ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
போர் நிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு வெளியிட்டு உடனடியாகப் படைகளைப் பழைய நிலைக்கு விலக்கிக்கொள்ள வேண்டும்” என தமிழக சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை தமிழ்மக்கள் வரவேற்பார்கள் என்பதில் அய்யமில்லை. இது தமிழீழச் சிக்கல்பற்றி தமிழக அரசியல் கட்சிகள் தங்களுக்கும் இருக்கும் சிறு சிறு வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபட்டு, ஒரே அணியில் நிற்பதைக் காட்டுகிறது. ஆனால் இந்தத் தீர்மானத்தை இந்திய மத்திய அரசு எவ்வளவு தூரம் கவனத்தில் எடுத்துக் கொண்டு அக்கறையோடு செயல்படும் என்பதில் பலருக்கு நியாயமான அய்யம் இருக்கிறது. தமிழீழத்தில் வி.புலிகளுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசினால் நடத்தப்படும் ஆக்கிரமிப்புப் போருக்கு இந்தியா ஆயுதம், பயிற்சி,…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கை அரசை போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தாவிட்டால் தி.மு.க. வின் மத்திய அமைச்சர்கள் இராஜினாமா செய்வார்கள் என தமிழக முதல்வர் கருணாநிதி தெறிவித்துள்ளார். ---சன் நியூஸ்
-
- 27 replies
- 6.6k views
- 1 follower
-
-
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மலேசியாவில் பேரெழுச்சி http://img511.imageshack.us/my.php?image=virakesarizw4.jpg நன்றி : http://epaper.virakesari.lk/
-
- 0 replies
- 941 views
-
-
அன்பான பெரிய பிரித்தானியா வாழ் தமிழ் மக்களே தாயகத்தில் எம் உறவுகள் படும் இன்னல்களை பிரித்தானிய அரசுக்கும் இங்குள்ள மக்களுக்கு உணர்த்தும் முகமாகவும் அத்துடன் தமிழக உறவுகளின் எழுச்சிக்கும், எம்மவர்கள் தொடர்பில் அவர்களின் நேசக்கரத்திற்கு நன்றி கூறும் முகமாகவும் எதிர்வரும் 19ம் திகதி கார்த்திகை மாதம் புதன்கிழமை மாலை 3.30 மணி தொடக்கம் 6.30 மணி வரை பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் இடம்பெறும்.அனைத்து உறவுகளும் திரண்டு எம் மக்கள் மீதான சிங்கள அரசின் இன அழிப்பினை தெரியப்படுத்துவோம்.நன்றி
-
- 0 replies
- 1.3k views
-
-
யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இந்தியா சென்றிருந்த மஹிந்த தெரிவித்த கருத்து தொடர்பாக நேற்று சட்டசவையில் காங்கிரசுக்கும் பா.ம.க வினருக்கும இடையே கடும் அனல் பறந்த வாக்குவாத மோதல் நடந்தது. இந்த விடயத்தில் பா.ம.க.வுக்கு ஆதரவாக ம.தி.மு.கவினர் குரல் கொடுத்தனர். விபரம் வருமாறு: சட்டசபையில் ஜி.கே.மணி (பா.ம.க) பேசியவை : மஹிந்த போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லி இருக்கிறார். மன்மோகன்சிங்குடன் அவர் பேசியவை என்ன என்பதுபற்றி தலைவருக்குத்; தெரிவிக்கபட்டிருக்கும் அது என்ன என்பது பற்றி முதல்வர் அறிவிப்பாரா? சிவபுண்ணியம் (இந்திய கம்னிஸ்ட்) பேசியவை : மஹிந்த போர் நிறுத்தம் செய்யமாட்டேன். ஆனால் தமிழருக்கு பாதிப்பு வராது என்கிறார…
-
- 0 replies
- 1k views
-
-
சாயல் கண்ணாடி அணிந்துகொண்டு எடுப்பாகச் செயற்பட்டுவரும் விமானப்படை உயரதிகாரிகள் புலிகள் இயக்கத்தினரின் சிலின் 143 ரக சிறிய விமானங்களை தாக்கி அழிப்பதற்காக “”நைற்விஷன்’ (Niபாவஎளைழைn iளெவசரஅநவெ)இரவுத் தேடலுக்கான உபகரணம் தொடக்கம் சுப்பர் சொனிக் விமானங்கள் வரை பல்வேறு விமான வகை மற்றும் விமானப் பாதுகாப்பு உபகரணங்கள் கருவிகளை கொள்வனவு செய்யும்படி அரசைக் கோரியபோது உடனேயே அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. ஆயினும்இ கடந்த நவம்பர் 4 ஆம் திகதி இரவு புலிகளின் விமானம் கொழும்பு வான் பரப்புக்குள் தாழ்வாகப் பறப்பதையும் அதற்கு மேலாக விமானப்படையின் எப்7 தாக்குதல் விமானம் ஒன்று பறப்பதையும் காட்டும் விமானப்படையின் வீடியோ காட்சியொன்றில் காட்டியிருப்பதால் விமானப்படையினர் செயற்படும் விதம் ப…
-
- 1 reply
- 1.9k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கரடியனாறு பன்குடாவெளிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் தமிழ் துணை இராணுவக் குழுவின் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஏழு பேர் காணாமல் போய் உள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 969 views
-
-
போரை நிறுத்தவே முடியாது: புதுடில்லியில் மகிந்த ராஜபக்ச திட்டவட்ட அறிவிப்பு [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 09:48 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கையின் போரை நிறுத்தவே முடியாது- ஆனால் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பேன் என்று இந்தியத் தலைநகர் புதுடில்லியில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்துள்ளார். புதுடில்லி சென்றுள்ள மகிந்த ராஜபக்ச இன்று அந்நாட்டு ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது: தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தால்தான் போரை நிறுத்த முடியும். இலங்கையில் வாழும் தமிழர்கள் என் நாட்டு குடிமக்கள். அவர்களைப் பாதுகாப்பது எனது பணி என்பதை இந்தியப் பிரதமருக்கும் உலக நாடுகளுக்கும் தெரிவிக்கிறேன். இந்தியாவில் பயிற்சி பெற்ற 1,200…
-
- 17 replies
- 2.1k views
-
-
இலங்கை தமிழர் தாக்கப்படுவதை கண்டித்து ஒரு தமிழன் என்ற முறையில் என் உணர்வைக் காட்ட வேண்டிய நேரம் இது. எனவே திட்டமிட்டபடி சென்னையில் நாளை மறுநாள், ஞாயிற்றுக்கிழமை, நானும் என் ரசிகர்களும் உண்ணாவிரதம் இருக்கிறோம் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். நெல்லையில் வில்லு படப்பிடிப்பில் நிருபர்கதளிடம் விஜய் கூறியதாவது: இலங்கையில் கொல்லப்படும் நம் தமிழ்ச் சகோதர சகோதரிகள் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் அங்கு பூரண சுதந்திரத்துடன் வாழ வகை செய்யப்பட வேண்டும். போர் நிறுத்தம் இப்போதே முடிவுக்கு வர வேண்டும். இந்த நோக்கங்களுக்காகத்தான் சென்னையில் திரைத்துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தில் பங்கேற்றேன். அதற்காக பிரதமருக்கு தந்தி அனுப்புமாறு எனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத…
-
- 0 replies
- 668 views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி சிறிலங்காவின் குற்றப் புலனாய்வு காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 716 views
-
-
புலிகளின் மீது குண்டு வீசினாலும் தமிழர்கள் மீது வீசுகின்ற குண்டுதான்: மகிந்தவுக்கு கருணாநிதி பதில் [வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2008, 08:38 பி.ப ஈழம்] [க.நித்தியா] தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது குண்டு வீசினாலும் தமிழர்கள் மீது வீசுகின்ற குண்டுதான் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி பதிலளித்துள்ளார். தமிழக சட்டசபையில் இன்று வெள்ளிக்கிழமை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் கருத்து குறித்து அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்பினர். இதற்கு பதிலளித்து கருணாநிதி ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த 12 ஆம் நாள் இந்த சபையில் ஒரு மனதாக - ஒரே மனதாக ஒரு தீர்மானத்தை தமிழர்களின் இனம் கா…
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழகத்தில் பழங்கால கலை பண்பட்டின் இலக்கணமாக திகழும் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழின் சுவையையும் ஒருங்கே கொண்ட நாடக கலை தற்போது அழிந்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.இயல், இசை, நாடகம் இணைந்த முத்தமிழ் என்ற பெருமையுடைய தமிழில் இன்று நாடகம் என்பது தன் பீடும் நடையை இழந்து ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டுக் கிடக்கிறது. நாடகம் படைப்பதும் நாடகம் நடிப்பதும் பல தமிழர்களுக்கு தெரியுமா என்பது சந்தேகம் தான். படங்களுடன், கட்டுரையினை வாசிக்க... http://www.tamilseythi.com/kaddurai/tamiln...2008-11-15.html
-
- 0 replies
- 2.3k views
-
-
ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலையைக் கண்டித்தும், போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வலியுறுத்தியும் புதுடில்லியில் உள்ள இந்திய நாடாளுமன்றம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களின் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 760 views
-
-
யாழ் குடாநாட்டில் நீச்சல் தடாகம் இல்லாத குறையை போக்குவதற்கு மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைவாக அவரின் புதல்வர் நாமல் ராஜபக்ஸவினால் இயக்கப்படும் இளைஞர்களுக்கான நாளை எனப்படும் அமைப்பினால் இந்த திட்டம் இன்று உத்தியோகபூர்வமாக சமய நிகழ்ச்சிகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ் நகரின் மத்தியில் உள்ள மத்திய கல்லு10ரியில் இந்த நீச்சல் தடாகம் அமைக்கப்படவுள்ளது. கடுமையான உயர் பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று இடம்பெற்ற இந்த வைபவத்தில் யாழ் நகர தளபதி பிரிகேடியர் குலதுங்க, மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக கல்விப் பணிப்பாளர், மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள், புளுவோற்றர் சிஸ்ரம் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். யாழ் குடாநாட்டில் நீச்சல்…
-
- 0 replies
- 1.5k views
-
-
முள்ளை முள்ளால் எடுக்கும் தந்திரோபாயமே இனிச் சரி! [15 நவம்பர் 2008, சனிக்கிழமை 12:50 மு.ப இலங்கை] ஈழத் தமிழர் தாயகம் மீது தனது அரசு தொடுத்திருக்கும் போரை நிறுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை என இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நின்றுகொண்டு திட்டவட்டமாக அறிவிப்பு விடுத்திருக்கின்றார் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இலங்கை அரசுப் படைகள் தொடுத்திருக்கும் யுத்தத்தை நிறுத்தச் செய்வதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்குமாறு இந்திய மத்திய அரசை தமிழகத்தின் அனைத்துக் கட்சிக் கூட்டம் வற்புறுத்திக் கோரியுள்ள பின்னணியில் - யுத்தத்தை நிறுத்துமாறு தமிழக சட்டசபை ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி வற்புறுத்தியுள்ள பின்புலத்தில் - இந்தியத் தலைநகர் புதுடில்லியில் போய் நின்றுகொண…
-
- 0 replies
- 2k views
-
-
-
- 19 replies
- 4.4k views
- 1 follower
-
-
13ஆவது திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது - சபையில் சம்பந்தன் எம்.பி. கருத்து வீரகேசரி நாளேடு 11/14/2008 7:49:37 PM - யுத்தத்தின் மூலம் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயற்சிக்கின்றார். ஆனால், அது நடைமுறைச் சாத்தியமற்றது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இணைக்கப்பட்ட வட.கிழக்கினை பிரித்தமை தமிழ் மக்களுக்கு இழைத்த பாரிய துரோகமாகும். 13ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுவது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் மக்களின் உயிர்கள், சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் இன சுத்…
-
- 0 replies
- 454 views
-
-
ஒமந்தை சோதனைச்சாவடியில் ஐ.சி.ஆர்.சி மீண்டும் பணியில் ஆ.அருண் 11/14/2008 10:05:28 PM - இவ்வாண்டு ஜனவரிமாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 270000ற்கு அதிகமான மக்கள் இருபக்கங்களிலிருந்தும் ஒமந்தைக்கடவையைப்பயன்படுத்த
-
- 0 replies
- 510 views
-
-
தமிழக உதவிப் பொருட்கள் சிறீலங்கா அரசு மூலமே விநியோகம் திகதி: 14.11.2008 // தமிழீழம் // [சோழன்] தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட நிதியில் இருந்து பெறப்பட்ட உணவுப் பொருட்கள் தங்களின் ஊடாகவே வழங்கப்பட வேண்டும் என இந்தியாவில் வைத்து சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியத் தூதரகத்தின் ஊடாக செஞ்சிலுவைச் சங்கத்திடம் வழங்கப்பட்டு, செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாகவே மக்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்தியாவில் நின்றுகொண்டு மகிந்த ராஜபக்ச தங்களின் ஊடாகவே வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் இந்தியா அனுப்பும் நிவாரணப் பொருட்களை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், அந்தப் பொருட்கள் சர்வதேச அமைப்புக்கள் மூலம் …
-
- 7 replies
- 1.6k views
-
-
ஈழத் தமிழ் மக்களின் கண்ணீர்த் தூதுவர்களா தமிழகத்திலிருந்து சென்ற 2000 தமிழ் மாணவர்கள், தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற முற்றுகைப்போராட்டம். (ஆடியோச் செய்தி இணைக்கப்பட்டுள்ளது)ஈழத் தமிழ் மக்களின் துயரங்களைத் தாங்கி, கண்ணீர்த் தூதுவர்களாக, இந்திய தலைநகர் டெல்லி நோக்கிச் சென்ற 2000 தமிழ் மாணவர்கள், ஏனைய மாகாணங்களிலிருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுடன் இணைந்து , இந்திய நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். இது குறித்த விரிவான தகவல்களுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக துணைச்செயலாளார் திரு மகேந்திரன் அவர்களின் பேட்டி.. http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=267
-
- 0 replies
- 1.1k views
-
-
முன்னாள் பிரதமர் ராஜீவ் தலைவர் பிரபாவுக்கு குண்டு துளைக்காத ஆடையை வழங்கியதாக சட்டசபையில் காங்.கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று சட்டசபையில் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது பேசும் போதே அவர், தமிழகத்தில் ராஜீவை பறிகொடுத்து பெரும் தியாகத்தை காங்கிரஸ் செய்திருக்கிறது. இதை சொல்லும் நேரத்தில் மூப்பனார் சொல்லிய ஒரு சம்பவத்தை உங்களிடம் சொல்கிறேன். ராஜீவ் பிரதமாராக இருந்த போது இலங்கையில் அமைதி ஒப்பந்;தம் ஏற்பட்டது. அதன்பின் ஒரு முறை ராஜீவை சந்திக்க பிராபாகரன் டில்லிக்கு மூப்பனார் அழைத்துச் சென்றார். அப்போது, பிரபாகரனை ராஜீவ் கட்டித் தழுவி பேசினார், பின்னர், தன்னுடைய குண்டு துளைக்காத ஆடையை எடுத…
-
- 11 replies
- 3.4k views
-
-
கரடியனாறு பங்குடாவெளியில் கருணா குழுவின் அலுவலகம் மீது தாக்குதல்: ஒருவர் பலி! வியாழன், 13 நவம்பர் 2008, 21:21 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான்] மட்டக்களப்பு கரடியனாறு பங்குடாவெளி பகுதியில் அமைந்துள்ள கருணா குழு அலுவலகம் மீது விடுதலை புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் செங்கலடி-பதுளை வீதியில் பங்குடாவெளி கிராமத்தில் அமைந்துள்ள அலுவலகமே தாக்கப்பட்டுள்ளது. இதில் கருணா குழு உறுப்பினர் ஒருவரின் சடலம் செங்கலடி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.மேலதிக விபரங்களை எதிர் பார்க்கவும். பதிவு
-
- 4 replies
- 1.5k views
-
-
கிழக்கில் ஜனநாயகத்தை ஸ்தாபித்துள்ளதாக கூறும் அரசாங்கம் பிள்ளையான் மற்றும் கருணா குழுக்களின் மூலம் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுகிறது – மங்கள சமரவீர GTN ற்கு வழங்கிய விசேட செவ்வி ஒலிவடிவில்: http://www.globaltamilnews.net/tamil_news....=2147&cat=1 அரசாங்கம் கருணா மற்றும் பிள்ளையான் குழுக்களை நாளுக்கு நாள் வலுப்படுத்தி, அடுத்த தேர்தலில் அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் வாக்குக் கொள்ளையில் ஈடுபட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவு தலைவரும் பாதுகாப்பு கண்காணிப்பு மையத்தின் பேச்சாளருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை ஸ்தாபித்துள்ளதாக அரசாங்கம் கூறும் கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் மற்றும் கருணா குழுவினரால் மேற்கொ…
-
- 2 replies
- 1.1k views
-
-
சம்பூர் பாதுகாப்பு வலயத்தின் எல்லைகளில் மாற்றம் வீரகேசரி இணையம் 11/14/2008 10:38:39 AM - இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் மூதார் கிழக்கு மற்றும் சம்பூர் அதியுயுர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பாக ஏற்கனவே இலங்கை ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தங்களை செய்யும் வகையில் மற்றுமொரு அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக பிபிசி தமிழோசை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு வலயங்களின் எல்லைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2008 ம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட அறிவித்தலின் படி 11 கிராம சேவையாளர்கள் பிரிவுகளிலுள்ள 25 கிராமங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது.புதி
-
- 0 replies
- 753 views
-
-
தமிழகத்தின் ஏகோபித்த கருத்தை கவனத்தில் கொள்ளுமா மத்திய அரசு? [14 நவம்பர் 2008, வெள்ளிக்கிழமை 8:50 மு.ப இலங்கை] தருணம் பார்த்து ஏகமனதாகக் காய் நகர்த்தியிருக்கின்றது தமிழக சட்டசபை. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியே முன்னின்று இந்தக் காய் நகர்த்தலை மேற்கொண்டு ஒரு கல்லில் இரு மாங்காய்கள் அடித்திருக்கின்றார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக - ஈழத் தமிழர் தாயகத்தின் மீது இலங்கை அரசு தொடுத்திருக்கும் கொடூரப் போருக்கு எதிராக - தமிழகத்தில் கிளர்ந்தெழுந்த உணர்வெழுச்சியை, உடனே ஆரவாரமாக சர்வகட்சி மாநாட்டைக் கூட்டி, உச்சத்துக்குக் கொண்டு வந்த கலைஞர், பின்னர் அதையொட்டி எழுப்பப்பட்ட நிபந்தனைகளை ஒருதலைப்பட்சமாகக் கைவிட்டு, அவ்விடயத்தைப் போட்டடித்து விட்டார், குத்துக்கரணம் அடி…
-
- 0 replies
- 804 views
-