Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரித்தானிய தமிழர் அமைப்பு ஒன்று நடத்த உள்ள கலாசார நிகழச்சியை தடைசெய்யுமாறு இலங்கை கோரிக்கை – சிங்கள நாளிதழ்: http://www.globaltamilnews.net/tamil_news....=2128&cat=1 பிரித்தானிய தமிழர் அமைப்பு ஒன்று எதிர்வரும் 26 ஆம் திகதி நடத்த உள்ள கலாசார நிகழச்சியை தடைசெய்யுமாறு இலங்கை அரசாங்கம் நேற்று (நவ 12) பிரித்தானிய அதிகாரிகளிடம் கோரிகை விடுத்துள்ளதாக சிங்கள நாளிதழ் தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள் விழாவினை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2004 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதால், இந்தக் கலாசார நிகழ்ச்சியை நடத்துவது, …

  2. TMVPயைப் போல் தம்மை அடையாளப்படுத்தி விடுதலைப்புலிகள் கிழக்கு மாகாணத்திற்குள் ஊடுருவல் - புலனாய்வுத்துறை: http://www.globaltamilnews.net/tamil_news....=2125&cat=1 தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்களைப் போல், தம்மை அடையாளப்படுத்தி கொண்டு பெருமளவிலான விடுதலைப்புலிகள் ஆயுதங்களுடன் கிழக்கு மாகாணத்திற்குள் ஊடுருவி இருப்பதை தாம் கண்டறிந்துள்ளதாக புலனாய்வுதுறையினர் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலி உறுப்பினர்கள், ரி.எம்.வி.பியின் உறுப்பினர்களாக அந்த கட்சிக்குள் இருப்பது தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் என பாதுகாப்பு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர். ரி.எம்.வி.பியின் தலைவர்கள் அடிக்கடி கொழும்புக்கு செல்வதால், அவர்களுடன் இந்த விடுத…

  3. இலங்கை திரும்பிய ஒரு வாரகாலத்தில் 5 முறை ரகசிய காவற்துறையினர் வாக்குமூலம் பெற முனைந்தனர் - சந்திரிக்கா: இலங்கை திரும்பிய ஒரு வாரகாலத்தில், ரகசிய காவற்துறையினர் தன்னை 5 முறை தொடர்பு கொண்டு, வாக்குமூலம் பெற்றுத் தருமாறு அழுத்தம் கொடுத்தாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க கூறியுள்ளார். வெளிநாட்டில் இருந்து தான் இலங்கை திரும்பும் போதெல்லாம் இப்படியான பல்வேறு வகையில் பாரிய மன அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முதல் தடவை தனது உத்தியோபூர்வ இல்லத்தில் இருந்த பாதுகாப்பு படையினர் அகற்றப்பட்டனர். இரண்டாவது முறை அங்கிருந்த பணியாளர்கள் அகற்றப்பட்டு, வீட்;டில் இருந்த பெறுமதியான வீட்டு பாவனை பொருட்கள் அகற்றப்பட்டன…

  4. சர்வதேசத்தை ஏமாற்றும் திட்டமே அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு [13 நவம்பர் 2008, வியாழக்கிழமை 7:25 மு.ப இலங்கை] அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கலந்துரையாடல் என்ற பெயரில் சர்வதேசத்துக்கு - குறிப்பாகத் தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவுக்கு - கொழும்பு அரசு ‘பூச்சாண்டி’ காட்டி வருவதை புட்டுப் புட்டு விமர்சித்து அம்பலப்படுத்தியிருக்கின்றா

  5. மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த புகையிரதம் தடம்புரண்டுள்ளது வீரகேசரி இணையம் 11/13/2008 10:12:02 AM - மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த சாகரிக்க எனப்படும் புகையிரதம் களுத்தறை கட்டுகுறுந்த பகுதியிலின்று காலை தடம்புரண்டுள்ளது. இதனால் பிரதான கரையோர புகையிரத சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  6. வீரகேசரி நாளேடு - இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் இராணுவ உதவிகள் நிறுத்தப்படுமானால் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு அது உதவியாக இருக்கும். எனவே, எந்தவித இராணுவ உதவிகளையும் இந்தியா இலங்கைக்கு வழங்கக் கூடாது. அத்துடன் இந்திய அரசாங்கம் எம்மீதான தடையை நீக்கு எமது இயக்கத்தை அங்கீகரிக்க வேண்டும். என்று விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் போர் நிறுத்தத்தை முறித்துக் கொண்ட போதும் புலிகளான நாம் எப்போதும் போர் நிறுத்தத்திற்கு தயாராகவேயுள்ளோம். இன்றும் நாம் யுத்த நிறுத்தத்தைத் தொடரவே விரும்புகின்றோம் என்றும் அவர் சொன்னார். தமிழகத்திலிருந்த வெளிவரும் தமிழோசை நாழிதழுக்கு அளித்துள்ள பேட்டியிலேயே…

  7. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். சிவாஜிலிங்கம், என் சிறீகாந்தா ஆகியோர் டெல்லியில் இருந்து GTN ற்கு வழங்கிய விசேட செவ்விகள் - ஒலிவடிவில் இணைப்பு: http://www.globaltamilnews.net/tamil_news....=2112&cat=1 இவர்கள் விரும்பியவாறு தாமதித்து யுத்தநிறுத்தத்தை நடைமுறைப்படுத்த முனைந்தால் அது பலிக்காது. அத்துடன் அது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். அத்துடன் இவர்களின் நிகழ்ச்சி நிரலின் பின்னால் செல்லவோ, அவர்கள் விரும்பிய போது யுத்தநிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளவோ தமிழர்கள் வெறும் மடையர்கள் அல்ல என்பதனை வரலாறு நிரூபிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்;தருமான எம் சிவாஜிலிங்கம் ற்கு வழங…

  8. இலங்கை பிரச்சினை தொடர்பில் தமிழக சட்டசபையில் மோதல் [புதன்கிழமை, 12 நவம்பர் 2008, 09:11 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்] இலங்கை பிரச்சினை தொடர்பில் தமிழக சட்ட சபையில் இன்று புதன்கிழமை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கும் இந்திரா காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தும் தீர்மானத்தின் மீது தமிழக சட்டசபையில் ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் பேச சபாநாயகர் வாய்ப்பு அளித்தார். முதலில் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர் விஜயகாந்தை பேச அழைத்தார். அவர் சபையில் இல்லாததால் அடுத்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டசபை உறுப்பினர் ரவிக்குமாரை உரையாற்றுமாறு அழைத்தா…

  9. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வர்த்தக வரிச்சலுகையை சிறிலங்கா அரசுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 464 views
  10. நவீன ஆயுதங்கள் கொள்வனவு செய்ய சீனா செல்கிறார் கோத்தபாய [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 04:17 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தியா சென்று கொழும்பு திரும்பியதும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வார் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா படைத்தரப்புக்கு தேவையான நவீன ஆயுதங்கள கொள்வனவு செய்வது குறித்து பேச்சு நடத்துவதற்காகவே கோத்தபாய ராஜபக்ச அங்கு செல்லவுள்ளதாக அறியமுடிகின்றது. குறிப்பாக புதிய கதுவீ (ராடர்) கருவிகளை பெறுவதும் அதனை இயக்குவதற்கு சீன தொழில்நுட்பவியலாளர்களை கொழும்புக்கு வரவழைப்பது தொடர்பான விடயங்கள் பேசப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.…

    • 0 replies
    • 581 views
  11. ஓமந்தை சோதனைச் சாவடியிலிருந்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தற்காலிகமாக விலகல் [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 03:54 மு.ப ஈழம்] [பி.கெளரி] வவுனியா மாவட்டத்தில் உள்ள ஓமந்தை சோதனைச் சாவடியிலிருந்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தற்காலிகமாக விலகியுள்ளது. இது தொடர்பில் செஞ்சிலுவைச் சங்கத்தின் தகவல் பிரிவு அதிகாரி சரசி விஜயரட்ன தெரிவித்துள்ளதாவது: ஓமந்தை சோதனைச் சாவடியில் கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற சம்பவம் ஒன்றினைத் தொடர்ந்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தனது பணிகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. பாதுகாப்பு காரணங்களால் எமது பணியாளர்கள் அங்கு நேற்று பணியில் ஈடுபடவில்லை. இன்று பணியில் ஈடுபடுவது தொடர்பாக அவர்கள் தற்போது வரை முடிவு செய்யவில்லை என்றார் அவர். …

    • 0 replies
    • 580 views
  12. காலத்தின் தேவை கருதிய செயற்திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்: கனடிய சங்கங்களின் கூட்டமைப்பு [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 03:54 மு.ப ஈழம்] [பா.பார்த்தீபன்] காலத்தின் தேவை கருதிய செயற்திட்டங்கள் விரைவுபடுத்தப்படும் என்று கனடிய சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடந்த நவம்பர் 1 ஆம் நாள் சனிக்கிழமை, ரொறன்ரோ ஐயப்பன் கலாச்சார மண்டபத்தில் 75 ஊர்ச் சங்கங்கங்கள், பழைய மாணவர் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் என இணைந்து நடாத்திய புலத்தின் இணைவால் தளத்தில் உள்ள உறவுகளின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்ய நடத்திய "அரவணைப்போம்" நிகழ்வின் ஊடாக 35,750.00 கனடிய டொலர்கள் திரட்டப்பட்டு மக்கள…

    • 0 replies
    • 741 views
  13. "யால வன கற்குகையில் 35 பேரடங்கிய விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணி" [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 03:55 மு.ப ஈழம்] [ந.ரகுராம்] சிறிலங்காவின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள யால காட்டு குகை ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் 35 ஆண், பெண்கள் அடங்கிய கொமாண்டுா அணி தங்கியிருப்பதாக அவர்களிடம் பிடிபட்டு தப்பிவந்த பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். புத்தல, மினிப்புரகமவைச் சேர்ந்த திகலரட்ன என்பவேர காவல்துறையினரிடம் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சில நாட்களுக்கு முன்னர் நான் தேன் எடுப்பதற்காக யால காட்டுக்குள் சென்றேன். தேன் இருக்கும் இடங்களை தேடிச்சென்ற போது திடீரென அந்த இடத்துக்கு வந்த மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் என்னை…

    • 0 replies
    • 1.1k views
  14. அம்பாறையில் பௌத்த பிக்குவை காணவில்லை வீரகேசரி இணையம் 11/12/2008 11:18:26 AM - அம்பாறை பகுதியில் பௌத்த பிக்குவொருவர் காணமல் போயுள்ளார். குடும்பிமலையிலுள்ள விகாரையை சேர்ந்த வணக்கத்துக்குரிய சிவுறுமுலே தர்மஸ்ரீ தேரரை நேற்று இரவு முதல் காணவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    • 9 replies
    • 2.3k views
  15. புலிகள் தமது இலக்குகளை அடைய முடியாதபடி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பூநகரி பாதை விரைவில் திறக்கப்படும். ஆனால், அதற்கான கால வரையறையைக் கூற முடியாது என்று ஊடக தகவல்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். எதிர்கால சந்ததியினருக்கு சமாதானம், சுபீட்சம் நிறைந்த வாழ்வை வழங்கவே யுத்தத்தை நடத்தி வருகின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா மேலும் கூறியதாவது, எமது எதிர்கால சந்ததியினருக்கு அமைதியான வாழ்க்கையையும் சுபீட்சத்…

  16. மரணித்த தன் தாயாரின் சடலத்தைப் பார்வையிட ஊடகவியலாளர் யசீகரனுக்கு சிறிது நேரமே வழங்கப்பட்டது: http://www.globaltamilnews.net/tamil_news....=2100&cat=1 250 நாட்களுக்கு மேலாக தகுந்த காரணமின்றித் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் சுயாதீன ஊடகவியலாளரான வெற்றிவேல் யசிகரனின் தயாரான மகேஸ்வரி நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார். சுகவீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவர் நேற்று காலமானார். இதேநேரம், தாயாரின் பூதவுடலைப் பார்க்க யசிகரனுக்கு அனுமதி வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய நீதிமன்றமும் அதற்கான அனுமதியை வழங்கியிருந்தது. யசிகரனுடன் அவரது மனைவி வளர்மதியும் தடுப்புக் காவலில் வ…

  17. கிளிநொச்சிக்கு மேற்காக படைநடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிறீலங்கா இராணுவத்தினர், விடுதலைப் புலிகளின் முக்கிய தளமான பாலவிப்பகுதியை நேற்று கைப்பற்றியுள்ளனர் என அறிவித்துள்ளனர். பாலவிப்பகுதி வேரவில்லுக்கு 8 கி.மீ.வடகிழக்கிலும் ஏ32 பாதைக்கு 61/2 கி.மீ மேற்காகவும் அமைந்துள்ளதனால் ஏ32 பாதையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்க்கு படையினருக்கு மிக முக்கியமானதாக அமையும் என தெரிவித்துள்ளனர். http://www.tamilseythi.com/srilanka/paalavi-2008-11-11.html Sri Lankan troops take rebel town: military COLOMBO (AFP) – Government forces in Sri Lanka have wrestled control of a small town from Tamil Tiger rebels in an ongoing military offensive, the defence ministry said on…

  18. இலங்கையில் அப்பாவி இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க மத்திய அரசு முன்வரவேண்டும் என்று தமிழகத்தில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற பிள்ளையார் சுழி போட்டது, கடந்த அக்டோபர் 2-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய உண்ணாவிரதப் போராட்டம்தான். அதனைத் தொடர்ந்துதான் தி.மு.க. அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி மத்திய அரசை மிரட்டும் வகையில் தமிழக எம்.பி.க்களின் ராஜினாமா தீர்மானத்தை நிறைவேற்றியது. பின்னர் மத்திய அரசின் நடவடிக்கை திருப்தியளிப்பதாக இருக்கிறது என்று கருணாநிதி அறிவித்துவிட்டார். இந்நிலையில், ஈழத் தமிழர்களுக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட, அதன் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இத…

  19. குண்டுகளும் தோட்டாக்களும் மனச்சாட்சியின் குரலை நசித்து விட முடியாது - நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா: http://www.globaltamilnews.net/tamil_news....=2111&cat=1 மனச்சாட்சியின் குரலுக்கு உலகம் செவிசாய்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என வாழைச்சேனை நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா தெரிவித்துள்ளார். வாழைச்சேனை வை.எம்.சி.ஏ யில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட மனித உரிமைகள் ஆலோசனை நிலையத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட அவர் குண்டுகளும் தோட்டாக்களும் மனச்சாட்சின் குரலை நசித்து விடமுடியாது எனவும் தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனை நிலையம் இந்தப் பிரதேச வாழ் மக்களுக்கான இலவச சட்ட உதவிகள், ஆலோசனைகள், மனித உரிமை மீறல்கள் குறித்த முறைப்பாடுகளைப் பதிவு செய்த…

  20. சர்வகட்சிக் குழுவின் யோசனையை ஜனாதிபதி எவ்வாறு இந்தியத் தலைவர்களிடம் சமர்ப்பிப்பிக்க முடியும்? திஸ்ஸ: http://www.globaltamilnews.net/tamil_news....=2107&cat=1 சர்வகட்சி பிரதிநிதிகள் குழுக்கூட்டத்தில் இதுவரை எதுவித இணக்கப்பாடும் எட்டப்படாத நிலையில், சர்வகட்சி குழுவின் யோசனையை ஜனாதிபதி எவ்வாறு இந்தியத் தலைவர்களிடம் சமர்ப்பிப்பாரெனப் பேராசிரியர் திஸ்ஸவிதாரண கேள்வியெழுப்பினார். சர்வகட்சிக்குழு நேற்றுக் கூடிய போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்யும் போது, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தயாரித்த யோசனைகளைக் கொண்டு வருவாரென இலங்கை இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்ததுடன் தமிழக காங்கிரஸ் தலைவர்களும் கூறியுள்ளதாகவும் இது உண்மையா எனவும் கேட்கப…

  21. மங்களவிற்கு நெருக்கமான பிக்கு மீது இனந் தெரியாதோர் துப்பாக்கிப் பிரயோகம் : http://www.globaltamilnews.net/tamil_news....=2106&cat=1 தலதா மாளிகையில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை வெளிகொண்டு வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் பிக்கு அமைப்பின் பொதுச் செயலாளர் பலாங்கொட உடஹெல்லேபொல ஸ்ரீபோதி மாலகராயவின் விகாரதிபதி கொலன்னே ஸ்ரீஷாந்த விஜய தேரர் மீது நேற்றிரவு(11) இனந் தெரியாதோர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். நேற்று நள்ளிரவு 12 .30 அளவில் தங்குமிடத்திற்கு வெளியில் உள்ள கழிவறைக்கு சென்ற போது, மறைந்திருந்த நபர் ஒருவர்,இவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளதாகவும் இதனையடுத்து அவர் தனது தங்குமிடத்திற்கு சென்று கதவை தாழிட்டுக் கொண்டதாகவும் தெரிவி…

  22. ஈழத் தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசு போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை புதுடில்லியில் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் பேரணி நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  23. விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ஆயுதம் ஏந்தவும் தாம் தயங்கப் போவதில்லை என இந்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்கள் கொத்தடிமைகளைப் போன்று நடத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் பிரபல சஞ்சிகையொன்றுக்கு அளித்த விசேட நேர்காணலின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். கைது செய்தல்களுக்கு அஞ்சி தாம் புலிகளுக்கு வழங்கும் ஆதரவை ஒருபோதும் வாபஸ் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலையை முன்னிலைப்படுத்தி ஈழத் தமிழர் அவலங்களை புறந்தள்ள சில சக்திகள் முனைவதாகவும் அதற்கு ஒருபோதும் தாம் இடம…

  24. திருவள்ளுவர் நற்பணி இயக்கத்தின் தலைமையில் மும்பையில் தாராவி பகுதியிலுள்ள தாத்தா இரட்டைமலை சீனிவாசன் சதுக்கத்தில் மகிந்த ராஜபக்ச உருவப்பட எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இதன் விபரம் வருமாறு, இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை கண்டித்தும், அப்பாவி தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும் தமிழகத்தில் எழுந்த இன உணர்வலை மும்பை தமிழர்களையும் தொற்றிக் கொண்டது. இத்தருணத்தில் தங்களுடையஎதிர்ப்பை வெளிப்படுத்தும் படியாக மகிந்த ராஜபக்ச உருவப்படஎரிப்பு போராட்டம் தமிழ் ஆர்வலர்களால் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் திருவள்ளுவர் நற்பணி இயக்கம், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள்,தமிழ் காப்போம் அமைப்பு, தென்னிந்திய முஸ்லிம் சங்கம், மும்பை தமிழ் ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் தமிழ…

  25. அமெரிக்கப் படையினரைவிட இலங்கைத் துருப்பினர் திறமையானவர்கள் - பேச்சுவார்த்தை மூலம் தீர்வு - சம்பிக்க ரணவக்க: http://www.globaltamilnews.net/tamil_news....=2083&cat=1 ஐக்கிய அமெரிக்க இராச்சிய இராணுவப் படையினரைக் காட்டிலும் இலங்கைப் படைத்தரப்பு வலுவானதென சுற்றாடல் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் கெரில்லாக்களுடன் அமெரிக்கப் படையினர் மேற்கொள்ளும் யுத்த நடவடிக்கைகளைவிட விடுதலைப் புலிகளுடனான இராணுவ முன்நகர்வுகளில் எமது படையினர் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வன்னிப் பெருநிலப் பரப்பில் சுமார் 7 முனைகளில் இராணுவப் படையினர் வெற்றிகரமாக முன்னேறி வருவதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வரவு செலவு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.