ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
இலங்கை விஷயத்தில் எது உண்மை, எது பொய் என்று பிரித்துப் பார்க்கும் திறனைக்கூட இன்றைக்கு தமிழகத்துத் தமிழர்கள் சிலர் இழந்துவிட்டனரோ என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. ஹிந்து ராம், துக்ளக் சோ, தங்கபாலு, தினமலர்… கோஷ்டிகளை நினைத்து நாம் இப்படி எழுதவில்லை. இவர்களை முன்னுதாராணம் காட்டிப் பேசும் சில அரைகுறைகளுக்காகவே இதைச் சொல்கிறோம். இவர்கள் திரும்பத் திரும்ப ராஜீவ் கொலைக்கும் சிங்கள ராணுவத்தின் தமிழின அழிப்பு படுகொலைக்கும் முடிச்சுப் போட்டுப் பார்ப்பது எதற்காக? புலிகளை ஒழிக்க வேண்டும் என்பது மட்டுமே இந்த ஒட்டுண்ணிகளின் நோக்கமல்ல… தமிழருக்கென்று ஒரு தனித்த அடையாளமோ, தமிழரின் தனிப்பெரும் ஆட்சியில் ஒரு தேசமோ உருவாகிவிடக் கூடாதென்பதில் இவர்கள் உறுதியோடு உள்ளனர். இந்த விஷயத்தில் மத…
-
- 0 replies
- 1.2k views
-
-
வன்னியில் சிக்கியுள்ள நாலரை இலட்சம் மக்களுக்கு மருத்துவர்கள் போதாமல் உள்ள நிலையில் படையினரின் தாக்குதலில் சிக்கி தினந்தோறும் காயமடையும் மக்கள் பெரும் அவலங்களைச் சந்தித்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் சிறிலங்கா சுகாதர அமைச்சு வன்னியில் உள்ள 8 மருத்துவர்களையும் தாதிகளையும் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. இராணுவத்தினரின் உத்தரவிற்கு அமையவே அமைச்சினால் இந்த அறிவுறுத்தல் விடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சிறிலங்கா முப்படையின் தளபதியாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தற்போது கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 8 மருத்துவர்களும் ஆயிரம் வரையான தாதிகளு…
-
- 6 replies
- 1.2k views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் - இந்திய ஜனாதிபதி பிரதீபாபட்டீல் இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும், இதற்காக இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ய வேண்டும், பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வுகாண வேண்டும். என இந்திய ஜனாதிபதி பிரதீபாபட்டீல் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை இந்நியாவின் கடைசி கூட்டம் பாராளுமன்றத்தின் ஆரம்பிக்கப்பட்ட போது ஜனாதிபதி இந்தக் கருத்தை முன்வைத்தார்.. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபாபட்டீல் உரை நிகழ்த்தினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் விடுதலைப்புலிகளும் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும்’’ என்று கோரிக்கைவி…
-
- 0 replies
- 915 views
-
-
வன்னிபெரு நிலப்பரப்பில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு சென்றுள்ள மக்களை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தற்காலிக முகாம்களில் தங்கவைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 392 views
-
-
இலங்கையின் தற்போதைய நிலைமைகளை ஆராய்வதுடன், அங்கு நிலவும் மனித அவலங்கள் குறித்து கவனம் செலுத்துமாறு பிரித்தானியாவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளரான டெஸ் பிறவுணை பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுண் பணித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 416 views
-
-
"தேசத்தின் குரல்" அன்டன் பாலசிங்கத்தின் துணைவியார் திருமதி அடேல் பாலசிங்கம் அமெரிக்க வெளியுறவுத்துறை இராஜாங்க செயலர் ஹிலறி கிளின்டன் அம்மையாரைச் சந்தித்ததாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் தமிழ்நாட்டு முதல்வர் மு.கருணாநிதிக்கு கடிதம் ஒன்று எழுதியதாகவும் அண்மையில் தமிழ்நாட்டில் வெளியாகிய செய்திகள் தவறானவை என தமிழீழ விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள் புதினத்திடம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 380 views
-
-
சிறிலங்காவுக்கு ஆயுத உதவி வழங்குவதைக் கண்டித்து தமிழ்நாடு சென்னையில் உள்ள தென்மண்டல இராணுவ தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தச் சென்ற உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 320 views
-
-
அண்மையில் புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல். ஏராளமான இராணுவத்தினர் (1000) கொல்லப்பட்டு ஆயுதங்கள் அள்ளப்பட்டதும் தெரிந்ததே.
-
- 3 replies
- 1.3k views
-
-
செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவை இலங்கையிலி ருந்து வெளியேற்றவேண்டும் என்ற கோஷம் தென்னிலங்கையில் மிகப் பலமாக பொங்கி எழுந்துள்ளது. அந்தக் கோஷத்துக்கு மேலும் ஆதரவு தேடுவதற்காகவும் பிரசித்தப்படுத்துவதற்காகவு
-
- 1 reply
- 845 views
-
-
சென்ற கிழமைம எழுதும் போது தமிழக முதல்வர் பதவி சுகமா? அல்லது இனமானமா? இதில் இரண்டில் ஒரு முடிவு எடுக்கும் நிலைக்கு முதல்வர் கருணாநிதி தள்ளப்பட்டுள்ளார் என எழுதியிருந்தேன். முதல்வர் கருணாநிதி சரியான முடிவு எடுத்தால் வரலாற்றில் இடம் பிடிப்பார் இல்லையென்றால் வரலாறு அவரை மன்னிக்காது என்றும் எழுதியிருந்தேன். இதற்கான விடை இந்தக் கிழமை கிடைத்திருக்கிறது. இனமானம், தன்மானத்தை விட பதவி சுகமே பெரிதென்று கருணாநிதி சொல்லிவிட்டார். இலங்கைத் தமிழர் சிக்கல் தொடர்பாக கடந்த பெப்ரவரி 3 இல் அண்ணா அறிவாலயத்தில் முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில் கூடிய திமுக மூன்று நீண்ட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. தமிழ் உணர்வாளர் முத்துக்குமாருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நீங்கலாக ஏனைய இ…
-
- 0 replies
- 1.9k views
-
-
இலங்கை இனப்படுகொலை: மலேசிய அரசிடம் தமிழர்கள் மனு கோலாலம்பூர்: இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து மலேசிய அரசாங்கம் உடனடியாக தலையிட்டு போரை நிறுத்த வேண்டும் எனக் கோரி மலேசிய தமிழ் மக்கள் சார்பில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ராய்ஸ் யாத்திமிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது. மலேசிய இந்திய காங்கிரஸ் தலைமைச் செயலாளரும் மனிதவள அமைச்சருமான டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தலைமையில் சென்ற குழுவினர், அமைச்சர் ராய்ஸிடம் இந்த மனுவை அளித்தனர். உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் அறங்காவலர் வழக்கறிஞர் பசுபதி சிதம்பரம், மலேசிய இந்திய காங்கிரஸ் இளைஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் டி.மோகன் உட்பட எட்டு பேர் அடங்கிய குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை அமைச்ச…
-
- 1 reply
- 485 views
-
-
சென்னை வண்ணாரப்பேட்டை கோழிக்கறிக்கடை வியாபாரி அமரேசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் இழந்தார். பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் அவர் இலங்கைத் தமிழர்களுக்காகத்தான் தீக்குளித்தார் என்று கூறியதை சிலர் மறுத்தனர். திங்கட்கிழமை நடந்த அவரது இறுதிச் சடங்கில் வைகோ, பழ.நெடுமாறன், தொல்.திருமாவளவன், தா.வெள்ளையன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இரங்கல் கூட்டத்தில் பேசிய அனைவரும் இலங்கத் தமிழர்களுக்காகத்தான் அமரேசன் உயிர் நீத்ததாக குறிப்பிட்டு அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் அமரேசன் வீட்டுக்கு ஒரு உள்நாட்டு தபால் வந்தது. அமரேசன் தனது மூத்த மருமகன் முத்து கணேஷுக்கு எழுதிய அந்தக் கடிதம் அமரேசன் விலாசத்துக்கே திரும்பி வந்துள்ளத…
-
- 1 reply
- 917 views
-
-
இலங்கையில் உடனடி போர் நிறுத்தத்தினை கொண்டு வருமாறு பிரான்ஸ் தேசத்திடம் கோரிக்கை விடுக்கும் அவசரகால ஒன்று கூடல் நிகழ்வு பிரான்ஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பாரிசில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 358 views
-
-
இலங்கைக்குள் இடம்பெயர்ந்து அகதிகளாக வாழும் தமிழ் மக்களின் நிலைமை கவலை தருகின்றது என்று இந்திய அரச தலைவர் பிரதீபா பட்டீல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 466 views
-
-
ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதனை கண்டித்து, சென்னை உயர் நீதிமன்றம் முன்பு காங்கிரஸ் கொடியை எரித்து, இந்திய மத்திய அரசுக்கு எதிராக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 493 views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள குச்சவெளியில் சிறிலங்கா பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால் ஐந்து தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 382 views
-
-
இலங்கையில் இடம்பெற்று வரும் வன்முறைகள் மற்றும் அரசியல் தீர்வின் தேவை குறித்துமே நான் எனது கவனத்தை செலுத்துகின்றேன். மக்கள் இடம்பெயர்ந்து வருவது தொடர்பாகவும் நாம் கவனத்தை செலுத்துகின்றோம் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 698 views
-
-
இந்திய நாடாளுமன்றம் முன்பாக நாளை நடத்தப்படவிருந்த பேரணி மற்றும் மறியல் போராட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது என ஈழத் தமிழர் தோழமைக் குரலின் அமைப்பாளர் பா.செயப்பிரகாசம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 564 views
-
-
Dear yarl tamil uravukalee.. The ICRC please don't leave from war operated areas in vanni..please send your regust by E-mail, fax,telephone they expecting; morethan 50,000calls, or E-mails from all tamils to the ICRC.. ICRC colombo brance tp:009411 250 33 46/33 47 mobile number:0094 77 728 96 82..email address@ colombo.col@icrc.org...ICRC GENEVA brance TP: 0041 22 734 6001... please everyone send emails or call..thank you
-
- 0 replies
- 844 views
-
-
ஈழப்படுகொலை:ஐநாவிடம் முறையிட இலங்கை தமிழர் நல உரிமை பேரவை முடிவு இலங்கை தமிழர் பிரச்சனைகளை உலக நாடுகளுக்கு எடுத்துக் கூறுவதற்காக முதல் அமைச்சர் கருணாநிதி உத்தரவின் பேரில் உருவாக்கப்பட்ட துணை அமைப்பு இலங்கை தமிழர் நல உரிமைப் பேரவை. இலங்கை தமிழர் நல உரிமை பேரவை துணை அமைப்பின் முதல் கூட்டம்இ இன்று (புதன்கிழமை) மாலை சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கார்டு மெட்ரோபாலிட்டன் ஓட்டலில் நடைபெற்றது. ஈழப்படுகொலை குறித்து ஐநாவிடம் முறையிடப்போவதாக இக்கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. மேலும்இ இலங்கை பிரச்சனை குறித்து உலக நாடுகளுக்கும் மனித உரிமை அமைப்புகளுக்கும் எழுத்து பூர்வமாக அறிக்கை அளிப்பது என்றும் இந்த கூட்டத்தில் முடிவு…
-
- 0 replies
- 523 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரத்திலும், வள்ளிபுனத்திலும் இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய செறிவான எறிகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 34 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 46 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 565 views
-
-
கூலிக்கு மாரடிக்கும் இவைகளின் சுயருபங்கள் இராணுவச் சோதனைச் சாவடியில் தற்கொலைத் தாக்குதல் - 28 பேர் பலி - 20க்கும் மேற்பட்டோர் பேர் காயம் இத்தாக்குதலை பெண் ஒருவரே நடத்தியதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இது பெரும்பாலான தமிழ் ஊடகங்களில் படங்களுடன் வெளியிடப்பட்டிருந்தது தமிழ்மக்களை மேலும் பலவீனப்படுத்துவதும் புலிகளுக்கு எதிராக சிங்களத்தால் பரப்படுகின்ற பொய்ப்பரப்புரைகளை அப்படியே வரி மாறாமல் சிங்களம் சொல்லுவதாக ஒப்பித்தன இதில் புதினம் கூட விதிவிலக்கில்லை அதிலும் அதிர்வு 34 விடுதலைபுலிகள் ரக் வண்டியில் பலி படங்களுடன் உடலங்கள் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்போவதான செய்தி அதிர்வு இணை…
-
- 5 replies
- 1.6k views
-
-
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தை தமிழினத்தின் இன்றைய சூழலில் அனாதரவாக விட்டு வெளியேற வேண்டாம் என்று கோருவோம். ICRC Colombo Tel.: (+9411) 250 33 46 / 250 33 47 Head of delegation: Mr CASTELLA Paul Media contact person: Ms ROMANENS Sophie Mobile: (++94 77) 728 96 82 Languages spoken: French/English/German colombo.col@icrc.org ICRC GENEVA review.gva@icrc.org phone ++ 41 (22) 734 60 01 I am expecting morethan 50000 calls or emails from all tamils to the ICRC மின்னஞ்சல் மூலமாகக் கிடைத்த விடயத்தை இணைத்துள்ளேன்.
-
- 0 replies
- 916 views
-
-
தலைநகர் கொழும்பின் பாதுகாப்பிற்காக விசேட விடியோ கமராக்கள் பொருத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஓர் கட்டமாக முதலில் 28 கமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் என்.கே இளங்கக்கோன் தெரிவித்துள்ளார். கொழும்பிற்குள் பிரவேசிக்கும் பிரதான பாதைகள் மற்றும் முக்கிய நகரங்களில் இந்த கமராக்கள் பொருத்தப்படவுள்ளன. இந்தக் கமராக்களை கட்டுப்படுத்தும் பிரதான கட்டுப்பாட்டறை கொழும்பு கோட்டேயில் உள்ள பிரதி காவல்துறை மா அதிபர் காரியாலயத்தில் அமைக்கப்படவுள்ளது. மேலும் வாசிக்க http://www.paristamil.com/tamilnews/?p=27485
-
- 3 replies
- 823 views
-
-
மறியல் போராட்டம் நெருப்பின் நடுவில் தமிழினம் (பிரான்ஸ்) சிறிலங்காவின் கொடூரமான இனப்படுகொலைக்கு துணைபோகும் இந்திய அரசை கண்டித்தும் , வன்னியில் தொடர்ச்சியாக நடைபெறும் தமிழின அழிப்பை நிறுத்தக் கோரியும் தமிழினமே!!! உரிமைகளை மீட்க வீறு கொண்டு எழுவோம் வாரீர்...... இத்திய தூதரகம் முன்பாக வெள்ளி:- 13/02/2009 பிற்பகல் 15:00 மணிக்கு Metro N°9:La Muette
-
- 0 replies
- 806 views
-