Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. “ ஈழம்: இந்தியா முதுகில் குத்துவது ஏன்?” என்ற கட்டுரையை எமது வினவுத் தளத்திலும், யாழின் கருத்துக் களத்திலும் வெளியிட்டிருந்தோம். அந்தக் கட்டுரையின் சாராம்சம் இந்தியா தனது நலனுக்காக ஈழத்தமிழ் மக்களை அழிக்கும் இலங்கை அரசுக்கு உதவி செய்கிறது என்பதே. இதை நிறுவும் முகமாக அன்று மாலையே வைகோவும், கண்ணப்பனும் கைது செய்யப்பட்டனர். கைது செய்தவர் ஈழத்தமிழருக்காக அடுத்தநாள் மனிதச் சங்கிலி நடத்தியும், எம்.பிக்கள் ராஜினாமா செய்வார்கள் என்று மத்திய அரசுக்கு உருக்கத்தோடு வேண்டுகோளும் விடுத்த கருணாநிதி. ஈழத்துக்காக குரல் கொடுத்து கைதான வைகோவின் அன்புச் சகோதரி ஜெயலலிதாவோ மற்றவர்களையும் கைது செய்யவேண்டும், இந்த விசயத்தில் நாடகாமாடும் கருணாநிதியின் ஆட்சியைக் கலைக்கவேண்டும் என்று சண்டம…

  2. சென்னை: போலீஸ் காவலை மீறி சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்குள் புகுந்த 17 சட்டக் கல்லூரி மாணவர்களை போலீஸார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்துள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், மாணவர் அமைப்புகள் உள்ளிட்டவை பல்வேறு போராட்டத்தை நடத்தி வருகின்றன. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இலங்கை அரசின் தூதரக அலுவலகம் உள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தடை செய்யப்பட்ட பகுதி ஆகும். அங்கு பாதுகாப்புக்காக 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். போலீஸ் பூத் ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை…

  3. ஈழ தேசம் தமிழர்களின் மரபுவழி உரிமையாகும் - சுப.வீரபாண்டியன் ஈழ தேசம் தமிழ் மக்களின் மரபுவழி உரிமை எனவும், பிழைப்பதற்காக இலங்கைக்குச் சென்றார்கள் என்ற கருத்து உண்மைக்குப் புறம்பானதெனவும் மூத்த தமிழறிஞரும், சிந்தனையாளருமான சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நடைபெறவுள்ள மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கும் விடுக்கும் வகையில் கலைஞர் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரத்திற்கு முற்பட்ட காலம் முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழர் உரிமைகள் நசுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அஹிம்சை வழியாக தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக போராடிய போதிலும் குறித்த போராட்டங்கள் சிங்கள பேரி…

  4. யாழ். குடாநாடு முழுவதும் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு நேற்று ஈ.பி.டி.பி அழைப்பு விடுத்திருந்தது. இதன் காரணமாக அங்கு சகல சேவைகளும் நேற்று ஸ்தம்பிதம் அடைந்தன. காங்கேசன்துறையில் இரு கப்பல்களை விடுதலைப்புலிகள் தாக்கியமைக்கு கண்டனம் தெரிவிப்பதற்காக நேற்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு அந்த அமைப்பு அறிக்கை மூலம் அறிவித்திருந்தது. ஒலிபெருக்கி மூலமும் இந்த அழைப்பை ஈ.பி.டி.பியினர் சகல பகுதிகளிலும் விடுத்திருந்தனர். வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், அரச, தனியார் நிறுவனங்கள், சந்தைகள் யாவும் மூடப்பட்டுக்கிடந்தன. சாப்பாட்டுக் கடைகள், மருந்தகங்கள் கூட மூடப்பட்டிருந்தன. போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பஸ் சங்கம் ஆகியவற்றின் சேவைகள் இடம்பெறவில்லை. பாடசாலைகளுக்கு வந்த மாணவர்களும் தி…

  5. கடந்த காலங்களில் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட நிலை இலங்கைக்கும் நேரலாம் - ஐ.தே.க எச்சரிக்கை: கடந்த காலங்களில் இந்தியத் தலையீட்டினால் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட நிலைமை எதிர்காலத்தில் இலங்கைக்கும் நேரிடக் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட கிளர்ச்சி இந்திய தலையீட்டின் காரணமாக பங்களதேஷ் என்ற தனிநாடு உருவாக வழியமைத்ததாக ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. கிழக்கு பாகிஸ்தான் சிவிலியன்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறைக்கு எதிராக இந்தியா அழுத்தம் கொடுத்தமையினால் பங்களாதேஷ் உருவானதென பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இந்த விடயங்கள் குறித்து அரசாங்கம் விழிப்புடன் செயற்பட வேண்…

  6. ஆட்கடத்தல் காணாமல் போதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சட்டத்தரணிகளுக்கும் மஹஷோன் பலகாய (பிசாசுப்படை) எனும் அமைப்பு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் வியாழனன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்த அச்சுறுத்தல் கடிதங்கள் தனிப்பட்ட முறையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இணையத்தளங்களிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது எனச் சபாநாயகரிடம் முறையிட்டுள்ளனர். எனினும் இக்கடிதத்தை சபையில் வாசிக்க அரச தரப்பினர் அனுமதியளிக்க மறுத்ததுடன் சபாநாயகரும் அனுமதியளிக்க மறுத்து விட்டார். வாய்மொழி விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் சபாநாயகர் தினப்பணிகளை ஆரம்பிக்…

  7. வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் பெண் கைதிகள் பல்வேறு கஷ்டங்கள் துன்பங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். இப்பெண்கைதிகளை ஆண் சிறைக்ககாவலர்களே உடற்சோதனை செய்து வருவதாகவும் இதனால் தாம் பாலியல் ரீதியில் இம்சிக்கப்படுவதாகவும், ஏனைய கைதிகள் முன்பு அவமானப்படுத்தப்படுவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர். 600 பெண் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு பிரிவுகளில் 40 தமிழ் அரசியல் பெண் கைதிகள் அடிப்படை வசதிகள் இன்றித் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது தவிர மலசலகூடம் மற்றும் பெண்களுக்கான சுகாதார வசதிகள் இன்றி தாம் அவதியுறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஊறவினர்கள் இவர்களைப் பார்வையிடச் சென்றால்; ஐந்து நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்க…

  8. விடுதலைப் புலிகளுடன் கலந்தாலோசிக்காமல் முன்வைக்கப்படும் அரசியல் தீர்வுத்திட்டத்தைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமானது என தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேரா கொழும்பு ஊடகமொன்றுக்கு எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இனப்பிரச்சினை அரசியல் ரீதியாகத் தீர்க்கப்படும் என சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்த பின்னரே இவ்வாறான தீர்வொன்றை முன்வைக்கத் தீர்மானித்திருப்பதாகக் கூறியிருப்பதை ஜெஹான் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் தீர்வு தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் கலந்தாலோசிக்காமல், கொள்கை ரீதியில் தம்முடனிருக்கும் சிங்களத் தேசியவாதக் கட்சிகளான ஜே.வி.பி., ஜாதி…

  9. தமிழகத்தில் உள்ள அனைவரும் ஒருமித்த குரல் கொடுக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி [வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2008, 10:29 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கை வாழ் தமிழ் மக்களை காப்பாற்ற தமிழகத்தில் உள்ள அனைவரும் ஒன்றுபட்ட கருத்துடன் ஒருமித்த குரல் கொடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படவே இல்லை. சிறிலங்கா அரசு வெளியிட்டு வரும் பொறுப்பற்ற கருத்துக்கள் தமிழக மக்களை மேலும் கொதிப்படைய வைத்துள்ளது. இந்திய அரசு அளித்து வரும் இதற்கான விளக்கங்களும் மனநிறைவையும், நம்…

    • 0 replies
    • 504 views
  10. கொழும்பு செல்கிறார் யசூசி அகாசி? [வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2008, 09:19 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவிற்கான ஜப்பான் நாட்டின் சமாதானத் தூதுவர் யசூசி அகாசி மிக விரைவில் கொழும்புக்கு வருகை தரவுள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. சமகால அரசியல் மற்றும் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக சிறிலங்கா அரசின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்காக கொழும்புக்கு செல்லவுள்ள தூதுவர் யசூசி அகாசி, வன்னிப்பெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமைகள் குறித்து அறிந்து கொள்வார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கபபடுகின்றது. ஜப்பான் தூதரகத்தின் வழமையான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே தூதுவர் யசூசி அகாசியின் கொழும்புக்கான பயணம் இடம்பெறுவதாகவும் இராஜதந்திர தகவல்கள் …

    • 0 replies
    • 621 views
  11. தமிழக மக்களின் ஆதரவுப் போருக்கு வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து நன்றி தெரிவிப்பு [வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2008, 09:31 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழ்நாட்டு மக்களால் மேற்கொள்ளப்படுகின்ற ஆதரவுப்போருக்கு வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ள கண்டாவளை கோட்ட தேசிய போர் எழுச்சிக்குழுவினரும், வெகுஜன அமைப்பினரும் இணைந்து நன்றிகளை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 36 ஆண்டுகளாக ஈழத் தமிழினம் அனுபவித்து வரும் துன்ப- துயரங்களைக் கண்டு எவரும் தமிழீழ விடுதலைப்போருக்கு கைகொடுக்க முன்வரவில்லையே என்ற உணர்வு மேலோங்கியிருந்த வேளையில் எம் தமிழ் உறவுகள் எமக்காக தமிழ் நாட்டில் அமைதிப்போரை தொடக்கி உரக…

    • 0 replies
    • 444 views
  12. மணலாறு சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பு [வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2008, 09:41 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மணலாற்றில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அளம்பில் செம்மலை மக்கள் குடியிருப்புக்ளை இலக்கு வைத்து படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இத்தாக்குதலின் போது மக்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் செம்மலை, அளம்பில் கடற்கரை பகுதிகளில் சிறிலங்கா படையினரின் தாக்குதல் காரணமாக கரை வலைத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மணலாறில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்;குதலால் முல்லைப்…

    • 0 replies
    • 474 views
  13. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் பின்னால் நிற்கும்: சத்யராஜ் [வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2008, 09:56 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து, ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் சீமான்- அமீர் பின்னால் நிற்கும் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற 'லாடம்' படத்தின் பாடல்கள் அடங்கிய குறுவட்டு வெளியீட்டு நிகழ்வில் அவர் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இராமேஸ்வரத்தில் திரையுலகத்தினர் நடத்திய ஊர்வலத்தில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. எனது வீட்டில் முக்கிய நிகழ்ச்சி இருந்ததால், என்னால் இராமேஸ்வரம் போக இயலவில்லை. ஈழத் தமிழர்களுக்காக,…

  14. அதிகரித்துவரும் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவுக்கு மத்தியில், விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் ப.நடேசன் "டைம்ஸ் நவ்" செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்கானல். தமிழாக்கம். இந்திய மத்திய அரசிடமும் , குறிப்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் புலிகளின் மீதுள்ள தடையை நீக்குமாறு ப.நடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். விடுதலைப் புலிகளை இனியும் பயங்கரவாத இயக்கமாக நோக்கவேண்டாம் எனவும் தாம் இந்தியாவுக்கு எதிரிகள் அல்ல எனவும் பகிரங்கமாக அவர் தெரிவித்திருப்பது, இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியிருக்கின்றது. மேலும் அவர் தெரிவிக்கையில், இந்தியா தனது உண்மையான நண்பர்களை இனம்கானவேண்டும் என்றும், சிங்கள இராணுவத்திற்கு பல அதிர்ச்சி தாக்குதல்கள் காத்திருப்பதாகவும், அவர் த…

  15. இலங்கையில் போரில் பாதிக்கப்படும் தமிழ் மக்கள் மீது கரிசனை கொண்டுள்ளோம். ஆனால் அதற்காக இலங்கைக்கான இராணுவ உதவிகளை நிறுத்தமுடியாது. இலங்கையோடு நட்புறவை பேணிவருகின்றோம். இந்தியாவின் பிராந்திய நலனிற்கு இலங்கை தீவின் நட்புறவு அவசியமாகின்றது. நாங்கள் இலங்கைக்கு இராணுவ உதவி அளிக்காவிட்டால் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இப் பிராந்தியத்தில் காலூன்ற வழிவகுத்துவிடும். எனவே உங்கள் பாதுகாப்பு தேவைகளுக்கு எங்கும் அலையவேண்டிய அவசியம் இல்லை நாங்கள் இருக்கின்றோம் என இலங்கைக்கு உறுதியளித்திருக்கின்றோம் ( He said Colombo had been told that India would "look after your security requirements, provided you do not look around. ) எங்கள் முற்றத்தை சர்வதேச நாடுகளின் விளையாட்டு ம…

    • 2 replies
    • 1.5k views
  16. ஈழத்தமிழர் இனப்பிரச்சனை விவகாரத்தில் முதல்வர் கருணாநிதியின் நிலைப்பாட்டைப் பகிரங்கமாக வரவேற்றுப் பேசிய மலையக மக்கள் முன்னனி தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் அதற்காக மஹிந்தனிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். அமைச்சரை நேற்று நேரில் அழைத்து அவரிடம் காட்டமாக கண்டிப்பாக பேசிய மஹிந்த பொறுப்பான அமைச்சர் என்ற முறையில் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை அவர் மீற முடியாது என்றும் வலியுறுத்தினார். சுமார் இரண்டு மணி நேரம் இடம் பெற்ற இச் சந்திப்பின் போது தமது நிலைப்பாட்டிற்கான நியாயங்களை சந்திரசேகரன் மஹிந்தவிற்கு விளக்கினார் என்றும் தெரியவந்துள்ளது. இலங்கைத் தமிழர் தாயகத்துக்கு எதிரான யுத்தத்தை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரி முதல்வா கருணாநிதி தலை…

  17. தலைவர் பிரபாகரன் உருவப் பொம்மையை எரித்த காங்கிரஸார் கடலூர்: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் கொடும்பாவியை காங்கிரஸ் கட்சியினர் எரித்தனர். இதை கண்டித்து விடுதலைச் சிறுத்தை கட்சியினர் கோஷமிட்டனர். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இலங்கை பிரச்சனை தொடர்பாக மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கடலூர் நடந்தது. மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் திமுகவையும், முதல்வர் கருணாநிதியையும் மிகக் கடுமையாக தாக்கிப் பேசினர். மேலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுவோரையும் கண்டித்தனர். செயற்குழு கூட்டம் முடிந்ததை அடுத்து புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் உருவ பொம்மையை …

  18. மனிதச் சங்கிலி: கருணாநிதி தொடங்கி வைத்துப் பார்வையிடுகிறார் இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க சென்னையில் மனிதச் சங்கிலி அணிவகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிற்பகல் 3 மணிக்கு மனிதச் சங்கிலி தொடங்குகிறது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இந்த மனிதச் சங்கிலி அணிவகுப்பைத் தொடங்கி வைத்து, அணிவகுப்பு நிறைவடையும் இடம் வரை முதல்வர் கருணாநிதி பார்வையிடுகிறார். மனிதச் சங்கிலி அணிவகுப்பில் அதிமுக, மதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. திமுக, பாமக, இடதுசாரிக் கட்சிகள், ஆசிரியர், அரசு அலுவலர் சங்கங்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர். மாவட்ட …

  19. சர்ச்சையாக மாற்றுவதை தவிர்க்க வேண்டும்: தா. பாண்டியன் வேண்டுகோள் சென்னை, : இலங்கைப் பிரச்னையை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவா? அல்லது எதிர்ப்பா? என்ற சர்ச்சையாக மாற்றுவதைத் தவிர்க்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கேட்டுகொண்டுள்ளனர். இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இலங்கைப் பிரச்னையை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவா? அல்லது எதிர்ப்பா? என்ற சர்ச்சையாக மாற்றுவதைத் தவிர்க்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கேட்டுகொண்டுள்ளனர். தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் சர்ச்சைக்குரிய பிரச்னைகளை எழுப்பிட வேண்டாம். இதைத் தவறாக சிலர் பயன்படுத்துவதற்…

  20. பாட்டாளி மக்கள் கட்சி அறிவிப்பு விடுதலை புலிகளுக்கும் எங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை - ஜி.கே.மணி விடுதலை புலிகளுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இலங்கை பிரச்னையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பாமகவின் மாணவர் அமைப்பான தமிழக மாணவர் சங்கம் சார்பில் நேற்று பேரணி நடந்தது. கட்சியின் தலைவர் ஜி.கே.மணி துவக்கி வைத்தார். மன்றோ சிலை முன்பு கிளம்பி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையை பேரணி அடைந்தது. பின்னர் மணி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் எங்கள் மாணவர் அணி பேரணி நடத்தும். வகுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாலை 4.30 மணிக்கு மேல் இது நடத்தப்படும். இலங்கை பிரச்னை இன்னொரு…

  21. கைதுக்கு முன் கண்ணப்பன் சிறப்புப் பேட்டி - நமது சிறப்புச் செய்தியாளர். தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாகப் பேசியதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ, அவைத் தலைவர் கண்ணப்பன் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர். கைது சம்பவத்துக்கு சில மணி நேரத்துக்கு முன்பாக கண்ணப்பன் நமக்களித்த சிறப்புப் பேட்டி: கே:சென்னை ராஜா அண்ணாமலை மன்றக் கூட்டத்தில் தனித் தமிழ்நாடு மலர்ந்தே தீரும் என்று பேசியிருக்கிறீர்களே? இலங்கையில் வசிக்கும் பூர்வீகத் தமிழர்கள், கடந்த அறுபதாண்டுகளாக தங்கள் உரிமைக்காகப் போராடி வருகிறார்கள். 1948_ல் அந்நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து சுமார் 35 ஆண்டுகள் ஈழத்து காந்தி என்று அழைக்கப்படும் தந்தை செல்வா தலைமையில…

    • 0 replies
    • 1.4k views
  22. தமிழ்நாட்டு மாணவர்களாகிய நீங்கள் நமது மக்களின் அவலத்தைக்கண்டு பொங்கியெழுந்து ஈழத்தமிழ் மக்களுக்காய் குரல் கொடுப்பதையிட்டு பெருமகிழ்வடைந்து நிற்பதுடன், நோர்வேத் தமிழ் இளையோர் அமைப்புச் சார்பாக உங்களுக்கு நன்றி கூறுவதில் பெருவுவகை அடைகின்றோம் என நோர்வே தமிழ் இளையோர் அமைப்பு, அனைத்திந்திய மாணவர்ப் பெருமன்றத்திற்கு நன்றி கூறியுள்ளது. நோர்வே தமிழ் இளையோர் அமைப்பினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள முழுமையான கடிதம்............. அனைத்திந்திய மாணவர்ப் பெருமன்றம், தமிழ்நாடு. 16.10.2008 தமிழ் இளையோர் அமைப்பு, நோர்வே. நன்றி கூறுகின்றோம். தமிழ்நாட்டு மாணவர்களாகிய நீங்கள் நமது மக்களின் அவலத்தைக்கண்டு பொங்கியெழுந்து ஈழத்தமிழ் மக்க…

  23. தமிழர்களுக்கு எதிரான போரில் சிறிலங்கா படையினர் இந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் வரை மொத்தம் 1,099 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 7 ஆயிரம் படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா படைத்தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  24. (3ம் இணைப்பு)எனது அறிக்கையால்தான் வைகோ கைது- திருமா, பாரதிராஜா- சீமானையும் கைது செய்க: ஜெயலலிதா [வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2008, 09:39 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] தான் வெளியிட்ட அறிக்கையால்தான் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அவைத்தலைவர் கண்ணப்பன் உள்ளிட்டோரை கைது செய்த தமிழக முதல்வர் கருணாநிதி, புலிகளை ஆதரிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாளவன், இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், அமீர் உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: எந்தப் பிரச்சினையானாலும் அதை அரசியலாக்கி ஆதாயம் தேடுவதில் கருணாநிதி கைதேர்ந்தவர் என்பதைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். இலங்கைத் தமிழர் படுக…

  25. ஆயுதம் ஏந்திப் போராடுவேன் என்று சொன்னதில் மாற்றுக் கருத்து இல்லை: கைதுக்குப் பின் வைகோ [வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2008, 10:08 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத் தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு ஆயுதங்கள் வழங்கி வருவதால், தேவைப்பட்டால் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக கையில் ஆயுதம் ஏந்தி போராடுவேன் என்று தான் சொன்னேன். இதில் மாற்றுக்கருத்து இல்லை என்று சென்னையில் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்ட பின் ஊடகவியலாளர்களிடம் வைகோ பேசியதாவது: இந்திய அரசு, இலங்கை தமிழர்களுக்கு எதிராக ஆயுதம் மற்றும் ராடர் கருவிகளை சிங்கள அரசுக்கு வழங்கி, இனப்படுகொலையை ஊக்குவித்து வருகிறது. இதற்கு, நான்க…

    • 0 replies
    • 714 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.