Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வன்னியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகளில் சிக்கியுள்ள பொதுமக்களுக்கு சர்வ தேச சுயாதீனக் கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் நிவாரணப் பொருள்களை அனுப்பி வைக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசிடம் வலியுறுத்திக் கேட்டிருக்கின்றது. யுத்தம் நடைபெறும் பகுதிகளில் சிக்கித் தவிக்கும் அப்பாவி மக்களின் மனித உரிமைகளை மதித்துச் செயற்படுமாறும் ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. நியூயோர்க்கில் இடம்பெற்ற இணைத்தலைமை நாடுகளின் சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியம் சார்பாகக் கலந்துகொண்ட, அதன் வெளியுறவு ஆணையாளர் பெரேரோ வோல்டெனொ அதன் பின்னர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் பொதுமக்களினதும் உள்நாட்டில் இடம் பெயர…

  2. தமிழர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் அல்லர்- பெரும்பாலான பயங்கரவாதிகள் தமிழர்களே: கோத்தாபாய [சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2008, 06:32 மு.ப ஈழம்] [க.நித்தியா] தமிழர்கள் எல்லாரும் பயங்கரவாதிகள் அல்லர். ஆனால், பொரும்பாலான பயங்கரவாதிகள் தமிழர்களே ஆவர். சிறிலங்காவில் உள்ள பயங்கரவாதிகளில் 98 சதவீதமானவர்கள் தமிழர்கள் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் கோத்தாபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். லண்டன் பி.பி.சிக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: வன்னி நோக்கிய படை நடவடிக்கையில் எமது படைகள் வெற்றியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றன. தரையில் சகல போர்முனைகளிலும் கடல் மற்றும் வான் வழிகளிலும் தாம் மிகுந்த தேர்ச்சியுடன் உள்ளோம். …

  3. சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தி சமாதானத்தை ஏற்படுத்தியுள்ள கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகளின் பயங்கரவாத நிர்வகத்திற்குள் கிழக்கு மாகாணம் மீண்டும் செல்ல தான் இடமளிக்க போவதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகரில் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு அமெரிக்கா வழங்கி வரும் உதவிகளுக்கும், அமெரிக்க மக்களுக்கும், அமெரிகக் அரசுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் இதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது அரசாங்கத்திற்கும் தான் நன்றி தெரிவிப்பதாகவும் பிள்ளையான் கூறியுள்ளார். கடந்த 30 வருடங்களாக கிழக்கு மாகாண மக்கள் அபிவிருத்தியைக் கண்டிருக்கவில்லை. இந்த மாகாண மக்களுக்கு இந்த சந்த…

  4. வன்னிப்பெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான உணவு, மருந்துப் பொருட்களை எடுத்துச்செல்வதற்குரிய ஏற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை என்று கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் அதிகாரியொருவர் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  5. ஈகச்சுடர் லெப். கேணல் திலீபன் அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவும், கேணல் சங்கர் அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவும் இணைந்ததான பல்வேறு நிகழ்வுகள் புதுக்குடியிருப்பு கோட்டத்தில் நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க

  6. ஆயுதக்கொள்வனவுகளில் அரச பணத்தை கையாடிய சிறிலங்கா படைத்துறைகளைச் சேர்ந்த முன்னாள் தளபதிகள் சிலர் குற்றவாளிகள் என்று அரச தலைவரால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு தீர்ப்பளித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  7. மேற்குலக நாடுகளில் அகதி அந்தஸ்துக் கோரும் தமிழர்கள் இலங்கை நிலைவரம் குறித்து மிகைப்படுத்திய தகவல்களைத் தெரிவிக்கின்றனர் என மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். கனடாவிலிருந்து வெளிவரும் "நஷனல் போஸ்ட்' பத்திரிகையின் செய்தியாளர் ஸ்டுவர்ட் பெல்லி என்பவருக்கு இலங்கையில் வைத்து சமீபத்தில் வழங்கியுள்ள செவ்வியிலேயே மஹிந்த இதனைத் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு: விடுதலைப்புலிகளுக்கும், சுதந்திர தேசத்திற்கான அவர்களது போராட்டத்திற்கும் ஆதரவளிக்க கனடா வாழ் தமிழ் மக்கள் முயற்சிக்கக் கூடாது. இவ்வாறான செயல்களை அவர்கள் நிறுத்தவேண்டும். பயங்கரவாதத்திற்கு ஒரு போதும் ஆதரவளிக்கக் கூடாது. யுத்தம் அநேகமாக முடிவடைந்து விட்டதா என ஊடகவியலாளர் கேள்வி ஒன்றைக…

  8. இங்க கிலிக் பன்னவும் > http://www.eelaman.net/index.php?option=co...92&Itemid=1

  9. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்வின் சகோதரரும், ஆலோசகரும் சிறிலங்கா சுதந்திரகட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்சவுக்கு எதிராக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் பிரச்சிணை தொடர்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  10. நிவ்யோர்க் செல்வதற்கு முன் இங்கிலாந்து சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அங்கு சென்று வழிபட்டுக்கொண்ட கின்ஸ்பர் விகாரைக்கு நேற்று இரவு இனந்தெரரியாத நபர்கள் சிலர் தாக்குதலை மேற்கொண்டு உள்ளனர். இத்தாக்குதலில் விகாரைக்கும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் இரண்டிற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. நியுயோர்க் செல்வதற்கு முன் இங்கிலாந்து சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அங்கு சென்று வழிபட்டுக்கொண்ட கிங்ஸ்பரி விகாரைக்கு நேற்று இரவு இனந்தெரரியாத நபர்கள் சிலர் தாக்குதலை மேற்கொண்டு உள்ளனர். இத்தாக்குதலில் விகாரைக்கும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் இரண்டிற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இத்தாக்குதலை மேற்கொண்டவர்கள், இரும்பு தடிகளி…

  11. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) செயலாளர் ஒருவர் விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பதுடன் விடுதலைப்புலிகளுக்கு ஏற்றவகையில் டி.எம்.வி.பி கட்சியை வழி நடத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு கட்சியின் தலைவர் கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் மீண்டும் மோதல்கள் உக்கிரமடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட செயலாளரின் வழி நடத்தலில் சில சந்தர்ப்பங்களில் பிள்ளையான் அரசாங்கத்திற்கு எதிராக கூறிய உள்ளதாகத் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் குறி;த்து கருணா, பிள்ளையானிடம் கருத்துக் கேட்டதை அடுத்து இந்தப் பிரச்சினை உக்கிரமடைந்துள்ளது. சிவநேசத்துரை சந்திரகாந்தன், செயலாளரின் ஆலோசனைகள…

  12. சிறிலங்காவில் கடந்த காலங்களில் பதவி வகித்த அரசாங்கங்களும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான தற்போதைய அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  13. கிளிநொச்சி, உருத்திரபுரத்தில் சிறீலங்கா படையினரது எறிகணை வீச்சில் இளம் தாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ஒரு பிள்ளையின் தயாரான 26 அகவையுடைய வஜிதரஞ்சினி ரவிச்சந்திரன் என்பவரே படுகாயமடைந்து கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பூநகரி, ஞானிமடத்தைச் சேர்ந்த இவர் இடம்பெயர்ந்து கிளிநொச்சி, உருத்திரபுரத்தில் தங்கியிருந்த நிலையில் எறிகணையில் படுகாயமடைந்தார். படத்தை பார்க்க....... http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  14. யாழ் மாவட்டம் அரியாலை படை முகாம் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் சிறீலங்கா படைகள் தரப்பில் பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் தமது தரப்பில் ஒருவர் மட்டுமே கொல்லப்பட்டதாகவும், மேலும் சில படையினர் காயமடைந்திருப்பதாகவும் சிறீலங்கா படைத்தரப்பு அறிவித்துள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  15. உலக அரங்கில் போராட்டங்கள் நடத்தி எமக்கு பலம் சேர்க்கும் புலம்பெயர் தமிழர்கள்: பா.நடேசன் [வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2008, 07:57 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] புலம்பெயர்ந்து வாழும் எமது உடன்பிறப்புக்கள் என்றும் இல்லாதவாறு அனைத்துலக நாடுகள் முழுவதிலும் எழுச்சிகொண்டு அந்தந்த நாட்டு அரசுகளுக்கு அரசியல் ரீதியாக அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் நிகழ்த்திய உரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: மக்கள் புரட்சியின் ஊடாகவே தமிழீழ தேசிய விடுதலை சாத்தியம் என்பதை கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னர் ஈகச்சுடர் லெப். கேணல் திலீபன…

  16. கிளிநொச்சி மருத்துவமனைக்கான மருந்துப் பொருட்கள் எடுத்துச் செல்ல சிறிலங்கா படையினர் தடை [வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2008, 07:32 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி மருத்துவமனைக்கு சுமையூந்தில் எடுத்துவரப்பட்ட மருந்துப் பொருட்கள் சிறிலங்கா படையினரால் ஓமந்தையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன்னாள் புதன்கிழமை இடம்பெற்றுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி அரசாங்க அதிபரிடமும் மருத்துவ அதிகாரிகளிடமும் தொடர்பு கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். புதினம்

  17. சிறிலங்கா படையினரின் தடையால் இடம்பெயர்ந்த மக்களுக்கான உலர் உணவு வழங்கல் பாதிப்பு [வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2008, 07:11 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சிக்கு சிறிலங்கா படையினர் உணவுப் பொருட்களை எடுத்து வருவதில் ஏற்படுத்தி வரும் தடங்கல் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கான உலர் உணவு வழங்கல் பாதிக்கப்பட்டுள்ளது. உதவி அமைப்புக்களின் கீழ் வழங்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் உணவு அல்லாத பொருட்கள் வழங்கும் நடவடிக்கைகளை கிளிநொச்சி அரசாங்க அதிபரிடம் கையளித்து விட்டு உதவி அமைப்புக்கள் வெளியேறியிருந்தனர். இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெயர்ந்து தங்கியுள்ள ஒரு லட்சத்து முப்பதாயிரம் வரையான மக்களுக்கான உணவு வழங்கல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு…

  18. அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க அலுவலகம் மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் [வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2008, 06:04 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சியில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் அலுவலகம் மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரணைமடுச் சந்திக்கு அருகாமையில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் முதன்மை அலுவலக வளாகம் மீது இன்று வெள்ளிக்கிழமை காலை சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் தொலைத் தொடர்புக் கோபுரம் முறிந்துள்ளது. அதன் அலுவலக கட்டடப் பகுதிகள் சேதமாகியுள்ளதுடன் உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன. புதினம்

  19. ஈகச்சுடர் லெப். கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் சுடரேற்றி, வணக்கம் செலுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  20. உண்மையின் தரிசனம் மக்கள் புரட்சி வெடிக்கட்டும். அது நிச்சயமாக தமிழீழத்... மக்கள் புரட்சி வெடிக்கட்டும். அது நிச்சயமாக தமிழீழத்... மக்கள் புரட்சி வெடிக்கட்டும். அது நிச்சயமாக தமிழீழத்... மக்கள் புரட்சி வெடிக்கட்டும். அது நிச்சயமாக தமிழீழத்தை எமது இறப்பின் மூலம் பெற்றுத்தரும். இதனை வானத்திலிருந்து வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுடன் சேர்ந்து நானும் பார்த்து மகிழ்வேன். தியாகி லெப்.கேணல். திலீபன்

  21. யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட சட்டநாதர் வீதிப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் கடந்த ஜூலை மாதம் 4ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக யாழ் மனித உரிமை ஆணைக்குழப் பணிமனையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தனது கணவர் காணாமல் போவதற்கு முதல் நாள் படையினர் தமது வீட்டில் இருந்து கணவரின் புகைப்படத்தை எடுத்துச் சென்றதாக மனைவி மனித உரிமை ஆணைக்குழுவில் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினர் பல தடவைகள் வீட்டுக்குச் சென்று அச்சுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 23 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான அருணமதிதுரை கிஷோர்குமார் என்பரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கிஷோர்குமாரின் இரண்டு சகோதரர்கள் ஏற்கனவே தொடர் மரண அச்சுறுத்தல்களை அடுத்து காணா…

  22. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் மற்ற நாடுகளுக்கு ஓர் சிறந்த முன்னுதாரணமாக சிறிலங்கா உள்ளதாக துருக்கி ஜனாதிபதி அப்துல்லா ஹல் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 63 அவது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றிருக்கும் சிறி லங்கா ஜனாதிபதியை சந்தித்தப்பேசும்போதே துருக்கிய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தில் உள்ள பிரத்தியேக அறை ஒன்றில் சிறி லங்கா ஜனாதிபதியை, துருக்கிய ஜனாதிபதி சந்தித்தப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். இதன்போது ஆழிப்பேரலை அனர்த்தத்தின்போது சிறிலங்காவுக்கு துருக்கி வழங்கிய உதவிகளை நினைவு கூர்ந்த சிறி லங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, இரு நாடுகளும் சிறந்த நட்புறவு நாடுகள் என்பதற்கு …

  23. வீரகேசரி இணையம் 9/26/2008 - மன்னார் சமாதான பாலம் அமைகும் வேலைகள் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றன. எதிர்காலம் 2010 இல் மக்கள் போக்குவரத்திற்காக திரந்து விடப்படவுள்ள்து. ஜப்பான் அரசு மனமுவந்து அளித்த நிதி 173 கோடி ரூபாவில் இப்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 4 கிலோ மீற்றர் நீலமான இப்பாலம் இரு வழிப்பதையுடன் அதி நவீன முறையில் அமைக்கப்படவுள்ளது.எனினும் தற்போது தற்காலிகமாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று கட்டங்களாக வேலைகள் நடைபெற்று வருகின்றன.இரண்டு கட்டங்களாக பாதை அமைப்பும் மற்றொரு கட்டமாக பால அமைப்பும் நடைபெற்றுவருகின்றது.பால அமைபு வேலைகளில் புகழ் பெற்ற ஜப்பானிய பொறியிலாளர்களும் தொழிலாளர்களும் இலங்கை தொழிலாளர்களும் ஈடுப்பாட்டு வருகின்றனர். 1930 ஆண்டில் பிரி…

  24. செங்கலடி பதுளை வீதியில் மகோயா காவற்துறைக்; காவலரனில் நிறுத்தாமல் சென்ற முச்சக்கர வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கரவண்டிச் சாரதி படுகாயங்களுக்குள்ளானார். இச்சம்பவம் நேற்று மாலை (செப்25) 06.05 மணியளவில் இடம்பெற்றது. கடமையிலிருந்த ஊர்காவற்படைச் சிப்பாயே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்டகொண்டதாகவும் காவலரனில் நிறுத்தாமல் சென்ற முச்சக்கரவண்டி வாடகை வண்;டி எனவும் தெரியவருகிறது. உயிரிழந்தவர்களில் ஒருவர் இராணுவச் சிப்பாய் எனவும் மற்றையவர் விமானப்; படைச் சிப்பாய் எனவும்,; இவர்கள் சாதாரண உடையிலேயே பயனித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.