ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143644 topics in this forum
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதி மக்கள் குடியிருப்பு மீது சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் ஆறு சிறுவர்கள் உட்பட 11 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 507 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதி மக்கள் குடியிருப்பு மீது சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் ஆறு சிறுவர்கள் உட்பட 11 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். முள்ளிவாய்க்கால் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து இன்று வெள்ளிக்கிழமை காலை 9:45 நிமிடமளவிலும் பிற்பகல் 12:00 மணியளவிலுமாக இரண்டு தடவை சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன. கடல் தொழிலில் ஈடுபடும் பொதுமக்களை இலக்கு வைத்து சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ஆறு சிறுவர்கள் உட்பட 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். பல வீடுகள் சேதமடைந்துள்ளன. மிகவும் தாழ்வாக பறந்து வானூர்திகள் நடத்திய தாக்குதலினால் முல்ல…
-
- 0 replies
- 328 views
-
-
இலங்கையிலுள்ள இந்துத்தமிழர்கள் பாதிப்புற இடமளிக்கப்போவதில்லை இந்தியாவின் இரு முன்னணி இந்து அமைப்புகள் ஆதரவுக் குரல் புதுடில்லி: இலங்கையிலுள்ள இந்துத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியாவின் இரு முன்னணி இந்து மத அமைப்புகள் குரல் கொடுத்துள்ளன. ராஷ்டிரிய சுவாயாம் ஷேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) மற்றும் விஷ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி.) ஆகிய இந்தியாவில் பெரும்பான்மை இந்துக்களின் செல்வாக்கையும் அபிமானத்தையும் பெற்றிருக்கும் இந்த இரு அமைப்புகளும் இலங்கையில் இந்து ஆலயங்கள், கலாசாரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதை எதிர்ப்பதாக யாழ். மாவட்ட தமிழ் கூட்டமைப்பு எம்.பி.எம்.கே.சிவாஜிலிங்கத்தி
-
- 1 reply
- 1.2k views
-
-
உயிரை வேலியாக வைத்து போராளிகள் போரிடுகின்றனர் நிலங்களை விழுங்கிக்கொண்டு படைகள் நகரலாம். ஆனால் உயிரை வேலியாக வைத்து உங்கள் பிள்ளைகளான போராளிகள் போராடியிருக்கிறார்கள். போராடிக்கொண்டு வருகின்றார்கள்.இவ்வாறு, புதுக்குடியிருப்புக் கோட்டத்தில் இரணைப்பாலை வட்டத்தில் கடந்த 15ம் திகதி மாவீரர், போராளி குடும்பங்களுடனான சிறப்புக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போது புதுக்குடியிருப்புக்கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ச.இளம்பருதி தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசும்போது, எத்தகைய இடர்கள் வந்தாலும் நம்பிக்கை இழக்காத மக்களாக நீங்கள் இருக்கவேண்டும். எதிரியின் படைக்கட்டமைப்புக்கள் உடைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எதிரிப்படைகள் எமது இலக்குகள் சிக்குண்டு அழியப்போகின்றா…
-
- 5 replies
- 2.1k views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தீவிர ஆதரவை வழங்கி வருபவரும் திரைப்படை இயக்குநருமான சீமான் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 459 views
-
-
இந்திய இராணுவத்துக்கு எதிராகப் புரட்சியைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, திரைப்பட இயக்குநர் சீமான், தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் மணியரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது நடவடிக்கைகளுக்கு வைகோ, திருமாவளவன், தா.பாண்டியன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஈரோடு கருங்கல்பாளையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14.12.08) தமிழீழ சிக்கல் குறித்து விளக்குவதற்காக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இந்தியா - சிறிலங்கா உடன்பாட்டின்படி, இந்திய அமைதிப் படையினர் இலங்கைக்கு அனுப்பப்பட்டதைக் கடுமையாக விமர்சித்துப் பேசியதற்காக சீமான் மீது இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அப்பொதுக் கூட்டத்தில் கொளத்…
-
- 1 reply
- 973 views
-
-
வாகரையில் கைக்குண்டுத்தாக்குல் - இரு விசேட அதிரடிப்படையினன் பலி மட்டக்களப்பு மாவட்டத்தின் வாரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தட்டுமுனை பகுதியில் உள்ள விசேட அதிரடிப்படையினரின் காவலரண் மீது நேற்று புதன்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத்தாக்குதலில் இரண்டு விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவித்தனர். நேற்று புதன்கிழமை இரவு 7.00மணியளவில் மட்டக்களப்பு – வாகரை வீதியில் உள்ள தட்டுமுனை பகுதிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இரண்டு படையினர் படுகாயமடைந்ததாகவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவித்தனர். எனினும் இந்…
-
- 0 replies
- 604 views
-
-
யாழ் கிளாலியில் இடம்பெற்ற நேற்றைய சமரில் சிறீலங்கா படைகளின் கவச ஊர்திகள் சிலவும் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சேதடைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. சேதமடைந்த ஊர்திகளை மீட்ட சிறீலங்கா படையினர், அவற்றை காவு பார ஊர்தியில் இழுத்து சென்றதை நேரில் பார்த்திருப்பதாக, ஐரோப்பிய தொலைக்காட்சியின் தென்மராட்சி செய்தியாளர் தெரிவிக்கின்றார். நேற்று புதன்கிழமை அதிகாலை இவ்வாறு இரண்டு பார ஊர்திகளில் சிறீலங்கா படையினர் சேதமடைந்த கவச ஊர்திகளைக் கொண்டு சென்றதாக அவர் தெரிவித்தார். ஆனால் சிறீலங்கா படையினர் கிளாலியில் இடம்பெற்ற மோதல் பற்றி இதுவரை தெளிவான தகவல் எதையும் தெரிவிக்கவில்லை என்பதுடன், கிளாலியில் முன்னகர்ந்து தாக்கிய படையினர் காலையிலேயே தமது தளம் திரும்பியிருப்பதாக மட்…
-
- 0 replies
- 1.9k views
-
-
கிளிநொச்சி சமரின் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ள படங்கள் மற்றும் செய்திகள் சிறீலங்காவின் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக, கொழும்புச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். சிறீலங்கா படையினர் கிளிநொச்சி நோக்கி 5 கிலோமீற்றர் முன்னேறியுள்ளதாகவும், விடுதலைப்புலிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் 120 போராளிகள் உயிரிழந்தும் 250 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாகவும் சிறீலங்காவின் ஊடகங்கள் முன்னர் தகவல் வெளியிட்டிருந்தன. ஆனால் விடுதலைப்புலிகள் வெளியிட்ட உடலங்கள், மற்றும் சிறுவர் படையணி பற்றிய படங்கள் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை. கடந்த வாரம் சிறீலங்காவின் தரைப்படைத் தளபதி வெளியிட்ட கருத்தும…
-
- 6 replies
- 3k views
- 1 follower
-
-
இலங்கைத்தமிழர் பிரச்சினையில தாம் கவலையுடனும் அக்கறையுடனும் இருப்பதாகவும் தமிழ் மக்களை பாதுகாக்கவும்???? பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான??? ரீதியில் நிவாரணம் அளிக்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளாh. இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பிக்கள் நேற்று மன்மோகனை சந்தித்து விரிவாக எடுத்துக் கூறினர். அதற்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன் தமிழக மீனவர்ளை பாதுகாக்கவும் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மன்மோகன் சிங் மேலும் தெரிவித்தார் என மார்க்ஸிட் கம். கட்சியில் மாநில செயலாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையிலே தெரிவிக்கப்பட்டுள்ளது. ந…
-
- 19 replies
- 2.1k views
- 1 follower
-
-
சிறிலங்காவின் மகிந்த அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடையும் என்று ஜே.வி.பி. எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 650 views
-
-
இலங்கையின் கடற்பரப்பில் நாள்தோறும் 500 இந்திய மீன்பிடி படகுகள் அத்துமீறி நுழைகின்றன என்று அந்நாட்டு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 858 views
-
-
கிளிநொச்சி சமரில் படையினரின் மேலதிக இழப்புக்களை நிரூபித்த புலிகள்: இந்திய றோ முன்னாள் செயலாளர் பி.இராமன் [வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2008, 06:30 மு.ப ஈழம்] [ப.தயாளினி] கிளிநொச்சி சமர்க்களம் தொடர்பாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ள தகவல்களை விட புலிகள் தெரிவித்திருக்கும் தகவல்கள் உண்மையாக இருப்பதாகத் தெரிகிறது என்று இந்திய றோவின் முன்னாள் செயலாளர் பி. இராமன் கூறியுள்ளார். கிளிநொச்சி சமர்க்களம் தொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள்: புத்தாண்டுக்கு முன்னர் கிளிநொச்சியைக் கைப்பற்றுவோம் என்ற சிறிலங்கா படைத் தளபதி பொன்சேகாவின் உறுதிமொழியை நம்பி புதிதாக படையணிகளில் சேர்க்கப்பட்ட சிங்கள இளைஞர்கள் மரணத்தை முத்தமிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்ப…
-
- 12 replies
- 2k views
- 1 follower
-
-
சிறிலங்காவின் அரச ஒளிபரப்பு நிறுவனமான ரூபவாஹினியில் ஊதிய விவகாரம் தொடர்பாக பணியாளர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து அங்கு படையினர் குவிக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 565 views
-
-
நத்தார் நாள் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு இலங்கையின் ஆயர்கள் கூட்டாக விடுத்த வேண்டுகோளை சிறிலங்கா அரசு நிராகரித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 491 views
-
-
சிறிலங்காவில் அரசாங்கத்துக்கும் நீதிமன்றத்துக்கும் இடையேயான முறுகல் நிலையால் பெற்றோல் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 539 views
-
-
கழுத்து வெட்டப்பட்ட இரண்டு படை சிப்பாய்களின் சடலம் மீட்பு. வெள்ளி, 19 டிசம்பர் 2008, 22:54 மணி தமிழீழம் [சிறிதரன் ] யாழ்ப்பாணம் நாவில்ல பகுதியில் கரையோர பாதுகாப்பு பணியில் இருந்த படையினர் இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளனர். இன்று காலையில் இந்த இரு சடலமும் மீட்க்கப்பட்டுள்ளது. இவர்கள் யாரால் வெட்டப்பட்டார்கள் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரையில் தெரியவரவில்லை. இதேவேளை நேற்றைய தினம் பெய்த கடும் மழையால் வடமராட்சி கொட்டோடை அம்மன் கடற்கரைப் பகுதியில் படையினரால் அமைக்கப்பட்டிருந்த படைப் காவலரண்கள் பல கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. கரையோரப் பகுதிகளில் காவலரண்களை அமைப்பதில் பெரும் சிரமங்களை படையினர் எதிர்கொள்வதாவும் தெரிவிக்கப்படுகின்றது. பத…
-
- 1 reply
- 1.3k views
-
-
கிளாலிக் களமுனையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் நூற்றுக் கணக்கான படையினர் படுகாயமடைந்துள்ள நிலையில், படையினர் காங்கேசன்துறை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளிடம் வலுக்கட்டாயமாகத் இரத்தம் பெற்றுள்ளனர். இதேவேளை கிளாலிப் பகுதியில் இடம்பெற்ற மோதல சம்பவத்தில் காயமடைந்த படையினர் 200ற்கும் மேற்பட்டோர் விமானங்கள் மூலம் தென்பகுதி மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/
-
- 0 replies
- 969 views
-
-
கிளிநொச்சி, பூநகரியை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள சிறீலங்கா படையினர் மீது விடுதலைப்புலிகள் அடிக்கடி கிளாலி கடல்நீரேரி வழியாக தாக்குதல் நடத்துவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த தாக்குதல் வெடிச்சத்தங்களை தென்மராட்சியின் விடத்தல்பளை, உசன்,கொடிகாமம் தொடக்கம் அரியாலை வரையான பகுதிகளில் தெளிவாகக் கேட்க முடிவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். http://www.orunews.com/?p=3036
-
- 19 replies
- 5.3k views
-
-
சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்த்துப் போரிட்டு எதிரிக்கு இழப்புகளைக் கொடுத்துவரும் விழுப்புண்ணடைந்த போராளிகளுக்காக உலருணவு வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. கண்டாவளைக் கோட்ட ஆசிரியர் சமூகம், தருமபுரம் வர்த்தகர் சங்கம் கோட்ட போரெழுச்சிக்குழு கண்டாவளை புளியம்பொக்கணை கிராமங்களின் மக்கள் கூட்டுறவுப் பகுதியினர் ஆகியோர் இணைந்து இவ் உலருணவுப் பொருட்களை வழங்கியுள்ளனர். இவர்கள் வன்னிமேற்கு, வடபோர்முனை ஆகியவற்றில் களப்பணிலீடுபடும் மக்களுக்குமான உலருணவுப்பொருட்களை வழங்கினர் இந்நிகழ்வுகள் நேற்றுப் பிற்பகல் கண்டாவளைக் கோட்ட அரசியல்துறைப்பொறுப்பாளர் சி.சீராளனின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்றது. http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51
-
- 0 replies
- 1.5k views
-
-
-
வன்னி சமர்களம் ஒரு கண்ணோட்டம்!! இராணுவம் பல முனைகளில் எங்களுடைய பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டு வந்தாலும் - எங்களுடைய போர் வீரர்கள் சகல முனைகளிலும் கடுமையான எதிர்ச்சமர்களைச் புரிந்து இராணுவத்திற்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்திய வண்ணமிருக்கின்றனர். உண்மையில் இராணுவத்தினர் பலத்த இழப்புக்களை எதிர்நோக்கி மிகவும் பலவீனமான நிலையிலேயே சிறிது சிறிதாக நகர்ந்து கொண்டிருக்கின்றனர். கால நேரம் வரும்போது எங்களுடைய மக்களின் பலத்துடன் ஒரு பாரிய வெற்றியை - வரலாற்றில் என்றுமே சாதிக்காதளவு ஒரு பாரிய வெற்றியை - நிச்சயமாக அடைவோம் என்ற நம்பிக்கை. எங்களுடைய தலைவர், தளபதிகள், போர் வீரர்கள் மற்றும் எங்களுடைய மக்கள் என அனைவருக்கும் உள்ளது. வன்னிப் பெருநிலப்பரப்பில் முன்னேறும் இலங்…
-
- 3 replies
- 4k views
-
-
உரும்பிராயிலுள்ள ஆலயமொன்றிற்கு வழிபாட்டிற்காகச் சென்றிருந்த பக்தரொருவர் அந்த ஆலயத்தின் அர்ச்சகர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார். உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் ஆலய அர்ச்சகர்களால் தாக்கப்பட்டதில் உரும்பிராய் ஞானவைரவர் வீதியைச் சேர்ந்த இராஜரட்ணம் புஸ்பநாதன் (வயது 57) என்பவரே தலையில் படுகாயமடைந்துள்ளார். நேற்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; குறிப்பிட்ட நபர் கடந்த 30 வருடகாலமாக இந்த ஆலயத்தில் வழிபாடு செய்துவந்தார். வழக்கம்போல் நேற்று புதன்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் ஆலய வழிபாட்டுக்காக சென்றபோது வழிபாடு தொடர்பாக இந்தநபரிற்கும் ஆலயக் குருக்கள் மற்றும் அவரது மகன் உட்பட ஏனைய அர்ச்சகர்களுக்குமிடையே முரண்பாடு ஏற்பட…
-
- 28 replies
- 4.8k views
-
-
யாழ் குடாநாட்டில் தினமும் மூன்று தடவைகள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. இரவுவேளையில் இரண்டு தடவைகளும், பகலில் ஒரு தடவையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மையில் ஏற்பட்ட நிஷா சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்குக் காரணமாக சுன்னாகத்திலிருந்த இலங்கை மின்சாரசபைக்குக் சொந்தமான இரண்டு மின்பிறப்பாக்கிகளும், அக்ரிகோ தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு மின்பிறப்பாக்கிகளும் பழுதடைந்திருப்பதாக பெயர் குறிப்பிடவிரும்பாத மின்சாரசபை அதிகாரி ஒருவர் கூறினார். இதனால், மின் உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்பட்டு, குடாநாட்டில் நாளாந்தம் மூன்று தடவைகள் மின்விநியோகத்தைத் தடைசெய்யவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக அந்த அதிகாரி தெரிவித்தார். யாழ் குடாநாட்டில் …
-
- 0 replies
- 764 views
-
-
தமிழக மண்ணில் இன்னுமொரு பிரபாகரன் பிறக்கும் வரை இந்த இனம் மீளாது எனவும் மொத்த தமிழனத்தையே அழிக்க அமைதிப்படை என்ற பெயரில் 2 லட்சம் பேரை ராஜிவ் அனுப்பினாரே இது சர்வதேச தீவிரவாதம் இல்லையா என தமிழ் திரைப்பட இயக்குனர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் 'தமிழர் எழுச்சி உரைவீச்சு'என்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ராமேஸ்வரத்தில் பேசியதற்காக தன்னை கைதுசெய்தனர் எனவும் தான் எண்ண பேசினார் என்பது எவருக்கும் தெரியவில்லை எனவும் சீமான் குறிப்பிட்டுள்ளனர். தன்னை எதற்கு கைதுசெய்கிறீர்கள் என காவற்துறை அதிகாரியிடம் கேட்ட போது, 'நல்ல பேசினீங்க சார் எல்லாம் எங்க தலையெழுத்து' என தன்னை கைதுசெய்த காவற்துறை அத…
-
- 1 reply
- 2.6k views
-