ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142918 topics in this forum
-
-
- 1 reply
- 1.1k views
-
-
ஐரோப்பாவில் ஆரம்பித்து, உலகெங்கும் விரிவு பெற்றுள்ள ஈழத்தமிழ் மக்களின் தன்னெழுச்சியான போராட்டம் கண்டு சர்வதேச மீடியாக்கள் வியப்படைந்துள்ளன. உலகெங்கும் ஒரு கொடியின் கீழ் பல்லாயிரக்கணக்கில் திரளும் தமிழ்மக்கள் ஏற்றுக்கொண்ட ஒரு அமைப்பு எவ்விதம் தடைசெய்யப்பட்ட அமைப்பாகக் கருத முடியும், எனக் கேள்வி எழுப்பியுள்ளன. உணர்வெழுச்சியுடன் உலகெங்கும் திரண்ட தமிழ்மக்களின் போராட்டங்களையும், அதன் பின் பொதிந்திருக்கும் உண்மைநிலையையும் சர்வதேச மீடியாக்கள் தங்கள் பதிப்பக்களில் பகிரத் தொடங்கியுள்ளன. ஆரம்பிக்கபட்டு மூன்று நாட்களாகியும். ஆரம்பத்திலிருந்த அதே உணர்வெழுச்சியுடன் தொடரும் போராட்டங்கள் கண்டு உலக மக்கள் ஆச்சரியமடைந்துள்ளதுடன், இப் போராட்டம் குறித்து அறியும் ஆவலும் ப…
-
- 9 replies
- 2.8k views
-
-
இது உண்மையா உடனடியாக பதில் தரவும் பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களுக்கு எமது தேசத்தின் கொடியினை தாங்கிச் செல்ல வேண்டாம் என ஏற்பாட்டாளர்கள் அறிவுறுத்தல செயதிருக்கிறார்கள் என அறிந்தேன் இதுபற்றி அறியத்தரவும். பிரசுரிக்க முடியாத விடையமாக இருந்தால் தனிமடலில் அறியத்தரவும் காரணம் நாம் வாழ்கின்ற நாட்டிலும் தற்போது கவனயீர்பு நடைபெறுகின்றுது. இதனை முன்னுதாரணமாக வைத்து இங்கும் பலர் தேசியக்கொடியினைத் தாங்கிச் செல்வதற்குத் தயங்குகிறார்கள். அதைவிடுத்து பிரித்தானிய வழக்கரைஞர்களை மன்றாட்டமாகக் கேட்டுக்கொள்கிறேன். இளையோருக்கு மதிப்பளித்து இது பற்றிய அச்சுறுத்தல்களை சட்டரீதியில் அகற்றவும் எழுஞாயிறு.
-
- 2 replies
- 1.8k views
-
-
அமெரிக்காவில் உள்ள புலம்பெயர்ந்த தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தமிழ் அமைப்புக்களுடன் அமெரிக்காவின் தென் ஆசியா மற்றும் மத்திய ஆசியாவுக்கான வெளிவிவகார அமைச்சகத்தின் பிரதி செயலாளர் றிச்சர்ட் பௌச்சர் மற்றும் சிறிலங்காவுக்கான தூதுவர் றொபேட் ஓ பிளேக் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக அமெரிக்காவின் வெளிவிவகார திணைக்களம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 633 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா படையினரின் காவலரண் மீது இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இரு படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏனையோர் காயங்களுடன் தப்பியோடியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 320 views
-
-
பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கு முன்னால் நீர் கூட அருந்தாமல் கடைசி மூச்சிருக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளும் பரமேஸ்வரன், சிவா உலகுக்குச் வெளியிட்ட அறிக்கை. எங்கள் அன்பான தமிழீழ மக்களே, இது தமீழீழம் மலருவதற்கான நேரம். தனித்தமிழீழம் மலர்ந்தாலொழிய இதற்கு வேறு தீர்வே இல்லை. எங்கள் அண்ணன் தியாக தீபம் திலீபன் அண்ணா வழியில் மீண்டும் உலகிற்கு உணர்த்துவோம். நாம் என்றும் அமைதியான நிலையான நிரந்தரமான சமாதானத்தை மட்டுமே விரும்புகிறவர்கள். தமிழர்கள் என்றுமே எவருக்கும் எந்த நாட்டினருக்கும் எதிரிகளாக இருந்ததில்லை. அனைவரும் எமது நண்பர்களே. எமது எதிரி எதைக்கொண்டு தாக்கினானோ அதைக்கொண்டே திருப்பித்தாக்கி எமது விடுதலை போராட்டத்தை தொடக்கி வைத்தார் எமது தலைவர்,…
-
- 0 replies
- 715 views
-
-
சிறீலங்கா இராணுவம் வடக்குக் கிழக்கை கைப்பற்றியதாக அறிவித்த பின் கடந்த 24 மணி நேரங்களில் நடந்த அகோர எறிகணை வீச்சுக்களில் 60 பொதுமக்கள் வரை பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இதில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த தற்காலிக சிறிய சிகிச்சை நிலையங்களும் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன. இந்த எறிகணைகள் அரசாங்கப்படைகள் நிலைகொண்டுள்ள பக்கமிருந்தே வந்ததாக வன்னியில் பணியாற்றும் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதை அரசாங்கம் மறுத்துள்ளதாம். வன்னிக்கு பத்திரிகையாளர்கள் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளனர். 'Civilians die' in Sri Lanka zone The military has hemmed the rebels into a small area of land At least 60 civilians have been killed by shells f…
-
- 1 reply
- 949 views
-
-
இணைத்தலைமை நாடுகளை அவசரமாகக் கூட்டி நடவடிக்கை எடுக்குமாறு நோர்வே அரசாங்கத்திடம் அங்கு வாழும் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 368 views
-
-
"ஈழத்தமிழர்களை காக்க தேர்தலை இரண்டாம் பட்சமாக நினைத்து தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்'' என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட டாக்டர் ராமதாஸ் கூறினார். பேரழிவில் சிக்கி இருக்கும் ஈழத்தமிழர்களை பாதுகாக்க கோரியும் இந்திய அரசின் துரோகத்தை க டித்தும் இலங்கைத் தமிழர் பாதுகா பு இயக்கம் சார்பில் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்திற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஆர…
-
- 0 replies
- 462 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு வட்டார 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதியில் வாழும் மக்கள் மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய கனரக துப்பாக்கிச் சூடு மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் 322 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 450 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்த 77 ஆயிரம் தமிழர்களை கடந்த இரண்டு வருடங்களில் தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் போது சிறிலங்கா படையினர் கொன்று குவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் சந்தேகம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 327 views
-
-
இது என்னுடைய அதுவும் எல்லோருடைய ஆதங்கமும் கூட தினம் தினம் எம் இன மக்கள் வகை தொகையின்றி கொல்லபடுகின்றனர் சிங்கள பேரினவாதத்தால் ஒவ்வொரு கணமும் ஒரு தமிழன் எம் மண்ணில் இறக்கின்றான் ஹிட்லர் செய்த இன அழிப்பை விட இன்று சிங்கள பேரினவாதம் செய்துகொண்டிருக்கிறது சின்ன சிசு வில் இருந்து முதியவர் வரை ஈவு இறக்கமின்ரீ கொள்ளபடுன்கின்றனர் இதற்கு யார் காரணம் ? எல்லாம் சிங்கள பேரினவாதமும் அதற்கு மிண்டு கொடுக்கும் நமது அயல் நாடு இந்திய கொடிய அரசே 6 கோடி தமிழக மக்களே இந்தத் நிலை உங்களுக்கும் விரைவில் வரும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் எனவே நீங்களும் எம்மோடு இன்ருனைந்து ஆயுதம் ஏந்தி போராட வேண்டும் இந்திய அரசு விரைவில் சின்னபின்னமக்க பட வேண்டும் அது உங்களால் தான் முடி…
-
- 0 replies
- 1k views
-
-
ஐ.சி.ஆர்.சி. தலைவர் இலங்கை விஜயம் வீரகேசரி நாளேடு 4/9/2009 10:14:45 AM - சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜகொப் கௌன்பேக்கர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவின் விசேட அழைப்பினை ஏற்று இலங்கை வந்த ஐ.சி.ஆர்.சி. தலைவருடன் சங்கத்தின் தெற்காசிய நடவடிக்கைகளுக்கான பிரதம அதிகாரி ஜக்குவாஸ் டி மையோவும் இலங்கை வந்துள்ளார். இதேவேளை, வெளிவிவகார அமைச்சருக்கும் இலங்கை வந்த ஐ.சி.ஆர்.சி. குழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையின் தற்போதைய நிலைவரம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் செயற்பாடு என்பன தொடர்பில் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், வடக்கில் போர் இடம்பெற்று வரும் சூ…
-
- 0 replies
- 517 views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் நேற்றும் நேற்று முன்நாளும் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 189 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 357 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் நேற்று முன்நாள் மட்டும் குழந்தை உட்பட 13 சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 324 views
-
-
வன்னியில் இரத்தக்களரிப் பேராபத்து; தடுத்து நிறுத்தத் தக்கார் யார்...? [09 ஏப்ரல் 2009, வியாழக்கிழமை 5:15 மு.ப இலங்கை] இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்தி, சமாதானத்தை ஏற்படுத்த நோர்வே தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக, அந்த நாட்டின் அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருக்கிறார். தாம் மட்டுமன்றி இணைத்தலைமை நாடுகளில் ஒன்றான அமெரிக்காவுடன் சேர்ந்தும் இலங்கையில் போரை நிறுத்துவதற்குச் சாத்தியமான வழிவகைகள் குறித்து ஆராய்ந்துள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டிருக்கிறார். நோர்வேயின் என்.ரி.பி. செய்தி நிறுவனத்துக்கு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வழங்கிய செவ்வியில் அவர் இவற்றைச் சொல்லியுள்ளார். இலங்கையில் பே…
-
- 0 replies
- 720 views
-
-
கடத்தப்பட்ட யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரான செல்வராஜா ரவீந்திரன் விடுவிக்கப்பட்டுள்ளார் வீரகேசரி இணையம் 4/9/2009 8:51:35 AM - கொழும்பிற்கு வெளியே வெள்ளை வானில் வந்ததாகக் கூறபப்டும் நபர்களினால் கடத்தப்பட்டு காணாமல் போயிருந்த யாழ் மாவடட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனின் சகோதரரரான செல்வராஜா ரவீந்திரன் நேற்றிரவு விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரான இவர் மாதிவலையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் வதிவிடத் தொகுதியில் (தனது சகோதரனின் வதிவிடம் )உயர் கல்வியின் நிமித்தம் தங்கியிருந்தார். கடந்த மாதம் 24 ம் திகதி வழமை போல் காலை மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளையில் வதிவிடத்திற்கு அண்மித்த ப…
-
- 0 replies
- 503 views
-
-
வன்னி மக்கள் மீது தொடர்ச்சியான விமான, பீரங்கி மற்றும் தேமோபரிக் குண்டுகளை வீசி தாக்கி வரும் சிறீலங்கா பயங்கரவாத அரசு இன்று சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கப் பணியாளரை குண்டு வீசிக் கொன்றுள்ளது. கடந்த 4ம் திகதியும் காயமடைந்த மக்களை ஐ சி ஆர் சி கப்பலில் ஏற்ற உதவிக் கொண்டிருந்த ஒரு பணியாளரும் கொல்லப்பட்டுள்ளார். இதற்கிடையே வன்னி மக்கள் மீது விமானங்கள் மூலம் தேமோபரிக் குண்டுகளை (அமெரிக்கா, ரஷ்சியா, இந்தியா, சீனா போன்ற நாடுகள் பாவிக்கும் கொடிய ஆயுதங்கள்) வீசிவிட்டு.. புலிகள் தம்மிடமிருந்து தப்பிச் செல்லும் மக்களைக் குண்டு வைத்துக் கொல்வதாகக் கதையளந்து கொண்டிருக்கிறது. 1995 இலும் இராணுவம் தென்மராட்சியை கைப்பற்றிய வேளை சந்திரிக்கா அரசு இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்தி இ…
-
- 4 replies
- 847 views
-
-
குறுகியகால யுத்த நிறுத்தமாவது அவசியம் தேவை : ஐ.நா.பிரதிநிதி நீல் கோரிக்கை வீரகேசரி இணையம் 4/9/2009 9:23:14 AM - அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்திற்குள் சிக்கியுள்ள பொது மக்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி நீல் பூன், "அரசாங்கம் குறுகிய காலத்திற்காவது போர் நிறுத்தத்தை அறிவிக்குமாயின் அது மக்களை வெளியேற வழிசெய்யும்" என்கிறார். "குறுகிய காலத்திற்கு இப்படியான போர் நிறுத்தம் அறிவிக்கப்படுமானால் மக்களை வெளியேற அனுமதிக்குமாறு விடுதலைப் புலிகளை நாம் கோருவோம்.இதன் மூலம் அங்கு சிக்கியுள்ள மக்களின் வெளியேற்றம் சுலபமானதாகவும் இருக்கும். இதற்குச் செயல் வடிவம் கொடுப்பது என்பது சற்று கடினமாகவே உள்ளது. பாதுகாப்பு …
-
- 0 replies
- 412 views
-
-
09/04/2009, 07:09 [ கொழும்பு நிருபர் மயூரன் ] பாதுகாப்பு வலயத்திற்குள் இராணுவம் உட்பிரவேசிப்பதற்கு முன்னர் போர் நிறுத்தம் அவசியம் - ஐ.நா பாதுகாப்பு வலயத்திற்குள் தங்கியுள்ள மக்கள் மத்தியில் இராணுவம் உட்பிரவேசிப்பதற்கு முன்னர் குறுகிய காலத்திற்காவது போர் நிறுத்தம் அவசியம் என ஐ.நா சபை மீண்டும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. வன்னியில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் தங்கியுள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக குறுகிய காலத்திற்காவது போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்களுடைய பாதுகாப்பு தொடர்பாக உதவி வழங்கும் நிறுவனங்கள் அதிகளவு கவலையை வெளியிட்டுள்ள நிலையிலேயே இந்தக்…
-
- 0 replies
- 507 views
-
-
வன்னியில் உருவாகியிருக்கும் மனிதப் பேரவலம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் மீண்டும் விவாதிப்பதற்கு மேற்கு நாடுகள் மேற்கொண்டுள்ள முயற்சிகளைத் தடுப்பதற்கான காய்நகர்த்தல்களை சிறிலங்கா அரசாங்கம் அவசரமாக மேற்கொண்டுள்ளது. பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் இந்தப் பிரச்சினையை இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகக் கிடைத்த தகவல்களையடுத்து அடுப்பதற்கான ஒரு முயற்சியாக பாதுகாப்புச் சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள மெக்சிக்கோவுடன் சிறிலங்கா அவசரமான பேச்சுக்களை தொடங்கியிருக்கின்றது. மெக்சிக்கோவுக்கு அவசரமாக அனுப்பிவைக்கப்பட்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன, மெக்சிக்கோவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் உட்பட அதிகாரிகள…
-
- 1 reply
- 559 views
-
-
சிறிலங்கா படையினர் பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றனர் எனச் சொல்வதற்கு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்பான்ட்டுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை என கடுமையாகச் சாடியுள்ளார் சிறிலங்காவின் சுற்றாடல் அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் அரசியல் ஆலோசகருமான சம்பிக்க ரணவக்க. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 651 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இரு வாரங்களுக்கு முன்னதாக கடத்திச் செல்லப்பட்ட யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் செல்வராஜா ரவீந்திரன் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 346 views
-
-
LTTE backs Jaya's stand on Eelam April 8, 2009 LTTE's political head B Nadesan says AIADMK chief Jayalalithaa understands the political aspiration of Tamil people very well. ஒளிப்பதிவு இங்கே http://indiatoday.intoday.in/index.php?opt...=86&secid=0
-
- 1 reply
- 1.5k views
-
-
போர் வெற்றியை அரசு தனது சாதனையாகக்காட்டி சுய அரசியல் இலாபம் ஈட்ட முனைகின்றது எனத் தெரிவித்துள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, படையினரது வெற்றியில் அரசாங்கமும், அர தலைவரும் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர் எனவும் குற்றம் சாட்டியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 383 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் தனது குடிமக்களைப் பாதுகாக்க வேண்டுமாயின் அனைத்துலக சமூகத்தின் வலிறுத்தலுக்கு அமைய உடனடியாக போர் நிறுத்தத்துக்குச் செல்ல வேண்டும் என இடதுசாரி முன்னணியின் தலைவர் காலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண வலியுறுத்தியிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 408 views
-