Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பயங்கரவாத நடவடிக்கைகளை ஒரே இரவில் முடிவுக்குக் கொண்டுவருவது சாத்தியமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் இறுதிக் கட்டத்தை அண்மித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளர்ர். கனடாவின் நேசனல் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த விசேட செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தமது அரசாங்கம் தயாராக இருந்த போதிலும், பதவிப் பிரமாணம் செய்து கொண்டு மூன்று வாரங்களில் புலிகள் யுத்தத்தை ஆரம்பித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இராணுவத் தளபதி மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலை அடுத்து புலிகள் மீதான இராணுவ நடவடிக்கைகள் முழு வீச்சுடன் முன…

  2. கனேடியத் தமிழ் இளையோரின் 30 மணிநேர உண்ணாநிலைக் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று (வெள்ளி) மாலை 4மணி 01 நிமிடமளவில் கனடா றிச்மன்ட்ஹில் ஆலய கலாச்சார மண்டபத்தில் ஆரம்பமாகித் தொடர்ந்த வண்ணமுள்ளது. தாயகத்தில் அல்லலுறும் மக்களின் துன்பங்கள் வெளித் தெரியும் வண்ணம் அமைதிவழிப் போராட்டத்திற்கே மகுடம் சேர்த்த இன்றைய பொழுதிலே கனேடித் தமிழ் இளையோர் சமூகம் ஏற்பாடு செய்த இந் நிகழ்வில் 35 இற்கு மேற்பட்ட இளையோர்களின் முழுமையான 30 மணித்தியால உண்ணா நிலை நிகழ்வுடன் இந் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது. கவனயீர்ப்பிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்விலே சேகரிக்கப்படும் நிதியானது தாயகப்பகுதியிலே தற்போதைய இடப்பெயர்வால் அல்லலுறும் மக்களிற்கு, அவர்களது தேவைகளை நிறைவு செய்யும் வகையில் அவர்களிற்க…

  3. வீரகேசரி இணையம் 9/27/2008 9:28:58 AM - பயங்கரவாதத்திற்கு எதிரான எமது படை நடவடிக்கையில் எமது படைகள் வெற்றியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றன.தரையில் சகல போர்முனைகளிலும் கடல் மற்றும் வான் வழிகளிலும் தாம் மிகுந்த தேர்ச்சியுடன் உள்ளோம். தற்போதைய போரில் எமது படைகள் நிச்சயம் வெற்றியடையும் என்ற பூரண நம்பிக்கை எமக்குள்ளது. அந்த வெற்றியை விரைவாக நாம் பெற்றுவிடுவோம். என பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபஷ இலண்டன் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

  4. சிறுபான்மை மக்கள் தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து கண்டனத்திற்குரியது - ரவூப் ஹக்கீம் இலங்கையில் சிறுபான்மை மக்கள் தொடர்பில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்துக்கள் கண்டிக்கத் தக்கவை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார் என முஸ்லிம் கார்டியன் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை சிங்கள மக்களின் உடமை எனவும், சிறுபான்மை மக்கள் தேவையற்ற கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் இராணுவத் தளபதி கனேடிய ஊடகமொன்றுக்கு அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். இராணுவத் தளபதியின் கடும்போக்குவாத கருத்துக்கள் தமிழ்இ முஸ்லிம் மக்களின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.…

  5. அரச சார்பற்ற வெளிநாட்டவர் ஒருவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்துள்ளார் - கோதபாய சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமொன்றின் பணியாளார் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த திட்ட முகாமையாளர் ஒருவரே இவ்வாறு புலிகளுடன் இணைந்துள்ளதாக பாதுகாப்புப் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விடுவிக்கப்படாத பகுதிகளிலிருந்து அரச சர்பற்ற நிறுவனங்களை வெளியேறுமாறு அரசாங்கம் விடுத்த உத்தரவைத் தொடர்ந்து குறித்த இத்தாலி பிரஜை விடுதலைப் புலிகளுடனேயே தாம் தங்கியிருக்கப் போவதாகவும்இ தாம் வன்னியிலேயே உயிர் துறக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். குறித்த அரச சார்பற்ற நிறுவனத்தின் ஏனைய பணிய…

  6. வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு ஐ.நா. கொடியுடன் கூடிய உணவு வாகன அணி அடுத்த சில நாள்களில் செல்லவுள்ளது. கொழும்பில் உள்ள ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி நீல் புஹுனே இதனைத் தெரிவித்துள்ளார். வன்னியில் பணியாற்றிய ஐ.நா.மற்றும் தொண்டர் அமைப்புக்களை வெளியேற வேண்டும் என இலங்கை அரசாங்கம் கால அவகாசம் விதித்திருந்தமையும் அதன் பிரகாரம் கடந்த 16ஆம் திகதி ஐ.நா.அமைப்புக் கள் யாவும் வன்னியிலிருந்து வெளியேறியிருந்தமையும் தெரிந்த வையே. அந்த அமைப்புக்கள் வெளியேறிய பின்னர் ஐ.நா வின் உலக உணவு திட்டத்தின் முதலாவது வாகன அணி அடுத்த சில நாள்களில் செல்லவிருக்கின்றது என்று புஹுனே தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய பொருள்களை நேரடியாக நாமே விநியோகிக்கும் உர…

  7. வன்னியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகளில் சிக்கியுள்ள பொதுமக்களுக்கு சர்வ தேச சுயாதீனக் கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் நிவாரணப் பொருள்களை அனுப்பி வைக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசிடம் வலியுறுத்திக் கேட்டிருக்கின்றது. யுத்தம் நடைபெறும் பகுதிகளில் சிக்கித் தவிக்கும் அப்பாவி மக்களின் மனித உரிமைகளை மதித்துச் செயற்படுமாறும் ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. நியூயோர்க்கில் இடம்பெற்ற இணைத்தலைமை நாடுகளின் சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியம் சார்பாகக் கலந்துகொண்ட, அதன் வெளியுறவு ஆணையாளர் பெரேரோ வோல்டெனொ அதன் பின்னர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் பொதுமக்களினதும் உள்நாட்டில் இடம் பெயர…

  8. தமிழர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் அல்லர்- பெரும்பாலான பயங்கரவாதிகள் தமிழர்களே: கோத்தாபாய [சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2008, 06:32 மு.ப ஈழம்] [க.நித்தியா] தமிழர்கள் எல்லாரும் பயங்கரவாதிகள் அல்லர். ஆனால், பொரும்பாலான பயங்கரவாதிகள் தமிழர்களே ஆவர். சிறிலங்காவில் உள்ள பயங்கரவாதிகளில் 98 சதவீதமானவர்கள் தமிழர்கள் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் கோத்தாபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். லண்டன் பி.பி.சிக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: வன்னி நோக்கிய படை நடவடிக்கையில் எமது படைகள் வெற்றியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றன. தரையில் சகல போர்முனைகளிலும் கடல் மற்றும் வான் வழிகளிலும் தாம் மிகுந்த தேர்ச்சியுடன் உள்ளோம். …

  9. சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தி சமாதானத்தை ஏற்படுத்தியுள்ள கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகளின் பயங்கரவாத நிர்வகத்திற்குள் கிழக்கு மாகாணம் மீண்டும் செல்ல தான் இடமளிக்க போவதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகரில் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு அமெரிக்கா வழங்கி வரும் உதவிகளுக்கும், அமெரிக்க மக்களுக்கும், அமெரிகக் அரசுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் இதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது அரசாங்கத்திற்கும் தான் நன்றி தெரிவிப்பதாகவும் பிள்ளையான் கூறியுள்ளார். கடந்த 30 வருடங்களாக கிழக்கு மாகாண மக்கள் அபிவிருத்தியைக் கண்டிருக்கவில்லை. இந்த மாகாண மக்களுக்கு இந்த சந்த…

  10. வன்னிப்பெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான உணவு, மருந்துப் பொருட்களை எடுத்துச்செல்வதற்குரிய ஏற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை என்று கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் அதிகாரியொருவர் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  11. ஈகச்சுடர் லெப். கேணல் திலீபன் அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவும், கேணல் சங்கர் அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவும் இணைந்ததான பல்வேறு நிகழ்வுகள் புதுக்குடியிருப்பு கோட்டத்தில் நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க

  12. ஆயுதக்கொள்வனவுகளில் அரச பணத்தை கையாடிய சிறிலங்கா படைத்துறைகளைச் சேர்ந்த முன்னாள் தளபதிகள் சிலர் குற்றவாளிகள் என்று அரச தலைவரால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு தீர்ப்பளித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  13. மேற்குலக நாடுகளில் அகதி அந்தஸ்துக் கோரும் தமிழர்கள் இலங்கை நிலைவரம் குறித்து மிகைப்படுத்திய தகவல்களைத் தெரிவிக்கின்றனர் என மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். கனடாவிலிருந்து வெளிவரும் "நஷனல் போஸ்ட்' பத்திரிகையின் செய்தியாளர் ஸ்டுவர்ட் பெல்லி என்பவருக்கு இலங்கையில் வைத்து சமீபத்தில் வழங்கியுள்ள செவ்வியிலேயே மஹிந்த இதனைத் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு: விடுதலைப்புலிகளுக்கும், சுதந்திர தேசத்திற்கான அவர்களது போராட்டத்திற்கும் ஆதரவளிக்க கனடா வாழ் தமிழ் மக்கள் முயற்சிக்கக் கூடாது. இவ்வாறான செயல்களை அவர்கள் நிறுத்தவேண்டும். பயங்கரவாதத்திற்கு ஒரு போதும் ஆதரவளிக்கக் கூடாது. யுத்தம் அநேகமாக முடிவடைந்து விட்டதா என ஊடகவியலாளர் கேள்வி ஒன்றைக…

  14. இங்க கிலிக் பன்னவும் > http://www.eelaman.net/index.php?option=co...92&Itemid=1

  15. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்வின் சகோதரரும், ஆலோசகரும் சிறிலங்கா சுதந்திரகட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்சவுக்கு எதிராக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் பிரச்சிணை தொடர்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  16. நிவ்யோர்க் செல்வதற்கு முன் இங்கிலாந்து சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அங்கு சென்று வழிபட்டுக்கொண்ட கின்ஸ்பர் விகாரைக்கு நேற்று இரவு இனந்தெரரியாத நபர்கள் சிலர் தாக்குதலை மேற்கொண்டு உள்ளனர். இத்தாக்குதலில் விகாரைக்கும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் இரண்டிற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. நியுயோர்க் செல்வதற்கு முன் இங்கிலாந்து சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அங்கு சென்று வழிபட்டுக்கொண்ட கிங்ஸ்பரி விகாரைக்கு நேற்று இரவு இனந்தெரரியாத நபர்கள் சிலர் தாக்குதலை மேற்கொண்டு உள்ளனர். இத்தாக்குதலில் விகாரைக்கும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் இரண்டிற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இத்தாக்குதலை மேற்கொண்டவர்கள், இரும்பு தடிகளி…

  17. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) செயலாளர் ஒருவர் விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பதுடன் விடுதலைப்புலிகளுக்கு ஏற்றவகையில் டி.எம்.வி.பி கட்சியை வழி நடத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு கட்சியின் தலைவர் கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் மீண்டும் மோதல்கள் உக்கிரமடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட செயலாளரின் வழி நடத்தலில் சில சந்தர்ப்பங்களில் பிள்ளையான் அரசாங்கத்திற்கு எதிராக கூறிய உள்ளதாகத் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் குறி;த்து கருணா, பிள்ளையானிடம் கருத்துக் கேட்டதை அடுத்து இந்தப் பிரச்சினை உக்கிரமடைந்துள்ளது. சிவநேசத்துரை சந்திரகாந்தன், செயலாளரின் ஆலோசனைகள…

  18. சிறிலங்காவில் கடந்த காலங்களில் பதவி வகித்த அரசாங்கங்களும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான தற்போதைய அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  19. கிளிநொச்சி, உருத்திரபுரத்தில் சிறீலங்கா படையினரது எறிகணை வீச்சில் இளம் தாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ஒரு பிள்ளையின் தயாரான 26 அகவையுடைய வஜிதரஞ்சினி ரவிச்சந்திரன் என்பவரே படுகாயமடைந்து கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பூநகரி, ஞானிமடத்தைச் சேர்ந்த இவர் இடம்பெயர்ந்து கிளிநொச்சி, உருத்திரபுரத்தில் தங்கியிருந்த நிலையில் எறிகணையில் படுகாயமடைந்தார். படத்தை பார்க்க....... http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  20. யாழ் மாவட்டம் அரியாலை படை முகாம் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் சிறீலங்கா படைகள் தரப்பில் பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் தமது தரப்பில் ஒருவர் மட்டுமே கொல்லப்பட்டதாகவும், மேலும் சில படையினர் காயமடைந்திருப்பதாகவும் சிறீலங்கா படைத்தரப்பு அறிவித்துள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  21. உலக அரங்கில் போராட்டங்கள் நடத்தி எமக்கு பலம் சேர்க்கும் புலம்பெயர் தமிழர்கள்: பா.நடேசன் [வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2008, 07:57 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] புலம்பெயர்ந்து வாழும் எமது உடன்பிறப்புக்கள் என்றும் இல்லாதவாறு அனைத்துலக நாடுகள் முழுவதிலும் எழுச்சிகொண்டு அந்தந்த நாட்டு அரசுகளுக்கு அரசியல் ரீதியாக அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் நிகழ்த்திய உரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: மக்கள் புரட்சியின் ஊடாகவே தமிழீழ தேசிய விடுதலை சாத்தியம் என்பதை கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னர் ஈகச்சுடர் லெப். கேணல் திலீபன…

  22. கிளிநொச்சி மருத்துவமனைக்கான மருந்துப் பொருட்கள் எடுத்துச் செல்ல சிறிலங்கா படையினர் தடை [வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2008, 07:32 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி மருத்துவமனைக்கு சுமையூந்தில் எடுத்துவரப்பட்ட மருந்துப் பொருட்கள் சிறிலங்கா படையினரால் ஓமந்தையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன்னாள் புதன்கிழமை இடம்பெற்றுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி அரசாங்க அதிபரிடமும் மருத்துவ அதிகாரிகளிடமும் தொடர்பு கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். புதினம்

  23. சிறிலங்கா படையினரின் தடையால் இடம்பெயர்ந்த மக்களுக்கான உலர் உணவு வழங்கல் பாதிப்பு [வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2008, 07:11 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சிக்கு சிறிலங்கா படையினர் உணவுப் பொருட்களை எடுத்து வருவதில் ஏற்படுத்தி வரும் தடங்கல் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கான உலர் உணவு வழங்கல் பாதிக்கப்பட்டுள்ளது. உதவி அமைப்புக்களின் கீழ் வழங்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் உணவு அல்லாத பொருட்கள் வழங்கும் நடவடிக்கைகளை கிளிநொச்சி அரசாங்க அதிபரிடம் கையளித்து விட்டு உதவி அமைப்புக்கள் வெளியேறியிருந்தனர். இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெயர்ந்து தங்கியுள்ள ஒரு லட்சத்து முப்பதாயிரம் வரையான மக்களுக்கான உணவு வழங்கல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு…

  24. அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க அலுவலகம் மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் [வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2008, 06:04 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சியில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் அலுவலகம் மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரணைமடுச் சந்திக்கு அருகாமையில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் முதன்மை அலுவலக வளாகம் மீது இன்று வெள்ளிக்கிழமை காலை சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் தொலைத் தொடர்புக் கோபுரம் முறிந்துள்ளது. அதன் அலுவலக கட்டடப் பகுதிகள் சேதமாகியுள்ளதுடன் உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன. புதினம்

  25. ஈகச்சுடர் லெப். கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் சுடரேற்றி, வணக்கம் செலுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.