ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143662 topics in this forum
-
வன்னியில் பொதுமக்களை இலக்கு வைத்து "பரசூட்" கொத்து குண்டுத் தாக்குதல் [புதன்கிழமை, 24 டிசெம்பர் 2008, 08:58 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னிப்பெரு நிலப்பரப்பு எங்கும் சிறிலங்கா படையினர் பரவலாக "பரசூட்" கொத்து குண்டுத் தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளனர். சிறிலங்கா வான்படையினர் நடத்தும் இந்த புதிய வகை "பரசூட்" கொத்து குண்டுகள் நிலத்திலிருந்து 50 மீற்றர் உயரத்தில் வெடித்துச் சிதறி பொதுமக்களுக்கு பாரிய சேதங்களை உண்டாக்குகின்றன. நேற்று செவ்வாய்க்கிழமையும் இன்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இரண்டு தடவைகள் "பரசூட்" கொத்து குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன. நேற்றிரவு 10:15 …
-
- 0 replies
- 364 views
-
-
வவுனியாவிலும் மன்னாரிலும் அப்பாவி பொதுமக்கள் இருவரினது உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 385 views
-
-
வவுனியா மாவட்டத்தில் சிறிலங்கா படையினரின் டறக் வாகனம் மீது இன்று நடத்தப்பட்ட கிளைமோ தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 320 views
-
-
109 அமைச்சர்களும் என்னைப் போல அதிகாரமில்லாதவர்கள் - விஜேதாச ராஜபக்ச: நான் எனது அதிகாரங்களைப் பாவிக்க அனுமதிக்கப்படாததால் நான் எனது அமைச்சர் பதவியைத் தூக்கியெறிந்தேன். செயலாளர் இல்லாத ஒரேயொரு அமைச்சராக நான் இருந்தேன். அவ்வாறானால் எவ்வாறு நான் எனது வேலைகளைச் செய்திருக்க முடியும் என்று கேள்வியெழுப்பியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரான விஜேதாச ராஜபக்ச. அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் நான் மட்டுமல்ல அங்கிருக்கின்ற 109 அமைச்சர்களும் என்னைப் போல அதிகாரமில்லாதவர்களாகத் தான் இருக்கிறார்கள். ஜனாதிபதியிடம் மட்டும் தான் அதிகாரம் இருக்கிறது. எந்தவொரு அமைச்சருக்கும் நிறுவனத் தலைவரை பணிப்பாளர்களை நியமிப்பது தொடர்பாக அபிப்பிராயம் சொல்வதற்குக் கூட உரிமையில்லை. இந்த நிலைமை தான் 99…
-
- 2 replies
- 1.1k views
-
-
சிறீலங்காவின் புலனாய்வுத்துறை அதிகாரிகள் 43 பேர் ஒன்றிணைந்து அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளனர். பதவியுயர்வு வழங்கப்பட்டபோது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாமல், மூப்பு மற்றும் சேவைத்திறமை என்பனவற்றினைக் கருத்தில் கொள்ளாமல் எழுந்தமானமாகவும், பாகுபாடாகவும் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இந்த மனுவில் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இவர்கள் தமது வழக்கில் சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவை பிரதான எதிரியாகவும், அவருடன் படைத்தளபதிகள், காவல்துறைமா அதிபர் ஆகியோரையும் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ளனர். சிறீலங்காவின் இரண்டாம் நிலைத் தரைப்படைத் தளபதியும் கிழக்கினை ஆக்கிரமிப்பதில் முன்னின்றவருமான பராக்கிரம பன்னிப்பட்டியவும் பதிவிப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
32 பில்லியன் டொலர் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதே எமது இலக்கு: வலிந்த தாக்குதலைத் தொடங்க உரிய நேரத்துக்காகக் காத்திருக்கிறோம் பா. நடேசன் ஒரு தேசத்தின் விடுதலைப் போராட்டம் என்பது ஒரு நகரத்தை மட்டும் மையமாகக் கொண்டது அல்ல என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார். ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: நிலப்பகுதிகளை இழப்பதும், மீளக் கைப்பற்றுவதும் பொதுவானது தான். எமது விடுதலைப் போராட்ட இலட்சியத்தை வென்றெடுக்கும் வரையில் தொடர்ந்து போர் நகரங்கள் உருவாக்கப்படும். அமைதிப் பேச்சுக்களுக்கு முன்னர் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்ற ஜனாதிப…
-
- 0 replies
- 888 views
-
-
பாதுகாப்புச் செயலாளர் மனித உரிமைகள் ஆணையகத்தில் ஆஜராகவுள்ளார் – ஜயலத் ஜயவர்தன: பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ எதிர்வரும் 26ம் திகதி மனித உரிமைகள் ஆணையகத்தில் ஆஜராகவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார். மருத மடு தேவாலயத்தில் தமக்கு தங்க அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவித்து ஜயலத் ஜயவர்தன மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். மருத மடு தேவாலயத்தில் தங்குவதற்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டதென்பது குறித்து பாதுகாப்புச் செயலாளர் மனித உரிமைகள் ஆணையகத்தில் விளக்க மளிக்க உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 14 முதல் 16ம் திகதி வரையில் தேவாலயத்தில் தங்கியிருந்…
-
- 0 replies
- 780 views
-
-
நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் புதிய பாட விதானத்தின் கீழான கணித பாடத்தின் இரண்டாம் பகுதிக்கான பரீட்சையை மீண்டும் நடத்துவதற்குக் கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவிக்கையில், அண்மையில் நடைபெற்ற கவ்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் புதிய பாடத் திட்டத்துக்கமைவாக கணித பாடத்தின் இரண்டாம் பகுதிக்கு விடையளிப்பதில்; மாணவர்களுக்கு ஏற்பட்ட பல்வேறு அசௌகரியங்கள் தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ஆகவே, கணித பாடத்தின் இரண்டாம் பகுதியை மட்டும் மீண்டும் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்து மூன்று வாரங்களுக்குள் கணித பாடத்தின் இரண்டாம் பிரிவு…
-
- 0 replies
- 457 views
-
-
இன அழிப்பின் உச்சத்தை மூடி மறைக்கும் எத்தனங்கள் [24 டிசம்பர் 2008, புதன்கிழமை 10:00 மு.ப இலங்கை] "இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளாகின்றனர் எனக் கூறப்படுவதில் எந்தவித உண்மையுமில்லை." - இவ்வாறு மலேசியாவில் போய் திருவாய் மலர்ந்தருளியிருக்கின்றார் ஜே. வி. பியின் எம்.பியும் நாடாளுமன்றக் குழுக்களின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன். இலங்கையின் சிறுபான்மையினரான ஈழத் தமிழர்களை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தும் மேலாண்மைத் திமிரிலும் பௌத்த - சிங்களப் பேரினவாத மமதையிலும் மிதக்கும் ஒரு கட்சியின் முந்தானையில் தொங்கிக் கொண்டிருப்பவரிடம் - அவர் தம்மையும் ஒரு தமிழனாக அடையாளப்படுத்திக் கொண்டாலும் கூட - இத்தகைய கருத்தைத்தான் எதிர்பார்க்க முடியும். பேரினவாதத்தி…
-
- 0 replies
- 578 views
-
-
புதிதாக குடியேறியவர்களின் விபரங்களை திரட்டும் படையினர் திகதி: 24.12.2008 // தமிழீழம் // [எல்லாளன்] வவுனியாப் பகுதியில் 2004ம் ஆண்டிற்கு பின்னர் புதிதாகக் குடியேறியவர்கள் பற்றிய விபரங்களை சிறிலங்காப் படையினர் கிராம அலுவலர்கள் ஊடாகத்திரட்டி வருகின்றனர். வவுனியாவில் இனந்தெரியாத நபர்களால் தொடர்ச்சியாக படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் படையினர் விபரங்களைத் திரட்டி வருவதானது அங்குள்ள மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. சங்கதி
-
- 0 replies
- 495 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று நடத்திய பொறிவெடித் தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 309 views
-
-
இடம்பெயா்ந்து வரும் பொதுமக்களை தடுத்து வைப்பதை சிறிலங்கா அரசு நிறுத்த வேண்டும், இது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 436 views
-
-
கிளிநொச்சி வரை வந்திருக்கும் சிறிலங்கா படையினருக்கு முடிவு கட்டுவோமாக இருந்தால் தமிழீழத்திற்கான விடுதலை விரைவாக கிடைக்கும் என்பது தான் உண்மை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ் மனித உரிமைகள் ஆணையகத்தில் இன்று நால்வர் சரண்: யாழ் குடா நாட்டில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ் மனித உரிமைகள் ஆணையகத்தில் இன்று நால்வர் சரணடைந்திருப்பதாக அவ்வலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வறணி வடக்குப் பிரதேசத்தில் பாடசாலை மாணவன் உட்பட இருவர் கடத்தப்பட்டதன் தொடர்ச்சியாக கூலித் தொழிலாளர்களாகிய சகோதரர்கள் இருவர் சரணடைந்துள்ளனர். 26 வயதுடைய அண்ணனும் 25 வயதுடைய அவரது தம்பியுமே சரணடைந்துள்ளனர். வரணி வடக்கைச் சேர்ந்த விவசாயியான மற்றுமொரு 28 வயதுடைய நபரும் வல்வெட்டித்துறை வடக்கை சேர்ந்த 20 வயதான கூலித் தொழிலாளி ஒருவரும் சரணடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தமது குடும்பங்கள் ஊடாக மனித உரிமைகள் ஆணையகத்தில் சரணடைந்துள்ளனர். நீதிமன்றத்தினூடாக ஆஜர்ப்படுத்தப்…
-
- 1 reply
- 534 views
-
-
சிவிலியன்கள் சுதந்திரமாக இடம்நகர அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் - மனித உரிமை கண்காணிப்பகம்: வடக்கில் அரசாங்கப் படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்டுவரும் உக்கிர மோதல்களின் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழச் சிவிலியன்கள் சுதந்திரமாக இடம்நகர அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து அரசாங்கக் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு வரும் சிவிலியன்கள் முகாம்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ச் சிவிலியன்கள் இவ்வாறு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. வன்னியில…
-
- 0 replies
- 577 views
-
-
2009ம் ஆண்டை 'படையினரின் வெற்றி ஆண்டு' என்று அறிவித்துள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் விடுவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிடின் புலிகளைத் தடைசெய்வதுடன் மட்டும் நின்றுவிடாது, வரலாற்றுப் புத்தகத்திலிருந்து அவர்களை துடைந்தெறிவதற்கும் நான் பின்நிற்க மாட்டேன் என்றும் எச்சரித்துள்ளார். சிறிலங்கா ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஓர் கொடியின் கீழ் இலங்கை இனத்தினரை திரட்டல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் சர்வமத தலைவர்கள், அரசியல் தலைவர்கள், அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், கலைஞர்கள், வர்த்தகர்கள், மற்றும் பல்கலைகழக பேராசிரியர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மகி…
-
- 17 replies
- 3.1k views
-
-
வி.புலிகளால் பிடிக்கப்பட்ட சிங்கள கைதியின் வாக்குமூலம் (16.12.08) சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இதில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த 50 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 160 பேர் காயமடைந்திருந்தனர். இம்முறியடிப்பின் போது விடுதலைப் புலிகளால் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் உயிருடன் பிடிக்கப்பட்டார். பிடிக்கப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்தவர் 53 ஆவது கொமாண்டோ டிவிசனில் ஆறாவது சிங்க படைப் பிரிவில் இருந்துள்ளார். அநுராதபுரம் கல்நாவ பகுதியைச் சேர்ந்த நிசாந்த றணசிங்க என்பவரே இவர் ஆவார். ஊடகவியலாளர்களுக்கு அவர் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது: ">" type="application/x-shockwave-flash" allowscr…
-
- 2 replies
- 2.3k views
-
-
இந்தப் போரில் நாங்கள் வெல்லுவோம். சிங்களப்படைகளுக்கு எமது மண்ணிலேயே சமாதி கட்டப்படும்" இவ்வாறு மணலாறு கட்டளைப பணியக ஆளுகைப் பொறுப்பாளர் சிவதேவன் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்து விசுவமடுவில் இயங்கும் முரளி முன்பள்ளி சிறார்கள், பெற்றோர்கள் சார்பாக ஆயிரம் உலர்உணவுப்பொதிகளை மணலாறுப் போராளிகளுக்கு வழங்கும் நிகழ்விலும், முன்பள்ளிக் கல்வியை முடித்துப் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளை வழியனுப்பும் நிகழ்விலும் நேற்றுக்காலை கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். முன்பள்ளி வளாகத்தில் ஆசிரியர் எஸ்.பரஞ்சோதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மைச்சுடரினை தமிழர்புனர்வாழ்வுக்கழக துணைநிறைவேற்றுப்பணிப்பாளர் நரேன் ஏற்றிவைக்க, தேசியக்கொடியை பிரமந்தனாறு வட்டப்பொறுப்பாளர் வ…
-
- 1 reply
- 2.7k views
-
-
மரம் அமைதியை நாடினாலும், காற்று விடுவதாயில்லை? என்று சீனத்தின் பெருந்தலைவர் மாவோ கூறியிருந்தார். தேசியத் தலைவர், இந்தியாவை நோக்கி நீட்டிய நட்புக் கரத்தினைத் தட்டிவிடும் வகையில், முன்னாள் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிலர் கருத்துக் கூற ஆரம்பித்துள்ளனர். இந்தியாவின் தென்னாசிய பிராந்திய நலனைவிட, தேசியத் தலைமை மீது கொண்ட பொறுப்புணர்வைத் தூக்கிப் பிடிப்பதிலேயே இவர்கள் அதிக அக்கறை கொண்டுள்ளனர். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக, தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு, விடுதலைப் புலிகள் தடை ஏற்படுத்தி விட்டதாக பழி சுமத்துகிறார் முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளர் கேணல் ஹரிஹரன். எமது தேசியத் தலைமை மீது குற்றம் சாட்டும் அறிவுப் பெருந்தகை ஹரிஹர…
-
- 2 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பில் தமிழ் பெண்ணொருவர் சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சிறப்பு அதிரடிப் படையினர் மூவர் குறிப்பிட்ட பெண்ணை மோசமாகப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் நஞ்சூட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். மட்டக்களப்பில் உள்ள மாவிலிஆறு என்ற பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக முறைப்பாடுகளை மேற்கொள்ள உறவினர் அச்சம் தெரிவித்துள்ளனர். முறைப்பாடு செய்தால் படையினரால் தாமும் படுகொலை செய்யப்படலாம் என அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். தமிழ் மக்களைக் காப்பாற்றப் போவதாகவும், விமோசனம் கொ…
-
- 2 replies
- 1.3k views
-
-
கிளிநொச்சியை நோக்கிய சிறிலங்கா படையினரின் 5 முனை முன்நகர்வுகளில் 2 முனை முன்நகர்வுகள் முறியடிப்பு: 100 படையினர் பலி; 250 பேர் படுகாயம் [திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2008, 07:31 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சியை நோக்கி ஐந்து முனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகளுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இரண்டு முனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. மூன்று முனைகளில் முறியடிப்பு தொடர்கின்றன. இதில் 100 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 250-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இத் தகவலை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. _________________ மூலம்: புதினம்
-
- 20 replies
- 6.2k views
-
-
வி.புலிகளால் பிடிக்கப்பட்ட சிங்கள கைதியின் வாக்குமூலம் (16.12.08) சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இதில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த 50 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 160 பேர் காயமடைந்திருந்தனர். இம்முறியடிப்பின் போது விடுதலைப் புலிகளால் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் உயிருடன் பிடிக்கப்பட்டார். பிடிக்கப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்தவர் 53 ஆவது கொமாண்டோ டிவிசனில் ஆறாவது சிங்க படைப் பிரிவில் இருந்துள்ளார். அநுராதபுரம் கல்நாவ பகுதியைச் சேர்ந்த நிசாந்த றணசிங்க என்பவரே இவர் ஆவார். ஊடகவியலாளர்களுக்கு அவர் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது: ">" type="application/x-shockwave-flash" allowscript…
-
- 1 reply
- 751 views
-
-
அத்துடன், அவரது உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணங்களின்போது தமது குடும்ப அங்கத்தவர்களையும் அரச செலவில் அழைத்து செல்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அண்மையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற அமைச்சரவை மாற்றத்தின்போது, றோஹித போகொல்லகமவிற்கு வேறு அமைச்சுப் பதவி கொடுக்கப்படலாம் எனவும், அல்லது அமைச்சுப் பதவியே பறிக்கப்படலாம் என்றும் பேசப்பட்டுகின்றது. அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட மேலதிகமாக தனது வெளிநாட்டுப் பயணங்களில் போகொல்லாகம செலவழித்து வருவதால், இந்த கருத்து முரண்பாடு ஏற்பட்டிருந்தது. சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கும், வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகமவிற்கும் இடையிலான முறுகல் நிலை வலுப்பெற்று வருகின்றது…
-
- 0 replies
- 1.2k views
-
-
தென் தமிழீழ படுகொலைக்கு படையும், ஒட்டுக்குழுக்களுமே காரணம் - விடுதலைப் புலிகள் செவ்வாய், 23 டிசம்பர் 2008, 23:12 மணி தமிழீழம் [செய்தியாளர் தாயகன்] கிழக்கில் கடந்த 11 மாதங்களில் 193ற்கு மேற்பட்ட படுகொலைகள் நிகழ்ந்திருப்பதுடன், 110ற்கு மேற்பட்ட ஆட்கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர். "அமைதியாக அரங்கேறும் கிழக்கின் படுகொலைகள்" என்ற தலைப்பில் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் விடுதலைப் புலிகள் இந்தத் தகவலைக் கூறினர். அறிக்கையின் முழு விபரம்:- அமைதியாக அரங்கேறும் கிழக்கின் படுகொலைகள்சிறிலங்கா அரசு கிழக்கு மண்ணை ஆக்கிரமித்து அங்கே சனநாயகத்தை நிலைநாட்டி விட்டதாக பொய்ப் பரப்புரைகளைச் செய்…
-
- 1 reply
- 1k views
-
-
கசாப்புக் கடைக்காரனிடம் கருணையை எதிர்பார்த்ததாம் ஆடு. இன்று சிறீலங்கா அரசாங்கத்திடம் இருந்து தமிழர்களுக்கு நீதி நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறவைக்கு. இந்தப் பழமொழிதான் நன்கு பொருந்தும்.‘பேசித் தீருங்கள், பேசித் தீருங்கள்' என்று இன்னும் கீறல் விழுந்த ஒலித்தட்டுபோல் புலம்பிக் கொண்டிருக்கும் உலக நாடுகள் முதலில் சிறீலங்காவிடம் சென்று கேட்கட்டும், தமிழர்களுக்கு என்ன கொடுப்பீர்கள் என்று. தமிழர்களுக்கு சாவையும் அழிவையும்தான் தருவோம் என்பதே அவர்களின் பதிலாக இருக்க முடியும். உலகின் எந்த நாடும் தனது நாட்டு மக்கள் மீதே வான் வழியான தாக்குதலை நடத்தியது கிடையாது. ஏன் அருகிலுள்ள இந்தியா கூட இலங்கையில் தமிழர்கள் மீதும், பாகிஸ்தானுடனான போரின் போது மட்டுமே விமானத் …
-
- 2 replies
- 1.4k views
-