ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
குண்டுகளும் தோட்டாக்களும் மனச்சாட்சியின் குரலை நசித்து விட முடியாது - நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா: http://www.globaltamilnews.net/tamil_news....=2111&cat=1 மனச்சாட்சியின் குரலுக்கு உலகம் செவிசாய்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என வாழைச்சேனை நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா தெரிவித்துள்ளார். வாழைச்சேனை வை.எம்.சி.ஏ யில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட மனித உரிமைகள் ஆலோசனை நிலையத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட அவர் குண்டுகளும் தோட்டாக்களும் மனச்சாட்சின் குரலை நசித்து விடமுடியாது எனவும் தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனை நிலையம் இந்தப் பிரதேச வாழ் மக்களுக்கான இலவச சட்ட உதவிகள், ஆலோசனைகள், மனித உரிமை மீறல்கள் குறித்த முறைப்பாடுகளைப் பதிவு செய்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
சர்வகட்சிக் குழுவின் யோசனையை ஜனாதிபதி எவ்வாறு இந்தியத் தலைவர்களிடம் சமர்ப்பிப்பிக்க முடியும்? திஸ்ஸ: http://www.globaltamilnews.net/tamil_news....=2107&cat=1 சர்வகட்சி பிரதிநிதிகள் குழுக்கூட்டத்தில் இதுவரை எதுவித இணக்கப்பாடும் எட்டப்படாத நிலையில், சர்வகட்சி குழுவின் யோசனையை ஜனாதிபதி எவ்வாறு இந்தியத் தலைவர்களிடம் சமர்ப்பிப்பாரெனப் பேராசிரியர் திஸ்ஸவிதாரண கேள்வியெழுப்பினார். சர்வகட்சிக்குழு நேற்றுக் கூடிய போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்யும் போது, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தயாரித்த யோசனைகளைக் கொண்டு வருவாரென இலங்கை இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்ததுடன் தமிழக காங்கிரஸ் தலைவர்களும் கூறியுள்ளதாகவும் இது உண்மையா எனவும் கேட்கப…
-
- 0 replies
- 869 views
-
-
மங்களவிற்கு நெருக்கமான பிக்கு மீது இனந் தெரியாதோர் துப்பாக்கிப் பிரயோகம் : http://www.globaltamilnews.net/tamil_news....=2106&cat=1 தலதா மாளிகையில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை வெளிகொண்டு வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் பிக்கு அமைப்பின் பொதுச் செயலாளர் பலாங்கொட உடஹெல்லேபொல ஸ்ரீபோதி மாலகராயவின் விகாரதிபதி கொலன்னே ஸ்ரீஷாந்த விஜய தேரர் மீது நேற்றிரவு(11) இனந் தெரியாதோர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். நேற்று நள்ளிரவு 12 .30 அளவில் தங்குமிடத்திற்கு வெளியில் உள்ள கழிவறைக்கு சென்ற போது, மறைந்திருந்த நபர் ஒருவர்,இவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளதாகவும் இதனையடுத்து அவர் தனது தங்குமிடத்திற்கு சென்று கதவை தாழிட்டுக் கொண்டதாகவும் தெரிவி…
-
- 0 replies
- 775 views
-
-
மரணித்த தன் தாயாரின் சடலத்தைப் பார்வையிட ஊடகவியலாளர் யசீகரனுக்கு சிறிது நேரமே வழங்கப்பட்டது: http://www.globaltamilnews.net/tamil_news....=2100&cat=1 250 நாட்களுக்கு மேலாக தகுந்த காரணமின்றித் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் சுயாதீன ஊடகவியலாளரான வெற்றிவேல் யசிகரனின் தயாரான மகேஸ்வரி நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார். சுகவீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவர் நேற்று காலமானார். இதேநேரம், தாயாரின் பூதவுடலைப் பார்க்க யசிகரனுக்கு அனுமதி வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய நீதிமன்றமும் அதற்கான அனுமதியை வழங்கியிருந்தது. யசிகரனுடன் அவரது மனைவி வளர்மதியும் தடுப்புக் காவலில் வ…
-
- 2 replies
- 1k views
-
-
என்னதான் நடக்கிறது வன்னியில் - நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா ஜெயானந்த மூர்த்தி வல்லூறுகளைப் போல வட்டமிட்டு குண்டுவீசும் போர் விமானங்கள், இன்னொரு பக்கம் எறிகணை, ஏவுகணை வீச்சு என்று எக்கச்சக்கப் பீதியில் கிடக்கிறது ஈழத்தின் வன்னிப்பகுதி. அங்கே என்ன நடக்கிறது என்பதே தெரியாத அளவுக்குச் சூழ்ந்து கிடக்கிறது போர்மேகம். இந்த நிலையில், இருட்டைக்கிழிக்கும் ஒரு வெளிச்சக் கீற்றாய், வன்னிப் பகுதியில் உண்மை நிலவரத்தைக் கண்டறிய, தன் உயிரையும் துச்சமாக மதித்து அங்கு சென்று திரும்பியிருக்கிறார் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சேனாதிராஜா ஜெயானந்த மூர்த்தி. கொழும்பு திரும்பியுள்ள அவரிடம் நாம் தொலைபேசி மூலம் பேசினோம்... கடும்போர் நடந்து…
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கை பிரச்சினை தொடர்பில் தமிழக சட்டசபையில் மோதல் [புதன்கிழமை, 12 நவம்பர் 2008, 09:11 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்] இலங்கை பிரச்சினை தொடர்பில் தமிழக சட்ட சபையில் இன்று புதன்கிழமை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கும் இந்திரா காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தும் தீர்மானத்தின் மீது தமிழக சட்டசபையில் ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் பேச சபாநாயகர் வாய்ப்பு அளித்தார். முதலில் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர் விஜயகாந்தை பேச அழைத்தார். அவர் சபையில் இல்லாததால் அடுத்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டசபை உறுப்பினர் ரவிக்குமாரை உரையாற்றுமாறு அழைத்தா…
-
- 5 replies
- 1.3k views
-
-
ஈழத் தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசு போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை புதுடில்லியில் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் பேரணி நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 673 views
-
-
விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ஆயுதம் ஏந்தவும் தாம் தயங்கப் போவதில்லை என இந்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்கள் கொத்தடிமைகளைப் போன்று நடத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் பிரபல சஞ்சிகையொன்றுக்கு அளித்த விசேட நேர்காணலின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். கைது செய்தல்களுக்கு அஞ்சி தாம் புலிகளுக்கு வழங்கும் ஆதரவை ஒருபோதும் வாபஸ் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலையை முன்னிலைப்படுத்தி ஈழத் தமிழர் அவலங்களை புறந்தள்ள சில சக்திகள் முனைவதாகவும் அதற்கு ஒருபோதும் தாம் இடம…
-
- 1 reply
- 1.3k views
-
-
திருவள்ளுவர் நற்பணி இயக்கத்தின் தலைமையில் மும்பையில் தாராவி பகுதியிலுள்ள தாத்தா இரட்டைமலை சீனிவாசன் சதுக்கத்தில் மகிந்த ராஜபக்ச உருவப்பட எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இதன் விபரம் வருமாறு, இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை கண்டித்தும், அப்பாவி தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும் தமிழகத்தில் எழுந்த இன உணர்வலை மும்பை தமிழர்களையும் தொற்றிக் கொண்டது. இத்தருணத்தில் தங்களுடையஎதிர்ப்பை வெளிப்படுத்தும் படியாக மகிந்த ராஜபக்ச உருவப்படஎரிப்பு போராட்டம் தமிழ் ஆர்வலர்களால் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் திருவள்ளுவர் நற்பணி இயக்கம், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள்,தமிழ் காப்போம் அமைப்பு, தென்னிந்திய முஸ்லிம் சங்கம், மும்பை தமிழ் ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் தமிழ…
-
- 0 replies
- 819 views
-
-
தமிழக கல்லூரி மாணவர்களிடையே பிரபாகரன் ஒரு மாவீரனே: குமுதம் ரிப்போர்ட்டர் கருத்துக்கணிப்பு [புதன்கிழமை, 12 நவம்பர் 2008, 08:36 பி.ப ஈழம்] [ப.தயாளினி] தமிழக கல்லூரி மாணவர்களிடையே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு மாவீரனாகவே பார்க்கப்படுகின்றார் என்பது உண்மை என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் குமுதம் ரிப்போர்ட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் குமுதம் குழுமத்தின் வெளியிடான குமுதம் ரிப்போர்டரில் வெளிவந்த கருத்துக்கணிப்பு விவரம்: 1. விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவது சரியா? தவறா? சரி - 53.1% (1000 பேர்) தவறு - 46.9% (833 பேர்) 2. ராஜீவ் காந்தி கொலையை மன்னிக்கலாமா? கூடாதா? மன்னிக்கலாம் - 35.46%…
-
- 15 replies
- 2.3k views
-
-
சிங்கள அரசின் அதிபர் ராசபட்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் தமிழகமெங்கும் நடந்தது. மதுரை மதுரையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் இணைந்த இவ்வார்ப்பாட்டத்தை நடத்தின. 12௧1௨008 காலை 11.00 மணிக்கு மதுரை மேலமாசிவீதிவடக்குமாசி வீதி சந்திப்பில் நடந்த இவ்வார்ப்பட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி மதுரை நகரச் செயலாளர் இராசு தலைமை தாங்கினார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்க செயற்குழு உறுப்பினர் கருப்பையா முன்னிலை வகித்தார். "தமிழர் இரத்தம் குடிக்கும் ராஜபட்சே திரும்பிப் போ!", "இனக்கொலை புரியும் ராஜபட்சே திரும்பிப் போ!", "கொலைவெறியன் ராஜபட்சேவுடன் இந…
-
- 1 reply
- 999 views
-
-
சிறிலங்கா அரசு உடனடியாக படைகளை பழைய நிலைக்கு விலக்கிக்கொள்ள வேண்டும்: தமிழக சட்டசபையில் தீர்மானம் [புதன்கிழமை, 12 நவம்பர் 2008, 07:13 பி.ப ஈழம்] [க.நித்தியா] போர் நிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு வெளியிட்டு உடனடியாக படைகளைப் பழைய நிலைக்கு விலக்கிக்கொள்ள வேண்டும் என்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் இன்று புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வருவதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். கருணாநிதி முன்மொழிந்த தீர்மானம் வருமாறு: "ஏறத்தாழ நாற்பதாண்டு காலத்திற்கு மேலாக இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் முடிவு…
-
- 0 replies
- 768 views
-
-
வீரகேசரி இணையம் இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் திரட்டப்படும் நிதி 21 கோடியை அண்மித்துள்ளது. நேற்று மாலை வரை 20 கோடியே 63 இலட்சத்து 29 ஆயிரம் ரூபா சேர்ந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி, மத்திய ரயில்வே துணை அமைச்சர் வேலு ஆகியோரும் நேற்றைய தினம் நிதி உதவி வழங்கினர்.
-
- 0 replies
- 895 views
-
-
சென்னை மத்திய அரசு தனது செல்வாக்கை பயன்படுத்தி இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வைக்க மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஏற்கனவே தமிழக அரசியல் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், ராஜபக்சே தற்போது இந்தியா வந்துள்ளார்.அவர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசும்போது இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து முக்கியமாக விவாதிக்க உள்ளனர். இந்நிலையில், போர் நிறுத்தத்திற்கு ராஜ பக்சேவை வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும்விதமாகஇ தமிழக சட்டசபையில் இன்று இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. …
-
- 0 replies
- 1.1k views
-
-
(படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)ஈழ விடுதலை ஆரவாளரும், தமிழுணர்வாளரும், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத் தலைவருமான திரு.பழ நெடுமாறன் இன்று காலை சென்னையில் கைதாகினார்.இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய். இலங்கை அரசுக்கு இராணுவ உதவிகள் செய்யாதே எனும் கோரிக்கைகளுடன் ஆர்ப்பாட்டம் செய்த போதே தமிழக காவல்துறையால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக செய்திகள் விரைவில்.... http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=267
-
- 13 replies
- 3.3k views
-
-
அம்பாறையில் பௌத்த பிக்குவை காணவில்லை வீரகேசரி இணையம் 11/12/2008 11:18:26 AM - அம்பாறை பகுதியில் பௌத்த பிக்குவொருவர் காணமல் போயுள்ளார். குடும்பிமலையிலுள்ள விகாரையை சேர்ந்த வணக்கத்துக்குரிய சிவுறுமுலே தர்மஸ்ரீ தேரரை நேற்று இரவு முதல் காணவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-
- 9 replies
- 2.3k views
-
-
ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலையின் பின்னணியில் இந்தியா: வைகோ குற்றச்சாட்டு [புதன்கிழமை, 12 நவம்பர் 2008, 10:24 மு.ப ஈழம்] [கி.தவசீலன்] கடந்த 4 ஆண்டு காலமாக சிங்கள அரசு நடத்துகின்ற இனப்படுகொலை தாக்குதலுக்கு பின்னணியில் இருந்து இந்திய அரசு இயக்கி வந்திருக்கிறது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். கோவை வானூர்தி நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களுக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போது மேலும் தெரிவித்துள்ளதாவது: ஈழத்தமிழர்கள் சிறிலங்கா அரசால் கொடூரமான இனப்படுகொலைக்கு ஆளாகி வருகின்ற பெருந்துயரத்துக்கு, பின்னணியில் இருந்து இராணுவ தாக்குதலை இயக்கி வருகிற, ஆயுதங்களை வழங்கி வருகிற, 2 ஆயிரம் கோடி ரூபா…
-
- 1 reply
- 665 views
-
-
விமானப்படை வான் தாக்குதல்களில் சொற்பளவு சிவிலியன்களே கொல்லப்படுகின்றனர் – தெரிவிக்கின்றது சமாதான செயலகம் : இலங்கை விமானப்படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் வான் தாக்குதல்களின் போது சொற்ப அளவிலான சிவிலியன்களே கொல்லப்படுவதாக அரசாங்க சமாதானச் செயலகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. சுமார் 50க்கும் குறைவான சிவிலியன்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் காயமடைந்தவர்கள் மற்றும் இன்பிற இழப்புக்கள் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விமானப்படையினர் அடையாளம் காணப்பட்ட இலக்குகள் மீது மட்டுமே தாக்குதல் மேற்கொள்வதாக சுட்டிக்காட்டப்படுகிறது. யுத்தத்தின் போது ஏற…
-
- 0 replies
- 1.3k views
-
-
அமெரிக்கப் படையினரைவிட இலங்கைத் துருப்பினர் திறமையானவர்கள் - பேச்சுவார்த்தை மூலம் தீர்வு - சம்பிக்க ரணவக்க: http://www.globaltamilnews.net/tamil_news....=2083&cat=1 ஐக்கிய அமெரிக்க இராச்சிய இராணுவப் படையினரைக் காட்டிலும் இலங்கைப் படைத்தரப்பு வலுவானதென சுற்றாடல் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் கெரில்லாக்களுடன் அமெரிக்கப் படையினர் மேற்கொள்ளும் யுத்த நடவடிக்கைகளைவிட விடுதலைப் புலிகளுடனான இராணுவ முன்நகர்வுகளில் எமது படையினர் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வன்னிப் பெருநிலப் பரப்பில் சுமார் 7 முனைகளில் இராணுவப் படையினர் வெற்றிகரமாக முன்னேறி வருவதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வரவு செலவு…
-
- 6 replies
- 1.9k views
-
-
இராணுவத்திலிருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கை உயர்வினால் நெருக்கடியை எதிர்நோக்கும் படைத்தரப்பு : http://www.globaltamilnews.net/tamil_news....=2082&cat=1 இராணுவத்திலிருந்து தப்பியோடுவோர் மற்றும் உயிரிழப்புக்கள் காரணமாக இராணுவப் படையினர் பெரும் சவால்களை எதிர்நோக்கி வருவதாக பிரபல இந்திய ஊடகவிலயாளர் அனுஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக இலங்கை இராணுவத்திலிருந்து தப்பியோடுபவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், இந்தத் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானதென யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்துள்ளார். வெறும், 5 வீதமான படைவீரர்களே இராணுவத்திலிருந்து தப்பியோடியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ள…
-
- 2 replies
- 1.7k views
-
-
கடலில் நீந்தி யாழ்ப்பாணம் வர முயன்றவர் கைது வீரகேசரி இணையம் 11/12/2008 9:56:46 AM - கேரதீவுக் கடலிலிருந்து நீந்தி யாழ்ப்பாணம் வர முயற்சித்த இளைஞன் ஒருவர் யாழ்ப்பாணம் நாவாந்துறை தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். வன்னியில் இடம் பெறும் படை நடவடிக்கைகள் காரணமாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மிகவும் துணிச்சலாக கேரதீவுக் கடலிலிருந்து நீந்தி யாழ்ப்பாணத்திற்க்கு வர முயன்ற வேளையில் இடையில் கடலில் கண்ட படையினர் அவரை கைது செய்து சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். அவர்கள் மேற் கொண்ட விசாரணையைத் தொடர்ந்து குறிப்பிட்ட இளைஞர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து யாழ் மாவட்ட மேலதிக நீதிபதி திருமதி ஜோஜ் மகாதேவா இவ் இளைஞனான உ…
-
- 2 replies
- 1.4k views
-
-
இலங்கைக் கடற்படை நடுக்கடலில் வெறியாட்டம் தமிழக மீனவரை நிர்வாணப்படுத்தி சித்திரவதை - இந்திய இணையத்தளம் தகவல் [12 நவம்பர் 2008, புதன்கிழமை 8:45 மு.ப இலங்கை] கச்சதீவு அருகே இந்தியக் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்றுமுன்தினம் வாள் மற்றும் துப்பாக்கியால் அரக்கத்தனமாக - கண்மூடித்தனமாக - விலங்குகளைவிடக் கொடூரமான முறையில் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் - "இந்திய வேசி மகனே" என்று சிங்களப் பாசையில் தங்களைத் திட்டி - நிர்வாணப்படுத்தி - சித்திரவதை செய்து - மூர்க்கத்தனமாகத் தாக்கினர் - என்று கரை சேர்ந்த மீனவர் ஒருவர் தெரிவித்தார் என்றும் இந்திய இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்தச் …
-
- 6 replies
- 1.8k views
-
-
ஓமந்தை சோதனைச்சாவடி 9 தொடக்கம் 1மணிவரையே திறந்திருக்கும் வீரகேசரி நாளேடு 11/12/2008 9:44:07 AM - ஓமந்தை சோதனைச் சாவடி இன்று முதல் காலை 9.00 மணிமுதல் 1.00 மணிவரையே திறந்திருக்குமென்று படையினர் அறிவித்துள்ளனர். பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு சோதனைச்சாவடி திறந்திருக்கும் நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக
-
- 3 replies
- 750 views
-
-
வன்னியில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்காக தமிழகத்தில் சேகரிக்கப்படுகின்ற நிவாரணப் பொருட்களை பரிசோதித்து கொழும்புக்கு கொண்டு வருவதற்காக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரிகள் குழு சென்னைக்கு சென்றுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 649 views
-
-
இலங்கையில் போரை நிறுத்துவதற்கு இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடர் கழக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 485 views
-