ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143428 topics in this forum
-
அளம்பில் பகுதியில் படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு - புலிகள் அறிவிப்பு வீரகேசரி நாளேடு 12/25/2008 9:23:23 PM - முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் முன்நகர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ள படையினருக்கும், புலிகளுக்குமிடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. முல்லைத்தீவு அளம்பில் ஊடாக நேற்று படையினர் முன்னேற முயற்சித்துள்ளனர். கடும் ஷெல் தாக்குதல்களை நடத்தியவாறு முன்னேற முயன்ற படையினரை வழிமறித்து புலிகள் கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். படையினரின் முன்னகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும
-
- 0 replies
- 951 views
-
-
பரசூற் மூலம் கொத்தணிக் (கிளஸ்ர்) குண்டு வீச்சு திகதி: 24.12.2008 // தமிழீழம் // [வன்னியன்] கிளிநொச்சி மருத்துவமனையை அண்டிய பகுதிகளில் சிறிலங்கா வான்படை விமானங்கள் ‘பரசூற்' மூலமாக சர்வதேச ரீதியாக தடை விதிக்கப்பட்டுள்ள கொத்தணிக் குண்டுகளை இறக்கித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. கொத்தணிக் குண்டுகளை இறக்கப்பயன்படுத்தப்பட்ட ‘பரசூற்' தற்போது அப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் 29ம் திகதி கல்லாறு இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையினர் கொத்தணிக்குண்டுகளைப் பயன்படுத்தியே தாக்குதல்களை மேற்கொண்டுள்ளமை அப்பகுதியில் கிடந்த குண்டுச் சிதறல்கள் மற்றும் பொருட்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதேவ…
-
- 32 replies
- 7.8k views
-
-
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது நடவடிக்கை : திமுகவிற்கு காங்கிரஸ் எச்சரிக்கை டெல்லி : தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தமிழக அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறப்போவதாக காங்கிரஸ் கட்சி எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வீரப்பமொய்லி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, நாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். ஆனால், அண்மைக்காலமாக, தமிழகத்தில் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக சிலர் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது த…
-
- 1 reply
- 1.6k views
-
-
வெற்றியை நெருங்கும் வேளையில் நத்தார் செய்தி மிகவும் பொருத்தமானது - கிறிஸ்மஸ் வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி வீரகேசரி நாளேடு 12/24/2008 11:10:31 PM - இலங்கை வாழ் மக்களிடம் மிக நீண்ட காலமாக குடிகொண்டிருந்த அவநம்பிக்கை என்னும் தடையை உடைத்து, பயங்கரவாதத்தை முறியடித்து வெற்றியை நெருங்கும் இவ்வேளையில் நத்தார் கொண்டு வரும் அன்பும் கருணையும் பொதிந்த செய்தி மிகவும் பொருத்தமானதாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நத்தார் பண்டிகையானது இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன் சமாதானத்தின் இளவரசராக இவ்வுலகில் பிறந்த இயேசுநாதரின் பிறப்பு பற்றிய மகிழ்ச்சிகரமான செய்தியை உலகிற்குக் கொண்டு வர…
-
- 2 replies
- 1.5k views
-
-
வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் மிகவும் சக்தி வாய்ந்த குண்டுகளை வவுனியா பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து மீட்டுள்ளனர். வவுனியா நகரில் நேற்றையதினம் சந்தேகத்திடமான நபர் ஒருவரின் நடமாட்டம் குறித்து அறிந்த இரகசியப் பொலிஸார் அந்த நபரை நகர் பகுதியிலுள்ள தேவாலயத்தில் கைதுசெய்ய முற்பட்டுள்ளனர். அதன்போது அந்த நபர் தன்னிடமிருந்த சைனட் வில்லையை உண்ண முற்பட்டதாகவும், அதனைத் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டதாகவும் வவுனியாப் பொலிஸார் தெரிவித்தனர். அவரிடமிருந்து பெற்ற தகவல்களையடுத்து இன்று காலை விஷேட பொலிஸ் அணி செட்டிக்குளம் புஞ்சிக்குளம் பெரியமுறிப்பு பிரதேசத்தின் காட்டு பகுதிக்கு சென்று தேடுதல் நடத்திய போது மிகவும் சக்தி வாய்ந்த குண்டுகளை மீட்டுள்ளனர். இதுவரையில்…
-
- 1 reply
- 3.3k views
-
-
ஈழத்தில் தினமும் அதிகரித்துவரும் மனித அவலத்தை தவிர்பதற்காகவும், தற்போது தாயகத்தில் இடம்பெயர்ந்து அல்லலுறும் எம் உறவுகளின் துயர் துடைப்பதற்காகவும், இயற்கை அன்னையின் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளின் புனர்வாழ்விற்காகவும் அவுஸ்ரேலிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட 'அவசரகால உதவி நிவாரணத்திட்ட நிதி சேகரிப்பு” நிகழ்வு இன்றையதினம் (25.12.2008) அவுஸ்ரேலியாவிலும், நியூசிலாந்திலும் நடைபெற்றது. இந்த நத்தார் வேண்டுதல் ரேடியோதொன் நிகழ்ச்சியானது, விக்ரோரிய ஈழத்தமிழ்ச் சங்கத்தின் மெல்பேண் 3CR தமிழ்க்குரல் வானொலி ஊடாகவும் 24 மணி நேர இன்பத்தமிழ் வானொலியின் ஊடாகவும் நேரடியாக ஒலிபரப்பானதோடு, இவ் ஊடகங்களுடன் மெல்பேணின் 3ZZZ தமிழோசை, வானமுதம், வானிசை, மற்ற…
-
- 0 replies
- 678 views
-
-
படைத்தரப்பைச் சேர்ந்தவரை மீட்க புலிகளிடம் பேச்சுவார்த்தை: சிறிலங்கா இராணுவப் பேச்சாளளர் [புதன்கிழமை, 24 டிசெம்பர் 2008, 06:20 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] கிளாலி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (16.12.08) இடம்பெற்ற மோதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகளால் பிடிக்கப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்தவர் தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையினை அரசாங்கம் மேற்கொள்ளும் என சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகள் வசம் உள்ளவர் படைத்தரப்பைச் சேர்ந்தவர். அவரை விடுவிப்பது தொடர்பான முயற்சிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகள் வசம் படைத்தரப்பைச் சேர்ந்தவர் இரு…
-
- 15 replies
- 2.3k views
-
-
கிளிநொச்சியைக் கைப்பற்றுவதில் தாமதம் ஏற்படும் - கெஹலிய ரம்புக்வெல்ல : தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சியைக் கைப்பற்றுவதில் தாமதம் ஏற்படும் என அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நகரில் சிவிலியன்கள் இன்னமும் தங்கியிருப்பதனால் முழுவீச்சில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியையும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் சுமார் 150,000 த்திற்கும் அதிகமான சிவிலியன்கள் இடம்பெயர்ந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின் போது சிவிலியன்களுக்கு சேதம் ஏற்படக் கூடாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுமையான உத்தரவு பிறப்பித்துள…
-
- 0 replies
- 1.8k views
-
-
அரச சார்பற்ற தொண்டு நிறுவனமான ஒக்ஸ்பாம் மன்னார் மக்களுக்கான தனது பணிகளை நிறுத்தி வெளியேறத் தீர்மானித்துள்ளது. மன்னாரில் விடுதலைப் புலிகளின் நிருவாகப் பிரதேசத்தில் இருந்தவாறு விவசாயம், வாழ்க்கைதர மேம்பாடு, சிறுவர் போசாக்கு, மற்றும் கடற்றொழில் ஊக்குவிப்பு என்பறவற்றிற்கு இந்த அமைப்பு உதவி புரிந்து வந்திருந்தது. சிறீலங்கா படைகளினால் மன்னார் வல்வளைக்கப்பட்டுள்ளபோது பலமுறை இடம்பெயர்ந்த மக்களுடன் இந்த அமைப்பும் இடம்பெயர்ந்து இயங்கி வந்தது. இந்த நிலையில் சிறீலங்கா அரசின் அறிவித்தலை அடுத்து வன்னியில் இருந்து வெளியேறி வவுனியாவில் இயங்கிவந்த ஒக்ஸ்பாம், தனது வடக்குப் பிரதேசத்திற்கான அலுவலகத்தை மூடிவிட்டு வெளியேறவுள்ளதாக அறிவித்துள்ளது. http://www.tamilskynews.com/…
-
- 0 replies
- 609 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்வது தொடர்பாக சிறிலங்காவின் முப்படைத் தளபதிகளுடன் அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கலந்துரையாடி வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 391 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் பகுதியில் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டு;ள்ளதுடன் இதன்போது படையினருக்கு பலத்த இழப்பு எற்பட்டுள்ளதாகவும் ஆயதங்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் செவ்வாக்கிழமை பெரும் சூட்டாதரவுடன் படையினர் அளம்பில் ஊடாக முன்நகர்வை ஆரம்பித்தனர். இதற்கெதிராக தமிழீழ விடுதலைப்புலிகள் கடும் முறியடிப்பு தாக்குதல் நடத்தி படையினரை தமது பழைய நிலைக்கு துரத்தியடித்தனர். இதில் படையினருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன் ஆயதங்கள் பல விடுதலைப்புலிகளினால் மீட்க்கப்பட்டுள்ளன. இதன்படி ஆர்.பி.ஜி - 01,ஆர்.பி.ஜி எறிகணை - 01,புறப்ளர் - 01,நடுத்தர ரவைகள் 1 ,128, தலைக்கவசம் உட்பட பெருமளவிலான ஆ…
-
- 0 replies
- 2.2k views
-
-
இலங்கைக்கான பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு அமெரிக்கா அதன் பிரஜைகளுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கைகான சுற்றுலாக்கள் மற்றும் தங்கியிருத்தலை தவிர்த்துக் கொள்ளுமாறு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அதன் பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. பயங்கர தாக்குதல்கள் இடம்பெறக் கூடும் என்பதனால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக வடக்கு மற்றும் பெரும்பான்மையான கிழக்கு பகுதிகளுக்கு விஜயம் செய்வது ஆபத்தானதென அமெரிக்கா தெரிவித்துள்ளது. வட மாகாணம், அனுராதபுரம், மதவாச்சிய, ஹொரவபொத்தான, கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம் உள்ளிட்ட பிரதேசங்கள் தடை செய்யப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கர்களுக்கு நேரட…
-
- 3 replies
- 1.4k views
-
-
நேபாளத்தில் பிரச்சந்தா தலைமையிலான மாவோயிஸ்ட்டுகளின் ஆட்சியை சீர்குலைக்கும் நடவடிக்கையில் இந்திய "றோ" இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 399 views
-
-
கிளிநொச்சியைக் கைப்பற்ற காலவரையறைக் குறிப்பிட முடியாவிட்டாலும் விரைவில் கைப்பற்றி விடுவோம் என்றும் ஒன்றரை இலட்சம் பொதுமக்கள் இன்னமும் கிளிநொச்சியில் இருப்பதாகவும் சிறிலங்கா அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 398 views
-
-
http://www.orunews.com/?p=3101 சில வருடங்களுக்கு முன், இதே கிறிஸ்மச் தினத்தில் ஆராதனையில் இருந்த 'மாமனிதர்' ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார். இன்று இறுதியாக மாதாவே இலக்கு!!! இன்னும் கிறிஸ்தவ உலகம் மௌனத்தில் .......?????????????????????????????????????
-
- 4 replies
- 2k views
-
-
"மோதல்களால் இடம்பெயர்ந்தவர்களை பாதுகாக்க வேண்டும்"ஐ.நா இலங்கையிடம் கோரிக்கை வீரகேசரி இணையம் 12/25/2008 10:26:24 AM - உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் முகாம்களில் தடுத்துவைக்கப்படக் கூடாது எனத் தெரிவித்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி, இடம்பெயர்ந்தவர்களும் சுதந்திரமாக நடமாடுவதற்கு உரிமையுடையவர்கள் எனக் கூறியுள்ளார். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருக்கும் மக்கள் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறித்து கவனம் செலுத்தியிருப்பதாக, ஐக்கிய நாடுகள் சபையின், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் மனித உரிமைகளுக்கான செயலாளர் வொல்டர் கலின், இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். வன்னியிலிர…
-
- 0 replies
- 674 views
-
-
வீரகேசரி நாளேடு - ஒரு தேசத்தின் விடுதலைப் போராட்டம் என்பது ஒரு நகரத்தை மட்டும் மையமாகக் கொண்டது அல்ல என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார். ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: நிலப்பகுதிகளை இழப்பதும், மீளக் கைப்பற்றுவதும் பொதுவானது தான். எமது விடுதலைப் போராட்ட இலட்சியத்தை வென்றெடுக்கும் வரையில் தொடர்ந்து போர் நகரங்கள் உருவாக்கப்படும். அமைதிப் பேச்சுக்களுக்கு முன்னர் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிபந்தனையை நிராகரிக்கிறோம். தற்போதைய சூழ்நிலையில் அதாவது ஆயுதங்களை விடுதலைப் புலிகள் கைவிட்டு விட்டு…
-
- 16 replies
- 3.6k views
-
-
The presenter at a Christmas show organized in Paris, by 'Negombo Paris Organization' had been badly assaulted by the head of Education Centre, another Sri Lankan organization in France, according to reports reaching 'our reporter' The chairman of the Centre, who has accused the presenter of not giving him enough publicity, too, has been retaliated before fleeing the scene. Later, he had returned with a group of Sri Lankans, including a top official at the SLFP branch office in France, and had again assaulted the presenter. People attending the Christmas show had intervened before the situation turned for the worse. They have also lodged a complaint with …
-
- 0 replies
- 2.1k views
-
-
யாழ் அரச அதிபருக்கு சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கையெழுத்து இட்ட கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. யாழ்ப்பாணத்தில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களில் செயற்பாடுகள் மற்றும் அவற்றின் செலவுகள் பற்றிய நிதியறிக்கை என்பனவற்றினை அனுப்பி வைக்குமாறு இந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாக, யாழ் செய்தியாளர் கூறுகின்றார். அத்துடன், யாழ் அரச அதிபரை காங்கேசன்துறை படை முகாமிற்கு அழைத்து, மிகவும் இரகசியமான முறையில் அவரிடம் இந்தக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச செயலக அதிகாரியொருவர் எமது செய்தியாளருக்குத் தெரிவித்தார். தமிழர் தாயகத்தில் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வந்த அரச சார்பற்ற நிறுவனங்களை வெளியேற்றுவதற்கு ச…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்வது தொடர்பாக சிறிலங்காவின் முப்படைத் தளபதிகளுடன் அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கலந்துரையாடி வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 828 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அளம்பில் ஊடாக சிறிலங்கா படை மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதுடன் படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாநிலை போராட்டம் ஜபுதன்கிழமைஇ 24 டிசெம்பர் 2008இ 09:33 பி.ப ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ சிறிலங்காவின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாநிலை போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர். களுத்துறைஇ வெலிக்கடைஇ பூசாஇ மகசீன் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 1இ200-க்கும் அதிகமான கைதிகளே சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். அரசியல்வாதிகளின் உறுதிமொழியினால் உண்ணாநிலை இருக்கும் முடிவை தாங்கள் மாற்றிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ள கைதிகள்இ இம்முறை உறுதிமொழிகள் எதனையும் கேட்கப்போவதில்லை எனவும் கூறியுள்ளனர். தடுத்து வைக்கப்பட்…
-
- 1 reply
- 676 views
-
-
விடுதலைப் புலிகளின் ஓர் விமான ஓடுபாதையைக் கைப்பற்றியுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு இலங்கையின் வடக்கே மாங்குளத்திற்குக் கிழக்கே அம்பகாமம் பகுதியில் விடுதலைப் புலிகளின் 350 மீட்டர் நீளமுள்ள மேலும் ஒரு விமான ஓடுபாதையை இராணுவத்தினர் புதன்கிழமை காலை முழுமையாகக் கைப்பற்றியிருப்பதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்திருக்கின்றது. இதனிடையில், பரந்தன் மற்றும் முகமாலை பகுதிகளில் விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது நான்கு தடவைகள் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. ஆனால் பரந்தன் சந்திக்கருகில் உள்ள கத்தோலிக்கர்களின் திருக்குடும்ப கன்னியர் மடத்தின் மீதும். அதற்கருகில் இருந்த தேவாலயம் ஒன்றின் மீதும் வான்வழி தாக்குதல் நடத்தப…
-
- 3 replies
- 2.8k views
-
-
சிங்கள தேசத்தின் வரலாற்றுத் தோல்வி விரைவில் - திருமலை தமிழ் மக்கள் பேரவை புதன், 24 டிசம்பர் 2008, 20:22 மணி தமிழீழம் [செய்தியாளர் தாயகன்] சிங்கள தேசம் வெகு விரைவில் வரலாற்றுத் தோல்வியைச் சந்திக்கும் என, திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவை எதிர்வு கூறியுள்ளது. எவ்வாறான இடர்கள், துன்பங்கள், வறுமை என்பன ஏற்பட்டாலும் போரை முன்னெடுப்பதில் வன்னி மக்கள் உறுதியுடன் பேரெழுச்சி கொண்டிருப்பதாக, திருமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறீலங்கா படையினருக்கு வன்னி மக்கள் சமாதி கட்டும் செய்தி வெகு விரைவில் அனைத்துலகமும் அறிந்துகொள்ளும் எனவும், போரை எதிர்கொள்ளத் துணிந்து நிற்கும் வன்னி மக்களுக்கு தமிழீழத்தின் ஏனைய …
-
- 4 replies
- 2.2k views
-
-
யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் உள்ள படைச் சோதனைச் சாவடியில் ஆண் படையினருடன் இணைந்து பணியில் ஈடுபட்ட பெண்படைச் சிப்பாய் ஒருவரை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி விட்டு நஞ்சூட்டிக் கொலை செய்துள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற ஊர்காவற்துறை நீதவான், பிரோத பிரிசோதனைக்காக கொழும்பிற்கு உடலை அனுப்புமாறு பணித்ததுடன், சந்தேகத்திற்குரிய படையினர் மூவரையும் கைது செய்யுமாறும் பொலிசார் உத்தரவிட்டுள்ளார் http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/
-
- 9 replies
- 3.2k views
-