ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143638 topics in this forum
-
ராஜபக்ஷே இந்தியாவை ஏமாற்றுகிறார்..! - கொதிக்கும் நெடுமாறன் நிதி வசூல், நிவாரணம் என இலங்கை விவகாரத்தில் புதிய திசை நோக்கி கவனம் ஈர்த்திருக்கிறது தமிழக அரசு. ''இதேபோன்ற நெருக்கடியான சூழ்நிலை ஒரு வருடத்துக்கு முன்பு ஏற்பட்டபோது, இதே ஈழத் தமிழர்களுக்காக சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமானமுள்ள உணவு, மருந்துப் பொருட்களைத் திரட்டி இலங்கைக்கு அனுப்ப முயற்சித்து, தோற்றுப் போனாரே எங்கள் அய்யா... அவருக்கு என்ன பதில்?'' என்று பழ.நெடுமாறன் ஆதரவாளர்கள் மத்தியில் கேள்வி எழுந்திருக்கிறது. நாம் நெடுமாறனையே சந்தித்தோம். நிதி வசூல் பற்றி உங்கள் கருத்தென்ன?'' ''2006-ம் ஆண்டின் இறுதியில், தமிழகம் முழுவதிலுமிருந்து உணவு மற்றும் மருந்துப் பொருட்களைத் திரட்டினோம். அவற்றை பாதிக்கப்…
-
- 1 reply
- 1.2k views
-
-
சென்னை: இலங்கை ராணுவத்திற்கு மத்திய அரசு ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் அதி நவீன சாதனங்களை அனுப்பியது உண்மை தானே?, அப்போது திமுக மத்திய அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர்களின் மோசமான நிலைமையை நான் முதலில் எழுப்பியதையடுத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினார் கருணாநிதி. ஆனால், நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்கள் குறுகிய காலத்திலேயே மீறப்பட்டுவிட்டன. தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், ராமேஸ்வரத்தில் முக்கிய திரைப்பட பிரமுகர்களின் கூட்டத்திற்கும், சென்னையில் மனித சங்கிலி போராட்டத்திற்கும் ஏற்பாடு செய்தார் கருணாந…
-
- 2 replies
- 1.8k views
-
-
கொட்டாஞ்சேனையில் சிங்களஇனவெறி குண்டர்களினால் தமிழர்களில் கடைகள் அடித்து நொருக்கப்பட்டன இன்று இரவு 7.45 மணியளவில் புளுமென்டால் தொடர்மாடி, சென்பெனடிக் மாவத்தை, மேபில்வீதி ஆகிய பகுதிகளிலுள்ள தமிழர்களின் வீடுகள் கடைகள் சிங்கள காடையர்களால் அத்துமீறி தாக்கியும் உடைக்கப்பட்டுள்ளது.
-
- 2 replies
- 2.3k views
-
-
முல்லைத்தீவில் ஆணின் உடலம் கரையொதுங்கியது [செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2008, 07:34 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு அளம்பில் கரைப்பகுதியில் உடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. நேற்று திங்கட்கிழமை கரையொதுங்கிய உடலத்தை தமிழீழ காவல்துறையின் மீட்டு விசாரணைகளை மேற்கொண்டனர். அந்த உடலம் அடையாளம் காணப்படாத நிலையில் உடலம் முல்லைத்தீவில் உள்ள சுடலையில் அடக்கம் செய்யப்பட்டது. உடலம் 35 வயது மதிக்கத்தக்கக ஆணினது என்று தமிழீழ காவல்துறை தெரிவித்துள்ளது. புதினம்
-
- 0 replies
- 835 views
-
-
புலிகளின் பகுதியில் கரையொதுங்கிய சிறிலங்கா கடற்படையினரின் 4 உடலங்கள் [செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2008, 07:53 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வடமராட்சி கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படை கொமாண்டோக்களின் தாக்குதலை கடற்புலிகள் முறியடித்ததில் கொல்லப்பட்ட கடற்படையினரின் நான்கு உடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடவடிக்கையினை மேற்கொண்ட சிறிலங்கா கடற்படையின் எஸ்பிஎஸ் மற்றும் ரப்ஸ் கொமாண்டோ படையினரின் பெரும் படகு அணியின் தாக்குதலை கடற்புலிகள் முறியடித்திருந்தனர். இதில் படையினரின் கொமாண்டோப் படகு மற்றும் டோறா பீரங்கிப் படகை மூழ்கடித்தும் நீருந்து விசைப்படகை கடுமையாக சேதப்படுத்தியும் கடற்படையினருக்கு அழிவை கடற…
-
- 7 replies
- 2k views
-
-
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக புதுடில்லியில் மாபெரும் பேரணி: அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் அறிவிப்பு [செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2008, 08:39 பி.ப ஈழம்] [ந.ரகுராம்] ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக புதுடில்லியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14.11.08) அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலக் கிளை மாபெரும் பேரணி நடத்தவுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கண்ணீர்த்துளி வடிவத்தில் இலங்கை தீவு. தமிழ் மக்கள் அழுது கடலில் தேங்கிய வடிவம். அவர்களின் அழுகுரல் எட்டுத்திசைகளிலும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் உலகம் முழுவதும் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். உள்நாட்டு யுத்தம் உச்சநிலை அடைந்துள்ளத…
-
- 2 replies
- 957 views
-
-
ஏன் இந்த இரட்டை நிலை! ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ‘இந்தியா-ஈரான்: தொன்மையான நாகரீகங்களும் நவீன தேசங்களும்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றியுள்ள இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, “இறையாண்மையுடன் கூடிய சுதந்திர நாட்டை ஏற்படுத்தவேண்டும் என்ற பாலஸ்தீன மக்களின் அபிலாசைகள் நிறைவேறுவதற்கு இந்தியா உறுதுணையாக இருக்கும்” என்று கூறியுள்ளார். இதுமட்டுமல்ல, “பாலஸ்தீன மக்களின் உரிமைகள் இன்று வரை நிலைநிறுத்தப்படவில்லை என்கின்ற நிலை இந்தியாவிற்கு முக்கியமான கவலையாக உள்ளது. அது நிலைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்” என்றும் அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசியுள்ளார். பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலிற்கும் இடையே தொடர்ந்துவரும் மோதலால் நீடித்துவரும் மேற்காசியப் பிரச…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஆயித்தியமலையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது கண்ணிவெடித்தாக்குதல்: ஒருவர் பலி [செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2008, 07:09 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆயித்தியமலை பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மூவர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: ஆயித்தியமலையில் உள்ள ஆறாம் கட்டைப் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் விடுதலைப் புலிகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தினர். இதில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்ப…
-
- 0 replies
- 500 views
-
-
மணலாறில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்: பொதுமக்கள் இருவர் படுகாயம் [செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2008, 07:29 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மணலாறில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மணலாறிலிருந்து சிறிலங்கா படையினர் நேற்று திங்கட்கிழமை மாலை 5:00 மணியளவில் மதவாளசிங்கம் குளப்பகுதியை நோக்கி எறிகணைத் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் மூன்று பிள்ளைகளின் தந்தையான முள்ளியவளை பூதன்வயலைச் சேர்ந்த நடனசபாபதி இலகுணநாதன் (வயது 36), நடனசபாபதி காசிநாதன் (வயது 30) ஆகிய இருவரும் கால்களை இழந்த நிலையில் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிட்டத்தக்கது. புத…
-
- 0 replies
- 376 views
-
-
ஒக்டோபர் மாதத்தில் 171 படையினர் பலி - 1122 படையினர் காயம் - கஜபாகு படைபிரிவை சேர்ந்த 3500பேர் இது வரை பலி!! கடந்த ஓக்டோபர் மாதம் இலங்கையில் பாதுகாப்புத் தரப்பினரும் காவற்துறையினருமாகச் சேர்த்து 171 பேர் கொல்லப்பட்டதுடன் 1122 பேர் காயமடைந்துமுள்ளதாக பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கா தெரிவித்துள்ளார்.மேலும் 38 பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.இன்றைய பாராளுமன்றக் கூட்டத் தொடரில் அவசரகாலச்சட்ட நீடிப்பு தொடர்பான விவாதத்தின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார் இதேவேளை கஜபா படையணியின் வெள்ளிவிழாவினையொட்டி இடம்பெற்ற சிறப்பு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ராணுவத்தளபதி 1983ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கஜபா படையணி 25 வருடகால கஜபா படையணி வரலாற்றில் 3500 படைவ…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறீலங்கா அமைச்சரவையில் பாரிய மாற்றம் ஒன்றைச் செய்வதற்கு சிறீலங்கா அரசுத்தலைவர் உத்தேசித்துள்ளதாக அறிய முடிகின்றது. அடுத்த ஆண்டிற்கான பாதீட்டின் விவாதத்தின் பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. புதிய அமைச்சரவையில் கிழக்கு மாகாண துணைப்படை ஆயுதக் குழுவின் தலைவர் கருணாவிற்கும் பதவி ஒன்று வழங்கப்பட இருப்பதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சுக்கென ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேலதிகமாக செலவு செய்த அமைச்சுக்கள், மற்றும் மகிந்தவின் கொள்கைகளைப் பரப்புரை செய்யாத அமைச்சுக்கள் என்பனவே மாற்றப்படவுள்ளதாக அறிய முடிகின்றது. மாற்றப்படவுள்ள அமைச்சுக்களில் றோஹித போகொல்லாகமவின் வெளிவிவகார அமைச்சும், பீரிசின் வெளிநாட்டு முதலீடு மற்ற…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சினிமா தொழிலாளர்கள் (பெப்சி) நாளை சாலி கிராமத்தில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இலங்கை தமிழருக்காக டி.வி. நடிகர், நடிகைகள் 9-ந்தேதி உண்ணாவிரதம் இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து சின்னத்திரை நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் வருகிற 9-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.டி.வி.நடிகர் சங்க தலைவர் வசந்த் தலைமை தாங்குகிறார். உண்ணாவிரதத்தில் டெலிவிஷன் நடிகர், நடிகை கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சினிமா தொழிலாளர்கள் (பெப்சி) நாளை சாலி கிராமத்தில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இதையொட்டி படப்பிடிப்பு நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரதத்தில் இயக்குனர்…
-
- 1 reply
- 1.4k views
-
-
பரந்தனில் இருந்து முல்லைத்தீவு வரையிலான ஏ-35 வீதியை மையமாவைத்து வன்னியின் 95 வீதமான மக்கள் இப்போது வாழ்கின்றார்கள். பொதுவாக வன்னியிலுள்ள பகுதிகளில் இந்த வீதியை மையமாக வைத்த பிரதேசம் தாழ்வுநிலப்பகுதியையுடையது. புவியியல் அமைவின்படி மக்களின் குடியிருப்புக்கு இந்தப் பகுதி உகந்ததல்ல, அதிலும் போர்க்காலக் குடியிருப்புக்கு ஏற்றதேயல்ல. காரணம், எறிகணை வீச்சிலிருந்தோ விமானக்குண்டு வீச்சிலிருந்தோ பாதுகாப்பாக இருப்பதற்கான பதுங்குகுழிகளை இந்தப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் அமைக்கமுடியாது. காரணம் மாரியில் மழைநீர் - மழைவெள்ளம் பெருகியிருக்கும். கோடையில் குடிநீருக்கே பெரும் தட்டுப்பாடு நிலவும். இத்தகைய பெரும் பாதகமான சூழலில்தான் இன்று வன்னிமக்கள் வாழந்துகொண்டிருக்கிறார்கள். இதை இன…
-
- 0 replies
- 1.4k views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கையின் வடக்கே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா வழங்கவுள்ள நிவாரண மற்றும் உதவிப் பொருட்கள் அதன் தூதரகம் மூலமாக சர்வதேச தொண்டு அமைப்புகளிடம் வழங்கப்படவுள்ளன. இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் அனைத்தையும், கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர்தான் பெற்றுக்கொள்வார் என்று இந்திய அரசு கூறியுள்ளதாகத் தமிழக அரசு தெரிவிக்கிறது. இந்த நிவாரணப் பொருட்கள் கொழும்பை வந்தடைந்ததும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைப்புகள் மூலம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் என்று இந்திய வெளியுறவுச் செயலாளரின் கடிதத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ்நாட்டில் எழுந்…
-
- 0 replies
- 878 views
-
-
இந்திய அரசுக்கு இந்த அவமானம் தேவைதானா? * இலங்கையில் நடப்பது ஓர் உள்நாட்டுப் போர். எந்த பகை நாடும் இலங்கையுடன் போர் தொடுக்கவில்லை. தமிழ் மக்களுக்கெதிரான வரலாற்று ரீதியான இனஒடுக்குமுறையின் இன்றைய வடிவமே, இந்த உள்நாட்டுப் போர். பயங்கரவாதத்தின் பெயரால் இந்தப் போரை நடத்துதல் ஆட்சியாளருக்கு வசதியாக அமைந்துவிட்டது. யுத்தத்தின் முழுச் சுமையையும் சுமந்திருப்பவர்கள் யார் என்பதை மட்டும் நாம் யோசித்துப் பார்க்கவேண்டும். சி.மகேந்திரன் போர் நடத்திதான் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கமுடியும் என்பதை அறிவித்து செயற்படும் இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றுதான் ஜனதா விமுக்தி பெரமுன. இன்று இலங்கையில் நடைபெறும் ஆட்சிமுறை ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்…
-
- 3 replies
- 2.1k views
-
-
பிரபாகரன் சரண் அடைந்தால்தான் போர் நிறுத்தம்!- ராஜபக்சே அறிவிப்பு செவ்வாய்க்கிழமை, நவம்பர் 4, 2008 கொழும்பு: ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு விடுதலைப் புலிகள் சரண் அடைந்தால்தான் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்தார். இந்திய பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ராஜபக்சே கூறியதாவது: பிரபாகரனை ராணுவம் சுற்றி வளைத்து விட்டது. அவர் விரைவில் பிடிபடுவார். விடுதலைப் புலிகள் அதன்பிறகு தாங்களாகவே சரணடைவார்கள். இதற்கு முன்பு பிரபாகரனே ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டும். ஏற்கனவே கிழக்கு மாகாணங்களில் நாங்கள் செய்ததுபோல் அரசியல் தீர்வுக்கு வழி செய்வோம். இதைப் போர் என்றுகூட நான் கூற மாட்டேன்…
-
- 11 replies
- 3.5k views
-
-
மோசமடையும் பொருளாதாரம்: நாணய நிதியம் எச்சரிக்கை [04 நவம்பர் 2008, செவ்வாய்க்கிழமை 8:40 மு.ப இலங்கை] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது தற்போதைய பதவிக் காலத்தின் அரைவாசியை இன்னும் இரு வாரங்களில் பூர்த்தி செய்கின்றார். இந்த மூன்றாண்டு காலத்தில் அவரது ‘மஹிந்த சிந்தனை’ ஆட்சி அதிகாரம் இலங்கைத் தீவின் பொருளாதாரத்தை எங்கே கொண்டுபோய் நிறுத்தியிருக்கின்றது என்பதை அமெரிக்காவின், வாஷிங்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச நாணய நிதியம் அம்பலப்படுத்தியிருக்கின்றத
-
- 0 replies
- 787 views
-
-
சிறிலங்கா அரசுக்கு உதவும் இந்திய மத்திய அரசினைக் கண்டித்து ஒரு வாரம் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தவுள்ளதாக வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 785 views
-
-
http://img444.imageshack.us/my.php?image=0...08006002fc3.jpg நன்றி உதயன்
-
- 0 replies
- 1.6k views
-
-
கிளாலியில் உள்ள கடல் நீர் ஏரியிலிருந்து 7கி.மீ தூரத்தில் எமது இராணுவத்தினர் இப்போது நிலைகொண்டுள்ளனர். கிளாலியை அவர்கள் மிக விரைவில் கைப்பற்றி விடுவர். அதன் பின் யாழ் குடாநாட்டிற்கான பிரதான விநியோகப் பாதை திறக்கப்பட்டுவிடும். அதே வேளை ஏ9 பாதைக்கு கிழக்கே நான்கு டிவிசன்களைக் களத்தில் இறக்குவதன் மூலம், 50 கி.மீ நீளமான இடப்பரப்பை வசப்படுத்தி முல்லைத் தீவை கைப்பற்றி விட முடியும். இவ்வாறு அனுராதபுரத்தில் நடைபெற்ற கஜபா ரெஜிமென்டின் வெள்ளிவிழா நிகழ்வில் கலந்து கொண்டு தெரிவித்துள்ளார் பொன்சேகா. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோததபயாவும் இராணுவத்திலிருந்து இளைப்பாறுவதற்கு முன்னா கஜபா படையில பணிபுரிந்தமையும் விழா நிகழ்வின் போது பிரஸ்தாபிபக்கப்பட்டது. இன்னும் 7 கி…
-
- 7 replies
- 2.2k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கை தொடர்வதை அடிப்படையாகக் கொண்டே அரசின் அடுத்த வருடத்துக்கான வரவுசெலவுத் திட்டம் அமைந்திருக்கும் என்று பிரதி நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார். 2008 வரவு - செலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினமான சவாலாகக் காணப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். "வரவு - செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வருமானத்தைப் பெறுவது இவ்வருடம் மிகவும் கடினமாகக் காணப்பட்டது. செலவுகள் அதிகரித்துள்ளன. இவற்றின் தாக்கம் இவ்வருட பற்றாக்குறையில் பிரதிபலிக்கும்" - என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். "2008இல் வரவு - செலவுத் திட்டத்தின் பாதுகாப்பிற்கு 16 ஆயிரத்து 600 கோடி ரூபாவை ஒதுக்க…
-
- 3 replies
- 1.1k views
-
-
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவன் செல்லத்துரை புருஷோத்மனின் மரணத்தையொட்டி நேற்று பல்கலைக்கழகத்தில் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. அத்துடன் பல்கலைக்கழக சமூகத்தினர் பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டனர். இதனால் பல்கலைக்கழகச் செயற்பாடுகள் நேற்றுமுன்தினம் பாதிக்கப்பட்டன. பல்கலைக்கழகச் சுற்றாடலில் பெருமளவு படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். அதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. மாணவர்கள் அச்சத்துடன் காணப்பட்டனர். மாணவன் புருஷோத்மனின் மறைவையொட்டி யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளைப் பகிஷ்கரித்தனர். இதனையடுத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஊழியர்கள், கல்விசாரா ஊழியர்கள் என அனைத்துத் தரப்பினரும் பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட…
-
- 0 replies
- 826 views
-
-
வன்னியில் இடம் பெயர்ந்துள் மக்களுக்காக,தமிழகத்தில் சேகரிக்கப்படும் நிதி மற்றும் நிவாரணப் பொருட்கள் அந்த மக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் எனவும் நிவாரணப் பகிர்ந்தளிப்புக் குறித்த திட்டமிடலின் போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்த குழுவின் பிரசன்னம் அவசியம் எனவும் ம.ம.முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரன் மஹிந்தவிடம் வலியுறுத்தியுள்ளார். தமிழ அரசு வழங்கும் நிவாரணப் பொருட்கள் இலங்கையில், யுதத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக சென்றடைவதை வலியுறுத்தி அமைச்சர் சந்திரசேகரன் மஹிந்தனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இதனை வலியுறுத்தியுள்ளார். மேலும் : இந்திய மத்திய அரசிலிருந்தும், தமிழக மாநிலத்திலிருந்தும் கோடிக்கணக்குப் பெறுமதியான உணவ…
-
- 0 replies
- 980 views
-
-
கிளிநொச்சி நகர் மீது சிறிலங்கா படையினர் அகோர எறிகணை வீச்சு [திங்கட்கிழமை, 03 நவம்பர் 2008, 07:21 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி நகர் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவும் இன்று பகலும் சிறிலங்கா படையினர் அகோரமான முறையில் ஆட்டிலெறி எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தி மக்கள் குடியிருப்புக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர். இன்றைய எறிகணைத் தாக்குதல்களில் 16 வீடுகள் அழிந்துள்ளன. கிளிநொச்சி நகரில் உள்ள தொண்டமான்நகர்-புதுமுறிப்பு-செல்வாநகர் உட்பட்ட பகுதி மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் நேற்றும் இன்றும் செறிவான ஆட்டிலெறித் தாக்குதலை நடத்தினர். இதனால் மக்கள் பெரிதும் அல்லோலகல்லோலப்பட்டனர். மக்களின் 16 வீடுகள் அழிந்துள்ளன. …
-
- 0 replies
- 788 views
-
-
கருணா ஒட்டுக்குழு ஆயுததாரிகள் பிள்ளையான் ஒட்டுக்குழு ஆயுததாரிகளின் புதிய அலுவலகம் ஒன்றைச் சூறையாடும் நோக்கில் நடத்திய தாக்குதலில் 8 பிள்ளையான் ஒட்டுக்குழு ஆயுததாரிகள் காயமடைந்துள்ளனர் என்று சிறீலங்கா அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. கருணா ஒட்டுக்குழு ஆயுததாரிகளின் தாக்குதலில் பிள்ளையான் ஒட்டுக்குழு ஆயுததாரி பிரதீப் என்ற அவ்வொட்டுக்குழுவின் முக்கிய நபர் இலக்கு வைத்து தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே பிள்ளையான் ஒட்டுக்குழு ஆயுததாரிகள் தமக்கு கருணா ஒட்டுக்குழு ஆயுததாரிகளிடமிருந்து பாதுகாப்புப் பெற்றுத்தர சிறீலங்கா அரசை கேட்டுள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன. Karuna cadres attack Pillayan office, 8 injured Four killed in another attack a…
-
- 1 reply
- 1.9k views
-