ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142929 topics in this forum
-
செயல் திறன் மிக்க தாங்கள் - போலிக் காரணங்களினால் ஏற்பட்டிருக்கும் அனைத்துத் தடைகளையும் உடைத்தெறிந்து - 'தனித் தமிழ் ஈழம்' அமைத்து, தமிழர்களின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு நிலைபெற்ற புகழ் அடைவீர்கள் என அமெரிக்காவில் இயங்கும் தமிழகத் தமிழர்களையே பெருமளவில் உறுப்பினர்களாகக் கொண்ட உலகத் தமிழர் இயக்கம் (WTO) ஜெயலலிதாவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 376 views
-
-
செயல் திறன் மிக்க தாங்கள் - போலிக் காரணங்களினால் ஏற்பட்டிருக்கும் அனைத்துத் தடைகளையும் உடைத்தெறிந்து - 'தனித் தமிழ் ஈழம்' அமைத்து, தமிழர்களின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு நிலைபெற்ற புகழ் அடைவீர்கள் என அமெரிக்காவில் இயங்கும் தமிழகத் தமிழர்களையே பெருமளவில் உறுப்பினர்களாகக் கொண்ட உலகத் தமிழர் இயக்கம் (WTO) ஜெயலலிதாவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 351 views
-
-
இலங்கை தமிழர்கள் நலனில் மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்: ராகுல் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்தை ஆதரித்து பேசிய அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி, நான் தமிழகத்திற்கு வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். பத்திரிகை சந்திப்பில் எப்போது தமிழகம் வருவீர்கள் என்று கேட்டார்கள். விரைவில் வருவேன் என்று சொன்னேன். வளர்ச்சி திட்டங்களில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு காரணம் தமிழக மக்கள்தான். எங்கள் குடும்பத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் பெரிய தொடர்பு உள்ளது. எனது தந்தை இறந்தது தமிழகத்தில்தான். தமிழகத்தில் உள்ள தமிழகர்கள் மட்டுமல்ல. உலககெங்கும் உள்ள தமிழர்கள் அனைவரும் எங்கள் மனதிலே இடம் பிடித்திருக்கிறார்கள…
-
- 10 replies
- 1.7k views
-
-
இந்தியாவின் “வருங்காலப் பிரதமர்” ராகுல் காந்தி, கடந்த செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டிதான் இன்றைய பத்திரிகைகளின் முக்கியச் செய்தி. அந்தப் பேட்டிக்குள் இடம்பெற்ற முக்கியச் செய்தி ஒன்றும் உண்டு. பிகார் முதல்வர் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு, ஜெயலலிதா ஆகியோரைப் பற்றி போகிறபோக்கில் புகழ்ந்துரைத்தார் ராகுல். திறமையாளர்கள் யாராக இருந்தாலும் போற்றுகின்ற கண்ணியவானின் தோரணையில் இந்தப் பாராட்டு கூறப்பட்டிருந்தாலும், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியைக் குறி வைத்தே இது பேசப்பட்டிருக்கிறது என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியும். சில நாட்களுக்கு முன்னர் என்.டி.டி.வி சென்னையில் நடத்திய தேர்தல் விவாதத்தில் ஈழம் முக்கிய விவாதப் பொருளாக இருந்த்து. விவாதத்தின் இறுதிய…
-
- 65 replies
- 8.9k views
- 1 follower
-
-
விடுதலைப்புலிகள் அமைப்பை காப்பற்ற அமெரிக்காவின் இண்டர்சிடி பிரஸ் நிறுவனம், புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் கே.பியிடம் இருந்து பல மில்லியன் டொலர் ஒப்பந்தம் ஒன்றை பெற்றுள்ளமை குறித்து இலங்கை அரச தரப்புக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இண்டர்சிடி பிரஸ் நிறுவனம் இலங்கைக்கு மற்றுமொரு ஐக்கிய நாடுகள் தூதுவரை அனுப்புமாறு, ஐநா செயலாளரிடம் கோரியதன் மூலம் இது உறுதியாகி இருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. இந்த சர்வதேச நிறுவனம் விடுதலைப்புலிகளின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக 170 பக்கங்களை கொண்ட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாகவும் சிங்கள நாளிதழ் கூறியுள்ளது. இதேவேளை ஐக்கிய நாடுகளின் இராணுவ அதிகாரி விஜய் நம்பியா…
-
- 1 reply
- 874 views
-
-
பெரியார் திகவின் மீது காவல்துறை அடக்குமுறை: கொளத்தூர் மணி கண்டனம் பெரியார் திராவிடர் கழகத்தின் மீது காவல்துறை கையாண்டு வரும் அடக்குமுறை எல்லை மீறிச்சென்று கொண்டிருக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத் தமிழர் இனப் படுகொலைக்குத் துணை போகும் காங்கிரசை தோற்கடிக்கும் முழக்கத்தை முன்வைத்து பெரியார் திராவிடர் கழகம் நடத்தி வரும் பரப்புரையை முடக்குவதற்குத் தமிழகத் காவல்துறை கையாண்டு வரும் அடக்குமுறை எல்லை மீறிச்சென்று கொண்டிருக்கிறது. குறுந்தகடுகள், துண்டறிக்கைகள் பறிமுதல், குறுந்தகடுகள் வைத்திருந்த தோழர்கள் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் கைது, பிரச்சார வாகனம் பறிமுதல், பரப்பு…
-
- 0 replies
- 555 views
-
-
வேல்ட் விசன் நிறுவனத்தில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவத்துடன் புளொட் அமைப்பு உறுப்பினர்களுக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. வேல்ட் விசனுக்கு சொந்தமான பல கோடி ரூபா பெறுமதியான தொடர்பாடல் சாதனங்களை புளொட் உறுப்பினர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 40 புளொட் உறுப்பினர்களை வவுனியா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வவுனியாவில் இயங்கி வரும் வேல்ட் விசன் நிறுவனத்தின் கணனி மற்றும் தொலைத்தொடர்பாடல் சாதனங்களே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்தக் கொள்ளைச் சம்பவத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டதாக ஏற்கனவே தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கொள்ளையிடப்பட்ட உபகர…
-
- 0 replies
- 690 views
-
-
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 3,000 கர்ப்பிணத் தாய்மாரில் 350 பேர் அடுத்த மாதம் குழந்தைகளைப் பிரசவிக்கவிருப்பதாக சிறுவர்கள் மற்றும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பான ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிறுவனம் அறிவித்துள்ளது. இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில் கர்ப்பிணித் தாய்மார், பாலூட்டும் தாய்மார், கைக்குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான சுகாதார சேவைகளை வழங்குவதில் பாரிய சவால்களை எதிர்கொண்டிருப்பதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான மருத்துவத் தேவைகளுக்கு உதவிசெய்ய அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. கர்ப்பிணித் தாய்மாரில் 15 வீதமானவர்களுக்குப் பிரசவத்தின்போது இரத்தம் தேவைப்படலாமெனவும், சிலர் அதிதீ…
-
- 0 replies
- 689 views
-
-
வன்னியின் தற்போதைய போர்க்கள நிலைமைகள் தொடர்பாக களமுனையில் உள்ள தளபதிகளுடன் ஆராய்வதற்காக சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று சனிக்கிழமை அவசர பயணம் ஒன்றை மேற்கொண்டு வவுனியா சென்றிருந்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 332 views
-
-
தமிழர்களுக்கு எதிராக செயல்படும் கொங்கிரசு இளங்கோவன் வீடு முற்றுகை பலர் கைது தமிழுணர்வாளர்களை கொச்சைப்படுத்துவதும் தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதையே நோக்கமாக கொண்ட கொங்கிரசு கட்சியின் வேட்பாளர் ஈவிகேசு இளங்கோவனை கண்டித்து வீட்டை முற்றுகையிட்டு தமிழுணர்வாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தந்தை பெரியாரின் உண்மையான பேரன் நான் தான் என்றும் சீமான், பெரியார் சிறு வயதில் செய்த தவறுகளால் பிறந்திருக்கலாம் என்றும் முத்துக்குமரன் என்றால் யார் என்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசிய திமிர்த்தனமான பேச்சு உலகெங்கும் வாழும் தமிழர்கள் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்நிலையில் 48 மணி நேரத்தில் இப்பேச்சுக்காக இளங்கோவன் மன்னி்ப்புக் கேட்க வேண்டும் …
-
- 0 replies
- 648 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் மனித உரிமைகள் நிறுவனத்தின் திட்ட முகாமையாளான ஷ்ரீபன் சுந்தரராஜ் வெள்ளை வானில் வந்த ஆயுதக் குழுவினால் கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகில் நேற்று முன்நாள் இரவு கடத்திச் செல்லப்பட்டுள்ளார். கொழும்பு கொள்ளுப்பிட்டி அலோ அவெனியுவில் இயங்கி வரும் மனித உரிமைகள் நிறுவனத்தின் திட்ட முகாமையாளரான 39 வயதுடைய சின்னவன் ஷ்ரீபன் சுந்தரராஜ் கொள்ளுப்பிட்டி காவல்துறையினரால் கடந்த பெப்ரவரி மாதம் 12 ஆம் நாள் கைது செய்யப்பட்டு நேற்று முன்நாள் வியாழக்கிழமை காலை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டிருந்தார் இந்நிலையிலேயே சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் இவர் நேற்று முன்நாள் இரவு கொழும்பு நகர சபை மண்டபத்திற்கு அருகில் கடத்திச் செல்லப்பட்டுள்ளாத…
-
- 0 replies
- 351 views
-
-
ஜேர்மனியில் "வன்னிக்கான கப்பல்" என்னும் ஒரு நடவடிக்கை இன்று (08.05.2009) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கு உதவும் நோக்கில் இந்த நடவடிக்கை திட்டமிடப்பட்டு இன்று உத்தியோகபூர்வமாக தொடங்கப்பட்டள்ளது. பாதுகாப்பு வலயம் என்னும் பெயரில் சிறிலங்கா அரசு உருவாக்கியுள்ள கொலைக் களத்தில் பெரும் துன்பத்தில் வாழும் மக்களுக்கான நிவாரணப் பொருட்களை அனுப்பும் திட்டங்களையும், வவுனியாவின் தடுப்பு முகாம்களில் வாடும் மக்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் மிக விரைவில் மீள்குடியேற்றும் திட்டங்களையும் இந்த "வன்னிக்கான கப்பல்" என்னும் நடவடிக்கை கொண்டுள்ளது. திரு அல்பேற் கோலன், திரு வலன்ரைன் ஆகியோர் உட்பட பல்துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட ஒரு செயற்பாட்டுக் குழு "வன்ன…
-
- 0 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பு நகரப் பிரதேசத்தில் ஒரே நாளில் நண்பர்களான நான்கு இளைஞர்கள் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள், தேசிய மனித உரிமை ஆணைக்குழுவில் புகார் செய்துள்ளனர். எல்லை வீதியைச் சேர்ந்த யோகேந்திரன் ஜோசான் (வயது 20), சேற்றுக்குடாவைச் சேர்ந்த மகேசன் வேனாட் (வயது 22), ஜெயந்திபுரத்தைச் சேர்ந்த தவராசா ஹரிமுகுந்தன் (வயது 20), மாமாங்கத்தைச் சேர்ந்த பெர்னாண்டோ பிரசாத் (வயது 20) ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை வீடுகளிலிருந்து புறப்பட்டுச் சென்றிருந்த இவர்கள் அதன்பின்பு வீடு திரும்பவில்லை என்றும் இவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி தமக்கு எதுவும் தெ?யாது என்றும் உறவினர்கள் தெriவிக்கின்றனர். மற்றுமோர் சம்ப…
-
- 0 replies
- 687 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்டுள்ள பகுதியின் பரப்பளவை குறைத்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இந்த அறிவிப்பின்படி சுமார் நான்கு சதுர கிலோ மீற்றர் பரப்பளவுதான் 'பாதுகாப்பு வலயம்' என இனிமேல் கணிக்கப்படும். ஏற்கனவே முல்லைத்தீவின் கரையோரமாகவுள்ள சுமார் 20 சதுர கிலோ மீற்றர் பகுதி பாதுகாப்பு வலயம் எனப் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் சிறிலங்கா படையினர் இந்தப் பகுதி மீது மேற்கொண்ட பாரிய படையெடுப்பைத் தொடர்ந்து இந்தப் பகுதியின் பரப்பளவு வெகுவாகக் குறைந்திருக்கின்றது. இதனால் ஏற்பட்டிருக்கும் களநிலை மாற்றங்களைக் கருத்திற்கொண்டே பாதுகாப்பு வலயம் தொடர்பான பிரகடனத்தில் தற்போது புதிய மாற்றங்களைக் கொண்டு வந்த…
-
- 0 replies
- 400 views
-
-
வன்னிப் பகுதியில் சிறிலங்கா இராணுவம் மருத்துவமனகள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக குற்றம் சாட்டியிருக்கும் அமெரிக்காவின் நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், இந்த எறிகணை மற்றும் வான் தாக்குலுக்கு உத்தரவிட இராணுவத் தளபதிகள் போர்க் குற்றங்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 318 views
-
-
தோல்வி உறுதியாகி விட்டதால் வாக்குச் சாவடிகளை கைப்பற்ற திமுக அணி திட்டம் - நெடுமாறன் லோக்சபா தேர்தலில் படுதோல்வி உறுதியாகி விட்டதால் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி கள்ள ஓட்டுக்களைப் போடவும், முறைகேடுகள் செய்யவும் திமுக, காங்கிரஸ் கூட்டணி திட்டமிட்டுள்ளது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் ஈழ தமிழர்களுக்கு தனி ஈழநாடு பெற்றுத்தர தான் உதவுவதாக கருணாநிதி வாக்குறுதி அளித்து இருக்கிறார். சென்ற தேர்தலில் அவரது அணிக்கு 40 தொகுதிகளிலும் மக்கள் வெற்றி தேடி தந்தார்கள். ஆனாலும் இந்த ஐந்தாண்டு காலம் ஈழத்தமிழர் நலன்களை காக்க அவர் எதையும்…
-
- 0 replies
- 526 views
-
-
கிழக்கின் உதயம் சிறுவர்களை குறிவைத்துள்ளது.(உண்மைச்சம்ப வம்) கருணா குழுவினரால் கடத்தப்படும் சிறுவர்களின் உடலுறுப்புகள் இந்தியடாக்டர்களின் உதவியுடன் அபகரிக்கப்பட்டு பின்னர் கொலை செய்யபடுகின்றனர். இதுபற்றி தகவல் தந்த பொலிஸ் உத்தியோகத்தர் பணம் கேட்பதெல்லாம் ஒரு சுத்து மாத்துவென்றும் உடலுறுப்பு அகற்றுவதுதான் அவர்களின் குறியென்றும் தெரியபடுத்தினார்,இதில் நம்பமுடியாத விடயம்:-கடத்தப்பட்ட சிறுமிகளை கருணா குழுவின் அலுவலகத்திலிருந்து மீட்டதாகவும் பின்னர் அவர்களின் உடமைகளை எடுக்க பிறிதொரு இடத்துக்கு சென்றதாகவும் உடமைகளை எடுக்கும் சாக்கில் அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து பொலிஸார்மீது துப்பாக்கி பிரயோகம் செய்ய முற்பட்டார்கள்.அப்போது பொலிசார் அவர்களை சுட்டு கொன்றுவிட்…
-
- 0 replies
- 823 views
-
-
போர் இடம்பெறும் பகுதிகளில் இடம்பெறக்கூடிய அத்துமீறல் சம்பவங்கள் தொடர்பாக கண்டறிவதற்கான அனைத்துலகக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நிபுணர்கள் குழு ஒன்று அவசரக் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருக்கின்றது. "போர்ப் பகுதிகளின் அண்மைய மாதங்களின் நிகழ்வுகள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கும், தற்போதைய நிலைமைகளை அவதானிப்பதற்கும் அனைத்துலக விசாரணைக்குழு ஒன்று அவசரமாக அமைக்கப்பட வேண்டும்" என இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 0 replies
- 385 views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினரின் தாக்குதல்களுக்கு உள்ளாகும் தமிழர்களுக்கு உதவவேண்டும் என பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்த மேற்கத்தைய இசை உலகின் நட்சத்திரமாகக் கணிக்கப்படும் பிரபல பாடகியான மாயா அருட்பிரகாசம் (ஏம்.ஐ.ஏ) கோரிக்கை விடுத்திருக்கின்றார். ஈழத் தமிழர்களான பெற்றோருக்குப் பிறந்த மாயா அருட்பிரகாசம் மேற்கு நாடுகளின் இசை உலகில் பிரகாசிப்பவர். இவர் சிறு குழுந்தையாக இருந்தபோதே இவரது தந்தை ஈழப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக தாயகம் திரும்பி ஆயுதப் பயிற்சிக்காக மத்திய கிழக்குக்குச் சென்றுவிட்டார். வன்னியில் இடம்பெறும் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதாகத் தெரிவிக்கும் மாயா, இவ்வாறு ஆபத்தில் சிக்கியிருக்கும் மக்களுக்கு உதவும் வகையிலான முனைப்புக்களை மேற்கொள்ளுமா…
-
- 0 replies
- 535 views
-
-
புலிகளின் மீதான தடையை நீக்குங்கள் தமிழீழம் மலரும் 6 மாதத்தில்: தென்காசியில் சீமான் விடுதலைப்புலிகள் மீது உலக நாடுகள் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும், நீக்கினால் அடுத்த 6 மாதத்தில் தமிழீழம் மலரும் என்று தென்காசியில் நடந்த கூட்டத்தில் இயக்குநர் சீமான் பேசியுள்ளார். திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் மற்றும் திருநெல்வேலி தமிழர் உரிமை பாதுகாப்பு வழக்கறிஞர் பேரவை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பிரசார கூட்டம் தென்காசியில் நடந்தது. வக்கீல் மாடசாமி தலைமை வகித்தார். நெல்லை வழக்கறிஞர்கள் சங்க செயலா ளர் சிவகுமார் முன்னிலை வகித்தார். வக்கீல் முரு கேசன் வரவேற்றார். இயக்குனர்கள் சிபி, சிவா, ஆர். கே.செல்வமணி ஆகியோர் பேசினர். இயக்குநர் சீமான் பேசியதாவது:- எனது ஒரே தலைவன் …
-
- 2 replies
- 998 views
-
-
வைத்தியசாலை மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் யுத்த குற்ற செயலாகும்; இலங்கை இதனை செய்கிறது என்று மனித உரிமைகள் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. ஆதரங்களுடன் விபரிக்கின்றது HRW Source Link:HRW accuses SL for war crimes citing repeated shelling of hospitals
-
- 0 replies
- 544 views
-
-
ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்ற மக்கள் மீது ராணுவம் தாக்குதல்; நூற்று கணக்கில் மக்கள் பலி; துப்பாக்கிகளால் சுட்டு தள்ளினர் ; நேற்றிரவு ராணுவ பகுதிக்கு சென்ற மக்கள் மீதி ராணுவம் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதலில் நூற்று கணக்கில் அப்பாவி மக்கள் கொல்லபட்டனர் என சற்று முன் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. மேலதிக விபரம் விரைவில் Source Link: SLA attack fleeing civilians, hundreds killed
-
- 0 replies
- 1k views
-
-
கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது செல்வி ஜெயலலிதா ஒவ்வொரு மேடையிலும் மறக்காமல் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லி ஓட்டு கேட்டார் அது என்ன தெரியுமா? தன் கணவரை கொன்ற கட்சியினருடன் சோனியா கூட்டு வைத்து இருக்கிறார் அதனால் அவர் பதிபக்தி இல்லாதவர் என்று மேடைதோறும் முழங்கி வந்தார். தி.மு.க. புலி ஆதரவு கட்சி என்பது ஜெயலலிதாவின் டிரேட் மார்க் பிரச்சாரம் என்பது உலகப் பிரசித்தி. இதை எல்லாம் அடித்தட்டு மக்கள் வேண்டுமானால் மறந்து போய் இருக்கலாம் அவர்களுக்கு அன்றாடப் பிரச்சினைகளே ஆயிரம் இருக்கிறது ஆனால் டைம் பாஸுக்காக இணையத்தில் உலவிக் கொண்டு ஈமெயில்களை பார்வேர்டு செய்து கொண்டு இருக்கும் படித்த பாமரர்கள் மறந்துவிட்டிருக்க முடியாது. இன்று கூட்டத்தில் கலக்கவில்லை என்றால் நாளை…
-
- 13 replies
- 1.9k views
-
-
வணக்கம், timesofindiaவுக்கும் ஜெயா காய்ச்சல் தொற்றிவிட்டது. அதில் பின்வருமாறு ஓர் கட்டுரை வரையப்பட்டு உள்ளது. இதில் ஜெயா அம்மையாரின் தேர்தல் இலக்கு தமிழ்நாட்டு முதலமைச்சராகுவது, மத்திய அரசில் பதவிகளை பெறுவது என்பதாக மட்டும் இருக்காது, இந்தியாவின் பிரதமராக வருவதாக இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது. Jayalalithaa preparing for role outside the state? CHENNAI: Even as Tamil Nadu is gearing for elections to 39 seats in the Lok Sabha on May 13, questions are being raised as to whether AIADMK supremo Jayalalithaa is preparing for a role outside the state. Though the political maverick, who seems to relish surprising people by her pirouettes, keeps her car…
-
- 3 replies
- 1.1k views
-
-
முற்றிலும் இயற்கை நம் வாழ்வில் சம்பந்தப்பட்டுள்ளது என்பதன் ஆதாரம். Get Flash to see this player. http://www.tamilsforobama.com/TN_Jaya.html
-
- 0 replies
- 899 views
-