Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழத் தமிழர்களுக்காக நேற்று தமிழ்நாடு முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் போராட்டத்தில் இறங்கி பாடசாலை மற்றும் கல்லூரிகளில் வகுப்புகளை புறக்கணித்தனர் என அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 677 views
  2. ஆண்டுதோறும் தமிழில் சிறந்த நூல்களுக்கு தமிழ்நாடு அரசாங்கம் பரிசில்கள் வழங்கி வருகின்றது. அந்த வகையில் கடந்த 2007 ஆம் ஆண்டுக்கான பரிசில் பெறும் நூல் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஈழத் தமிழர் எழுதிய நூலும் பரிசில் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 563 views
  3. முல்லைத்தீவு வான்பரப்பில் இந்திய உளவு அமைப்பின் வானூர்தி வட்டமிட்டு சென்றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.4k views
  4. வடக்கு-கிழக்கு மாகாணம் உட்பட பல பகுதிகளிலும் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இன்றுவரை 9 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும் 27 பேர் தாக்கப்பட்டதாகவும் மகிந்த அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஸ் குணவர்த்தன நேற்று புதன்கிழமை காலை நாடாளுமன்றத்தில் அறிவித்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 519 views
  5. தமிழக நோக்கு -ஈழத்தமிழர்களை காப்பாற்ற காலதாமதம் வேண்டாம் - தமிழக ஆளுநர் : ஈழத்தமிழர்களை காப்பாற்ற காலதாமதம் வேண்டாம் - தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா : ஈழத்தமிழர்களை காப்பாற்ற காலதாமதம் வேண்டாம் என தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா இன்று தமிழக சட்டமன்றத்தில் இடம்பெற்ற தனது உரையில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையின் 2009ஆம் ஆண்டுக்கான முதலாவது கூட்டம் இன்று ஆரம்பமாகியது. அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய தமிழக ஆளுநர் இலங்கையில் உள்ள தமிழர்கள் சொந்த மண்ணில் வாழும் சுதந்திரமின்றி, உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பின்றி அனுபவித்து வரும் துயரங்களை நீக்கி, அங்கு நடைபெறும் போர், பிரச்சினையைத் தீர்க்க உதவாது என்ற கருத்தை இந்திய பேரரசு வலியுறுத்தி வருகிறது. இந்தி…

    • 4 replies
    • 1.3k views
  6. ஈழத்தமிழர்களுக்காக ஜெயலலிதா குரல் கொடுக்க வேண்டும காலம் தாழ்த்தினால் வருந்தும் நிலை ஏற்படும் - ஈழத்தமிழர்களுக்காக அதிமுக பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா குரல் கொடுக்க வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் ஊடகவியலாளர் மத்திய உரையாற்றிய அவர், இலங்கையில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு இந்த தருணத்தில் இந்திய மத்திய அரசு உதவி செய்யாமல், பின்னர் உதவி செய்வதால் எந்தவித பயனும் இல்லை. இந்திய மத்திய அரசு இலங்கையில் தமிழர்களை கொல்ல உதவி செய்து வருகிறது. இலங்கை பிரச்சினை தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளின் கூட்டணிக் கட்சிகளுக்குகிடையில் முரண்பாடு காணப்படுகிறது. …

  7. இலங்கையில் சிறிலங்க அரசு தமிழர்களை ஒட்டு மொத்தமாக அழித்திட திட்டமிட்டு நடத்‌திவரும் அரச பயங்கரவாதத்திற்கு முடிவுகட்ட, உடனடியாக போர் நிறுத்தம் செய்யுமாறு வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விடுத்த வேண்டுகோளை முற்றிலுமாக புறந்தள்ளிவிட்டு, ராஜபக்ச அரசின் இன ஒடுக்கல் நடவடிக்கைகளுக்கு இன்முகத்துடன் ஆதரவளித்துவிட்டுத் திரும்பியுள்ளார் இந்திய அயலுறவு செயலர் சிவ்சங்கர் மேனன். மேலும்

    • 0 replies
    • 972 views
  8. சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்புக்கு உள்ளாகி மரணத்தின் வாசலில் நிற்கும் தமிழ் மக்களை காப்பதற்கான அவசரகால ஒன்றுகூடல் நேற்று சுவிற்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 516 views
  9. எங்கே பிரபாகரன்? நிஜ கள நிலவரம்! [புதன்கிழமை, ஜனவரி 21, 2009, நக்கீரன்] ஈழத்தமிழர்களை அழித்தொழிக்கும் இறுதி யுத்தத்தை உக்கிரமாக நடத்திவரும் இலங்கை அதிபர் ராஜபக்சே, முல்லைத் தீவினை பிடிப்பதற்காக மட்டுமே 50 ஆயிரம் ராணுவத்தினரை களமிறக்கியுள்ளார். "ஏப்ரலுக்குள் முல்லைத்தீவை கைப்பற்றி, பிரபாகரன் உள்ளிட்ட புலிகளை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும்' என்பது ராணுவத்தினருக்கு ராஜபக்சே விடுத்துள்ள கட்டளை! ஏப்ரல் என்கிற டெட்லைன் எதற்காக என்று இலங்கை அரசு அதிகாரி கள் வட்டாரங்களில் விசாரித்தபோது புதிய தகவல்கள் கிடைக்கின்றன. ""இலங்கையின் அதிபராக 2006-ல் பதவிக்கு வந்தார் ராஜபக்சே. இவரது பதவிக்காலம் 6 வருடங்கள். அதன்படி ராஜபக்சேவின் பதவிக்காலம் 2012-ல் முடிகிறத…

  10. வன்னியில் சிறிலங்கா அரசாங்கம் நடத்தி வரும் மாபெரும் இன அழிப்பு படையெடுப்பில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சிறிலங்கா முப்படைகளும் பொதுமக்களை இலக்கு வைத்து நடத்திய அகோரமான குண்டுத் தாக்குதல்களில் 66 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 223 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 14 பேர் நேற்று நடைபெற்ற பீரங்கித் தாக்குதல்களில் மட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 73 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 468 views
  11. வீரகேசரி நாளேடு - வடக்கில் தமிழீழம் போன்று மத்திய மாகாணத்திலும் பிரிவினைவாதத்தினை ஏற்படுத்தவே அரசாங்கம் கூட்டணி அமைத்துள்ளது. பிரபாகரனுடன் கைகுலுக்கியும் வாழ்த்துத் தெரிவித்தும் ஒன்றாகப் படம்பிடித்தவர்களுடனேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று கூட்டணி அமைத்துள்ளது என்று ஜே. வி. பி.யின் பிரசார செயலாளரும் எம்.பி.யுமான விஜித்த ஹேரத் தெரிவித்தார். மத்திய மாகாணத்திற்கு அரசியலமைப்புக்கு மேற்பட்ட அதிகாரங்களையே ஆறுமுகன் தொண்டமானும், சந்திரசேகரனும் கோருகின்றனர். இதனால் அரசாங்கம் அமைத்துள்ள இந்தக் கூட்டணி பிரிவினைவாதத்தையே ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். மக்கள் விடுதலை முன்னணியின் விசேட செய்தியாளர் மாநாடு இன்று புதன்கிழமை தேசிய நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற…

  12. பொன்சேகா கூற்றை நிரூபிக்கும் தலைவர்கள் தமிழக அரசியல் தலைவர்கள் கோமாளிகள், அவர்கள் சொல்வதையெல்லாம் டெல்லி அரசு கேட்காது என்று சிறிலங்க இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியபோது அதனை எதிர்த்து அறிக்கை வெளியிடாத (ஜெயலலிதா தவிர) தலைவர்களே தமிழ்நாட்டில் இல்லை. ஆனால், ஈழத் தமிழர்களைக் காக்க போர் நிறுத்தம் செய் என்று சிறிலங்க அரசிற்கு நெருக்குதல் தருமாறு கடந்த நூறு நாட்களாக தமிழக அரசும், அனைத்துக் கட்சிகளும் விடுத்த கோரிக்கையை கண்டு கொள்ளாதது மட்டுமின்றி, கொழும்பு சென்ற இந்திய அயலுறவுச் செயலர் சி‌‌வ் சங்கர் மேனன் போர் நிறுத்தம் குறித்து எதுவும் பேசவில்லை. மாறாக, “சிறிலங்காவுடன் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போதுதான் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நெருக்கமாவும், ஆழமாக…

  13. இலங்கை பிரச்சனை: அரசியல்தான் காரணம்: தலாய்லாமா இலங்கை பிரச்சனைக்கு மதம், இனம் காரணம் அல்ல என்றும் அரசியல்தான் காரணம் என்றும் புத்தமத தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார். சென்னை பல்கலைக்கழகத்திற்கு வந்த புத்தமத தலைவர் தலாய் லாமா, செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்களே, புத்தமதம் வன்முறைக்கு எதிரான மதம் என்பதால் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்துவீர்களா என்று கேட்டீர்கள். எந்த இனமும் வன்முறையால் அழிக்கப்படக்கூடாது. இலங்கைக்கு நான் பல வருடங்களுக்கு முன்பு செல்ல முயன்றேன். ஆனால் அங்கு செல்ல அனுமதி கிடைக்கவில்லை. இலங்கை பிரச்சனை குறித்து அடுத்தகட்டமாக நோபல் பரிசு பெற்றவர்களை அழைத்து பேச உள்ளேன். இலங்கை, பர்…

  14. ஈழத்தமிழர்களுக்கு ஜெ. குரல் கொடுக்க வேண்டும் - பாஜக ஈழத்தமிழர்களுக்காக ஜெயலலிதா குரல் கொடுக்க வேண்டும் என்று பாஜகவின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் எம.பி. கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு இந்த தருணத்தில் மத்திய அரசு உதவி செய்யாமல், பின்னர் உதவி செய்வதால் எந்தவித பயனும் இல்லை. மத்திய அரசு இலங்கையில் தமிழர்களை கொல்ல உதவி செய்து வருகிறது. இலங்கை பிரச்சினை தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளின் கூட்டணிகளக்கிடையே முரண்பாடு காணப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இலங்கை பிரச்சினையில் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என்றார். - நக்கீரன்

  15. இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி எவ்விதப் பயனும் ஏற்படாததால் திடீரென சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். அவரது உடல்நிலையைக் கருதி பல்வேறு கட்சித் தலைவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடக் கோரினர். அவர்கள் கோரிக்கையை ஏற்று நான்கு நாட்களுடன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார் திருமா. உண்ணாவிரதத்தினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தோம். `அத்துமீறுவோம், அடங்க மறுப்போம்' என்ற கொள்கைக்குப் பிறகு அம்பேத்கரின் மூன்று கொள்கையை அடிப்படையாகக் கொண்…

  16. முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் முடக்கப்பட்ட நிலையிலும் `நாங்கள் ஒன்றும் புலி வாலல்ல! யானையின் முறுக்கிய தும்பிக்கை!' என்று அடிக்கடி காட்டி வருகிறார்கள் விடுதலைப்புலிகள். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்று மணிக்கு முல்லைத்தீவுக்குள் நுழைவதற்காக கிளிநொச்சி அருகே தருமபுரத்திலிருந்து கிளம்பி வந்தது சிங்கள ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படை. எறிகணை, எந்திரத் துப்பாக்கிகளின் குண்டு மழையுடன் கூடவே விமானப்படையின் `கிளஸ்டர்' குண்டுவீச்சும் துணை வர முன் நகர்ந்தது. அடிமேல் அடி வைத்து முன்னேறிய சிங்களப் படையை எதிர்கொண்டது வெறும் பதினைந்தே பேர் கொண்ட புலிகளின் படை. இதுவரை இல்லாத அளவுக்கு முதல்முறையாக புத்தம்புதிய பி.எம்.பி.-1 டாங்கியைப் புலிகள் பயன்படுத்த 51 ராணுவத்தினர் பலி! 150 …

  17. Mass Protest Outside BBC January 21st, 2009 · No Comments Venue Friday 23rd January 2:30pm till 6:30pm Outside BBC TV centre Wood Lane, London W12 7RJ Nearest Underground : White City (Central Line) Bus : 72, 95, 220, 272 Car Parking : Metered off street parking, Westfield centre parking, NCP off Rockley Road A number of Tamil schools and several university Tamil student unions in the UK are planning to have a large scale demonstration outside the BBC building at White City, London. We want to urge the BBC to expose the on going state terrorism and genocide against Tamils in Sri Lanka. It is crucial that school children acco…

    • 0 replies
    • 1.3k views
  18. TamilsAgainstGenocide.org | what you can’t hide is genocide PRESS RELEASE January 20, 2009 Direct E-mail Inquiries to: info@TamilsAgainstGenocide.org Rally Urging India to Stop Supporting Tamil Genocide in Sri Lanka Washington, D.C. Jan. 20, 2009 – Tamils Against Genocide is organizing a rally to encourage the Indian government to emulate the ideals of Mahatma Gandhi in recognizing the freedom struggle of Tamils in Sri Lanka and stop all assistance to the Genocide of Tamils perpetrated by the Sri Lankan Government. The rally will be held from noon to 3 pm this Friday, January 23rd in front of the Indian Embassy (2107 Massachusetts Avenu…

    • 0 replies
    • 1.1k views
  19. தமிழகம் முழுக்க இன்று மாணவர்கள் ஈழத்தமிழர் துயர்துடைக்கவும், சிங்கள இனவெறி அரசுக்கு துணைபோகும் இந்திய மத்திய அரசைக் கண்டித்தும் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். இதில் தமிழகத்திலுள்ள பெரும்பாலான கல்லூரிகள் பங்கெடுத்து போராட்டத்தை வெற்றி பெற செய்தனர். ஆயினும் சில இடங்களில் போராடும் மாணவர்களை காவல்துறை கைது செய்தது. திருச்சி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இக்கைதை கண்டிக்கும்வகையில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர்,'இலங்கையின் முல்லை தீவில் மரணத்தின் விளிம்பில் இருக்கும் 6 லட்சம் தமிழ் மக்களின் உயிர் காக்கும் போராட்டத்தை வகுப்புகளைப் புறக்…

  20. இடம்பெயர்ந்த மக்களை நிரந்தரமாக தங்கவைக்க மூன்று புதியகிராமங்கள் உருவாக்க திட்டம் - ஆக்கிரமித்த பகுதிகளில் மீள்குடியேற்றும் எண்ணமில்லை??? (வியாழக்கிழமை, 22 சனவரி 2009) மயூரன்(பிரான்ஸ்) அண்மைய இராணுவ நடவடிக்கையில் இடம்பெயர்ந்த மக்களை உயர்பாதுகாப்புவலயமாக்கி குடியமர்த்தி நிரந்தர குடியேற்ற கிராமமாக்க சிங்கள அரசு பாரிய திட்டமொன்றினை வகுத்துள்ளது. இதன்படி ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் தொடர்ந்தும் இராணுவம் நிலைகொண்டு சிங்களக்குடியேற்றங்களை நிறுவும் பாரிய சிங்களமயமாக்கும் திட்டமொன்றினை வகுத்திருப்பது தெரியவந்துள்ளது. இதன்படி புதிய மூன்று கிராமங்களை உருவாக்கவுள்ளதாக லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இக்கிராமங்களுக்கு ராமநாதன் சுதந்திரபுர விமுக்திகம, அருணாசல…

    • 2 replies
    • 1.4k views
  21. விசுவமடு ரெட்பானாவில் நடந்த எறிகணைத்தாக்குதலில் இருவர் படுகொலை - இருவர் படுகாயம் ( வியாழக்கிழமை 22 சனவரி 2009 )ரவிலோகன் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் குடியிருப்புகளை இலக்கு வைத்து சிறீலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இன்று புதன்கிழமை விசுவமடு ரெட்பான பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் இரு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். விசுவமடு வள்ளுவர்புரம் பகுதியில் சிறிலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் இரண்டு மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 02 பேர் காயமடைந்துள்ளனர்.இன்று பி.ப 3.00 மணிக்கு இத்தாக்குதல் நடந்துள்ளது. இதில் 45 அகவையுடைய காரைநகரைச் சேர்ந்த செல்வரத்தினம் 35 அகவையுடைய சற்குணராஜா ஆகியோர் கொல்லப்பட்ட…

    • 0 replies
    • 942 views
  22. Vanni, a humanitarian catastrophe in the making Since the escalation of hostilities in early 2006, the movement of goods and people into the northern part of Sri Lanka was restricted by the government. Ever since the attention of the government’s military campaign shifted to north in 2008, the blockade was escalated to essential items such as food medicine and fuel. The government has used the food, medicine and other essentials as a weapon to starve and cripple them out of their homes into refugee camps administrated by the military. As part of this strategy, the Government forced the International NGOs out of the region citing security risk in September 2008. Lat…

  23. அபிவிருத்தி மனிதாபிமான பணியென்ற போர்வையில் கிழக்கில் கண் - இந்தியா தவிர்ந்த 43 வெளி நாட்டு ராசதந்திரிகள் கிழக்குக்கு படையெடுப்பு!! ஜ புதன்கிழமைஇ 21 சனவரி 2009 ஸ ஜ சந்திரவதனி ஸ 43 வெளிநாட்டு இராஜதந்திரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை சிவநேசதுரை சந்திரகாந்தனை கிழக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்கா, அயர்லாந்து, சைப்பிரஸ், ருமேனியா, துருக்கி, அவுஸ்திரேலியா, ஜப்பான், ஜேர்மன், நியூசிலாந்து, ரஷ்யா, ஹங்கேரி, பாகிஸ்தான், நெதர்லாந்து, ஐஸ்லான்ட், பிரேஸில், சிலி, கிறீஸ், ஆஸ்திரியா இஸ்ரேல் ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர். இராஜதந்திரிகள் கிழக்கு மாகாண நிலைவரம் பற்றி விசாரித்து அறிந்து கொண்டனர். …

    • 0 replies
    • 837 views
  24. சுவிஸ் வாழ் தமிழர்களின் ஐ.நா.வை நோக்கிய எழுச்சிப் பேரணி இன்று (21.01.2009) நடைபெற்றது. மரணத்தின் வாசலில்... நிகழ்வில் பல தமிழ் மக்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படங்கள்..... http://www.tamilseythi.com/tamilar/TYO-UNO...2009-01-21.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.