ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142838 topics in this forum
-
எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிக்க கொள்கை ரீதியான தீர்மானம் - ஜனாதிபதி ரணில் Published By: DIGITAL DESK 5 14 MAR, 2023 | 11:43 AM (எம்.மனோசித்ரா) எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், அதற்கான முறையான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று திங்கட்கிழமை (13) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தேவைக்காக எரிபொருள் இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு தமத…
-
- 12 replies
- 976 views
- 1 follower
-
-
Published By: VISHNU 07 JUL, 2023 | 04:10 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) குருந்தூர் மலையில் இருந்து எம்மை வெளியேற்றிய முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் அவருக்கு இல்லை. அத்துடன் இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை நீதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக நீதிபதிகளும் செயற்படுகிறார்கள். ஆகவே பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்க சிங்கள மக்கள் ஒன்றிணைய வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழம…
-
- 9 replies
- 1.2k views
- 1 follower
-
-
10 JUL, 2023 | 03:23 PM (நா.தனுஜா) தண்டனைகளிலிருந்து விடுபடும்போக்கை மேலும் ஆழப்படுத்தக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உருவாக்கம் குறித்த ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கையிடம் கேள்வி எழுப்பவேண்டுமென சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம், இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு மற்றும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம் ஆகிய மூன்று அமைப்புக்களும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளன. அதில் அவ்வமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ள முக்கிய …
-
- 1 reply
- 17.2k views
- 1 follower
-
-
11 JUL, 2023 | 07:06 AM இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா திங்கட்கிழமை (10) இரவு இலங்கையை வந்தடைந்துள்ளார். இரு நாட்களுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி இந்தியா செல்கின்றார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். இதேவேளை, கடற்றொழில் அமைச்சர் ட…
-
- 1 reply
- 245 views
- 1 follower
-
-
போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகம் தொடர்பில் விசாரணை! வவுனியா தேக்கவத்தையில் திறந்து வைக்கப்பட்ட போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில் விசாரணை செய்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக கூறியுள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் நலன் சார்ந்து உருவாக்கப்பட்ட போராளிகள் நலன்புரிச் சங்க அலுவலகம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. அலுவலகம் திறக்கப்பட்ட போது, அன்டன் பாலசிங்கம், தமிழ்ச் செல்வன், அரசியல்துறைத் தலைவர் சிவகுமார், ஆகி…
-
- 0 replies
- 383 views
-
-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடிதம்! ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இந்தியப் பிரதமருக்கான இக்கடிதத்தை யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் அக்கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் கையளித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த மாத இறுதியில் இந்தியாவிற்கு விஜயம் செய்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். இந்நிலையில் ஈழத் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் அரசியல் தீர்வுகளை சுட்டிக்காட்டி இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்…
-
- 2 replies
- 277 views
-
-
Published By: RAJEEBAN 23 JUN, 2023 | 05:09 PM இலங்கையின் உள்நாட்டு மோதல்களின் போதுகாணாமல் போனவர்களின் உடல்கள் காணப்படலாம் என சந்தேகிக்கப்படும் பாரிய மனித புதைகுழிகள் குறித்து இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என ஐந்து மனித சிவில் சமூக அமைப்புகள் வேண்டுகோள்விடுத்துள்ளன. கடந்தகால குற்றங்களை கையாள்வது குறித்து இலங்கை அரசாங்கம் உண்மையான தீவிரமான ஆர்வத்தை கொண்டிருந்தால் அனைத்து மனித புதைகுழிகளையும் சர்வதேச நிபுணர்களின் மேற்பார்வையில் இலங்கை அரசாங்கம் தோண்டவேண்டும் என ஐந்து சிவில் சமூக அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. மனிதபுதைகுழிகள் குறித்து கடந்தகாலங்களில் இடம்பெற்ற விசாரணைகள் குறித்து முழுமையான அற…
-
- 8 replies
- 18k views
- 1 follower
-
-
10 JUL, 2023 | 04:57 PM (நா.தனுஜா) அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கைகள் இறுக்கமாக்கப்பட்டுள்ள நிலையில், படகுகள் மூலம் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவோர் அவர்களது நாட்டுக்கே திருப்பியனுப்பப்படுவதுடன் அவர்களிடம் தண்டப்பணமும் அறவிடப்படும் என்றும், எனவே உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடவேண்டாம் என்றும் அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அரசாங்கங்கள் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளன. இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்வோரின் எண்ணிக்கை கடந்த காலங்களில் சடுதியாக அதிகரித்ததையடுத்து, அதனைத் தடுப்பதற்குரிய கூட்டிணைந்த நடவடிக்கைகளை இலங்கையும் அவுஸ்திரேலியாவும…
-
- 1 reply
- 401 views
- 1 follower
-
-
பசில் குழுவினரை சுத்தப்படுத்தும் முயற்சிகளைத் தோற்கடிக்க வேண்டும் : சஜித் பிரேமதாச! தெரிவுக்குழுவின் தவிசாளராக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் நியமிக்கப்பட்டுள்ள பின்னணியில் இது வெறுமனே பேச்சுக்களுடன் மட்டுப்படுதப்படும் விடயம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எதிர்க்கட்சி ஒன்றியத்தின் வாராந்த செயற்குழுக் கூட்டம் இன்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த வார நாடாளுமன்ற அமர்வை நோக்கும் போதும் பசில் ராஜபக்சவின் கும்பல் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற மே…
-
- 0 replies
- 259 views
-
-
2022 ஆம் ஆண்டுக்கான அனுமதிப்பத்திரங்களின் நிபந்தனைக்கு இணங்காத காரணத்தினால், 15 பணம் மாற்றுபவர்களின் அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்காமல் இருக்க இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது. அதற்கமைய பின்வரும் நிறுவனங்களின் உரிமங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/262339
-
- 1 reply
- 599 views
- 1 follower
-
-
பொருளாதார நெருக்கடி இலங்கை மக்களைப் பாதிக்கவில்லை : எரிக் சொல்ஹெய்ம்! இலங்கை மக்களுக்கே உரிய மிக கடினமான நெருக்கடிகளில் இருந்து மீளும்திறன் காரணமாக கடந்த வருடத்தின் பொருளாதார நெருக்கடி இலங்கையின் முதுகெலும்பை முறிக்கவில்லை என நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இணையவழி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் கடந்த வருடம் அசாதாரண பொருளாதார நெருக்கடி ஏற்பட்டவேளை அது இலங்கை மக்களின் முதுகெலும்பை முறிக்கும் என பலர் நினைத்தனர் என எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். எனினும் இலங்கை மக்களிற்கே உரிய நெருக்கடியிலிருந்து மீளும் திறன் காரணமாக இது சாத்தியமாகவில்லை என அவர் ச…
-
- 4 replies
- 365 views
- 1 follower
-
-
வீணடிக்கப்படும் இரணைமடுக் குளத்தின் நீர் : அதிகாரிகள் அசமந்தம்! கிளிநொச்சி, இரணைமடு குளத்தின் நீர் விவசாயப் பண்பாட்டுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், குறித்த நீரினை விவசாயிகள் வீண் விரயம் செய்து வருகின்றமையை அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இரணைமடுக் குளத்தின் கீழ் விவசாயத்தை மேற்கொள்ளும் பன்னங்கண்டி காமக்கார அமைப்பிற்கு உட்பட்ட பரந்தன் முல்லை வீதியின் நான்காவது மைல்கலலை; அண்மித்த பகுதியில் உள்ள நெல் வயல்களுக்கு பாய்ச்சப்படுகின்ற நீரையே சிலர் வீண் விரயம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், விவசாயம் மேற்கோள்ளாத வயல்களுக்கும் அநாவசியமாக நீரினை பாய்ச்ச்சி விரயமாக்குவதும் அவதானிக்க முடிகின்றது. இர…
-
- 5 replies
- 842 views
-
-
அதிக சம்பளம் கொடுத்தால் இலஞ்சம் வாங்க மாட்டார்கள் : மஹிந்தானந்த அறிவுரை! இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரித்து வழங்கினால் அவர்கள் வேறு வழிகளில் இலஞசம் பெற மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார். இன்றைய நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எம்மை நோக்கி எதிரணியினர் இன்று திருடர்கள் என்று கூறுகிறார்கள். 2015 இலிருந்து 2020 வரை நாமும் அவர்களை பார்த்து திருடர்கள் என்றுதான் கூறினோம். இப்படி மாறி மாறி குறைக்கூறிக் கொண்டிருக்காமல், நாம் அனைவரும் ஒன்றிணைந்து திருடர்கள் நுழையாதவாறு…
-
- 4 replies
- 300 views
-
-
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறலுக்கு எதிராக சக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்குரல் எழுப்ப வேண்டும் adminJuly 10, 2023 இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக வடக்கு கிழக்கின் சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக தலைவர்களுக்கும் – தமிழக மக்களுக்கும் தெளிவுபடுத்த முன்வர வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அமைச்சின் ஊடக பிரிவு அனுப்பியுள்ள செய்தி குறிப்பிலையே ஒரு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை கடல் பரப்பில் அத்துமீறல்களில் ஈடுபடுவது தமிழக கடற்றொழிலாளர்களே அன்றி, இலங்கை கடற்படையினர் அல்ல ,நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி எல்லை தாண்டி சட்ட விரோத தொழில் முறையான இழுவைமட…
-
- 3 replies
- 353 views
- 1 follower
-
-
நவாலி படுகொலை நினைவேந்தல் யாழ்ப்பாணம், நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமானத் தாக்குதலின் 28 ஆம் ஆண்டு நினைவு தினமானது நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு கூரப்பட்டது. இதன் போது அங்கு பங்குத்தந்தையின் தலைமையில் விசேட வழிபாடுகளும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு அவர்களது உறவினர்களும் பொதுமக்களும் மலர் தூவி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும், நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது, விமானப்படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசின. …
-
- 2 replies
- 363 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 10 JUL, 2023 | 04:49 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் வடக்கு பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் விசேட அதிரடிப் படையினரால் வெடிபொருட்கள் பல மீட்கப்பட்டுள்ளன. இன்று திங்கட்கிழமை (10) காலை விசேட அதிரடிப் படையினரால் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் பெரிய பரா-13, சின்ன பரா - 01, 82MM மோட்டார் - 49, 60MM மோட்டார் - 01, ஆர் பி ஜி - 6, கைகுண்டு- 56, தோட்டாக்கள் ஒரு தொகை என பல வகை வெடிபொருட்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/159688
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
தமிழகத்தின் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தினசரி நேரடி விமான சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் தினத்தந்தி நாளிதழ் செய்தி வௌியிட்டுள்ளது. இந்தியாவின் அலையன்ஸ் எயார் (Alliance Air) நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கான நேரடி விமான சேவைகளை ஆரம்பித்திருந்தது. எனினும், கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்னை – யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் விமான சேவைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கமைய, 2022 டிசம்பர் 12 ஆம் திகதி முதல் சென்னை – யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவைகளை இந்தியாவின் அலையன்ஸ் எயார் நிறுவனம் மீள ஆரம்பித்தது. திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய ந…
-
- 3 replies
- 725 views
- 1 follower
-
-
தமிழர்களுக்கான வரைபில் மூவினத்தவரும் உள்ளடக்கப்பட வேண்டும் : பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்! ஈழத் தமிழர்களுக்கு தீர்வாக வரையும் வரைபில் முஸ்லீம், சிங்கள, மலையக மக்களுக்கும் உள்ளடக்கப்பட வேண்டும் என பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் குறிப்பிட்டுள்ளார். மக்கள் சிந்தனை மையம் தமிழ் மக்களின் தீர்வாக அமைக்கப்படும் வரைபு தொடர்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள சிவில் அமைப்புக்களுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்கில் ஈழத் தமிழர்களுக்கு சார்ந்து எவ்வளவு முதன்மை படுத்தப்படுகின்றதே அதேயளவு முஸ்லீம், சிங்க…
-
- 0 replies
- 132 views
-
-
அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு தேர்தல் நடைபெறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். “இந்த ஆண்டு தேர்தல்கள் இல்லை. 2024 ஆம் ஆண்டுதான் தேர்தல் . 2024 ஆம் ஆண்டு முதல் தேர்தல் ஜனாதிபதித் தேர்தலாக இருக்கும். அதற்காகத்தான் நாங்கள் தயாராகி வருகிறோம். ரணில் விக்கிரமசிங்கவை தேர்தல் நடத்த வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். பொதுவாக உலகில் ஒரு நாடு வீழ்ந்தால் எதிர்கட்சி தலைவர் பதவி ஏற்பார் ஆனால் இலங்கையில் …
-
- 0 replies
- 451 views
- 1 follower
-
-
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த 7 பேரில் இலங்கையைச் சேர்ந்த சாந்தன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழக ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. சாந்தன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். எனினும் அவர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோருடன் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் சாந்தன், சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த கடிதத்தில், இலங்கை குடிமகனான தாம், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி…
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடல்ல ; சரத் வீரசேகர தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் - மஹிந்தானந்த அளுத்கமகே 10 Jul, 2023 | 10:47 AM (எம்.மனோசித்ரா) இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் உரிய நாடல்ல. இது அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் சொந்தமானது. எனவே, பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதோடு, அனைத்து இன மக்களுடனும் ஒற்றுமையாக வாழப் பழக வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வலியுறுத்தினார். இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை மறந்துவிட வேண்டாம் என்று கடந்த வாரம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போ…
-
- 0 replies
- 214 views
-
-
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு இந்தியா கட்டாயம் பங்களிக்க வேண்டும் ; மலையக மக்களின் பிரச்சினை குறித்து மோடிக்கு நாம் கடிதம் அனுப்புவோம் - மனோ கணேசன் 10 Jul, 2023 | 11:30 AM (எம்.மனோசித்ரா) இலங்கையிலுள்ள தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு இந்தியா தனது பங்களிப்பை வழங்க வேண்டியது கட்டாயமாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் டில்லி விஜயத்தின்போது, வெறுமனே விருந்தோம்பலை மாத்திரம் வழங்காமல், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு மலையக மக்களின் ப…
-
- 0 replies
- 167 views
-
-
தமிழருக்கு தீர்வென்றால் இந்திய நலனுக்கு ஆதரவு: வலியுறுத்தும் கஜேந்திரன் எம்.பி சுயநிர்ணய அடிப்படையில் இந்தியா, தமிழ் மக்களுக்கு தீர்வொன்றை பெற்றுத் தர ஆதரவளித்தால், இந்திய நலனுக்காக நாம் பாடுபடுவோம் என பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பப்படவுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், 13 ஆவது திருத்தச்சட்டம் தமிழருக்குத் தீர்வல்ல எனவும், ஒற்றையாட்சியை தாண்டி தமிழ் தேசம், இறமை, சுயநிர்ணய அடிப்படையில் இந்தியா தமிழ் மக்களுக்கு தீர்வொன்றைப் பெற்றுத் தர வேணடும் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நேற…
-
- 0 replies
- 192 views
-
-
எதிர்வரும் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில், தரம் ஒன்பதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு, வெள்ளிக்கிழமை பாடசாலை நிறைவடைந்த பின்னரும், ஞாயிற்றுக்கிழமை முழுவதும், தனியார் வகுப்புக்களை நடத்துவதை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரனின் தலைமையில் இன்று(9) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடலில், சுகாதாரம் மற்றும் கல்வித்துறைசார் அதிகாரிகள், மதத் தலைவர்கள், காவல்துறையினர், தனியார் கல்வி நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக, வாரத்தில் ஏழு நாட்களும் ஓய்வின்றிக் கல்விச் செயற்பாட்டில் …
-
- 3 replies
- 473 views
- 1 follower
-
-
மல்லாவி பாலிநகர் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி! மல்லாவி காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் சிலர் நுழைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பாலிநகர் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நீதவான் விசாரணைக்காக சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் காவற்துறைப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களை கைது செய்ய காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://globaltamilnews.net/2023/192847/
-
- 0 replies
- 233 views
-