Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் வடக்கே இரண்டு மோதலற்ற பகுதிகளை அறிவித்துள்ளது இலங்கை அரசு இலங்கையின் வடக்கே கிளிநொச்சியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அங்கே ஒட்டுசுட்டான் மற்றும் விஸ்வமடு ஆகிய பகுதிகளை மோதலற்ற பகுதிகளாக அறிவித்துள்ளார் இலங்கை இராணுவத்தின் தளபதி லெப்டினனட் ஜெனரல் சரத் பொன்சேகோ. இது தொடர்பாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான பிரிகேடியர் உதய நாணயக்கார கூறும் போது, விடுதலைப் புலிகள் மக்களை மனித கேடயங்களாக வைத்துள்ளார்கள் என்றும், அவர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி இந்த பகுதி வரலாம் என்று கூறினார். மேலும் இவ்வாறு வரும் மக்களுக்கு தேவையான வசதிகளை அப்பகுதி அரசாங்க அதிபர்கள் செய்வார்கள் என்…

  2. இந்தியா-சிறிலங்கா கூட்டு சுற்றுக்காவலுக்கு தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி எதிர்ப்பு [சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2008, 06:50 பி.ப ஈழம்] [ந.ரகுராம்] இந்தியா - சிறிலங்கா கூட்டு கடற்படை சுற்றுக்காவல் வேண்டாம் என வலியுறுத்தி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: சிறிலங்கா வெளியுறவுத்துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கூட்டு கடற்படை சுற்றுக்காவல் தொடர்பாக ஆலோசனை நடத்தியது தொடர்பாக இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகின்றேன். இந்திய கடல் எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் இந்திய கடலோர பாதுகாப்பு படையினருக்கு போதுமா…

  3. இலங்கையின் சிங்கள அரசாங்கங்கள் அனைத்துமே ஒர் வட்டத்திற்குள் இருந்து கொண்டு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க முயற்சி மேற்கொள்வதாக முன்னாள் இந்திய றோ அமைப்பின் தலைவர் ஏ.கே.வர்மா தெரிவித்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியிலான தீர்வுத் திட்டங்களை முன்னிலைப்படுத்திய நடவடிக்கைகள் நிரந்தர சமாதானத்தை எட்டுவதற்கு ஒருபோதும் வழியமைக்காதென அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய ஆளுங்கட்சி மாவட்ட ரீதியான அதிகாரப் பரவலாக்களை முன்னிலைப்படுத்தி தீர்வுத் திட்டத்தை முன்னெடுப்பதாகவும், இதனை முழுக்க முழுக்க வெற்றிகரமான முயற்சியாக கருத முடிடியாதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களை இலங்கை அரசாங்கம் கூர்ந்து அவதானித்து தீர்வுத் த…

  4. போரில் காயமடைந்த சிறிலங்கா படையினரை பார்வையிட்டு ஆறுதல் கூறிய ரவி கருணாநாயக்க [சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2008, 10:35 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் படையினரை சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ரவி கருணாநாயக்கா பார்வையிட்டு ஆறுதல் கூறியுள்ளார். கொழும்பு ஜயவர்த்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் தரத்திலான படையினரை இன்று சனிக்கிழமை காலை பார்வையிட்ட ரவி கருணாநாயக்கா, போரில் படையினர் வெற்றி பெற்று வருவதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். காயமடைந்த படையினருக்கு தேவையான பொருட்கள் சிலவற்றையும் கையளித்த அவர், மேலும் உதவிகளை…

    • 0 replies
    • 782 views
  5. ரி.எம்.வீ.பியின் தலைவர் கருணா விரைவில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக நம்பத் தகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 10 பேருடன் நாடாளுமன்றத்திற்கு செல்ல உள்ளதாக கருணா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனிடையே யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் நடவடிக்கைகளில் ரி.எம்.வீ.பி ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. குடிவரவு மோசடி குற்றத்திற்காக கருணா இங்கிலாந்தில் தடுத்து வைக்கப்பட்டு, விடுதலை பெற்றபின்னர் அங்கிருந்து வெறியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்ட போதிலும் கருணாவின் மனைவி மற்றும் பிள்ளைகள் லண்டனிலேயே வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilskynews.com/index.…

  6. முல்லைத்தீவு மாவட்டத்தின் விஸ்வமடு முதல் ஒட்டுசுட்டான் வரையிலான ஏ-10 வீதிப் பிரதேசம் யுத்த சூனியப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்தார். மன்னார் முதல் கிளிநொச்சி வரையில் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் கிளிநொச்சிக்குக் கிழக்காக பரந்தன் - முல்லைத்தீவு வீதியான ஏ-10 வீதியிலுள்ள தர்மபுரம், விசுவமடு, உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களுக்கே நகர்ந்து சென்றுள்ளனர். இதன் காரணமாகவே, இடம்பெயர்ந்த மக்களின் பாதுகாப்பு கருதி விஸ்மடு முதல் ஒட்டுசுட்டான் வரையிலான ஏ-10 வீதிப் பிரதேசத்தை யுத்த சூனியப் பிரதேசமாக அரசாங்கம் தற்போது அறிவித்துள்ளது. இதேவேளை, கிளிநொச்சி நகரை பாதுகாப்புப் படையினர் மேலும் அண்…

    • 4 replies
    • 1.7k views
  7. வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் கொலைசெய்யப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரது சடலத்தை வவுனியா காவற்துறையினர் மீட்டுள்ளனர். உயிரிழந்தவரின் உடலில் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்படுவதாகவும் வேறு இடத்தில் கொலைசெய்யப்பட்டு, சடலம் வைரவபுளியங்குளம் பகுதியில் போடப்பட்டிருக்கலாம் என்றும் காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கொல்லப்பட்டவர் 25 வயதான கந்தையா கிருஸ்ணா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த கொலைத் தொடர்பில் வவுனியா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  8. கட்சி வேறுபாடுகளை மறந்து சிறிலங்கா படைக்கு ஆட்சேர்ப்பு [சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2008, 06:46 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா படைக்கு ஆட்களை திரட்டும் நடவடிக்கைகள் பின்தங்கிய சிங்கள கிரமங்களில் தீவிரமாக இடம்பெற்று வருவதாக அறியமுடிகின்றது. கிளிநொச்சியை படையினர் கைப்பற்றியதும் அந்நிய படைகளிடம் இருந்து சிங்கள தேசத்தை காப்பாற்ற படையில் சேருமாறு இளைஞர்கள் மத்தியில் பிரச்சாரங்கள் இடம்பெறுவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகள் முற்றாக அழிந்து விடுவார்கள் என்றும் எஞ்சியுள்ள புலிகள் சரணடைவார்கள் அல்லது கடல் மார்க்கமாக வெளியேறுவார்கள் எனவும் வீடு வீடாக பிரசாரங்கள் நடைபெற்று வருவதாக சிறிலங்காவின் மத்திய, வடமத்திய, தென்பகுதி தகவல்களை மேற்கோள் க…

    • 0 replies
    • 640 views
  9. கல்முனையில் நாளை மேல்நீதிமன்றம் திறப்பு [சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2008, 06:36 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நலன் கருதி கல்முனையில் மேல்நீதிமன்றம் ஒன்று நாளை ஞாயிற்றுக்கிழமை (05.10.08) திறந்து வைக்கப்படவுள்ளது. இதுவரை காலமும் கல்முனை, அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புக்கள் தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்கு கொழும்பு, அம்பாறை போன்ற பிரதேசங்களுக்கே செல்லவேண்டி இருந்தது. அதனைக் கருத்தில் கொண்டே கல்முனையில் மேல்நீதிமன்றத்தினை அமைக்க பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அனுமதி வழங்கியிருந்தார். அதன் பிரகாரம் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா பிரதம அதிதியாகவும் நீதி மறு…

    • 0 replies
    • 438 views
  10. கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம் மீது விமான தாக்குதல் - அருகில் குடிமனைகளில் இருந்த பொது மக்கள் இருவர் பலி - ஜவர் காயம்!! இன்று பிற்பகல் ஒரு மணியளவில் எல்லோராலும் அறியப்பட்ட விடுதலை புலிகளின் சமாதான செயலத்தின் பிரதான அலுவலக வளாகம் மீது விமானம் குண்டு வீசியுள்ளது.இதில் அருகில் குடியிருந்த பொது மக்கள் குடியிருப்புக்களில் வீழ்ந்த குண்டுகளால் இரு பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.தெருவால் சென்றவர்கள் உட்பட ஜவர் காயமடைந்திருப்பதாக பூர்வாங்கத்தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை இத்தாக்குதலை எதிர்த்து புலிகள் விமான எதிர்ப்புத்தாக்குதலை மேற்கொண்டமையால் பல குண்டுகள் சமாதான செயலகத்துக்கு வெளியே வீழ்ந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்களில் சுப்பையா சி…

  11. இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள், அரச பயங்கரவாதத்தால் உள்ளக இடப்பெயர்விற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு, மனிதப் பேரவலத்தை எதிர் நோக்கியுள்ளனர். வன்னியில் உருவாக்கப்பட்டிருக்கும், தமிழ் மக்கள் மீதான சிங்களத்தின் பேரினவாத உளவியல் சமரினை எதிர்கொண்டவாறு, மக்கள் படைக் கட்டமைப்பும் விரிவடைகின்றன. மரணத்தின் விளிம்பில் தத்தளிக்கும் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்ய, அர்ப்பணிப்புடன் இயங்கும் தொண்டு நிறுவனங்களை முடக்கும் குரூரச் செயற்பாட்டில், தனது அரச இயந்திரப் பரப்புரை நிறுவனத்தை முடுக்கி விட்டுள்ளார் மகிந்தர்.கொழும்பு சமாதானச் செயலகமும், இடர் முகாமைத்துவ, மனித உரிமை அமைச்சும், தமிழ் மக்களின் அவல நிலை குறித்து முதலைக் கண்ணீர் வடிக்கிறது. வவுனியா …

  12. ''இன்று நடந்த விமானஎதிர்ப்பு தாக்குதல் வீடியோ''

    • 46 replies
    • 9.2k views
  13. இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையில் இந்திய மத்திய அரசின் மௌனம் [04 - October - 2008] காலகண்டன் மௌனம் சம்மதத்தின் வெளிப்பாடு என்று கூறப்படுவதுண்டு. அது எவ்வளவு உண்மை என்பதை இந்திய மத்திய அரசு இலங்கை இனப் பிரச்சினையில் இன்றைய உச்ச கட்ட யுத்தத்தின் மத்தியிலும் கடைப்பிடித்து வரும் இறுக்கமான மௌனம் எடுத்துக் காட்டுகின்றது. மௌனம் மட்டுமின்றி அதன் பின்னால் இடம்பெறும் சம்பவங்களும் நடைமுறைகளும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவைகளாகவும் இருந்து வருகின்றன. மேற்படி மௌனத்தைக் கலைக்குமாறும் இலங்கை அரசிற்கு எச்சரிக்கை விடுக்குமாறும் ஆயுத உதவிகளை வழங்க வேண்டாம் என்றும் மத்திய அரசை தமிழகத்துக் கட்சிகள் வற்புறுத்திக் கேட்டு வந்துள்ளன. தமிழகத்தின் சில கட்சிகள் ஆவேசமாக அறிக்கைகள்…

  14. இங்க கிலிக் பன்னவும் > http://www.eelaman.net/index.php?option=co...51&Itemid=1

  15. வீரகேசரி நாளேடு 10/4/2008 9:26:59 AM - விடுதலைப்புலிகளை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் தடைசெய்துள்ளன இவ்வாறான நிலையில் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு போராட்டங்கள் அரசாங்கத்திற்கு ஒரு பொருட்டல்ல: இவை சிறிய போராட்டங்களேயாகும் என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்டு அங்கு மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டி

  16. வீரகேசரி நாளேடு - அமெரிக்க "கிறீன் அட்டை' சீட்டிழுப்புக்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக் கொள்ளப்படுவதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மேற்படி தூதரகத்தால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறி ப்பிடப்பட்டிருந்ததாவது, 2010 ஆம் ஆண்டுக்கான பல்வகைமை குடியேற்ற விசா சீட்டிழுப்பானது கடந்த 2ஆம் திகதி வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக வாஷிங்டன் டி.சி.யில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மேற்படி நிகழ்ச்சித் திட்டத்தின் பிரகாரம் குறிப்பிட்ட நோக்க அடிப்படையிலான தராதரங்களைக் கொண்டுள்ள குடியேற்றவாசிகளின் விண்ணப்பங்கள் எழுந்தமானமாக தெரிவு செய்யப்படும். இலங்கை அல்லது மாலைதீவு பிரஜையாக இருத்தல், பாடசாலை உயர் கல்வி அல்லது அதற்குச் சமமான கல்வித் தராதரம் (…

  17. தமிழர் போராட்டத்திற்கு எதிராக கொழும்பில் கைகோர்க்கும் துரோகிகள் - மகான் சனி, 04 ஒக்ரோபர் 2008 [செய்தியாளர் மகான்] -மகான்- கிழக்கு மாகாணத்தில் விடுதலை புலிகள் அரசியல், நிர்வாக, இராணுவ நடவடிக்கைகள் ஆம்பிக்கப்பட்டிருக்கும் வேளையில் இராணுவத்திற்கு எதிரான பாரிய நடவடிககையில் ஈடுபடுவதற்கு முன்னர் இராணுவத்தினருக்கு துணையாகயுள்ளவர்களை அகற்றுவதில் புலிகள் தமது இராணுவ நடவடிக்கைகளை பல்வேறு கோணங்களில் முடிக்கிவிட்டுள்ளனர். கொழும்பில் தமிழர் போராட்டத்திற்கு எதிரான இரு துரோகிககள் கைகோர்க்கின்றனர். இந்த இரு குழுக்களின் கைகுலாவல் கொழும்பில் உள்ள தமிழர்களை ஒடுக்குவதற்காகவா? அல்லது விடுதலை புலிகளினால் கொழும்பில் மேற்கொள்ளப்படும் தாக்குதல் திட்டங்களை தடுத்து நிறுத்து…

  18. கடந்த செவ்வாய் இரவு 9.00 மணிக்கு வான்புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள திருமலைத் துறைமுகம். தமிழீழத்தின் தலைநகரும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையமாகத் திகழும் திருக்கோணமலையின் கடற்படைத்தளம், துறைமுகம் மீது வான் தாக்குதலைத் தொடுத்தனர் விடுதலைப் புலிகள். வழமைபோல், சேத விபரங்களை குறைத்துக் கூறும் அரச படைத்துறைப் பேச்சாளரின் கஞ்சத்தனம், மறுபடியும் வெளிப்பட்டது. இந்த வருடம் மே மாதமும், கடற்புலிக் கொமாண்டோக்களால், திருமலைத் துறைமுகத்தில் அழித்துதொழிப்புத் தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டது, நினைவிருக்கலாம். எம்.வி.இன்வின்சிபிள் என்கிற `வெல்ல முடியாத' (Invicible) துருப்புக்காவி சரக்குக் கப்பல், துறைமுகத்தில் தரித்து நின்றவே…

    • 5 replies
    • 2.3k views
  19. இலங்கை உட்பட பல நாடுகளிலிருந்து ஜப்பானில் அகதிகளாக புகலிடம்கோரி விண்ணபிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அகதிகளுக்கு உதவிவரும் தன்னார்வ நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம்வரையான காலப்பகுதியில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 1,015ஐ அடைந்திருப்பதாக அந்த அமைப்பு கூறுகிறது. “மியன்மார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலிருந்தே கூடுதலானவர்கள் விண்ணப்பிக்கின்றனர். இதனைவிட இலங்கை, நேபாளம் மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் காணப்படும்ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை காரணமாக அந்த நாடுகளிலிருந்து புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என டோக்கியோவைத் தளமாகக் கொண்டியங்கும் அகதிகளுக்கான ஜப்பான் நிலையம் தெரிவித்துள்ளது. ஜப்பா…

  20. தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படை தாக்குவதும், சுட்டுக் கொல்வதும் இந்திய கடற்படையின் கண் முன்னாலேயே நடைபெற்று வருகையில், தமிழக மக்களையும், மீனவர்களையும், ஏன் இந்திய மக்களையும் திசை திருப்பவும், ஏமாற்றவும் சிங்கள அரசு நயவஞ்சகமாக கடந்த 2 ஆண்டுகளாகவே முயற்சித்து வரும் சதித்திட்டத்தில் இந்திய அரசு தற்போது கைகோர்த்து உள்ளதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சுமத்தியுள்ளார். இலங்கை இந்திய கூட்டு முயற்சித் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் இலங்கையில் தமிழ் இனத்தை அழிக்கும் சிங்கள அரசின் ராணுவ நடவடிக்கைகளுக்கு, இந்திய கடற்படையினர் ஏற்கனவே தகவல் பரிமாற்றம் செய்யும் ஒப்பந்தம் மூலம் பல வழிகளிலும் உதவி வருகிற நிலையில், இருநா…

  21. 02.10.08 சென்னை சேப்பாக்கத்தில், ஈழத்தமிழர் போராட்டத்திற்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சி நடாத்திய ஆதரவுப்போராட்டத்தின் சில துளிகள் வீடியோ ஒளிப்பதிவில். இணைப்பு http://4tamilmedia.com/index.php?option=co...&Itemid=267

    • 0 replies
    • 1.1k views
  22. அண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சிறீலங்கா அரசு போரை நிறுத்த வேண்டும் எனவும், அதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையன்றை முன் வைத்ததாகவும், ஆனால், இந்தியா அப்படிச் செய்யப்போவதில்லை எனவும் சிறீலங்கா அரச தரப்பில் சில கருத்துக்கள் வெளிவந்துள்ளன.இப்படியான ஒரு கோரிக்கையை இந்தியாவிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விடுத்தமை எவ்வளவு தூரம் உண்மை என்பது கேள்விக்குரிய விடயமாகும். தமிழர் தாயகத்தின் பல பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இவ்வேளையில், இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் ஒரு சில நாட்களுக்குள் தங்கள் சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்து பெரும் இடர்களைச் சந்தித்துள்ள நிலையில், தமிழ் மக்களின் விவசாய, கடற்றொழில், பொருளாதார மூலங்கள் தொடர்ந்து சிதைக்கப்படும்…

  23. இந்த எழுச்சி எமது இன விடுதலை வரை தொடர வேண்டும்: சுவிஸ் தமிழர் பேரவை தமிழக கட்சிகளிடம் கோரிக்கை [சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2008, 08:18 மு.ப ஈழம்] [சுவிஸ் நிருபர்] ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று உருவாகியிருக்கும் மீள் எழுச்சி ஈழத் தமிழர்கள் தமது விடுதலையை எட்டும்வரை தொடரவேண்டும் என அறைகூவல் விடுத்துள்ள சுவிஸ் தமிழர் பேரவை, இந்த தொடர்ச்சியான- ஒன்றிணைந்த செயற்பாடுகள் தாயக மக்களின் துயரைத் துடைப்பதுடன் அவர்களின் விடுதலையை விரைவுபடுத்த உதவ வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றது. "எங்கள் எதிரிகள் ஓடி மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!" என்ற தலைப்பில் சுவிஸ் தமிழர் பேரவையின் சார்பில் தம்பிப்பிள்ளை நமசிவாயம், தமிழக அரசியல் தலைவர்களுக்கு விடுத்துள்ள அழ…

    • 0 replies
    • 460 views
  24. வன்னிவிளாங்குளத்தில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வு முறியடிப்பு: 5 பேர் பலி; 10 பேர் காயம் [சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2008, 06:34 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னிவிளாங்குளத்தில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 5 படையினர் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்தனர். படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. வன்னிவிளாங்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4:30 நிமிடத்துக்கு செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்கா படையினர் முன்னகர்வுத் தாக்குதலை நடத்தினர். இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர தாக்குத…

    • 0 replies
    • 686 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.