தாய் மக்களாய் ஒன்றிணைவோம்! தமிழ் மொழி, தமிழினம் காத்திடுவோம் – நோர்வேஜிய தமிழர் மருத்துவ அமைப்பு (NTHO) அன்புள்ள தமிழ் பேசும் உறவுகளே! உலகின் அனைத்து பகுதிகளிலும் பறந்து விரிந்து வாழும் எம் உறவுகளுடன் இக்கடிதம் மூலம் சந்திப்பதில் நோர்வேஜிய தமிழர் மருத்துவ அமைப்பு பெருமிதம் கொள்கிறது. பல்வேறு நாடுகளில், வேலை நிமித்தமாகவோ, புலம் பெயர்ந்தோ வாழும் எச்சூழலாயினும் அங்கு எமது மொழி, பண்பாடு ஆகியவற்றை பேணிக் காத்து தமிழினத்தை மேலோங்கச் செய்வதில் அனைவருக்கும் பங்கு உள்ளது. உலகின் எங்கு வாழ்ந்தாலும் நாம் அனைவரும் தமிழ்த் தாய் மக்களின் பிள்ளைகள் என்பதை உணர்ந்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சி, துயரம் என்று அனைத்திலும் பங்கு கொண்டு ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்று நாம் விரும்புக…
-
- 0 replies
- 480 views
-
-
நாகர்கோயிலில் ஆலயம் மற்றும் வீடுகள் சேதம் தரைமட்டம்: ஆலய நிர்வாகஸ்தர்கள் தகவல் யாழ். வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் பாதுகாப்பு வலயமாக உள்ள நாகர்கோயில் பகுதியில் உள்ள பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தை நேற்று செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட படைத்தரப்பு அனுமதி வழங்கியிருந்ததின் பேரில் ஆலய நிர்வாகஸ்தர்கள் குழு படையினரால் அழைத்துச் செல்லப்பட்டது. இப்பிரதேசத்திலிருந்து கடந்த 2000 ம் ஆண்டு மக்கள் வெளியேறிய பின்னர் அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டது. இதன் பின்னர் சுமார் 10 ஆண்டுகளில் சமாதான ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த காலப்பகுதியில் மாத்திரம் இரண்டொரு தடவை ஆலயத்தைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டது. அதன் பின்னர் சுமார் 4 வருடங்களின் பின்னர் இந்த அனுமதி வழங்கப்ப…
-
- 1 reply
- 761 views
-
-
இதழியல் துறையில் சிறந்த செயற்பாடுகளுக்கான விருது வழங்கும் விழா கொழும்பில் செவ்வாயன்று இரவு இடம்பெற்ற போது "உதயன்" நிறுவனத்துக்கு இந்த விருது வழங்கப்பட்டது. 'Uthayan' honoured with the highest award for defending press freedom in Sri Lanka இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கைப் பத்திரிகை நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்து நடத்திவரும் - இதழியல் துறையில் சிறந்த செயற்பாடுகளுக்கான - பத்தாவது விழா கொழும்பு மவுண்ட்லவேனியா ஹொட்டலில் நடைபெற்றது.2008 ஆம் ஆண்டில் சிறந்த இதழியல் பெறுபேறுக்கான இந்த விருது வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக இந்தியாவின் பிரபல்யமான சமூக செயற்பாட்டாளர் திருமதி அருண் றோய் பங்குபற்றினார்.இந்த விருது வழங்கும் நிகழ்வில் முக்கிய அம்சமாக இலங்…
-
- 1 reply
- 823 views
-
-
சுயாதீன இணயத்தள ஊடகமான 'லங்கா நியூஸ் வெப்' இணையத்தளத்தை பார்வையிட முடியாதவாறு அரசு தடுத்துள்ளதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா, இந்த விடயத்தில் ஊடகத்துறை அமைச்சுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 433 views
-
-
சீனா மற்றும் பாகிஸ்தானிடம் இருந்து ஆயுதக் கொள்வனவுக்காக மேற்கொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசு ரத்துச்செய்ததாக ரவைகள் உட்பட ஆட்டிலறி எறிகணைகள் என சுமார் 200 மில்லியன் டாலர் பெறுமதியான ஆயுதங்களை இவ் இரு நாடுகளில் இருந்து இறக்குமதிசெய்ய, இலங்கை அரசு ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மே மாதம் 18ம் திகதியுடன் போர் முடிவுக்குவந்ததால், இனி ஆயுதங்கள் தேவையில்லை எனக் கூறி இலங்கை அரசு அந்த ஒப்பந்தங்களை ரத்துச் செய்துள்ளது. இலங்கை தற்போது அன்னியச் செலாவணிக் கையிருப்பை உறுதிசெய்ய சர்வதேச நாணய நிதியத்திடம் 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை கோரியுள்ள நிலையில், மேலும் 50,000 பேரை படையில் இணைக்கும் நடவடிக்கையும் ஆரம்பமாகியுள்ளதால், பல மேற்கு நாடுகள் அதிருப்த்தி…
-
- 0 replies
- 594 views
-