Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நேபாளத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களை வாங்கியும் விற்றும் மிகக் கேவலமான செயலில் இந்தியா ஈடுபட்டுள்ளது ‐ மாவோயிஸ்ட் தலைவர் ‐ பிரசண்டா: நேபாளத்தில் புதிய அரசொன்றை அமைப்பதற்கான சதித்திட்டத்திற்காக நேபாளத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களை வாங்கியும் விற்றும் மிகக் கேவலமான செயலில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக மாவோயிஸ்ட் தலைவரும் பதவி விலகியுள்ள முன்னாள் பிரதமருமான பிரசண்டா கடுமையாகக் குற்றஞ் சாட்டியுள்ளார். நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு இந்தியாவை சாடியுள்ள பிரசண்டா, நேபாள எம்.பி.க்களை வாங்கியும் விற்றும் நேபாளத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளும் தலைமைத்துவம் வகிப்பதற்கு ப…

    • 5 replies
    • 1.4k views
  2. எங்களிடம் வாக்கு இல்லை;வாக்கரிசிதான் இருக்கிறது:சீமான் ஆவேசப்பேச்சு புதுச்சேரி மாநிலத்தில் திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கத்தின் சார்பில் இன்று மதியம் 1 மணிக்கு பிரச்சார பொதுக்கூட்டம் ஆரம்பித்தது. மாலை 5 மணி வரை இப்பொதுக்கூட்டம் நடைபெற்றது. இயக்குநர் பாரதிராஜா இக்கூட்டத்திற்கு தலைமையேற்பதாக இருந்தார். ஆனால் அவர் நேற்று சென்னை வந்த சோனியாகாந்திக்கு கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனால் அவர் இக்கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. இயக்குநர்கள் சீமான், ஆர்.கே.செல்வமணி,கவுதமன்; கவிஞர்கள் அறிவுமதி, சினேகன் உட்பட திரையுலகினர் பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். ச…

    • 0 replies
    • 1.3k views
  3. சிறிலங்கா அரசாங்கம், வெளிநாட்டு நிதிகளைப் பெறுவதில் குறியாக இருப்பதாக, இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரித்தானிய "சனல்4" ஊடகவியலாளர் நிக் பெட்டன் வோல்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தினால் ஏராளமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். இலங்கையில் ஊடகச் சுதந்திரம் என்பது சுத்தமாக இல்லை. தம்மை நாடுகடத்தியமை கூட, முறையாக செய்திருக்க வேண்டும். ஆனால் தம்மை சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அழைத்து அச்சுறுத்தியதாக நிக் பெட்டன் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்கா தொடர்பில் எந்த செய்தியினையும் விருப்பப்படி வெளியிட முடியும். ஆனால் அது இலங்கையில் வைத்து இல்லை. வெளிநாடுகளில் வைத்து என தம்மை அவர் அச்சுறுத்தியதாக வோல்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்க…

    • 1 reply
    • 1k views
  4. பேர்லினில் நடைபெற்ற பசுமைக்கட்சியின் மாநாட்டில் யேர்மனியில் உள்ள கெம்பன் நகர பிரதிநிதியான இலங்கைத் தமிழர் திரு ஜெயரட்னம் கனிசியஸ் கலந்துக்கொண்டு சிறிலங்கா அரசின் தமிழருக்கெதிரான மனித உரிமை மீறல்கள் பற்றி பேசுகையில் சிறிலங்காவில் தமிழ் இனப் பேரழிவு நடைப்பெற்றுக்கொண்டு இருப்பதாகவும் இதனை வெளியுலகம் அறிந்துக்கொள்ளாதிருப்பதாக ஊடகவியளாளர்கள் சுதந்திரமாக சென்று செயல்படுவதை சிறிலங்க அரசு நிறுத்தி உள்ளதையும் அறிவித்தார். சர்வதேச நாடுகள் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் எனக் கோரியபோதும் அதனையும் சிறிலங்கா அரசு மறுத்துள்ளது எனக் கூறியவர் சிறிலங்காவில் நடைபெறும் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரி அவசரவிண்ணப்பம் கொடுத்…

    • 0 replies
    • 638 views
  5. லங்கா காடியன் இணையத்தளத்தின் ஆசிரியர் நிலந்த இலங்கமுவ கடந்த வெள்ளிக் கிழமை ரகசிய காவற்துறையினரால் அழைக்கப்பட்டு 5 மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு சார்பாக சிலர் தெரிவித்த கருத்துக்களை இணையத்தளத்தில் வெளியிட்டமை குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்;டுள்ளன. இந்த நிலையில் இணையத்தளத்திற்கு தகவல்கள் கிடைக்கும் விதம் பற்றி லங்கா காடியன் ஆசிரியரிடம் விசாரணை நடத்தியதாக ரகசிய காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். GTN

    • 0 replies
    • 601 views
  6. எதிர்க்கட்சித் தலைவர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விஜயம் செய்வது, அரசாங்கத்தை போல் சர்வதேசத்திடம் பிச்சை கேட்பதற்கு அல்ல எனவும் அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்த விடயங்களை முன்வைப்பதற்காகவே அவர் அங்கு விஜயம் செய்வதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் பணிமனையில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகத்திற்கும், ஊடக சுதந்திரத்திற்கும், மனித உரிமைகளுக்கும், சட்டம் மற்றும் சமாதானத்திற்கும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அத்துடன் அரசாங்கம் அரசியல் சாசனத்தை மீறி செயற்பட்டு வருகின்றது. யுத்தத்தை காரணம் காட்டி அரசாங்கம் மீறிவரும்…

    • 0 replies
    • 523 views
  7. 'போர்முனைக்குப் போய் வந்தேன்...' தி.மு.க. கூட்டணியை மூச்சுத் திணற வைக்கிறது ஈழ விவகாரம். 'ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்த கூட்டணி' என எதிர்க்கட்சிகளால் சாடப்படும் தி.மு.க. கூட்டணியில் இருந்தே ஒருவர் தமிழகத் திலிருந்து கடல் மார்க்கமாக வன்னிக் காடுகளுக்குச் சென்று புலிகளின் முக்கிய தளபதிகளைச் சந்தித்து திரும்பியிருக்கிறார்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் தளபதியாகவும் அவர் நடத்தும் தாய்மண் பத்திரிகையின் பொறுப்பாசிரியராகவும் இருக்கும் வன்னி அரசுதான் இந்த சர்ச்சைப் பயணத்துக்கு சொந்தக்காரர். உளவுத் துறை வன்னி மீது ஒரு கண் வைத்திருக்கிற நிலையில், நாம் வன்னி அரசுவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். ''தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கத்தினரை சந்திக்…

    • 6 replies
    • 2.4k views
  8. கடந்த மே 9, மற்றும் 10 ஆகிய இரு நாட்களின் இரவு வேளைகளில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான மோட்டார் எறிகணை தாக்குதல், ஆட்டிலெறி தாக்குதல்கள், தமிழீழ விடுதலை புலிகளால் நடாத்தப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படும் கூற்றுக்களை, தமிழீழ விடுதலை புலிகள் முற்றாக மறுத்துள்ளனர்.சிறிலங்கா இராணுவத்தினரால்,யுத்த வரலாற்றின் இரத்தக்கரை படிந்த ஒரு அத்தியாத்தை தோற்றுவித்துள்ள, இந்த தாக்குதல் நடவடிக்கைகளில் பாரிய இனப்படுகொலை நடைபெற்றிருப்பதை நிரூபனம் செய்துள்ளது. சர்வதேச சமூகத்திடமும், உலகளாவிய அரசாங்களிடமும் எமது அழுத்தமான கோரிக்கை தற்போது மீண்டு முன்வைக்கிறோம், சிங்கள பேரினவாதத்தினால் உச்சநிலையில் அரங்கேறிக்கொண்டிருக்கும் இந்த பாரிய இனவழிப்பினை தடுத்து நிறுத்துங்கள் என தமிழீழ விடுதலை ப…

    • 0 replies
    • 1.2k views
  9. ஜெயலலிதாவை 'நம்பும்' திமுக!! ''தமிழகத்தில் பிரதான கட்சிகளான அதிமுகவும் திமுகவும் காங்கிரசும் இலங்கை விஷயத்தில் புரிதலோடு நடந்து கொண்டுள்ளன. இதனால் தான் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெடாமல் அமைதி நீடித்து வருகிறது'' என்று ஒரு பேட்டியில் மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். அதாவது, இலங்கை விஷயத்தில் அதிமுகவும் தங்களைப் போலவே அமைதி காத்ததால் புளகாங்கிதம் அடைந்து அவர் சொன்ன கருத்துக்கள் இவை. அதிமுக இப்படியே இருந்துவிடும், பாமக, மதிமுக, திருமாவளவன், சில சினிமாக்காரர்கள், சில பெரியாரிஸ்டுகள் மட்டுமே இலங்கை விவகாரத்தில் கூப்பாடு போடப் போகிறார்கள். இவர்கள் கூச்சல் போடுவதால் நமக்கு தேர்தலில் எந்த பாதிப்பும் இருக்காது என்ற பெரும் நம்…

    • 0 replies
    • 1.3k views
  10. கைதான 'சனல்4'ஊடகவியலாளர்கள் மூன்று பேரும் நாடு கடத்தப்பட்டனர் வீரகேசரி நாளேடு 5/10/2009 10:18:29 PM - திருகோணமலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பிரித்தானியாவைச் சேர்ந்த 'சனல்4' தொலைக்காட்சி நிறுவன த்தைச் சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்களும் நேற்று ஞாயிற்றுக் கிழமை நாடு கடத்தப்பட்டனர். 'செனல் 4' தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான நிருபரான நிக் பட்ரன் வோல்ஸ், அதன் தயாரிப்பாளர் பெசி டூ, படப்பிடிப்பாளர் மற் ஜஸ்பர் ஆகியோரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களாவர். வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுடைய முகாம்களின் நிலைமை தொடர்பான சர்ச்சைக்குரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரித்தாகக் கூறப்படும் இவர்கள் மூவரும் அரசாங்கத்தின் நற்பெயருக்குக் களங்கத்த…

    • 4 replies
    • 837 views
  11. ஐ.நா.வில் இலங்கை தொடர்பான அமர்வு இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ளபோதும் அது பாதுகாப்பு சபையின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டதாக அமையாது என்று ஐ.நா.விலுள்ள ரஷ்யத் தூதுவர் விராலி சேர்க்கின் தெரிவித்திருக்கிறார். கடந்த காலங்களில் போன்று ஐ.நா.வின் அடித்தளத்திலேயே இன்றைய அமர்வும் உத்தியோகப்பற்றற்ற முறையில் ஆராயப்படவிருப்பதாக ஐ.நா.விலுள்ள இன்னர் சிற்றி பிரஸ் கூறியுள்ளது. இதேவேளை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையினால் நடத்தப்படுகின்ற உத்தியோகபற்றற்ற ஒன்று கூடல்களின் மூலம் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பதால், உடனடியாக உத்தியோக பூர்வமாக பாதுகாப்பு சபை கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என நான்கு சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தியிருந்தன. சர்வ…

    • 0 replies
    • 666 views
  12. இலங்கையுடனான பலபரீட்சையில் இந்தியா மீண்டும் தோல்வியுறுமா? வடக்கில் அகதிகளாக்கப்பட்ட இரண்டு இலட்சம் மக்களுக்கு, நிவாரண உதவிகள் வழங்கும் விடயத்தில் மேற்கத்தேய நாடுகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான நெருக்கடி தொடர்கின்ற போதிலும் இந்தியாவும் ஜப்பானும் உடனடியாக நிவாரண உதவியை வழங்க முன்வந்துள்ளன. மேற்கத்தேய நாடுகளும் ஐ.நா.வும் வடக்கின் அகதிகளுக்கான உதவிகளை மேற்கொள்கையில் அதனை சுதந்திரமாக மேற்கொள்ள ஐ.நா.அமைப்புகளுக்கும் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளுக்கும் இடமளிக்க வேண்டும் எனக் கோரி வருகின்றன. ஆனால் உதவி கோரும் இலங்கை அரசாங்கம் அனைத்து உதவிகளும் இலங்கை அரசாங்க அமைப்புகளினூடாகவே மேற்கொள்ளப்படும் எனவும் பிற அமைப்புகளுக்கு வாய்ப்பளிக்கப்பட மாட்டாது எனத் திட்ட வட்…

    • 0 replies
    • 1k views
  13. வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருபவர்களில் சிலர் எரிகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அவ்வைத்தியசாலையில் பணியாற்றும் பிரான்ஸ் வைத்தியர்கள் கூறியிருப்பதாக ஏ.எவ்.பி. செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச சட்டங்களுக்கு அமையத் தடைசெய்யப்பட்ட இரசாயணக் குண்டுத் தாக்குதல்களால் ஏற்பட்ட எரிகாயங்களாக இது இருக்கலாமென அந்தச் செய்திச் சேவை தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. கடந்த இரண்டு கிழமைகளில் 72 வைத்தியர்கள் மற்றும் தாதிமாரைக் கொண்ட வைத்தியக் குழு இடம்பெயர்ந்த 700 பேருக்குச் சிகிச்சையளித்திருப்பதுடன், இவர்களில் 100 பேர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக ஏ.எவ்.பி. தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களின் தோல்கள் மற்றும் தசைகளைப் பார்க்கும்போது …

    • 2 replies
    • 1.2k views
  14. அரச போய்பிரச்சரத்தினை புலிகள் மறுப்பு ;பேரவலத்தை நிறுத்த சர்வதேச சமூகத்திடம் உடனடியாக தலையிடுமாறு அழைப்பு Source Link: LTTE Denies SLA Allegations and Calls For Urgent Intervention to Prevent Further Massacres

  15. எங்கள் தனித் தாய்நாட்டிற்கான உங்கள் ஆதரவிற்கு நன்றி அன்புள்ள செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கு, ஈழத் தமிழர்களுக்காக தாய்நாடு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற உங்களின் துணிச்சலான நிலைப்பாட்டினால் ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பில் (Tஅமில்ச் fஒர் ஓபம) இருக்கும் நாங்கள் பெருமகிழ்ச்சியும் ஊக்கமும் அடைந்துள்ளோம். அத்தகைய நோக்கத்திற்காகத்தான் தமிழர்கள் கடந்த 36 வருடங்களாக போரிட்டும் 61 வருடங்களாக மடிந்தும் கொண்டிருக்கின்றனர். ”தமிழ் பாதுகாவலர்” “Tகெ Pரொடெcடொர் ஒf தெ Tஅமில்ச்” என்ற பட்டத்தை, உங்களை யாரும் இதுவரையில் இவ்வாறு விளிக்கவில்லையெனில், உங்களுக்கு முதன்முதலாக சூட்டுகிறோம். நீங்கள் தமிழகத்தில் பேசும் பேச்சுகள் இந்தியாவிலுள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல ஈழத்தில் துன்புற்ற…

  16. வட இலங்கையில் குண்டுகள் வீழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கம் விடுத்த அழைப்பு குறித்து ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தற்போதும் கவனமாக பரிசீலனை செய்து கொண்டிருக்கும் அதே சமயம் . "பாதுகாப்பதற்கான பொறுப்பு' ( Responsibility to Protect (R2P)) தொடர்பான பேச்சு ஐ.நா. மட்டத்தில் இடம்பெறுவதாக அங்குள்ள இன்னர் சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை வரவேற்பு நிகழ்வொன்றில் பான் கீ மூனும் "பாதுகாப்பதற்கான பொறுப்பு' (ஆர்2பி) விடயத்திற்கான பான் கீ மூனின் விசேட ஆலோசகர் எட்லக்கும் கலந்து கொண்டனர். இந்த "பாதுப்பதற்கான பொறுப்பு' என்ற கொள்கையை எவ்விதம் இலங்கை விவகாரம் தொடர்பாக பிரயோகிக்க முடியும்? என்று லக்கிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேள…

  17. யுத்த குற்றத்தில் ஈடுபட்டு வரும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்கு தொடரப்பட வேண்டும்: PUCL இலங்கையின் வடக்கு பகுதியில் கொடூரமான யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக ஐ. நா. பாதுகாப்புச் சபை வழக்குத் தொடர வேண்டுமென முக்கிய இந்திய மனித உரிமை அமைப்புக்களில் ஒன்றான குடியுரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கையில் இடம்பெற்று வரும் இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் உடனடியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்பாவி பொதுமக்கள் நிலைகள் மீது இலங்கை அரசாங்கம் வான் மற்றும் ஆட்டிலறி தாக்குதல்களை நடத்தியமைக்கான அனேக சான்றுகள் இருப்பதாக அந்த அமைப்பு ச…

  18. வன்னியில் தமிழ்மக்களை இன அழிப்பு செய்தும் கண்மூடித்தனமான தாக்குதலை சிறிலங்கா படையினர் நேற்று முன்நாள் சனிக்கிழமை இரவு தொடக்கம் தொடர்ச்சியாக நடத்தி ஆயிரக்கணக்கில் உயிர்களைக் காவுகொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அனைத்துலக சமூகத்தின் பராமுகத்தை கண்டித்தும் அனைத்துலக நாடுகளில் மாபெரும் மக்கள் எழுச்சி மற்று கவனயீர்ப்பு போராட்டங்கள் தொடங்கியுள்ளன. அவுஸ்திரேலியாவில்... அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் உள்ள Binnalong Park Tonngabbie இல் இருந்தும் மெல்பேர்ண் நகரில் இருந்தும் ஊர்தி ஊர்வலம் தலைநகர் கன்பராவை நோக்கி நாளை செவ்வாய்க்கிழமை உரிமையை நிலைநாட்டுவதற்காக பயணிக்கின்றது. இந்த உரிமைப் போராட்டத்தில் கலந்துகொண்டு தாயகத்தில் சிங்கள அரசின் கொலைக்களத்தில் சிக்கி இருக்…

    • 0 replies
    • 375 views
  19. வன்னியில் இடம்பெறும் மனிதப் பேரவலத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு அனைத்துலக சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் தவறிவிட்டதால் கடந்த ஐந்து மாத காலத்தில் மட்டும் 10 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டும் 20 ஆயிரம் தமிழர்கள் காயமடைந்தும் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழக கள அலுவலக தலைமை அதிகாரி லோறன்ஸ் கிறிஸ்ரி, தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்துவதற்கு 'பாதுகாப்பதற்கான பொறுப்பு' (R2P) என்ற கோட்பாட்டைப் பயன்படுத்துமாறும் கோரியிருக்கின்றார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: சுமார் 1,30,000 மக்கள் அடைக்கலம் புகுந்திருக்கும் 'பாதுகாப்பு வலயம்' என வரையறுக்கப்பட்டுள்ள பகுதி மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா படையினர் தொடர்ச்ச…

    • 0 replies
    • 372 views
  20. இலங்கைத் தமிழரை பாதுகாக்க பாதுகாப்புச் சபையின் உடனடித் தலையீடு அவசியம். ஜப்பான் ஐ நா சபையின் நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக நிற்கவேண்டும். இலங்கைக்கு மிகப் பெரிய உதவி வழங்கும் நாடு என்ற வகையில் ஜப்பானின் கூடுதல் ஒத்துழைப்பு அவசியம் என்று நான்கு சர்வதேச நிறுவனங்களான HRW, ICG, Amnesty International, Global Centre for R2P என்பன ஒன்று சேர்ந்து ஜப்பானிற்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளன. அக்கடிதத்தில் இனியும் உலக நாடுகள் பாராமுகமாக இருந்தால் வரலாற்றில் மிகப்பெரிய தவறிழைத்து விடும் என்று கூறியுள்ளது Source Link: Four international organizations appeal to Japan to back UN action on SL

  21. இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக, சிறிலங்கா அரசு தலைமையில் மேற்கொள்ளப்படும் இன அழிப்பு வரலாறு நீண்டது. பல வடிவங்களில் முன்னெடுக்கப்படும் இந்த இன அழிப்பில் முதன்மையான வடிவமாக இருந்து வருவது நேரடியான படுகொலைகளாகும். இந்த படுகொலைகளின் அத்தியாயங்கள் தமிழ் மக்களின் மனங்களில் ஆழமான வடுக்களை ஏற்படுத்தியுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 345 views
  22. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு சிறிலங்கா இராணுவத்துக்குத் தேவையான உதவிகளை இந்தியா வழங்கி வருவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, புலிகளை அதன் பலம் பொருந்திய பகுதிகளில் இருந்து அழிப்பதற்காக இந்தியா வழங்கிய ஆதரவு முக்கியமானது எனவும் பேட்டியொன்றில் குறிப்பிட்டிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 426 views
  23. வன்னியில் 3 ஆயிரம் தமிழர்களை ஒரே இரவில் படுகொலை செய்ததனை ஒபாமா அரசாங்கத்தின் கவனத்திற்கு கெண்டு செல்லவும், மீதமுள்ள மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கமாறு அவரைக் கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியினை இன்று திங்கட்கிழமை வெள்ளை மாளிகை முன்றலில் தமிழர்கள் நடத்துகின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 278 views
  24. திடீர் முடிவெடுத்த கனேடிய மாணவர் சமூகம் நெடும்சாலையில் இறன்க்கி போரட்டம் நடத்துகின்றனர். http://www.youtube.com/watch?v=2hxT3ISoIXU

  25. மின் அஞ்சலில் வந்த செய்தி This is your actual chance to get your voice heard. The voice of Tamil people has been strangled silent, so we must shout for them! Jan Janayagam is running to become a Member of the European Parliament. Please vote for her! She will make sure that our voice will be heard. THIS WILL MAKE A DIFFERENCE!! There will not be another election for 5 years! By that time, how many thousands of our brothers and sisters will have died? The Eurpean Parliament banned the LTTE and have not done anything useful for the Tamils of Sri Lanka. This will make a difference!!!! If you havn't come down to the protests or anything, please, this is o…

    • 0 replies
    • 741 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.