ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143675 topics in this forum
-
அண்மைக்காலங்களாக சிறிலங்கா விமானப்படையானது தமிழப்பகுதிகள் மீதான விமானத் தாக்குதல்களுக்கு, அண்மையில் உக்ரேன் நாட்டிலிருந்து கொள்வனவு செய்த நவீன குண்டுவீச்சு விமானக்களை பயன்படுத்தி வருகிறது. இத்தாக்குதல்களில் தினந்தோறும் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டு வருவதும், அவர்களின் வாழ்வாதராங்கள் அனைத்துமே இல்லாதொழிக்கப்பட்டு வரும் நிலையில், சிறிலங்கா விமானப்படையினரின் குண்டு வீச்சு விமானங்களை இந்திய விமானப்படையினரின் விமானிகளே ஓட்டி வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரேன் நாட்டிலிருந்து சிறிலங்காவானது அண்மையில் கொள்வனவு செய்த ‘MIG27, MIG29′ போன்ற நவீன தொழில்நுட்ப குண்டுவீச்சு விமானங்களை செலுத்தக்கூடிய விமானிகள் சிறிலங்காவிடம் இல்லை என்பதும், குறுகிய காலத்தில் அவற்…
-
- 0 replies
- 2.3k views
-
-
ஆயுதங்களைக் களைந்து சரணடைந்தாலும் விடுதலைப் புலிகளுக்கு எவ்வித சலுகைகளும் இல்லை – மகிந்த: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகன் மீது தனிப்பட்ட ரீதியில் கோபம் எதுவுமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆயுதங்களைக் களைந்து சரணடைந்தாலும் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்பட மாட்டாதென பிரபல சர்வதேச தெலைக்காட்சி சேவைக்கு அளித்த செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார். பெரும் எண்ணிக்கையிலான விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஆயுதங்களை களைவதற்கு விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னரே அரசியல் ரீதியான தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பு…
-
- 7 replies
- 2.4k views
-
-
என்னடாப்பா தமிழகத்தில நல்ல மாற்றங்கள் எல்லாம் நடக்குது. கேள்விப் பட்டனியோ என்றார் அவர். ம் என்றேன் நான். மன்மோகன் சிங் இலங்கைத் தூதரை அழைத்து யுத்தத்தை உடனடியா நிறுத்தச் சொல்லியிருக்கிறாராம். உண்மையோ என அவர் கேட்டார். அப்பிடியொண்டுமில்லை என நான் மறுதலித்தேன். ச்சே அங்கை கருணாநிதியோடு கதைச்சிருக்கிறாராம். உடனை தூதரை அழைத்து எல்லாத்தையும் நிறுத்தச் சொல்லி சொன்னதா மன்மோகன்சிங் சொன்னாராமே - அவருக்கு தன் புளுகம் முறிந்திடக் கூடாதென்ற தவிப்பு. யுத்தத்தை நிறுத்தச் சொல்லியெல்லாம் சொல்லவில்லை. தூதரை சந்தித்து வழமையாக கதைக்கிறமாதிரி பார்த்து அவதானமா நடந்து கொள்ளுங்கோ என சொல்லியிருக்கிறார்கள். சண்டை செய்யும் போது சனம் சாகாமல் பார்த்துக் கொள்ளுங்கோ என்று கேட்டி…
-
- 0 replies
- 1.6k views
-
-
வெள்ளை வானில் சென்ற ஆயுததாரிகளினால், இராணுவ கப்டன் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இராணுவத்தில் சேவையாற்றும் இந்த அதிகாரி, விடுமுறையில் வீட்டுக்கு சென்றிருந்தார். குறித்த இராணுவ அதிகாரி கம்பஹா பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது வெள்ளை வானில் சென்ற ஆயுதாரிகள் துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தி கடத்திச் சென்றுள்ளதாக காவற்துறை பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். கடத்தல் சம்பவம் பற்றி முச்சக்கர வண்டியின் சாரதி கம்பஹா காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். இதேவேளை நீர்கொழும்பு கடற்கரை வீதியைச் சேர்ந்த தமிழ் வர்த்தகர் ஒருவர் நேற்றிரவு கடத்தப்பட்டதாக நீர்கொழும்பு காவற்துறையிடம்; முறையிடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 2k views
-
-
இலங்கையில் விரைவில் சமாதானம் மலரும் என பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத அப்பாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். பலஸ்தீன ஜனாதிபதியை விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேற்றார். பலஸ்தீன ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் பூரண அரச மரியாதையுடன் செங்கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பலஸ்தீன் ஜனாதிபதி சநதித்து பேச்சுவாக்த்தை நடத்தினார். அதனைத்தொடர்ந்த அங்கு உரை நிகழ்த்துகையிலேயே பலஸ்தீன ஜனாதிபதி இவ்வாறு கூறினார். பலஸ்தீனர்களின் நியாயமான போராட்டங்களு…
-
- 0 replies
- 904 views
-
-
வட மாகாணத்துக்கான புதிய ஆளுனராக டிக்சன் டெலா பண்டார இன்று இலங்கை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று ஜனாதிபதியின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இவர் முன்னாள் சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுனராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக நடைபெற்ற வைபவத்தில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்துகொண்டார். http://www.tamilseythi.com/srilanka/lanka-...2008-10-10.html
-
- 0 replies
- 765 views
-
-
கிழக்கில் சட்டம் ஒழுங்கு பாரியளவில் சீர்குலைந்துள்ளதாகவும், இது குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பாரிய பின்விளைவுகளை அரசாங்கம் எதிர்நோக்க நேரிடும் எனவும் உயர் பாதுகாப்பு அதிகாரியொருவரை மேற்கோள் காட்டி கொழும்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் பல்வேறு குழப்ப நிலைகள் தோன்றியுள்ளதாக அந்தச் செய்தி தெரிவிக்கின்றது கிழக்கு மாகாண முதலமைச்சரின் வலது கை எனக் கருதப்படும் சீலன் என்ற நபர் திடீரென இந்தியாவிற்குத் தப்பிச் சென்றுள்ளதாக கிழக்கு மாகாணசபை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீலன் என்பவரே கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் பிள்ளையானுக்காக கப்பம் திரட்டி வந்தத…
-
- 6 replies
- 2.4k views
-
-
சிறிலங்கா படையினரின் உக்கிரமான தாக்குதல்கள் நடைபெற்று வரும் பகுதியிலிருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இரணைமடுச் சந்தியில் 2 ஆம் லெப். மாலதியின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 972 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான பொறலஸ்கமுவவில் நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையில் மலையக தமிழ் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 513 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் பகுதியில் சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலில் தாயும் மகளும் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 566 views
-
-
திருச்சி (ஏஜென்சி), இலங்கையில் தமிழர் பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து திருச்சி மத்திய சிறையில் கைதிகள் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். திருச்சி மத்திய சிறையில் இன்று காலை வழக்கம்போல் கைதிகளுக்கு உணவு பறிமாறப்பட்டது. அப்போது கைதிகளின் ஒரு பிரிவினர் உணவை வாங்க மறுத்து விட்டனர். பொன்பரப்பி ராஜேந்திரன் என்பவர் தலைமையில் சுமார் ஆயிரம் கைதிகள், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பதாக அப்போது தெரிவித்தனர். அப்பாவித் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து, ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை தாங்கள் மேற்கொண்டிருப்பதாக சிறைக் கைதிகள் தெரிவித்தனர். தமிழர் ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையில் உண்மை நிலையை அறிய அனைத்து கட்சியை சேர்ந்த 10 பேர் எம்.பி.க்கள் குழுவை அனுப்புங்கள் என்று முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து, பா.ம.க. சார்பில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே. மூர்த்தி எம்.பி., பொன்னுச்சாமி எம்.பி., பாடலாசிரியர் அறிவுமதி, இயக்குனர் சீமான், ஓவியர் வீரசந்தானம் உள்பட பா.ம.க. எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:- …
-
- 1 reply
- 1.8k views
-
-
இலங்கை அதிபர் ராஜபக்சேவை உடனடியாக தொலைபேசியில் அழைத்து, தமிழர்களைப் படுகொலை செய்வதை நிறுத்த வேண்டும். அதை விடுத்து பிரதமருக்கு தந்தி அனுப்புவதால் யாருக்கு என்ன பயன் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்த வேண்டும் என அதிமுக பொதுச் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: நான் ஏற்கனவே முதல்வர் கருணாநிதிக்கு ஒரு அறிவுரை தெரிவித்திருந்தேன். தமிழக முதல்வராக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக கருணாநிதி இருப்பதால், ராஜபக்சேவை தொடர்பு கொண்டு, இனப்படுகொலையை நிறுத்த உத்தரவிடுமாறு பிரதமரை கருணாநிதி கேட்டுக் கொள்ள வேண்டும் என நான் கூறியிருந்தேன். ஆனால் பதிலுக்கு கருணாநிதி, புதுமையான யோசனையை தமிழக மக்கள…
-
- 1 reply
- 1k views
-
-
வீரகேசரி இணையம் - தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். வடமத்திய மாகாண சபை தேர்தலில்போட்டியிடும் முகமாக பாரளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்த ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.வசந்த சமரசிங்கவின் வெற்றிடத்திற்கே விநாயகமூர்த்தி முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவ் பதவியேற்பு நிகழும் சமயம் எதிர்கட்சிகளான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய சுதந்திர முன்னனியின் விமல் வீரவன்ச ஆகியோரே சபையில் இருந்தனர். ஐக்கிய தேசிய கட்சி , ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இவ் பதவியேற்பு நிகழ்வினை பகிஷ்கரிப்பு செய்…
-
- 28 replies
- 3.7k views
-
-
இலங்கையின் நன்மதிப்பை சீர்குலைக்க ரொபர்ட் ஏவன்ஸ் சூழ்ச்சி - இலங்கை குற்றம் சாட்டு: ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மத்தியில் இலங்கை அரசாங்கத்திற்கு காணப்படும் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் ஏவன்ஸ் செயற்பட்டு வருவதாக இலங்கை குற்றம் சாட்டியுள்ளது. ரொபர்ட் ஏவன்ஸ் தலைமையில் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த பாராளுமன்றக் குழுவினர் உண்மைக்குப் புறம்பான தவகல்களை வெளியிட்டிருப்பதாக ஒன்றிய பாராளுமன்றக் குழுவின் இலங்கைப் பிரதிநிதி ரவிந்த ஆசிரியசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் சாதகமான விடயங்கள் மூடிமறைக்கப்பட்டும், பாதகமான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவ
-
- 1 reply
- 1.5k views
-
-
கிளிநொச்சியில் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்: தாயும் மகளும் பலி; 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் காயம் [வெள்ளிக்கிழமை, 10 ஒக்ரோபர் 2008, 07:43 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் பகுதியில் சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் தாயும் மகளும் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு சிறுவர்கள் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர். பரந்தனில் உள்ள குமரபுரம் மக்கள் குடியிருப்பு மீது இன்று வெள்ளிக்கிழமை காலை 6:25 நிமிடமளவில் சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் நான்கு தடவைகள் குண்டுத்தாக்குதலை நடத்தின. இத்தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த தந்த…
-
- 0 replies
- 609 views
-
-
சர்வகட்சி மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ளது. இதற்கான அழைப்பிதழ்கள் ஜனாதிபதியின் செயலாளர் வீரதுங்கவால் கையெழுத்திடப்பட்டு அனைத்துக் கட்சிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் இந்த அழைப்பிதழ் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதா
-
- 0 replies
- 807 views
-
-
தமிழக முதல்வரின் குரல் எமக்கு நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது: நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் [வெள்ளிக்கிழமை, 10 ஒக்ரோபர் 2008, 08:37 மு.ப ஈழம்] [நோர்வேயிலிருந்து வி.ரூபன்] ஈழத் தமிழினத்திற்கெதிராக கொடிய இன அழிப்புப் போரினைக் கட்டவிழ்த்துவிட்டுவரும் சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராக தாங்கள் நெஞ்சுரத்துடன் குரல்கொடுத்துள்ளமை எமது இதயங்களில் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது என்று நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நோர்வே தமிழ் அமைப்பக்களின் ஒன்றியம் நேற்று வியாழக்கிழமை (09.10.08) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஈழத் தமிழினத்திற்கெதிராக கொடிய இன அழிப்புப் போரினைக் கட்டவிழ்த்துவிட்டு வரும் சிங்களப் …
-
- 0 replies
- 679 views
-
-
சிறுபான்மையினர் தொடர்பாக இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து குறித்து, அரசாங்கமும் ஐக்கிய தேசியக் கட்சியும் நழுவல் போக்கை கடைப்பிடிப்பதானது சிறுபான்மையின மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அமைந்துள்ளதென சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (ஒக்08) நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே ரவூப் ஹக்கீம் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இராணுவத் தளபதி அண்மையில் சிறுபான்மையினரைப் பற்றி கருத்து வெளியிட்டிருந்தார். பெரும்பான்மை இனத்தவர்களிடையே அண்டி வாழ வந்தவர்கள் தான் சிறுபான்மையினர் என்ற தொனியிலேயே இராணுவத் தளபதியின் கருத்து அமைந்திருந்தது. இர…
-
- 0 replies
- 678 views
-
-
நாட்டின் மொத்த சனத்தொகையில் ஆண்களைவிட பெண்களின் சனத்தொகை அதிகரித்துவிட்டது என்றும், நாட்டின் மொத்த சனத்தொகையில் பெண்களின் சனத்தொகை ஒரு கோடியே இரண்டு லட்சம் எனவும் குடிசன மதிப்பீட்டுப் புள்ளிவிபரத் திணைக்களக் குறிப்பொன்று கூறுகிறது. இதேவேளை 57 லட்சம் மக்கள் வாழும் மேல்மாகாணம் அதிக சனத்தொகை கொண்ட மாகாணமாகவும், 11 இலட்சம் சனத்தொகை கொண்ட வடமாகாணம் குறைந்த சனத்தொகை கொண்ட மாகாணம் எனவும் அச்செய்திக்குறிப்புக் கூறுகிறது. கிழக்கு மாகாணத்தின் சனத்தொகை 15 இலட்சமாகும். இதைவிட கூடிய மக்கள் தொகை வாழ்வது கொழும்பு மாவட்டத்தில் என்றும் குறைந்த சனத்தொகை வாழ்வது மன்னார் மாவட்டத்தில் என்றும் அங்கு 15-19ற்கும் இடைப்பட்டவர்களின் தொகை 2 இலட்சம் என்றும் 75 வயதிற்கு மேற்பட்டவர்க…
-
- 0 replies
- 2.6k views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் வடமத்திய மாகாணசபை எதிர்கட்சியின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவை கொலை செய்ய வந்தவர் வெள்ளை நிற வான் ஒன்றிலேயே வந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ் பி திஸாநாயக்க, இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இந்த தாக்குதல் இடம்பெற்று நான்கு நாட்களாகியும் அரசாங்கத்தினால் கொலைஞரைக் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். குண்டுதாரி மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டவராக இருந்ததாக அரசாங்கம் கூறுவது தொடர்பில் கருத்துரைத்த அவர், எவ்வாறு தனித்து இந்தத் தாக்குதலை நடத்தமுடியும் என எஸ் பி திஸாநாயக்க கேள்வி எழுப்பினார். http://www.tamilskynews.com/index.php?opti...…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் டக்ளஸ் சபையில் கடும் வாய்ச்சண்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையே கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டதனால் சபை சிறிது நேரம் அல்லோலகல்லோலப்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்டநீடிப்பு விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவரது பேச்சில் குறுக்கீடு செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஸ்ரீகாந்தாவின் கருத்துகளுக்கு எதிரான கருத்துக்களை கூறிக்கொண்டிருந்தார். ஸ்ரீகாந்தா எம்.பி.டக்ளஸின் கருத்துகளை சாட்டை செய்யாமல் தொடர்ந்தும் பேசிக்கொண்டிருந்தார். ஆனால், ஒருகட்டத்தில் …
-
- 9 replies
- 2.7k views
-
-
சிறிலங்காவின் அடுத்த ஆண்டுக்கான மொத்த செலவீனம் 981 பில்லியன் ரூபா [வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2008, 10:12 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரசாங்கத்தின் 2009 ஆம் ஆண்டுக்கான மொத்த செலவீனம் 981 பில்லியன் ரூபா என குறைநிரப்பு பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலதிகமாக 850 பில்லியன் ரூபா வெளிநாட்டு கடன் பெறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிரேரணையின் மதிப்பீட்டில் கணிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்ற சாபநாயகர் வி.ஜே.மு லொக்கு பண்டாரா தலைமையில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 9:30 நிமிடத்துக்கு கூடியது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கேள்வி நேரம் முடிவடைந்ததும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா அடுத்த ஆண்டுக்கான செலவீன மதிப்பீட்டு குறைநிரப்பு பிரேரணையை …
-
- 0 replies
- 454 views
-
-
சிங்களவர்களைக் கொன்றவர்களை அமைச்சர்கள் கட்டியணைத்து வரவேற்பதாக பாலித ரங்க பண்டார விசனம் ஜானக பெரேராவுக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து எதுவும் இல்லையென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வாவும் உறுதிப்படுத்திய நிலையில், இன்று ஜானக பெரேராவின் படுகொலை தொடர்பில் ஐ.தே.க.புலிகளை குற்றம் சாட்டவில்லையென அரசு கூறுவதையிட்டு கவலையடைவதாக ஐ.தே.க. எம்.பி.பாலித ரங்கபண்டார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; கிழக்கு மாகாணத்தில் அரசின் உத்தரவுக்கமைய புலிகளிடம் சரணடைந்த 601 பொலிஸாரைக்…
-
- 0 replies
- 1.4k views
-
-
கருணாவின் நியமனம் சட்ட விரோதம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தால் ரட்ணசிறி, மேர்வின், டளஸ், பசில் - கதி என்ன? ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்படாத கருணாவை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமைக்கு எதிராக ஜே.வீ.பீ தாக்கல் செய்துள்ள மனுவின் அடிப்படையில் நியமனம் சட்டவிரோதமானது என நீதிமன்றம் அறிவித்தால், தேசியப்பட்டியலில் பெயர் குறிப்பிடாத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, அமைச்சர்களான மேர்வின் சில்வா, டளஸ் அழகபெரும மற்றும் பசில் ராஜபக்ஸ, ஆகியோரின் பதவிகளும் பறிபோகும் நிலையேற்படலாம் எனக் கருதப்படுகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அ…
-
- 0 replies
- 1.1k views
-