ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
அஸ்தமனத்தை நோக்கி ‘கிழக்கின் உதயம்’! [30 நவம்பர் 2008, ஞாயிற்றுக்கிழமை 11:10 மு.ப இலங்கை ‘விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து கிழக்கு மாகாணத்தை விடுவித்து அங்கு ஜனநாயக ஆட்சியை மலரச்செய்தல்’ - என்ற பெயரில் இலங்கை அரசு முன்னெடுத்த ‘கிழக்கின் உதயம்’ செயற்பாடு அஸ்தமனத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பது துலாம்பரமாகி வருகின்றது. ‘புலிப் பயங்கரவாதத்தைக்’ கிழக்கில் இருந்து விரட்டியடித்து விட்டோம் என்று கொழும்பு அரசு கொண்டாட, ‘ஒரிஜினல்’ பயங்கரவாதத்துக்குள் கிழக்கு மக்கள் இப்போதுதான் விழுந்திருக்கின்றார்கள். புலிகளை விரட்டி, ஜனநாயக ஆட்சி என்ற பெய ரில் ஒட்டுப்படைகளையும், துணைப்படைகளை யும் ஒன்று சேர்த்து, ஆயுதக்குழுவிடம் அதிகாரத்தை ஒப்படைத்தது மஹிந்தரின் அரசு. ‘கிழக்க…
-
- 1 reply
- 1.5k views
-
-
கிழக்கு மாகாணத்தில் 33,000 இளம் விதவைகள் வாழ்ந்துவருவது தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சு நடத்திய கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்டிருப்பதாக ‘ராவய’ பத்திரகை செய்தி வெளியிட்டுள்ளது. ‘கிழக்கின் உதயம்’ அபிவிருத்தித் திட்டத்தின் கீழேயே இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாக தேசநிர்மாண அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே கூறியிருப்பதாக ராவயவில் குறிப்பிடப்பட்டுள்ளது .கிழக்கிலுள்ள 33,000 ஆயிரம் விதவைகளும் 30 வயதுக்குக் குறைந்தவர்கள் எனவும், இவர்களில் 95 வீதமானவர்களுக்குக் குழந்தைகள் இருப்பதாகவும் அமைச்சின் கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இளம் விதவைத் தாய்மாரில் 25 வீதமானவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், எஞ்சியவர்களுக்கு 1-4 குழந்தைகள் இருப்பதாகவும் அதி…
-
- 0 replies
- 933 views
-
-
மாவீரர் தினத்தன்று கிளிநொச்சியில் சிங்கக் கொடியை ஏற்றுகின்ற அரசாங்கத்தின் கனவு கலைந்து போய்விட்டது. நவம்பர் 27 ஆம் திகதி கிளிநொச்சியில் சிங்கக்கொடியை ஏற்றுவதென்றும் அந்தச் செய்தியை நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வானொலி, தொலைக்காட்சிகள் ஊடாக அறிவிப்பதென்றும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. நவம்பர் 26ஆம் திகதி கிளிநொச்சியைப் பிடித்து பிரபாகரனின் பிறந்தநாளில் அவருக்கு தோல்வியைப் பரிசாகக் கொடுப்பதும் மாவீரர் நாளில் அந்தச் செய்தியை அறிவித்து சிங்கக்கொடியேற்றி புலிகளுக்கு நெருக்கடி கொடுப்பதும் அரசாங்கத்தின் பல மாதத் திட்டமாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் இந்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும் காலைவாரி விட்டது இயற்கை என்று இப்போது பழியை அதன் மீது போட்டுத் தப…
-
- 0 replies
- 3.2k views
-
-
இலங்கையில் செயற்பட்டுவரும் மூன்று சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு பணிக்கப்படவிருப்பதாக அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்தார். நோர்வேயைத் தளமாகக் கொண்டியங்கும் நோர்வேஜியன் மக்கள் அமைப்பு (Norwegian Pepples’s Aid) போஃர்ட் (FORUT) நெதர்லாந்தைத் தளமாகக் கொண்டியங்கும் சோஆ (ZOA) ஆகிய சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களே இவ்வாறு பணிக்கப்படவிருப்பதாகத் தெரியவருகிறது. இந்த நிறுவனங்கள் வழங்கப்பட்ட ஒழுங்குமுறைக்கு அமையச் செயற்படவில்லையெனவும், சரியான செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுக்கவில்லையெனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார். “இந்த நிறுவனங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவை சரியான முறையில் செயற்பாடுகளை முன்னெடுக்கப்படவில்லையென்ப
-
- 0 replies
- 824 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் இவ்வருட மாவீரர் தின உரையில் வன்னிப் போர் தொடர்பாக பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. நெருக்கடிகள் நிறைந்த வரலாற்றுப் பயணத்தில் ஏற்பட்ட பல சரிவுகள், திருப்பங்கள், பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், நாசச் செயல்கள், புயல்களாக எழுந்த நெருக்கடிகள் என்பனவற்றுடன் ஒப்பிடும் போது இன்றைய சவால்கள் எமக்கு பெரியனவல்ல என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். மாவீரர் தினத்தன்று கிளிநொச்சியைக் கைப்பற்றி வெற்றிச் செய்தியை தென்னிலங்கைக்கு அரசு அறிவிக்கப் போவதாக சிலர் கூறினர். ஆனால் கிளிநொச்சியை நோக்கி படையினர் மும்முனைகளில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகள் யாவற்றையும் கடும் எதிர்த்தாக்குதலை நடத்தி புலிகள் முறியடித்தனர். குஞ்சுப் பரந்தன் நோக்கியும், புது முறிப்பு நோக்…
-
- 0 replies
- 2k views
-
-
வடபகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட பாதகமான காலநிலையினால் சிறிலங்கா படைத்தரப்பு கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 717 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சேதமடைந்த நிமலவ விநியோக கப்பல் கடந்த வாரம் ஏற்பட்ட பாதகமான காலநிலை காரணமாக மேலும் கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 888 views
-
-
இந்தியாவின் வர்த்தக நகரங்களில் ஒன்றான மும்பாயில் கடந்த வாரம் நடைபெற்ற தாக்குதலால் சிறிலங்காவின் உல்லாசப் பயணத்துறை பாதிக்கப்படலாம் என அந்நாட்டின் உல்லாச மற்றும் ஹோட்டல் துறைகளின் தலைவர் சிறிலால் மித்தபால தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 713 views
-
-
பிரித்தானியாவில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் உணர்வாளர்கள் , கூடி தமிழீழத்தின் வித்தாகி வீழ்ந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடைபெற்ற நிகழ்வுகளின் போது, இயக்குனர் சீமானின் உரை இடம் பெற்றது. சற்றுமுன் மாவீரர் நினைவு நிகழ்வு நடைபெறும் எக்செல் மண்டபத்தில் உணர்வுபூர்வமாகக் குழுமியிருந்த தமிழ உணர்வாளர்களின் பலத்த ஆரவாரத்தின் மத்தியில் ஒலி வடிவாக நிகழ்த்தப்பட்ட இயக்குனர் சீமானின் உரையை இங்கே கேட்கலாம். http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=266
-
- 10 replies
- 3.6k views
-
-
கிழக்கில் தொடரும் கொலைச் சம்பவங்கள் கவலை தருகிறதாம் கூறுகிறார் பிள்ளையான்: http://www.globaltamilnews.net/tamil_news....d=2770&cat= மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொலைச் சம்பவங்கள் இந்த மாவட்ட மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். கிழக்கு நிலைமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்று வரும் கொலைச் சம்பவங்கள் தனக்குப் பெரிதும் கவலையளிக்கிறது. இச்சம்பவங்களில் கொல்லப்பட்டோரின் குடும்பங்களுக்கு அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார். இது விடயம் தொடர்பாக ஜனாதிபதியினதும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரதும் கவனத்துக்குக் கொண்டு …
-
- 1 reply
- 855 views
-
-
மக்கள் குருதிக் கொடை திகதி: 29.11.2008 // தமிழீழம் // [வன்னியன்] களமுனைகளில் காயமடைகின்ற போராளிகளுக்காகவும், எறிகணைகள் விமானத் தாக்குதல்களால் காயமடைகின்ற பொது மக்களுக்காகவும் இன்று விசுவமடுவில் பல இளைஞர்கள், யுவதிகள் குருதிக்கொடை வழங்கியுள்ளனர். இன்று காலை தொடக்கம் இக்குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. சங்கதி
-
- 1 reply
- 851 views
-
-
இந்தியாவின் தென்மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் நடைபெறவுள்ள ஈழத் தமிழர் ஆதரவு பொதுக்கூட்டத்தில் கவிஞர் புலமைப்பித்தனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 613 views
-
-
மட்டக்களப்பு, ஓந்தாச்சிமடம் கடற்கரைப் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை பெண்ணொருவரின் உடலம் கரையொதுங்கியுள்ளது. உடலத்தை அடையாளம் காண்பதற்காக சிறிலங்கா காவல்துறையினர் அதனை களுவாஞ்சிக்குடி மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர். குறிப்பிட்ட பெண் படுகொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/
-
- 0 replies
- 725 views
-
-
கனடாவில் உள்ள ஒன்ராறியோ மாநிலத்தின் ரொறன்ரோ நகரில் இன்று தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் உணர்வெழுச்சியுடன் கொண்டாடப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 21 replies
- 3.8k views
-
-
குஞ்சுப்பரந்தன் - கிளிநொச்சிக்கான யுத்தத்தில் ராணுவத்தின் முதலாவது பின்னடைவு குஞ்சுக்குளத்தில் புலிகளின் முன்னரங்குகளுக்கும் ராணுவத்தின் முன்னரங்குகளுக்கும் இடையே அமைந்துள்ள சூனியப்பகுதியில் இன்னும் உருக்குலைந்த ராணுவத்தின் பல சடலங்கள் காணப்படுவதாக விடயமறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.அவர்களுக்கிணங்க புலிகளின் பொறிக்குள் நீண்டதூரம் ஊடுருவிய ராணுவப்பிரிவு ஒன்றிற்கு நடந்த அநர்த்தமே கிளிநொச்சிக்கான யுத்தத்தின் முதலாவது தோல்வியாகக் கருதப்படுகிறது. குறைந்தது 75 ராணுவத்தினர் கொல்லப்பட தப்பி வந்தவர்களில் மேலும்160 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆரம்பத்தில் புலிகள் இந்த மோதல்களில் 43 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 70 பேர் வரையில் காயமடைந்ததாகக் கூறியிருந்தாலும் முழு …
-
- 1 reply
- 1.6k views
-
-
வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த முகாம் மீது சிறீலங்கா வான் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் சிறார்கள் உட்பட பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டிருப்பதுடன், மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிகமாகத் தங்கியிருந்த கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கல்லாறு நாதன் குடியிருப்பு மீதே மிகையொலி கிபீர் ரக வானூர்திகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இன்று சனிக்கிழமை அதிகாலை 1:35 அளவில் மக்கள் நித்திரையில் இருந்தபோது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதால், பொதுமக்கள் பாதுகாப்புத் தேடிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாக, ஐரோப்பிய தொலைக்காட்சியின் கிளிநொச்சி செய்தியாளர் தெரிவித்தார். தருமபுரம் மருத்துவமனையின் தகவலின் அடிப்படையில் இதுவரை …
-
- 3 replies
- 828 views
-
-
விடுத்லைச்சிறுத்தைகளின் அவசர ஆலோசனைக்கூட்டம் நடத்தி ஈழத்தமிழர்களின் நலன்கருதி மாநாட்டினை டிசம்பர் 14ம் தேதிக்கு சென்னையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தேதியே இறுதி அறிவாப்பாகவும் இதனை எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாதென்றும், இந்த மாநாடு நடப்பதினால் ஏற்படும் எவ்விதமான பிரச்சனையையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் கூறிவிட்டார். மேலும் இந்த மாநாட்டின் மூலம் நாங்கள் தனித்தமிழீதை அங்கீகரிக்கின்றோம். தனித்த்மிழீழத்தில் தமிழர்களுக்கு ஆட்சி அமைக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு என்பதை நாங்கள் கூறப்போகின்றோம். மேலும் தமிழர் தாயகமான தமிழீழத்தில் சிங்களப்படைகள் தற்போது ஆக்கிரமித்த்துள்ளன. சிங்கள்ப்படைகள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருத்து விலகிவிட வேண்டு…
-
- 6 replies
- 1.6k views
-
-
கர்நாடக மாநிலத்தில் ஈழத் தமிழர் ஆதரவு பொதுக்கூட்டம்: புலமைப்பித்தனும் த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்பு http://www.puthinam.com/full.php?22KoZcc2t...4A2e2FLO3b35GCe இந்தியாவின் தென்மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் நடைபெறவுள்ள ஈழத் தமிழர் ஆதரவு பொதுக்கூட்டத்தில் கவிஞர் புலமைப்பித்தனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர். பெங்களுர் தமிழ்ச் சங்கம் சார்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 நிமிடத்துக்கு திருவள்ளுவர் அரங்கில் இப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் "ஈழத் தமிழர்களின் இன்றைய நிலை" எனும் தலைப்பில் தமிழக சட்ட சபை முன்னாள் துணைத் தலைவர் கவிஞர் புதுமைப்பித்தன் சிறப்பு சொற்பொழிவு ஆற்றவுள்ளார். தமிழ்த்…
-
- 0 replies
- 498 views
-
-
அம்பாறையில் புத்திக்கூர்மையற்ற இளைஞன் மீது அதிரடிப் படையினர் தாக்குதல் சனி, 29 நவம்பர் 2008, 12:31 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான்] அம்பாறை மாவட்டம் காஞ்சிரங்குடா விசேட அதிரடிப்படை சோதனைச் சாவடி ஊடாக கஞ்சிகுடிச்சாறு நோக்கி சென்ற புத்தி கூர்மையற்ற இளைஞன் ஒருவனை விசேட அதிரடிப்படையினர் கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்வம் தொடர்பாக தெரியவருவதாவதுநேற்று முந்தினம் வியாழக்கிழமை தம்பட்டை பகுதியைச் சேர்ந்த 18 வயது தங்கவடிவேல் ஜெகநாதன் என்ற இளைஞன் கஞ்சிகுடிச்சானாறு நோக்கி சென்ற போது அவரை சோதனைக்குட்படுத்திய விசேட அதிரடிப் படையினர் அவரிடம் எங்கு செல்லப்போகிறீர் என வினாவிய போது நான் மாவீரர் நாளுக்கு விளக்கேற்ற போகின்றேன் என்று கூறியதுடன் அவ்விடத்திலே கடும…
-
- 0 replies
- 440 views
-
-
யுத்தத்திற்கு செலவிடுவது ராஜபக்ஷ அரசாங்கம் வீட்டில் இருந்து கொண்டு சென்ற பணம் அல்ல என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். தனக்குக் கிடைத்த தகவல்களின்படி அண்மையில் 9 ஆயிரம் படையினர் மோதல்களில் உயிரிழந்ததாகவும் எனினும் அரசாங்கத்தின் ஊடகங்களும் அரசாங்கத்திற்கு ஒத்து ஊதும் ஊடகங்களும் படையினருக்கு சிறு சேதமே ஏற்பட்டதாக கூறுவதாகவும் விக்கிரமபாகு கூறியுள்ளார். இந்த யுத்தத்திற்குச் செலவிடப்படும் பணம் ராஜபக்ஷ அரசாங்கம் வீட்டில் இருந்து கொண்டு சென்ற பணம் இல்லை என்பதன் காரணமாகத்தான் யுத்தத்தில் ஏற்படும் விபரங்களை வெளியிடுமாறு கோருவதாகவும் மக்களுக்கு உண்மையைத் தெரிந்து கொள்ளும் உரிமை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …
-
- 2 replies
- 1k views
-
-
இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பாய் மீது கடந்த வியாழக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆனால், அத்தாக்குதல் குறித்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு தனது பாதுகாப்பு பத்தியில் தனது மகிழ்ச்சியை மறைமுகமாக வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகள் இலங்கை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்தியாவின் தலையீட்டை கோரி வருகின்றனர். இது தொடர்பில் தமிழக முதல்வர் கருணாநிதி இந்தியப் பிரதமரை சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளார். ஆனால், இந்திய மத்திய அரசு இலங்கையில் தலையிடுவதனை விடுத்து முதலில் அங்கு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் 170-க்கும் அதிகமான ஆயுதக்க…
-
- 0 replies
- 621 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்த வேளை நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையில் 50 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு பிராந்திய சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 467 views
-
-
கிளிநொச்சி மாவட்டம் தருமபுரத்தில் இடம்பெயர்ந்தோர் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் ஐந்து வயது சிறுவனும் முதியவருமாக இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 306 views
-
-
கிளிநொச்சி மாவட்டம் தருமபுரத்தில் உள்ள இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாம் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் ஐந்து வயது சிறுவன் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 311 views
-
-
கொழும்பின் கடற்பரப்பில் குண்டுச் சத்தங்கள் - மக்கள் பீதி - இது வழமையான பயிற்சி என்பது பின்னர் தெளிவு: http://www.globaltamilnews.net/tamil_news....d=2759&cat= கொழும்பு கடற்பரப்பில் கொழும்பு துறைமுகப் பகுதிக்கு அப்பால் இன்று அதிகாலை முதல் கடும் குண்டுச் சத்தங்கள் கேட்டன. சுமார் அரை மணிநேரமாக தொடர்ச்சியாகக் கேட்ட இந்தக் குண்டுச் சத்தங்கள், மற்றும் துப்பாக்கி வேட்டுச் சத்தங்களால் கொழும்பு நகரின் கரையோரப் பகுதிகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தாக்குதல் ஏதும் நடைபெறுகிறதோ என்ற அச்சத்துடன் மக்கள் பீதியுடன் கடற்கரையோரப் பகுதிகளுக்கு சென்று கடலைப் பார்த்தபடி இருந்தனர். எனினும், பின்னர் இது கடற்படையினரின் வழமையான பயிற்சி நடவடிக்கை என்று தெரியவந்தது.
-
- 2 replies
- 1.2k views
-