Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ""ஹலோ தலைவரே... ... தமிழர் திருநாளான பொங்கலுடன் தமிழ்ப்புத்தாண்டும் சேர்ந்து கொண்டாடப்பட்ட இந்த ஆண்டில் ஒரேயொரு விஷயம் மட்டும் தமிழர்களை உறுத்திக் கொண்டேதான் இருந்தது.'' ""ஈழநிலவரத்தைத்தானே சொல்றே!'' ""ஆமாங்க தலைவரே... முதல்வர்கூட தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் இதை வருத்தத்துடன் குறிப்பிட்டு, அடுத்த ஆண்டு அமெரிக்க சுதந்திர தினவிழா போல வாணவேடிக்கையுடன் தமிழ்ப்புத்தாண்டைக் கொண்டாடணும்னு சொல்லியிருக்கிறார். ஈழ நிலவரம் தொடர்பா கொழும்பு சோர்ஸ்களிடமிருந்து புதிய தகவல்கள் கிடைத்திருக்கு. யாழ்ப்பாணம் மாவட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாகக் கொண்டு வந்துவிட்டதாகச் சொல்லும் சிங்கள அரசு, ஏ-9 நெடுஞ்சாலையை க்ளியர் பண்ணி போக்குவரத்துக்கான ஏற்பாடுகளையும் செய்து…

  2. திருமாவளவனுக்கும், காங்கிரஸுக்கும் ஏற்கெனவே ஏழாம் பொருத்தம்தான் என்ற நிலையில், இதில் இன்னொரு வில்லங்கமாக வந்து முளைத்திருக்கிறது ஒரு சி.டி! அது புலிகளை ஆதரித்து திருமா வெளியிட்டுள்ள `எகிறிப் பாய்' என்ற சி.டி. கடந்த டிசம்பர் மாதம் 26-ம்தேதி விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய `தமிழீழ அங்கீகார மாநாட்டில் வெளியிடப்பட்ட குறுந்தகடு அது. இதற்காக திருமா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு மட்டுமல்ல, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்பட பலருக்கும் புகார் அனுப்பியிருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலச் செயலாளரான பட்டுக்கோட்டை ராஜேந்திரன். அவரை நாம் சந்தித்தோம். ``திருமாவளவனின் புலி ஆதரவு எல்லைமீறிப் போய்க்கொண்டே இருக்கிறது. `கடுமையான நடவடிக்…

  3. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதி பொதுமக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 மாதக் குழந்தையும் 2 சிறுவர்களுமாக 6 பேர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 33 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 440 views
  4. படங்கள், ஆடியோச் செய்தி இணைக்கப்பட்டுள்ளது) பிரித்தானியா இலண்டன் டவுண் வீதியிலமைந்துள்ள பிரித்தானியப்பிரதமர் கோர்டன் பிறவுன் அவர்களின் அலுவலகத்தின் முன், இன்று 17.01.09 பிற்பகல் 4.00 மணிமுதல் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினரால் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நிகழ்த்தப்பட்டது. ஈழத்தில், சிறிலங்கா அரச படைகளினால் வல்வளைப்புச் செய்யப்பட்டிருக்கும் மக்கள் மீதான சிறிலங்கா இராணுவ எறிகணைத் தாக்குதல்களைக் கண்டித்தும், போர் நிறுத்தமொன்றை வலியுறுத்தி சிறிலங்கா அரசுக்கு பிரித்தானிய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் கோரி இக்கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வு பூர்வமாகக் கலந்து கொண்டதாகவும்…

    • 2 replies
    • 923 views
  5. இலங்கையின் இன விவகாரம் தொடர்பான அரசியல் தீர்வு குறித்துப் பேசுவதற்கும் தமிழ் மக்களின் எதிர்கால நிலை குறித்து ஆராய்வதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை புது டில்லிக்கு வருமாறு இந்திய வெளியுறவுச் செய லாளர் சிவ்சங்கர் மேனன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புதுடில்லி விஜயம் குறித்த திகதி நிர்ணயிக்கப்படவில்லை என்றும் புதுடில்லி திரும்பிய பின் இந்திய அர உயர்மட்டத்துடன் பேசி சந்திப்பு குறித்து அறிவிப்பதாகவும் இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு உறுதியளித்துள்ளார். http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

  6. தமிழர்களை கொன்று குவித்தால் ஏவுகணை வீசுவோம் என்று இந்தியா மிரட்டக்கூடாதா?: தா.பாண்டியன் கேள்வி [சனிக்கிழமை, 17 சனவரி 2009, 11:28 பி.ப ஈழம்] [ந.ரகுராம்] இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களை தொட‌ர்‌ந்து கொ‌‌ன்று ‌கு‌வி‌த்தா‌ல் ஏவுகணை ‌வீசுவோ‌ம் எ‌ன்று இ‌ந்‌தியா பூ‌ச்சா‌ண்டி கா‌ட்டினாலே போது‌ம், ‌அ‌ங்கு‌ள்ள ‌சி‌‌ங்களவ‌ன் இ‌ந்தளவு‌க்கு ஆ‌ட்ட‌ம் கா‌ட்டுவானா? என்று இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌ட்ச‌ி‌‌யி‌ன் மா‌நில செயலாளர் தா.பா‌ண்டிய‌ன் கேள்வி எழுப்பியுள்ளார். இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்த இந்திய ம‌த்‌‌திய அரசை வ‌லியுறு‌த்த‌ி மூன்றாவது நாளாக உ‌ண்ணாநிலை இரு‌ந்து வரு‌ம் ‌விடுதலைச் ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் தொ‌ல். ‌திருமாவளவனை வா‌‌‌ழ்‌த்‌தி இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க…

  7. இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தக் கோரி சென்னையை அடுத்த மறைமலை நகரில் கடந்த நான்கு நாட்களாக நடத்தி வந்த உண்ணாநிலைப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று மாலை முடித்துக் கொண்டார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 370 views
  8. இலங்கையில் போர் நிறுத்தத்தினை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நான்காவது நாளாக மேற்கொண்டு வரும் உண்ணாநிலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அவுஸ்திரேலியா, சிட்னியில் உள்ள தமிழ் இளையோர்கள் நடத்திய அடையாள உண்ணாநிலை போராட்டம் நிறைவுபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 388 views
  9. சென்னை : இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களைப் படுகொலைக்கு ஆளாக்குவதை நிறுத்தப் போகிறதா, இல்லையா என்பதை அறிந்திட சில நாட்கள் பொறுத்திருப்பதுதான் நலம் என்று தான் கருதுவதாக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். இலங்கை பிரச்னை குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கைப் பிரச்னையில் கட‌ந்த ஐம்பதாண்டு காலமாக என்னால் முடிந்ததையெல்லாம் செய்து விட்டேன், இன்னும் செய்வதற்கும் தயாராக இருக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் ஆலோசனைக்கே விட்டுவிடுகிறேன். இதனிடையே மத்திய அரசின் அயலுறவு‌ச் செயலர் சிவசங்கர் மேனன், இன்றைக்கு இலங்கை சென்றுள்ளதும் முக்கியமானதாகவே கருத வேண்டியுள்ளது. எனவே, இந்தியப் பேரரசு என்ன முடிவெடுக்கிறது என்பதையும் -இலங்கை அரசு அப்பாவித் தமி…

  10. மல்லிகைத்தீவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் பலி வீரகேசரி இணையம் 1/18/2009 12:07:24 PM - திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்திலுள்ள மல்லிகைத்தீவில் நேற்றிரவு இடம் பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இவர்கள் உழவு இயந்திரமொன்றில் பயணம் செய்து கொண்டிருந்த வேளை பதுங்கியிருந்த நபர்களினால் இந்த துப்பாக்கிச் சூடு மேற் கொள்ளப்டப்டதாக கூறப்படுகின்றது. கொல்லப்டப்டடவர்களில் ஏனைய இருவரும் சிவிலியன்கள் என்றும் இந்த சம்பவத்தில் மற்றுமொரு சிவிலியன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்

  11. சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டு வன்னியில் பேரவலத்திற்கு உள்ளாகி உள்ள எமது மக்களின் நிலையை உலகின் கவனத்திற்கு கொணரும் வகையிலான கவனயீர்ப்பு போராட்டங்கள் தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகள் எங்கும் முன்னனெடுக்கப்பட்ட வருகின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 360 views
  12. ஈழத் தமிழர் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும், சிறிலங்கா அரசாங்கத்துடன் இந்திய மத்திய அரசாங்கம் பேச்சு நடத்தி போர் நிறுத்தம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தினை இன்று தொடங்கியுள்ளார். முன்னதாக சேப்பாக்கம் சென்னை விருந்தினர் மாளிகைக்கு முன்பாக உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறவிருந்தது. அப்பகுதியில் மாலை 5:00 மணிவரையே காவல்துறை அனுமதி வழங்கியது. இதனையடுத்து சென்னையில் இருந்து 60 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மறைமலை நகரில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 4:00 மணிக்கு திருமாவளவன் உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடங்கினார். உண்ணாநிலைப் போராட்டத்தினை கவிஞர் காசி …

  13. சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழ்மக்களை காப்பதற்கான ஒரு அவசரகால ஒன்றுகூடலுக்கு பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 401 views
  14. முல்லைத்தீவு மீது எறிகணைத்தாக்குதல்- 4 பொதுமக்கள் பலி – 11 பேர் காயம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் விசுவமடு பகுதி மீது நேற்று சனிக்கிழமை படையினர் நடத்திய கொரூர எறிகணைத்தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 4 சிறுவர்கள் உட்பட 11பேர் படுகாயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.காயமடைந்து புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின

    • 0 replies
    • 493 views
  15. யு.எஸ். பசுபிக் படைப்பிரிவின் உயர்மட்டக்குழு கிழக்கு மாகாண முதலமைச்சருடன் சந்திப்பு கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி வேலைகள் மற்றும் விடுவிக்கப்பட்ட சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வளிப்பது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை மாலை மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும் திருகோணமலைக்கு விஜயத்தை மேற்கொண்ட அமெரிக்காவின் யு.எஸ். பசுபிக் படைப்பிரிவின் உயர்மட்டத் தளபதிகள் குழுவிற்கும் யு.எஸ். எயிட் உயர்மட்டக்குழுவிற்கும் இடையே நடந்த கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. திருகோணமலையில் கிழக்கு மாகாணப் பிரதம செயலகத்தில் முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது முதலமைச்சர் சந்திரகாந்தனுடன் அவரின் சிரேஷ்ட ஆலோசகர…

    • 0 replies
    • 704 views
  16. வீரகேசரி வாரவெளியீடு - அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளாக்கும் ஜேர்மனியத் தூதுவர் ஜேர்கன் வீர்த்தும் இப் போது கொழும்பு அரசியல் மட்டத்தில் அடிக்கடி சர்ச்சைகளைச் சந்தித்து வருகின்றனர். இருவருமே இப்போது பொது நிகழ்வுகளில் பங்கேற்கின்ற போது வலியுறுத்தி வருகின்ற ஒரு விடயம் இலங்கை அரசாங்கம் உடனடியாக அரசியல் தீர்வு ஒன்றை முன் வைக்க வேண்டும் என்பதாகவே இருக்கிறது. இராணுவ ரீதியில் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாதென்றும் அரசியல் தீர்வு காணு மாறும் வலியுறுத்தும் வெளிநாட்டுத் தூதுவர்க ளும், இராஜதந்திரிகளும் தென்னிலங்கை அரசி யலில் வெறுப்போடு நோக்கப்படுகின்றனர். அரசாங்கத்தின் இராணுவத் தீர்வு முனைப் புக்கு ஆதரவு வழங்குவோர் அல்லது அதற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவிப்போர் தேச…

    • 2 replies
    • 1k views
  17. சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக வீர மரணம் அடையவும் தமிழ் இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார். மறைமலைநகரில் உண்ணாவிரதம் இருந்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை வாழ்த்தி அவர் பேசுகையில், இலங்கை பிரச்சனை தீர்க்க முடியாத பிரச்சனையே அல்ல. ஆனால், இந்திய அரசுக்கு மனமில்லை. தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கின்றனர். நிலவுக்கு சந்த்ராயன் விண்கலத்தை அனுப்புகின்றனர். ஒரு ஏவுகணையை இலங்கையை நோக்கி திருப்பி நிறுத்தினால் போதும். போர் நிறுத்தம் ஏற்பட்டுவிடும். ஆனால், இதை யார் செய்வது?. முல்லைத் தீவில் அடைக்கம் புகுந்துள்ள லட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை …

  18. மகிந்த பணம் கேட்டு வர உள்ளாரா? அமெரிக்காவில் 2-3 வருடங்களுக்கு முன்னதாக ஏற்பட தொடங்கிய பொருளாதார நெ ருக்கடி உலகில் பாரிய சிக்கலை உருவாக்கியிள்ளது. தமிழின அழிப்பையே தொழிலாகக் கொண்டுள்ள மகிந்தரும் "மாசி 4ம் திகதி" தொடக்கம் புலம் பெயர்ந்த "சிறிலங்கரிடம்" 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கேட்டு வர உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. முதலீடு செய்பவர்களுக்கு "சிங்கள் அரசின் உறிதல் பத்திரம் (பொண்ட்)" வழங்கப்படும். இதில் வேடிக்கை என்னவென்றால் முன்பு வெளினாட்டு வங்கிகள்க்கு விற்ற இனவாத அரசு அவர்கள் சிங்கள அரசின் திருப்பி கட்டக்கூடிய வலு குறைக்கப்பட்ட நிலையில் "தமிழின அழிப்பின் வெற்றியை" மூலதனமாக்கி மக்களை முட்டாளாக்க வெளிக்கிட்டுள்ளது. அ) அன்னிய நாட்டு செலாவாணி: வெளினாட்ட…

    • 2 replies
    • 1.6k views
  19. இலங்கையில், சண்டை நிறுத்தம் ஏற்பட இந்தியப் பேரரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று சனிக்கிழமை மூன்றாவது நாளாக உண்ணாநிலை இருந்து வருகிறார். அவர் உண்ணாநிலை இருந்து வரும் மறைமலை நகருக்கு நேரில் சென்று அவரைச் சந்தித்த இராமதாஸ், அவரது உடல் நலம் கருதி உண்ணாநிலையைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டார். இன்று அவர் தனது உண்ணாநிலையை முடித்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவதற்காகத்தான் இங்கு வந்தேன். ஆனால், இன்று போய் நாளை வா என்கிற வகையில் அவர் என்னிடம் பேசியிருக்கிறார். நாளையாவது அவர் உண்ணாநிலையை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் இராமதாஸ் வலியுறுத்தினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமா…

    • 0 replies
    • 796 views
  20. புதுக்குடியிருப்பு மற்றும் விசுவமடு பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 4 சிறுவர்கள் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 344 views
  21. Please take the time to follow the few and easy steps below to make a difference. A small amount of your time to make a big difference. Thanks. இந்த இணையத்துக்கு சொல்லவும் (அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகம்) http://citizensbriefingbook.change.gov/ide...=0&srKp=087 பெயரினையும் கடவுச்சொல்லையும் பதிந்து கொள்ளவும் 5 செக்கனில் உருவாக்க முடியும் இடது கரையில் இருக்கும் தேடல் பெட்டியில்(Search box ) Halt Tamil Genocide in Sri Lanka என்பதனை வெட்டி ஒட்டவும் அதில் தற்போது 3 தொடர்பு பட்ட செய்திகள் வருகின்றன ஒவ்வொன்றையும் டபிள் கிளிக் செய்து திறக்கவும் பின் ஒவ்வொரு தலைப்பிலும் VOTE UP என்பதனை கிளிக் செய்யவும் விரும்பியவர்கள் பதில் போடலாம் இதனை உங்கள் நண்பர்களு…

  22. தமிழர் போராட்டத்தில் பிரபாகரனின் பங்கு ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> Prominent Tamil Civil Socity Activist Shanthi Sachchithanandan speaks about Prabakaran's role in the Tamil National Struggle

    • 0 replies
    • 1.9k views
  23. திருகோணமலை மாவட்டம் மல்லிகைத்தீவு பகுதியில் சிறிலங்கா ஊர்காவல் படையினரின் காவலரண் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 3 ஊர்காவல் படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 318 views
  24. கிளிநொச்சி மாவட்டம் தருமபுரத்தில் இருந்து மும்முனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 51 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150 படையினர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: தருமபுரம் பகுதியில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 12:00 மணியளவில் சிறிலங்கா படையினரின் சிறப்பு தாக்குதல் கொமாண்டோக்கள் கனரக சூட்டாதரவுடன் மும்முனைகளில் முன்நகர்ந்தனர். இவர்கள் மீது விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதல் நடத்தினர். இன்று பிற்பகல் 2:00 மணியளவில் படையினரின் நகர்வுகள் யாவும் விடுதலைப் புலிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதில் 51 படையினர் கொல்லப்ப…

  25. கிழக்கு மாகாணத்தில் இயங்கி வரும் துணை இராணுவக் குழுவான பிள்ளையான் என்று அழைக்கப்படும் சந்திரகாந்தன் குழுவினரை அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளைப்பீட அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 382 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.